அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை இலங்கை அரசாங்கமும் சர்வதேசமும் எப்படி எண்ணுகிறது அல்லது இத் தாக்குதலின் மூலம் விடுதலைப் புலிகள் எதனை விளங்கப் படுத்துகிறார்கள் என்பதை இரண்டு பேருமே உணர்ந்தார்களா என்பதை நாம் பார்ப்போமாக இருந்தால். முதலில் விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலின் அடிப்படை நோக்கம் என்ன என்பதை யோசித்துப் பார்த்தால். ஓரளவாவது அதனை புரிந்து கொள்ள முடியும். ஒரு இராணுவ பலம் என்பதை எத்தின எதிரியை கொல்கிறான் என்பதை வைத்து கணக்கிடக்கூடாது மாறாக அந்த நாட்டின் இராணுவ கட்டமைப்பின் இராஐதந்திர நடவடிக்கைகளை வைத்தே இராணுவ பலத்தை கணக்கிட வேண்டும். அந்த வகையில் இந்த வான் தாக்குதலின் மூலம் விடுதலைப் புலிகள் தங்களின் க…
-
- 4 replies
- 1.7k views
-
-
அரோகராப் போராட்டம்? - நிலாந்தன் ஒரு நீதிபதிக்கு நீதி கேட்டுத் தமிழ் மக்கள் ஒன்று திரளும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரத்திலிருந்து தமிழ்ப் பகுதிகளெங்கும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மனிதச் சங்கிலிப் போராட்டத்தைக் குறிப்பிட வேண்டும். இது குத்துவிளக்குக் கூட்டணியால் ஒழுங்கு செய்யப்பட்டது. எனினும் ஏனைய கட்சிகளும் அதற்கு ஆதரவைக் காட்டின. அந்தப் போராட்டம் சரியான நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அது சொந்த மக்களின் கவனத்தையும், உலக சமூகத்தின் கவனத்தையும் ஈர்க்கத்தக்க விதத்தில் பிரம்மாண்டமானதாக முன்னெடுக்கப்பட்டதா? மருதனார் மடத்திலிருந்து தொடங்கி யாழ்ப்பாணம் வரையிலு…
-
- 0 replies
- 300 views
-
-
18 DEC, 2023 | 05:32 PM (நேர்கண்டவர் : ரொபட் அன்டனி) இலங்கையில் அரசியல் தீர்வு எதுவாக இருந்தாலும், அது உண்மையில் எல்லாத் தரப்பினரதும் நல்லிணக்க முயற்சியாக அமைய வேண்டும். இது சாத்தியமானது என்றே நான் நினைக்கின்றேன். ஆனால், இதில் கடின உழைப்பு அவசியமாகிறது என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். 'வீரகேசரி' வார வெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடிய அமெரிக்கத் தூதுவர், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பாதிக்கப்பட்ட மக்களை மையமாகக்கொண்டதாக அமைய வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் புலம்பெயர் மக்கள் …
-
- 0 replies
- 555 views
- 1 follower
-
-
வடிவேலின் புதிய அரசியல் யாப்பு ? யதீந்திரா கடந்த வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடக்கிய தூதுக் குழுவொன்று சீனாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தது. இதன்போது கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் இரா.சம்பந்தனும் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார். அதே போன்று கூட்டமைப்பிற்கு எதிர்நிலைப்பாடுள்ள பிறிதொரு தமிழ் கட்சியின் தலைவரும் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தார். இவர்கள் அங்கு தங்கியிருந்த வேளையில் ஆசுவாசமாக மாலை நேரங்களில் பேசிக் கொள்வதுண்டாம். பொதுவாக மக்களுக்கு முன்னால் முரண்பாடுள்ளவர்களாக காண்பித்துக் கொள்ளும் அரசியல்வாதிகள், தனியறையில் மதுக் கோப்பைகளுடன் இருப்பது அரசியலை பொறுத்தவரையில் சர்வசாதாரணமான ஒன்று. சம்பந்தனும் அப்படியான மதுக் கோப்பைகள் உரசிக் கொள்ளும் இரவுகளை விரும…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ்த்தேசியம் பலமாக உள்ளதா? பலவீனப்பட்டுள்ளதா? June 12, 2024 — கருணாகரன் — தமிழ்த்தேசியம் பலமாக உள்ளதா? பலவீனப்பட்டுள்ளதா? பலவீனப்படுத்தப்படுகிறதா? போன்ற கேள்விகள் இன்றைய ஈழத்தமிழரின் அரசியலில் முக்கியமானவையாக உள்ளன. ஏனென்றால், தமிழ்த்தேசியம் பலவீனப்பட்டுக் கொண்டுபோகிறது. அதை எப்படியாவது பலப்படுத்த வேண்டும். காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தோடு பலரும் உள்ளனர். இதில் ஒரு தொகுதியினர், “தமிழ்த்தேசியத்தைப் பலப்படுத்த வேண்டுமானால், அதற்கு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தப்படும்போது சிதறிக் கிடக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் தமிழ்த்தேசிய உணர்வும் திரட்சியடைந்து ஒன்றிணையும். அது தமிழ் மக்களின் கூட்டுணர்வையு…
-
- 0 replies
- 631 views
-
-
தடம் மாறியதா தமிழ்த் தேசியம்? Editorial / 2019 ஜூன் 04 செவ்வாய்க்கிழமை, மு.ப. 09:48 Comments - 0 -க. அகரன் அபிவிருத்தி அடைந்து வரும் நாடொன்றின் ஸ்திரத்தன்மை என்பது, அதன் இறையாண்மை, பொருளாதாரப் பெருக்கம், பாதுகாப்பு என்பவற்றின் மூலோபாயங்களிலேயே தங்கியுள்ளது. அந்த வகையில், வளர்முக நாடுகளைப் பொறுத்த வரையில், அவை தமது இறைமையில் தளர்வின்றிச் செயற்பட்ட போதிலும், பாதுகாப்பு உட்படப் பொருளாதார மேம்பாட்டில், பிறநாடுகளின் கடைக்கண் பார்வையின் அவசியத்தை எதிர்பார்த்தேயுள்ளன என்பதே யதார்த்தம். பொருளாதார பலம்வாய்ந்த நாடுகளைத் தவிர, ஏனைய நாடுகள் வௌிநாட்டு முதலீட்டாளர்களின் வருகை, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையையே பெரிதும் நம்பியுள்ள நிலையில், இவ்…
-
- 0 replies
- 545 views
-
-
உண்ணாவிரதம் இருந்தால் மாத்திரமே அறியப்படும் இலங்கை தமிழ் அரசியல் கைதிகள் இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் கிடையாது என முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச நான்கு வருடங்களுக்கு முன்னர் கூறியிருந்தமை அனைவருக்கும் ஞாபகமிருக்கலாம். மேலும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கைதிகள் ஈடுபட்டால் அது குறித்து அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதி அமைச்சுக்கு இதில் நடவடிக்கை எடுப்பதற்கு ஒன்றுமேயில்லை என்றும் அவர் அச்சந்தர்ப்பத்தில் கூறியிருந்தமை முக்கிய விடயம். இந்நிலையில் பல தடவைகள் உணவு தவிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த தமிழ்க் கைதிகளுக்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமிழ் பிரதிநிதிகளால் வழங்கப்பட்டு வருவது என்னவோ ஆறுதல் வார்த்தைகளும் நம்பிக்கைகளும் மட்டும…
-
- 0 replies
- 415 views
-
-
"ஒரு மனிதனின் பயங்கரவாதி மற்றொரு மனிதனின் சுதந்திர வீரன்!" / "One man's terrorist is another man's freedom fighter." "பயங்கரவாதி" என்பது அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை என்றாலும் பலவேளைகளில் சரியான அர்த்தம் இல்லாமலும் பாவிக்கப்படுவதால், அது ஒரு தெளிவான அர்த்தத்தை இன்று இழந்துவிட்டது. "பயங்கரவாத" செயலை வன்முறையின் பயன்பாடு என்று வரையறுப்போம், அங்கு ஒருவர் அநியாயமான முறையில் அப்பாவி பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கிறார். ஒரு அரச இராணுவ நடவடிக்கையின் பொழுது பாவிக்கப்படும் வன்முறைகள், அப்பாவி பொதுமக்களுக்கும் தீங்கு விளைவிக்களாம் என்று நியாயமாக எதிர்பார்க்கப்படவில்லை. எனவே, அரச இராணுவ நடவடிக்கைகள் இரு கூறுகளைக் கொண்டுள்ளன. ஒன்று நியாயமான அரச இராணுவ நடவடிக்கை …
-
-
- 2 replies
- 377 views
-
-
அரசியல் கைதிகளுக்கு என்று ஓர் அமைப்பு எதுவும் கிடையாது. கைதிகள் தாமாகப் போராடத் தொடங்கும் போது அதை அரசியல்வாதிகள் தத்தெடுப்பதே வழமை. இம்முறை வடமாகாண முதலமைச்சர் இது விடயத்தில் கூடுதலான அக்கறையைக் காட்டுவதாகத் தெரிகிறது. கைதிகளும் அவரை ஒப்பீட்டளவில் அதிகளவில் நம்புவது போலத் தெரிகிறது. கைதிகளுக்கென்று ஓர் அமைப்பு எதுவும் கிடையாது என்று அவரும் கூறியிருக்கிறார். அரசியல்கைதிகளுக்கென்று ஏன் ஓர் அமைப்பு உருவாக்கப்படவில்லை? முன்பு அரசியல் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்ட ஓர் அரசியல் செயற்பாட்டாளர் சொன்னார் “இப்போதுள்ள அரசியல் கைதிகளில் அநேகமானவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழு; கைது செய்யப்ட்டவர்களே. தேசத்துரோகம், அல்லது தேசிய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைக…
-
- 0 replies
- 439 views
-
-
நீராவியடியில் குருகந்த புற்றுநோயால் இறந்துவிட்ட குருகந்த விகாரையின் விகாராதிபதி மேதாலங்காரகித்தி தேரரின் உடல் நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் கடந்த 23 அன்று அடாவடித்தனமாகவும், அராஜகத்தனமாகவும் தகனம் செய்ததை அனைவரும் கவனித்தோம். ஏற்கெனவே அந்த பிரதேசத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட விகாரை குறித்த சர்ச்சை இன்னமும் தீராத நிலையில் இந்த அக்கிரமம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை நீராவியடி சர்ச்சையோடு பிக்குகளின் சண்டித்தன வரலாற்று நீட்சியையும் சுருக்கமாக பதிவு செய்கிறது. ஞானசார தேரர் நீராவியடியில் என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமான நேரத்தைக் கொண்ட வீடியோ காட்சியொன்றைக் காணக் கிட…
-
- 0 replies
- 1.2k views
-
-
புதிய ஜனாதிபதி முன்னுள்ள பிரதான சவால் புதிய ஜனாதிபதியாக வரப்போகின்றவருக்கு பல சவால்கள் உள்ளன. விசேடமாக தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதிலும் யுத்தத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் பல சவால்களை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படப்போகின்றவர் எதிர்கொள்ளவேண்டும். அவை இலகுவாக தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் அல்ல. பல வழிகளிலும் பேச்சுவார்த்தைகளை நடத்தி தென்னிலங்கை மக்களுக்கு சரியான தெளிவுபடுத்தல்களை முன்னெடுத்து சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறான தீர்வுகளை எட்டுவது அவசியமாகும். அவை சவாலான பணிகள் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஜனாதிபதி…
-
- 3 replies
- 763 views
-
-
- கார்வண்ணன் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் வீசா உதவி அதிகாரியாகப் பணியாற்றும் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் என்ற பெண், கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை, இலங்கை அரசாங்கம் கையாளுகின்ற விதம் கடுமையான சர்ச்சைகளை தோற்றுவித்திருக்கிறது. ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக் ஷ பதவியேற்று ஒரு வாரத்தில் அந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. அதுகுறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்கு சுவிஸ் தூதுவர், கொண்டு சென்றிருந்தார். நியூயோர்க் ரைம்ஸ் மூலம், ஊடகங்களிலும் அந்தச் செய்தி பரவத் தொடங்கியது. இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக குற்ற விசாரணைத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அரச…
-
- 0 replies
- 627 views
-
-
– நவீனன் (சிறிலங்காவில் இனப் பிரச்சினைக்கு அடிப்படை காரணம் மொழி வெறி என்பது தான் அடிப்படைக் காரணம் என்றாலும், தற்போது ஆளும் அனுர அரசும் சிங்கள மொழிக்கே தொடர்ந்தும் முன்னுரிமை கொடுத்து வருகிறது) தமிழர் தாயகத்தில் உள்ள நிர்வாக கட்டமைப்புகளை மிக மிக தீவிரமாக தற்போதய அனுர அரசும் திட்டமிட்டு சிங்கள மயப்படுத்தி வருகின்றது. அதன் ஒரு வெளிப்பாடாகவே இந்தியப் பிரதமர் மோடியின் வருகையின் போது தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்பட்டது.1956 ம் ஆண்டில் எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் தனிச்சிங்கள சட்டமே ஈழத்தில் நீண்ட காலமாக நடக்கும் இனப் போராட்டத்தின் மூல காரணி என்பதை இந்த அரசும் மறந்து போய்விட்டது போல தோன்றுகிறது. மோடிக்கு தமிழில் வரவேற்பு இல்லை: இந்தியப் பிரதமர் இலங்கைக்கு ஏப்ரல்…
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
காலனித்துவத்திலிருந்து நவகாலனித்துவத்துக்கு கைமாற்றும் சதியே நமது சுதந்திர நாள். ஆட்சியையும், அதிகாரங்களையும். பொறுப்புகளையும் தமிழர்களிடமிருந்து பறித்து சிங்களவர்களிடம் ஒப்படைத்த நாள் இது. தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நசுக்குவதற்கான அரச இயந்திரத்தை சிங்களவர்களிடம் கொடுத்த நாள் இது. இலங்கையின் சனத்தொகையில் 11 வீத இந்திய வம்சாவழித் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்குவதற்காக வழங்கப்பட்ட லைசன்ஸ் இந்த சுதந்திரம். டொனமூர் யாப்பு தொடக்கம் இறுதி யாப்பு வரை தமிழர்கள் எதிர்த்தே வந்துள்ளனர். சோல்பரி யாப்பு மாத்திரம் விதிவிலக்கு. சுதந்திரத்துக்கு வித்திட்ட அந்த யாப்பு தமிழர்களை நசுக்க மட்டுமே பயன்பட்டது. “சுதந்திரம்” என்பதை விட தமிழர்களுக்கு அது ஆங்கிலேயர்களும், சி…
-
- 0 replies
- 441 views
-
-
-இலட்சுமணன் உள்நாட்டு அரசியல் செயற்பாடுகளும் சர்வதேச அணுகுமுறைகளும், இலங்கை அரசியலுக்குத் தேவையான, தேர்தல் வியூகங்களை அமைத்துக் கொடுத்துள்ளன. என்றுமில்லாத அளவுக்குத் தமிழ் தரப்பினரின் பிரிவினைப் போக்கும் சிங்கள தேசியவாத கட்சிகளின் ஒன்றிணைதலும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிதைவும் முஸ்லிம் கட்சிகளின் அரசியல் கையறு நிலையும், இலங்கை அரசியலில் மீள முடியாத, தேசியவாத சிந்தனைகளின் வௌிப்பாடுகளாகவே கருதவேண்டியுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் வியூகத்தில், சிங்களத் தேசியவாத அரசை நிலைநிறுத்த, பொதுஜன பெரமுனவும் சுதந்திரக் கட்சியும் முறையாகத் திட்டம் வகுத்துச் செயற்பட ஆரம்பித்துள்ளன. அதன் விளைவாக, வடக்கு, கிழக்கு தவிர்ந்த பிரதேசங்களில், பொதுஜன பெரமுன, சுதந்திரக் கட்சி…
-
- 0 replies
- 948 views
-
-
புதிய அரசியலமைப்பும் அரசியல் தீர்வும் புதிய அரசியலமைப்பின் பூர்வாங்க வரைவு (Draft Constitution) எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு–செலவுத்திட்டம் மீதான விவாதம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்கத்தலைவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த வருடத்துக்கான அரசாங்கத்தின் வரவு–செலவுத் திட்டம் நவம்பர் 10 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என்றும் தொடர்ந்து ஒருமாத காலத்துக்கு அதன் மீதான விவாதம் நடைபெறும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறானால், அரசியலமைப்பு வரைவு இன்னமும் 6 வார காலத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டாக வேண்டும். இவ்வருட ஆரம்…
-
- 0 replies
- 527 views
-
-
இலங்கையில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த அமெரிக்காவினால் முடியுமா? -தேவநேசன் நேசையா Bharati November 8, 2020 இலங்கையில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த அமெரிக்காவினால் முடியுமா? -தேவநேசன் நேசையா2020-11-08T22:42:04+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore தேவநேசன் நேசையா தெற்காசிய மற்றும் தென்கிழக்காசியாவிற்கான (இலங்கை, இந்தியா, மாலைதீவு, இந்தோனேசியா, வியட்நாம்) அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவின் விஜயத்தின் பிரதான குறிக்கோள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவை அதிகரிப்பதற்காகவேயாகும். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் அவரது…
-
- 0 replies
- 679 views
-
-
இந்தோ- பசுபிக் பாதுகாப்பு மாநாட்டில் இலங்கை பங்குபற்றியது ஏன்? — ஜோ பைடன் நிர்வாகத்தின் அணுகுமுறை கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்புடையதாக இருக்குமென்ற நோக்கில், அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத் தாபனத்தின் 480 மில்லியன் டொலர்கள் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான எதிர்ப்பை பௌத்த குருமார் கைவிடக்கூடும். —- அ .நிக்ஸன்- இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பது குறித்த ஏற்பாடுகளிலேயே அமெரிக்க ஜனாதிபதியாகப் புதிதாகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடன் கவனம் செலுத்துவாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவுடன் அளவுக்கதிகமான குழப்பங்களையும் முரண்பாடுகளையும் உருவாக்கிவிட்டாரென்ற உணர்வு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு …
-
- 0 replies
- 424 views
-
-
‘பொத்துவில் முதல் பொலிகண்டி’ போராட்டம்: வயிற்றெரிச்சல் கோஷ்டிகள் -புருஜோத்தமன் தங்கமயில் ஜனநாயகப் போராட்டங்களை நோக்கி, மக்கள் திரள்வதை அடக்குமுறையாளர்களும் அவர்களின் இணக்க சக்திகளும் என்றைக்குமே விரும்புவதில்லை. இங்கு ‘அடக்குமுறையாளர்’கள் அடையாளத்துக்குக்குள், அரசுகள், அரசாங்கங்கள், பெரும்பான்மைவாதம், இனவாதம், மதவாதம் உள்ளிட்ட கூறுகள் அடங்குகின்றன. ‘இணக்க சக்திகள்’ என்ற அடையாளத்துக்குள், அடக்குமுறையாளர்களிடம் சலுகை பெறும் தரப்புகளும், குறுகிய அரசியல் மூலம் ஆதாயம் தேடும் தரப்புகளும் உள்ளடங்குகின்றன. இவ்வாறான தரப்புகள்தான், போராட்டங்களை ஊடறுக்கின்றன; காட்டிக் கொடுக்கின்றன. பௌத்த சிங்களப் பேரினவாத அடங்குமுறைகளுக்கு எதிராக, தமிழ் மக்கள் அரசியல் உரி…
-
- 0 replies
- 448 views
-
-
சர்ச்சைக்குரிய உரை மீண்டும் ஆட்சிக்கு மகிந்த ராசபக்ச - கருணா |
-
- 1 reply
- 433 views
-
-
ஜெனீவா தீர்மானம் ஏற்கப்படாத நிலையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா சொல்லப்போவது என்ன? 1983 ஆம் ஆண்டில் இருந்து 2009ஆம் அண்டு முள்ளிவாய்க்கால் அவலம் வரை எத்தனை கண்டனங்கள் அழுத்தங்கள். அத்தனையும் சலித்துப்போய்விட்டன. பொதுநலவாய நாடுகளின் மாநாடு இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறும்போது இனப்பிரச்சினைத் தீவுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் இந்தியாவும் கூறுகின்றது. ஏன் பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்காத அமெரிக்காவும் எதிர்பார்க்கின்றது. ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரை இந்த கண்டனங்கள் அழுத்தங்கள் போன்றவற்றை 1983ஆம் ஆண்டில் இருந்து காண்கின்றனர். 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடைபெற்றபோது எத்தனை கண்டனங்கள் எழுந்தன. ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் கூட இலங்கை நிலைமை விவாதிக்க…
-
- 1 reply
- 840 views
-
-
முற்போக்கின் தோல்வி ஏன்? -1 ஜெ, காந்தியம் இன்று உரையை அதிகாலையில் கேட்டேன் மீண்டும். உலகச்சிந்தனை போக்கு முதல் அது இந்தியாவுக்கு வந்தது வரை ஒரு வரலாற்று சித்திரத்தையும் அளித்த உரை. கேட்கும்போது தோன்றியதும், பதில் தெரியாததுமான கேள்வி இது. சிந்தனையும் சமூகமும் முன்னேதானே செல்லும்? தன் எல்லா போதாமைகளுடனும் இடதுசாரிச் சிந்தனை உலகை நல்ல விஷயங்களை நோக்கித்தானே முன்னகர்த்தியது? நம் காலத்தில் நாம் மேலும் முன்னல்லவா நகரவேண்டும்? ஜனநாயகம் உள்ள தேசங்களில் மக்கள் என்ன நினைகிறார்கள் என்பதை வாக்குகள் மூலமாவது அறிய இயல்கிறது, பிரிட்டனின் ஐரோப்பிய துண்டிப்பு, டிரம்ப் வெற்றி, இங்கே சமூகம் மோதியை தேர்தெடுத்தது எல்லாமே உலகம் வலதுசாரி கருத்தியலையும் தேசியவாதத்தையும் …
-
- 1 reply
- 634 views
-
-
ஐரோப்பிய ஆதிக்கக் கப்பல் ஆட்டம் காண்கிறதா-பா.உதயன் சீனாவின் பெரும் அலையோடு மோதி மூழ்கிக்கொண்டிருகிறதா இருநூறு வருட கால ஐரோப்பிய அதிகார ஏகாதிபத்தியம். முழித்து விட்டது ஆசியாவில் படுத்திருந்த சிங்கம் ஒன்று. இப்போ வேட்டை ஆட ஆரம்பித்து விட்டது . கொஞ்சம் ஆடித்தான் போய் இருக்கிறார்கள் ஐரோப்பியரும் அமெரிக்கரும். ஆசியாவில் இருந்து புறப்பட்ட றகன் ஒன்று அனைத்து உலக வேலிகளையும் அறுத்துக் கொட்டி கொழுத்து பெருத்து இருக்கிறது பொருளாதார பெருச்சாளி ஒன்று. நெப்போலியன் சீனாவை பார்த்து சொன்னது போலவே ஆசியாவில் சிங்கம் ஒன்று உறங்கிக்கொண்டிருக்கிறது. அது முழிக்கும் போது உலகம் தாங்காது “என்றான் Let China Sleep, for when she wakes, she will shake the world,” அதே போல் கொழுத்த பணக்கா ர…
-
- 0 replies
- 419 views
-
-
மக்களின் சந்தேகம் களையப்பட வேண்டும் http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-10#page-2
-
- 0 replies
- 249 views
-
-
புதிய ஆண்டைத் திட்டமிடுவது – நிலாந்தன். January 2, 2022 ஒரு புதிய அரசியல் ஆண்டில் என்ன காத்திருக்கிறது? அல்லது என்ன செய்ய வேண்டும்? என்று முடிவெடுப்பதெல்லாம் கடந்த ஆண்டின் தொடர்ச்சியாகத்தான் அமைய முடியும். எனவே கடந்த ஆண்டைப்பற்றிய தொகுக்கப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில்தான் புதிய ஆண்டைத் திட்டமிடலாம். கடந்த ஆண்டில் தமிழ் அரசியலில் ஒப்பீட்டளவில் மூன்று முக்கிய நகர்வுகள் இடம்பெற்றன. முதலாவது- கடந்த மார்ச்மாத ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு மூன்று கட்சிகள் ஒருங்கிணைந்து ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைத்தன. இரண்டாவது-கடந்த செப்டம்பர்மாத ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டு கோரிக்கையை மு…
-
- 2 replies
- 705 views
-