அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
கொரோனாவும் ராஜபக்சக்களின் பக்கமா? நிலாந்தன்… October 10, 2020 மஞ்சள்-தேங்காய்-வைரஸ்-இருபதாவது திருத்தம்: நாடாளுமன்றத்தை ராஜபக்சக்கள் கைப்பற்றுவதற்கு முன்பு நாட்டில்கஞ்சா கடத்துவோரின் படங்கள் அவ்வப்போது ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் இப்பொழுது மஞ்சள் கடத்தி அகப்படுவோரின் படங்கள் ஊடகங்களில் வெளிவருகின்றன. கஞ்சாவின் இடத்தை மஞ்சள் பிடித்திருக்கிறது. அரசாங்கம் மஞ்சள் இறக்குமதியைத் தடை செய்துவிட்டது. இதன் விளைவாக உள்ளூர் சந்தைகளில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு ஏற்ப ட்டிருருக்கிறது. உள்ளூரில் மஞ்சள் உற்பத்திக் கிராமங்களை உருவாக்குவதன் மூலம் மஞ்சள் தேவையை பூர்த்தி செய்யலாம் என்று அரசாங்கம் திட்டமிடுகிறது. கிளிநொச்சியில் உள்ள ஒரு மஞ்சள் உற்பத்தியாள…
-
- 0 replies
- 428 views
-
-
இந்தியாவின் நிலைப்பாடுதான் என்ன? காலதாமதங்களும் இழுத்தடிப்புகளும் இலங்கையைப் பொறுத்தவரை புதியதொரு விடயமல்ல, அதேபோல் ஏமாற்றங்களையும் ஏமாறுதல்களையும் சந்திப்பது தமிழர்கள் வரலாற்றில் நடக்காத ஒரு விடயமுமல்ல. அரசியல் தீர்வு விடயம் விரைவுபடுத்தப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்காது இழுத்தடிக்கும் போக்கை உலகம் தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்காது என இலங்கை அரசை எச்சரித்துள்ளதாகவும் ஜெய்சங்கர் கூறியிருப்பது தமிழ் மக்களை திருப்திப்படுத்தும் வார்த்தையாக இருந்தாலும் இந்த எச்சரிப்புகளையும் எடுத்துரைப்புகளையும் இலங்கை அரசாங்கம் எந்தளவுக்கு சுதாரித்துக் கொள்ளப்போகிற…
-
- 0 replies
- 428 views
-
-
-
பொருளாதாரச் சுமையால் உருவாகும் அரசு மீதான வெறுப்பு -இலட்சுமணன் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைமையின் இழுபறி நிலையும் சட்டரீதியான ஆக்கபூர்வமான தீர்வுகாணாச் சட்டச் சிக்கல்களும் இலங்கைத் தேர்தல் நிலைவரத்தைத் தீர்மானிக்க முடியாத சூழ்நிலைக்கு அரசையும் தேர்தல் ஆணைக்குழுவையும் இட்டுச் சென்றுள்ளது. இந்நிலைக்கு, அடிப்படைக் காரணமாக அமைந்த, கொரோனா வைரஸின் உலகளாவிய தொற்று, கடந்த 67 நாள்களாக இலங்கைத் தீவையும் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும், இலங்கைத் தீவு இச்சூழ்நிலைச் சவாலை வெற்றிகரமாகச் சமாளித்துள்ளது. சர்வதேச ரீதியில், இத்தொற்றுக் காரணமாகக் கணக்கிடப்பட்ட உயிர் இழப்புகளை, இலங்கையில் ஏற்பட்ட இழப்புக்களின் அளவோடு ஒப்பிடும்போது, இச்சவாலை முன்னேற்றகர…
-
- 0 replies
- 428 views
-
-
அபத்தமான அரசியல் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-09#page-6
-
- 0 replies
- 427 views
-
-
08 MAY, 2024 | 11:27 AM மானிடனின் புலமைசார் அபிவிருத்தியின் பெறுபேறாக விஞ்ஞானரீதியான தொழில்நுட்ப முடிவுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமையால் அபிவிருத்தியென இனங்காணப்படுகின்ற மாற்றத்திற்கு ஒட்டுமொத்த மானிட சமூகமும் நிகழ்காலத்தில் இந்த மாற்றத்தின் சாதகமான மற்றும் பாதகமான பெறுபேறுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளதோடு பாதகமான தாக்கங்களிலிருந்து விடுபடுவதற்காக துரிதமானதும் பயனுறுதிமிக்கதுமான தீர்வுகளைக் காண்பது உலகளாவிய சவாலாக மாறியுள்ளமையையும் இனங்காண முடியும். தொழில்நுட்பத்தின் பலம் காரணமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதும் போட்டித்தன்மையும் சிக்கலும் நிறைந்த சமூகத்தில் மனிதன் மிகவும் நெகிழ்ச்சியானதும் வசதியானதுமான நுகர்வுப் பாங்குகளுடன் …
-
- 0 replies
- 427 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசிய கட்சிகள் கேட்க வேண்டிய குரல்கள் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூலை 16 அண்மையில், ‘ஈழத்தமிழ் அரசியல்- நேற்று இன்று நாளை’ எனும் தலைப்பில், இணையவழிக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த (கலாநிதி பட்டத்துக்கான ஆய்வு மாணவர்) சட்டத்தரணி சிவகுமார் நவரெத்தினம் முன்வைத்த கருத்துகள், கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாக இருந்தன. அதுவும், தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழர் அரசியல் பரப்பு பெரிதாக கவனத்தில் கொள்ளாத விடயங்கள் பற்றி, தன்னுடைய ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார். அதில் ஒரு பகுதி, பருமட்டாகக் கீழ்கண்டவாறு இருந்தது, “...அம்பாறை மாவட்டத்தில், தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் என்கிற எ…
-
- 0 replies
- 427 views
-
-
வடக்கில் தேர்தல்களும் தமிழ் அரசியலும் சிகப்பு குறிப்புகள் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், இலங்கை முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இத்தேர்தல்கள் காரணமாக, ஆளும் தேசிய அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டு, அரசாங்கம் பிளவடைவது, கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ராஜபக்ஷவின் பரப்பியல்வாதத்துக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய எழுச்சியைத் தொடர்ந்து, தேசியவாத அரசியல், மீண்டும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஆளும் அரசாங்கத்தின் பொருளாதாரத் தோல்விகள் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்க, அரசமைப்பு ரீதியான அரசியல் தீர்வுக்காக 2015இல் கிடைக்கப்பெற்ற பொன்னான வாய்ப்பு, கிட்டத்தட்ட முழுவதுமாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 427 views
-
-
அடுத்த முதல்வரும் விக்னேஸ்வரன்தானா? யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதுவர் நடராஜனின் பிரியாவிடை விருந்துபசாரம் இடம்பெற்றிருந்தது. இதில் வழமைபோல் அரசியல் தலைவர்களும் ஏனைய பிரமுகர்களும் பங்குகொண்டிருந்தனர். இதன்போது நடராஜன் தெரிவித்திருந்த ஒரு அபிப்பிராயம் அங்கிருந்த கூட்டமைப்பின் தலைவர்கள் உட்பட ஏனையவர்கள் மத்தியிலும் முணுமுணுப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாசார மண்டபம் அடுத்த ஆண்டு நிறைவடையும், அதன் திறப்பு விழாவின் போது பார்வையாளர் வரிசையில் நானும் இருப்பேன். அப்போதும் வடக்கு மாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் அவர்களே அதனை திறந்து வைப்பார் என்று நடராஜன் கூறிய விடயம்தான் மேற்படி முணுமுணுப்ப…
-
- 0 replies
- 427 views
-
-
புதிய ஜனாதிபதியின் சீனா நோக்கிய வெளியுறவும் கேள்விக்குறியாகும் இலங்கையின் அரசியல் பொருளாதார இருப்பும் ”இந்தியாவை நிராகரித்தாலும் மேற்குலகத்தை பகைக்காத கிழக்குடனான அதீதீவிர நெருக்கமற்ற உறவு இலங்கைத்தீவின் அரசியல் பொருளாதார இருப்புக்கு ஆரோக்கியமானதாக அமையும்” இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் பல விடயங்கள் உள்ளாக்கப்பட்டாலும் இனப்பிரச்சினை பொறுத்து மேற்கொள்ளப்பட்ட வெளியுறவுக்கொள்கையே அடிப்படையானதாகும். இலங்கைத்தீவின் ஆட்சியாளர்கள் சுதந்திர காலப்பகுதியிலிருந்து அல்லது அதற்கு முற்பட்ட வரலாற்று காலத்திலிருந்து இந்திய எதிர்ப்புவாதத்தையே கொண்டவர்களாக காணப்படுகின்றனர். அத்தகைய பாரம்பரியத்தில் பிரித்தானியாவுட…
-
- 0 replies
- 427 views
-
-
விக்கியும் அவருக்கான அரசியல் நாகரிகமும் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 செப்டெம்பர் 22 நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தண்டிக்கப்பட்டுவிடலாம் என்ற பதற்றம் கடந்த சில வாரங்களாக தமிழ் அரசியல் பரப்பில் தொற்றிக் கொண்டிருக்கின்றது. விக்னேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்த பா.டெனீஸ்வரனிடம், வழக்கை மீளப்பெறுமாறு, அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் உள்ளிட்ட தரப்புகளினால் தொடர்ந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், அவரும் அதற்கு இணங்கியிருக்கிறார். இந்தப் பத்தி எழுதப்படும் வரையில், வழக்கை மீளப்பெறுவது தொடர்பிலான இறுதித் தீர்மானம், நடைமுறையில் வந்திருக்கவில்லை. விக்னேஸ்வரனுக்கும் டெனீஸ்வரனுக்கும் இடையில் வழக்கை நீதிமன்றத்…
-
- 0 replies
- 427 views
-
-
சி.வியை அகற்றுவதற்கான முனைப்புக்கள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதன்மைப்படுத்தி பதற்றமான அரசியல் சூழ்நிலையொன்றை, தமிழ்த் தேசிய அரங்கில் ஏற்படுத்திவிட வேண்டும் என்கிற முனைப்பில் சில தரப்புக்கள் ஈடுபட்டிருக்கின்றன. குறிப்பாக, வட மாகாண முதலமைச்சர் பதவியிலிருந்து, எப்பாடுபட்டாவது சி.வி.விக்னேஸ்வரனை அகற்றிவிட வேண்டும் என்கிற முனைப்புக்களை முன்னெடுக்கும் தரப்புக்களிடம் வெளிப்படுவது அதுதான். தமிழ் மக்கள் தமக்கான அரசியல் பாதையை சீராகக் கட்டமைப்பது தொடர்பிலான அக்கறையை மெல்ல மெல்ல வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கின்ற இன்றைய கால கட்டத்தில், வட மாகாண முதலமைச்சரை முன்னிறுத்திய பதற்றமான சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலைமை காலம் காலமாக தமிழ் மக்களை நோக…
-
- 0 replies
- 427 views
-
-
உலக சமத்துவமின்மை-பா.உதயன் Rich countries have a moral obligation to help poor countries get COVID-19 vaccines. கோவிட் -19 தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் விநியோகம் உலகளாவிய சமத்துவமின்மையை அம்பலப்படுத்தி தீவிரப்படுத்தியுள்ளது. பணக்கார நாடுகளால் அப்பட்டமான தடுப்பூசி கொள்வனவுகள் அண்மைக் காலங்களில் அதிகரித்தே வருகின்றன. முதலாளித்துவ நாடுகளின் வரிசையிலே அமெரிக்கா,பெரிய பிரித்தானிய மற்றும் பல ஐரோப்பிய சந்தையில் அங்கம் வகிக்கும் நாடுகளே பெரும் தொகையான கோவிட்-19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் அல்லது உற்பத்தி செய்யும் நாடுகளாக இருக்கின்றன. இந்த நாடுகளில் உள்ள அரசாங்கங்களால் காப்புரிமை உரிமைகளைப் பாதுகாத்தல் இது தடுப்பூசிகளை மேலும் உற்பத்தி செய்வதைத் தடுக்கிறது. …
-
- 0 replies
- 427 views
-
-
முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் புதிய கட்சியான ஶ்ரீலங்கா மக்கள் முன்னணி (ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன) இலங்கை அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இப்போது அரசியல் அவதானிகள் மத்தியில் எழுந்துள்ள முக்கியமானதொரு கேள்வியாகும். இரு பிரதான அரசியல் கட்சிகளையும் விட்டு கடந்த காலங்களில் வெளியேறி புதிய கட்சிகளை அமைத்துக் கொண்டவர்கள் தங்கள் நோக்கங்களில் வெற்றிபெற முடியாத நிலையில் மீண்டும் தாய்க்கட்சிகளுடனேயே இணைந்து கொண்டதை இலங்கையின் அரசியல் வரலாற்றில் பல தடவைகள் கண்டிருக்கின்றோம். இந்த வரலாற்று அனுபவங்களின் தொடர்ச்சியாக ஶ்ரீலங்கா மக்கள் முன்னணிக்கும் அதே கதிதான் நேரும் என்று கூறுவதற்கு நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நி…
-
- 1 reply
- 427 views
-
-
நினைவேந்தல் உரிமையும் சட்டரீதியான போராட்டமும் -பி.மாணிக்கவாசகம் 41 Views மாவீரர் தின நினைவேந்தலைத் தடுக்க கொரோனா வைரஸ் தடுப்புச் சட்ட நெறிமுறைகள் பயன்படுத்தப்படும் என அரசாங்கம் கூறியிருக்கின்றது. இது ஓர் அபத்தமான முயற்சி. இறந்தவர்களை நினைவேந்துவது ஓர் அடிப்படை உரிமை சார்ந்த விடயமாகும். இதில் கொரோனா தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்த ஓர் அரசு முற்பட்டிருப்பதன் மூலம் அதன் இயலாத் தன்மையும், அதன் இனவாதப் போக்கும் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பயங்கரமாக உருவெடுத்துள்ளது. சுகாதாரம் சார்ந்த இந்த விவகாரத்தை மனிதாபிமான ரீதியில் கையாள வேண்டியது அரசாங்கத்தின் கடமையும், பொறுப்புமாகும். அதேவேளை, அந்த வைரஸ் தொற்றிப்…
-
- 0 replies
- 427 views
-
-
தலைமைகளின் பிளவு தமிழரின் ஆணையையே தோல்வியாக்கும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- யுத்தமும் முரண்பாடுகளும் கொடியவை. அத்துடன் யுத்தத்திற்குப் பிந்தையை அமைதியும் இணக்கமும்கூட கொடியவைதான். 2002இல் மாபெரும் வெற்றிகளைக் குவித்த விடுதலைப் புலிகள் இயக்கம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்தது. போருக்குப் பிந்தைய அமைதிக் காலத்தில், அதாவது இரண்டு வருடங்களுக்குள்ளேயே ரணில் – சந்திரிக்கா அரசால், விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியாக இருந்த கருணா பிரிக்கப்பட்டார். அப்படியானதொரு காலத்தைத்தான் தமிழ் மக்கள் இன்று சந்திக்கிறார்கள் போலவே இருக்கிறது. ஈழத் தமிழ் மக்களின் சுய உரிமைக்காகவும், சுய கௌரவத்திற்காகவும…
-
- 0 replies
- 427 views
-
-
‘சீனப் பட்டினம்’ ஒரே நாடு ஒரே சட்டத்துக்குள் அடங்காதா? – தமிழர்களைத் தூண்டிலாக்கும் எதிர்த் தரப்புகள்!! கொழும்பு துறைமுகத்துக்கு அருகே சீனாவால் கட்டப்பட்டுவரும் நிதி நகரம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. இப்பட்டினம் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டத் தொடங்கியது. கொழும்பின் இதயமான ஒரு பகுதியில் கடலை பகுதியை மூடி இந்நகரம் உருவாக்கப்பட்டுகிறது. ஏறக்குறைய 216 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்நகரம் உருவாக்கப்படுகிறது. இதில், 116 ஹெக்டேர் நிலப்பரப்பு சீனக் கம்பனிக்கு உரித்தாக இருக்கும். சுமார் 90 ஹெக்டேர் நிலப்பரப்பு இலங்கை அரசாங்கத்தின் உரித்தாக இருக்கும். சீனக் கம்பனிக்கு உரித்தாகவுள்ள நிலப்பரப்பில் சுமார் 20 ஹெக்டேர் நிலப்பரப்பு முழுக்கமுழு…
-
- 1 reply
- 427 views
-
-
கோட்டாவின் மீள்வருகையும் குழம்பிய குட்டையும் மொஹமட் பாதுஷா முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளமை, இலங்கை அரசியலில் இன்னுமொரு திருப்பத்தை ஏற்படுத்த வழிகோலுமா என்ற கேள்வி, எழுந்துள்ளது. இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு மக்கள் கிளர்ச்சி வெடித்ததை அடுத்து கோட்டாபய ராஜபக்ஷ, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, மாலைதீவுக்கும் அங்கிருந்து சிங்கப்பூருக்கும் பின்னர் தாய்லாந்துக்கும் ஓடித் தப்பியிருந்தார். இப்போது 50 நாள்களின் பின்னர், நாடு திரும்பிய அவர் வரவேற்கப்பட்டு, வாகனத் தொடரணியாக அழைத்து வரப்பட்டிருக்கின்றார். இது ராஜபக்ஷர்களும் மொட்டு அணியும் மீள்எழுச்சி பெறுவதான தோற்றப்பாட்டையும், குழம்பிய அரசியல் குட்டைக்குள் என்ன நடக்குமோ …
-
- 1 reply
- 427 views
-
-
பொன்சேகாவின் நெருக்கடியும் கோத்தாவுக்கு உள்ள சவாலும் கடந்தவாரம் நிகழ்ந்த அமைச்சரவை மாற்றத்தின்போது, எதிர்பார்ப்புக்குரியதாக இருந்த சில விடயங்களில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்குரிய பதவியும் ஒன்றாகும். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பதவிக்குப் பதிலாக, சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்கப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு பரவலாகக் காணப்பட்டது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவியில் இருந்து, சாகல ரத்நாயக்க விலகிய பின்னர், அந்தப் பதவி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது என்பதை விட, அவரை அந்தப் பதவிக்கு நியமிப்பதே பொருத்தம் என…
-
- 0 replies
- 427 views
-
-
ஜனாதிபதி தேர்தல் : சுயாதீனக் குழுவும் பல்கலைக் கழக மாணவர்களும். கட்சிகளின் மீது சிவில் அமைப்புக்களின் தலையீடு ? நிலாந்தன் October 13, 2019 பேரவையால் தொடக்கி வைக்கப்பட்ட சுயாதீனக் குழு ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்த பொழுது அது தமிழ் அரசியற் சூழலையும் தென்னிலங்கையின் அரசியற் சூழலையும் சடுதியாகக் குழப்பியது. அப்படி ஒரு குழு உருவாக்கப்பட்டது பல தளங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஏன் அப்படி அதிர்வுகள் ஏற்பட்டன? ஏனெனில் அவ்வாறு சிவில் அமைப்புக்கள் கட்சிகளின் மீது தலையீடு செய்ய வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் முன்னைய காலங்களைப் போல கண்ணை…
-
- 0 replies
- 427 views
-
-
கொரோனாவிற்குப் பின்னரான ஒரு தேர்தல்: தமிழ் வாக்காளர்களே சிந்திக்க வேண்டும்..!! நியூஸிலாந்தில் வசிக்கும் ஒரு நண்பர், முன்பு கொழும்பில் ஊடகத்துறையில் வேலை செய்தவர். என்னிடம் கேட்டார், “ஜனாதிபதி தேர்தலின் போது நீங்களும் சேர்ந்து இயங்கிய சுயாதீனக் குழு போன்ற ஒன்றை இம்முறை நாடாளுமன்றத் தேர்தலின் போதும் உருவாக்கினால் என்ன? ” என்று. அவரிடம் நான் சொன்னேன் “உருவாக்கலாம் தான் ஆனால் அவ்வாறு உருவாக்கி கட்சிகளுக்கு என்ன சொல்வது?” ஏனென்றால் கடந்த 11 ஆண்டுகளாக கூட்டமைப்பு நாங்கள் எழுதிய எதையும் பேசிய எதையும் காதில் எடுத்துக் கொள்ளவில்லை. தமிழ் மக்கள் பேரவையின் ஜனாதிபதி தேர்தலுக்கான சுயாதீனக் குழு முதலில் சந்தித்தது சம்பந்தரை. இச…
-
- 0 replies
- 427 views
-
-
-இலட்சுமணன் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்குரிய தேர்தல் முடிவுகள், இலங்கையின் நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் எதிர்கால இனத்துவ அரசியல் நகர்வுகள் குறித்தும் பல்வேறு சிந்தனாவோட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேவேளை, தமிழ் அரசியல் தலைமைகளினதும், அதன் எதிர் அரசியல் தலைமைகளினதும் மக்களதும் கருத்தோட்டங்களை மிகத் தெளிவாக வெளிக்காட்டி நிற்கிறது. இலங்கையின் அரசியல் வரலாற்றில், தமிழ் பேசும் இனம், ஓரணியில் நின்றும் சிங்களப் பெரும்பான்மை மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றியீட்டிய ஜனாதிபதியாக, குறிப்பாக சிங்கள மக்களின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார். இந்தத் தெரிவு என்பது, இலங்கை அரசியல் தலைமைகளுக்கும் சிறுபான்மை சமூகங்களுக்கும் …
-
- 0 replies
- 426 views
-
-
அனுமாராக பறந்து மத்திய கிழக்கில் நெருப்பினை கொளுத்தும் ட்ரம்ப் மீண்டும் மத்திய கிழக்கின் பூதாகரமான மிக நீண்ட வரலாற்றை உடைய இஸ்ரேல் - பலஸ்தீன விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் நெருப்பினை கொளுத்தி கொழுந்துவிட்டு எரியச் செய்தவர் வேறு யாருமல்ல, உலகின் மிகப் பலம் வாய்ந்த பதவியான அமெரிக்க ஜனாதிபதி பதவியை அலங்கரித்துக் கொண்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும். வட கொரிய அதிபர் மின்னாமல் முழங்காமல் தமது அணுகுண்டு அபிலாஷைகளை ஒன்றன்பின் ஒன்றாக வெடிக்க வைத்து சாதித்துக் கொண்டிருக்கையில் டொனால்ட் ட்ரம்ப் மேற்படி அறிவிப்பை விடுத்திருக்கிறார். வடகொரிய ஜனாதிபதியோ அமெரிக்கா அழித்…
-
- 0 replies
- 426 views
-
-
-இலட்சுமணன் தமிழர் விடுதலைப் போராட்டம் உச்சநிலையை அடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் காலகட்டத்தில், போராட்டத்தின் கொள்கை முரண்பாடுகளாலும் போராட்ட வன்முறைகளாலும் சிதறுண்ட தமிழ் மக்களின் அரசியல் நிலைமைகளை ஸ்திரப்படுத்தவும், தமிழர்களின் போராட்டம் நியாயமானது உண்மையானது, உணர்வுபூர்வமானது என்பதை சர்வதேசத்துக்கு உரத்துச் சொல்லவும், தமிழீழ விடுதலைப் புலிகள், வெகுஜனப் போராட்டமாக ‘பொங்கு தமிழ்”ஐ ஏற்படுத்தினர். தமிழர்களின் அபிலாஷைகளை, ‘பொங்கு தமிழ்” தமிழர்ப் போராட்டத்தின்பால் ஈடுபாடுள்ள அனைவரையும் ஒன்றிணைத்து, சிங்கள தேசத்துக்கும் சர்வதேசத்துக்கும் பிரகடனப்படுத்தினர். இந்த ‘பொங்கு தமிழ்” பிரகடனத்துக்கு நிகராக ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்னர், அந்தப் பணியை, தமிழ் தேசிய…
-
- 0 replies
- 426 views
-
-
மணல்மேடான நம் தாயகத்தை காப்போம் - வ.ஐ.ச,ஜெயபாலன். * கடந்த டிசம்பர் 5ம் திகதி புதிய இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச தலைமையில் கூடிய அமைசரவை அனுமதியின்றி (cancelation of permits for the transportation of rocks, sand, and soil) கல் மண் மணல் ஏற்றிசெல்ல அனுமதிக்கும் ஆபத்தான முடிவை எடுத்தது. டிசம்பர் 5ம் திகதியே உடனடியாக இந்த சூழல் விரோதச் சட்டம் அமூலுக்கு வந்த கையோடு யாழ்பாணக்குடாநாட்டையும் இலங்கையையும் இணைக்கும் சுண்டிக்குளம் மணல்திட்டை அபகரிக்கும் முயற்சி தீவிரமானது. மக்கள் எதிர்த்த இடங்களில் எல்லாம் பொலிசாரைக் கொண்டு மக்கள் அடித்து ஒடுக்கப்பபட்டார்கள். உண்மையிலேயே பெரும்பாலும் மணல் மேடுகளான தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்கள் அழிவின் வ…
-
- 0 replies
- 426 views
-