Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அமெரிக்கத் தீர்மானம்: நேற்று இன்று நாளை - யமுனா ராஜேந்திரன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 12 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆதரித்து 25 நாடுகளும் எதிர்த்து 13 நாடுகளும் வாக்களித்திருக்கின்றன. சென்றமுறை இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகள் வாக்களித்திருந்தன என்பது இங்கு சுட்டத்தக்கது. இந்த வீழ்ச்சியை சர்வதேச நாடுகளிடம் இலங்கை செல்வாக்கிழந்துவிட்டது என தயான் ஜயதிலக குறிப்பிடுகிறார். 8 நாடுகள் நடுநிலைமை வகித்திருக்கின்றன. காலம் சென்ற சாவேசின் 'இருபத்தியோராம் நூற்றாண்டு சோசலிச' நாடான வெனிசுலா தவிர பெரும்பாலுமான இலத்தீனமெரிக்க நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருக்கின்றன. உலகின் மிக மோசமான மனித உரிமை மீறல் ப…

  2. [size=4]அவுஸ்திரேலிய கனவும் தமிழர் அரசியலும் - யதீந்திரா சமீப நாட்களாக அவுஸ்திரேலியாவிற்கு செல்பவர்கள் பற்றிய செய்திகளே ஊடகங்களில் முக்கிய இடத்தை பிடித்திருந்தன. மிகவும் குறைந்த செலவில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முடியும் என்பது, தமிழ் சமூகத்தில் குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் கவர்ச்சியானதொரு விடயமாகவும் இருக்கிறது. இதுவரை பல லட்சம் கொடுத்து, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முடியாமல் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவும் அமைந்திருக்கிறது. இவ்வாறு அவுஸ்ரேலியாவிற்கு கடல் வழியாக தமிழர்கள் அனுப்பிவைக்கப்படுவதற்கு பின்னால் ஓர் உள்நோக்கம் இருப்பதாகவும், இது தமிழர்களின் சனத்தொகையை குறைப்பதற்கு அரசு நுட்பமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கை என்றும் அபிப்பி…

    • 1 reply
    • 816 views
  3. மாறாத ஆட்சியாளர்களும் சிந்திக்க வேண்டிய தமிழர்களும்

    • 0 replies
    • 816 views
  4. காந்திய தேசத்திலிருந்து கிடைத்த உயிர்ப்பலிச் செய்தி மனிதாபிமானமுள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தீவிரவாதம், மிதவாதம் என்பதற்கு அப்பால் காந்தீயவாதம் என்ற அஹிம்சாவழிக்கொள்கை சக்தியுடையதாகவும் உயிர்ச்சேதமற்றதாகவும் அனைவரும் விரும்பத்தக்கதாகவும் உள்ளது. ‘கோபம் வேண்டாம் - மன்னித்துவிடு’, ‘அஹிம்சையின் உன்னதம் அதனை அடையும்போது தெரியும்’ என்றெல்லாம் போதிக்கிறது காந்தீயவாதம். துப்பாக்கி முனையில் நிற்கும்போதும் மௌனம் ஆயிரம் மடங்கு பலத்தினைக் கொண்டிருக்கும் எனப் போதிக்கப்பட்டு காந்தீயவாதம் முளைவிட்டு உயிர்பெற்ற இந்திய தேசத்திலிருந்தா இச்செய்தி வந்திருக்கிறது என்பதை எண்ணுகையில் உள்ளம் பதைபதைக்கத்தான் செய்கிறது. ஆம்! இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்த…

  5. இனப்பிளவை இல்லாமல் செய்ய ஜனாதிபதிக்கு இருக்கும் காலஎல்லை இதுவே January 26, 2023 — கலாநிதி ஜெகான் பெரேரா — பெருமளவு தாமதத்துக்கு பிறகு இறுதியில் தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி தேர்தல்கள் மார்ச் 9 நடத்தப்படும் என்று தீர்மானித்திருக்கிறது. இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டதன் பிரகாரம் ஏற்கெனவே ஒரு வருடத்தினால் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. ஒரு வருடத்துக்கும் அப்பால் தேர்தல்களை ஒத்திவைத்தால் அது சட்டவிரோதமான ஆட்சிமுறைச் சிக்கலுக்குள் நாட்டைத் தள்ளிவிடும் என்பதுடன் அதன் விளைவாக சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை தோற்றுவிக்கும். நாடு இப்போது தேர்தல் திசை நோக்கி நகர்த்தப்படுகிறது. இது ஒன்றும் …

  6. ' காவோலை விழ குருத்தோலை சிரிக்கிறது' என்பது தமிழ் மொழியில் உள்ள ஒரு கருத்து மிக்க பழமொழியாகும். இன்னொன்று இருக்கின்றது ' சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது' என்பது. இந்த இரு தமிழ்ப் பழமொழிகள் பற்றி தற்போது ஐயம் நிலவுகின்றது. தற்போது ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஏராளமான குருத்தோலைகள் விழுந்து விட்டன. தற்போது அந்தக் குருத்தோலைகளின் உக்கிய உரத்திலே காவோலைகளாக விழ வேண்டியவர்கள் புத்துணர்வு பெற்றுள்ளார்கள். வருகின்ற 21ம் திகதி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உண்ணாவிரதம் ஒன்றை தந்தை செல்வா தூபிக்கு அருகில் ஆரம்பிக்க இருக்கின்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டம் பல கோரிக்கைகளை முன் வைத்து நடாத்தப்பட இருக்கின்றது. இந்தக் கோரிக்கைகள் அரச தரப்பால் நிறைவேற்றப்படுகின்ற…

  7. கடலுடன் கலக்கும் ’எழுபது இலட்சம்’ காரை துர்க்கா / 2020 மே 26 கொரோனாவும் அது தொடர்பிலான நிகழ்காலம், எதிர்காலத் தாக்கங்கள் குறித்து, ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்திருந்த கொழும்பு பல்கலைக்கழக பொருளியல்த் துறைப் போராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம், ''ஒரு வருடத்தில் சுமார் 70 இலட்சம் ஏக்கர் கனஅடி மகாவலி நீர், திருகோணமலை, கொட்டியாரக்குடாக் கடலில் கலக்கின்றது'' எனத் தெரிவித்திருந்தார். அதாவது, மலையகத்தில் ஊற்றாகி வருகின்ற இந்தச் சொத்து (நன்னீர்) வீணே எவ்வித பிரயோசனமும் இன்றி கடலுடன் சங்கமமாகின்றது. ''இயற்கை அன்னை வழங்குகின்ற ஒரு சொட்டு நீர் கூட, வீணே கடலுடன் கல(ந்து)க்க விடக்கூடாது; அந்த நீரைச் சேமிக்க வேண்டும்; அதற்காக நீர்நிலைகள் அமைக்க வேண்டும்; அவை, எத…

  8. தமிழர் அரசியலின் ‘ஆகாத காலம்’ -இலட்சுமணன் தமிழ்த் தேசிய அரசியல் வரலாறு தெரியாதவர்கள், தாம் நினைத்ததை எல்லாம் வரலாறாக எடுத்தியம்பி, வரலாற்றுத் திரிபுகளைச் செய்து வருகின்றார்கள். இதன்மூலம், அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் நிறைந்த தமிழர் வரலாறு, திரிபுபடுத்தப்பட்டு, மூடிமறைக்கப்பட்டு வரும் நிலை உருவாகிறது. புறநானூற்று காலத்துப் பாரம்பரியம் எனப் பரப்புரை செய்யப்படும் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தையும், அதற்கு முன்னரான தமிழர் தம் அஹிம்சை வழிப் போராட்டத்தையும் உள்ளடக்கிய, இலங்கையின் சுதந்திரத்துக்கு (1948க்கு) பின்னரான வரலாறு, தமிழர் வரலாறு, தமிழிலக்கிய வரலாறு என எழுதப்பட்டாலும், அவற்றில் அஹிம்சை, போர், வீரம், வெற்றி, தோல்விகள் போன்றவை, வரலாறாகப் பதியப்படுவதற்கான …

  9. ஏற்கனவே தன் மேலாடைகள் அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு இடுப்பில் ஒரு சிறுதுணியை மட்டும் கட்டிக் கொண்டு நிற்கையில், அருகில் நிற்கும் ஒருவனிடம் அதையும் கழற்றிக் கொடுத்துவிட்டு அப்படிக் கொடுப்பதால் நட்டம் எதுவும் வந்து விடப் போவதில்லை எனக் கூறினால் எப்படி இருக்கும். அடுத்த கட்டமாக மானத்தை மறைக்கும் கடைசி உள்ளாடையையும் கழற்றிக் கொடுத்துவிட்டு நிர்வாணம் பற்றிக் கவலைப்படாமல் அதற்காகப் பெருமைப்படும் நிலையும்கூட ஏற்படலாம். தற்சமயம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலை இப்படித்தான் தோன்றுகின்றது. ஆனால் இங்கு ஒரு படிமேலே போய் தனது இடுப்புத் துணியை மட்டுமன்றித் தனது சகோதரனின் இடுப்புத் துணியையும் கழற்றிக் கொடுக்கும் கைங்கரியத்தை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது. …

  10. 2009ம் ஆண்டுமுதல் 2013ம் ஆண்டுவரை உலகத்திற்கு அதிகளவு ஆயுதங்கள் வழங்கி முன்னணியில் நிற்கும் நாடுகளின் வரிசை. அமெரிக்கா 29 % ருசியா 27 % யேர்மனி 07 % சீனா 06 % பிரான்சு 05 % ஆதாரம்; Ludwigsburger Zeitung பாத்திரமறிந்து பிச்சைபோடு என்றொரு பழமொழி தமிழில் இருப்பது இவர்களுக்குத் தெரியுமா?????

    • 2 replies
    • 814 views
  11. 20ஆவது திருத்த சட்டமூலமும் சகோதர யுத்தமும் Johnsan Bastiampillai -புருஜோத்தமன் தங்கமயில் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிரான அலையொன்று, ஆளுங்கட்சிக்குள் இருந்து, எழுந்து வரும் காட்சிகளைக் கடந்த சில வாரங்களாகக் காண முடிகின்றது. அதுபோல, அமரபுர, ராமன்யா பௌத்த பீடங்கள், கத்தோலிக்க பேராயர்கள் பேரவை ஆகியவைகூட, 20ஆவது திருத்தச் சட்டமூலம் கைவிடப்பட்டு, புதிய அரசமைப்பொன்றை நோக்கி, அரசாங்கம் நகர வேண்டும் என்று கோரியிருக்கின்றன. மக்களின் இறைமைக்கு எதிரான அரசமைப்பையோ, அரசமைப்பின் மீதான திருத…

  12. ஈழ மக்களுக்கும் திபெத்தியர்களுக்கும் துரோகம் செய்யும் இந்து ராம் அண்மையில் நாகர்கோவில் நகரில் இயங்கும் ஒரு நூல் விற்பனை நிலையத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் தேடி சில நல்ல நூல்கள் வாங்கினேன். அதில் ஒன்றுதான் 'திபெத் சில புரிதல்கள்'. தி ஹிந்து நாளிதழின் தலைமை ஆசிரியர் என்.ராம் அவர்கள் திபெத் பிரச்சனை குறித்து 'புரன்ட்லயன்' இதழில் (மே 23, 2008) எழுதிய கட்டுரை இக்குறுநூலில் தமிழில் தரப்பட்டுள்ளது. திபெத் பிரச்சனை குறித்து ஐந்து கேள்விகள் என்ற தலைப்பில் கொல்கத்தாவில் உள்ள சீன குடிமக்கள் நலன் காக்கும் அலுவலகத்தின் தலைமை அதிகாரியான மாவேசிவேய் எழுதியுள்ள கட்டுரையும் இணைக்கப்பட்டுள்ளது (04.06.2008). தமிழாக்கம் செய்த இலக்குவன், அறிமுகமும் எழுதி திபெத்திய புத்தமதம் …

    • 0 replies
    • 814 views
  13. தேரும் தேசியமும் - நிலாந்தன் தென்மராட்சியில் வரணியில் ஒரு கோயிலில் கனரக வாகனத்தின் உதவியோடு தேர் இழுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் போதியளவு ஆட்கள் இல்லாத காரணத்தால், வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டியிருந்ததாகவும், அவ்வாறு வேறு சமூகங்களுக்கு, அதாவது சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க விரும்பாத ரீதியில் நிர்வாகம் தேரை இழுப்பதற்கு கனரக வாகனத்தைப் பயன்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இச் சம்பவம் இணையப் பரப்பில் குறிப்பாக முகநூலில் கடும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே அண்மையில் சிவசேனா என்ற ஓர் அமைப்பு பசு வதை தொடர்பாக சர்ச்சையைக் கிளப்பிய அதே தென்மராட்ச…

  14. பலஸ்தீனம்: இஸ்ரேலின் நிலப்பறிப்பும் அமெரிக்கத் தீர்வுத் திட்டமும் August 8, 2020 ரூபன் சிவராஜா கொரோனா நெருக்கடி முழு உலகையும் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டிருக்கின்ற நிலையிலும் ஆக்கிரமிப்பு சக்திகள் நெகிழ்வுப் போக்கிற்குரிய அணுகுமுறை மாற்றங்களுக்குத் தயாரில்லை. பலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை (West Bank) நிலங்களைப் பலவந்தமாக தனதாக்கிக் கொள்ளும் இஸ்ரேலின் சமகால முனைப்பு அதனையே வெளிப்படுத்துகின்றது. ஐ.ந-வும், ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்கா தவிர்த்த உலக நாடுகள் பலவும் இஸ்ரேலின் இந்த முனைப்பினைச் சட்ட விரோதமெனக் கண்டிக்கின்றன. இருப்பினும் இஸ்ரேலின் கடும்போக்கிற்கு அமெரிக்கா வழமை போல முண்டுகொடுக்கின்றது. வழமை போல என்பதற்கு மேலாக டிரம்ப் நிர்வாகம் பிரத்…

  15. 911 இன் இரகசிய வரலாறு http://www.youtube.com/watch?v=mhtzWcaZx5A http://www.youtube.com/watch?v=s1ZHUl_PT2M

  16. நிகழ்ந்திருக்கவே கூடாத பயங்கரம் மொஹமட் பாதுஷா / 2019 ஏப்ரல் 28 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:17 Comments - 0 இலங்கையின் பல பாகங்களிலும், இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் அதிர்ச்சிகளில் இருந்து, நாடும் நாட்டு மக்களும் இன்னும் முழுமையாக மீளவில்லை. கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினத்தில், தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து, மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டமிட்ட குண்டுத்தாக்குதல்கள், வரலாற்றில் மிக மோசமான இழப்பையும் துயரஅனுபவத்தையும் தந்திருக்கின்றது. இந்த நாட்டில், இனசெளஜன்யத்தோடு வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான உறவை, இத்தாக்குதல்கள் சிதைத்திருப்ப…

  17. அதிகாரப் பரவலாக்கலா, அபிவிருத்தியா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 07:19 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, நவம்பர் 18ஆம் திகதி, இலங்கையின் ஜனாதிபதியாகச் சத்தியப் பிரமாணம் செய்து, 24 மணித்தியாலங்களுக்குள் இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதி ஒருவர், அழைப்பின்றியும் ஒரு நாளுக்கு முன்னராவது அறிவிக்காமலும் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அதேபோல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் தமது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக, நவம்பர் 29 ஆம் திகதி, இந்தியாவுக்கு விஜயம் செய்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, நாடு திரும்பினார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம…

  18. 'சட்டப் புலமைக்காக - முன்னாள் நீதியரசர் என்பதற்காக மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை' -அ.நிக்ஸன்- 21 அக்டோபர் 2013 "கோமாளிகள் போன்றும் சந்தர்ப்ப வாதிகளாகவும் உருமாறி நிற்பது 60 ஆண்டுகால போராட்டத்தை கேவலப்படுத்தும் செயல்." சம்பந்தனுடைய பாராளுமன்ற உரைகளும் விக்னேஸவரன் அறிய வேண்டிய தகவல்களும் Notes—13 ஆவது திருத்தச் சட்டத்தை தும்புத் தடியாலும் தமிழர்கள் தொட்டுப் பார்க்க மாட்டார்கள் என்று கூறி விட்டு அந்த சட்டத்தின் கீழான மாகாணசபை முறையை தூக்கிப் பிடித்து அதே மக்கள் முன்னிலையில் நீங்கள் கோமாளிகள் போன்றும் சந்தர்ப்ப வாதிகளாகவும் உருமாறி நிற்பது 60 ஆண்டுகால போராட்டத்தை கேவலப்படுத்தும் செயல். சர்வதேச அரசியலில் என்ன நடக்கின்றது. இலங்கை இனப்…

  19. தமிழ் நாட்டிலிருந்து அங்குள்ள பெண்கள் இயக்கத்தினைச் சார்ந்த பெண்ணிலைவாதியொருவர் ஜுன் மாதம் 23ம் திகதி சர்வதேச விதவைகள் தினத்தினை நினைவுகூரும் ஓர் சிறிய நிகழ்வுக்கு அழைக்கப்பட்டார். இது வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி பிரதேச செயலாளர் அலுவலகத்தில் சுமார் 30 பெண்களின் பங்கேற்றலுடன் நடந்தது. குறிப்பிடக்கூடத் தேவையில்லாத சம்பவம். ஆனால், துரதிர்~;டவசமாக வட மாகாணத் தேர்தல் இடம்பெறப்போகும் காலத்தில் இது ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. அந்த நிகழ்வுக்கு வந்திருந்த புலனாய்வாளர்களினால் இது ஸ்ரீலங்கா அரசினை நிலைகுலையச் செய்ய தமிழ்நாடு செய்கின்ற சதித்திட்டம் என்று தலைமையகத்துக்கு அறிக்கையிடப்பட, ஆரம்பித்தது சதிராட்டம். பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு இந்த விடயம் கையளிக்கப்பட்டு உடனேயே கு…

  20. ஜெனீவா களத்தில் வெற்றி யாருக்கு? ஜெனிவாவில் அடுத்தவாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.இம்மாதம் 27ஆம் திகதி தொடங்கும் இந்தக் கூட்டத்தொடர் அடுத்தமாதம் 23 ஆம் திகதி வரை தொடரப்போகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல நாடுகளின் விவகாரங்கள் குறித்த முக்கியமான விவாதங்கள் அனல் பறக்கும் வகையில் இடம்பெறப் போகிறது. சிரியா, லிபியா, மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளின் விவகாரங்கள் இதில் முக்கியமானதாக இருக்கும். குறிப்பாக, இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று இந்தக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படவுள்ளது. இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரப்போகின்ற நாடு எது என்பது தெளிவாகத் தெரியாது போனாலும் தீர்மானம் வரப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது. ஏனென்றால் இதனை அமெர…

    • 0 replies
    • 813 views
  21. நினைவேந்தல் உள்ளதா உரிமை? -என்.கண்ணன் “உள்நாட்டு நீதிமன்றங்களின் மூலம் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை பெற்றுக் கொடுக்க முடியாது போனால், அடுத்த கட்டமாக சர்வதேச நீதிமன்றங்களை அல்லது சர்வதேச ரீதியாக நீதியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளை பயன்படுத்தியிருக்க வேண்டும்” “திலீபன் நினைவேந்தலுக்கு தடைவிதிக்கப்பட்ட பின்னர், ஒன்று சேர்ந்து பேச ஆரம்பித்த பத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் சரி, சட்ட விற்பன்னர்களான தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சரி, நினைவேந்தல் விவகாரத்தை சட்ட ரீதியாக தீர்ப்பதற்கு முயற்சிக்கவில்லை” தியாகி திலீபன் நினைவேந்தலுக்காக தொடங்கப்பட்ட போராட்டம், மாவீரர்நாள் நினைவேந்தலுக்காகவும் தொடர்ந்திருக்கிறது. மரணித்தவர்களை நினை…

  22. Started by விசுகு,

    இந்த தலைப்பில் ஒரு வரலாற்றை எழுதத்தொடங்கினேன் . . . . முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் ஐவருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் ஐந்து பேர் மீதான தண்டனையை, நெதர்லாந்து நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. நெதர்லாந்தில், 2003-2010க்கு இடைப்பட்ட காலங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதன்போது பலரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்களையும் இவர்கள் வினிய…

  23. இலங்கைக்கு எதிரான அமெரிக்கா நிறைவேற்றிய தீர்மானம்- ஒரு பார்வை இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மனித உரிமை கவுன்சிலில் மொத்தமாக உள்ள 47 உறுப்பினர்களில் அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்திருக்கின்றன. எதிராக 15 நாடுகள் இலங்கையை ஆதரித்திக்கின்றன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருக்கின்றன. அமெரிக்காவின் பிரேரணையை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டுமென்ற பிரச்சாரத்திலும் பேச்சுவார்த்தைகளிலும் இலங்கையின் பிரமுகர்கள் கடந்த பல வாரங்க…

    • 1 reply
    • 813 views
  24. உள்ளதை உள்ளபடி சொன்ன பிரதமர் Bharati May 6, 2020 உள்ளதை உள்ளபடி சொன்ன பிரதமர்2020-05-06T06:27:33+00:00Breaking news, அரசியல் களம் ‘கனடியர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்டகாலமெடுக்கும்’ என்று உண்மை நிலை எதையும் மறைக்காது, சூழ்நிலையின் யதார்த்தத்தை ஊடகவியலாளர்களுக்கு எடுத்துச் சொன்னார் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. ‘உலகெங்கும் பரவியிருக்கும் இந்தக் கொரோனா தொற்று நோய்பற்றி நாம் இதுவரை படித்த பாடங்களில் இருந்து எம்மால் இதை புரிந்து கொள்ள முடிகின்றது.’ சென்ற திங்கட்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெறும் போலி வார்த்தைகளை எதையும் எடுத்து வீசாது, உண்மையான நிலவரத்தை எடுத்து விளங்கப்படுத்தியதைக் கனடியர்கள் பலரும் பாராட்டினார்கள். கொரோனா வைரஸின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.