அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
"நாங்கள் விதைக்கிறோம்... அவர்கள் விற்கிறார்கள் !” டி.அருள் எழிலன், படம்: என்.ஜி.மணிகண்டன் விமர்சனங்களைக் கண்டுகொள்ளாமல் விறுவிறுப்பாக வளைய வருகிறார் சீமான். 'மாற்றத்துக்கான எளிய மக்களின் மாநாடு’ நடத்திய பூரிப்பு தெரிகிறது. ''2016-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி'' என்கிறார். என்னதான் திட்டம் வைத்திருக்கிறார் மனிதர்?! ''வாரிசு அரசியல் பின்னணியோ, அரசியல் கட்சிப் பின்புலமோ இல்லாமல், முதல் தலைமுறையாக சாதாரண ஒரு கிராமத்தில் இருந்து வந்த என்னை, பொதுவெளியில் களமாடவைத்தது ஈழ அரசியல். ஈழப் படுகொலைகளில் இருந்து பிறந்தவர்கள் நாங்கள். இந்த மண்ணில் தமிழ்த் தேசிய அரசியலின் தேவையை உணர்ந்து, 'நாம் தமிழர்’ கட்சியை உருவாக்கினோம். சில காலம…
-
- 0 replies
- 1k views
-
-
சம்பந்தன், சுமந்திரன்; சாதிப்பார்களா, சரிவார்களா? காரை துர்க்கா / 2019 மார்ச் 12 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:24 Comments - 0 ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் மௌனத்துக்கு (2009) பின்னராகக் கடந்துவந்த பத்து ஆண்டுகளில், தமிழ் மக்களின் தலைமை, தமிழ் மக்களைச் சிறப்பான செல்நெறியில் வழிநடத்தத் தவறிவிட்டது. இவ்வாறாக, தமிழ் மக்கள் தங்களுக்குள்ளும் பொது வெளியிலும் உள்ளம் குமுறுகின்றார்கள், மனம் வெதும்புகின்றார்கள். அவ்வாறெனின், தமிழ் மக்களின் தலைமை என்றால் யார்? 2009 மே 19க்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே, ஈழத்தமிழ் மக்களின் தலைமையைத் தத்தெடுத்தது. ஆனால் அவர்கள், தமிழ் மக்களது அபிலாஷைகளை அடையக்கூடிய வகையிலும் தமிழ் மக்கள்…
-
- 0 replies
- 888 views
-
-
தோல்வியை நோக்கிய பயணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்தி வந்த பேச்சுக்கள் முடங்கிப் போயுள்ள நிலையில், தெரிவுக்குழுவுக்குள் கூட்டமைப்பை இழுப்பதற்கான அரசதரப்பு நகர்வுகளும் தோல்வியில் முடிந்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்குள் வந்தால் தான் இனிமேல் அவர்களுடன் பேச்சுக்களை நடத்த முடியும் என்று அரசாங்கம் கூறியுள்ள நிலையில் அடுத்த கட்டப்பேச்சுகள் எப்போது என்று யாருமே கேள்வி கேட்பதும் இல்லை. பதில் கொடுப்பதும் இல்லை. இந்தக் கட்டத்தில் கடந்த வாரம் ஐதேகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தியிருக்கிறது. இதன்போது கூட்டமைப்பு அங்கம் வகிக்காத தெரிவுக்குழுவில் தாம் அங்கம் வகிக்கப் போவதில்லை என்று ஐதேக கூறியுள்ளது. அ…
-
- 0 replies
- 478 views
-
-
-
கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவது உறுதி! | பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிறுத்தப்படுவது உறுதியாகிவிட்டது என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 11 ம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கட்சியின் தலைமைப்பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வார் எனவும் அதன் பின்னர் அவர் அனேகமாக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பார் எனவும் சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது. இந்த சந்திப்பிற்கு முதல்நாள் பொதுஜனபெரமுனவின் கட்சி தலைவர்களிற்கு மகிந்த ராஜபக்ச தனது ம…
-
- 0 replies
- 433 views
-
-
தமிழ்த் தேசிய அரசியலை மக்கள் மயப்படுத்துவது – நிலாந்தன். கடந்த ஞாயிறுக் கிழமை, குமார் பொன்னம்பலத்தின் 25ஆவது நினைவு நாள் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் திருமறைக் கலா மன்ற,கலைத்தூது மண்டபத்தில் நடந்த அந்நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் நினைவுப் பேருரை ஆற்றினார். ரகுராம் தெளிவான துணிச்சலான நிலைப்பாடுகளை முன்வைத்துப் பேசினார். “எக்கிய ராஜ்ய” என்று அழைக்கப்படுகின்ற தீர்வு முன்மொழிவை ஏன் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை அவர் முன் வைத்தார்.தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக குறிப்பாக ஆயுதப் போராட்டத்தின் கோரிக்கைகள் தொடர்பாகத் தெளிவான முடிவுகளை எடுத்து அதில் பேசினார். ஒரு கட்சி மேடையில், நிகழ்த்தப்பட்ட நி…
-
- 0 replies
- 284 views
-
-
சுரேஷின் அகற்றமும் மாவையின் நோக்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மீது பெரும் ஆர்வமும் ஆசையும் கொண்டிருக்கின்றவர்களின் பட்டியல் நீளமானது. அதில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப். - சுரேஷ் அணி) தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் குறிப்பிட்டுச் சொல்லப்படக் கூடியவர்கள். இந்தப் பட்டியலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் சேர்த்துக் கொள்ளப்படக் கூ…
-
- 0 replies
- 534 views
-
-
போக்கிடமற்றவர்களின் புதிய கூட்டணி புருஜோத்தமன் தங்கமயில் / 2020 பெப்ரவரி 12 ஒரு வழியாக சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி, ‘தமிழ் மக்கள் தேசிய கூட்டணி’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது. புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்ட மறுநாள், யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் தொலைக்காட்சியொன்றில், விக்னேஸ்வரனை அடுத்த தேசிய தலைவராகக் கடந்த காலத்தில் அடையாளப்படுத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் மட்டத் தலைவர் ஒருவர், “விக்னேஸ்வரன் அமைத்திருப்பது நாற்காலிக்கான கூட்டணி. பொதுத் தேர்தல் முடிந்து ஆறு மாதங்களுக்குள் அந்தக் கூட்டணி கலைந்துவிடும்” என்று சவால் விட்டுக்கொண்டிருந்தார். இன்ன…
-
- 0 replies
- 536 views
-
-
மூன்று வருட இடைவெளியில் மூன்று ஆட்சியாளர்களை விரட்டிய தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகள் Veeragathy Thanabalasingham September 16, 2025 Photo, NY TIMES தெற்காசியாவில் மூன்று வருடங்களில் மூன்று அரசாங்கங்களை மக்கள் கிளர்ச்சிகள் பதவி கவிழ்த்திருக்கின்றன. முதலாவதாக, 2022ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி ராஜபக்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. இரண்டாவதாக, 2024 ஆகஸ்டில் பங்களாதேஷ் மக்கள் கிளர்ச்சி பிரதமர் ஷேய்க் ஹசீனாவின் அரசாங்கத்தை கவிழ்த்தது. மூன்றாவதாக, கடந்த வாரம் அதேபோன்ற மக்கள் கிளர்ச்சி நேபாளத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் அரசாங்கத்தை வீழ்த்தியிருக்கிறது. இலங்கையினதும் பங்களாதேஷினதும் கிளர்ச்சிகளின்போது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவும் ஷேய்…
-
- 0 replies
- 226 views
-
-
விடிவே கிடைக்காதா ? ரொபட் அன்டனி ஐ.நா.செயற்குழுவின் முக்கிய பரிந்துரைகள் *பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்று சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டத்தர ணிகள் மற்றும் விசாரணையாளர்களைக் கொண்டு முன்னெடுக்கப்படவேண்டும். * எக்காரணம் கொண்டும் இந்த விசாரணை செயற்பாட்டில் இராணுவப்படையினர் பங்களிப்பு செய்யவோ தலையிடவோ முடியாது. *உடனடியாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச தரத்திற்குட்பட்ட சட்ட மொன்றை அறிமுகப்படுத்த வேண்டும். *பாதிக்கப்பட்டோரின் சங்கங்கள், சிவில் சமூக நிறுவனங்களுடன் இணைந்து உண்மையை கண்டறியும் நிறுவனத்தை உருவாக்கவேண்டும். * ஹெபியஸ்…
-
- 0 replies
- 405 views
-
-
நாடாளுமன்றத்தில் குப்பை விவாதம் வேண்டுமா? பொது எதிரணி என அழைக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான நாடாளுமன்றக் குழுவின் பெயரளவிலான தலைவரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்த்தன, கடந்த தமிழ், சிங்களப் புத்தாண்டு தினத்தில் மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்தமை தொடர்பாக, நாடாளுமன்ற விவாதம் ஒன்றைக் கேட்டு இருக்கிறார். அதற்கு இணங்குவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூறியிருக்கிறார். நாட்டில் முக்கியமான விடயங்கள் தொடர்பாகவும் அல்லது பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற்றாலும் அவற்றைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்காக அவகாசம் கோருவது எதிர்க்கட்சிகளின் வழக்கமாகும். சில விவாதங்களின்போது, எதிர்…
-
- 0 replies
- 319 views
-
-
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம்... ஸ்ரீலங்கா அரசும் பொதுநலவாயமாநாடும் - சாந்தி சச்சிதானந்தம் 16 நவம்பர் 2013 விருத்தியடைந்து செழிக்கும் ஒன்றுக்குள்ளேயே அதன் அழிவுகளின் விதைகளும் இருக்கும் என்பது இயற்கையின் நியதி. ஸ்ரீலங்கா அரசிற்கு பொதுநலவாய மாநாடு அவ்வகையானதொரு அனுபவத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டினை இலங்கை ஏற்பாடு செய்தால், அடுத்த இரு ஆண்டுகளுக்கு அந்த அமைப்பின் தலைமைத்துவப் பதவியினை அடைந்தால், உலகநாடுகளின் மத்தியில் உருத்துடனும் (with legitimacy) அந்தஸ்துடனும் உலாவலாம் எனக் கனவுகண்டது. இந்நாடுகளின் மூலம் தனக்குக் கிடைக்கப் போகும் அங்கீகாரம் போர்க் குற்றச்சாட்டுக்களைப் புறந் தள்ளும் எனநம்பியது. அதற்காகவே, தனது இ…
-
- 0 replies
- 933 views
-
-
தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் இருந்து ஆவணத்தைப் பெறமுன்னர் இலங்கைக்கான நிதியுதவியை உறுதிப்படுத்தியது இந்தியா திருகோணமலை எண்ணெய்க்குத ஒப்பந்தத்தையடுத்து விரிவடையும் இந்திய- இலங்கை புவிசார் ஒத்துழைப்பு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பவுள்ள ஆவணத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகள் சென்ற வியாழக்கிழமை கைச்சாத்திட்டுள்ள நிலையில், இந்திய மத்திய அரசு 900 மில்லியன் டொலர் பெறுமதியான நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று வியாழக்கிழமை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ர…
-
- 0 replies
- 416 views
-
-
சீனனுக்கு நிலத்தை எழுதி கொடுத்து பிச்சை எடுக்கும் நீ உன் நாட்டு ஈழத்தமிழனுக்கு என்ன செய்தாய்,...?
-
- 0 replies
- 535 views
- 1 follower
-
-
மின்சாரக்கட்டமைப்பை இணைப்பது இலங்கைக்கு இலாபகரமான தீர்வு by யே.பெனிற்லஸ் 2022/07/12 in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, சிறப்புக் கட்டுரைகள், முக்கிய செய்திகள் 86 1 A A 0 37 SHARES 1.2k VIEWS Share on FacebookShare on Twitter இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் ஒரு முக்கிய அம்சமாக நாளொன்றுக்கான முழுமையான மின்சாரத்தேவையை வழங்க முடியாத பலவீனமான நிலைமைகள் நீடித்துக்கொ…
-
- 0 replies
- 587 views
- 1 follower
-
-
பாகிஸ்தானின் கொள்கை மீறல் - ஜனகன் முத்துக்குமார் சவூதி அரேபியாவுக்கு சுமார் 1,000 இராணுவப் படையினரை அனுப்புவதற்கு பாகிஸ்தான் அண்மையில் முடிவெடுத்திருக்கின்றமை, யேமன் தொடர்பில் பாகிஸ்தான் நாடாளுமன்றம், 2015ஆம் ஆண்டில் யேமன் தொடர்பில் நிறைவேற்றிய தீர்மானத்தை மீறியதான ஒரு செயற்பாடு என்பதற்கு அப்பால், இது மத்திய கிழக்கைப் பொறுத்தவரை அதன் இரண்டு பிரதான பிராந்தியப் போட்டியாளர்களான சவூதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகளுக்கு நடுவே நடுநிலையான நிலைமையைப் பேணுதல் தொடர்பில் கடைப்பிடித்திருந்த தொடர்ச்சியான கொள்கையை விட்டு விலகும் செயலாகவே பார்க்கப்படுகின்றது. குறித்த நடுநிலையைப் பேணும் கொள்கையானது, வெ…
-
- 0 replies
- 323 views
-
-
இலங்கையில் 9,75,000 இந்திய வம்சா வளியினர், பிரஜா உரிமை இல்லாமல், நாடற்றவர்களாக நாதியற்று இருந்த காலத்தில், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்பதற்காக, சாஸ்திரி சிரிமாவோ ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் 1964 அக்டோபர் 30 ஆம் திகதி கையொப்பமிடப்பட்டது.இந்த உடன்பாட்டிற்கு 50 ஆண்டு நிறைவாகிறது. எதற்காக இந்த ஒப்பந்தம்? 1815 கால கட்டத்தில், கண்டி ராஜ்ஜியம் வீழ்த்தப்பட்டு, ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கையின் மய்யப் பகுதியான மலையகத்தில், ஆங்கிலேயர் கோப்பி பயிரிட்டனர். கோப்பித் தோட்டப் பணிகளுக்கு தொழிலாளர்கள் தேவைப்பட்டதால், தமிழகத்தின் திருநெல்வேலி, இராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளிலிருந்து தொழிலாளர்களை கடற்கரை வரை கூட்டம் கூட்டமாக நடத்தி அழைத்துச் சென்றனர். அங்கிருந்து கடலி…
-
- 0 replies
- 1.2k views
-
-
மீண்டும் தோன்றும் நெருக்கம் இரா.சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையில் இதுவரையில் பகிரங்கமான மோதல்கள் இருந்ததில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவ்வப்போது தனது உரையில் கூட்டமைப்பின் தலைமையை விமர்சித்திருந்தாலும், இரா.சம்பந்தனின் பெயரைக் குறிப்பிட்டு அத்தகைய விமர்சனங்களைச் செய்ததில்லை. அதுபோலவே, இரா.சம்பந்தன் ஒருபோதும், முதலமைச்சர் விக்னேஸ்வரனை விமர்சிக்கவோ, அவரைக் குறை கூறும் வகையிலோ நடந்து கொள்ளவில்லை தமிழ் அரசியல் பரப்பில் அண்மையில் மிகவும் உன்னிப்பாக நோக்கப்பட்ட ஒரு நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் நடந்த “நீதியரசர் பேசுகிறார்” என்ற நூல் வெளியீடு தான். வடமாகாண ம…
-
- 0 replies
- 429 views
-
-
ஒரு கர்தினாலுக்குக் கிடைத்த வெற்றி? நிலாந்தன். சனல் நாலு வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் அரச சேவை அதிகாரிகளை உள்ளடக்கியதாக இக்குழு அமையும்.இக்குழுவை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரட்ணாயக்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித் பண்டார தென்னகோன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், சனல் நாலு வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் ஆராய பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். ஆனால்,இலங்கையில் க…
-
- 0 replies
- 577 views
-
-
எமது முன்னாள் ஜனாதிபதிகளின் அரசியல் September 18, 2023 —- வீரகத்தி தனபாலசிங்கம் — றொடீசியா என்று முன்னர் அழைக்கப்பட்ட ஆபிரிக்க நாடான சிம்பாப்வேயில் சிறுபான்மை வெள்ளையரின் ஆட்சிக்கு எதிரான கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் றொபேர்ட் முகாபே. வெள்ளையர் ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்ட பிறகு அவர் 1980 தொடக்கம் 1987 வரை அந்த நாட்டின் பிரதமராகவும் 1987 தொடக்கம் 2017 வரை ஜனாதிபதியாகவும் பதவிவகித்தார். மொத்தமாக 37 வருடங்கள் அவர் ஆட்சியதிகாரத்தில் இருந்தார். அதிகாரத்தில் இருந்து இறங்கவிரும்பாமல் நீண்டகாலமாக பதவியில் இருந்த முகாபேயிடம் ஒரு தடவை செய்தியாளர் ஒருவர், “நீங்கள் எப்போது சிம்பாப்வே மக்களுக்கு பிரியாவிடை கொட…
-
- 0 replies
- 343 views
-
-
இஸ்ரேல் கேட்கும் மன்னிப்புக்குள் மறைந்துள்ள திட்டம் | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்
-
- 0 replies
- 472 views
-
-
தமிழ்தேசியகூட்டமைபிடம் சில கேள்விகள்!!!!!! JULY 25, 2015 4:42 PM தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சிலகேள்விகள்!!!Kailayapillai jeyakanthan 1.தமிழ்மக்களிற்கு எதிராக சிங்களவர்களால் கடந்த 60 ஆண்டுகாலத்திற்கு மேலாக நடத்தப்பட்டு வருவது இனச்சுத்திகரிப்பு என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?முன்பு ஒருபேட்டியில் அதை நிரூபிப்பது கடினம் என்று(சுமத்திரன்) கூறியிருந்தீர்கள்.இப்பொழுதும் அந்தநிலைப்பாட்டில்தான் இருக்கிறீர்களா?2.ஒற்றையாட்சியின் கீழ் முழுமையான சுயநிர்ணயஉரிமை சாத்தியமா? உதாரணம் தர முடியுமா?(கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுயநிர்ணயஉரிமை என்ற சொல் கட்டாயம் வாக்குகளுக்காகஉள்நுழைக்கப்படும்). 3.ஒன்று பட்ட ஐக்கிய இலங்கை என்பதற்கும்ஒற்றையாட்சி என்பதற்கும் இடையே உள்ள வித்தியாசம்என்…
-
- 0 replies
- 413 views
-
-
நாளை எழுக தமிழ் – நிலாந்தன்… September 15, 2019 யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இம்மாதம் மூன்றாம் திகதியிலிருந்து பதினோராம் திகதி வரை ஓர் ஒளிப்படக் காட்சியோடு ஒரு விவரணப்படமும் திரையிடப்பட்டது.ஒளிப்படங்கள் ஸ்டீபன் சாம்பியனுடையவை.விவரணப்படத்தின்பெயர் குடில். தயாரித்தவர் கண்ணன் அருணாசலம். இப்படம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் பற்றியது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப்போராடும் அமைப்பினால் தற்காலிகமாக கட்டப்பட்டிருக்கும் ஒரு சிறு குடிலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. குடிலில் கிட்டத்தட்ட மூன்று பெண்கள் இருக்கிறார்கள.; ஒரு மேசை இருக்கிறது. தவிர குடிலின் உட்சுவர்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய ஒளிப்படங்க…
-
- 0 replies
- 921 views
-
-
தமிழர்களும் கொரோனோ வைரசும். சீன மரபு ஓவியங்களில் வரும் நிலக்காட்சிகளில் ஒரு முக்கியமான அம்சம் உண்டு. அங்கே இயற்கை பிரம்மாண்டமாகக் காட்டப்படும். அப்பேரியற்கைக்கு முன் மனிதன் மிகச் சிறியவனாக வரையப்பட்டிருப்பான். அவன் கட்டிய வீடுகள் அவனுடைய தயாரிப்புக்கள் யாவும் பேரியற்கைக்கு முன் மிகச் சிறியவைகளாகக் காணப்படும். சீன மரபு ஓவியங்கள் சீனாவின் மகத்தான தத்துவ ஞானமாகிய தாவோயிஸத்தின் வழி வந்தவை என்று நம்பப்படுகிறது. அங்கே வெளியை பிரம்மாண்டமாக காட்டுவதற்காக மனிதன் மிகச் சிறியவனாக காட்டப்படுகிறான். இயற்கைக்கு முன் மனிதன் அற்பமானவன் என்ற உணர்வை அந்த ஓவியங்கள் தரும். சீனாவில் முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனோ வைரஸ{ம் அப்படி ஒரு உணர்வையே தருகிறது. இப்பொழுது சீனா உலகப் பேர…
-
- 0 replies
- 693 views
-
-
காணாமல்போனவர்களின் தகவல்களை சேகரித்தவர்கள் கூட சிறீலங்காவில் துன்புறுத்தப்பட்டனர் – ஜஸ்மின் சூக்கா காணாமல்போனவர்களின் பெயர்களை சேகரித்தவர்கள் கூட பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்ப்ட்டு துன்புறுத்தப்பட்டதாகவும், இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஏறத்தாள 15 பேருக்கு 2015 ஆம் ஆண்டு பிரித்தானியா அகதித் தஞ்சம் வழங்கியுள்ளது எனவும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்ட அமைப்பு இன்று (30) அனைத்துலக காணாமல்போனவர்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதன் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா மேலும் தெரிவித்துள்ளதாவது: போர் நிறைவடைந்து ஒரு தசாப்தம் நிறைவடைந்தபோதும், போரில் காணாமல்போன தமது உறவுகள் தொடர்பில் உண்மையை தேடிய தமிழ் இளைஞர…
-
- 0 replies
- 328 views
-