அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
Published By: VISHNU 16 JUL, 2023 | 02:00 PM கபில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, அண்மையில் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரைக்கு, எதிர்வினையாற்றும் வகையில் வடக்கு, கிழக்கில் நீதிமன்றங்களைப் புறக்கணித்து போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர் சட்டத்தரணிகள். குருந்தூர்மலையில் கட்டுமானங்களை முன்னெடுக்க விதிக்கப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவை மீறி, இராணுவத்தினரும், பௌத்த பிக்குகளும் விகாரை கட்டுமானத்தை பெரும்பாலும் முடித்திருக்கின்றனர். இது குறித்து நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தப்பட்ட நிலையில், குருந்தூர் மலையி…
-
- 0 replies
- 662 views
- 1 follower
-
-
வடமாகாணசபையில் இனவழிப்பு-போர்க்குற்றம்- ஒரு நாடு இரண்டு தேசம் என்ற பிரேரனைகளை நிறைவேற்றிய பின்னர் ரணில் தனது சுயமுகத்தைக் காட்டியிருக்கின்றார். விக்கி- ரணில் எதிர்முனைப்போக்கு என்பதை வரலாற்று, சமூக அமைப்பின் ஊடாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். தேசங்களின் உருவாக்கம் என்பது தேசியவெறியாகவும், பிரிவினைவாதமாகவும் கொண்டு தேசத்தினை சிதைப்பதற்கான வேரை வரலாற்று நிகழ்வுகளை அகற்றிவிட்டு புரிந்து கொள்ள முடியாது. ரணில் சிறிலங்கா தேசத்தின் பழுத்த அரசியல்வாதி, இனவழிப்பை மேற்கொண்ட பிரதான கட்சியில் முக்கியமான காலகட்டத்தில் அங்கம் வகித்தவராவார். பாரம்பரியமாக தென்னிலங்கை அரைநிலப்பிரபுத்துவ- பௌத்த பேரினவாதத்தின் பிரதிநிதியாகும். நவதாராளவாதம் என்பது றீகன் காலத்தில் கட்டற்ற தனியார்மயமாக்கல…
-
- 0 replies
- 316 views
-
-
25 AUG, 2024 | 01:00 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முக்கிய நாடுகளின் தலையீடுகளும் கண்காணிப்புகளும் தீவிரமடைந்துள்ளன. புவிசார் அரசியல் போட்டியில் இலங்கையின் மூலோபாய முக்கியத்தவத்தின் அடிப்படையில் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ஜனாதிபதி தேர்தல் குறித்து நேரடி மதிப்பீடுகளை முன்னெடுத்து வருவதாக கொழும்பை தளமாக கொண்ட தேசிய இராஜதந்திர மையம் குறிப்பிட்டது. உத்தேச ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த காலங்களில் நடந்த முக்கிய தேர்தல்களைப் போலவே, நாட்டின் கீழ் மட்ட அரசியல் செல்வாக்கு மற்றும் நகர்வுகளை மதிப…
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
தலைக்கு மேல் போன வெள்ளம் இலங்கைத் தீவு, தெரிந்தோ தெரியாமலோ, சர்வதேச அதிகாரப் போட்டிக்குள் சிக்கிக் கொண்டு விட்டது என்பதை இப்போது எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகின்ற நிலைக்கு வந்து விட்டனர். கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம் போன்றன சீனாவின் கைகளுக்குச் சென்றதும், ஆட்சி மாற்றத்தில் மேற்குலகின் செல்வாக்கு இருந்ததும், அதையடுத்து நடந்த நிகழ்வுகளும், இந்தியப் பெருங்கடலில், சர்வதேச சக்திகளின் அதிகாரப் போட்டிக் களமாக இலங்கையை மாற்றி விட்டது. அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் கையில் இருப்பதைச் சுடடிக்காட்டி, அது எதிர்காலத்தில் சீனாவின் இராணுவத் தளமாக மாற்றமடையும் ஆபத்து இருப்பதாக இந்தியா, அமெரிக்கா, மற்றும் பல்வேறு மேற்குலக நாடுகளும் தொ…
-
- 0 replies
- 700 views
-
-
ஜெனீவாவில் பலவீனமடையும் இலங்கை அரசாங்கத்தின் கை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் சூடான கட்டத்தை அடைந்துள்ளது. இலங்கை தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் விரைவில் விவாதத்துக்கு வரப்போகிறது. வாக்கெடுப்பும் நடக்கப் போகிறது. இந்த வாக்கெடுப்பின் முடிவு எப்படி அமையும் என்ற கேள்விக்கான பதில் இறுதி வரை பலத்த எதிர்பார்ப்புக்குரியதொன்றாகவே இருக்கப் போகிறது. இந்த எதிர்பார்ப்பு இலங்கையில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் தான் உருவாகியுள்ளது. காரணம் இந்த விவகாரம் இப்போது சர்வதேச அளவுக்குப் போயுள்ளது. அதைவிட, இதன் தாக்கம் பிற நாடுகளிலும் எதிரொலிக்கும் ஒன்றாக மாறியுள்ளது. இலங்கை அரசு இந்தத் தீர்மானத்தை தோற்கடிக்க எந்தளவுக்…
-
- 0 replies
- 929 views
-
-
(புருஜோத்தமன் தங்கமயில்) வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள், தென் இலங்கைக் கட்சிகள் மற்றும் அவற்றின் உதிரிக் கட்சிகளிடம் சென்றுவிடுமோ என்கிற அச்சம், தமிழ்த் தேசிய அரசியலைப் பற்றிக் கொண்டிருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தென் இலங்கையின் பாரம்பரியக் கட்சிகளின் வேட்பாளர்களைத் தோற்கடித்து, தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றிருக்கின்றார். அதனை ‘புதிய புரட்சி மாற்றம்’ என்று அடையாளப்படுத்துகிறார்கள். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும், அந்த வெற்றியின் நீட்சியை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பிலேயே ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஒருசில நாட்களிலேயே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கான அறிவிப்பை அநுர வெளியிட்டார்…
-
- 0 replies
- 783 views
- 1 follower
-
-
சுமந்திரன் இல்லாத பாராளுமன்றம் (ஏ)மாற்றமா…..? November 30, 2024 — அழகு குணசீலன் — அன்றைய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும், இன்றைய தமிழரசுக்கட்சியினதும் ஊடகப்பேச்சாளர் மதியாபரணம் சுமந்திரன் நடந்து முடிந்த பராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சிக்கும், விருப்பத்தேர்வில் சுமந்திரனுக்கும் மக்கள் அளித்த வாக்குகள் குறைவானவை. இதனால் 63,327 வாக்குகளை (19.5 %) வாக்குகளை பெற்ற தமிழரசுகட்சிக்கு ஒரு இருக்கையே கிடைத்தது. அது மக்களின் விருப்பத்தேர்வின் அடிப்படையில் சிவஞானம் சிறீதரன் எம்.பி.யாக தெரிவு செய்யப்பட வாய்ப்பளித்துள்ளது. இது சுமந்திரனை சிறிதரன் தோற்கடித்த இரண்டாவது சந்தர்ப்பம். முன்னையது தமிழரச…
-
- 0 replies
- 403 views
-
-
நிலைமாறுகால நீதி: நான் ஊமையாய்ப் போன கனங்கள் 1 இலங்கைத்தீவின் நல்லிணக்கக் கதவுகளை திறப்பதற்கான அடித்தள வேலைகளை இலங்கை அரசும் அதன் நேச அணிகளும் ஆரம்பித்துவிட்டன. இதற்காக அவர்கள் என்ன விலை கொடுப்பதற்கும் தயாராகி விட்டார்கள். இனிமேல் இலங்கை அரசுக்கு எதிராகவோ, அதன் கொள்கைகளுக்கு எதிராகவோ எந்தவொரு தீவிரமான தரப்புகளும் மேலெழாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவர்களுடையது. இதனால்தான் கோடிகோடியாய் கொட்டியேனும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நல்லாட்சி அரசு முயல்கிறது. நீதியால் முடிக்க வேண்டியதை நிதியினால் முடிப்பதற்கு கங்கணம் கட்டியிருக்கிறார்கள். ஆனால், முயற்சியின் அளவுக்கு அது பலன் தருமா? இம்முயற்சி இதயபூர்வமாக மேற்கொள்ளப்படுகிறதா? என்ற பலத்த சந்தேகங்கள் சாதாரண மக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கோட்டா என்றால் ‘பயம்’ என்.கே. அஷோக்பரன் / 2019 நவம்பர் 26 , பி.ப. 05:00 அதிகார அரசியலின் முக்கிய தத்துவ அறிஞர்களுள் ஒருவரும் அதிகாரத்தைத் தக்கவைக்க விளையும் அரசியல் விளையாட்டுச் சூத்திரத்தை தனது எழுத்துகளில் முன்னிலைப்படுத்தியவரும், அதிகார அரசியல் விளையாட்டின் வேதம் என்று பிரபல்யமாக நம்பப்படும் “இளவரசன்” (த ப்ரின்ஸ்) என்ற நூலை எழுதியவருமான நிக்கலோ மக்கியாவலி, தனது டிஸ்கோர்சி III 21இல், “மனிதர்கள் முக்கியமாக அன்பு அல்லது பயத்தால் இயக்கப்படுவதால், இந்த இரண்டில் எந்தவோர் உணர்ச்சியைத் தூண்டும் திறனும், கட்டளையிடும் சக்தியை வழங்குகிறது” என்கிறார். ஆனால் ஓர் “இளவரசன்”, தான் ஆட்சி செய்வதற்கு, அன்பு, அச்சம் ஆகிய இரண்டில் எதைக் கையிலெடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு…
-
- 0 replies
- 844 views
-
-
வரலாற்றில் கற்றுக்கொள்ள மறுத்த பாடம் March 8, 2025 — கருணாகரன் — இலங்கை அரசியலில் பேரலையாக எழுச்சியடைந்திருக்கும் தேசியமக்கள் சக்தி (NPP) யை எதிர்கொள்வதில் எதிர்க்கட்சிகளுக்கு(எதிரணிகளுக்கு) சவாலே மிஞ்சுகிறது. இதனால் தனிப்பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைத்திருக்கும் NPP அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு பலமான தரப்புகள் எதுவுமே தற்போதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. NPPயை விமர்சிப்பதற்குக் கூட பலமான காரணங்களை எதிரணிகள் கண்டுபிடிக்கவில்லை. பாராளுமன்றத்திலும் வெளியிலும் சில காரணங்களை அவை சொன்னாலும் அவை ஒன்றும் சனங்களிடம் எடுபடக் கூடிய அளவுக்கில்லை. இதனால் எந்த ஊடகங்களிலும் அவற்றுக்கு முன்னிலை இல்லை. மலையில் எறும்பு ஊர்வதைப்போலவே முன்வைக்கப்படும் விமர்சனங்கள் உள்ளன. இது அரசியல் அரங…
-
- 0 replies
- 350 views
-
-
துர்நாற்றமடிக்கும் உலக அரசியற்களம் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா 'முட்டாள்தனமென்பது, அரசியலில் குறைபாடு அன்று' என, மாவீரன் நெப்போலியன் கூறிய கூற்று ஒன்று காணப்படுகிறது. உலகில் ஆட்சி புரிந்தோரில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினரை எடுத்துப் பார்த்தால், நெப்போலியனின் கூற்றுச் சரியெனப்படும். ஆனால், அண்மைக்காலத்தில் எழுந்திருக்கின்ற புதியவகை நிலைமை என்னவெனில், 'கடும்போக்குவாதமென்பது, அரசியலில் மிகப்பெரிய அனுகூலமாகும்' என்பது தான். உலகத்தின் பல பகுதிகளிலும், கடும்போக்குவாதக் கொள்கைகளுக்கு ஆதரவும் பின்தொடர்வோரும் அதிகரித்த வண்ணம் இருக்கும் நிலைமையைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்தக் கடும்போக்குவாதங்கள், முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவருவதற…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை ஊடாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்போகிறதா சீனா? நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாக வலியுறுத்தப்பட்டுவருகின்ற நிலையில் அரசாங்கமும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முயற்சிக்கின்றது. குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உலக நாடுகளுக்கு விஜயம் செய்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் பல முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றார். குறிப்பாக சர்வதேச நாடுகளுடன் பொருளாதார உடன்படிக்கைகளை உருவாக்கிக்கொள்வது குறித்து அரசாங்கம் பாரிய கவனம் செலுத்திவருகின்…
-
- 0 replies
- 616 views
-
-
சிரிய அகதிகளும் வெளிவிவகார அரசியலும் ஜனகன் முத்துக்குமார் சிரியாவில் மோதலின் தொடக்கத்திலிருந்து சிரிய அகதிகள், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பிரச்சினையானது சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களின் அறிக்கைகள், சிரிய மோதலில் ஈடுபட்டுள்ள வகிபங்குதாரர்களின் நடவடிக்கைகள் பற்றி எழுதப்பட்ட பல கட்டுரைகளில் சித்தரிக்கப்பட்டிருந்த போதிலும், அரசியல் நலன்களுக்காக பொதுமக்கள் பணயமாக வைக்கப்படுதலுக்கு ஒரு மோசமான உதாரணம் கிழக்கு சிரியாவில் ஐக்கிய அமெரிக்காவின் விருப்பத்துடன் இணங்கிச் செயற்படும் ஆயுதக்குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் அல்-டான்ஃப் தளத்தை சுற்றி 55 கிலோ மீற்றர் மண்டலத்துக்குள் அமைந்துள்ள ருக்பான் அகதிகள் முகாம் ஆகும். உத்தியோகபூர்வ தகவல்களின்படி, 50,000 க்கும் மேற்பட்ட …
-
- 0 replies
- 1.1k views
-
-
மாவீரர் நினைவேந்தல்: தெற்குக்கு வழங்கிய செய்தி - கே.சஞ்சயன் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்ட பின்னர், வடக்கில் மிகப் பெரியளவில் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் கடந்த வாரம் இடம்பெற்றிருந்தன. கடந்த ஆண்டு வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்துடன் 13 பேர் மட்டும்தான் மாவீரர் நாளை அனுஷ்டித்தனர். இந்தமுறை எத்தனை பேர் வருகிறார்கள் என்பதைத்தான் பார்த்து விடுவோம் என்று கேலியாகப் பேசிய அமைச்சர் ராஜித சேனாரத்ன போன்றவர்களும் மாவீரர்களை நினைவுகூர முடியாது; அதற்கு இடமளிக்கப்படாது என்று எச்சரித்த அமைச்சர்களும் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டுள்ளனர். இராணுவ அச்சுறுத்தல்களால் சில ஆண்டுகளாக அடங்கிக்…
-
- 0 replies
- 473 views
-
-
-
- 0 replies
- 697 views
-
-
அரசியல் தீர்வை குழப்பும் முயற்சியா? நாட்டில் இடம்பெற்ற யுத்த குற்றம் மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று தேவையென்ற அழுத்தம் வலிமைப்பட்டு வருகின்ற நிலையில் முன்னாள் போராளிகள் இன்னும் செயற்படுகிறார்கள். வெளிநாட்டளவில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கூறுவது போக்கை திசைத் திருப்பும் ஒரு ராஜதந்திர உபாயமாகவே கருதப்பட வேண்டும். கடந்த அரசாங்கத்தால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கும் 12 ஆயிரம் முன்னாள் புலிகளைக் கைது செய்யுங்கள். இவர்கள் சர்வதேச அமைப்புகளுடனும் ஏனைய புரட்சிகர செயற்பாட்டாளர்களுடனும் செயற்பட்டு வருகின்றார்கள் என கடு…
-
- 0 replies
- 453 views
-
-
அரசாங்கத்தின் தந்திரோபாயம் செல்வரட்னம் சிறிதரன் பொறுப்பு கூறுவதற்காக மேலும் கால அவகாசம் தேவை என கோருவது பிரச்சினைகளை மழுங்கடித்து, அவற்றுக்கான தீர்வுகளை இல்லாமற் செய்வதற்கான தந்திரோபாயச் செயற்பாடாகவே கருத வேண்டியிருக்கின்றது. அரசாங்கம் கோருகின்ற கால அவகாசத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வழங்குவதாக இருந்தால், அந்தக் காலப்பகுதியில் அரசாங்கம் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை மனித உரிமைகள் பேரவை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தரப்பில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதிலும், போர்க்காலச் செயற்பாடுகளுக்கு நீதியைப் பெற்றுக்கொள்வதிலும் நல்லாட்சி அரசாங்கம் உறுதியாகவு…
-
- 0 replies
- 367 views
-
-
கச்சத்தீவு : புலிகள் இருக்கும்வரை இலங்கை பயந்தது | வரதராஜன் Ex Police Officer https://m.youtube.com/watch?v=2AYuQtm63bU
-
- 0 replies
- 744 views
-
-
“கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை பற்றியே நான் நோக்குகிறேன். என்ன சாபம் பிடித்துக்கொண்டதோ எனக்கு தெரியவில்லை. 1977 ஆம் ஆண்டில் இருந்து வடக்கில் கொலை செய்கின்றனர். இளைஞர்கள் மரணிக்கின்றனர். சனி பிடித்து கொண்டதோ தெரியவில்லை?. இந்த சாபம் என்ன? உங்களது பாவப்பட்ட அரசாங்கத்தின் மீதான சாபம் என்றே நாங்கள் கூறவேண்டியேற்பட்டுள்ளது. இந்த சாபத்தில் இருந்து மீள, 12 ஆண்டு கால சாபத்தில் இருந்து விமோசனம் பெற தயவு செய்து விலகிச் செல்லுங்கள் என்றே நாட்டு மக்கள் கூறுகின்றனர். நாங்களும் அதனையே கோருகிறோம்” - மகிந்த ராஜபக்ச (1990-07-19 நாடாளுமன்ற அவசரகாலச் சட்டம் மீதான விவாதம்) அரசாங்கத்தின் மீதான சாபம் நாட்டுக்கு சனி கிரக தோஷத்தை ஏற்படுத்தும் என்பதே மகிந்த…
-
- 0 replies
- 369 views
-
-
அச்சம் அரசியல் எதிராளிகளுக்கு, ஆட்சியாளர்கள் நிறையவே பயப்படுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தேர்தல் களமொன்றில், எதிரணியினரைச் சந்திப்பதற்கு, ஆட்சியாளர்கள் கடுமையாக அச்சப்படுகின்றனர். அதனால்தான், ஒக்டோபர் மாதம் பதவிக் காலம் நிறைவடையும் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்குத் தள்ளிப் போடுவதற்கான தந்திர வேலைகளை அவர்கள் செய்யத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே, உள்ளூராட்சித் தேர்தல்களையும் நடத்தாமல், நாட்களைக் கடத்தி வருகின்றனர். கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலங்கள், ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியுடன் முடிவடைகின்றன. இரண்டாம் திகதி, தேர்தல் குறித்து அறிவிப்புச் செய்வதற்…
-
- 0 replies
- 321 views
-
-
எந்தவொரு நாடும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் போது அவற்றை நியாயப்படுத்துவதற்காக மற்றைய நாடுகளில் இடம்பெறும் மீறல்களைச் சுட்டிக்காட்ட முயற்சிக்கின்றது அல்லது பூகோள மூலோபாய பேரம்பேசலில் ஈடுபடுகின்றது என்பதே உண்மையாகும். இவ்வாறு The New Indian Express ஊடகத்தில் Anuradha M chenoy* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. மனித உரிமைகள் என்பது எப்போதும் வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் போட்டியிடுகின்ற ஒன்றாகக் காணப்படுகிறது. மனித உரிமைகள் என்பது வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்தக் கூடாது என மூலோபாய வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர். உலக நாடுகள் தமது நாடுகளின் நலன்கள் மற்றும் அதிகாரங்களை மட்டுமே கொண்டிருக்க…
-
- 0 replies
- 765 views
-
-
கோரிக்கைகளை முன்வைப்பது மட்டும் அரசியல் அல்ல -நிலாந்தன். January 23, 2022 நாட்டில் செயற்கை உர இறக்குமதி நிறுத்தப்பட்டதால் பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் திருமணம்,பிறந்தநாள் போன்ற சுபகாரியங்களில் வழங்குவதற்கு பூச்செண்டுகளுக்கு தட்டுப்பாடு. மரண வீடுகளில் வைப்பதற்கு மலர் வளையங்களுக்கும் தட்டுப்பாடு. அதே சமயம் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இயங்குவது நிறுத்தப்பட்டதால் மெழுகுதிரிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். சபுகஸ்கண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் உப உற்பத்திகளில் ஒன்றாகவே மெழுகுதிரி வார்க்கப்படுவதாகவும் இப்பொழுது அதற்கும் தட்டுப்பாடு வந்திருப்பதாகவும் தெர…
-
- 0 replies
- 361 views
-
-
சாய்ந்தமருது - கல்முனை விவகாரம்: இயலாமையின் வலி தனித்துவ அடையாளம் என்றும் அபிவிருத்தியோடு சேர்ந்த உரிமை அரசியல் என்றும் பல வருடங்களாகப் பேசி வருகின்ற முஸ்லிம்களின் அரசியல் இயலாமை, கிழக்கில் மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகி இருக்கின்றது. வரலாற்றில் இருந்து, முஸ்லிம் அரசியல்வாதிகள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதையும், அரசியலில் இன்னும் அவர்கள் பக்குவப்படவில்லை என்பதையும், மக்களை உசுப்பேற்றி விடுவதில் கைதேர்ந்த அளவுக்கு காரியம் முடித்துக் காட்டுவதில் அவர்களுக்கு ஆற்றல் கிடையாது என்பதையும், சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம் வெளிக்காட்டியிருக்கின்றது. இங்கே இருக்கின்ற பிரச்சினை, சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்ச…
-
- 0 replies
- 543 views
-
-
ஊசலாடும் நல்லாட்சி பின்வாங்கும் மஹிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் வெளிவந்ததிலிருந்து நாட்டில் தேசிய அரசியலில் பாரிய கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கின்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் உள்ளூராட்சி தேர்தல் ஒன்றின் காரணமாக தேசிய அரசியல் மட்டத்தில் இந்தளவு தூரம் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டமை மிக முக்கியமானதாகவே காணப்படுகின்றது. இந்தத் தேர்தல் மிகத்தாமதமாகவே நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு நடைபெற்றிருக்கவேண்டிய உள்ளூராட்சிமன்றத் தேர்தல் புதிய தேர்தல் முறை மாற்றம் காரணமாக பாரிய தாமதத்தின் பின்னரே நடைபெற்றது. தேர்தல் நடைபெறும் முன்னரே இந்தத் தேர்தலின் பின்னர் பாரிய அரசியல் நெருக்கடிகள் ஏற்படும் …
-
- 0 replies
- 500 views
-
-
நினைவுகூர்தலுக்கான ஒரு பொது ஏற்பாட்டுக்குழு எதிர்காலத்தில் சாத்தியமா? நிலாந்தன்! கடந்த வாரம் திலீபன் தொடர்பான எனது கட்டுரையில் திலீபனின் படம் ஒன்று காணப்பட்டதனால் முகநூல் நிர்வாகம் எனது முகநூல் கணக்கை 24 மணித்தியாலங்களுக்கு கட்டுப்படுத்தி வைத்திருந்தது.எனது நண்பர்கள் பலரும் அவ்வாறு தமது முகநூல் கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கிறார்கள். குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தன்னுடைய கணக்கு முடக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் ஒரு சமூக வலைத்தளமானது திலீபனின் படத்தை தனது சமூகத் தராதரங்களை மீறும் ஒன்றாகக் கருதுகின்றது.இவ்வாறு உலகளாவிய சமூகவலைத்தளம் ஒன்றினால் தடை செய்யப்பட்ட ஒரு படத்துக்குரியவரை தமிழ் மக்கள் எப்படி அஞ்சலித…
-
- 0 replies
- 161 views
-