அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
சம்பந்தன், விக்னேஸ்வரன் இணைத்தலைமை காலத்தின் தேவை Editorial / 2018 டிசெம்பர் 11 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:16 Comments - 0 கடந்த முதலாம் திகதி சனிக்கிழமை, கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் காலை 11.50 மணிக்கு, யாழ். நோக்கிச் செல்லும் ரயிலில் ஏறிக் கொள்வதற்காக, சனத்திரள் கூடியிருந்தது. குறித்த நேரத்தில் ரயில் கிளம்பியது. எமது பயணம், இரண்டாம் வகுப்புப் பெட்டியில் தொடர்ந்தது. அதில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் தனது இரண்டு பாதுகாவலர்களுடன் பயணித்தார். எமக்கு அருகில் இருந்த, 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், விக்னேஸ்வரனுடன் கதைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அது போலவே, கதைத்தும் விட்டார். விக்னேஸ்வரனுடன், அந்த நபர் என்ன கதைத்தார் …
-
- 0 replies
- 492 views
-
-
பெண்களின் குரல்கள் ஓங்குமா? ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் நீக்கமும் அதன் பின்னர் ஏற்பட்ட களேபரங்களுமே, இன்றைய மலையக அரசியலில் சூடுபிடித்துள்ளன. இதைத் தவிர, நீண்டகால போராட்டங்களின் பின்னர், நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முயற்சியால் பெற்றுக்கொள்ளப்பட்ட இந்த வெற்றியை, மலையக மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். கட்சி அரசியலில் ஊறிப்போன மலையக வரலாற்றை, அதிலிருந்து மாற்றிவிடுவது இயலாத காரியம். மாதச்சம்பளத்தில், சந்தா கட்டும் தொழிலாளர் வர்க்கம் இருக்கும்வரை, மலையகத் தொழிற்சங்கங்களின் ஆணிவேரைக் கூட அசைத்துவி…
-
- 0 replies
- 492 views
-
-
மக்களை முட்டாள்களாகக் கருதும் வாக்குறுதி மூட்டைகள் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 12:10 “நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையின்படி, அவர்களது நாளாந்தச் சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்துவேன்” என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அண்மையில், தமது தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் போது கூறினார். இரண்டொரு நாள்களுக்குப் பின்னர், தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய புதிய ஜனநாயக முன்னணியின் ‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, “நான் ஜனாதிபதியானால், தோட்டத் தொழிலாளர்களின்…
-
- 0 replies
- 492 views
-
-
கிழக்கு மாகாண சபை விவகாரம்: முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கை நியாயமானதா? யதீந்திரா கிழக்கு மகாண சபை விவகாரம், ஆட்சிமாற்றம் தமிழ் மக்களின் வாழ்வில் உண்மையிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறது. இலங்கையின் இன முரண்பாடு என்பது, பொதுவாக சிங்கள - தமிழ் முரண்பாடாகவே விவாதிக்கப்பட்டும், பேசப்பட்டும் வருவது அனைவரும் அறிந்த ஒன்றே! ஆனால், கிழக்கு மாகாணசபை விவகாரத்தில் அது வேறுவிதமானதொரு சித்திரத்தை காண்பிக்கிறது. ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் புதிய அரசியல் சூழலில், கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரதான எதிரி முஸ்லிம்களா என்னும் கேள்வி எழுந்திருக்கிறது. கிழக்கு மாகாணத்திலுள்ள மாவட்டங்களான மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள்…
-
- 0 replies
- 492 views
-
-
மைத்திரி முன்னெடுத்த இன்னொரு ஒப்பரேசன் சுப்த்ரா “பௌதிக ரீதியாக பயங்கரவாதிகளைத் தோற்கடித்த போதிலும், அவர்களின் கொள்கையைத் தோற்கடிக்க முடியாது போயுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக, சர்வதேச ஒத்துழைப்புடன் அந்தக் கொள்கையைத் தோற்கடிப்பதற்கே முயன்று வந்தேன்“ கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, கொள்கை விளக்க உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியிருந்தார். இதற்கு முன்னரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலரும், போரில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போதிலும், அவர்களின் சித்தாந்தத்தை தோற்கடிக…
-
- 0 replies
- 492 views
-
-
பொருளாதார உறவை பிணைக்கும் கப்பல் சேவை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவிருக்கின்றது என்ற செய்தி வெளிவந்தவுடன் பலரது முகங்களிலும் ஒருவகையான மகிழ்ச்சியை காணக்கூடியதாக இருந்தது. எப்படியாவது ஒருதடவை சென்றுவந்துவிடவேண்டும் என்பதே அவர்களது நினைப்பில் இருந்தது. இந்த கப்பல் சேவை ஆரம்பிப்பதன் ஊடாக, இருநாட்டுக்கும் இடையிலான உறவு வலுப்பெறும். அத்துடன், பொருளாதார மற்றும் கலாசார ரீதியிலான பிணைப்பு இன்னும் இறுக்கமாகும். தமிழ்நாட்டுடன் இன்னும் தொப்புள் கொடி உறவில் இருப்போருக்கு அது வரபிரசாதமாகவே அமையும். இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான விமானச் சேவைகள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. தமிழ்நாட்டுக்குச் சென்று திரும்பு…
-
- 0 replies
- 492 views
-
-
"சாணக்கியரின் நேர்மை!" [ஊழல் செய்யும் அரசியல் அதிகரிகளுக்கும் , மந்திரிகளுக்கும்] இந்திய வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற அரசர்களுள் ஒருவர் சந்திரகுப்தன். அவரது குரு, தலைமை அமைச்சர் சாணக்கியர். அவர் அரசியல் மேதை. அர்த்தசாஸ்திரம் என்ற அரசியல் வழிகாட்டி நூலை எழுதியவர். ஒருநாள் அரசவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சாணக்கியர் தலைமை அமைச்சர் என்ற முறையில் எழுந்து, ``மன்னா! நம் மக்களில் பலர் ஏழ்மை நிலையில் கடுங்குளிரால் வாடுகிறார்கள். அவர்களுக்கு அரசு செலவில் கம்பளிப் போர்வை கொடுத்து உதவ வேண்டும்'' என்றார். "தலைமை அமைச்சர் அவர்களே! தங்கள் கருத்தை வரவேற்கிறேன். எல்லா ஏழை எளிய மக்களுக்கும் கம்பளிப் போர்வை வழங்க ஏற்ப…
-
- 0 replies
- 491 views
-
-
சர்வதேச அழுத்தங்களை குறைக்க தேர்தல் வெற்றியை காண்பிக்க முயற்சி:- -அ.நிக்ஸன்- 06 ஜனவரி 2014 எதிர்க்கட்சிகளில் செல்வாக்கு உள்ளவர்களை அரசாங்கத்த்தின் பக்கம் எடுக்கும் நடவடிக்கைகள் தீவிரம். அமரர் ஜே.ஆர்.ஜயவாத்தன இனப்பிரச்சினையை மையாகக் கொண்டு இனரீதியான கண்ணேட்டத்தில் சட்டங்களை உருவாக்கினார். ஆனால் அந்த சட்டங்கள் சிங்கள அரசியல் கட்சிகளுக்கும் சிங்கள மக்களின் ஜனநாயகத்துக்கும் தற்போது இடையூறாக மாறிவிட்டது. அதனை எதிர்த்து வெகுஜன போராட்டங்களை ஆரம்;பிக்கும் தகுதியை இடதுசாரிகளும் இழந்துவிட்டன. தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறை மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகளிடையேயும் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால் அது அரசாங்கத்துக்கு வாய்ப்பாக அமை…
-
- 0 replies
- 491 views
-
-
ஶ்ரீலங்கா பாராளுமன்றத் தேர்தல் - தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது? 👆🏿 ஶ்ரீலங்கா தேர்தலில் வாக்களிக்கும் உரிமையுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி என நண்பர் அனுப்பியிருந்தார். பார்த்து கருத்துக்களை வையுங்கள். தேர்தலில் வாக்களிக்கும் தாயகத் தமிழ் உறவுகளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் எனவும் கேட்டிருந்தார். ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அநுர திசநாயக்க வெற்றி பெற்று, உடனடியாகவே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலும் நடக்கவுள்ள சூழலில் பல தமிழ் யூடியுப்பர்கள் அநுர அலைக்குப் பின்னால் போயுள்ளது தாயகத்தையும், தேசியத்தையும் நேசிப்பவர்களை பதட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க ஓ…
-
-
- 3 replies
- 491 views
-
-
வடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும் – பி.மாணிக்கவாசகம்.. உள்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள விஜயகலா விவகாரம், இலகுவில் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. பல்வேறு பரிமாணங்களில் பலதரப்பட்ட கேள்விகளை அது எழுப்பியிருந்தது. பலரையும் பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதற்கு நிர்ப்பந்திருக்கின்றது. இவைகள் அவருக்கு ஆதரவானது என்றும், அவருக்கு எதிரானது என்றும் இரண்டு வகையில் அமைந்திருக்கின்றன. அரசியல் கொள்கைகள், அரசியல் கட்சிகளின் எல்லைகள் என்பவற்றைக் கடந்து, பொதுமக்களின் நலன்கள் சார்ந்து இந்த நிலைமைகள் உருவாகியிருக்கின்றன என்பது முக்கியமானது. அதேவேளை, கட்சிக் கொள்கைகள் கட்சி அரசியல் நிலைப்பாடுகளுக்கு உட…
-
- 1 reply
- 491 views
-
-
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் புதிய யதார்த்தம் – கலாநிதி க. முகுந்தன் FEB 10, 2016 இலங்கை இன்று ஒரு மாறிவரும் நாடாகத் தோன்றுகிறது. எம்மில் சிலர் இவ் வரசாங்கத்தின் நேர்மைத்தன்மை பற்றி, அல்லது அங்கு இடம்பெறுவதாய்த் தோன்றும் மாற்றங்கள் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்கள். நீண்டகால தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குப் பதில் காணும் விடயத்தில் இம்மாற்றங்கள் எந்தளவு ஆழம் மிக்கவையாய் அமைந்துள்ளன? மாறிவந்த அரசாங்கங்கள் மீதும் ஏன் இலங்கை அரசு மீதும் தமிழ்ச் சமூகம் கொண்டுள்ள சரித்திரபூர்வ நம்பிக்கையீனத்தைக் கருத்திலெடுக்கையில், இதுபோன்ற கேள்விகள் முற்றிலும் நியாயமானவையே. ஆயினும், இலங்கையின் இன்றைய யதார்த்த நிலையை நிதானமாய் …
-
- 0 replies
- 491 views
-
-
சமூகத் தூரமாதலும் சமூகப்பொறுப்பும் தனிமைப்படுதலும் தனிநபர்களும் மல்லியப்புசந்தி திலகர் இந்த சமூகத் தூரமாதல் (Social distancing) என்ற சொல்லாடலும் செயலும் நமது சமூகத்திற்கு புதியது. இதற்கு “சமூக இடைவெளி” எனும் சொல்லாடலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் சமூக இடைவெளி (Social Gaps) என்பதை வேறு விதமாக புரிந்து கொள்ளலாம். ஒரு வகையில் இந்த புதிய சூழலில் தூரத்தில் இருந்து ஒருவொருவருக்கு ஒருவர் உதவிகளைச் செய்து கொள்வதன் ஊடாக சமூக இடைவெளியைக் குறைக்க முடியும். ஆனால் அதனை சமூகப் பொறுப்புடன் செயற்படுத்த வேண்டும் (Social Responsibility). இந்த சமூகப் பொறுப்பு என்பது என்பது நமக்கு புதியதல்ல. ஒவ்வொரு தனிநபர்களும், தனிநபர்கள் பலர் சேர்ந்த அமைப்புகளும் சமூகத்துக…
-
- 0 replies
- 491 views
-
-
விக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் யதீந்திரா வடக்கு மாகாண சபை இன்னும் ஒரு மாதத்தில் கலையவுள்ளது. அதன் பின்னர் விக்கினேஸ்வரன் எத்தகைய முடிவை எடுப்பார் என்பது தொடர்பில் பல ஊகங்கள் உண்டு. அவற்றை ஊகங்களாகவே விட்டுவிடுவோம். ஆனால் 2013இல் அரசியலுக்குள் வரும்போது இருந்த விக்கினேஸ்வரன் வடக்கு மாகாண சபை கலைகின்ற போது இல்லை என்பது மட்டும் உண்மையிலும் உண்மை. இந்தக் காலம் விக்கினேஸ்வரனுக்கு பல பாடங்களை புகட்டியிருக்கிறது. உண்மையில் இந்தக் காலம் விக்கினேஸ்வரனை அரசியல் வாதியாக செதுக்குவதற்கே பயன்பட்டிருக்கிறது. விக்கினேஸ்வரன், அரசியலுக்குள் அழைத்துவரப்பட்ட போது அவர் வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றில், தான…
-
- 0 replies
- 491 views
-
-
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை பின்னணி தொடர்பான சர்ச்சைகள்…? - யதீந்திரா பொத்துவில் தொடங்கி பொலிகண்டிரை பேரணி, சற்றும் எதிர்பாராத வகையில் பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரள்வதற்கு காரணமானது. பொத்துவிலில் விரல்விட்டு எண்ணக் கூடிய நிலையிலிருந்த பேரணி, பொலிகண்டியில் பல்லாயிரக்கணக்கானவர்களோடு நிறைவுற்றது. 2009இற்கு பின்னர் இடம்பெற்ற ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகளோடு ஒப்பிட்டால் இது உச்சமானது. ஆனால் பேரணி மெதுவாக நகரத் தொடங்கிய போது கூடவே, இதன் உரிமையாளர்கள் தொடர்பான கேள்விகளும் சர்ச்சைகளும் இணைந்துகொண்டது. இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறும் போது இது ஓரளவு எதிர்பார்க்கக் கூடிய ஒன்றும்தான். இந்த ஏற்பாட்டிற்கு பின்னால் சிவில் சமூக அமைப்புக்க…
-
- 1 reply
- 491 views
-
-
Ramanathan Archchuna வைப் பற்றிய Sepal Amarasinghe வின் you tube பதிவினது தமிழாக்கம். பகுதி 1. சில இடங்களில் எனது கருத்துக்களையும் சேர்த்திருக்கிறேன். Ramanathan Archchuna வால் கேட்கப்படும் பிரச்சனை என்ன என்பது தான் you tube பதிவின் தலையங்கம்… இதை சுருக்கமாக சொல்வதானால்…. 1)இப்போது (தமிழர்களுக்கு பழையது) பெரும்பான்மையினருக்கு சமூகவலைத்தளத்தில் மிகவ…
-
-
- 3 replies
- 491 views
-
-
கோட்டாவின் விடாப்பிடி கொடாப்பிடி என்.கே. அஷோக்பரன் இலங்கை, வரலாறு காணாத மக்கள் எழுச்சியை சந்தித்து நிற்கிறது. பணம், சாராயம், பிரியாணிப் பொட்டலம் கொடுத்து, பஸ்களில் ஆட்களை ஏற்றிவந்து, அரசியல் கட்சிகள் நடத்தும் ‘எழுச்சி’கள் போலல்லாமல், மக்களால், மக்களுக்காக, மக்கள் எழுந்துநிற்கும் மாபெரும் எழுச்சியை, கடந்த இரண்டு வாரங்களாக, இலங்கை கண்டுவருகிறது. இந்த மக்கள் எழுச்சியின் குரல் ஒன்றுதான்; “கோ ஹோம் கோட்டா” (கோட்டா வீட்டுக்குப் போ), “கோ ஹோம் ராஜபக்ஷஸ்” (ராஜபக்ஷர்கள் வீட்டுக்குப் போங்கள்). 2009 - 2015 காலப் பகுதிகளிலெல்லாம் ‘கோட்டா’ என்ற பெயர், அச்சத்தைத் தருவதாக இருந்தது. மஹிந்…
-
- 1 reply
- 491 views
-
-
பைடன் வந்துவிட்டார்; இனி உலகில் சமாதானம் மலருமா? -எம்.எஸ்.எம். ஐயூப் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே, பெரும்பாலானோர் எதிர்பார்த்ததைப் போல், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்து, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற தேர்தலில், ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் ‘தேர்வுச் சபை’க்கு, ஜனநாயகக் கட்சிக்காரர்கள் அதிகமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் பைடனின் வெற்றி உறுதியாகி உள்ளது. ஆனால், எதிர்வரும் டிசெம்பர் மாதமே சட்டபூர்வமாக, பைடன் தெரிவு செய்யப்படுவார். இதன் மூலம், 233 வருட அமெரிக்க வரலாற்றில் பதவி வகித்த 45 ஜனாதிபதிகளில், டொனால்ட் ட…
-
- 0 replies
- 491 views
-
-
கொடூரக் குற்றங்களுக்கு இழப்பீட்டு வெகுமதியுடன் விடுதலை – வழிகாட்டிய விசாரணைக்குழு – பி.மாணிக்கவாசகம் 90 Views இலங்கையின் நீதி நியாயச் செயற்பாடுகள் நடுநிலையானவைதானா என்ற கேள்வி காலத்துக்குக் காலம் எழுப்பப்பட்டு வந்திருக்கின்றது. நீதி நியாயப்படுத்த வல்லதாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தையும், நிவாரணத்தையும் வழங்க வேண்டும். பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பளிக்க வேண்டும். பாதிப்புகள் மீண்டும் நிகழாமையை உறுதி செய்வதும் நீதிப் பொறிமுறையின் தலையாய கடமையும், பொறுப்பும் ஆகும். ஆனால் நீதி நியாயம் தொடர்பிலான இந்த நியதிகளும் சாதாரண மக்களின் இவற்றுக்கான எதிர்பார்ப்பும் இலங்கையின் நீதித்துறையினால் நிறைவேற்றப்படவில்…
-
- 0 replies
- 491 views
-
-
அனுபவத்தின் அடிப்படையில் பார்க்கின்ற போதும் தனது பதவியின் அந்திமகாலத்தில் இருக்கின்ற செயலாளர் நாயகம் இலங்கைஅரசுக்கு ஒரு நல்ல நண்பனாகவும் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களுக்கு கருணை காட்டும் பிதாவாகவும் இருக்க விரும்புகிறாரே தவிர தனது அதிகாரத்துக்குட்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஆளுமைத்தன்மையை தனது இலங்கை விஜயத்தின்போது நிரூபிக்க தவறிவிட்டார் என்பதே தமிழ் மக்களின் விமர்சனங்களாகக் காணப்படுகின்றன. இதே விடயத்தில் இலங்கை அரசாங்கம் மதியூகியாக செயற்பட்டு வெற்றி கண்டுள்ளது என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்தாகும். இரண்டாம் உலக மகா…
-
- 0 replies
- 491 views
-
-
அண்மையில் முன்னாள் பிரதம நீதியரசர் திருமதி ஷிராணி பண்டாரநாயக்க அவர்களை பதவியிலிருந்து நீக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தனது வன்மையான அதிருப்தியை வெளியிட்டது. அப்போது ஊடகவியலாளர்களால் இலங்கைக்கு வழங்கப்படும் அமெரிக்க உதவிகள் பற்றிக் கேள்வி எழுப்பப்பட்ட போது 2012 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிதியுதவிகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டுக்கான நிதியுதவி தொடர்பாக அவ்விடயம் தற்சமயம் பரிசீலனையில் இருப்பதாகவும், அது தொடர்பாக இச்சமயத்தில் பதிலளிக்க முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டது. இச்செய்தி வெளிவந்ததை அடுத்து இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் அமெரிக்கா இலங்கைக்கான உதவிகளை நிறுத்தினால் தங்களுக்கு சீனா உதவ…
-
- 2 replies
- 491 views
-
-
சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தினரின் இணைய வழியிலான இரண்டு சந்திப்புக்களிலே பகிரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஒன்றியத்தின் சில உறுப்பினர்களால் இந்தப் பதிவு எழுதப்பட்டது. இந்தப் பத்தி ஒன்றியத்தின் எல்லா உறுப்பினர்களின் கருத்துக்களையும் பிரதிபலிப்பதாக அமையாது. இலங்கையில் கொரொணா நிலைமையினைச் சமாளிப்பதற்காக அரசும், அரசினுடைய வெவ்வேறு கட்டமைப்புக்களும் பல்வேறு நடவடிக்கைகளினை மேற்கொண்டு வருகின்றன. மருத்துவத் துறையினைச் சேர்ந்தவர்கள் முன்னணியில் இருந்து இந்நோய்த் தொற்றினைக் கண்டறியும் பணியில் இருந்து, நோயுற்றோரினைக் குணப்படுத்தும் பணி வரை தமது கடமைகளை மிகவும் இடரான சூழலிலே முன்னெடுக்கிறார்கள். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையிலே பொலிஸார் சட்டம்…
-
- 1 reply
- 491 views
-
-
தோல்வியில் முடிந்த ஒபரேசன் பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம ஜயந்தவும், வெளியிட்ட கூட்டு அரசாங்கம் இன்னமும் தொடர்கிறது என்ற அறிவிப்புடன், ஆட்சிக் கவிழ்ப்புக்கான ஒப்பரேசன் முடிவுக்கு வந்திருக்கிறது. மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக உள்ளே இருந்தும், வெளியே இருந்தும் தீட்டப்பட்ட திட்டங்களும், மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும், தோல்வியில் முடிந்திருக்கின்றன. உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னரான ஒரு வாரகாலத்தில் கொழும்பு அரசியல் களம் பெரும் பரபரப்பிலு…
-
- 0 replies
- 491 views
-
-
முள்ளிவாய்க்கால் போன்ற பல துயர சம்பவங்கள் நடந்தேறியுள்ள நிலையில், தமிழர்களுக்கு விடுதலை வேண்டும் என குரல் கொடுக்கும் உலகெங்கிலும் உள்ள தமிழ் அமைப்பினைச் சார்ந்தவர்கள் நமது IBC தொலைக்காட்சி தளத்தில் ஒரே மேடையில் இணைந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்த நிகழ்வே நேருக்கு நேர்.
-
- 0 replies
- 490 views
-
-
மீறப்படும் கூட்டு ஒப்பந்த சட்டவிதிகள் நீண்ட இழுபறியின் பின்னர் கூட்டு ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டமை தெரிந்த விடயமாகும். கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னரும் இன்னும் இது குறித்த அதிர்வலைகள் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளன. இதற்கிடையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட சட்ட விதிகளை மீறி தொழிலாளர்களை அடக்கு முறைக்குள் தோட்ட நிர்வாகங்கள் கொண்டுவர முனைவதாக குற்றச்சாட்டுகள் பரவலாக மேலெழுந்து வருகின்றன. இத்தகைய தோட்ட நிர்வாகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்கள் பேரணியுடன் போராட்டம் மற்றும் ஒப்பந்தம் தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வு ஒன்றி…
-
- 0 replies
- 490 views
-
-
இன்னமும் தொடரும் மாவீரர் நாள் நடுக்கம் இன்று மாவீரர் நாள். ஆயுதப் போராட்டத்தில் உயிர்நீத்த, தமது போராளிகளை நினைவு கூருவதற்காக விடுதலைப் புலிகளால் 1989ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதே, இந்த மாவீரர் நாள். பிற்காலத்தில் விடுதலைப் புலிகள், தம்முடன் இணைந்து செயற்படாமல், தமிழரின் விடுதலைப் போராட்டத்துக்காக உயிர்நீத்த பலரையும் மாவீரர்களாக அங்கீகரித்திருந்தனர். ரெலோ அமைப்பை ஆரம்பித்த குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்றவர்களும், ஈரோஸ் அமைப்பில் இருந்து போராடி உயிர்நீத்த போராளிகளையும் கூட விடுதலைப் புலிகள் மாவீரர்களாக அங்கீகரித்திருந்தனர். 1989ஆம் ஆண்டு தொடங்கி, விடுதலைப் ப…
-
- 0 replies
- 490 views
-