அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
இந்திய அமெரிக்க உறவும் சீன மிரட்டலும் இலங்கை மீதான பூரண ஆதிக்கத்துக்கான போட்டி யாருக்கிடையிலானது? இன்று தென்னாசியாவின் மீது பூரண ஆதிக்கம் செலுத்துவது யார் என்ற போட்டி வலுப்படுகிறது. அதில் பூகோள மற்றும் மூலோபாய ரீதயில் இலங்கை மீதான ப+ரண ஆதிக்கத்துக்கான போட்டி முக்கிய இடத்தில் உள்ளது. இப் பின்னணியில் ஒருபுறம் சீன மிரட்டல் பற்றிய எச்சரிக்கைகள் விடப்படுகிறன. மறுபுறம் அமெரிக்காவைத் தமிழருக்காகப் பயன்படுத்துவது பற்றியும் இந்தியாவை நம்ப வேண்டியதன் அவசியம் பற்றியும் பேசப்படுகிறது. இன்று, இலங்கை மீதான பூரண கட்டுப்பாட்டுக்கான போட்டி அடிப்படையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலானதே. சீன மிரட்டல் அதற்கு வசதியாகப் பாவிக்கப்படுகிறது. தமிழ்ப் பத்திரிகைகளில் அரசியல் கட்டுர…
-
- 0 replies
- 1.9k views
-
-
இலங்கை சிறைகளும் தமிழ் அரசியல் கைதிகளும் பல வருடங்களாக எந்த நீதி விசாரணைகளுமின்றி அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, பேரினவாத அரசும், தமிழ் தேசியமும் கண்டுகொள்வது கிடையாது. இன்று குறைந்தபட்சம் 17 சிறைகளில், 954 பேர் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். இதில் 40 பேர் மட்டுமே தண்டனை பெற்றவர்கள். மிகுதி அனைவரும் நீண்ட பல வருடமாக விசாரணைகள் எதுவுமின்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இனப்பிரச்சனைக்கான தீர்வு போல் தான், கைதிகள் விவகாரமும். பேரினவாத அரச நிர்வாகத்தின் கீழ் சட்டவிரோதமாக சிறைகளில் அடைத்து வைத்திருக்கும் அதே நேரம், இவர்களை தீண்டத்தகாதவராகவே தமிழ் தேசியம் அணுகுகின்றது. தமிழ் கைதிகள் தமிழ் தேசிய பிழைப்புவாத அரசியலுக்கு பயன்படாதவர்களாகிவிட்…
-
- 0 replies
- 542 views
-
-
இலங்கை இந்திய வம்சாவளி மலையக மக்கள் : ஒரு மீளாய்வு - மல்லியப்பு சந்தி திலகர் தோட்டத் தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவளி மலையக மக்கள் தமது சமூக நிலைமாற்றத்தளத்தை மீளாய்வு செய்து தம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதற்கான கலந்துரையாடல்களை இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் ஆரம்பித்தல் வேண்டும். இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் பலத்த போராட்டங்கள் விட்டுக்கொடுப்புகள் இழப்புகளுக்கு மத்தியில் தம்மை ‘மலையக மக்கள்’ எனும் பொது அங்கீகாரத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இலங்கைத்தமிழர்கள் தமது பேராட்ட வியாபகத்தின் ஊடாக சர்தேச ரீதியாக தம்மை இலங்கைத் தமிழர்களாக உறுதிபட வெளிக்கொணர்ந்திருக்கும் நில…
-
- 1 reply
- 1.8k views
-
-
எதிரியின் கையில் இருக்கும் ஆயுதங்களை விட, ஆதரவாளர்களின் மௌனம் தான் கொடுமையானது - என்கிற மார்டின் லூதர் கிங்கின் வார்த்தைகளை, உலகின் எந்த மூலையில் எவர் நினைவில் வைத்திருக்கிறார்களோ இல்லையோ, ஒட்டுமொத்தத் தமிழகமும் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஈடு இணையற்ற அந்தக் கறுப்பினத் தலைவன், நமக்கே நமக்காகச் சொன்னதைப் போலவே இருக்கிறது அந்த வார்த்தைகள். அமைதிப்படை என்கிற பெயரில் தமிழ் ஈழ மண்ணில் தரையிறங்கிய ராஜீவின் படைகள், விடுதலைப் புலிகளை அழிக்கும் பணியையும், நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களை நசுக்கும் பணியையும் ஈவிரக்கமின்றி மேற்கொண்டபோது, 26வது மைலில் மைல்கல் போன்று அசைவே இல்லாமல் கிடந்தது யார்? 2008 - 2009ல், ஈழத்தில் ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை நடந்த சமயத்தில், 26வது மைலில்…
-
- 1 reply
- 939 views
-
-
லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார் 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக் காட்சிகள் நடக்கின்றன. அந்த 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவரின் கவனமும் சோவியத் ரசியாவை நோக்கி இருந்தது. ச…
-
- 4 replies
- 648 views
-
-
ஸ்நோவ்டென் வேட்டை - 6 மொஸ்கோவின் ஸெரமெட்டியோவோ விமான நிலையத்தில் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டிருந்த ரஷ்யக் காவற்துறையினரின் அபாயச்சங்கொலி ஒருவாறாக நின்றுள்ளது. கிட்டத்தட்ட ஆறு கிழமைகளின் பின்னர் கடந்த வியாழக்கிழமை (01.08.2013) அமெரிக்காவின் கோரிக்கைளையும் கெஞ்சல்களையும் நிராகரித்து ஸ்நோவ்டென்னிற்கு ரஷ்யா தற்காலிகத் தஞ்சத்தினை ஒரு வருடத்திற்கு வழங்கி உள்ளது. விமான நிலையக் கட்டடத்தை விட்டு வெளியேறிய ஸ்நோவ்டென்னை விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படாத இடத்திற்கு ரஷ்ய அரசு கொண்டு சென்றுள்ளது. விமான நிலையச் சரித்திரம் முடிவடைந்தாலும் வெளியே சென்ற ஸ்நோவ்டென் சரித்திரம் இன்னமும் அதிகமாகத் தொடர்கின்றது. அமெரிக்கக் கொங்கிரஸ் சபை உறுப்பினர்கள் ஸ்நோவ்டென்னிற்குத் தஞ்சம் வழங்கியதால் வரு…
-
- 2 replies
- 749 views
-
-
ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என தமிழர்கள் மீது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 13வது சட்டத் திருத்தத்தினை திணிக்கும் இந்திய அரசின் சதியை முறியடிப்போம். ஒன்று திரள்வோம். 13வது சட்டத்திருத்தம் இலங்கையின் இறையாண்மையை காக்கும் தீர்மானமே. இனியொருவரதராஜப்பெருமாளை தமிழீழம் ஏற்காது எனச் சொல்வோம். இந்திய இலங்கை ஒப்பந்தம் ஊடாக தமிழர்களை சிங்களத்தின் அடிமையாக மாற்றத் துடித்த சதியை தமிழீழ விடுதலைப் போராளிகள் தங்கள் இன்னுயிரைக் கொடுத்து வென்றார்கள். மாவீரன் திலீபன் தியாகம் செய்து அம்பலப்படுத்திய இந்தியச் சதியை மீண்டும் நிறைவேற்ற இந்தியா துடிக்கிறது. இந்த துரோகத்தினை இனிமேலும் பார்க்க முடியுமா?. அன்று அவர்கள் சொல்லிய சென்ற சமரசமற்ற அரசியல் புரிதலோடு போராட்டத்தினை தமிழகத்தில் முன்னெடு…
-
- 0 replies
- 552 views
-
-
வெலிவேரியா! சிங்களவர்கள் மேற்கொண்ட தமிழின அழிப்பை வெளிப்படுத்தியதில் முன்னணிக் கிராமமாக மாறியிருக்கின்றது. சிறீலங்காவின் மிக முக்கியமான பேசு பொருளாகவும் இந்தக் கிராமம் மாறியிருக்கின்றது. இந்தக் கிராமத்தை உலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதற்கு சிங்களக் கட்சிகள் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றன. ஆட்சிக் கட்டிலில் அமரத் துடித்து நீண்ட நாட்களாக எந்தவொரு இரையும் கிடைக்காத எதிராக்கட்சிகளுக்கு வெலிவேரியா ஒரு முக்கியமான இரையாகக் கிடைத்திருக்கின்றது. இனிச் சிறிது காலத்திற்கு இதனையே வைத்து அரசியல் நடத்த முடியும். எதிக்கட்சிகள் என்பவை திறமையாக இருக்கின்ற ஒரு நாட்டில்தான் நேர்சீரான ஆட்சி நடைபெறும். அதுவும் ஜனநாயக நாடொன்றில் எதிர்க்கட்சிகள் தான் ஆட்சியை நகர்த்திச் செல்கின்…
-
- 2 replies
- 694 views
-
-
இந்திய சுதந்திரம்: ஜனநாயகத்தின் படுதோல்வி! இந்திய நாடு விடுதலை அடைந்து 67 ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் ஒரு தேசம், ‘சாரே ஜகான்சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா’ (உலகின் எல்லா நாடுகளிலும் உயர்ந்தது எங்கள் இந்துஸ்தான்) என்று தனக்குத்தானே பெருமிதம் கொள்ளும் ஒரு நாடு – உலகநாடுகளின் மத்தியில் இன்று என்ன நிலையில் இருக்கிறது என்று பார்த்தால் கண்ணீரும் பெருமூச்சும்தான் பதிலாகக் கிடைக்கும். கேடுகெட்ட நிலையில் இந்திய நாடு அடிப்படை சுகாதாரம், அடிப்படைக் கல்வி, கழிப்பிட வசதி, குழந்தைகள் எடை, சிசு மரணம், வாழ்நாள் என எல்லா அளவீடுகளிலும் உலகிலேயே மிகவும் கேடுகெட்ட நிலையில் இருக்கிறது இந்தியா. உலகிலேயே மிகமோசமான நிலையில் மக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழில் சிறீலங்காப் படையினரால் வளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவது தொடர்பாக இப்பகுதியில் பல தடவைகள் வெளியாகியிருந்தன. கடந்தவாரமும் இப்பகுதியில் சிறீலங்காப் படையினரின் ஏற்பாட்டில் வலி வடக்கில் சட்டவிரோத சுண்ணாம்புக்கல் அகழ்வது தொடர்பிலான தகவல்களைத் தந்திருந்தோம். இந்நிலையில் யாழ்குடாவுக்கே தனித்துவம் மிக்க பனை வளமும் சிறீலங்கா படையினரின் பாராமுகத்துடன் தொடர்ந்து அழிக்கப்படுவதாக பனை அபிவிருத்திச் சபையினர் குற்றம் சாட்டியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் பனை மரங்கள் தறிக்கப்படுவதற்கு எதிராக சிறீலங்கா காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என பனை அபிவிருத்திச் சபையினர் கவலை வெளியிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் பனை மரங்கள் சட்டவிரோதமான முறையில் அழிக்கப்படுவது தொடர்பில் க…
-
- 0 replies
- 457 views
-
-
‘முதலில் அவர்கள் கொம்யூனிஷ்டுகளைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் கொம்யூனிஷ்ட் இல்லை. பின், அவர்கள் சோசலிஷ்டுகளைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் சோசலிஷ்ட் இல்லை. பின், அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியில்லை. பின், அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் யூதனில்லை. பின், அவர்கள் கத்தோலிக்கர்களைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் கத்தோலிக்கனில்லை. பின், அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள், அங்கே எனக்காகப் பேசுவதற்கு யாரும் இருக்கவில்லை.’ நாசிக்களின் படுகொலை…
-
- 0 replies
- 547 views
-
-
மீண்டும் கலர் கலராய் தோரணங்கள் வடக்கு வீதியில் சின்ன மேளம் கிழக்கே மேளச் சமா தெற்கே காவடி மேற்கே கச்சான் கடைகளென தேர்தல் திருவிழா அரிதாரம் பூசியவர்களின் அணிவகுப்பு வானத்தை வில்லாய் வளைப்பவர்களாகவும் விடுதலையை வென்று தருபவராகவும் சிலர் ஒருபடி மேலே போய் தாயகத்தை தோண்டி பெருவாழ்வு பெற்றுத் தருவதாகவும் ஆளுக்கொரு மூடையுடன் அவர்கள் மூடைகளின் அளவுகளில் வேறுபாடிருந்தாலும் எல்லாம் புளுகுமூடைகள்தான் தொடுத்த வில்லிற்கும் கொடுத்த விலைக்கும் ஈடுதான் என்ன மாகாண சபைதானா ஆளுனர் தலையசைத்தால்தான் மூத்திரமே பெய்யலாம் கோவணம் இறுக்குவதற்கும் கொழும்பில்தான் அனுமதியாம் போக்கறுந்த சபைக்கு பொலீஸ் அதிகாரமும் இல்லை கந்தறுந்த ஆட்சியால் காணியும் இல்லை நீதிமான் சொல்கிறார் மாகாண சபை மூன்ற…
-
- 2 replies
- 730 views
-
-
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அடுத்த வார இறுதியில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம், 31ம் திகதி வரையில் ஒரு வாரகாலம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக ஐ,நா தகவல்கள் வெளிவந்தபோதும், தனது பயணத்தை அவர் முற்கூட்டியே மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் இவ்வார இறுதியில் அவர் இலங்கை வரவுள்ளதாகவும் கொழும்பில் இருந்து வெளியாகும் சிறீலங்கா அரச சார்பு ஆங்கில வார இதழான ‘சண்டே ஒப்சேவர்’ தெரிவித்திருக்கின்றது. எனினும், இந்த வார இறுதியில் அவர் இலங்கை செல்வது தொடர்பாக ஐ.நா தரப்பில் இருந்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இலங்கை செல்லும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை …
-
- 1 reply
- 768 views
-
-
தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 750 லட்சம் தமிழர்கள் இருக்கிறோம். இதுமட்டுமின்றி, இலங்கையில் நாம் பூர்வ குடியினர். 35 லட்சத்துக்கு மேல் இருக்கும் அங்குள்ள தமிழரின் எண்ணிக்கை. இதுபோதாதென்று இந்தியாவெங்கும், உலகமெங்கும் சிதறிக் கிடக்கிறோம். ஆகப் பெரிய எண்ணிக்கை இது. அப்படியிருந்தும், ருவாண்டா என்கிற குட்டி நாட்டில் நடந்த இனப்படுகொலைக்குக் கிடைத்த நீதி, ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலைக்காக இன்னும் கிடைத்த பாடில்லை. இதற்குக் காரணம் 3 பேர். இந்த மூவரில் முதலிடத்தில் இருப்பது யார் என்பதைப் பிறகு சொல்கிறேன். இரண்டாமிடத்தில் இருப்பது - இந்தியா. மூன்றாமிடத்தில் இருப்பது, சர்வதேசம் மற்றும் சர்வதேச அமைப்புகள். நடப்பது இனப்படுகொலை என்பதைச் சில நாடுகள் காலதாமதமாகத் தான் தெரிந்துகொண்டன…
-
- 0 replies
- 821 views
-
-
உப்புப் போட்டு கஞ்சி குடிக்கிற , உணர்வுள்ளவர்கள் ! ஊழலுக்கே திரண்ட லட்சக்கணக்கான கேரளா மக்கள் ,,,,, இவர்கள் இனத்தை அழிக்க முற்பட்டிருந்தால் சிங்களவன் என்னும் இனமே இல்லாமல் ஆக்கி இருப்பார்கள் ,,,,, கூடங்குளத்தை அங்கு ஒரு வேலை நிறுவி இருந்தால் கூடங்குளம் ஏதாவது குளத்தில் மிதந்து கொண்டுஇருந்திருக்கும் ,,,,,, உனக்கு கொஞ்சமாவது சுரணை இருக்குதா தமிழா ,,,, உன் இனமே அழிந்த பிறகு கூட ,,,, இந்திய பிரதமர் தமிழ்நாட்டிற்குள் வரமுடிகிறது ,,,,, இனியாவது விழிப்போம் அருகிலிருந்து கற்றுகொள்வோம் போராடும் குணத்தை ,,,,,,, உங்களை போராட வரவைப்பதற்கு கெஞ்சுவதே வெட்கமாக இருக்கிறது ,,,,,, Kerala people Siege Kerala assembly ,,,,,, Salute to the Rebells ,,,,,, Historical Siege of 1 lakh people…
-
- 1 reply
- 1.2k views
-
-
லிங்கேஸ்வரன் விஸ்வா இராஜதந்திர உறவின் விரிவாக்கம் என்ற போர்வையில் ஆபிரிக்காவில் புலிகளைத் தேடும் சிறிலங்கா!! அலசுகின்றது ஈழதேசம்!!! சோழியன் குடும்பி சும்மா ஆடாது என்ற முதுமொழியை மெய்பிப்பதாக ஆபிரிக்க தேசத்தின் மீது சிறிலங்காவிற்கு ஏற்பட்டுள்ள தீடிர் பாசம் அமைந்துள்ளது. அரசியல் ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ சொல்லிக் கொள்ளும்படியான ஆதாயங்கள் ஏதுமற்ற நிலையில் ஆபிரிக்க தேசத்தின் மீது சிறிலங்கா கவனம் செலுத்தியுள்ளமை புலிகளை தேடியே என்பதை அறிய முடிகின்றது. சிறிலங்கா அதிபர் ராஜபக்சே முதற்கொண்டு அறிவிக்கப்படாத சிறிலங்காவின் அதிபரான கோத்தபாய ராஜபக்சே வரை பயணங்களை மேற்கொண்டு உறவை புதுப்பிப்பதற்கு வலுவான காரணமாக மறைவாகியுள்ள புலிகளின் முக்கிய தலைவர்களைத் தேடியே என்பத…
-
- 5 replies
- 1k views
-
-
Parani Krishnarajani அம்பாறை வீரமுனையில் முஸ்லிம் காடையர்கள் சிங்கள இராணுவத்தின் துணையுடன் நூற்றுக்கணக்கான தமிழர்களை உயிருடன் வெட்டியும் எரித்தும் படுகொலை செய்த நினைவு நாள் இன்று. கீழே முஸ்லிம்கள் தமிழர்களை சிங்களத்துடன் சேர்ந்து இன அழிப்பு செய்த ஒரு தொகுதி பட்டியல் உள்ளது. தவறு இருபக்கமும் நிகழ்நதன. புலிகiளினதை மட்டும் முன்னிறுத்தி செய்யும் விவாதம் கண்டிக்கத்தக்கது. தற்போது முஸ்லிம்கனை குத்திக்காட்ட இதை பதிவு செய்யவில்லை. அடுத்த இன அழிப்பு இலக்கு தாம்தான் என்பதை உணராமல் சிங்களத்துடன் துணைக்கு நின்றதன் விளைவை இன்று முஸ்லிம்கள் அனுபவித்து வருகிறார்கள். தூர நோக்கற்ற பார்வையும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் குறுகிய பார்வைகளுமே இதற்கு காரணம். இருபக்க பகையை மறந்து ம…
-
- 4 replies
- 2k views
-
-
-
பிரபாகரன் போட்ட பூட்டை சம்பந்தன் உடைக்கின்றாரா? முத்துக்குமார் வடமாகாணசபை தேர்தல் ஆரவாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இழுபறிகள் காணப்பட்டாலும், இந்தியாவின் அழுத்தத்தினால், மாவை வாபஸ்பெற தமிழரசுக் கட்சிக்காரர்களும் புகைந்து அடங்கிவிட்டனர். விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளர் என்பது உறுதியாகி வேட்புமனுத் தாக்கல் செய்வதும் மாலை, மரியாதைகளுடன் முடிந்துவிட்டது. தனது தம்பியை மாகாண அமைச்சராக்குவது என்ற உறுதிமொழியை சம்பந்தன் வழங்கியதுடன் சுரேஷ் பிரேமச்சந்திரனும் அடங்கிவிட்டார். அவரது கட்சியைச் சேர்ந்த ஐங்கரநேசனுக்குத்தான் இலவுகாத்த கிளிபோல ஓர் ஏமாற்றம். 'புரூட்டஸ் நீயுமா' என மனதுக்குள்ளே குமுறுவதைத் தவிர அவருக்கு வேறுவழிகள் இருக்கவில்லை. தம்பி…
-
- 15 replies
- 1.4k views
-
-
கடந்த வாரம் நானெழுதிய கட்டுரை தொடர்பில் சில நண்பர்கள் பின்வரும் கேள்விகளைக் கேட்டிருந்தார்கள். முதலாவது- கடந்த அறுபதாண்டு காலமாகத் தமிழ் வாக்காளர்கள் தெளிவாகச் சிந்தித்து முடிவெடுத்துள்ளார்கள் என்பது சரியா? அல்லது அவர்கள் கற்றிந்த பாடங்களின் அடிப்படையில் தெளிவாகச் சிந்திப்பதற்கு அரசியல்வாதிகளும், இயக்கத் தலைவர்களும் அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல படித்த நடுத்தர வர்க்கமும், குறிப்பாக, ஊடகங்களும், ஆய்வாளர்களும் போதியளவு உதவவில்லையா? இரண்டாவது, கடந்த அறுபதாண்டு காலத் தமிழ்த் தேசிய அரசியலாற்பெற்ற வெற்றிகள் எவையெவை? இன்றுள்ள தேக்க நிலைக்குப் பொறுப்பேற்று இறந்த காலத்தைப் பிரேத பரிசோதனை செய்யத் தமிழ்த் தலைவர்களும், ஊடகங்களும், படித்த நடுத்தர வர்க்கமும் தயாரா? மூன்றாவது, இவ்விதம் …
-
- 2 replies
- 625 views
-
-
ஒவ்வொரு தேர்தல் வரும்போதும், தமிழ் தேசியம், தமிழ் உணர்வு எல்லாம் பொங்கிப் பீறிடும். தேர்தல் முடிந்தவுடன், சிங்கக் கொடியை ஆட்டுவதும், தாயகமா?…அப்படி ஒன்று இருக்கிறதா என்று முழிப்பதும், எம்மிடத்தில் பலம் இல்லையென்று கூனிக்குறுகுவதுமாக, தமிழ் தேசிய அரசியல் வெளியை நிரப்பிவிடும். மறுபடியும் ஒரு தேர்தல் வருகிறது. புது முகமொன்றை நிறுத்தினால், 2010 இல் ஏற்பட்ட வாக்களிப்பு வீழ்ச்சியை சரிசெய்து விடலாம் என்பது முடிவாகி விட்டது. களமிறக்கப்பட்டவர், தமிழ் தேசியத்தின் மீட்பராக மக்கள் மத்தியில் சித்தரிப்பதற்கு பலத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அவரின் சட்ட அறிவு, சிங்களத்தின் அரசியலமைப்புக்குச் சவாலாக இருக்குமென்றும், சர்வதேசத்தை தமிழர் பக்கம் திருப்புமென்றும், பரப்புரை செய்யப்படுகிறது.…
-
- 0 replies
- 732 views
-
-
யாழில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதற் சம்பவங்கள் ஓயாமல் தொடர்கின்றன. பலதடவைகள் இப்பகுதியில் ஊடகவியலாளர்கள் மீதான சிங்கள இனவெறித் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக தந்திருந்தோம். இவற்றுக்கு தீர்வு காணப்படாத நிலையில் மேலும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில், கடந்த 27ம் திகதி சனிக்கிழமை யாழ். திருநெல்வேலிப் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் சுயாதீன ஊடவியலாளர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.திருநெல்வேலி கலாசாலைப் பகுதியினைச் சேர்ந்த சி.மயூரதன் (வயது 26) என்பவரே மேற்படித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். குறித்த சுயாதீன ஊடகவியலாளரைத் தாக்கிய இனந்தெரியாத நபர்கள் அவர் அணிந்திருந்த…
-
- 0 replies
- 566 views
-
-
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக கடந்த 1989 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இதுவரை நஸ்டஈடு வழங்கப்படவில்லையென்று சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், தமது காணிகளில் மகிந்த அரசாங்கம் தனது படைகளைக் கொண்டு விவசாயம் செய்கின்றது என்றும் மேற்படி காணி உரிமையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு நஸ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட பல தரப்பினருக்கும் பல தடவைகள் கடிதங்கள் அனுப்பிய போதிலும் இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லையென்றும் மேற்படி மக்கள் தெரிவித்துள்ளனர். வலி.வடக்கில் கடந்த 1989 ஆம் ஆண்டு பல காணிகள் விமான நிலைய விஸ்தரிப்புக்காக சிறிலங்கா அ…
-
- 2 replies
- 645 views
-
-
தமிழ் மக்கள் தமது தாய் நிலத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்டம் நடத்தியமைக்காக அப்பாவித் தமிழ் மக்களில் இலட்சம் பேரைக் கொன்று குவித்த சிறீலங்கா அரசாங்கம் இன்று தொடர்ந்தும் மறைமுக இன அழிப்பை மேற்கொண்டு வருகின்றது. தமிழ் மக்களில் கணிசமானளவு மக்களைக் கொல்வதன் மூலமே இவர்களின் போர்க்குணத்தையும் பலத்தையும் அடக்க முடியுமென்று நினைத்த சிங்கள அரசு, இன்று அதன்படியே தனது கபடத்தை அரங்கேற்றி வருகின்றது. தொடர்ந்தும் இங்கு தமிழின அழிப்பிற்குரிய தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிங்களவர், தமிழர், முஸ்லிம் போன்ற இனங்கள் வாழ்ந்து வருகின்ற இலங்கைத் தீவில் இன்று தமிழினம் மூன்றாவது இனமாக மாறிக்கொண்டிருக்கின்றது. இந்தப் போக்குக்கு வலுச்சேர்ப்பதற்காக தம…
-
- 5 replies
- 805 views
-
-
விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா… இல்லை விடுதலைப் போராளிகளா? · விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி “விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இறுதி யுத்தத்தில் நிராயுதபாணிகளாக அந்த யுத்த களத்திலே நின்றிருந்த போராளிகளையும், பொதுமக்களையும் இனம் காண முடியாத சிங்கள இராணுவம், அங்கே தலைமுடி கத்தரிக்கப்பட்டிருந்த சில பெண் போராளிகளை இனம் கண்டு கைது செய்துதான் அவர்களூடாக அவர்களுக்குத் தெரிந்…
-
- 1 reply
- 437 views
-