அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
சோவியத் மீதான தாக்குதலை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாக விட்ட நிலையில் தமது ராணுவ வல்லாண்மையில் அவர்கள் வைத்த நம்பிக்கை காரணமாக மூன்று அல்லது நான்கு மாதங்களில் மொஸ்கோவை பிடித்து விடலாம் என்றே நம்பினர். ஜூன் 22, 1941 அதிகாலை 3 மணி. நாசி போர் விமானங்கள் சோவியத்யூனியனுக்குள் சீறிப்பாய்ந்தன. ஆயிரக்கணக்ககான ஜேர்மன் விமானங்கள் குண்டுகள் வீச ஆரம்பித்தன. ஆயிரக்கணக்கான டாங்கிகளும் பீரங்கிகளும் எல்லைகளை மீறி உள்ளே புகுந்து தாக்க ஆரம்பித்தன. மூன்று மில்லியனுக்கு மேற்பட்ட ஜேர்மன் துருப்புக்கள் மூன்று சம வரிசையாக சோவியத்திற்குள் பாரியளவான தாக்குதலை முன்னெடுத்தனர். இதற்கு முன்னர் இப்படியொரு பிரமாண்டமான படையெடுப்பு நடத்தப்படவில்லை என்று உலகம் சொல்லவேண…
-
- 8 replies
- 1.2k views
-
-
ஜநா செயலாளர் பதிவிக்கான வேட்பாளர்கள் பற்றிய தமிழர்கள் நிலைப்பாடு என்ன? புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் ஊடகங்கள் சமூகம் தங்களது நிலைப்பாடு என்ன என்று தெரிவித்தாக இதுவரை எந்த ஆதாரங்களும் இல்லை. ஈழத்தமிழர்கள் இவ்வாறு மொளனம் காப்பது சரியா? இது தெளிவில்லாததால் வந்த மொளனமா இல்லை நம்பிக்கையீனத்தால் வந்த இராஜதந்திர மொளனமா? மலரப்போகும் சுதந்திர தமிழீழம் அடுத்த ஜநா செயலாளர் பதிவிக்காலத்தில் நடப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம். எமது மொளனம் சரியானதா? தாயகத்தில் உள்ள மோசமான கள நிலமைகளால் நாங்கள் இந்த விடையங்களை சிந்திக்க பங்களிக்க பங்குபற்ற நேரம் முன்னுரிமை இல்லாமல் இருக்கும் துர்பாக்கிய நிலையா? உங்கள் கருத்துக்கள் :roll: :arrow:
-
- 9 replies
- 2.1k views
-
-
ஜந்து கட்சிகளின் உடன்பாடு எதை நோக்கி பயணிக்கின்றது? - யதீந்திரா அண்மையில் தமிழ்த் தேசியவாத கட்சிகளான ஜந்து கட்சிகளுக்கிடையில் ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டிருந்தது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒற்றுமை முயற்சியில் ஆரம்பத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்திருந்த போதிலும் கூட, இறுதி நேரத்தில் இந்த முயற்சியிலிருந்து காங்கிரஸ் வெளியேறியிருந்தது. ஆனால் கஜேந்திரகுமாரோ, தாங்கள் வெளியேறவில்லை மாறாக வெளியேற்றப்பட்டோம் என்று கூறிவருகின்றார். இடைக்கால அறிக்கை நிராகரிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை தமிழரசு கட்சி மற்றும் புளொட் ஏற்றுக்கொள்ள மறுத்தநிலையில்தான், கஜேந்திரகுமார் இந்த முயற்சியிலிருந்து விலகிக்கொண்டார். ஆனால் தற்போது ஜந்து கட்சிகளும் கையெழுத…
-
- 1 reply
- 473 views
-
-
ஜனநாயக அரங்குகளை எதிர்கொள்ள முடியாமல் ஏன் தமிழ் தலைவர்கள் அஞ்சியோடுகின்றனர்? கடந்த வாரம் வவுனியாவில் தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் – தளர்வடைகிறார்களா தமிழ் மக்கள்? அடுத்தது என்ன? – என்னும் தலைப்பில் முழுநாள் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. தமிழ்ச் சூழலில் இயங்கிவரும் முன்னணி தமிழ்த் தேசிய கருத்தியலாளர்கள், சிவில் சமூக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் இதில் பங்குகொண்டிருந்தனர். இந்த நிகழ்வை மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. அவர்களின் தவல்களின்படி மேற்படி நிகழ்விற்காக கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் நான்கு கட்சிகள் மற்றும் கூட்டமைப்பிற்கு எதிர் நிலையிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் அழைக்கப்…
-
- 0 replies
- 357 views
-
-
ஜனநாயக அரசியலில் வெற்றிக்கனியைப் பறிப்பாரா சுமந்திரன்? காரை துர்க்கா / 2019 ஜனவரி 08 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:51 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு முன்னர், ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு, விடுதலைப் புலிகள் தடையாக இருந்தனர் என, கடந்த டிசெம்பர் (2018) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமான சுமந்திரன், யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்து உள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தின் போது, ஜனநாயக ரீதியில் அரசியலை முன்னெடுத்தவர்களினதும் புலிகளினதும் தேவைப்பாடுகள் ஒரு நேர்கோட்டில் சந்தித்தன. அதனால்தான், ஜனநாயக ரீதியில் அரசியல் செய்ய, புலிகள் அனுமதித்தனர்” என, அ…
-
- 0 replies
- 700 views
-
-
ஜனநாயக தேர்தல் முறை தடம்புரண்டு செல்கின்றது த. மனோகரன் ஆங்கிலேயர் ஜனநாயகம் என்ற கோட்பாட்டு முறைமையில் நம் நாட்டில் தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்திச் சென்றனர். இன்று நாமோ அதிலிருந்து நழுவி படிப்படியாக மக்களுக்காக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்களாட்சி என்ற நிலையிலிருந்து விடுபட்டு அரசியல் கட்சிகளின் தலைமைகளின் ஆதிக்கத்திற்கு நம்மை உட்படுத்தி வரும் நிலைமை உருவாகிவருவதை உணராதுள்ளோம். மாகாண சபைக்கான தேர்தல் எந்த முறையில் அதாவது ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் விகிதாசாரத் தேர்தல் முறையிலா அல்லது தொகுதி வாரியாக ஐம்பது வீதமும் பெற்றுக்கொண்ட வாக்குகளினடிப்படையில் ஐம்பது வ…
-
- 0 replies
- 873 views
-
-
ஜனநாயக பண்புகளுக்கு அமைய நாடு ஆளப்பட வேண்டும் 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா. சம்பந்தன் ஆற்றிய உரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பிரதம மந்திரியும் கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க தலைமைதாங்கும் ஐக்கியதேசிய கட்சி ஆகிய இந்த நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து நடத்தும் தற்போதைய…
-
- 1 reply
- 501 views
-
-
ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் வரலாற்றுப் பொறுப்பு June 24, 2025 — கருணாகரன் — “ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் எதிர்காலச் செயற்பாடுகள் எப்படி இருக்கும்? அதனுடைய அரசியல் எதிர்காலம்?” என்று கொழும்பில் உள்ள மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். “நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்” – அவரிடமே கேள்வியைத் திருப்பினேன். “என்னால் மதிப்பிடவே முடியவில்லை. காரணம், எதிரும் புதிருமாக உள்ள கட்சிகள் எல்லாம் திடீரென்று ஒரு கூட்டுக்கு வந்துள்ளன. அதற்காக ஒரு உடன்படிக்கையையும் செய்திருக்கிறார்கள். என்றாலும் இதில் யாருடைய கருத்தை –கொள்கையை – நிலைப்பாட்டை யார் ஏற்பது என்ற தெளிவில்லை. இப்போதைய சூழலில் கஜேந்திரகுமாரின் நிலைப்பாடுதான் வலுப்பெற்றுள்ளது போலிருக்கு… இந்தப் போக்குக்கு ஜன…
-
- 0 replies
- 99 views
-
-
ஜனநாயகத்திற்கு வலுச்சேர்க்கும் உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளூராட்சி மன்றங்கள் குறித்து இப்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்தாது வெகுவிரைவில் நடத்த வேண்டுமென அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. உள்ளூராட்சி தேர்தல்களை பிற்போடுவதென்பது ஜனநாயகத்திற்கு முரணான செயலாகுமென்றும் கட்சிகளும், அமைப்புகளும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களை அதிகரிக்க தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து கோரிக்கைகளுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக கூட்டணி மார்தட்டி கொள்கின்றது. இது மகிழ்ச்சியான செய்திய…
-
- 0 replies
- 842 views
-
-
ஜனநாயகத்தை கருவறுக்க கோட்டபாயவுக்கு உதவுவதா? பட மூலம், Getty Images/ Tharaka Basnayaka via: theinterpreter கோட்டபாய ராஜபக்ச (பிபிசியின் கிறிஸ் மொரிஸுக்கு வழங்கிய பேட்டி) 2015ஆம் ஆண்டில் பெரும்பான்மையான இலங்கையர்கள் தங்களுக்கென ஒரு ஜனநாயக அரசாங்கத்தை உருவாக்க வாக்களித்தனர். திறந்த அந்த ஜனநாயக வெளியைத் தக்கவைத்திருக்க நாங்கள் வாக்களிக்கப் போகின்றோமா? அல்லது அதன் படுகொலையில், அறிந்தோ அறியாமலோ, பங்கெடுக்கப் போகின்றோமா? 2018ஆம் ஆண்டின் சிறிசேன – ராஜபக்ஷ ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சியின்போது, தமக்கு எதிராக வந்திருந்த நீதிமன்ற தீர்ப்புகளைப் புறக்கணித்து, சட்டவிரோத தேர்தலுக்கு செல்லுமாறு மஹிந்த ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவுறுத்தியதாக 2018 டி…
-
- 0 replies
- 462 views
-
-
ஜனநாயகமும் கொரொனாவும் வி. சிவலிங்கம் நாம் இன்று வரலாற்றின் திருப்பு முனையில் நிற்கின்றோம். எமது மக்கள் உலகத்தினை உலுக்கிய முதலாம், இரண்டாம் உலகப் போர் அனுபவங்களைத் தற்போது நூல் வழியாகவே அறிய முடிகிறது. இருப்பினும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் துன்பங்களைச் சுமந்தவர்கள் இன்னமும் வாழ்கிறார்கள். அவர்கள் ஆண்டுகள் பல கடந்த போதிலும் அந்த அனுபவங்களைப் பகிரும்போது கண்ணீரைக் காண முடிகிறது. அவ்வளவு ஆழமான துன்பங்களை அவர்கள் அனுபவித்தார்கள். இவை ஒரு வகையில் போர் அனுபவங்கள் என்ற போதிலும் இப் போர் உலக அளவில் ஏற்படுத்திய தாக்கங்கள் பாரிய மாற்றங்…
-
- 0 replies
- 617 views
-
-
ஜனநாயகமும் ஜனநாயக துஷ்பிரயோகமும் கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் வன்னியில் போர் மிக உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நாட்கள் அவை. தினமும் சாவு. நூற்றுக்கணக்கானவர்கள் காயம். இரத்தம் பெருக்கெடுத்தோடிய நாட்கள். அவலம் பெரும் நாடகமாடியது. மனிதர்கள் செயற்றுப் போனார்கள். செயலற்றுப் போகும்போது எதுவும் வெறும் சடம் என்ற நிலை உருவாகிறது. அப்படித்தான் மனிதர்கள் அப்போது அங்கே இருந்தார்கள். காற்றில் எற்றுண்டு போகும் சருகுகளாக, ஆற்றில் அள்ளுண்டு போகும் துரும்பாக. அங்கே எவரிடமும் கனவுகளில்லை. எதிர்காலம் பற்றிய எந்த எண்ணங்களுமில்லை. நினைவுகள் மங்கிக் கொண்டிருந்தன. கண்ணீர் நிரம்பி, அந்தப் பாரம் தாங்க முடியாமல்; கால்கள் புதைய மணலில் தள்ளாடி நடக்கும் மனிதர்களே அந்தச் சிறிய, ஒடுங்கிய கடற்கரைய…
-
- 1 reply
- 616 views
-
-
ஜனநாயகம் குறித்த வினாக்களும் தேசிய இனப்பிரச்சினையின் எதிர்காலமும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஓகஸ்ட் 23 தமிழ்த் தேசிய அரசியலின் இயங்கு திசைகள் குறித்த கேள்விகள், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள், தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி வெற்றிபெற்ற கட்சிகளின் அதன் பின்னரான நடத்தை என்பன, இந்தக் கேள்விகளின் நியாயத்தை அதிகரித்துள்ளன. இந்த வினாக்கள், சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளியைத் தொடர்ந்து கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன. தமிழ்த் தேசிய அரசியல் மரபில், கோட்பாட்டுக்கும் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையிலான தொடர்பும், அதன் மீதான கவனமும் சிக்கலுக்கு உரியனவாகவே இருந்து வந்துள்ளன. இப்பாரம்பரிய…
-
- 0 replies
- 423 views
-
-
ஜனநாயகம் பறிபோகிறது- சிங்களக் கட்சிகளின் கூக்குரலும் தமிழர்களின் அரசியல் விடுதலையும்! By sharmi - இலங்கை ஒற்றையாட்சி அரசின் ( (Unitary State) நீதித்துறை எப்போதும் சுயாதீனமாகச் செயற்பட்டதாகக் கூற முடியாது. சில நேரங்களில் சுயாதீனமாகச் செயற்பட்டது என்று கூறினாலும் அது சிங்கள நிலை சார்ந்ததாக அமைந்திருக்கும். ஆனாலும் ஆட்சியாளர்களின் தேவை கருதி சில முக்கியமான சந்தர்ப்பங்களில், சுயாதீனத் தன்மை இழந்ததும் உண்டு. 1999 ஆம் ஆண்டு சந்திரிகா இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் சிறாணி பண்டாரநாயக்கவை மூப்பு நிலைக்கு மாறாக உயர் நீதிமன்ற நீதியரசராக நியமித்திருந்தார். …
-
- 0 replies
- 659 views
-
-
பெரியாரிசமும்,அண்ணாயிசமும்,அம்பேத்காரிசமும் கற்றுத் தந்ததெல்லாம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவமே.(Liberty, Equality, and fraternity). எப்போதும் இது தோற்கடிக்கக் கூடாது என்பது போல் எல்லா சாதிகளும் என் சாதியே என்று ரவீந்திரநாத் தாகூர் கூறியது போல் இவை சமூக நீதியோடு என்றும் இருக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது போல் எல்லா மதமும் இனமும் சமமே இவைகளே ஜனநாயகத்துக்குமான பண்புகள். மானிட மேம்பாடின் அடிப்படை அம்சங்களான (Democracy secularism and pluralism) ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் பன்மைத்துவம் பாதுகாக்கப் பட்டு சொல்லில் மாத்திரம் இன்றி செயலிலும் இருக்க வேண்டும். இதுவே எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும். இன்னும் தமிழ் நாட்…
-
- 3 replies
- 1.1k views
-
-
கட்டாக்கில் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தம்பதிக்கு ஒன்பதாவது மகனாக பிறந்தார் போஸ். இளம் வயதிலேயே படிப்பில் பயங்கர சுட்டி. மெட்ரிகுலேசன் தேர்வில் இரண்டாம் இடம் பெற்று பலரை வியக்க வைத்தார். மாநில கல்லூரியில் இங்கிலாந்தை சேர்ந்த ஓடென் எனும் வரலாற்று பேராசிரியர் ,"ஆங்கிலேயர்கள் தான் இந்தியர்களை விட மேலானவர்கள். அதனால் இந்தியர்கள் எப்பொழுதும் எங்களிடம் இருந்து விடுதலை பெற முடியாது ! இந்த யதார்த்தத்தை உணரவேண்டும் !" என்று பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவரை போஸ் தலைமையிலான இளைஞர் கூட்டம் தாக்கியது. போஸ் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பின்னர் தத்துவம் படித்து பட்டம் பெற்றார் ; சிவில் சர்வீஸ் தேர்வுக்கு குடும்பத்தின் விருப்பத்தின் பேரில் தயாரானார். அத…
-
- 3 replies
- 921 views
-
-
ஜனவரி தேர்தலை விடவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆகஸ்ட் தேர்தல் by Veeragathy Thanabalasingham - on July 8, 2015 படம் | AFP Photo, ISHARA KODIKARA, FCAS ஜனவரி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்கிய மக்கள் பேதலித்துப் போய் நிற்கிறார்கள். அத்தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு அனுமதியளிக்க ஜனாதிபதி சிறிசேன இணங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ராஜபக்ஷவுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படுவது தொடர்பான அறிக்கையை சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான முன்னாள் அமைச்சர் சுசில் பிரே…
-
- 0 replies
- 201 views
-
-
ஜனாதிபதியின் வடக்கு விஜயமும் நீதி கோரிய கறுப்புக்கொடி போராட்டமும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அரசியல் கைதிகள் பல தடவைகள் போராட்டங்களை முன்னெடுத்து இருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக சிறைச்சாலைகளுக்கு வெளியிலும் தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இருப்பினும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், அரசியல் கைதிகள் விவகாரம் கடந்த சில வாரங்களாக மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் தமது வழக்கு விசாரணைகளை வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அனுராதபுரத்திற்கு மாற்றுவதற்கு எத…
-
- 0 replies
- 490 views
-
-
ஜனாதிபதி ‘கோதா’ இன் ஐ நா உரை நிஜமா? போலியா? புலம்பெயர் சமூகத்தின் பணி என்ன? October 2, 2021 — வி.சிவலிங்கம் — இலங்கை ஜனாதிபதி கோதபய ராஜபக்ஸ ஐ நா பொதுச் சபையில் ஆற்றிய உரை பலதரப்பட்ட விவாதங்களைத் தூண்டியுள்ளது. ஒரு சாரார் இது சந்தர்ப்பவாதம் எனவும், நாடு மிக மோசமான பொருளாதார, சமூக, அரசியல் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள வேளையில் அதிலிருந்து தப்புவதற்கான ஒரு வகை உத்தியே இது எனவும், நாடு முழுவதும் செயற்படும் சிவிலியன் நிர்வாகங்கள் அனைத்திலும் ராணுவ மேற்பார்வை அதிகரித்த நிலையில் ஜனநாயக மாற்றத்தை நோக்கி அவர் திரும்புவதாக எதிர்பார்ப்பது முற்றிலும் ஏமாற்று வித்தை என ஒரு சாராரும், நாடு மிக மோசமான நெருக்கடிக்குள் சிக்கியுள்ள வேளையில் மாற்று வழியின்றி புதிய ப…
-
- 0 replies
- 348 views
-
-
ஜனாதிபதி அநுரவின் கச்சதீவு விஜயம் September 7, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தகராறுக்குரிய ஒரு பிராந்தியமாக கச்சதீவு இருந்திருந்தால் கடந்த வாரம் (செப்டெம்பர் 1) ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தரிசு நிலமாகக் கிடக்கும் அந்த தீவுக்கு மேற்கொண்ட முன்கூட்டியே அறிவிக்கப்படாத விஜயம் சர்ச்சை ஒன்று மூளுவதற்கு காரணமாக இருந்திருக்க முடியும். ஆனால், இலங்கைக்கு சொந்தமான ஒரு நிலப்பரப்புக்கு அதன் ஜனாதிபதி செய்த விஜயம் அரசியல் மற்றும் இராஜதந்திர உரையாடல்களில் ஒரு பேசுபொருளாக கச்சதீவை மாற்றியிருக்கிறது. இந்திய அரசாங்கம் திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் குறித்து இதுவரையில் எந்தவிதமான பிரதிபலிப்பையும் வெளிக்காட்டவில்லை. ஆனால், இந்திய அரசியல் அரங்கி…
-
- 0 replies
- 143 views
-
-
ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பில் ரணிலின் நழுவல் போக்கு Veeragathy Thanabalasingham on August 8, 2022 Photo, AP Photo/Eranga Jayawardena, CP24 ரணில் விக்கிரமசிங்க தனது 45 வருடகால நாடாளுமன்ற அரசியல் வாழ்வில் 6 தடவைகள் பிரதமராகவும் அதற்கு முன்னர் அமைச்சராகவும் பெருமளவு உரைகளை நிகழ்த்தியிருக்கிறார். ஆனால், இலங்கையின் புதிய ஜனாதிபதி என்ற வகையில் கடந்தவாரம் தற்போதைய நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து நிகழ்த்திய நீண்ட கொள்கை விளக்கவுரை இதுகாலரையிலான அவரின் உரைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அது பரவலான வரவேற்பை பெற்றிருக்கிறது. உரை என்ற வகையில் அத…
-
- 1 reply
- 383 views
- 1 follower
-
-
ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பும் ரணிலும் 01 SEP, 2022 | 03:59 PM 'அறகலய' மக்கள் கிளர்ச்சி உச்சக்கட்டத்தில் இருந்த நாட்களில் 'கோட்டா வீட்டுக்கு போ ' என்ற சுலோகத்துக்கு நிகராக ' நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும் ' என்ற கோரிக்கைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.பெரும்பாலும் சகல அரசியல் கட்சிகளுமே அதற்கு ஆதரவாக குரல் கொடுத்தன.மக்கள் கிளர்ச்சியினால் பெரும் நெருக்குதல்களுக்கு ஆளான நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய முயற்சிகளை ஆதரிக்கத்தயாராயிருப்பதாக கூறவேண்டியேற்பட்டது. மக்கள் கிளர்ச்சி தணிந்துபோயிருக்கும் நிலையில…
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 478 views
-
-
பி.கே.பாலசந்திரன் - முன்னைய அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தினால் பலவீனப்பட்டுப் போன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை மீளவும் பலப்படுத்துவதற்கு அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு வசதியாக 2020 ஏப்ரல் பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெறுவதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ செயற்படுகின்றார். மக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை மீளவும் கொண்டு வருவதற்கு 19 ஆவது திருத்தத்தை முற்றாகக் கைவிடுவதில் அல்லது அதில் பெருமளவுக்கு வெட்டிக் குறைப்பு செய்வதில் கோதாபய மிகுந்த அக்கறையாக இருக்கிறார…
-
- 0 replies
- 410 views
-
-
ஜனாதிபதி தெரிவும் தமிழ்க் கட்சிகளும் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கையினுடைய எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக, அரசியலமைப்பின் 40ஆவது சரத்தின்படி, பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயான இரகசிய வாக்கெடுப்பின் மூலம், ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டு, பதவியேற்றிருக்கிறார். பல திருப்புமுனைகளோடு, மிக விறுவிறுப்பாக இந்த ஜனாதிபதி தெரிவு அரங்கேறியிருக்கிறது. இந்த ஜனாதிபதி தெரிவின் போதான தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடுகள், நடவடிக்கைகள் என்பவற்றை, மீள்பார்வை செய்வதே இந்தப் பத்தியின் நோக்கமாகும். இன்றுள்ள பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில், கூட்டணிக் கட்சிகள் உள்ளடங்கலாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு, பாராளுமன்றம் …
-
- 0 replies
- 471 views
-