Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. சேகுவராவும் பிடல் காஸ்ரோவும். ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தியும், விடுதலைப் பெற்ற நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றும் பகைவர்களின் இடைவிடாத அழிப்பு வேலைகளிலிருந்து காத்தும் 32 ஆண்டு காலமாக ஈடுஇணையில்லாத தொண்டாற்றிய பெருமைக்குரியவர் பிடல் காஸ்ட்ரோ. சின்னஞ்சிறிய கியூபா நாட்டினை சர்வதிகார ஆட்சியிலிருந்து மீட்பதற்காக போராடிய பிடல் காஸ்ட்ரோவும் அவரது அற்புதமான தோழன் சேகுவேராவும் உலக வரலாற்றில் உன்னதமான இடத்தை பெற்றுள்ளனர். காஸ்ட்ரோவின் ஆட்சியை கவிழ்க்கவும், அவரைப் படுகொலை செய்யவும் அமெரிக்க வல்லரசு இடைவிடாது முயற்சி செய்தது. உலக வல்லரசான அமெரிக்காவின் நயவஞ்சகத்தை பிடல் காஸ்ட்ரோ வெற்றிகரமாக முறியடித்தார். இதன் வ…

    • 1 reply
    • 1.6k views
  2. கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யும் அரசியல் தலைவர்கள் அதிகார போதையில் நியாயத்தை மறந்து செயற்பட்டுவிட்டு பின் கவலைப்படுவதால் என்ன பயன்? வ.திருநாவுக்கரசு சிறிலங்கா மக்கள் கட்சியின் ஸ்தாபக தலைவராய் விளங்கியவராகிய விஜய குமாரதுங்கவின் 20 ஆவது ஆண்டு நினைவஞ்சலி தொடர்பாக அவரின் மனைவியும் முன்னாள் ஜனாதிபதியுமாகிய சந்திரிகா குமாரதுங்க 17.02.2008 திகதி வெளியாகிய "சண்டே லீடர்" வார இதழுக்கு வழங்கியிருந்த விலாவாரியான பேட்டியானது எமது கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. சந்திரிகா தனது பதவிக் காலத்தில் சில பாரிய தவறுகள் இழைத்துள்ளதை ஒப்புக்கொள்கின்றார். அதாவது குறிப்பாக அன்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலிருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை பதவியில் நீடித்திருப்பதற…

  3. இலங்கையில் வரலாறு காணாத கோர முகத்துடன் இன்று யுத்தம் வாய் பிளந்து நிற்கின்றது. சிங்களப்படைகளின் கோரத்தாண்டவம் பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர் உயிர்களைப் பலி வாங்கிக்கொண்டிருக்கின்றன. அப்பாவி மக்களின் வாழ்விடங்களின் மேல் சிங்களப்படைகளின் விமானத்தாக்குதலில் உடலம் கிழிந்து உதிரம் சொரிந்து உயிர் துறக்கும் ஓலம் தினம் கேட்டுக்கொண்டிருக்கின்றது. சர்வதேச நாடுகளின் மனிதாபிமானக் கோரிக்கைகள் எதனையும் காது கொடுத்துக் கேளாது சிங்களப்படைகள் போர் முரசம் கொட்டி ஆர்ப்பரித்து நிற்கின்றன. சிங்களப்படைகளின் தளபதி இவ்வாறு அறிக்கை விடுத்து நிற்கின்றார். கிளிநொச்சியை நிச்சயம் கைப்பற்றுவோம்: சரத் பொன்சேகா சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2008, வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள கிளிந…

  4. 1940 களில் மருத்துவம் மற்றும் உளவியல் துறையில் பல புதிய கண்டு பிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலம். விஞ்ஞானிகள் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கு ஒரு புதிய முறையைக் கண்டு பிடித்திருந்தார்கள். மின்னாரத்தினால் கொடுக்கப்படும் அதிர்ச்சி மூலம் நோயாளிகளின் மனத்திலுள்ளவை அழிக்கப்படுகிறது. அவ்வாறு அழிக்கப்பட்டு வெறுமையான பசுமையான மனத்தில் புதிய அரோக்கியமான சிந்தனை நினைவுகள் குணாதிசையங்கள் புகுத்தப்பட முடியும். அதாவது ஒருவரை மீள வடிவமைப்பது. இந்த அணுகுமுறை அமெரிக்காவின் மத்திய புலநாய்வுத்துறை (சிஐஏ) இன் கவனத்தை 1950 களில் பெற்றது. சிஐஏ ஒரு தொகுதி இரகசிய பரிசோதனைகள் மூலம் எப்படி சிறைப்படுத்தப் பட்டோரை உளவியல் ரீதியில் உருக்குலைப்பது என்ற கை நூலை உருவாக்க…

  5. 'உலகப் பயங்கரவாதி அமெரிக்கா!" -சபேசன் (அவுஸ்திரேலியா)- வல்லாண்மை பயங்கரவாதி என்கிறான் துப்பாக்கி வைத்திருப்பவனை, அணுகுண்டு வைத்திருப்பவன்! அன்புக்குரிய அண்ணர், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் மேற்கூறிய ~நறுக்கு|, பயங்கரவாதம் என்பதற்குரிய, தற்போதைய வரைவிலக்கணத்தை இவ்வாறு மிகச்சுருக்கமாக ஆனால் மிகத் தெளிவாக விளக்குகின்றது. இன்று ~பயங்கரவாதம்| என்ற சொல்லுக்குள், உலகிலுள்ள பல நீதியான விடுதலைப் போராட்டங்களும் பொதுமைப்படுத்தப்பட்டுள்ளதற

    • 0 replies
    • 1.1k views
  6. இந்திய அயலுறவுக் கொள்கை தவறான பாதையில் செல்கின்றது [06 - January - 2008] * நெடுமாறன் பேட்டி `உலக தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஊக்கமளிக்கும் வெளியுறவுக் கொள்கையை நேருவும் இந்திராகாந்தியும் கடைப்பிடித்தனர். இனவெறிக்கு ஊக்கமளிக்கும் கொள்கையையே ராஜீவ் காந்தி கடைப்பிடித்தார். இந்திரா காந்தி வகுத்த வெளியுறவுக் கொள்கையை அழித்தவரும் ராஜீவ் காந்திதான் எனக் குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசிய அமைப்பின் தலைவரான பழ.நெடுமாறன், இந்திய அரசு இப்போதும் அதே தவறான பாதையில்தான் செல்கின்றது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையிலிருந்து வெளியாகும் `தென்செய்தி'யில் வெளியாகியுள்ள பேட்டி ஒன்றிலேயே இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருக்கின்றார். இந்தப் போட்டியின் விபரம் வரு…

    • 0 replies
    • 4.2k views
  7. வியட்நாம், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கச் சதிகள் வியட்நாம்! அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் போராளிகளின் சிந்தையில் உற்சாகத்தைத் தோற்றுவிக்கும் மாபெரும் ஊற்று. இந்தோசீன தீபகற்பத்தில் இருக்கும் இந்தச் சிறிய நாடு கோலியாத் போன்ற அமெரிக்க வல்லரசை 1975ஆம் ஆண்டு வீழ்த்தி 30 ஆண்டுகள் முடிந்துவிட்டது. கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் வியட்நாமிய மக்கள், குறிப்பாக, விவசாயிகள் போராடிப் பெற்ற இந்த வெற்றி உலக வரலாற்றில் ஒரு சகாப்தம். அமெரிக்க அதிபர்கள் கென்னடி முதல் நிக்சன் வரை 10 ஆண்டுகளாக 50 சதவீத தரைப்படை, விமானப்படைகள், 15 விமானம் தாங்கிக் கப்பல்கள் என 10 லட்சம் துருப்புக்களைக் குவித்துக் கொண்டும், ஒரு கோடி டன் வெடிகுண்டுகள்; என வெறிகொண்டு தாக்கியும்…

    • 0 replies
    • 1.5k views
  8. நடைமுறை அரசுகள் பண்டாரவன்னியன் ஆட்சிக்காலத்திற்குப்பிறகு கிட்டத்தட்ட நானூறு வருடங்களுக்குப்பிறகு வன்னிநிலப்பரப்பானது தமிழர்களின் ஆளுகைக்குள் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கும்மேலாக தொடர்ந்து இருந்துவருகின்றது. ஆனாலும் வன்னியை ஒரு நாடாக தமிழர்கள் கூட கூறுவது குறைவாகவேயுள்ளது. இது ஏன்? நானூறுவருடங்களுக்குள் உலக நடைமுறையும் மிகப் பெரும் மாற்றங்களைக்கண்டுள்ளதுவே இதற்கான காரணமாகும். அதாவது இன்றைய உலகஒழுங்கில் ஒருநாடு நாடாகக்கொள்ளப்படுவதற்கு அது மற்றைய நாடுகளினால் அங்கீகரிக்கப்படுவது அவசியமாகிறது. தமிழீழத்தைப்போன்ற மேலும் பல நாடுகள் அல்லது தேசிய இனங்கள் அன்னிய ஆக்கிரமிப்பால் சிதைவடைந்து மீண்டும் ஒரு நாடாக முயன்றபோதும் உலகநாடுகளின் ஆதரவு அல்லது அங்கீகாரம் இல்லா…

    • 3 replies
    • 2.7k views
  9. தமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன ? தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன ? சேர்ந்தாற் போன்ற நிலப்பகுதியில் ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப்பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ஜே.வி.ஸ்டாலின். ஒரு தேசத்திற்கு முதல் தேவை தாயக மண், இரண்டாவது தேவை பொது மொழி, மூன்றாவது தேவை பொதுப் பொருளியல், நான்காவது தேவை பொதுப் பண்பாட்டில் உருவான 'நாம";, 'நம்மவர்" என்ற தேசிய இன ஒருமை உணர்வு. ரசியப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவரான ஜே.வி.ஸ்டாலின் தேசம் குறித்துச் சொன்ன மேற்கண்ட வரையறைகள் பொதுவாக உலகு தழ…

    • 0 replies
    • 1.7k views
  10. மனித இனத்திடம் தம்மைச் சுற்றி நடப்பவை பற்றியும் அவற்றினால் ஏற்படக் கூடிய தாக்கம் பற்றியும் அறியும் ஆவல் இயற்கையாக இருந்தது. இந்த ஆர்வத்தை பூர்த்தி செய்ய நுகரப்படுவது தான் "செய்திகள்" என்று நாம் இன்று விளங்கி வைத்துள்ள பதம். ஆரம்ப காலங்களில் செய்திகளின் பரிமாற்றம் என்பது தனிநபர்களிடையேயானதாகவும் செவி வழியாக பயணம் செய்பவர்களால் பரப்பப்பட்டதாகவும் இருந்தது. எனவே பரிமாறப்படும் செய்திகளின் உள்ளடக்கம் என்பது கேட்பவர் ஆர்வப்படுபவற்றிலும் சொல்பவரின் அவதானத்திலும் தங்கியிருந்தது. உள்ளடக்கத்தின் பெறுமதியும் உண்மைத்தன்மையும் அவதானத்தை பகிர்பவரிலும் பரிமாற்றம் நடக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையிலும் தங்கியிருந்தது. மனித நாகரீக வளர்ச்சியில் அதிகாரம், ஆட்சி, சட்டம், ஒழுங்கு என்பவை படிப்…

  11. ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்கள் - ஒரு பார்வை Filed under: செய்திஆய்வு — thivakaran @ 4:32 pm தமிழீழத் தனியரசுப் பிரகடனத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட உள்ளதாக சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அண்மையில் தொடர்ந்து கூறி வருகிறார். பல “ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்களை” சந்தித்துதான் இன்றைய உலக ஒழுங்கு உருவாக்கம் பெற்றுள்ளது. இந்த சுதந்திரப் பிரகடனங்களில் அனைத்துலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையும் நிராகரிக்கப்பட்டவையும் உள்ளன. அதேபோல் அனைத்துலக ஆதரவுக்காக காத்திருக்கும் பிரகடனங்களும் உள்ளன. ஒரு தலைபட்சமான பிரகடனங்களுக்குப் பின்னரும் கூட அடிமை நாடுகளாகவும் போரை நடத்த வேண்டியதான நிலையிலும் கூட பல நாடுகள…

    • 2 replies
    • 1.7k views
  12. சிறகொடிக்கப்பட்ட ஜனநாயகம் கே.ஜி.பி. அருகில் கிடத்தப்பட்டிருந்த கணவரின் சடலத்தைப் பார்த்து அழுது கொண்டிருந்த அம்மாவின் கைவிரல்களைத் தன் பிஞ்சுக் கரங்களால் பற்றிக் கொண்டு சிரித்துக் கொண்ருந்தது அந்த இரண்டு வயது பெண் குழந்தை . -ஆண்டு : 1947 புற்றுநோயால் தாம் இறக்கும் முன்பு ஒரே ஒரு முறை தன் மனைவியைப் பார்க்கக்கூட அனுமதி மறுக்கப்பட்டது அவளுடைய கணவருக்கு! -ஆண்டு : 1999 34 வயது அலெக்ஸாண்டர், 30 வயது கிம்-இரண்டு மகன்களும் அயல்நாட்டில்; அவளோ வீட்டுச்சிறையில்! - ஆகஸ்ட் : 2007 அந்தப் பெண்தான் ஆவ்ங்-ஸான்-ஸூ-க்யி-டாவ் ஜனநாயகத்துக்காகப் போராடி வரும் பர்மிய வீராங்கனை. 1945 ஜூன் 19 அன்று பிறந்த ஸூ-க்யிவின் தந்தையார் ஆவ்ங்-ஸான்-யூ பர்மிய தேசியத் தலைவர…

    • 0 replies
    • 1.3k views
  13. ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்! மனித குல வரலாற்றில் வாழுங் காலத்தில் தெய்வமாகப் போற்றப்பட்டு, அவர்களின் மரணத்துக்கு பின் சீடர்களாலும் எதிரிகளாலும் தூற்றப்பட்டவர்கள் வெகு சிலரே. .. இத்தகையவர்களில் ஒருவர் கவுதம் புத்தர். இவர் வாழ்ந்த காலத்தில் மன்னர்களும் மக்களும் இவரை வணங்கிப் போற்றினர். ஆனால் அவரது மரணத்துக்குப் பின் அவரது சீடர்கள் அவரின் போதனைகளைத் திரித்தனர். அவரை இழிவுபடுத்தினர்.புத்தரின் போதனைகளுக்கு அசைக்க முடியாத எதிரிகளான இந்துக்களோ, அவர்களின் புனித மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரமாக புத்தரைக் குறிப்பிட்டனர். இதெபோன்ற மற்றொரு மனிதர் ஸ்டாலின். அவர் வாழ்ந்து பணியாற்றியபோது வானளாவப் புகழப்பட்டார். ஆனால் அவர் மறைந்த உடனேயே , அவர் ஒரு வில்லனாக …

  14. கியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும் : பிரான்ஸிஸ் போர்டு கொப்பாலாவுடன் ரோபர்ட் ஸ்டார் உரையாடல் (மொழிபெயர்ப்பு : யமுனா ராஜேந்திரன்) ஞாபக மறதிக்கு எதிரான போராட்டம் என்பது கலைஞர்களும் அறிவாளிகளும் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவால்களில் ஒன்றாக இருக்கிறது. கியூப சமுகத்தின் மீது வைக்கப்படும் மிகப் பெரும் குற்றச்சாட்டுக்களில் ஒன்று அங்கு சுதந்திரம் இல்லை என்பது. பிறிதொரு குற்றச்சாட்டு அங்கு வறுமை நிறைந்திருக்கிறது என்பதாகும். இலத்தீனமெரிக்க நாடுகளின் தொடர்ந்த வறுமைக்கான காரணங்களாக 500 ஆண்டு காலத்திற்கும் மேலான காலனியச் சுரண்டலையும் அதற்குப் பின் இன்று வரை இராணுவச் சர்வாதிகாரிகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஊட்டி வளர்த்ததையும் இன்று வரை கியூப சமூகத்தின் மீது …

    • 0 replies
    • 1.5k views
  15. இந்தத் தொடரின் நோக்கம் மலரவிருக்கும் சுதந்திர தமிழீத்தின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்ற போதனை நோக்கோடு எழுதப்படவில்லை. மாறாக பொதுவில் நாடுகளின் தேசிய நலன்கள் அதன் அதிகார கட்டமைப்புகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் என்பன பற்றிய சில அடிப்படைப் புரிதல்களை தர முற்படுவதும் அதன் அடிப்படையில் "சர்வதேசம்" அல்லது "சர்வதேசச் சமூகம்" மற்றும் "உலக ஒழுங்கு" போன்ற பெயரளவில் பரந்து விரிந்த அர்த்தத்தை தரும் பதங்களிற்கான தற்போதைய யதார்த்தபூர்வமான அர்த்தத்தை விளங்க முற்படுவதும் ஆகும். இந்தப் பின்னணியில் இறுதியாக எம்மைப் போன்று அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் தேசியங்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் அவற்றிற்கான பின்னணிகள் பற்றி சுருக்கமாக பார்ப்போம். தமிழ்த் தேசியதின் மீள…

  16. வல்லரசுகளின் பிடியில் பாலஸ்தீனம் Pathivu Toolbar ©2005thamizmanam.com உலகமெங்கும் அலைக்கழிக்கப்பட்டு சுற்றித் திரிந்த யூதர்கள், சுமார் 2000 ஆண்டுகள் வரை கிறிஸ்தவரின் கொடுமைகளுக்கு ஆளாகி வந்துள்ளனர். ஜெர்மனியில் 1933 - 1945 காலப் பகுதியில் ஹிட்லரின் கொடுமைகளுக்கு ஆளான யூதர்களுள் சுமார் 60 லட்சம் பேர் சித்திரவதை செய்யப்பட்டு இறந்துள்ளனர். இது மட்டுமல்ல, உலகில் சிதறி வாழ்ந்த அவர்களுக்கு எம் நாட்டில் இடமளித்து வாழச் செய்வோம் என எந்த மேற்கத்திய நாடும் முன்வரவில்லை. இதற்கு யூதர்களின் இயற்கையான போக்கும் ஒரு காரணமே. இவர்களது நிலை இப்படி தொடரும் போது கி.பி.1896 ல் தியோடர் ஹெர்ஸ்ல் (Theodor Herzl 1860-1904) என்றொரு நாடக எழுத்தாளர் யூத மக்களுக்கு ஒரு …

  17. அமெரிக்காவின் கள்ளப்பிள்ளை Pathivu Toolbar ©2005thamizmanam.com உலக நாடுகளில் நடைபெறும் தீவிரவாதத்தை நிர்ணயிக்கும் ஏகபோக உரிமையை யாரும் கொடுக்காமலேயே அமெரிக்கா அடாவடியாக எடுத்துக் கொண்டுள்ளது. சர்வ வல்லமை கொண்ட ஒருநாடு தீவிரவாதத்திற்கு எதிராக தலை தாங்கினால் என்ன தவறு? என அப்பாவியாகக் கேட்பவர்கள் கவனிக்க: அமெரிக்கா, பிரிட்டனிடமிருந்து விடுதலையடைந்த 1945 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கிட்டத்தட்ட 216 தடவை வெளிநாட்டு விவகாரங்களில் இராணுவ ரீதியாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 1945 முதல் தன்னுடைய சுயநலத்திற்காக இருபதுக்கும் நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைத்துள்ளது. கடந்த நூற்றாண்டில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் பிரச்னைகளில் …

  18. Started by Innumoruvan,

    மொழிகளில் பலமானது மௌனம் என்று எங்கோ எப்போதோ வாசித்த ஒரு ஞாபகம். இக்கூற்று நியாயமானதா, லொஜிக்கலானதா என்ற ஆராய்ச்சிகளிற்கெல்லாம் அப்பால், உலக அரசியலைப் பொறுத்தவரை இக்கூற்று கவனத்திற் கொள்ளப்படவேண்டி ஒன்றாகவே தோன்றுகின்றது. உதாரணமாக, அண்மைக்காலமாக புலம்பெயர் "ஆய்வாளர்கள்" விடுதலைப்புலிகளின் மொனத்திற்கு மனம் போன போக்கில் காரணம் கற்பித்து வருவது இங்கு நோக்கத்தக்கது. இந்நிலையில், அண்மையில் எனது கவனத்தை ஈர்த்த ஒரு உலக அரசியல் மௌனம் தொடர்பான ஒரு சிறு பதிவாகவே இப்பதிவு அமைகிறது. இம்மாதம் 6ம் நாள் (06-09-2007), இஸ்றேல் சிரியாமீது ஒரு வான் தாக்குதலை நிகழ்த்தியது என்ற செய்தி, சம்பவம் நடந்து ஏறத்தாள பத்து நாட்களின் பின்னர் தான் பரந்த அளவில் வெளியானது. இருப்பினும் ஏன் இந்தக் …

    • 4 replies
    • 2.2k views
  19. புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்த் தேசிய நலன் சார்ந்து இயங்கும் தமிழ் அமைப்புகளிற்கு பல்வேறு பட்ட கடமைகள் உண்டு. இற்றைவரை இந்த தமிழர் அமைப்புகள் நம்மவர்கள் நோக்கிய கலை கலாச்சார நிகழ்வுகள், பிரச்சார கூட்டங்கள் கண்டன கூட்டங்கள், நிதிதிரட்டல், கவனயீர்ப்பு நினைவு கூரல் நிகழ்வுகள் மற்றும் ஊர்வலங்களோடு மாத்திரம் நின்றுவிடுகின்றன. தாயகத்தின் அவல நிலையையும், எந்தவித வெளி உதவிகள் இன்றி விடுதலை வேண்டி 30 ஆண்டுகளிற்கு மேலாக பலத்த இழப்புக்களோடு போராடும் இனமாக மட்டுப்படுத்தப்பட்ட நேர மற்றும் மனித வளரீதியில் இவைதான் முக்கியத்துவம் பெறுபவைகளாக இருக்கின்றன. இருந்த போதும் புலம் பெயர்ந்த நாம் ஒவ்வொருவரும் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகளாக நல்லெண்ண தூதுவர்களாக நடந்து கொள்ள வேண்டிய அத்தியாவசிய …

    • 16 replies
    • 4.3k views
  20. பொம்மலாட்டம்! க. ரகுநாதன் உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே! ஏறக்குறைய 15 ஆண்டுகள் பேச்சுக்குப் பின் உலக வர்த்தக அமைப்பில் டிசம்பர் 2001-ம் ஆண்டு சேர்த்துக் கொள்ளப்பட்டது சீனா. அது முதற்கொண்டு சீனாவின் பொருள்கள் உலகச் சந்தையில் குவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியா உள்பட உலக நாடுகள் அதை கலக்கத்துடனே பார்க்கின்றன. சீனா தயாரிக்கும் பொருள்கள் பெரும்பாலானவை தரம் குறைந்தவையாக உள்ளன என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. இந்தியாவில் "சைனா பஜார்' வந்தபோது விலை குறைந்த, தரமும் குறைந்த பொருள்கள் சந்தையில் குவிந்தது, இதற்கு ஓர் உதாரணம். இந்நிலையில், சீனாவில் தயாரான 8 லட்சம் பொம்மைகளைத…

  21. என் இனிய வலைத்தமிழ் மக்களே...! "புரட்டுக்காரியின் உருட்டு விழிகளில் உலகைக் காண்பவரே.." என்று என்றைக்கோ 'மனோகரா' படத்திற்காக கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம், இன்று அவரையே திரும்பிப் பார்க்கவும், படிக்கவும் வைத்திருக்கிறது. 'அன்பான அப்பா', 'பாசமான தாத்தா' என்று தமிழகம் முழுவதும் அறியப்பட்ட கலைஞர் கருணாநிதிக்கு, தற்போது ஏற்பட்டுள்ள சோதனை குறித்து தமிழகம் முழுக்கவே, சாலமன்பாப்பையா தலைமை தாங்காதப் பட்டிமன்றங்களாக ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. 'தினகரன்' பத்திரிக்கை தாக்கப்பட்டபோது தயாநிதி மாறன் டெல்லியில் இருந்தார். அங்கிருந்தே கலைஞரைத் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். அப்போதே "தலைவர் ரொம்பக் கோபமா இருக்கார்.. நீங்க மெட்ராஸ¤க்கு வந்துட்டு, அப்புறமா பேசுங்…

  22. ஆரிய உதடுகள் உன்னது. தமிழகத்தின் ஆகப்பெரும் அறிவு ஜீவிகளில் ஒருவரும் இந்திய துணைக்கண்டத்தின் அசைக்கவியலா இடதுசாரியும் சனநாயகத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிற நான்கு தூண்களில் மூன்றாவதோ, நான்காவதோ தூணான பத்திரிக்கைத் துறையின் ‘பிதாமகன்’களில் ஒருவருமான அவரைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சந்திக்கும் பாக்கியம்தான் அடியேனுக்கு இன்னும் வாய்க்கவில்லை. அவரது தூணுக்கு ஒருமுறை தமிழக அரசால் ‘ஆபத்து’ வந்தபோது தமிழகத்துப் பத்திரிக்கையாளர்கள் பொங்கியெழுந்த ஒரு கூட்டத்தில் பேசும்போது கூட. இந்தத் தூண் ஈழத்தின் சகல தூண்களுக்கும் எவ்விதம் இன்னல்கள் விளைவித்தது என்பதை முதலில் எடுத்துச் சொன்ன பிறகே என்னால் பேச முடிந்தது. சுற்றி வளைப்பானேன்? அவ…

  23. இந்தியா அமெரிக்காவின் கூட்டு கடற்படை போர் ஒத்திகை மதியம் செவ்வாய், செப்டம்பர் 04, 2007 ... இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இணைந்து வங்காள விரிகுடாவில் விசாகப்பட்டினத்திற்கும், அந்தமான் தீவுகளுக்கும் இடையே ஒரு மிகப் பெரிய இராணுவ போர் ஒத்திகைகளை "மலபார் 07 (Malabar 07)" என்ற பெயரில் இன்று நடத்த தொடங்கியிருக்கின்றன. இந்தியாவின் இடதுசாரிக் கட்சிகள் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றன. சுமார் 26 போர் கப்பல்கள், அணுசக்தி மூலம் இயங்கும் விமனம் தாங்கி கப்பல், 160 போர் விமானங்கள் போன்றவை கொண்டு நடத்தப்படும் இந்த போர் ஒத்திகை இது வரையில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய இந்திய-அமெரிக்க கூட்டு போர் ஒத்திகை ஆகும். ஒரு காலத்தில் இராணுவ …

    • 0 replies
    • 2.2k views
  24. இரட்டைத் தந்திரோபாயங்களும் சர்வகட்சி மாநாடும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த சிந்தனை அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டிருந்த அரசியல் கூட்டு திரும்பத் திரும்பக் கூறி வந்த ஒரு விடயம் நாம் ஆட்சிக்கு வந்தால் யுத்தத்திற்குச் செல்லமாட்டோம் என்பதாகும். இருப்பினும் புதிய அரசாங்கத்திற்கு அவ்வாக்குறுதியைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய இயலுமை இருக்கவில்லை. இது நாம் ஏற்கனவே பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளவாறு, கோட்பாட்டு ரீதியான நம்பிக்கைகள், தெற்கு, மற்றும் குறிப்பாக வடக்கில் இருந்து ஏற்பட்டிருந்த அழுத்தங்கள் காரணமாக ஏற்பட்டதொரு நிலையாகும். எனவே, தவிர்க்க முடியாதபடி நாடு மீண்டும் ஒரு தடவை யுத்த சூழ்நிலையினுள் தள்ளப்பட்டுள்ளது. ஆயினும் இவ்வாரக் கட்டுரையின் விடயம் அதுவல்ல. …

    • 0 replies
    • 934 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.