Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. உலகின் ஒட்டு மொத்த கவனத்தையும் குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகளின் நேரடிப் பார்வையின் கீழ் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியிலும் வாழ்வா, சாவா என்ற போராட்டத்திற்கும் மத்தியிலும் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. ஆனாலும் நாட்டில் ஆட்சி மாற்றமா? இராணுவ ஆட்சியா? போன்ற பதற்றம் அதிகரித்தே காணப்பட்டது. அதை மெய்ப்பிப்பது போலவே கடந்த வெள்ளிக்கிழமை இரவு தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் 20 மாவட்டத் தபால் வாக்குகள் எண்ணிக்கை செய்யப்பட்டும் உடனடியாக அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. அதனால் உடனடியாக மஹிந்தர் வெற்றியடைந்த மாவட்டங்களைத்தான் ஆணையம் முதன் முதலாக 6 மாவட்ட முடிவுகளை அறிவித்தது. காரணம் இராணுவ நகர்வு ஒன்…

  2. இனி வருவது ‘தேன்நிலவுப் பொழுது’ – ச.ச.முத்து அமெரிக்க இரட்டைகோபுரம் மீது விமானங்கள் மோதிய பொழுதில் அமெரிக்க அதிபர். புஸ் ஒரு கோடு கிழித்தார்.எம்முடன் நிற்கலாம். இல்லையென்றால் அவர்களுடனேயே. அதனைப்போன்றதொரு தெரிவே தமிழர்களுக்கு இந்த சிங்களதேச அதிபர் தேர்தலில் கொடுக்கப்பட்டு இருந்தது. அறுபது ஆண்டுகளாக தொடரும் இனப்பாரபட்சம், இனஅடையாளம் சிதைத்தல், இனஅழிப்பு என்பனவற்றை உச்சமாக நிகழ்த்தியவன் ஒரு பக்கம், அவனுக்கு பாதுகாப்பு மந்திரியாக இருந்தவன் இன்னொரு பக்கம். ஆனாலும் தமிழர்கள் தமது சத்திய ஆவேசத்தை வாக்குகளில் காட்டி இருந்தார்கள். இனப்படுகொலையாளி மகிந்த தோற்று அம்பாந்தோட்டையின் தனது சொந்த ஊருக்கு மூட்டை கட்டிவிட்டார். மைத்திரி சிங்கள தேசத்தின் அதிபராக பதவி ஏற்றுமுள்ளார்.…

  3. இலங்கையில் கடந்த 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு முதல்நாள் இந்தியாவை ஆளும் பாஜக வின் வெளிவிவகாரக் கொள்கைப் பிரிவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விஜய் ஜோலி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பிரதான வேட்பாளர்களில் எவரையும் பாஜக கட்சி ஆதரிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டதாக சில ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். கடந்த நவம்பர் மாதம் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு விட்டு, மகிந்த ராஜபக்ச நேபாளத்தில் நடந்த சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். அந்த மாநாட்டில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக் கூறியிருந்தார். இதுபோன்ற…

  4. இலங்கைத் தேசியம் என்ற நீரோட்டத்தில் தமிழ் மக்களும் இணைந்து விட வேண்டும் என்பது இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உள்ளார்ந்த எதிர்ப்பார்ப்பாகும். அதற்கான இடத்தை இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தி விட்டது என்ற நம்பிக்கையும்; உண்டு. 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டதால் மஹிந்த ராஜபக்ச வெற்றியடைந்தார். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிதத்தால் மஹிந்த தோல்வியடைந்தார். -அ.நிக்ஸன்- 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டதால் மஹிந்த ராஜபக்ச வெற்றியடைந்தார். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிதத்தால் மஹிந்த ராஜபக்ச தோல்…

  5. 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை தமிழர்களே தீர்மானித்துள்ளனர் என்பதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே ஏற்றுக் கொண்டுள்ளார். உண்மையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் ஆட்சிபீடமேறிய ஜனாதிபதிகளை தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் பேசும் மக்கள் இருக்கின்றனர் என்பதே யதார்த்தமானதாகும். கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலையும், அதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களே தீர்மானித்திருந்தார். குறிப்பாக 2005ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் மத்தியில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மிகுந்த ஆதரவு இருந்தபோதும் அப்போதைய சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாக வருவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த ந…

    • 2 replies
    • 682 views
  6. s ஏழா­வது ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்­களின் ஆணையைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யதன் மூலம் மைத்­தி­ரி­பால சிறி­சேன இலங்கை ஜன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசின் ஏழா­வது ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். பள்­ளே­வத்தே கம­ரால லாகே மைத்­திரி­பால யாபா சிறி­சேன எனும் முழுப் பெயரைக் கொண்ட இவர் 1951ஆம் ஆண்டு ஐப்­பசி மாதம் 3ஆம் திகதி பௌத்த சம­யத்தைப் பின்­பற்றும் மத்­திய தர விவ­சாயக் குடும்­பத்தில் பிறந்தார். தற்­போது இவ­ருக்கு வயது 63. ஜயந்தி புஷ­ப­கு­மாரி என்­ப­வ­ருடன் திரு­மண வாழ்க்­கையில் இணைந்து கொண்ட இவ­ருக்கு இரு மகள்­மாரும் ஒரு மகனும் உள்­ளனர். கல்வி: 1955 இல் பொலன்­ன­றுவ லக் ஷ உயன பாட­சா­லையில் ஆரம்பக் கல்­வியைப் பெற்ற இவர் பொலன்­ன­றுவை தப்­போவௌ மகா வித்­தி­யா­ல…

  7. ஓயாத அலைகள் காலத்தில் புதுக்குடியிருப்பில் இருந்தபோது போராளியாக இருந்த ஒரு நண்பர் கூறிய தகவல் இது: ஓயாத அலைகள் - 3 படை நடவடிக்கையின்போது, ஆணையிறவு கைப்பற்றப்பட்ட பின்னர், தென்மராட்சியைக் கைப்பற்றுவதற்கு புலிகள் நடவடிக்கை எடுத்த காலம். இரவுடன் இரவாக இரகசியமாக முன்னேறிச் சென்ற புலிகளின் படையணிகள், தென்மராட்சியை யாழ்ப்பாணத்தில் இருந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றன. கைதடிச் சந்தியில் இருந்து கோப்பாய் சந்தியை நோக்கிச் செல்லும் பாதையில் புலிகளின் அணியொன்று நிலைகளை அமைக்கிறது. இந்தத் தகவல் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்குத் தெரியவந்ததும், மக்கள் திரண்டு செல்கிறார்கள். மோதல்கள் ஆரம்பமாவதற்கு முன்பு தம்மை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதற்கு அனுமதிக்குமாற…

  8. அரசியல் உரிமைக்கான அறவழி இயக்கம் தொடங்க இதுவே தக்க தருணம்! - பெ.மணியரசன் அறிக்கை! [saturday 2015-01-10 21:00] இலங்கைத் தேர்தல் தரும் பாடம் இதுதான்! தமிழீழ மக்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் வேண்டுகோள்! தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை! இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் இனப்படுகொலைக் குற்றவாளி இராசபட்சே படுதோல்வி அடைந்தது வரவேற்கத்தக்கது. ஆனால், இத்தேர்தல் முடிவு தமிழீழத்தில் இராணுவ முற்றுகைக்குள் பணையக் கைதிகள் போல் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு குடியியல் உரிமைகள் - அரசியல் உரிமைகள் ஆகியவற்றை பெற்றுத்தருமா என்பது மிகப் பெரியக் கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில், வெற்றுபெற்றுக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மைத்…

  9. 1991ம் ஆண்டு ஜுலை மாதம் 10 திகதி. சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக ஒரு மிக முக்கிய தாக்குதலை விடுதலைப் புலிகள் ஆரம்பித்த தினம். சிறிலங்காவில் மிகவும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த சிpலங்கா ஆணையிறவுப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப் பெரிய இராணுவ நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்திருந்தார்கள். ஒரு பிரதான இராணுவ முகாம் மற்றும் ஆறு சிறிய முகாம்களைக் கொண்ட அந்த பாரிய இராணுவத் தளத்தில், சிறிலங்கா சிங்க ரெஜமன்;ட்(Sri Lanka Sinha Regiment )இனது ஆறாவது பட்டாலியனை (6th battalion) சேர்ந்த 600 படைவீரர்கள் தங்கியிருந்தார்கள். அந்தப் பாரிய படைத்தளத்தைத்தான் விடுதலைப்புலிகள் அந்த நேரத்தில் முற்றுகையிட்டிருந்தார்கள். ஆனையிறவு சிறிலங்காப் படைத்தளம் மீதான முற்றுகைக்கு விடுதலைப் …

  10. மோசமான பொருளாதாரம், சிரியா, ஈராக், லிபியா ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர், காசா இரத்தக் களரி, அடங்க மறுக்கும் பலஸ்த்தீனம், ஆதிக்க வெறி கொண்ட இஸ்ரேல், உக்ரேனில் வல்லரசுகளின் முறுகல் நிலை, தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக்கடலிலும் மோதல் நிலை, தொடரும் படைக்கலன்கள் பெருக்கும் போட்டி ஆகியவற்றுடன் 2014-ம் ஆண்டு முடிவடைந்தது. இவை மட்டுமல்ல இன்னும் பல பிரச்சனைகள் 2014-ம் ஆண்டில் இருந்து 2015 ஆண்டிற்கு முதிசமாகக் கிடைத்துள்ளன. ஆனாலும் ஓர் ஒளிக் கீற்றாக குறைவடைந்த எரிபொருள் விலை தோன்றியுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் மட்டுமல்ல உலகெங்கும் புவிசார் அரசியலிலும் 2015-ம் ஆண்டில் பெரும் மாற்றத்தை எரிபொருள் விலையே ஏற்படுத்தப் போகின்றது. 2015-ம் ஆண்டு பல நாடுகள் குடிவரவிற்கு எதிரான கடுமை…

  11. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குலில் விடுதலைப்புலிகளுக்கும் சம்பந்தம்? – நிராஜ் டேவிட் by admin June 30, 2013 இந்தத் தலைப்பு எம்மில் பலருக்கு ஒரு புதிய செய்தியாக இருக்கலாம். சிலருக்கு அதிர்ச்சியான ஒரு செய்தியாகக்கூட இருக்கலாம். ஆனால் இப்படியான ஒரு செய்தி சில மேற்குலக ஊடகங்களிலும், பயங்கரவாதம் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளிலும் சில வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்படிட்டிருந்ததை நாம் மறுத்துவிட முடியாது. 1993ம் ஆண்டு பெப்ரவறி மாதம் 26ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இருந்த உலக வர்த்தகமையமான இரட்டைக் கோபுரத்தைக் குறிவைத்து இஸ்லாமியத் தீவிரவாதிகள் குண்டுத்தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்கள். (2001 செப்டெம்பர் 11 இரட்டைக் கோபுரத்தின் மீது மேற்கொள்ளப்பட…

  12. தாயகத்திலிருந்து வரும் செய்திகள் மற்றும் அறிக்கைகள் அனேகமாக அனைத்துமே மைத்திரியை ஏற்றுக்கொள்வதாகவே வருகிறது. இதை நான் ஏற்றுக்கொள்கின்றேன் எந்த முடிவாகினும் அதை அங்குள்ளவர்களே எடுக்கணும் என்றுமே நாம் அதற்கு பக்கபலமாக இருக்கணும் என்பதே எனது நிலைப்பாடு... போராடுபவனுக்கும் பிரச்சினைக்கு நேரே முகம் கொடுப்பவனுக்கும் தான் தீர்மானிக்கும் உரிமையும் பொறுப்பும் தகுதியுமுண்டு. அந்தவகையில் யாழ் பல்கலைக்கழக பீடம் வடமாகாணமுதலமைச்சர் மற்றும் கூட்டைமைப்பு ஆகியவற்றின் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளமுடிகிறது.. ஆனால் எனக்கு ஒருவிடயம் இடிக்கிறது இதில் எவரும் மகிந்தவுக்கு எதிராகவோ அல்லது மைத்திரிக்கு ஆதரவாகவோ தமது நிலைகளை மக்களுக்கு தெளிவாக அறிவித்தது வரவேற்கத்தக்கது. ஆ…

  13. எதிர்வரும் 08 சனவரி 2015 அன்று நடைபெறவுள்ள இலங்கை சனாதிபதித் தேர்தலில் தற்போதைய சனாதிபதி மகிந்த ராகபச்ஸவும், மைத்திரிபால சிறிசேனவும் முன்னணி வேட்பாளர்களாக உள்ளனர். இக் கருத்துக் கணிப்பு மிகமுக்கியமான இந்த சனாதிபதித் தேர்தல் பற்றிய தமிழர்களின் நிலைப்பாட்டை அறிய உருவாக்கப்பட்டுள்ளது. இக் கருத்துக் கணிப்பில் பங்கெடுத்து தெரிவுக்கான காரணத்தை இத்திரியில் பதிந்து கருத்தாடலில் ஈடுபட அனைவரையும் அழைக்கின்றோம். 06-01-2015 வெள்ளி வரை வாக்களிக்க முடியும் : http://www.yarl.com வாக்களித்த பின்னர் அதன் பெறுபேறுகளைக் இங்கு காணலாம். http://www.yarl.com/content/இலங்கையில்-நடைபெறவுள்ள-சனாதிபதித்-தேர்தல்-பற்றிய-உங்கள்-நிலைப்பாடு-என்ன ஏற்கனவே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளை இந்த இணைப்…

    • 13 replies
    • 1.9k views
  14. ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாடு: தனித்து ஓடும் சம்பந்தன் - சுமந்திரன் கூட்டணி முத்துக்குமார் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்துள்ளது. கூட்டமைப்பு மைத்திரி ஆதரவு நிலை எடுத்தமைக்கு மேற்குலகினதும் இந்தியாவினதும் அழுத்தம்தான் பிரதான காரணம். இவை ஆட்சிமாற்றத்தினை விரும்புகின்றன என்பது கடந்த சில வருடங்களாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேற்குலகத்தையும், இந்தியாவையும் பொறுத்தவரை இரண்டு வேலைத்திட்டங்கள் உள்ளன. ஒன்று ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவது, இரண்டாவது தனக்குச் சாதகமான ஆட்சியைப் பாதுகாப்பது. இரண்டிற்கும் முக்கியமான நிபந்தனை தமிழ்த் தேசிய அரசியல் எழுச்சியடைய விடாமல் …

    • 3 replies
    • 2.6k views
  15. தமிழ் நாட்டிலிருந்து அங்குள்ள பெண்கள் இயக்கத்தினைச் சார்ந்த பெண்ணிலைவாதியொருவர் ஜுன் மாதம் 23ம் திகதி சர்வதேச விதவைகள் தினத்தினை நினைவுகூரும் ஓர் சிறிய நிகழ்வுக்கு அழைக்கப்பட்டார். இது வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி பிரதேச செயலாளர் அலுவலகத்தில் சுமார் 30 பெண்களின் பங்கேற்றலுடன் நடந்தது. குறிப்பிடக்கூடத் தேவையில்லாத சம்பவம். ஆனால், துரதிர்~;டவசமாக வட மாகாணத் தேர்தல் இடம்பெறப்போகும் காலத்தில் இது ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. அந்த நிகழ்வுக்கு வந்திருந்த புலனாய்வாளர்களினால் இது ஸ்ரீலங்கா அரசினை நிலைகுலையச் செய்ய தமிழ்நாடு செய்கின்ற சதித்திட்டம் என்று தலைமையகத்துக்கு அறிக்கையிடப்பட, ஆரம்பித்தது சதிராட்டம். பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு இந்த விடயம் கையளிக்கப்பட்டு உடனேயே கு…

  16. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகிவிட்டது. அதாவது, எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார். கூட்டமைப்பின் மேற்படி முடிவு சிலருக்கு ஆச்சர்யத்தையும், சிலருக்கு ஏமாற்றத்தையும், சிலருக்கோ ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் சில கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில், சம்பந்தனின் மேற்படி முடிவு தொடர்பில் அதிருப்திகள் இருக்கின்றபோதிலும் கூட, அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்…

  17. மைத்திரியின் இரண்டு உடன்படிக்கைகளும் தமிழ் மக்களும் முத்துக்குமார் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இரண்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருக்கின்றார். ஒன்று, 33 அரசியற் கட்சிகளும், பொது அமைப்புக்களும் இணைந்து கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை. இரண்டாவது ஹெல உறுமயவுக்கும் மைத்திரிபால சிறீசேனாவிற்கும் இடையேயான உடன்படிக்கை. இங்கு கவனிக்கப்படவேண்டிய முக்கியவிடயம், ஹெலஉறுமய பொது வேலைத்திட்டத்திற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. அதேவேளை அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யவில்லை. பொது வேலைத்திட்டத்தில் உடன்பாடு இருந்தபோதும், தனது தனித்த அரசியல் இலக்குகளை அடைந்துகொள்ளும் வகையில் தனிப்பட்ட உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளது, அந்த இரண்டு உட…

    • 1 reply
    • 824 views
  18. தமிழ் பேசும் மக்களின் சிந்தனைக்கு…!​ வீ. தனபாலசிங்கம் - on January 3, 2015 படம் | AFP/ Lakruwan Wanniarachchi, FCAS ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவாரேயானால், அவரது தலைமையில் அமையக் கூடிய புதிய அரசு தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதில் அக்கறைகாட்டுமென்ற எதிர்பார்ப்பில் அல்லது நம்பிக்கையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு முன்னதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கின்றன என்று எவரும் கூறமாட்டார்கள். அவ்வாறு எவராவது கூறினாலும் கூட, யாருமே நம்பப் போவதுமில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கான வழிவகைகள் குறித்தோ …

  19. சிறிலங்காவின் அதிபர் தேர்தலும் தமிழ்மக்களின் நிலைப்பாடும். நடைபெற இருக்கும் சிறிலங்கா அதிபர் பதவிக்கான தேர்தலில் தமிழர்களின் நிலைப்பாடு என்ன?இதில் மகிந்த தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழர்களிடையே மாற்றுக் கருத்து எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அதிபர் பதவிக்கான வேட்பாளர்களில் பிரதானமானவர்கள் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மகிந்தஇராஜபக்கசவும் எதிரணி வேட்பாளராக அதே கட்சியைச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேனவும் ஆவர்.இது உலகில் எங்கும் நடந்திராத வேட்பாளர் தேர்வாக இருக்கிறது.2009 ஆம் ஆண்டு நடந்த பெரும் இன அழிப்பின்போது அதிபராக இருந்த மகிந்த தமிழர்களின் பெருங்கோபத்திற்கு ஆளான வேட்பாளாராய் இருந்த போதும் எதிரணியில் உள்ளவர்கள் இந்த இன அழிப்புக்கு முற்றிலும் துணைபோனவர்களே என்பதும்…

  20. ராஜபக்ஷ சகோதரர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதே தமிழ் பொது உளவியலின் பிரதான கூறாகக் காணப்படுகிறது. ஆனால், இதன் அர்த்தம் தமிழ் மக்கள் மைத்திரியை நம்புகின்றார்கள் என்பதல்ல. படித்த, நடுத்தர வர்க்கத் தமிழர்களைப் பொறுத்த வரை ஏதோ ஒரு மாற்றம் தேவை என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இதன் அர்த்தம் மைத்திரி மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று அவர்கள் நம்புகிறார்கள் என்பதல்ல. மைத்திரி எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வருவார் என்ற கேள்விக்கு அவர்களில் பலரிடம் துலக்கமான பதில் இல்லை. தமிழ்ப் பொது உளவியலின் பெரும் போக்கைக் கருதிக் கூறின், தமிழ் மக்கள் அரசுக்கு எதிராக காணப்படுகிறார்கள் என்பதே சரி. இவ்விதம் அரசுக்கு எதிராக காணப்படும் வாக்குகள் அவற்றின் தவிர்க்கப்படவியலாத தர்க்கபூர்வ விளைவாக மைத்திரி…

  21. தமிழீழ விடுதலை புலிகள், மே 2009ம் ஆண்டு வரை, தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகளாக விளங்கியவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிறிலங்கா அரசிடம் கூலி பெற்ற சிலர் கடந்த சில வருடங்களாக இவ்வியக்கத்தை சின்னபின்னமாக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலை புலிகளை வெற்றி கொண்டது யார் என்பதை ஆராயும் பொழுது, தேர்தல் பிரச்சார மேடைகளில், மைத்திரிபால சிறிசேனவின் சார்பணியினரான – சந்திரிக்க குமாரதுங்க, தளபதி சரத் பொன்சேகா, ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர போன்றோர் தமது நடவடிக்கைகளினாலே தமிழீழ விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டார்களென வீரம் பேசுகின்றனர். மறுபுறம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தானும் தனது சகோதரருமான பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரே வெற்றி கொண்டத…

  22. 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த தினம். ஒரு மோசமான வரலாற்றை இரத்தத்தால் எழுதுவதற்கு பாரத தேசம் தேர்ந்தெடுத்த தினம் அது. இந்தியா தனது வரலாற்றில் எடுத்த மிகவும் மோசமான ஒரு முடிவு என்று பின்நாட்களில் அரசியல் ஆய்வாளர்களினாலும், போரியல் வல்லுனர்களினாலும் குறிப்பிடப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கையை இந்தியா ஆரம்பித்த தினம். அன்று ஆரம்பிக்கப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கை சுமார் 22 வருடங்களையும் கடந்து முள்ளிவாய்கால் வரை தொடரப் போகின்றது என்று இந்தியாவின் தலைவர்களோ அல்லது விடுதலைப் புலிகளின் தலைவர்களோ கனவு கூடக் கண்டிருக்கமாட்டார்கள். அன்று காலை யாழ்பாணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தி…

  23. 2015இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் தொடரும் இந்த வேளையில் இலங்கையில் இருந்து யாதவன் நந்தகுமாரன் இந்தப் பதிவை அனுப்பி வைத்துள்ளார்.... நீங்களும் இந்த விவாதத்தை முன்கொண்டு செல்ல முடியும்... ஆரோக்கியமான முன்னர் வெளியாகாத புதிய பதிவுகளை அனுப்பிவைத்தால் பிரசுரிக்கப்படும்... ஆ.ர் அன்புடையீர் குளோபல் தமிழுக்காக எழுதப்பட்டது பிரசுரித்து உதவுக நன்றி. யாதவன் நந்தகுமாரன். இலங்கையில் சனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ் அரசியற் பரப்பிலும் ஊடகப் பரப்பிலும் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ் அரசியற் பிரமுகர்கள் முதல் சிவில் சமூகத்தவர்கள் வரை இரு வேட்பாளர்களையும் ஒரே தராசினில் வைத்து இனவாத சிந்தனையில் தமிழர்களுக்கு எந்…

    • 1 reply
    • 678 views
  24. மைத்திரிக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு கோரமுடியும்? by Maatram தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இதுவரை வாய்திறக்காத, பொதுவேட்பாளராகியும் இன்னும் திறவாத, தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட தமிழர் தொடர்பாக எதுவும் குறிப்பிடாத, தமிழர்களை வேண்டப்படாதவர்களாக – விரோதிகளாக எண்ணும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என எவ்வாறு கோர முடியும் என கேள்வி எழுப்புகிறார் சட்டத்தரணி வி. புவிதரன். இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்குவதை விடுத்து தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளையாவது தன்னால் வழங்க முடியும் என மைத்திரியால் உறுதியளிக்க முடியுமா என மேலும் அவர் கேள்வி எழுப்புகிறார். ‘மாற்றம்’ தளத்துக்கு வழங்கிய நேர்க்காணலின் போதே மேற்கண்டவாறு கூறினார். அ…

    • 1 reply
    • 726 views
  25. ஈழத் தமிழர் மனசாட்சியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்‌ச, மூன்றாவது முறையாக இலங்கையின் ஜனாதிபதியாகத் துடிக்கிறார். அதற்காக சட்டத்தையே வளைத்துவிட்டார். 'செருப்பு ஆண்ட நாடு இது, எவன் ஆண்டால் என்ன?’ என தந்தை பெரியார் ஒருமுறை கேட்டார். மக்களும் மக்களாட்சித் தத்துவமும் மரணக் குழிக்குள் தள்ளப்பட்டுவிட்ட இலங்கையில், ஜனவரி 8-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருப்பதை நினைக்கும் போது இதுதான் நினைவுக்கு வருகிறது. ஈழத் தமிழர் மனசாட்சியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்‌ச, மூன்றாவது முறையாக இலங்கையின் ஜனாதிபதியாகத் துடிக்கிறார். அதற்காக சட்டத்தையே வளைத்துவிட்டார். இலங்கையின் அரசியல் அமைப்புச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.