Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஐந்து கண்கள்: மானுட யாப்பின் மீறல் சேரன் 2006இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எஸ்.ஏ. - 18 வகையைச் சேர்ந்த ஏவுகணைகளையும் வேறு போர்க்கலங்களையும் வாங்க முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஈழத் தமிழ் இளைஞர்கள் மூன்று பேரை நியூயோர்க்கில் அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எஃப்பிஐ கைதுசெய்தது. ஆயுத விற்பனையாளர்களிடம்தான் போர்க்கலங்களை வாங்குகிறோம் என அவர்கள் எண்ணியிருந்தார்கள். ஆனால் எஃப்பிஐ உளவாளிகள்தான் ஆயுத விற்பனையாளர்கள் போலத் தொழிற்பட்டு அந்த இளைஞர்களைச் சிக்கவைத்துவிட்டார்கள். பிற்பாடு, வேறு இரு ஈழத் தமிழ் இளைஞர்களும் ‘பயங்கரவாதம்’ பரவ உதவிசெய்தார்கள் எனக் கூறியும் கனடிய அரசால் கைதுசெய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். எல்லா இளைஞர்களும் கனடியக் குடி…

  2. விக்கினேஸ்வரனை முதலமைச்சராக்கிப் பார்க்கும் சம்பந்தனின் கனவு யாருடையது? (ஆதாரங்களுடன் சிறப்பாய்வு) ஞாயிற்றுக்கிழமை, ஆடி 14, 2013 1:48 pm வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு சார்பில் போட்டியிரும் வேட்பாளரைத் தெரிவு செய்யும் முயற்சி கடும் சர்ச்சைகளுக்குள்ளாகியுள்ளது. சட்ட அறிவுடைய ஒருவரே வடக்கு முதல்வராக வரவேண்டும் என்ற தலைவர் சம்பந்தனின் விருப்பமும், வடக்கை சேர்ந்த ஒருவரே முதலமைச்சராக வரவேண்டும் என்று கட்சியிலுள்ள வடபகுதியைச் சேர்ந்தவர்களின் விருப்பமும் மோதி்க் கொள்வதால் இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் நேற்று வரையில் மூன்று தடவைகள் கூடிய போதும் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரைக் கட்சி உறுப்பினர்களால் தெரிவுசெய்ய முடியவில்லை. அநேகமாக நாளை அதுபற்றி…

    • 20 replies
    • 2.2k views
  3. இரண்டேநாளில் வெளுத்தது பசிலின் சாயம். - புகழேந்தி தங்கராஜ் நாலுபேருக்குத் தெரிகிறமாதிரி ஏதாவதொரு துறையில் பிரபலமாகிவிட்டால், தன் சமூகத்தைத் திரும்பிக்கூட பார்க்கமாட்டான் தமிழன். ‘உங்களுக்கு இருக்கிற பாப்புலாரிட்டிக்கு அரசியல் பற்றியெல்லாம் நீங்கள் பேசலாமா’ என்று வேப்பிலை அடித்தே ஊமையாக்கி விடுவார்கள், சுற்றியிருக்கிற பூசாரிகள். இந்தப் பொதுவான விதிக்கு, விதிவிலக்கு மாயா. இசை உலகில் தமிழனின் ஒருமுகம் ஏ.ஆர். ரஹ்மான் என்றால், இன்னொரு முகம் – எம்.ஐ.ஏ. என்கிற பெயரில் பாப் இசை உலகை அதிரவைக்கும் மாயா. ஈழச் சகோதரியான இந்த இளம் பாடகி, ‘எங்கள் மண்ணில் நடந்தது போர் அல்ல… அது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை’ என்பதை உலக அரங்கில் உரத்த குரலில் பதிவு செய்து வருபவர். எதிர்த்துக் கு…

  4. புளொட் இயக்கத்தால் தற்போது உமா மகேஸ்வரன் நினைவாக வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகிறது.உண்மையில் புளொட் அதற்கு தகுதியுடையதா?தாம் கொலைசெய்து தொலைத்த உமா மகேஸ்வரனுக்கு நினைவுதினம் இன்னமும் தேவைதான?உமா கொலையின் கதை இது, 1989 ஜூலை15 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையில் அநாதரவான நிலையில் சூட்டுக்காயங்களுடன் உமா மகேஸ்வரன் என்று அழைக்கப்பட்டட கதிர்காமர் நல்லைநாதனின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு கொழும்பு பெரியாஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டது.பின்னர் அவர் மனைவி அகிலேஸ்வரி அடையாளம் காட்டினார்.புளொட் இயக்கத்தின் தலைவரான உமா மகேஸ்வரன் உடல் எப்படி கடற்கரைக்கு வந்தது? புளொட் உறுப்பினர்கள் ஏன் தங்கள் தலைவரைத்தேடவில்லை? உமாவின் மெய்க்காப்பாளர்கள் எங்கே போனார…

    • 0 replies
    • 2.9k views
  5. மேட்டுக்குடி உறவுகளைத் துறப்பாரா விக்னேஸ்வரன்? முத்துக்குமார் இந்திய அரசின் புண்ணியத்தில் வடமாகாணத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. ஊடகங்கள் பரபரப்பாகச் செய்திகளை வெளியிடத் தொடங்கிவிட்டன. ஆனால் அரசியற் கட்சிகள்தான் இன்னமும் வேட்பாளர் பட்டியலை நிறைவு செய்யவில்லை. இது விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும், ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணிக்குள்ளும் உள் இழுபறிகள் முடிவுக்கு வரவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள கட்சிகள் சில தனித்துப் போட்டியிடுவதா? கூட்டணிச் சின்னத்தில் போட்டியிடுவதா? என இழுபறிப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கூட்டணியில் பிரதான கட்சியாக விளங்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடும் விருப்பிலேயே உள்ளது. வடமாகாணத் தேர்தல் நடைபெறலாம…

    • 4 replies
    • 1.1k views
  6. சீனா, சிறிலங்கா குறித்த மூலோபாயக் கொள்கைகளை இந்தியா மாற்ற வேண்டும் – கேணல் ஹரிகரன் [ வெள்ளிக்கிழமை, 05 யூலை 2013, 05:13 GMT ] [ நித்தியபாரதி ] சீனாவின் கடல்சார் நடவடிக்கைகள் அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் அதிகரிப்பதால் ஏற்படுகின்ற ஆபத்தை தவிர்ப்பதற்கு, சீனா மற்றும் சிறிலங்கா தொடர்பான தனது மூலோபாயக் கொள்கைகளில் இந்தியா மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். இவ்வாறு சண்டேலீடர் ஆங்கில வாரஇதழுக்கு அளித்துள்ள செவ்வியில் குறிப்பிட்டுள்ள இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரன். அவரது செவ்வியை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் 'நித்தியபாரதி'. கேள்வி: சிறிலங்காவின் தேசிய பிரச்சினையில் இந்தியா கடந்த பல பத்தாண்டுகள…

    • 7 replies
    • 927 views
  7. ஈ.பி.டி.பி கட்சியில் இருந்து விலகிய ஒருவரின் நேரடி வாக்கு மூலம். வணக்கம் மக்களா. நான் தவராசா தினேஷ் நான் இலங்கையின் வவுனியா பகுதியை சேர்ந்தவன் இப்போது மலேசியாவில் வாழ்கிறேன். நான் EPDP கட்சியில் இருந்து தப்பி ஓடியவன். அது கட்சி என்று சொல்வதைவிட நரகக்குழி என்று சொல்லலாம் அந்த அளவுக்கு மோசமான இடம். டக்ளசின் தலைமையில் மிகப்பெரும் சட்டவிரோத செயல்களே அங்கு நடைபெறுகிறது. இதில் இடம்பெறும் உறுப்பினர்கள் எல்லோரும் மிகப்பெரும் குற்றவாளிகள். நானும் அப்படியே இருந்தேன் இப்போது திருந்தி வாழ்கின்றேன். இக்கும்பலிடம் சிக்கினால் எனக்கு மரணம் தான் நான் உயிருக்கு பயப்பிடவில்லை நான் செய்த பாவங்களுக்கு தண்டனை பெறத்தானே வேண்டும் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறேன். மக்களே நான் இந்த நரகக…

    • 9 replies
    • 1.5k views
  8. தடைசெய்யப்பட்ட 'ரைம்' சஞ்சிகையும் வலுவடையும் பௌத்த தீவிரவாதமும் - பார்த்தீபன் - 10 ஜூலை 2013 உலகின் முன்னணி சஞ்சிகையான அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'ரைம்' வார இதழ் கடந்த வாரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டது. பின்னர் சஞ்சிகை தடை செய்யப்பட்டு சுமார் 4,000 பிரதிகளை சுங்கப் பகுதியினர் கைப்பற்றிக்கொண்டார்கள். சர்வதேச ரீதியில் முன்னணியிலுள்ள சஞ்சிகை ஒன்று இலங்கையில் தடைசெய்யப்படுவது இதுதான் முதல் முறை என்பதால் விவகாரம் சர்வதேச கவனத்தைப் பெற்றிருக்கின்றது. ஊடக சுதந்திரம் தொடர்பில் முக்கியமாகப் பேசப்படும் நிலையில் இந்தத் தடை, அதுவும் அமெரிக்காவின் முன்னணி சஞ்சினை ஒன்றின் மீதான தடை அனைவரின் ஊடக சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்களின் கவனத்துக்குச…

    • 1 reply
    • 453 views
  9. ஆபிரிக்காவில் பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் அடைந்த முதலாவது நாடு தென் ஆபிரிக்கா: அங்கு வாழ்ந்த வெள்ளையர்களிடம் கொடுத்ததால், 'போராட்டம் இன்றி' கொடுக்கப் பட்டது. கடைசியாக 'போராடி' பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் அடைந்தவர்கள், ரொடிசியா என அழைக்கப் பட்ட சிம்பாவே. இரு நாடுகளிலும் பெரும்பான்மையினர் கருப்பர்கள். வெள்ளை சிறுபான்மையினர் ஆட்சி பொறுப்பில் இருந்தார்கள். தாம் சிறுபான்மையினர் என்ற எண்ணம் இல்லாது, மேற்குலகம் ஆதரவு தரும் என இறுமாந்து எந்த வித சமரசமும் இன்றி, பெரும்பான்மை இனத்தவருடன் மோதி, தோற்று, பின்னர், பலவீனமான நிலையில் பேச்சு வார்த்தைக்குப் போய், வெள்ளையர் நலன்களை உறுதிப் படுத்தி பின்னர் சுதந்திரம் வழங்கி, இன்று பிரித்தானியா என்றாலே பாம்பாகச் சீ…

    • 8 replies
    • 811 views
  10. நமது தற்போதைய அரசியல் அலசல்கள் புலிகள் தவிர தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் எந்த தனிநபரோ அமைப்போ கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்ததில்லை. பேரம் பேசும் வல்லமையை வளர்த்துக்கொண்டதும் இல்லை. சிங்கள அரசுடன் பேசும் போதும் தமிழீழம் என்ற கொள்கையை விட்டு புலிகள் இறங்கியதேயில்லை. முழுப்பேச்சுமேசைகளும் அதைச்சுற்றியதாகவே இருக்கும். 'தேசிய நலனுடன் ஒத்துப்போகும் வரை உடன்படிக்கைகள் மதிக்கப்படுகின்றன" என்ற நெப்போலியனின் கூற்றையும் 'நான் எந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திட எப்போதும் தயாராக உள்ளேன். ஏனென்றால்அதை முறிக்காமல் விலக எனக்குத் தெரியும்" என்ற கிட்லரின் கொள்கையையும் பிரபாகரன் இறுகப்பற்றியபடியே பேச்சு மேசைகளில் பங்கெடுத்தார். ஆனால் அன்றும் சரி இன்றும் சரி சிங்கள அரசு…

  11. மிக மும்மரமாக, வட மாகாண சபைக்கான தேர்தல்களுக்கு முன்னர், அம்மாகான சபைகள் உருவாக வழிவகுத்த அரசியில் அமைப்பின் 13 வது சட்டத்தினையே ஒன்றுமில்லாமல் ஆக்கி, வெறும் தேர்தலை வைத்து, தமிழர்களை மட்டும் மல்லாது சர்வதேச நாடுகளையும் ஏமாத்த சகோதரர்கள் போட்ட திட்டம் இந்திய கோப சுழியில் சிக்கி சிதறி விட்டது போல் தெரிகின்றது. அவிட்டு விட்டப் பட்ட, அமைச்சரவையில் இருந்த இனவாதிகள் மீண்டும் கட்டப் படுகின்றனர். தமிழர்களுக்கு உள்ள ஒரே வழி, இந்தியாவின் உதவியுடன் வரையப் படும் இந்த சிறு கோட்டினைப் பிடித்து ரோட்டினைப் போடுவது தான். http://www.dailymirror.lk/news/32300-govt-to-proceed-with-pc-polls-under-existing-provisions-of-13th-amendment.html

    • 17 replies
    • 1.6k views
  12. அலுவலகத்தில் ஒரு நண்பர். வெள்ளையர். அமெரிக்கர். ஒரு விடயம், துல்லியமாக சொன்னார்: அசந்து போனேன். மறுக்கவோ, நிராகரிக்கவோ முடியவில்லை. உலகின் அண்மைய ஆயுத விடுதலைப் போராட்டங்களில் வெற்றி பெற்ற ஒரே ஒரு போராட்டம் எத்தியோபியாவிற்கு எதிரான எரித்திரிய மக்கள் முன்னெடுத்த போராட்டமே ஆகும். அந்த போராட்ட அமைப்பின் தலைமை ஒரு பட்டம் பெற்ற பொறியியலாளர். மிகச் சரியான முடிவுகளை மிகச் சரியான தருணங்களில் எடுத்திருந்தார். உங்கள் போராட்ட தலைமைக்கும் அந்த போராட்ட தலைமைக்கும் இருந்த மிகப் பெரிய வேறுபாடு இது ஒன்று தான் என்றார். ***** எமது இனமானது கல்வியினால் முன்னேறிய இனம். வட அமெரிகாவில், அமெரிக்க சுதந்திர பிரகடனத்துடன், முதலாவது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் வீழ, இரண்டாவது பிரிட்டிஷ் சா…

  13. TNA பகிரங்க கோரிக்கை:- யாழ்.மாநகரசபையின் ஆளும் கட்சி உறுப்பினர் விஜயகாந்த் செய்ததாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சியான கூட்டமைப்பு கோரியுள்ளது. இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிiகாயாளர் மாநாட்டில் கூட்டமைப்பின் சார்பில் அதன் மாநகரசபை அங்கத்தவர்களான விந்தன் கனகரட்ணம், பரஞ்சோதி மற்றும் ராஜதேவன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர். கூட்டமைப்பில் அமைய ஊழியர்கள் ஆட்சேர்ப்பு மற்றும்; சுகாதாரத்துறை மேம்பாடென பல மில்லியன் மோசடிகள் இடம்பெற்றுள்ளது. இவற்றின் பின்னணியில் எல்லாம் ஆளும் கட்சி உறுப்பினர் விஜயகாந்த் இருந்ததாக நாம் சந்தேகிக்கின்றோம். ஏனெனில் அவர் தன்னை அமைச்சர் டக்ளஸினது தம்பியென கூறி கட…

  14. சிறிலங்கா இராணுவத்தின் நில அபகரிப்பும் - தமிழ்மக்களின் சொத்துரிமையும் [ சனிக்கிழமை, 13 யூலை 2013, 07:22 GMT ] [ நித்தியபாரதி ] சொத்து உரிமை என்பது பலவீனமாகவும், வினைத்திறனற்றதாகவும் இருப்பதால் போருக்குப் பின்னான சூழலில் பல்வேறு பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றன. இரத்தம் சிந்தப்பட்ட நீண்ட கால யுத்தமானது முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் பொருளாதாரத்திற்கு மீளவும் புத்துணர்வு வழங்குவதில் மிகப் பாதுகாப்பான சொத்து உரிமைகள் என்பது தேவைப்பாடானதாகும். இவ்வாறான சூழலில் வாழும் பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்களுக்கு குறிப்பாக விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரமானது சொத்துப் பாதுகாத்தல் உரிமையிலும், தமது நிலங்களைப் பயன்படுத்தும் உரிமையிலுமே தங்கியுள்ளது. இதற்கும் மேலாக, நம்பகம…

  15. 13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, இந்தியாவின் கருத்தினை செவிமடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதனை இந்தியா புரிந்து கொள்ளுமென்று, இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும், சனாதிபதியின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்ச தெளிவாகக் கூறுவதை இந்தியா கவனத்தில் கொள்ளாவிட்டாலும், அவர் என்ன சொல்ல வருகிறார் என்று, தமிழர் தரப்போடு அடிக்கடி உரையாடும் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனுக்கு புரியும். உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வு குறித்தே தாம் அக்கறை கொள்வதாக, கோத்தபாயா முதல் நிமால் சிறிபால டி.சில்வா வரை ஒருமித்தகுரலில் பாடுவதை, விரைவில் இலங்கை வரும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கவனத்தில் கொள்வாரென்று சிலர் நம்பலாம். கடந்த நான்கு ஆண்டுகளாக வட-கிழக்கில…

    • 6 replies
    • 724 views
  16. ஜெனீவா தீர்மானம் ஏற்கப்படாத நிலையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா சொல்லப்போவது என்ன? 1983 ஆம் ஆண்டில் இருந்து 2009ஆம் அண்டு முள்ளிவாய்க்கால் அவலம் வரை எத்தனை கண்டனங்கள் அழுத்தங்கள். அத்தனையும் சலித்துப்போய்விட்டன. பொதுநலவாய நாடுகளின் மாநாடு இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறும்போது இனப்பிரச்சினைத் தீவுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் இந்தியாவும் கூறுகின்றது. ஏன் பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்காத அமெரிக்காவும் எதிர்பார்க்கின்றது. ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரை இந்த கண்டனங்கள் அழுத்தங்கள் போன்றவற்றை 1983ஆம் ஆண்டில் இருந்து காண்கின்றனர். 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடைபெற்றபோது எத்தனை கண்டனங்கள் எழுந்தன. ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் கூட இலங்கை நிலைமை விவாதிக்க…

  17. மேனன் விஜயம் - நிலாந்தன் 07 ஜூலை 2013 சிவ்சங்கர் மேனன் நாளை மறுநாள் வருகிறார். அவர் வருவது ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு என்றும், அப்படி வரும்போது அவர் அரசுப் பிரதிநிதிகளைச் சந்திப்பார் என்றும் ஒரு செய்தி உண்டு. ராஜிய நகர்வுகளில் இதுவும் ஒரு வகைதான். அதாவது வேறு எதற்கோ வருவதுபோல் வந்து விவகாரத்தைக் கையாண்டுவிட்டுப்போவது என்பது. ஆனால், எது விவகாரமோ அதைப் பிரதான நிகழ்ச்சி நிரலாக உத்தியோகபூர்வமாக இரு நாடுகளும் அறிவிக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். அப்படி உத்தியோக பூர்வமாக அறிவிக்குமளவிற்கு இவ்வருகை முக்கியத்துவமற்றது என்று கருதியிருக்கலாம் அல்லது அப்படி அறிவிப்பதால் ஏதாவது ஒரு தரப்புக்கு நேரிடக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்க முயற்சிக்கலாம். எதுவாயி…

  18. இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மிக நீண்ட காலமாகக் கை நழுவல் போக்கினை கடைப் பிடித்து வந்த இந்தியா இப்போது மீண்டும் தீவிரமாக இப்பிரச்சனையினை கையில் எடுத்துள்ளது போல் தெரிகின்றது. தனது அமைச்சரவையில், இனவாதிகளை வைத்துக் கொண்டு, தேவையான போது அவிழ்த்து விடுவதும், தேவை இல்லாத போது கட்டி வைப்பதுமாக ராஜபக்ச சகோதரர்கள் காட்டும் சித்து விளையாட்டுக்கு ஒரு கடிவாளம் இடப்பட்டிருப்பதாக தோன்றுகின்றது. வெளிவிவகார முடிவுகளை சகோதரர்களே பெரும்பாலும் எடுப்பதால், இலங்கை வெளி விவகார அமைச்சர் பீரிஸ் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாகி அவர் மீதான டெல்லியின் நம்பகத் தன்மை இல்லாது போய், இம்முறை பசில் ராஜபக்சே நேரடியாக அழைக்கப் பட்டு இருக்கின்றார். டெல்லியில் பசிலுக்கு, இந்தியாவின் எதிர்ப் பார்ப்புகள்…

    • 5 replies
    • 1.1k views
  19. தமிழ் தேசிய கூட்டமைப்பு திடீரென தமது பழைய முடிவுகளை மாற்றினாலும் ஆச்சரிய படுவதற்கில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.. மேலும் அவர் தெரிவிக்கையில் 13 வது திருத்த சட்டம் அது இருக்கும் நிலையிலோ தற்போது உள்ள நிலையில் பலவீனப்பட்டாலும் அது பெயருக்காவது இருந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்தியாவின் சிந்தனையும் செயற்பாடுகளும் அமைகின்றன இந்திய இலங்கை ஒப்பந்தம் உயிரோடு இருப்பதற்கு 13 வது திருத்தம் தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது 13 வது திருத்தத்தை நீக்கினால் அல்லது தமிழர்கள் 13 வது திருத்த சட்டத்தை வேண்டாம் என கூறுமிடத்து இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு கேள்விக்குறியான நிலைமையே உருவாகும் . இந்தியாவுடைய நலன்கள் இவ் ஒப்பந்தத்…

  20. ஒர் எழுத்தாளரான ஜெயமோகனின் தமிழக மக்கள் பற்றிய புரிதல்: ( இது சரியானதா? தவறானதா என்பதைப்பற்றி முழுமையாகப்படித்தபின் உங்கள் கருத்தை பதிவுசெய்க. நன்றி : > தமிழகத்தின் பொதுமக்களிடையே வேறு எந்தக் கலையில் தரமான ரசனையும் ஆர்வமும் இருப்பதைக் கண்டீர்கள்? எந்தத் தளத்தில் பொருட்படுத்தவேண்டிய சிந்தனைகள் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்கள்? எங்கே அடிப்படைத்தகவல்களாவது தெரிந்துவைத்திருப்பவர்களை சந்தித்திருக்கிறீர்கள்? நேற்று ஒரு நண்பர் சொன்னார். சில ஆண்டுகளுக்கு முன்னல் ஃபேஸ்புக்கில் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஒரு கன்னடர் என்பதை அவர் சொன்னதும் நூற்றுக்கணக்கானவர்கள் கொந்தளித்து வந்து அதை எதிர்த்தார்கள். அது ஓர் அவதூறு என்றார்கள். எல்லாருமே ஈவேரா ஆதரவாளர்கள். அவரைப்பற்றி அவர்களுக்குத் தெரிந…

    • 1 reply
    • 986 views
  21. திருமலை மண்ணில் பன்னாட்டுக் கம்பனிகள் : இதயச்சந்திரன் அண்மைக்காலமாக அரசியல் வெளியில் உரையாடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து, இப்போது எவரும் பேசுவதில்லை. அந்த அறிக்கைக்கு என்ன நடக்கிறது என்பது குறித்து அரசும் அலட்டிக்கொள்வதில்லை. அதனை வரவேற்ற பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா, கொழும்பில் மாநாடு நடாத்துவதில் அக்கறை செலுத்தும் அளவிற்கு, தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை பற்றி வாய் திறப்பதில்லை. இலங்கையில் மாநாடுகளையும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளையும், வர்த்தக கண்காட்சிகளையும், பாதுகாப்பு கூட்டங்களையும் நடாத்தும் சர்வதேச நாடுகள், சுதந்திரம் பெற்ற காலம் முதல் தமது பூர்வீக நிலத்தையும், தேசிய இன அடையாளங்களையும் இழந்து கொண்டிருக்கும் தம…

  22. வெள்ளை யானை பார்க்கின்ற விழிப்புலனற்றோர் அண்மையில் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களின் பிரதானிகளைச் சந்தித்தபோது வெளியிட்ட கருத்துக்கள், அவரினதும் அவரால் தலைமையேற்று நடத்தப்படும் அரசினதும் இனப்பிரச்சினை தொடர்பான மற்றும் மாகாண சபைகள் தொடர்பான அணுகுமுறையின் ஒரு தெளிவான தூரநோக்குடைய இலக்குகளை அம்பலப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன. வெள்ளை யானை இனி வேண்டாம் இன்று சிங்களக் கடும் போக்காளர்கள் எனக் கருதப்படுபவர்களின் கருத்துக்களின் மூலவேர் ஜனாதிபதியின் சிந்தனைக்குள்ளேயே படர்ந்திருப்பதையும் புரிந்து கொள்ள முடியும். அங்கு அவரால் மாகாண சபை ஒரு வெள்ளை யானை எனவும் அதன் அதிகாரங்கள் ஒவ்வொன்றாகக் களையப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி வடமேல் மாகாண ச…

  23. பொய் சொல்லும் இனம். // பரணி கிருஸ்ணரஜனி ( சற்று நீண்டு விட்டது. நேரம் கிடைக்கும்போது கட்டாயம் படியுங்கள்) நேற்று முகநூல் வழி மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவருடன் உரையாட முடிந்தது. மண்டபம் அகதி முகாமில் நீண்டகாலம் பணியாற்றியதாகவும் குறிப்பிட்டார். ஈழப்போராட்டத்தின் வீழ்ச்சி தொடக்கம் தமிழக மாணவர் போராட்டம் வரை நிறைய கதைத்தார். தமிழீழம் ஒன்றுதான் தமிழனுக்கு தீர்வு என்றும் குறிப்பிட்டார். மேற்றர் இதுவல்ல. பேசி முடிக்கும் போது ஒரு வசனம் கூறினார். "எல்லாம் பிடிக்கும், ஈழத்தமிழர்களிடம் எனக்கு பிடிக்காதது அவர்கள் சொல்லும் பொய்கள்தான். மண்டபத்தில் பணிபுரியும்போது அவர்கள் சொல்லும் பொய்களை கேட்டு எனக்கு வெறுத்து விட்டது." உண்மைதான். அவர் சொல்வது …

    • 11 replies
    • 1.8k views
  24. இலங்கையை வளைக்கப்போகின்றதா அல்லது முறிக்கப்போகின்றதா இந்தியா? முத்துக்குமார் 13வது திருத்தம் பற்றிய அரசியல் தொடர்ந்து சூடான நிலையில் இருக்கின்றது. உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும், 13வது திருத்தம் பற்றியே கவனம் குவிந்திருக்கின்றது. எல்லாத் தரப்பினையும் எல்லாவற்றையும் மறக்கச் செய்து 13வது திருத்தப் பக்கம் திருப்பியதில் மகிந்தர் வெற்றி கண்டிருக்கின்றார் என்றே கூறவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு 13வது திருத்தத்தைப் பாதுகாக்கும் காவலனாக புதுடில்லி வரை சென்று வந்திருக்கின்றது. அரசியல் தீர்வு விவகாரத்தை புதுடில்லியிடம் அது ஒப்படைத்ததினால் எடுத்ததற்கெல்லாம் புதுடில்லிக்கு ஒடவேண்டிய நிலை அதற்கு. அங்குகூட எஜமான்கள் சொன்னதா…

    • 8 replies
    • 1.2k views
  25. புலம்பெயர் தேசியவாத அரசியலின் மறுபக்கம் : ஸ்கந்தா எழுதும் புதிய தொடர் நாற்பது வருட அரசியலும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளும் போராட்டத்தை செழுமைப்படுத்தும் நோக்கத்தில், அதனை முன்னோக்கி நகர்த்தும் வகையில் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டும். இலங்கை பேரினவாத பாசிச அரசின் அடிமைகள் மக்களதும் போராளிகளதும் தியாகங்களையும் வீரத்தையும் சேறடிக்கும் ஒரு காலப்பகுதியில் வாழ்கிறோம். இதனிடையே நம்மை நாமே மறுவிசாரணை செய்துகொள்வதும் கற்றுக்கொள்வதும் எதிர்கால சந்ததிக்கு உண்மைகளை விட்டுச் செல்வதும் அவசியமான பணி. மக்கள் மத்தியில் அவர்களின் பலம் மீதான நம்பிக்கயீனத்தை ஏற்படுத்தி அதனை ஆயுதமாகப் பயன்படுத்தி அன்னிய தேச உளவாளிகளிடம் சரணடையக் கோரும் பிழைப்புவாதிகளின் கூட்டம் உருவா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.