அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
ராஜபக்ஷர்களை ஆதரிப்பார்களா தமிழ்த் தேசியவாதிகள்? -என்.கே. அஷோக்பரன் அபயராம விகாரையின் விகாராதிபதி முறுதெட்டுவே ஆனந்த தேரர், “இலங்கை, சீனாவின் கொலனியாவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்” என்று, ‘போட் சிட்டி’ ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராகச் சில தினங்களுக்கு முன்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது கூறியிருந்தார். எந்தப் பௌத்த தேரர்கள், ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காகக் குரல் கொடுத்தார்களோ, இன்று அவர்களே ராஜபக்ஷர்களுக்கு எதிராகக் கருத்துவௌியிட்டுவரும் காலச்சூழல் உருவாகியிருக்கிறது. 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வெற்றியும் அதைத் தொடர்ந்து, 2020 பொதுத் தேர்தலில் ராஜபக்ஷர்கள் பெற்றுக்கொண்ட ப…
-
- 0 replies
- 572 views
-
-
ஜூலை இனப்படுகொலை – வலி சுமந்த வரலாறும் பிழைப்புவாதிகளும் : சபா நாவலன் ஜூலைப் படுகொலை, வெலிக்கடைப் படுகொலை என்றெல்லாம் இனப்படுகொலை அரசின் ஆதரவாளர்களே கூட்டம் போட்டுக் கூக்குரலிடும் பிழைப்புவாதிகளின் காலதில் நாங்கள் வாழ்கிறோம். இலங்கையின் தமிழ்ப் பேசும் தேசிய இனங்களின் மீதான இனப்படுகொலையும் இனச் சுத்திகரிப்பும் இந்தக் கணம் வரை தொடரும் நீண்ட வரலாற்றைக் கொண்டது. ஐயர்லாந்தில் தனது தேசிய இன விடுதலைக்காப் போராடுவது அவசியமானது என்று கார்ல் மார்ஸ் ஒன்ரரை நூற்றாண்டுகளுக்கு முன்னரே சொன்னதை மார்க்சியத்தின் பெயராலேயே அவமானப்படுத்தும் திருடர்களின் கூட்டம் புலம் பெயர் நாடுகளிலிருந்து தனது வேர்களை இலங்கை வரை ஆழப்பதிக்கிறது. தவறுகளே நிறுவனமாகியிருந்த 30 வருடப்போராட்டம் அவல…
-
- 0 replies
- 541 views
-
-
முஸ்லிம்களின் அரசியல் வடக்கு, கிழக்குக்கு வெளியில் - மொஹமட் பாதுஷா இலங்கையில் முஸ்லிம்கள் இரண்டாவது சிறுபான்மை இனத்தவராக காணப்படுவதோடு தேசிய ரீதியான சனத்தொகையின் அடிப்படையில் மூன்றாவது பெரிய இனக் குழுமமாக இருக்கின்றனர். நாட்டின் எல்லாப் பாகங்களிலும் முஸ்லிம்கள் வாழ்கின்ற போதிலும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலேயே முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்கின்றனர். கிழக்கின் அம்பாறை மாவட்டத்திலேயே முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட அதிகளவான தேர்தல் தொகுதிகளும் காணப்படுகின்றன. ஆகவே, முஸ்லிம் அரசியலைப் பொறுத்தவரையில் கிழக்கு மாகாணம் மிகவும் இன்றியமையாத பிராந்தியமாகும். தமிழர்களுக்கு வடமாகாணம் எப்படியோ சிங்கள…
-
- 0 replies
- 334 views
-
-
மலையக வீடமைப்பு மேற்கிளம்பும் இனவாதம் இனவாதம் தொடர்ச்சியாக தலைவிரித்தாடும் இலங்கையில் அதன் வளர்ச்சிவேகம் குறைந்த பாடில்லை. அதுவும் பாரதப்பிரதமரின் இலங்கை விஜயத்தின் பின்னர் எழும் பல இனவாத கருத்துக்கள் இந்நாட்டில் எப்போதும் ஒரு சமாதானத்திற்கான வழி இல்லை என்பதற்கு எச்சரிக்கை விடுப்பதாக இருக்கின்றது. இதன் வாதப்பிரதிவாதங்கள் தென்னிலங்கையில் தலைவிரித்தாடுகின்ற நிலையில் அது பற்றி நாளுக்கு நாள் பலதரப்பட்ட கருத்துக்கள் உருவகித்து வெளிப்படுத்தப்படுகின்றன. பாரதப்பிரதமரின் மலையக விஜயத்தின் போது அறிவித்த கருத்துக்கள் கொழும்பு அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்தாயிரம் வீடு…
-
- 0 replies
- 740 views
-
-
வேடிக்கை ஜனநாயகத்தைக் கட்டிக் காத்து, நல்லாட்சி புரியப் போவதாக உறுதியளித்து அதிகாரத்திற்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தின் போக்கிலேயே சிறுபான்மையின மக்களை அடக்கி ஒடுக்குவதில் மறைமுகமாக தீவிர கவனம் செலுத்தி வருகின்றதோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியிருக்கின்றது. முன்னைய அரசாங்கம் விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்ததன் மூலம் நாட்டில் நிலவிய பயங்கரவாத நிலைமைக்கு முற்றுப்புள்ளி இட்டது என்றும், பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து இராணுவத்தினர் நாட்டிற்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்தார்கள் என்றும் பிரசாரம் செய்தது. ஆயுத ரீதியான பயங்கரவாதத்தை …
-
- 0 replies
- 820 views
-
-
முள்ளிவாய்க்கால் சாட்சியமற்ற களமாக மாற்றப்பட்டது உலகிற்கு நன்கு தெரிந்தே நடந்தது. விடுதலைப்புலிகள் எதற்காக இராணுவ ரீதியல் பலவீனமான ஒரு கடற்கரைக்குள் மக்களையும் போராளிகளையும் கொண்டு சென்றார்கள் என்பது பற்றி.. யாருக்கும் எதுவும் தெரியாது..! முள்ளிவாய்க்கால்.. புதுக்குடியிருப்பை தக்க வைத்தபடி இருந்த புலிகளுக்கு காடு சார்ந்த பல பிரதேசங்களை தக்க வைத்துக் கொள்ள தெரியவில்லையா.. அல்லது அத்துணை முக்கியத்துவம் அறியாதவர்களாக புலிகள் இருந்தார்களா என்பதும் கேள்வி..! வெளி உலகத் தொடர்பிற்காக கடற்கரையை புலிகள் தெரிவு செய்தார்கள் என்பது அத்துணை ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் அல்ல. ஒரு லட்சம் இந்தியப் படைகள் சூழ்ந்து நிற்க மணலாறை அதனை அண்டிய காடுகளை கடற்கரையை தேர்வு செய்த புலிகளுக்கு 50…
-
- 10 replies
- 5.5k views
-
-
மஹிந்தவுடன் கூட்டு வைப்பாரா சம்பந்தன்? மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்ற- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்து பல்வேறு விதமாகவும் வியாக்கியானப்படுத்தப்பட்டு வருகிறது. மஹிந்தவுடன் இணைந்து ஆட்சி புரிய வேண்டும் என்று சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளது போலவும், செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கோ, அவருடன் இணைந்து ஆட்சியில் பங்கெடு ப்பதற்கோ சம்பந்தன் விரும்புவார் என்று தோன்றவில…
-
- 1 reply
- 515 views
-
-
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் - நாம் யார் பக்கம் நிற்க வேண்டும்? - செ.கார்கி உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் மிக உக்கிரமாக நடந்து கொண்டு இருக்கின்றது. இதனால் உக்ரைனைச் சேர்ந்த அப்பாவி மக்கள் உயிருக்குப் பயந்து வெளி நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றார்கள். இதுவரை உக்ரைன் தரப்பில் 352 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதே போல 4,300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் ரஷ்யா இதுவரை உயிரிழப்பு தொடர்பாக எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஊடகங்கள் தொடர்ச்சியாக இந்தப் போரை உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமான போராக காட்டிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் உண்மையில் இந்தப் போர் ரஷ்யாவுக்கும் ரஷ்யாவுக்க…
-
- 3 replies
- 506 views
-
-
2017 சமாதானத்துக்கான நொபேல் பரிசு: பரிசின் தவறும் தவறின் பரிசும் பரிசுகள் மீதான மதிப்பு தொடர்ச்சியாகக் குறைவடைந்து வந்துள்ளது. ஆனால், பரிசின் மீதான அவாவும் அது யாருக்கும் கிடைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் இன்னமும் பரிசுகளைக் கவனிப்புக்குரியவையாக வைத்திருக்கின்றன. இன்னொரு வகையில், ஊடகங்கள் கட்டமைக்கிற பொதுவெளியில் பரிசுகளுக்கான அங்கிகாரத்தின் சமூகப் பெறுமானமும் பரிசுகளை வழங்கவும், பெறவும் வாய்ப்பளித்திருக்கிறது. பரிசுகளின் தன்மையும் அதைப் பெறுபவர்களின் செயல்களும் பரிசைத் தனக்கு அளித்து அவமதிப்பார்களோ என்ற அச்சத்தை சிலருக்கு உருவாக்கியும் இருக்கிறது. இதைப் பரிசின் தவறென்பதா? அல்லது தவறின் பரிசென்பதா? நா…
-
- 0 replies
- 465 views
-
-
தமிழக எழுத்தாளர்களும் ஈழத்தமிழர் இனப்பிரச்சினையும் – மு.பொ ‘இப்போது மட்டுமல்ல ஈழத்தில் இன அழிப்பு நடந்தபோதும் பல எழுத்தாளர்கள் கள்ளமௌனம் சாதித்தார்கள். மிகச்சிலரைத் தவிர பெரும்பான்மையோர் அருவருப்பான அமைதியைக் கடைப்பிடித்தனர். எழுத்தாளர்கள் என்போர் மொழியைக் கொண்டு பிழைக்கின்றார்கள். அவர்கள் தான் முதலில் வினையாற்றியிருக்க வேண்டும்.’ இவ்வாறு தமிழக எழுத்தாளர்கள் பற்றிக் கூறியிருக்கிறார். பிரபல ஓவியர் மருது, ஆனந்த விகடனில் (30-10-13) பாரதி நம்பிக்கு அளித்த செவ்வியின் போது. மேற்கண்ட பேட்டியைப் படித்தபோது, கனகாலமாக என் மனதை அரித்துக் கொண்டு கிடந்த, ‘தமிழக எழுத்தாளர்களும் ஈழத்தமிழர் இனப் பிரச்சினையும்’ என்ற கட்டுரையை எழுதி வெளிக் கொணர வேண்டுமென்ற உந்துதல் பெற்…
-
- 0 replies
- 724 views
-
-
அரசியல் தலைமைகளின் பார்வையும் மக்களின் வாழ்வாதாரமும் நரேன்- தமிழ் தேசிய இனம் தமது உரிமைக்காக ஒரு நூறாண்டு காலமாக போராடி வருகின்றது. அந்த இனம் ஜனநாயக ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் தமது உரிமைக்காக போராடி இன்று ஆயுதப்போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டு எட்டரை ஆண்டுகள் கடந்த பின்னரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதனை மீளக் கட்டியெழுப்ப முடியாதவர்களாகவும் உள்ளனர். நுண்நிதி நிறுவனங்களிடம் அதிக வட்டியில் கடன் பெறுவதும், ஆங்காங்கே இடம்பெறும் தற்கொலைகளும் மக்களது பொருளாதார பிரச்சனையை கண்முன்னே வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றது. இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் பொருளா…
-
- 0 replies
- 289 views
-
-
பேர்லின் சுவர்: இருந்த காலமும் இறந்த காலமும் இருந்தாலும் அழிந்தாலும் சில வரலாற்றுச் சின்னங்கள் பிறவற்றிலும் முக்கியமானவை. அவற்றின் தொன்மையை விட, வரலாற்றுப் பெருமை அவற்றுக்கு அவ்விடத்தை வழங்குகிறது. உலக அரசியல் வரலாற்றில் தமக்கெனத் தனியிடம் பிடித்த சின்னங்கள் வெகுசில. குறிப்பாகத் தேச அரசாங்கங்களின் தோற்றமும் மன்னராட்சியின் முடிவும் விளைவித்த, புதிய அரசு முறையும் அதன் விருத்தியும் அப்போக்கில் நடந்த உலகப் போர்களின் அவலங்களுக்குப் பிந்திய, தத்துவார்த்த அரசியல் வரலாற்றுச் சின்னங்கள் முக்கியமானவை. ஆனால், அவைபற்றிப் பேசுதல் குறைவு. அவற்றுள் ஒன்று, இன்றுவரை முரண்படும் கதையாடல்களால், கட…
-
- 0 replies
- 712 views
-
-
சிரியாவின் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும் 2011ஆம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்துகொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிரியத் தேசிய சபை, சுதந்திர சிரியப்படை, ஜபத் அல் நஷ்ரா, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு, மதசார்பற்ற மக்களாட்சிக்கான அமைப்பு, டமஸ்கஸ் பிரகடன அமைப்பு, சிரிய மக்களாட்சி கட்சி, சிரியப் புரட்சிக்கான உச்ச சபை, சிரிய உள்ளூர் ஒருங்கிணைப்புக் குழு, மக்களாட்சி மாற்றத்திற்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழு, தேசிய மக்களாட்சி அணி, சிரியப் புரட்சிக்கான தேசிய ஆணையகம், சிரிய விடுதலைப்படை, சிரிய இஸ்லாமிய முன்னணி, சிரியத் தேசிய விடுதலை முன்னண…
-
- 0 replies
- 511 views
-
-
‘ஏன் குப்பி கடிக்கவில்லை?’ எனும் அச்சுறுத்தும் கேள்வி புருஜோத்தமன் தங்கமயில் முன்னாள் போராளிகளை நோக்கி, தமிழ்ச் சூழலிலுள்ள பல தரப்புகளாலும், கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில்,“...முள்ளிவாய்க்காலில் நீங்கள் ஏன் குப்பி கடிக்கவில்லை? தலைவர் பிரபாகரன் போராடி வீழ்ந்த போது, நீங்கள் எல்லாம் ஏன் தப்பி ஓடினீர்கள்...” என்பது மாதிரியான கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அண்மையில் கூட, தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் விளைவித்தவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் கூட, அது தொடர்பிலான விவாதங்களின் …
-
- 4 replies
- 906 views
-
-
ரிஷி சுனக்; நிறவெறிக்கு எதிரான குறியீடு அல்ல புருஜோத்தமன் தங்கமயில் பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்று இருக்கின்றார். சூரியன் அஸ்தமிக்காத அகண்ட கொலனித்துவ ஆட்சியை, நூற்றாண்டுகளாக செலுத்திய பிரித்தானியாவுக்கு, வெள்ளையர் அல்லாத இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இப்போது பிரதமர் ஆகியிருக்கிறார். கறுப்பினத்தவரான பராக் ஒபாமா, அமெரிக்காவின் ஜனாதிபதியானார். அதுவும் அவர் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகத் தெரிவாகி, பெரிய நெருக்கடிகள் இன்றி ஆட்சி செலுத்தினார். ஆனால், ஒபாமா போன்று ரிஷி சுனக்கால், நெருக்கடிகள் அற்ற ஆட்சியை கொண்டு செலுத்திவிட முடியாது. பிரித்தானியாவின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்ற நிலையில், அவர் பிரதமர் பதவிக்கு வ…
-
- 0 replies
- 282 views
-
-
ஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம் உலகில் மகிழ்ச்சியான மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது. ஐ.நா சபையின், நிலையான வளர்ச்சித் தீர்வுகள் பிணையம், இந்த அறிக்கையை, மார்ச் மாதம் 14ஆம் திகதி வெளியிட்டிருந்தது. வருமானம், சுகாதாரம், சமூக ஆதரவு, சுதந்திரம், அகதிகள் பிரச்சினை என்பவற்றின் அடிப்படையிலேயே, இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் எல்லாவற்றுக்குமான வாய்ப்புகள், பின்லாந்தில் வழங்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவம் மற்றும் பொருளாதார சமத்துவம் பேணப்படுகின்றது. இது, பின்லாந்தின் முன் மாதிரி. அந்தப் பட்டியலில், மொத்தமாக 156 நாடுகள் இடம்பெற்ற…
-
- 0 replies
- 560 views
-
-
பிச்சை எடுக்கப் பேச்சுவார்த்தை ? - நிலாந்தன் 2023 ஆம் ஆண்டிலாவது உலக நாடுகளிடம் கையேந்தாத நிலைக்கு இலங்கை வளர்ச்சியடைய வேண்டும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்க்கம் ரஞ்சித் அவர்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.ஆனால் நாடு இந்த ஆண்டு மட்டுமல்ல இனி வரும் ஆண்டுகளிலும் பிச்சை எடுக்காமல் தப்பிப்பிழைக்க முடியாது என்பதே மெய்நிலை ஆகும். பன்னாட்டு நாணய நிதியம் தரும் சிறிய உதவி கடனைத் தீர்க்கப் போதாது. அது 2.8பில்லியன்கள் மட்டும்தான்.ஆனால் நாட்டின் மொத்த கடன் தொகை 50பில்லியன்களைவிட அதிகம். எனவே கடன்வாங்கி கடனை அடைக்க முடியாது. பன்னாட்டு நாணய நிதியத்திடம் இலங்கை அரசாங்கங்கள் கடன் வாங்குவது இதுதான் முதல் தடவையுமல்ல. இதற்கு முன் பதினாறு தடவைகள் கடன்…
-
- 0 replies
- 786 views
-
-
இன்று பொப்பி தினம். மனித வரலாற்றின் படிநிலைகளில் உலக வரலாற்றினை மாற்றியமைத்து புதிய உலக ஒழுங்கிற்கு வித்திட்ட நாள். மனித இனம் தோன்றியதிலிருந்து குழுக்களாகவும், பிரதேசங்களாகவும் சண்டையிட்டுக் கொண்டிருந்த நிலைமை மாறி முழு உலகமுமே சண்டையிட்டு மிகப்பெரும் அழிவைச் சந்தித்து இனிமேல் இப்படியொரு யுத்தம் தேவையில்லை என முடிவெடுத்தநாள். மனித நாகரிகத்தின் உயர் விழுமியங்களான சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் என்பவற்றை மதிக்கவேண்டும், கடைப்பிடிக்கவேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்திய நாள். ஏன் இவைகள் எல்லாவற்றிற்கும் மோலாக உலகப் போரையே நிறுத்திய நாள். சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் நிலைநிறுத்துவதற்காக யுத்த பூமியில் விழுந்த வீரர்களை நினைவு கூரும் நூறாவது ஆண்டு நாளாகவும் அமைகிறது. …
-
- 0 replies
- 675 views
-
-
காத்திருந்து, காத்திருந்து கடைசியில் இலங்கையின் போர்குற்ற ஐ. நா. மூவர் குழு அறிக்கை முழுதாய் வெளியாகிவிட்டது. ஏதோ புதுப்பட Trailer போல் Isaland பத்திரிக்கை அறிக்கையின் ஓர் பகுதியை கொஞ்சமாய் வெளியிட்டது. இப்போ முழுதாய் பக்கம், பக்கமாய் உயிரை பதறவைக்கிறது. எங்குமே, Bloggers தொடக்கம் சர்வதேச ஊடகங்கள் வரை அலசப்படுகிறது. இந்த அலசல் எல்லாம் துண்டு, துண்டாய் அறிக்கை வெளியானபோதே முடிந்துவிட்டது. ஆனாலும், பயங்கரவாதத்தை வன்மையாக, மிதமாக கண்டிப்பவர்கள் எல்லோருமே ('Counterinsurgency Writers') அல்லது எனது மொழியில் நடுநிலமையாளர்கள் என்று கொள்ளலாமா தெரியவில்லை, அவர்கள் அரசும் புலிகளும் போர்க்குற்றங்கள் செய்ததாக அறிக்கையின் துணை கொண்டு பக்கம், பக்கமாய் விளக்கியுள்ளார்கள். இந்த …
-
- 1 reply
- 1k views
-
-
-
- 0 replies
- 814 views
-
-
மக்கள் மனமறிந்து செயற்படுவார்களா தமிழ் அரசியல்வாதிகள்? தமக்கு வாக்களித்துத் தம்மைப் பதவியில் அமர்த்திய மக்களது அபிலாசைகள் குறித் துத் தமிழ் அரசியல்வாதிகள் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். தமிழ் மக்கள் போதும் போதும் என்று கூறும் அளவுக்குத் துன்பங்களை அனுபவித்து விட்டனர். இன்னமும் வேதனைகளுக்கு மத்தியில்தான் அவர்களது அவல வாழ்வு தொடருகின்றது. தமிழ் அரசியல்வாதிகள் தமது துயரங்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையை அவர்கள் இன்னமும் இழந்துவிடவில்லை. தமிழ் மக்களது நம்பிக்கையை தமிழ் அரசியல்வாதிகள் காப்பாற்றுவார்களா? …
-
- 0 replies
- 523 views
-
-
ஐ.எம்.எஃப்பைக் கையாள முடியாத தமிழர்கள் ? நிலாந்தன்! adminJune 25, 2023 ஐநா மனித உரிமைகள் பேரவையின் 53 வது கூட்டத்தொடர் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமாகியது. இக்கூட்டத்தொடரில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை வாசிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக மனித உரிமைகள் கூட்டத் தொடரை நோக்கிய தமிழ் மக்களின் கவனக்குவிப்பு ஒப்பீட்டளவில் குறைந்து விடுகின்றது. ஐரோப்பாவை மையமாகக் கொண்டு இயங்கும் தமிழர் அமைப்பு என்ற ஒரு அமைப்பு ஐநா விவகாரங்களில் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது. அதேசமயம் இம்முறை நாட்டிலிருந்து மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு அரசியல்வாதிகள் யாரும் சென்றிருக்கவில்லை. அண்மை ஆண்டுகளாகமனித உரிமைகள் கூட்டத்தொடருக்குச் செல்லும் தமிழ் அரசியல…
-
- 0 replies
- 323 views
-
-
1978ல், நிறைவேற்று அதிகார அதிபர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டபோது, ‘தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் ஒருவர் பைத்தியக்காரராக இருந்தால் என்ன நடக்கும்’என லங்காசமசமாஜக் கட்சியைச் சேர்ந்த என்.எம்.பெரேரா கேள்வியெழுப்பியிருந்தார். சிறிலங்காவில் தற்போதுஅரசியற் குழப்பங்கள் இடம்பெற்றபோது இந்த வினாவானது மீண்டுமொருமுறை நினைவுகூரப்படுகிறது. சிறிலங்காவின் அரசியல் சீர்திருத்தத்தில் ஏற்பட்ட இந்த இடைவெளியானது இன்னமும் நிரப்பப்படவில்லை. அரசியல் சீர்திருத்தத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இப்பிரச்சினைக்கு இவை எவ்விதத்திலும் உதவவில்லை. சிறிலங்காவின் முதலாவது நிறைவேற்று அதிபரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன முட்டாளல்ல, ஆனால் அவர் மோசமான ஒரு சந்தர்ப்பவாதியாகத் திகழ்ந்துள்ள…
-
- 0 replies
- 495 views
-
-
டில்லிக்குப் போன ஜேவிபி – நிலாந்தன். ஜேவிபியின் தூதுக்குழு ஒன்று புதுடெல்லிக்கு சென்று இருக்கின்றது. இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று உத்தியோகபூர்வமாக அக்குழு அங்கு சென்று இருக்கின்றது. அங்கே இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் பாதுகாப்பு துறை ஆலோசகர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களையும் அத்தூதுக்குழு சந்தித்திருக்கின்றது. அரசியலில் இது ஒரு தலைகீழ் மாற்றம் என்று வர்ணிக்கலாமா? ஜேவிபி ஓர் ஆயுதப் போராட்ட இயக்கமாக இருந்தபோது அதன் ஐந்து வகுப்புகளில் ஐந்தாவது வகுப்பு இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கு எதிரானது. ஜேவிபி இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவியாக மலையக மக்களை பார்த்தது. மேலும் ஜேவிபியின் முதலாவது ஆயுதப் போராட்டத்தை நசுக்கியதில் இந்தியப் படைகளுக்கும் பங்கள…
-
- 0 replies
- 380 views
-
-
Courtesy: Nada. Jathu இரட்டை இலைச் சின்னப் பிரச்சினையில் எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் இழுபறிபட்டு நீதிமன்றத்தினை நாடி கட்சியின் செயல்வலுலை சீர்குலைத்த ஒரு நிலையையே இன்றைய தமிழரசுக்கட்சியும் அடைந்திருக்கின்றது. இருசம்பவங்களினதும் பின்னணிகள் மற்றும் அணுகுமுறைகள் வேறு வேறு விதமாக இருந்தாலும் இரு சம்பவங்களாலும் கட்சிக்கு விளையும் விடயம் ஒன்றாகத்தான் இருக்கும். சுமந்திரனது அரசியல் பிரவேசமானது தேர்தல் வியாபாரத்தில் ஈடுபடாத புத்திசாலிகளை உள்வாங்க என அரசியலமைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு கதவான தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்ற வாழ்க்கைக்குள் நுழைக்கப்படுகின்றார். தமிழ் தேசிய அரசியல் அவர் ஒரு புத்திசாலியாக நிபுணத்துவ மேற்சட்டையுடன் அடைய…
-
- 0 replies
- 832 views
-