Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அரசை வழிபடும் அறிவுஜீவி க. திருநாவுக்கரசு ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்னர் புதிய பொருளாதாரக் கொள்கைகள் பற்றி விவாதிப்பதற்கான கூட்டத்தைச் சென்னைப் பத்திரிகையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் தரப்பை சுப்பிரமணியன் சுவாமியும் ஆர்.எஸ்.எஸ். தரப்பை (பாஜக தரப்பை அல்ல) எஸ். குருமூர்த்தியும் பேசினர். (இடதுசாரிகளின் தரப்பைப் பேச வேண்டிய என். ராம் அவசர வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்டதால் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை) விவாதத்தை நெறிப்படுத்துபவராக இருந்தவர் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசுவாமி. விவாதத்திற்குப் பின்னர் கேள்வி நேரத்தில் நடுத்தர வயதுப் பெண் ஒருவர் விவாதிக்கப்பட்ட கருத்து என்ன, தான் என்ன கேள்வி கேட்கிறோம் என்ற தெளிவு …

  2. இலங்கை ஜனாதிபதியின் நிபுணர் குழு ஐ.நாவுக்கான சவாலா? ச.பா. நிர்மானுசன் படம் | JDSrilanka ஜூலை 15ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை நடவடிக்கைகள் மஹிந்த ராஜபக்‌ஷ அரசை நெருக்கடிக்குள் தள்ளும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த சூழலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தன்னால் உருவாக்கப்பட்ட, போர்க்காலப் பகுதியில் காணமற்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, சர்வதேச ரீதியில் அங்கீகாரமும் பிரபல்யமுமுடைய மூன்று நிபுணர்களை ஆலோசகர்களாக நியமித்துள்ளார். இந்த நடவடிக்கை சர்வதேச சமூகத்தின் பணிகளை அதிகரித்துள்ளதோடு, அதிர்ச்சியடைய வைத்திருப்பதாகவும் அறிய வருகிறது. இது, சர்வதேச சமூகத்துக்கும் இலங்கை அரசுக்குமிடையில் நிலவிய மென்போக்கு அ…

  3. நாட்டில் பொது பல சேன என்கின்ற பௌத்த தீவிரவாத அமைப்பானது முஸ்லீம் சமூகத்தை தேசிய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியமை மிகப் பெரிய தவறாகும். இவ்வாறு கொழும்பை தளமாகக் கொண்ட The Sunday Leader ஊடகத்தில் Dr Dayan Jayatilleka எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் இஸ்லாம் எழுச்சி பெற்றுவருவதாலா அல்லது சிறிலங்காவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எதிரான அமைப்பினதும் அதன் நடவடிக்கைகளாலா சிறிலங்காவுக்கு உண்மையான ஆபத்து ஏற்பட்டுள்ளது? சிறிலங்காவின் வடக்கு கிழக்கைப் பிரிப்பதற்குத் தேவையான மிகப் பெரிய மூலோபாயத் தவறைத் தற்போது சிறிலங்கா மே…

  4. பாம்பையும், பார்ப்பனனையும் ஒரே இடத்தில் கண்டால், முதலில் பார்ப்பனனை அடி, அதன் பின்னர் பாம்பை அடி என்று பெரியார் சொன்னார். அதற்கான அர்த்தத்தை நாம் எங்கள் நாட்களில் வெகுவாகவே உணர்ந்து கொள்ள முடிகின்றது. தமிழர்கள் மத்தியிலேயே, தீர்க்க முடியாத பெரு வியாதியாக... அகற்ற முடியாத பெரு வினையாக... தவிர்க்க முடியாத பெரும் வலியாக பார்ப்பனீயம் கறையான் புற்றாகப் புரையெடுத்து நிலை கொண்டுள்ளது. தமிழ் மக்களின் பேரவலங்களுக்கும், பேரிழப்பிற்கும் பார்ப்பனிய சதி வலையும் ஒரு முக்கிய காரணமாகவே தொடர்கின்றது. ஒரு மதம் என்ற வகையில் இந்து மதம் தமது மக்களான தமிழர்களைக் காப்பாற்றவும், வழி நடாத்தவும் தவறியுள்ளது. தமிழர்கள் அவலங்களைச் சந்தித்த எந்தக் காலத்திலும், தமிழர்கள் அழிவுகளைச் சந…

  5. சமந் சுப்ரமணியம் [samanth Subramanian] 'இந்த பிளவுபட்ட தீவு' [This Divided Island] என்கின்ற தலைப்பில் நூலொன்றை வெளியிட்டுள்ளார். இந்நூலானது சிறிலங்காவின் மிகமோசமான கடந்த காலத்தையும் நிச்சயமற்ற நிகழ்காலத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இந்நூலின் ஆசிரியருடன் Hindustan Times ஊடசகத்திற்காக Sudha G Tilak மேற்கொண்ட நேர்காணலின் விபரம் வருமாறு: கேள்வி: இந்த நூலைத் தாங்கள் எழுதுவதற்கு உந்துதல் வழங்கிய காரணி எது? பதில்: போர் என்பதன் தாக்கம் என்பதை உணர்ந்ததன் ஒரு பகுதியாகவே இந்த நூலை நான் எழுதியுள்ளேன். நான் சிறிலங்காவை சேர்ந்தவன் அல்லன். ஆனால் நான் சென்னையில் வளர்ந்தவன் என்ற வகையிலும் நான் ஒரு தமிழன் என்ற வகையிலும் சிறிலங்காவில் எத்தகைய போர் இடம்பெற்றது என்பதை எழுதியுள்ளே…

  6. - எம்.றொசாந்த் 'தமிழத் தேசிய அரசியல் என்பது வணிகம் அல்ல தியாகம். உண்மையான இலட்சியத்திற்காக உயிரிழந்தவர்களின் குருதியில் நின்றுதான் நாங்கள் இங்கே தேசியம் பேசுகின்றோம். எனவே நாங்கள் தியாகம் செய்தே எமது தேசியத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்' என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் மற்றும் தோழமைக் கட்சிகளினை ஒன்றிணைத்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை (20) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'போரின் தாக்கம், போரின் கொடுமை காரணமாகவே நான் அரசியலில் பிரவேசித்தேன். இந்தப் போர் எமது தமிழ் சகோதரிகள் மத்தியில் பாரிய மாற்றத்தின…

  7. http://www.zionpress.org) http://www.mfa.gov.il http://www.thiruvalluvar.in/2009/12/blog-post.html

    • 0 replies
    • 941 views
  8. மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழுவும் அரசாங்கத்தின் நிபுணர் குழுவும் - புதிய தெரிவுகளை உருவாக்கும் அரசாங்கம்? - நிலாந்தன்:- 20 ஜூலை 2014 காணாமற் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரத்தை இலங்கை அரசாங்கம் விரிவு படுத்தியுள்ளது. அதன்படி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக அனைத்துலக நிபுணர் குழு ஒன்றையும் அது நியமித்திருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் தனது விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் அதே காலப்பகுதியில் இவ்வாறு ஓர் அனைத்துலக நிபுணர்களின் ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. மூவர் அடங்கிய இக்குழுவின் தலைவராக சேர். டெஸ்மன் டி சில்வா நியமிக்கப்பட்டிருக்கின்றார். மற்றைய இருவர்களில் ஒருவர் பேராசிரியர்.சேர்.ஜெவ்றி நைஸ் எனப்படும் ப…

  9. முஸ்லீம்களின் உயர் பிறப்பு விகிதம், முஸ்லீம் வர்த்தக சமூகத்தின் வெற்றிகரமான நடவடிக்கைகள் போன்றன சிங்களவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் இதனாலேயே பொது பல சேன என்கின்ற தீவிர பௌத்த அமைப்பு தோற்றம் பெற்றதாகவும் சரவணமுத்து கூறுகிறார். இவ்வாறு CNN ஊடகத்திற்காக Tim Hume எழுதியுள்ள கட்டுரையில் குறித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. கடந்த மாதம் முஸ்லீம்கள் அதிகம் வாழும் சிறிலங்காவின் அளுத்கமப் பகுதியில் பௌத்த காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர், அங்கு கூடியிருந்த பெருந்திரளான மக்கள் முன்னிலையில் உரையாற்றுவதற்காக தலைமுடி வெட்டப்பட்ட, கண்ணாடி அணிந்திருந்த ஒரு மனிதன் நின்றிருந்தார். முஸ்லீம் இளைஞர்களுக்கும் பௌத்த காடைய…

  10. இந்தியாவின் அயல்நாடுகள் பல சீனாவுடன் நல்லுறவைப் பேணிவருவதில் ஆர்வங் காண்பிக்கின்றன. மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்தியாவை எதிர்த்தே இந்த நாடுகள் சீனாவுடன் நல்லுறவைப் பேணுகின்றன எனத் தென்படுகின்ற போதிலும், தமக்கெதிரான அமெரிக்காவின் கடும்போக்கு அணுகுமுறையை எதிர்கொள்வதற்கான ஒரு புதிய உத்தரவாதம் அளிப்பவராகவே இந்த நாடுகள் சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேணுகின்றன. இவ்வாறு Eurasia Review இணையத்தில் Chintamani Mahapatra* எழுதியுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. தென்னாசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கானது மிக வேகமாகக் குறைந்து வருகிறது. இப்போக்கானது எதிர்காலத்தில் மேலும் அதிகமாகும் என எதிர்வு கூறப்படுகிறது. இரண்டாம் உலக யுத்த…

  11. தமிழர் தரப்பு முன்னெடுக்க வேண்டியது: பேச்சுவார்த்தையா? சர்வதேச விசாரணையா? - தீபச்செல்வன்:- 15 ஜூலை 2014 இலங்கை அரசு விரும்பாவிட்டால் சமதான முயற்சிகளை கைவிடத் தயார் என்று தென்னாபிரிக்க உப ஜனாதிபதி ராம்போசா குறிப்பிட்டிருப்பது இலங்கையில் சமாதான முயற்சிகள் சாத்தியமான ஒரு விடயமல்ல என்பதை உணர்த்துகிறது. இலங்கை அரசுக்கும் தமிழர் தரப்புக்கும் இடையில் பல்வேறு கால கட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கின்றன. அவைகள் எதுவுமே சமாதானத்தை எட்டவில்லை என்பது இலங்கை - ஈழப் பிரச்சினையின் பேச்சுவார்த்தைகள் மற்றும் சமாதான முயற்சிகளின் கசப்பான வரலாறு ஆகும். இலங்கையில் தமிழர் தரப்புக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நடந்த பல பேச்சுவார்த்தைகளை மூன்றாக பிரிக்கலாம். முதலில் த…

    • 1 reply
    • 598 views
  12. தென்னாபிரிக்க முயற்சிகள் வெற்றிபெறுமா? -நிலாந்தன்:- 13 ஜூலை 2014 தென்னாபிரிக்காவின் துணை ஜனாதிபதியும் விசேட தூதுவருமாகிய சிறில் ரமபோஷா இலங்கை வந்து போயிருக்கிறார். ஐ.நா.மனித உரிமை ஆணையகத்தின் விசாரணைக் குழு அதன் செயற்பாட்டை தொடங்கவிருக்கும் ஒரு பின்னணியில் அவருடைய விஜயம் நிகழ்ந்திருக்கிறது. மற்றொரு தென்னாபிரிக்கரான நவிப்பிள்ளையின் வருகையை எரிச்சலோடு எதிர் கொண்ட அரசாங்கம் ரமபோஷாவை அமைதியாக வரவேற்றிருக்கிறது. ஒரு அரசியல்வாதி என்பதற்கும் அப்பால் ரமபோஷா ஒரு வெற்றிபெற்ற தொழிற்சங்கவாதியும் செயற்பாட்டாளரும் பெரு வணிகருமாவார். தென்னாபிரிக்காவின் சுரங்கத் தொழிலாளர்களுக்கான ஆகப் பெரிய தொழில் சங்கத்தை அவர் கட்டியெழுப்பினார். அதேசமயம், சுரங்கத் தொழில்துறையும் …

  13. கோட்டாவின் நிழல் படம் | AFP/Getty Images, Ishara S. Kodikara, Theglobalmail மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்புதான் கோட்டாபய ராஜபக்‌ஷ என்ற ஒருவர் இலங்கை அரசியலில் வந்துசேர்ந்தார். இராணுவ சேவையிலிருந்து விலகிய பின் பதினைந்து ஆண்டுகளாக வாழ்ந்தது அமெரிக்காவிலேயாகும். அவர் ஒரு பிரசித்திபெற்ற, அதிகாரமுள்ள, பலமிக்க நபராக மாறியது, சகோதரர் ஜனாதிபதி பதவியேற்புக்கு வந்த பின்னர்தான். அத்தோடு, அவருக்கு அதிகாரமுள்ள பதவியொன்றாக கருதப்படும் பாதுகாப்புச் செயலாளர் பதவி கிடைத்ததோடு, அதன்பின் இடம்பெற்ற நான்காம் ஈழ யுத்தத்தின்போது இராணுவ பாதுகாப்புப் பிரிவினரை நெறிப்படுத்தும் நபராகவும் இவர் பதவி ஏற்றார். யுத்த வெற்றியில் முக்கிய பங்காற்றிய ஒருவர் எனக் கருதக்கூடிய ஜெனரல்…

  14. ஐ.நா விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்குமா? முத்துக்குமார் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விசாரணைக்கென 12 பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கின்றார். இக்குழுவில் விசாரணையாளர்கள், தடயவியல் நிபுணர்கள், பாலினத்துவ நிபுணர்கள், சட்ட ஆலோசகர்கள் என்போர் அங்கம் வகிக்கின்றனர். விசாரணைக்குழுவின் ஆரம்பச் செயற்பாடுகள் இவ் வருடம் யூலை மாதத்தில் ஆரம்பமாகும் என்றும், 2015 மார்ச் மாதமளவில் விசாரணைச் செயற்பாடுகள் முடிவடையும் என்றும் கூறப்படுகின்றது. விசாரணைச் செலவுகளுக்கென 1 192 000 அமெரிக்க டொலர் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை விசாரணைக்குழு என்று சொல்வதிலும் பார்க்க ஆய்வுக்குழு எனக் கூறலாம். முன்னைய ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூனி…

  15. ஈழத்தமிழர் அரசியலில் காலத்திற்கு காலம், சில வெளிநாட்டவர்களது பெயர்கள் பேசு பொருளாவதுண்டு. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து, அன்றைய சூழலில் பார்த்தசாரதி, டிக்சிட் போன்ற பெயர்கள், தமிழர் அரசியலில், முக்கிய இடத்தை பிடித்திருந்தன. காவோ, நாயர், சந்திரசேகரன் போன்ற வேறு சில பெயர்களும் பிரபலமாக இருந்திருந்தாலும் கூட, அவை, இயக்கங்கள் மத்தியில் பரவலாக உச்சரிக்கப்பட்டளவிற்கு, ஊடங்களின் கண்களை அதிகம் உறுத்தியிருக்கவில்லை எனலாம். இதற்கு அவ்வாறான சிலர், உளவுத்துறை சார்ந்தவர்களாக இருந்ததும் ஒரு காரணமாகும். பின்னர் இந்திய - இலங்கை ஒப்பந்தம், உறைநிலைக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, மேலே குறிப்பிட்டவாறான பெயர்கள் அனைத்தும் மெதுவாக அவற்றின் முக்கியத்துவத்தை இழந்து போயின. இதன் பின…

  16. நாணயம் இல்லாத நாணயம் கடை தெருவில் காய்கறி வாங்கும் போது பொருளின் மதிப்பிற்கு மேல் ஐந்து ரூபாயோ அல்லதுபத்து ரூபாயோ அதிகம் வைத்து விற்றால் அதற்காக அரை மணி நேரம் வாதாடும் நாம், வாழ்நாள்முழுதும் உபயோக படுத்தும் பணத்தின் மதிப்பு நம் கண்ணுக்கு தெரியாமல் யாரால் எவ்வாறு பலமடங்கு குறைக்க படுகிறது என்றோ? நம் உழைப்பு நாளுக்கு நாள் எவ்வாறு மலிவாக்க படுகிறதுஎன்பது பற்றியோ சிந்திப்பதில்லை.நம்மில் சிலர் அரசு பணத்தை வெளியிடும் போது, அதற்குஈடாக தங்கத்தை வைத்து கொண்டு வெளியிடுவதாக நினைக்கலாம். அதாவது பொருளாதாரம்சார்ந்து பார்த்தால் அதை வலிமையான பணம் என்று கூறுவர். ஆனால் உண்மையில்பெரும்பான்மையான பணம் வெளியிடுவது கடனின் அடிப்படையில் தான் என்றால் உங்களுக்குஆச்சர்யமாக இருக்கும். நேர்…

    • 0 replies
    • 1.2k views
  17. இயக்குனர் பிரசன்ன விதானகேயின் புதிய திரைப்படமான ‘ஒப நத்துவ ஒப எக்க’ (With you Without you ) தாஸ்தயேவ்ஸ்கி 1876-ல் எழுதிய A Gentle Creature என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. போருக்குப் பின்னான இலங்கையில் தத்தளிக்கும் இனத்துவ உறவுகளைச் சித்திரிக்கும் இந்தத் திரைப்படம் சர்வதேசப் பரப்பில் மிகுந்த கவனத்தைப் பெற்று மதிப்புக்குரிய விருதுகளையும் வென்றிருக்கிறது. கடந்த மாதம் இந்தியாவின் முக்கியமான ஆறு நகரங்களில் பதினேழு திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது. சென்னையில் திரையிடப்பட்ட பி.வி.ஆர். திரையரங்கிற்கு வந்த மிரட்டல் தொலைபேசி அழைப்புகளால் படத்தைத் தொடர்ந்து திரையிட முடியாது எனத் திரையரங்க நிர்வாகம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, மாற்றுச் சி…

    • 13 replies
    • 2.4k views
  18. மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைகள் தமிழர்களுக்கு நன்மை தருமா? - நிலாந்தன் 06 ஜூலை 2014 ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரது விசாரணைக்குழு அமைக்கப்பட்டுவிட்டது. சாதாரண தமிழ்ப் பொதுசனம் நம்புவது போல இது அதன் பரந்தகன்ற பொருளில் ஒரு சக்திமிக்க முழுமையான அனைத்துலக விசாரணைக் குழு அல்ல. ஆனால், இலங்கை அரசாங்கம் வெளியில் காட்டிக் கொள்வதைப் போல புறக்கணிக்கத்தக்கதும் அல்ல. இவை இரண்டுக்கும் இடையில் தானிருக்கிறது அதன் முக்கியத்துவம். அரசாங்கம் விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறுகிறது. நாட்டுக்குள்ளிருந்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பவர்களுக்குக் குறிப்பாகச் சாட்சிகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்பதும், ஏற்கனவே, அரச தரப்புப் பிரதானிகளால் நேரடியாகவும் மறைமுக…

  19. தமிழ் – முஸ்லிம் இணைவு அரசியலும், கற்பனாவாதமும் - யதீந்திரா சமீப நாட்களாக தமிழ் எழுத்தாளர்கள் பலர், தங்கள் உளக்கிடக்கைகளை பத்தி எழுத்துக்களாகவும், இணையவெளி உரையாடல்களாகவும் சிதறவிட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. தெற்கில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டமையை அடியொற்றியே, இவ்வாறான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அவ்வாறான எழுத்தாளர்கள், தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடும் காலம் வந்துவிட்டதாக வேறு, சொல்லிவருகின்றனர். அது உண்மைதானா என்று நோக்குவதுதான் இப்பத்தியின் நோக்கம். முதலில் தற்போது எழுந்திருக்கும் சிங்கள – முஸ்லிம் முரண்பாட்டின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. முஸ்லிம்கள் தொடர்பான அதிருப்தியென்பது பலரும் நோக்குவது போன்று ஒரு புதிய விவகாரம் அல…

  20. தற்போது கடல்வழியாக அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவுக்குள் உட்புக முயன்ற தமிழ் அகதிகளின் படகுகள் வழிமறிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட சிலர் இலங்கைக் கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டும், மற்றையவர்களின் கதி என்னவென்று தெரியாத நிலையும் உள்ளது. இக் கருத்துக்கணிப்பு அவுஸ்திரேலிய அரசின் நடவடிக்கைகள் பற்றிய தமிழர்களின் நிலைப்பாட்டை அறிய உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஞாயிறு வரை வாக்களிக்க முடியும் : http://www.yarl.com வாக்களித்த பின்னர் அதன் பெறுபேறுகளைக் இங்கு காணலாம். http://www.yarl.com/node/8093 ஏற்கனவே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளை இந்த இணைப்பில் பார்வையிடலாம். http://www.yarl.com/poll

  21. காணாமல்போன "மலேசியன் விமானத்தைதேட" அவுஸ்திரேலியா 600 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது பெரும் சர்ச்சையை அண்மைகாலத்தில் அவுதிரேலிய மக்களிடம் ஏற்படுத்தியது. தன்னை ஒரு மனிதாபிமான நாடாக காட்டிக்கொள்ளவே அவுஸ்திரேலியா அவ்வாறு பணத்தை வாரி இறைத்தது எனவும் தனது கடற்படையையும் விமானப்படையையும் உதவிக்கு அனுப்பியது என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கருத்து. எது எவ்வாறெனினும் உலக நாடுகள் ஓடிப்பொய் மலேசியாவுக்கு உதவும் போது அவுஸ்திரேலியாவும் தன் பங்குக்கு செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் கொஞ்சம் "ஓவராகத்தான்" அவுஸ்திரேலியா தன் பங்கை செய்கிறதோ என ஒரு சிறு சலசலப்பு இங்கு எழவே செய்கிறது. ஏனெனில் அண்மைக்காலமாக "அகதிகள் " விவகாரத்தில் மிகக்கடும்போக்கை தற்போதைய அரசாங்கம் எடுத்துவருக…

    • 19 replies
    • 1.8k views
  22. ''ஆயிரம் சமர்களின் ஜெயிப்பதை விடவும் உன்னை நீயே ஜெயிப்பது சிறந்தது. அந்த வெற்றி உனக்கே உரியது. அதை உன்னிடமிருந்து யாரும் எடுக்க முடியாது. தேவதைகளாலோ அல்லது அசுரர்களாலோ அல்லது சொர்க்கத்தாலோ அல்லது நரகத்தாலோ அதை உன்னிடமிருந்து எடுக்க முடியாது' -புத்தர் - மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தில் தமிழர்கள் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டிருந்தது. ஆனால், சிறுபான்மை மதங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து அதில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. அத்தீர்மானத்துக்கமைய மனித உரிமைகள் ஆணையாளரது விசாரணைப் பொறிமுறை ஒன்றிற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன. ஓர் அனைத்துலகத் தீர்மானத்தில் அப்படி சிறுபான்மை மதங்கள் மீதான தாக்குதல்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில்…

    • 0 replies
    • 703 views
  23. இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள்: உண்மையில் இங்கு என்ன நடக்கிறது? எல்.சிவலிங்கம் இலங்கையில் கலவரம் என்பது முதன் முதலில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலோ அல்லது சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலோ நடக்கவில்லை. 1883 ஆம் ஆண்டு கொழும்பு கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற முதல் கலவரமானது சிங்கள பௌத்தர்களுக்கும் சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் இடையிலேயே இடம்பெற்றது. அதன் பின்பு அனகாரிக தர்மபால போன்ற சிங்கள மதக் கடும்போக்குவாதிகள் நன்கு திட்டமிட்ட வகையில் சிங்கள பௌத்தத்தினை முன்னிறுத்திய அதேவேளை, சிங்கவர்களிடையே ஒற்றுமையினை ஏற்படுத்திய வண்ணம், பெரும்பான்மை சிங்களவர்களிடையே சிறுபான்மை மக்களுக்கு எதிரான கடும்போக்குவாதத்தினை மிகக் கச்சிதமாக உருவாக்கினார்கள். கொட்…

  24. இலங்கையின் பயங்கரவாதத்துக்கு பலிக்கடா தமிழீழ விடுதலைப் புலிகள்' என்ற தலைப்பில் மூத்த ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸநாயகம் 'FB' என்ற சஞ்சிகையில் ஆங்கிலத்தில் வரைந்த கட்டுரையின் தமிழாக்கம் இது. இலங்கையில் தமிழர்களின் அரசியல் நிலைவரங்களை அம்பலப்படுத்தும் கட்டுரைகளை வரைந்தமைக்காக இருபது ஆண்டு காலச் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் திஸநாயகம் 2010 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் வாஷிங்டனில் அஞ்ஞாதவாசம் புரிந்துவருகின்றார். தமிழாக்கம் :- வி.சிவராம். தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் துணைத் தூதரகங்களைத் தாக்கும் இலக்குடன் சதித்திட்டங்களில் ஈடுபட்டிருந்தனர் என்று கருதப்படும் இலங்கையர் இருவர் இந்தியாவிலும் மலேசியாவிலும் அண்மையில் கைதுசெய்யப்பட்டமையை அடுத்து, இந்தியாவைத…

    • 0 replies
    • 488 views
  25. உலக வல்லாதிக்க நாடுகளின் கண்களில் பல தலைமுறைகளாக பல்வேறு காரணங்களால் உறுத்திக்கொண்டிருக்கும் இலங்கைத்தீவின் சுகந்திரத்தோடு ஆரம்பிக்கும் இனவாத வரலாற்றை நோக்கினால், உள்ளெரியும் இனமுரண்பாடுகள் ஊதி பெருப்பிக்கப்பட்டு கொழுந்துவிட்டுப் பரவும் காலப்பகுதியாகவும், முழு இலங்கைத்தீவும் பதற்றத்துடன் அணுகும் காலமாகவும் யூன் யூலை ஆகஸ்ட் மாதங்களே தொடர்ந்தும் இருந்து வந்துள்ளதை அவதானிக்கலாம். இனமுரண்பாடு கூர்மையடையக் காரணமான தனிச் சிங்களச்சட்டமும் (02.06.1956)சரி முழு இலங்கையையும் கலங்கவைத்த வெலிக்கடைப் படுகொலைகளும் சரி அண்மைய தர்க்கா நகர் அளுத்தகம மத வன்முறைகளும் சரி இந்தக் காலப்பகுதியில் தான் நடந்தேறியிருக்கிறது. மற்றைய காலங்களில் ஓரளவு இனமுரண்பாடுகள் நிகழ்ந்தாலும், இந்த மாதங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.