அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
அமெரிக்காவில் பசில்ராஜபக்ச... என்ன நடக்கிறது?
-
- 0 replies
- 558 views
-
-
நிலாந்தனும் ஜெனீவாவும் தமிழ்த் தேசிய அரசியலும் : சபா நாவலன் இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அன்றி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ குறைந்த பட்சம் ‘தேசிய சக்திகள்’ என்ற எல்லைக்குளாவது செயற்பட எல்லா வாய்ப்புக்களையும் கொண்டிருக்கின்றன. தேசியம் என்பதன் அடிப்படையைக் கூட அவர்கள் விளங்கிக்கொள்ளாமல் அன்னிய அதிகாரசக்திகளின் அரசியல் போட்டிக்குள்ளும் ஏகாதிபத்தியக் காய் நகர்த்தல்களுக்குள்ளும் தம்மை அமிழ்த்திக்கொள்கின்றனர். இன்று ஜனாதிபதி ஆணைக்குழு என்ற மகிந்த அரச பாசிசத்தின் போலி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் மக்கள் கூறுகின்ற சாட்சியங்களால் யாருக்கும் நீதி கிடைக்கப்போவதில்லை. ஆனால் சாட்சி கூறுபவர்களின் மன உறுதியும் துணிவும் வியக்கவைக்கிறது. அவர்களைப் பொறுத்தவரையில் எல்ல…
-
- 2 replies
- 558 views
-
-
மண்ணுறங்கும் புனிதர்களின் கனவுகளை தோள்களில் சுமந்து நனவாக்குவோம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! 36 Views “இலங்கைத் தீவில் தமிழினத்திற்கு எதிராக பல தசாப்தங்காளக சிறிலங்கா அரசு மற்றும் அரச படைகளாலும் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பின் குறியீடாக அமைந்துவிட்ட மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 12ஆவது ஆண்டை எட்டியுள்ளது. நான்காம் கட்ட ஈழப்போரின் ஆரம்பம் முதல் இறுதி வரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் செல்திசை வழியே மாறா உறுதியுடன் பயணித்து முள்ளிவாய்க்காலில் கொன்று புதைக்கப்படும் வரை எமது உறவுகளின் எண்ணம்-கனவு-இலட்சியம் என யாவுமாக இருந்தது என்னவிலை கொடுத்தேனும் விடுதலையை பெறுவது என்பதாகவே இர…
-
- 0 replies
- 558 views
-
-
ஜனாதிபதித் தேர்தல் களம்: திரட்டுவதா சிதறடிப்பதா? - நிலாந்தன் “இம்முறை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் எதிர்வுகூற முடியாதவை மட்டுமல்ல, ஊகிக்க முடியாதவைகளுந்தான்” என்று ஒரு மேற்கத்திய தூதராக அதிகாரி சொன்னார். இலங்கைதீவின் நவீன வரலாற்றில் குறிப்பாக ஜனாதிபதி முறைமை அமல்படுத்தப்பட்ட பின், ஒரு பிரதான வேட்பாளர் அதுவும் ஜனாதிபதியாக இருப்பவர், சுயேட்சையாக கட்டுப்பணம் செலுத்தியிருப்பது என்பது இதுதான் முதல்தடவை. முன்னெப்பொழுதும் தேர்தல் களத்தில் இந்த அளவுக்கு நிச்சயமின்மைகள் நிலவியதில்லை. இது எதை காட்டுகிறது ? போட்டி அதிகமாக இருப்பதை மட்டும் காட்டவில்லை. பெரும்பான்மையானவர்களால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் யாரும் இல்லை என்பதையும் காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் தாமர…
-
- 0 replies
- 558 views
-
-
ரணிலுடன் பேசுதல் ? - யதீந்திரா தமிழ் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசிவருகின்றன. ரணிலுடன் பேசுவது தமிழ் கட்சிகளை பொறுத்தவரையில் புதிய விடயமல்ல. மைத்திரிபால அரசாங்கத்திலும் ரணிலுடன் பல சுற்றுப் பேச்சுக்களில் தமிழ் கட்சிகள் ஈடுபட்டிருந்தன. புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவர முடியுமென்றும் தமிழ் கட்சிகள் – குறிப்பாக இராஜவரோதயம் சம்பந்தன் அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருந்தார். அந்த அடிப்படையில் சம்பந்தன் தலைமையில் பேச்சுக்கள் இடம்பெற்றன. இறுதியில் வழமைபோல் வெறுங்கையுடன் திரும்பினர். ரணில் தந்திரமான அரசியல்வாதியென்று பெயரெடுத்த ஒருவர். ரணில், அவரது மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிடமிருந்து அரசியலை கற்றுக்கொண்டவர். தமிழ் சூழல…
-
- 1 reply
- 558 views
-
-
வெந்து தணியாது காடு இலக்கு மின்னிதழ் 142 இற்கான ஆசிரியர் தலையங்கம் இவ்வாரத்தில் உலகில் காடுகள் தீப்பிடித்து எரிகின்ற பிரச்சினை பெரிதாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் கிரீஸில் தலைநகரை காட்டுத்தீ நெருங்குகிறது என்ற அச்சத்துடன் மக்கள் நீர்கொண்டு நெருப்பணைக்கக் கடும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். உலக நாடுகளின் தீயணைப்புப் படையினரும், அறிவியலின் உயர் தொழில் நுட்பங்களும் இணைந்து, காட்டுத் தீயினை நாட்டுத் தீயாக மாறாது, தடுக்க மிகப் பெரிய மனித உழைப்பை உலக நிதி வளங்களின் துணையுடன் செலவிட்டுக் கொண்டிருக்கின்றன. இயற்கைப் பேரழிவு தரும் இந்தக் காட்சியானது தமிழீழத் தாயகத்தை சிறீலங்கா அரசு எறிகணை வீச்சுக்களாலும், குண்டு வீச்சுக்களாலும் எரித்தழித்த காட்சிகளை …
-
- 0 replies
- 558 views
-
-
திலீபனை முன்னிறுத்தி சில கேள்விகள் – நிலாந்தன் திலீபனின் ஏன் உண்ணாவிரதம் இருந்தார்? யாருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார்? அவர் இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இரண்டு அரசுகளிடமும் நீதிகேட்டு உண்ணாவிரதம் இருந்தார். அதாவது திலீபனின் உண்ணாவிரதம் எனப்படுவது நாட்டுக்கு உட்பட்டது அல்ல. அதற்கு ஒரு பிராந்திய பரிமாணம் உண்டு. ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் பிராந்திய பரிமாணத்தை அடைந்ததன் விளைவாக எழுதப்பட்டதே இந்திய – இலங்கை உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையின் போதாமைகளையும் இயலாமைகளையும் உணர்த்துவதற்காகவே திலீபனும் பூபதியும் உண்ணாவிரதம் இருந்தார்கள். அதாவது மறு வளமாகச் சொன்னால் இந்தியத் தலையீட்டின் விளைவாக ஏற்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வை புலி…
-
- 1 reply
- 558 views
-
-
எழுக தமிழின் போக்கும் மஹிந்தவை எழுப்பும் சூத்திரமும் இரண்டாவது ‘எழுக தமிழ்’ பேரணி மட்டக்களப்பில் வரும் 21ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. அதற்காக மக்களைத் தயார்படுத்தும் பிரசாரப்பணிகள் குறிப்பிட்டளவில் முன்னெடுக்கப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற முதலாவது எழுக தமிழ் பேரணியில் சுமார் 8,000 பேர் கலந்து கொண்டிருப்பார்கள். இறுதி மோதல்களுக்குப் பின்னரான கடந்த ஏழரை ஆண்டுகளில், போராட்ட வடிவமொன்றில் அதிகளவான தமிழ் மக்கள் கூடிய தருணம் அது. அப்படியொரு மக்கள் திரட்சியையும் கோரிக்கைகளின் கோசத்தையும் மீளவும் நிகழ்த்திக் காட்ட வேண்டிய தேவையொன்று இருக்கின்றது. அதனை, கிழக்கிலுள்ள…
-
- 1 reply
- 558 views
-
-
மிக அண்மைக் காலத்தில் வடக்கு அரசியல் அரங்கில் மிகுந்த வாதப்பிரதிவாதங்களை உருவாக்கி இருக்கும் சம்பவங்கள் என்று நோக்கினால் ஒன்று இரணைமடு நீர்ப் பங்கீடு, இரண்டாவது வல்வெட்டித்துறை நகரசபையின் நடப்பாண்டு வரவு செலவுத்திட்ட சமர்ப்பிப்பு. இவை இரண்டும் ஒரே நேர்கோட்டில் இயங்குகின்ற நிலைமையை ஆழந்து நோக்குபவர்கள் அறிந்து கொள்ளலாம். பாதிக்கப்பட்ட இனத்தின் விடுதலையும், நிவாரணமும், இருத்தலும் என்ற கோசங்களை முன் வைத்து மக்களிடம் வாக்கு கேட்ட வேட்பாளர்கள், மக்களின் அபிலாசைகளை தூண்டி அதனூடாக வென்ற பின் சராசரி மனிதர்களைவிட கேவலமாக மாறி, பதவி அதிகாரங்களை கையகப்படுத்தும் ஒரு கேவலமான நிலைமைக்கு தங்களை உற்படுத்திக் கொண்டுளார்கள் எனலாம். இந்த நிலை பாரளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் உள்…
-
- 1 reply
- 558 views
-
-
பலமடையுமா, பிளவுபடுமா? கே. சஞ்சயன் / 2019 ஜூலை 19 வெள்ளிக்கிழமை, மு.ப. 05:44 Comments - 0 ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்யும் விடயத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான பொதுஜன பெரமுன, தீர்க்கமான முடிவு ஒன்றுக்கு வந்து விட்ட நிலையிலும், ஐக்கிய தேசியக் கட்சி தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை நிறுத்த மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்து விட்டார். அதற்குப் பொதுஜன பெரமுனவுக்கு உள்ளேயும், ஒன்றிணைந்த எதிரணிக்குள்ளேயும் மாற்றுக் கருத்துகள், எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும், மஹிந்த ராஜபக்ஷ எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால், இந்த எதிர்ப்புகளால் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியில் நிறுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது…
-
- 0 replies
- 558 views
-
-
ஜனாதிபதித் தேர்தல்: அவதானங்களும் அனுமானங்களும் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஓகஸ்ட் 06 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:42Comments - 0 விரைவில் தேர்தலொன்று நடைபெறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. நியாயப்படி பார்த்தால், அது மாகாண சபைகளுக்கான தேர்தலாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அந்தத் தேர்தலை நடத்துவதில் உள்ள சட்டச் சிக்கலைக் காரணம் காட்டி, அதை ஒத்திப் போடுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் முயற்சித்து வருகிறது. மாகாண சபைத் தேர்தலொன்று நடந்தால், அதில் ஐக்கிய தேசியக் கட்சி தோற்று விடும் என்கிற பேச்சு உள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளினூடாக, இந்த அனுமானத்துக்குப் பலரும் வருகின்றனர். ஐ.தே.கட்சிக்கும் இந்தப் பயம் உள்ளது போலவே த…
-
- 0 replies
- 558 views
-
-
ஜனாதிபதித் தேர்தல்: முஸ்லிம்கள் சார்பில் பொது வேட்பாளரா? மொஹமட் பாதுஷா / 2019 செப்டெம்பர் 09 திங்கட்கிழமை, மு.ப. 11:46 Comments - 0 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்க, மெல்ல மெல்ல சிறுபான்மைச் சமூகங்களை நோக்கி பெருந்தேசியக் கட்சிகளின் வேட்பாளர்கள் நேசக்கரம் நீட்டத் தொடங்கியிருக்கின்றனர். இவர்களுள் யாருக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தாடல்கள், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இடம்பெறுகின்ற சம காலத்தில், முஸ்லிம்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவது பற்றிய கருத்துகளும் பொதுத் தளத்தில் முன்வைக்கப்படுகின்றன. கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக அறிவித்ததன் மூலம், தேர்த…
-
- 1 reply
- 558 views
-
-
Published By: VISHNU 04 SEP, 2023 | 08:41 PM ஹரிகரன் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கொழும்பில் கடமைகளைப் பொறுப்பேற்று சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர், வடக்கில் விரிவான பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். இந்தப் பயணத்தின் போது அவர் அரசியல், பொருளாதார, சமூக, மத விவகாரங்களில் மாத்திரமன்றி, பாதுகாப்பு விவகாரங்களிலும் அதிக அக்கறை செலுத்தியிருக்கிறார். யாழ்ப்பாணப் பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த மாதம் 24ஆம் திகதி கிளிநொச்சிக்குச் சென்ற அவர், அங்கு இலங்கை இராணுவத்தின் முதலாவது கோர்ப்ஸ் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் எஸ்.பி.அமுனுகமவைத் சந்தித்திருந்தார்.…
-
- 0 replies
- 558 views
- 1 follower
-
-
விசேட தேவையுடையோரின் பிரச்சினைகள்: சர்வரோக நிவாரணியா அரசியல் தீர்வு? - கருணாகரன் நோர்வேயிலிருந்து சஞ்சயன் செல்வமாணிக்கம் என்பவர் தொடர்புகொண்டு, “வன்னியில் உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட கொஞ்சப்பேருக்கு உதவிகளைச் செய்யச் சிலர் விரும்புகிறார்கள். உடல் பாதிப்புக்குள்ளான சிறார்களைப் பராமரிக்கும் அமைப்பு அல்லது, கூடுதலான பாதிப்பைச் சந்தித்துள்ள சிலரைத் தெரிவு செய்து தரமுடியுமா?” எனக் கேட்டார். ஏற்கெனவே, மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திலிருக்கும் முன்னாள் போராளிகள் உட்பட, போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சிலவற்றுக்கு நண்பர்களுடன் இணைந்து, சஞ்சயன், உதவிகளைச் செய்திருக்கிறார். அந்தப் பணிகளின்போது, படு…
-
- 0 replies
- 558 views
-
-
மாகாண எல்லை மீள்நிர்ணயம்: கை உயர்த்துமா ‘கறுப்பு ஆடுகள்’? ஏ.எல்.நிப்றாஸ் சிரியாவில், பலஸ்தீனத்தில் தம்மைத் தாக்குவதற்கு வருகின்ற கவச வாகனங்களுக்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்ற வயதான பெண்களின் தைரியமும் துணிச்சலும் கூட, இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் பலருக்கு இல்லை என்பதைத்தான் நெடுங்காலமாக கண்டும் உணர்ந்தும் வருகின்றோம். முஸ்லிம்களுக்கு எதிராக சட்டவாக்க, யாப்பு ரீதியான அநியாயங்கள், கொள்கை வகுத்தல்கள், மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பங்களில் ‘நக்குண்டார் நாவிழந்தார்’ என்பது போல எல்லாவற்றுக்கும் ஆதரவளிக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்…
-
- 0 replies
- 557 views
-
-
18 DEC, 2023 | 05:32 PM (நேர்கண்டவர் : ரொபட் அன்டனி) இலங்கையில் அரசியல் தீர்வு எதுவாக இருந்தாலும், அது உண்மையில் எல்லாத் தரப்பினரதும் நல்லிணக்க முயற்சியாக அமைய வேண்டும். இது சாத்தியமானது என்றே நான் நினைக்கின்றேன். ஆனால், இதில் கடின உழைப்பு அவசியமாகிறது என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். 'வீரகேசரி' வார வெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடிய அமெரிக்கத் தூதுவர், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பாதிக்கப்பட்ட மக்களை மையமாகக்கொண்டதாக அமைய வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் புலம்பெயர் மக்கள் …
-
- 0 replies
- 557 views
- 1 follower
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-01#page-16
-
- 0 replies
- 557 views
-
-
நீதிமன்றம் நிராகரிப்பினும், உயிர்ப்புறும் ஒப்புதல் வாக்குமூலம் – பி.மாணிக்கவாசகம் December 29, 2020 40 Views தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் மிகமோசமான நிலைமைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் இது ஓர் எரியும் பிரச்சினை. அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் உயிர்களுடனான விளையாட்டு. அதுவும் பூனைகளுக்குக் கொண்டாட்டம். எலிகளுக்குத் திண்டாட்டம் என்ற அரசியல் ரீதியான வலிகள் நிறைந்த விளையாட்டாக மாறியிருக்கின்றது. மாற்றப்பட்டிருக்கின்றது. சட்ட ரீதியாக நீதிமன்றத்தின் ஊடாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. ஆனால் நீதிமன்றச் செயற்பாடுகள் நத்தை வேகத்திலும் முக…
-
- 0 replies
- 557 views
-
-
அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் நிபுணர்குழு அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வீ.தனபாலசிங்கம் கடந்த வெள்ளிக்கிழமை அரசியலமைப்பு சபைபயில் அதன் வழிநடத்தல் குழுவின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிபுணர் குழுவின் ஐந்து அறிக்கைகளைச் சமர்ப்பித்து உரையாற்றியபோது புதிய அரசியலமைப்பை வரைவது தொடர்பில் அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய செயன்முறைகளைத் தீர்மானிப்பது அரசியலமைப்புச் சபையின் பொறுப்பு என்று குறிப்பிட்டார். தனது தலைமையிலான வழிநடத்தல் குழு அதன் பணீயை பூர்த்திசெய்துவிட்டது என்று கூறிய அவர் நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்களில் சகல கட்சிகளினாலும் இணக்கப்பாட்டுக்கு வரக்கூடிய விடயங்களைத் தெரிவுசெய்து கருத்தொருமிப்புக்கு வந்து அ…
-
- 0 replies
- 557 views
-
-
(சிறிலங்கா அரசு வடக்கிலும் கிழக்கிலும் பாரிய கட்டுமானத் திட்டங்களையும் பொருண்மிய மேம்பாடுகளையும் மேற்கொள்வதாகப் பறை சாற்றுகிறது. தமிழ்மக்களைப் பொறுத்தளவில் அவர்களது பொருளாதாரம் இரண்டு முக்கிய தொழில்களில் தங்கியுள்ளது. ஒன்று விவசாயம். மற்றது மீன்பிடி. இதில் வடக்கில் மீன்பிடித் தொழில்பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது. சுமித் சாமின்டா (Sumith Chaaminda) என்ற சிங்கள ஆய்வாளர் எழுதிய இக்கட்டுரை த அய்லாந்து நாளேட்டில் ஏப்பிரில் 02 ஆம் நாள் வெளிவந்தது. வட மாகாணத்தில் நலிந்து போயிருக்கும் மீன்பிடித் தொழில்பற்றி முடிந்தளவு பக்கசார்பில்லாது எழுதியுள்ளார். (தமிழழாக்கம் - நக்கீரன்.) யாழ்ப்பாணத்தில் மீன்பிடித் தொழில்: யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பொறுத்தளவில் மீன்பிடி…
-
- 0 replies
- 557 views
-
-
முள்ளிவாய்க்கால் போன்ற பல துயர சம்பவங்கள் நடந்தேறியுள்ள நிலையில், தமிழர்களுக்கு விடுதலை வேண்டும் என குரல் கொடுக்கும் உலகெங்கிலும் உள்ள தமிழ் அமைப்பினைச் சார்ந்தவர்கள் நமது IBC தொலைக்காட்சி தளத்தில் ஒரே மேடையில் இணைந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்த நிகழ்வே நேருக்கு நேர்.
-
- 0 replies
- 557 views
-
-
அமெரிக்காவின் மூலோபாய அக்கறை யாரை மையப்படுத்தியது? - யதீந்திரா கடந்த பத்தியில் 2009 டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட, இலங்கை: யுத்தத்திற்கு பின்னரான அமெரிக்க மூலோபாயத்தை மீள்சட்டகப்படுத்துதல் (SRI LANKA: RECHARTING U.S. STRATEGY AFTER THE WAR) என்னும் அறிக்கை குறித்து பார்த்திருந்தோம். இப்பத்தியில் அது குறித்து மேலும் சில விடயங்களை பார்ப்போம். அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் சுமார் 27 வருடங்களாக ஈடுபட்டுவரும் ஜோன் கெரி தற்போது அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், இப்பத்தி அவர் இலங்கை தொடர்பாக எத்தகைய அவதானத்தைக் கொண்டிருக்கின்றார் என்பதை விளங்கிக்கொள்ள முயல்கிறது. இலங்கையின் புவியியல் இட அமைவானது ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் ச…
-
- 1 reply
- 557 views
-
-
இம்முறை தாயகத்தில் மே 18 பரவலாக நினைவு கூரப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யவில்லை. அதனால் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை நினைவு கூரும் நிகழ்வுகள் பரவலாகவும் செறிவாகவும் இடம்பெற்றுள்ளன. வடமாகாணசபை உத்தியோகபூர்வமாக நினைவு கூரப் போகின்றது என்ற செய்தி வெளிவந்ததிலிருந்து கூட்டமைப்பு பிரமுகர்கள் கடந்தவாரம் முழுவதும் ஓடி ஓடி விளக்கேற்றினார்கள். இதில் ஒருவித போட்டி நிலவியது எனலாம். யார் எங்கே விளக்கேற்றுவது என்பதில் அவர்களுக்கிடையே ஒருங்கிணைப்பு எதுவும் இருக்கவிலலை. அவரவர் தமக்குரிய செல்வாக்குப் பிரதேசத்திற்குள் விளக்கேற்றுவதில் போட்டி போட்டார்கள். ஒவ்வொரு பிரமுகருக்கும் ஊருக்குள் ஒரு அல்லது பல அணுக்கத் தொண்டர்கள் இருப்பார்கள். அந்த அணுக்கத் தொண…
-
- 0 replies
- 557 views
-
-
காட்டுமிராண்டி பௌத்த துறவிகளின் தொடரும் வன்முறை எதிர்கொள்ளப்பட வேண்டும்! 11/16/2016 இனியொரு... மட்டக்களப்பில் தமிழ்க் கிராம சேவரைத் நடுத்தெருவில் வைத்துத் திட்டித்தீர்த்த காட்டுமிராண்டி பௌத்த பிக்கு தொடர்பான அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை. இலங்கை அரசு இன்று பேசிவரும் நல்லிணக்கம் என்ற கருத்தியலின் மீதான நேரடித் தாக்குதல் நடத்தியுள்ள இந்த பௌத்த துறவி தனியாள் இல்லை. இன்றைய இலங்கையின் சிங்கள பௌத்த மனோ நிலையின் மொத்த உருவம் தான் இவர். யாழ்ப்பாணத்தில் இரண்டு மாணவர்களைக் கொலை செய்வதற்கான துணிவை வழங்கியதும், பௌத்த துறவியை பொலிஸ் முன்னிலையில் பேச வைத்ததும் சிங்கள பௌத்த மேலாதிக்க உளவியல் தான். ஆக, இப் பௌத்த துறவி நல்லிணக்கம் என்று இலங்கை அரசு கூறும் அழகான வார்த்தை சிங்கள…
-
- 0 replies
- 557 views
-
-
அமெரிக்கத் தடையும் போலியான தேசப்பற்றும் கே. சஞ்சயன் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, அவரது நெருங்கிய குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டுள்ள விவகாரம், இலங்கை அரசியற் பரப்பில், கடுமையான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்புக் குறித்து, இரண்டு விதமான நோக்கு நிலைகள் அரசியல் பரப்பில் காணப்படுகின்றன. தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவருமே, அமெரிக்காவின் இந்த அறிவிப்பை வரவேற்றிருக்கிறார்கள். அதேவேளை, மற்றொரு புறத்தில், சிங்கள அரசியல் தலைவர்கள் மாத்திரமன்றி, மனோ கணேசன், திகாம்பரம் போன்ற தென்னிலங்கையைத் தளமாகக் கொண்ட அரசியல் தலைவர்கள், இந்த முடிவை எதிர்த்திருக்கிறார்கள் அல்லது, கேள்விக்குட்படு…
-
- 0 replies
- 557 views
-