Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மத்திய இந்தியாவின் தண்டகாரன்யா காடுகளில் இருக்கும் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களிடம் விற்பதை எதிர்த்து பழங்குடி மக்கள் வில், அம்புடன் வீரத்துடன் போரிட்டுக் கொண்டிருக்க, அறிவுலகில் தன்னந்தனியாக நின்று போராடிக் கொண்டிருக்கிறார் அருந்ததி ராய். ‘ஆபரேஷன் பசுமை வேட்டை’ என்ற பழங்குடி மக்களுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை மிகக் கடுமையாக எதிர்க்கும் அருந்ததி ராய் தண்டகாரன்யா காடுகளுக்குள் நேரடியாக சென்றுவந்தார். பிரதமரும், உள்துறை அமைச்சரும் ‘இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சக்தி’ என மாவோயிஸ்ட்டுகளை வர்ணித்துக் கொண்டிருக்க, அருந்தி ராயோ அந்த அச்சுறுத்தம் சக்திகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியை நேரடியாக சென்று பார்த்து வந்திருக்கிறார். ஆபரேஷன் பசும…

  2. 1966 ஆம் ஆண்டு, அக்டோபர் 8 ஆம் நாள். ஒட்டிய கன்னத்துடன், தாடியுடன், முகமெல்லாம் சோர்வுடன், ரத்தம் வடிவ வடிய நின்று கொண்டிருக்கிறார். காலில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருக்கின்றன. ராணுவத்தினர் அவரைச் சுற்றி வளைத்து விட்டனர். ஒரு பள்ளிக் கூடத்தின் அறையில் அவரை சிறை வைக்கின்றனர். அது ஒரு அசுத்தமான அறை. அறையின் ஒரு ஓரத்தில் படுக்க வைத்திருந்தார்கள். அவரது கைகள் பின்புறம் கட்டப்பட்டிருக்கின்றன. பரட்டைத் தலை. பிய்ந்து போன காலனிகள். அழுக்கேறிய உடைகள். சே அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையும், பள்ளிக் கூடமும் அந்த அறைக்குள் நுழைகிறார் ஜீலியா கோர்ட்ஸ். இவர் அந்தப் பள்ளியின் ஆசிரியர். சங்கிலியால் கைகள் கட்டப்பட்டுப் படுத்துக் கிடந்த அவ்வீரன் மெ…

  3. 8884 சதுரகிலோமீற்றர் பரப்பளவான வடக்கு மாகாணத்தில் உள்ள 300 கிலோமீற்றர் நீளமுள்ள கிளிநொச்சி – முல்லைதீவு கரையோரத்தின் இரண்டு பக்கத்திலும் அரைவாசி எரிந்த நிலையிலுள்ள பனைமரங்கள், கூரைகளற்ற வீடுகள், குண்டுகள் துளைக்கப்பட்ட கட்டடங்கள், சேதமாக்கப்பட்ட வாகனங்கள் போன்ற பல்வேறு காட்சிகளைக் காணமுடியும். இவ்வாறு இந்தியாவில் இருந்து வெளியாகும் The Week சஞ்சிகைக்காக Lakshmi Subramanian எழுதிய கட்டுரையில் தெரிவித்தள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாதி. நளாயினி பெரும்பாலான நாட்களில் வீறிட்டுக் கத்தியவாறே கண்விழிக்கிறார். இவரைப் பாதிக்கின்ற அந்தச் சம்பவம் இடம்பெற்று நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட, நளாயினி பயங்கரக் கனவுகளால் பாதிக்கபட்டுள்ளார். இவரது …

  4. சர்வதேச அழுத்தங்களை குறைக்க தேர்தல் வெற்றியை காண்பிக்க முயற்சி:- -அ.நிக்ஸன்- 06 ஜனவரி 2014 எதிர்க்கட்சிகளில் செல்வாக்கு உள்ளவர்களை அரசாங்கத்த்தின் பக்கம் எடுக்கும் நடவடிக்கைகள் தீவிரம். அமரர் ஜே.ஆர்.ஜயவாத்தன இனப்பிரச்சினையை மையாகக் கொண்டு இனரீதியான கண்ணேட்டத்தில் சட்டங்களை உருவாக்கினார். ஆனால் அந்த சட்டங்கள் சிங்கள அரசியல் கட்சிகளுக்கும் சிங்கள மக்களின் ஜனநாயகத்துக்கும் தற்போது இடையூறாக மாறிவிட்டது. அதனை எதிர்த்து வெகுஜன போராட்டங்களை ஆரம்;பிக்கும் தகுதியை இடதுசாரிகளும் இழந்துவிட்டன. தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறை மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகளிடையேயும் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால் அது அரசாங்கத்துக்கு வாய்ப்பாக அமை…

  5. இலங்கை அரச படைகளுக்கும் அமெரிக்கப் படைத்துறைக்கும் இடையே நிறுவனம் சார்ந்த இறுக்கமான, தொழில் முறை உறவுகள் உள்ளன. இவற்றின் பல அம்சங்கள் வெளியே தெரிந்தவை பல அம்சங்கள் இரகசியமானவை. இலங்கைக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளுக்கு நீண்ட வரலாறு உள்ளது. 1951ம் ஆண்டு அமெரிகக்காவின் 'குரல' (Voice of America) வானொலி நிகழ்ச்சிகளைத் தென்னாசியப் பகுதிகளுக்கு ஒலிபரப்பும் அஞ்சல் நிலையமொன்றை இலங்கையில் அமைபப்தற்கு உடன்பாடு ஏற்பட்டது. பிற்பாடு 1983ல் ஜே.ஆர். ஜயவர்த்தன அதிபராக இருந்தபோது 500 ஏக்கர் நிலத்தை இந்த வானொலி நிலையத்தை விரிவுபடுத்துவ தற்காக வழங்கினார். தென்னாசியாவிலேயே மிகப் பெரிய அமெரிக்க நிலையமாக இது அமைநத்து. அக்காலகடட்டத்தில் நுண் அதிர்வு அலைவரிசைகளை (Low Fre…

  6. இந்த மக்கள் தீர்ப்பாயத்தில் இனப் படுகொலை தொடர்பான எனது கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைக்க வாய்ப்பு வழங்கியமைக்கு எனது மனமார்ந்த நன்றி. என்னுடைய வாதங்களின் மையப்பொருள், சமூகவியலாளர்களும் மானுடவியலாளர்களும், இனப்படுகொலை என்றால் என்ன எத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள்? இந்த எண்ணங்கள் எவ்வகையில் ஈழத் தமிழ் இனப்படுகொலையை 'இனப்படுகொலை' என வரையறை செய்ய உதவக்கூடும்? என்ற இரு கேள்விகளையும் ஒட்டியதாக அமைந்துள்ளது. மூன்று வௌ;வேறான, ஆனால் தமக்குள் இணகக் மான உறவுகளைக் கொணடி;ருக்கும் தளங்களிலிருந்து என்னுடைய பார்வையையும் வாதங்களையும் முன்வைக்கிறேன். முதலாவது தளம் ஊடகவியலாளர் என்பது. 1984 – 1987 வரை முழுநேரப் பத்திரிகை யாளனாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான Saturday Review எ…

    • 7 replies
    • 867 views
  7. தமிழ்மக்களுக்குள்ள தெரிவு மாற்று அரசியலும், மாற்று அரசியல் இயக்கமுமே! சி.அ.யோதிலிங்கம் நேர்காணல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சிச் சபைகளில் வரவு - செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படுவது பற்றி? அண்மைக்காலமாக அடுத்தடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்தில் இருக்கும் உள்ளூராட்சிச் சபைகளில் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டு வருகின்றது. வடக்கில் ஆரம்பமான இப்போக்கு கிழக்கிலும் மிகவேகமாக பரவத் தொடங்கியுள்ளது. வடக்கில் வலி-கிழக்குப் பிரதேச சபையிலும், வல்வெட்டித்துறை நகரசபையிலும் வரவு-செலவுத்திட்டம் முதலில் தோற்கடிக்கப்பட்டது. இந்தக் காய்ச்சல் கிழக்கிற்குப் பரவியபோது, அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேசசபையிலும், காரைதீவு பிரதேசசபையிலும், திருக்கோணமலை …

  8. எதிர்வரும் சனவரி 20 இல் இலங்கை - இந்திய நாட்டு மீனவர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இதில் இலங்கை இலங்கைக் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் இராஜித சேனாரத்தின கலந்து கொள்ள இருக்கிறார். நீண்ட காலமாக இந்த இருதரப்புப் பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும் எனப் பேசப்பட்டு வந்தாலும் இப்போதுதான் அது சாத்தியமாகியுள்ளது. இலங்கையின் கடல் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர். இந்தக் கைதுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இலங்கைச் சிறைகளில் 271 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் சொந்தமான 78 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. புத்தாண்டு முதல்நாள் மட்டும் இராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இ…

  9. களவு போய்க் கொண்டிருக்கும் தாய் நிலங்கள். கோ.நாதன்:- 05 ஜனவரி 2014 வட, கிழக்கில் உள்ள தமிழ்க் கிராமங்கள் ஒவ்வொன்றும் மிகவும் துரிதமாக பறி போய்க் கொண்டிருக்கின்றன. நிலங்கள் வாங்குதல் அல்லது பூர்விக நிலத்தைப் பெறுதல் என்ற பெயரில் நாட்டின் அத்தனை பகுதிகளிலிருந்தும் இன்னுமொரு இனம் படை படையாக வந்து இறங்கிக் கொண்டிருக்கின்றது. தமிழ் நிலங்களை எல்லாம் அபகரித்தும், அபகரித்திக் கொண்டும் இருக்கின்றார்கள். பல சந்தர்ப்பங்களில் மக்களை ஏமாற்றி வழக்கு தொடுத்து அக்காணிகளுக்கு உரிமை நகல் பத்திரங்களை தயாரித்து அபகரிக்கின்றார்கள். பலவந்த முறையில் ஆயுதங்களால் பயம் காட்டி கட்டாய முறையில் காணிகளிலிருந்து எழுப்புகின்றார்கள. எந்த சக்தியிடம் அதிகாரம் இருக்கின்றதோ அந்த சக்தி பலாத்கார …

  10. புதிய ஆண்டு தமிழர்களுக்கு - எதைக் கொண்டு வரும்? நிலாந்தன்:- 05 ஜனவரி 2014 கடந்த மாதம் அதாவது, கடந்த ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு கட்சியின் தலைவரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர் சொன்னார்... அண்மையில் அவர் இலங்கைக்கான ஐரோப்பிய நாடு ஒன்றின் தூதரகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரைச் சந்தித்தபோது, அவர் சொன்னாராம், ''இன்றும் சில தமிழ் விசாக் கோரிக்கைகளில் கையொப்பமிட்டேன்' என்று. அதற்கு இவர் கேட்டாராம், ஒவ்வொரு மாதமும் எத்தனை பேருக்கு இப்படி கையொப்பமிடுகிறீர்கள் என்று, அதற்கு அவர் சொன்னாராம், சுமாராக 10இற்கும் குறையாது என்று. இத்தகவலைச் சொன்ன மேற்படி கட்சித் தலைவர் மேலும் சொன்னார்... ''கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களிற்கூடாக ஆண்டுதோறும் தோறும் …

  11. மிக அண்மைக் காலத்தில் வடக்கு அரசியல் அரங்கில் மிகுந்த வாதப்பிரதிவாதங்களை உருவாக்கி இருக்கும் சம்பவங்கள் என்று நோக்கினால் ஒன்று இரணைமடு நீர்ப் பங்கீடு, இரண்டாவது வல்வெட்டித்துறை நகரசபையின் நடப்பாண்டு வரவு செலவுத்திட்ட சமர்ப்பிப்பு. இவை இரண்டும் ஒரே நேர்கோட்டில் இயங்குகின்ற நிலைமையை ஆழந்து நோக்குபவர்கள் அறிந்து கொள்ளலாம். பாதிக்கப்பட்ட இனத்தின் விடுதலையும், நிவாரணமும், இருத்தலும் என்ற கோசங்களை முன் வைத்து மக்களிடம் வாக்கு கேட்ட வேட்பாளர்கள், மக்களின் அபிலாசைகளை தூண்டி அதனூடாக வென்ற பின் சராசரி மனிதர்களைவிட கேவலமாக மாறி, பதவி அதிகாரங்களை கையகப்படுத்தும் ஒரு கேவலமான நிலைமைக்கு தங்களை உற்படுத்திக் கொண்டுளார்கள் எனலாம். இந்த நிலை பாரளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் உள்…

  12. முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு அரசியலும், இடிப்பு அரசியலும் ஷண்முகசுந்தரம் ஒருமுறை ஐயா நல்லக்கண்ணுவுடன் முள்ளி வாய்க்கால் நினைவுமுற்றம் செதுக்க ஆரம்பிக்கப் பட்ட ஆரம்ப நாட்களில் அதனைப் பார்வையிடச் சென்றிருந்தேன். தமிழ்ப்பாவை சிலைக்கு நீளமான ஒற்றைக்கல் வந்தநேரம் அது. மற்ற சிற்பங்களுக்கும் கூட பொருத்தமான கற்கள் வந்து கொண்டிருந்தன. அக்கற்களைத்தேடி நீண்ட தொலைவு சென்று வந்தது பற்றியும், கற்களின் தன்மையைப் பற்றியும், அது எப்படி கொண்டுவரப்பட்டது என்பது பற்றியும் அங்கு பணிபுரிந்து வந்த தோழர்கள் சொல்லக்கேட்டு பிரமித்து நின்றோம். அவ்விடத்தில் ஏராளமான தேர்ந்த சிற்பிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். உளிச்சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டே இருந்தன. மகேந்திரவர்மப் பல…

    • 1 reply
    • 3.4k views
  13. கட்டப்பட்ட ஆடுகள் தீபச்செல்வன் ‘திவயின’பௌத்த சிங்களக் கடும் போக்குப் பத்திரிகை. சிங்களப் பேரினவாதிகளின் உளவியலையே அந்தப் பத்திரிகை எப்பொழுதும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். குறிப்பாக, தமிழகத்தின் மீதும் புலம்பெயர்ந்த மக்கள் தொடர்பிலும் எப்பொழுதும் அதற்குக் கடும் பயம். விடுதலைப் புலிகள் தொடர்பிலும் அது பல வகையான பயங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். சிங்கள இனவாத ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்துவதும் சிங்கள மக்களிடத்தில் சிங்கள இனவாதத்தை ஊட்டுவதும் அந்தப் பத்திரிகையின் முதன்மையான பணி. ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பான விடயங்களை எல்லாம் பயங்கரவாதம் என்கிற பெயரில் மாற்றி சித்தரிக்கும் நடவடிக்கையை அது எப்பொழுதும் செய்வதுண்டு. அந்தப் பத்திரிகையில் பாதுகாப்புப் பத்தி என்…

  14. சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் இவ்வாறான அழுத்தங்களைத் தட்டிக்கழித்தால், வரும் மார்ச்சில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் மிகக் கடுமையான நிலையை எதிர்நோக்க வேண்டிவரும் என பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இவ்வாறு IPS Inter Press Service செய்தி நிறுவனத்திற்காக ஆய்வாளர் Amantha Perera எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அந்த ஆய்வின் முழுவிபரமாவது: கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமானது டிசம்பர் 20 அன்று, மறைந்த முன்னாள் தென்னாபிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவை நினைவுகூரும் முகமாக சந்திப்பொன்றை ஒழுங்குபடுத்தியிருந்தது. இந்த நினைவு வணக்க நிகழ்வில் மறைந்த நெல்சன் மண்டே…

  15. யாழ்ப்பாணம், கொழும்பில் இருந்து லக்ஸ்மி சுப்ரமணியன் சிறிலங்கன் எயர்லைன்சின் சென்னை-கொழும்பு விமான சேவை தொடக்கம், சிறிலங்காவின் தலைநகரிலுள்ள சனத்தொகை நிரம்பிய தெருக்கள் வரை, தற்போது சிறிலங்காவில் பல்வேறு மாற்றங்களைக் காணமுடியும். 1975ல் தமிழீழ விடுதலைப் புலிகள் தனிநாடு கோரிப் போராடத் தொடங்கிய காலத்திலிருந்து தொடரப்பட்ட உள்நாட்டுப் போரானது முடிவுக்கு வரும்வரை சிறிலங்காவானது பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்தது. ஆனால் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் தற்போது சிறிலங்காவில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறிலங்காவின் நகரங்களைத் தாண்டி அதற்கப்பால் இலங்கையர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் மற்றும் துயரங்கள் வேறுபட்டவை. 'நாங்கள் எமது சொந்த நாட்டை விட தம…

  16. ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக இரண்டு தீர்மானங்களை முன்வைக்க ஏற்பாடு? -அ.நிக்ஸன்- 30 டிசம்பர் 2013 சர்வதேச அழுத்தம் என்பது அரசாங்கத்துக்கு அவ்வப்போது சிறிய அச்சத்தை ஏற்படுத்தினாலும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான கருவியாக அமைந்து விடுகின்றன. சிங்கள பௌத்த தேசியவாத வளர்ச்சிக்கும் வலுச்சேர்க்கின்றன. அதன் காரணமாக சஜித் பிரேமதாசாவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைச் சபையின் பொறுப்பை பௌத்த தேரர்கள் எற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையை எதிர்கொள்ள அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைககள் தீவிரமடைந்து வருகின்றன. வெளியுறவு அமைச்சுக்கும் மனித உரிமைகள் அமைச்சுக்கும் ஜனாதிபதி கடும் உத்தரவுகளை பிறப்ப…

  17. கட்டுப்பாடுகளை மீறுகின்றனரா தமிழ் அகதிகள்.. இலங்கை தமிழர் முகாம் பற்றிய ஆய்வு.... ஈழத்தில் இருந்து இடப்பெயர்வினை மேற்கொண்டு 29 ஆண்டுகளை தொடுகின்றது எம்மினம்.. இன்னும் 100 க்கு மேற்பட்ட தமிழக முகாம்களில் சுமார் ஒரு லட்சம் ஈழத்தமிழ் அகதிகள் வாழ்ந்து வருகின்றனர், 1983, 1990, 2006 என மூன்று பெரிய காலகட்டங்களின் போது இடம் பெயர்ந்த இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நாம் ஏன் இங்கு இருக்கின்றோம் என்பதே தெரியாதவர்கள் 25வயதுக்குக்கு உட்பட்ட பலர் சொந்த மண்ணின் வாசனை தெரியாதவர்கள். தமிழகத்தில் அகதியாக வரும் ஈழத் தமிழர்கள் ஈழத்தின் இறுதிக் கட்ட போர் முடிவு வரைக்கும் தாம் தாயகத்துக்கு மீண்டும் செல்வோம் அங்கு சொந்த நிலங்களில் குடியேறுவோம் என்ற நம்பிக்கையினை மனதி…

    • 0 replies
    • 2.5k views
  18. நெல்சன் மண்டெலாவின் அரசியல் வாழ்வும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களும் முத்துக்குமார் கறுப்பின மக்களின் மாபெரும் ஆளுமையாக விளங்கிய நெல்சன் மண்டெலா அமரராகிவிட்டார். பிறப்பவர் அனைவரும் இறப்பவர்களே என்பது உண்மையாயினும் நெல்சன் மண்டெலாவின் இறப்பு உலகெங்கும் வாழும் அடக்கப்பட்ட மக்களுக்கு பேரிழப்பே. அவர் அடக்கப்பட்ட மக்களுக்குரிய விடுதலையின் ஒரு சின்னமாக இருந்ததே இதற்கு காரணம். அடக்கப்பட்ட மக்கள் மீது அளவில்லாத பற்றுதல், தெளிவான இலக்கு, உறுதியான கொள்கைகள், அர்ப்பணிப்பு, அரசியல் தெளிவு, இராஜதந்திரம், பதவியில் நாட்டமின்மை - இதெல்லாம் இணைந்து மண்டெலாவின் ஆளுமைக்கு மெருகூட்டியுள்ளன. ஈழத் தமிழர்களாகிய நாம் நீண்ட வரலாற்று ரீதியான ஒடுக்கு முறைக்கு உட்பட்டவர்கள். பேரினவாத …

  19. தமிழர் அரசியல், வடக்கின் அரசியலாக சுருங்கிச் செல்கிறதா? - யதீந்திரா இப்படியொரு கட்டுரை எழுதுவது குறித்து யோசித்துக் கொண்டிருந்தபோது, நீண்ட காலத்திற்கு முன்னர் காலம்சென்ற இராணுவ ஆய்வாளரும் நண்பருமான, டி.சிவராம் (தராக்கி) எழுதிய கட்டுரை ஒன்றே நினைவுக்கு வந்தது. அந்தக் கட்டுரை, விடுதலைப்புலிகளின் 'முதலில் யாழ்ப்பாணம்' என்னும் கொள்கை (The LTTE's 'Jaffna First' policy) என்னும் தலைப்பில் வெளிவந்திருந்தது. மேற்படி கட்டுரை, 'புலிகளின் ஆதரவாளர்' என்னும் முத்திரையற்ற காலத்தில் சிவராமால் எழுதப்பட்ட ஒன்றாகும். அது முற்றிலும் இராணுவ தந்திரோபாயத்தை முன்னிறுத்தி எழுதப்பட்ட ஒன்று. ஆனால் இக்கட்டுரை வடக்கு மாகாணசபை கூட்டமைப்பால் வெற்றிகொள்ளப்பட்ட பின்புலத்தில் நிகழ்ந்து வரும் சில விடயங்க…

  20. இரணைமடு நீர்: யாருக்கு யாரால் யாருக்காக? நிலாந்தன்:- 29 டிசம்பர் 2013 கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிற்கு முன்பு யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் சில இளைஞர்கள் வீடு வீடாகச் சென்று ஒரு கணக்கெடுப்பு நடத்தினார்கள். அதில் இரணைமடுத் தண்ணீர் உங்களுக்கு வேண்டுமா? இல்லையா? என்று கேட்கப்பட்டது. இது நடந்து சில நாட்களுக்குப் பின் ஒரு மூத்த பிரஜை என்னிடம் கேட்டார், ''யாழ்ப்பாணத்தில் யார் இரணைமடு நீரைக் கேட்டது' எங்களைக் கேட்காமலே முடிவுகளை எடுத்துவிட்டு இப்பொழுது ஏன் கணக்கெடுப்பு நடாத்தப்படுகின்றது? யாழ்ப்பாணத்திற்கு நீர் தேவைதான். ஆனால், அது இரணைமடு நீராகத்தான் இருக்கவேண்டும் என்று யார் கேட்டது? என்று... இதையே தான் மறுவளமாக கிளிநொச்சி விவசாயிகளும் கேட்கிறார்கள். ''எங்களைக…

  21. இந்தியாவானது தென்னாசியாவின் மையமாக விளங்குகிறது. இந்தியாவின் உள்ளகப் பாதுகாப்பிற்கு எழும் அச்சுறுத்தலானது இந்திய மாக்கடல் பிராந்தியத்திற்கே அச்சுறுத்தலாக எழும் என்கின்ற நியாயத்தை இந்தியா கவனத்திற் கொள்ள வேண்டும். இவ்வாறு இந்தியாவின் முன்நாள் வெளியுறவுச் செயலரான நிருபமா ராவ் தனது உரையொன்றில் தெரிவித்துள்ளார். 'த இந்து' ஆங்கில நாளேட்டில் வெளிவந்த அந்த உரையை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. பொருளாதார விவகாரங்களைப் பொறுத்தளவில் பூகோள மூலோபாய விவகாரங்களில் ஏற்பட்டுள்ள துரித மாற்றங்கள் இந்தியாவிற்கும் பசுபிக் சமுத்திர நாடுகளுக்கும் முக்கியமானதாக உள்ளன. இந்த மாற்றங்கள் இந்தியாவின் தென்னாசியாவிலுள்ள அயல்நாடுகளும் வளைகுடாப் பிராந்திய நாடுகளும் தமக்கான கொள்…

  22. காமினி பாஸ் தவறு செய்துவிட்டார் சரிநிகர் இதழில் என். சரவணன் எழுதிய பிரேமாவதி மன்னம்பேரி குறித்த கட்டுரையொன்றை பல வருடங்களுக்கு முன்பு நான் படித்திருக்கின்றேன். அந்தக் கட்டுரையின் விபரங்கள் இப்போது எனக்குத் தெளிவாக ஞாபகமில்லை என்றாலும் மன்னம்பேரி மரணிப்பதற்கு முன்பு சொன்ன அவருடைய இறுதிச் சொற்கள் மட்டும் என் நெஞ்சில் இப்போதும் அழியாமலுள்ளன. கதிர்காமத்தைச் சேர்ந்த 22 வயது இளம் பெண்ணான மன்னம்பேரி, ஜே.வி.பியினர் நடந்திய 1971 ஏப்ரல் கிளர்ச்சியில் பங்கெடுத்தவர். கிளர்ச்சி தோற்கடிக்கப்பட்டதன் பின்பாக அரசபடையினரால் கைது செய்யப்பட்டு, வதைக்கப்பட்டு, வல்லாங்கு செய்யப்பட்டு மன்னம்பேரி சுட்டுக் கொல்லப்பட்டபோது மரணத்தறுவாயில் அவர் சொன்ன சொற்கள்: “காமினி பாஸ் தவறு செய்துவிட்டார…

  23. 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் மீது நடந்துகொண்டிருக்கும் இன அழிப்பை யேர்மனியில் நடைபெற்ற தீர்பாயத்தில் ஆராய்ந்து உண்மைத்தன்மையுடன் தீர்ப்பு வெளிவந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நெற் இணையத்துக்கு மே 17 இயக்கத்தின் திருமுருகன் அவர்கள் வழங்கிய செவ்வி. http://www.youtube.com/watch?v=QMxZS7QewyA&feature=player_embedded http://www.sankathi24.com/news/36738/64/17/d,fullart.aspx http://www.youtube.com/watch?v=QMxZS7QewyA&feature=player_embedded

  24. மீண்டும் இலங்கை அரசியலை சர்வதேச பரப்பில் பேசுபொருளாக்கிய கொமன்வெல்த் 2013 - யதீந்திரா இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெற்றுவரும் கொமன்வெல்த் மகாநாடு, இறுதியாக 2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, அடுத்த மகாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கான யோசனை சில விவாதங்களின் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், இந்த யோசனையை முன்மொழிந்த நாடு இந்தியா என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய விடயம். சர்வதேச பரப்பில், இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்த நிலையில்தான், கொமன்வெல்த் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான ஆலோசனையை இந்தியா முன்வைத்திருக்கிறது என்பதையும், மேற்படி கூற்றோடு இணைத்து வாசிப்பது அவசியம். அதே இந்தி…

  25. எழுச்சித் தலைவர் யாசர் அரபாத்! எம். தமிமுன் அன்சாரி பாலைவன சிங்கமாய் வலம்வந்த யாசர் அரபாத் ஒரு வரலாற்று நாயகர்! அவர் உலகெங்கும் நடைபெற்று வரும் விடுதலைப் போராட்டங்களின் குறியீடாய் திகழ்பவர்! அகதிகளாய்த் திரிந்த யூதர்கள் குடியேறிகளாய் புகுந்து; பாலஸ்தீனத்தைப் பிளந்து; இஸ்ரேலை உருவாக்கிய போது உலகமே பதறியது. அமெரிக்காவும், இங்கிலாந்தும் செய்த தொலைநோக்கு சதிகளில் ஒன்றுதான் இஸ்ரேல் எனும் ‘டெஸ்ட் ட்யூட் பேபி’. இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து, சிரியா போன்ற நாடுகள் நடத்திய யுத்தங்கள் தோல்வியிலேயே முடிந்தன. சோதனையான அக்காலகட்டத்தில் அரபுகளின் நம்பிக்கை கீற்றாய், பாலஸ்தீன விடுதலை இயக்கம் (றிலிளி) தோன்றியது. வீரத்தின் விளைநிலத்தில் யாசர் அரபாத் எனும் புரட்சிகரப் போரா…

    • 0 replies
    • 3.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.