நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்துக்கு தீர்வு காண்பதாக புதிய குழுவொன்று புறப்பட்டுள்ளது. உலகத் தமிழர் பேரவையும், சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினரும் இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளனர். இந்த இரு தரப்புகளின் இணைவும் பலத்த சந்தேகங்களையும் விவாதங்களையும் தோற்றுவித்திருக்கின்றது. உலகத் தமிழர் பேரவையின் இந்த நகர்வுக்கு புலம்பெயர் தேசத்தில் உடனடியாகவே எதிர்வினையாற்றப்பட்டிருக்கின்றது. உலகத் தமிழர் பேரவை 2009ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் அந்த அமைப்பு ஒரு சிலருடன் மாத்திரமே இயங்கி வருவதாகவும், புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மை யானவரை அந்த அமைப்பு பிரதிநிதித்துவப்படுத்த வில்லை எனவும் 6 புலம்பெயர் அமைப்புகள் கூட்டாக அறிக்கையிட்டுள்ளன. அத்துடன் உலகத் தமி…
-
- 0 replies
- 454 views
-
-
-ஹரிகரன் இந்திய - சீன எல்லையில் நிகழ்ந்திருக்கின்ற கைகலப்புச் சண்டைகள், இலங்கைக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் ஒரு நிகழ்வு தான். இரண்டு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான உறவுகளைப் பேண முனையும் இலங்கையைப் பொறுத்தவரை, இது சங்கடமான சூழலை தோற்றுவித்திருக்கிறது. இந்திய சீன நாடுகளுக்கிடையில், போர் வெடித்தால் அது இலங்கைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. முதலில் இந்திய- சீன எல்லையில். என்ன நடந்தது என்று பார்த்து விட்டு, அந்தச் சம்பவம் இலங்கையில் விளைவுகளை ஏற்படுத்துமா என்று பார்ப்பதே பொருத்தம். இந்திய சீன எல்லையில், கிழக்கு லடாக் பிரதேசத்தில், உள்ளது கல்வான் பள்ளத்தாக்கு. இமயமலையில், கிட்டத்தட்ட 15 ஆயிரம் அடி உயரத்தில் இருக…
-
- 1 reply
- 454 views
-
-
இஸ்லாமிய சமூகத்தவர் பற்றிய பீதி இலங்கையில் வேரூன்ற ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது - முன்னாள் அமெரிக்கத் தூதுவர் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் ஏற்கனவே அதிகரித்து வருகின்ற இஸ்லாமியரைப் பற்றிய பீதி (இஸ்லாமிய அச்சக்கோளாறு) இலங்கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு வேரூன்ற அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கும் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரும் ஒபாமா நிர்வாகத்தில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்க அமைச்சருமான ரொபேட் ஓ பிளேக், இலங்கை இன்று எதிர்நோக்குவதைப் போன்ற நெருக்கடிகளுக்கான எந்தவொரு நாட்டினதும் பிரதிபலிப்பு தனிப்பட்ட நலன்கள…
-
- 0 replies
- 454 views
-
-
தற்போதுள்ள இலங்கையின் அரசியற் சூழல் பற்றி..... வ.ந.கிரிதரன் இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லீம் மக்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்துள்ள நிலையில் இன, மதவாதம் கக்கும் புத்தமதத்துறவிகளின் இனத்துவேச உரைகளும் , செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன. தமிழ்ப்பகுதிகளிலுள்ள சைவ ஆலயங்களுள்ள இடங்களில் விகாரைகள் கட்டும் முயற்சிகளில் மேற்படி புத்தபிக்குகள் ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசியற் சூழலைப்பொறுத்தவரையில் புத்தமதத்துறவிகளின் செல்வாக்கைக் குறைத்து மதிப்பிட முடியாது. அதே சமயம் புத்தமதத் துறவிகளின் செயலை ஒட்டுமொத்தச் சிங்கள மக்களின் செயற்பாடுகளாகக் கருதி, முழுச் சிங்களச் சமுதாயத்தின் மீதும் பழி போட்டிடச் சிலர் முயற்சி செய்வதும் வருந்தத்தக்கது. புத்தபிக்குகளின் அடாத செயற்பா…
-
- 0 replies
- 454 views
-
-
எழுவர் விடுதலை : தேசிய கட்சிகளின் இருப்பு ஏன் மக்களாட்சியை சிக்கலாக்குகிறது? – ஆர். அபிலாஷ் May 25, 2021 - ஆர்.அபிலாஷ் என்னுடைய “மோடியின் எதிர்காலம்” கட்டுரையை பேஸ்புக்கில் பகிர்ந்த போது அதன் கீழ் பின்னூட்டத்தில் கோதை செங்குட்டுவேல் (Kothai Sengottuvel) ‘தேசிய கட்சிகளின் அவசியம்தான் என்ன, மாநில கட்சிகளின் கூட்டாட்சி மத்தியில் தோன்றும் நிலை ஏற்பட வேண்டும்’ என சொல்லி இருந்தார். இது என் மனத்திலும், மாநில தன்னாட்சி உரிமைகள் பற்றி சிந்திப்பவர்கள் மனத்திலும் உள்ள விருப்பமே. இன்னும் சொல்லப் போனால், இது தமிழ் தேசிய அரசியலின் கோரிக்கையே அல்ல. இதுவே உண்மையான மக்களாட்சி அமைய வேண்டும் என கனவு காண்பவர்களின் கோரிக்கை. ஏனென்றால், இப்போதுள்ள நாடாளுமன்ற தேர்தல் முறையும…
-
- 0 replies
- 454 views
-
-
கப்பலேறுவோர் கதைகள்… ஜெரா படம் | THE CANADIAN PRESS/Jonathan Hayward, Ctvnews “எங்களோடு வந்த நேசன் என்ற ஒருத்தர் கப்பலுக்குள்ளயே கடும் வருத்தத்தில செத்துப் போயிட்டார். அங்கயே சடங்குகள செய்திட்டு, கிடந்த இரும்பில பொடிய சேர்த்துக் கட்டி கடலுக்க எறிஞ்சிட்டம்…” என்று சொன்னவர், அடுத்த வார்த்தையைத் தொடங்கும் முன், ஒரு முடக்குத் தண்ணீர் குடிக்குமளவிலான இடைவெளி எடுத்துக் கொள்கிறார். அந்த நினைவு அவரை அசையாதிருக்கச் செய்திருக்க வேண்டும். அவர் சுரேன் கார்த்திகேசு. இறுதிப் போர் முடியும் வரைக்கும் முள்ளிவாய்க்காலில் இருந்து ஊடகப் பணியாற்றிய பத்திரிகையாளர். “முள்ளிவாய்க்காலில இருந்த ஹொஸ்பிடலுக்குத் தரையாலயும், கடலாலயும் வந்து ஆமிக்காரர் அடிக்கேக்க நானும் அங்க காயப்பட்டு படு…
-
- 0 replies
- 454 views
-
-
மீண்டும் மீண்டும் யாருக்குக் கல்வி மறுக்கப்படுகிறது? கடந்த வாரம், நடந்த சம்பவமொன்றை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்: ஆசிரியரைத்தேடி மாணவர் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார். ஆசிரியரிடம் அவர் வழங்கிய பயிற்சித் தாள்களைத் தரமுடியுமா எனக் கேட்டுள்ளார். ஆசிரியர், அவற்றைத் தான், 'வாட்ஸ்அப்'பில் அனுப்பி விட்டதாகவும் இலக்கத்தைத் தந்தால், தான் அனுப்பி வைப்பதாகவும் சொல்கிறார். மாணவர், பதில் அளிக்காமல் நன்றி சொல்லிவிட்டுத் திரும்பிவிடுகிறார். குழம்பிப்போன ஆசிரியர், மறுநாள் மாணவரின் வீட்டைத் தேடிப்போனார். அம்மாணவர், மிக வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிகிறார். அவர்களிடம் கணினியோ, திறன்பேசியோ கிடையாது. குறித்த மாணவரிடம் பேச முயல்கிறார்ளூ மாணவர் வெளியே வந்து, ஆசிரியர…
-
- 0 replies
- 453 views
-
-
எங்களுக்கு எவரும் மீட்பர்கள் இல்லை. எத்தனையோ வெளிநாட்டவர்களை நாம் பாத்திருக்கின்றோம். ஏமாந்திருக்கின்றோம். எமது போராட்டத்தை அழிக்க உதவிய இந்தியாவோ அந்த நாட்டு அரசின் எந்தவொரு பிரதிநிதிகளோ எங்களுக்கு மீட்பர்களா இருப்பார்கள் என்று நாங்கள் துளிகூட நம்பவில்லை என்று யாழ்.குடாநாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் சிறிலங்காவிற்கு வருகை தந்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளபோதே குடாநாட்டு மக்களில் சிலர் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேனன் சிறிலங்காவிற்கு வந்ததை தாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லையென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவை நாங்கள் நம்பிய காலம் இருந்தது. அது உலகத் தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட, நேசிக்கப்படுகின்ற பெரும் தலை…
-
- 2 replies
- 453 views
-
-
கடந்த மாதம், 29-ம் திகதி எகிப்து நாட்டை சேர்ந்த “எகிப்து ஏர்” என்ற பயணிகள் விமானம், அதே நாட்டில் உள்ள அலெக்சாண்டிரியா என்ற நகரிலிருந்து எகிப்தின் தலைநகரான கெய்ரோவிற்கு, விமானக் குழுவினர் உள்பட ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களுடன் புறப்பட்டபோது மர்ம நபர் கடத்தியது நினைவிருக்கலாம். பிறகு சைப்ரஸ் நாட்டில் தரையிறக்கப்பட்டு பயணிகள் விடுவிக்கப்பட்டனர். விமானத்தைக் கடத்திய சயிஃப் அல்தின் முஸ்தஃபா, சைப்ரஸ் நாட்டில் தஞ்சமடைய கடத்தியதாகவும், சைப்ரஸில் உள்ள தன் முன்னாள் மனைவியைச் சந்திக்க வேண்டி கடத்தியதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாயின. இந்நிலையில், அதே விமானத்தில் பயணம் செய்த அப்து அல்லாஹ் இ ஆஸ்மாவி என்ற 31 வயதுடைய அறுவை சிகிச்சை நிபுணர், அந்த விமானப் பயண அனுபவத்தை…
-
- 0 replies
- 453 views
-
-
இனவாத தாக்குதல் அல்ல சந்தர்ப்பவாத தாக்குதல் உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்த நொடியிலிருந்து நாட்டில் எழுந்த பதற்றம் இன்னும் தீர்ந்தபாடில்லை... இதற்கு மேலாக ஆங்காங்கே ஆயுதங்கள் மீட்பதும் அதிரடி கைதுகளும் மக்களை அச்சத்திலேயே வைத்திருக்கின்றன... இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சமூக வலைத்தளத்தில் ஒருவர் இட்ட பதிவால் ஆத்திரமுற்ற ஒரு தரப்பு கைகலப்பில் ஈடுபட்டது. இதன் நீட்சியாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.... அதில் ஒரு பிரதேசம்தான் மினுவாங்கொடை... சற்று அதிகமாக அடிவாங்கிய இடம் என்று கூட சொல்லலாம். மக்களுக்கு சேதமில்லை. ஆனால் அந்த மக்களின் வாழ்வியலுக்குத்தான் அதிக சேதம். ஆம்... வன்மு…
-
- 0 replies
- 453 views
-
-
20 திருத்தச்சட்டம் நிறைவேறியது : புதிய போராட்டத்திற்கான வாசல் திறக்கப்பட்டது 10/23/2020 இனியொரு... http://inioru.com/wp-content/uploads/2015/09/Gotabaya-Rajapaksa-300x244.png இலங்கை சர்வதிகார அரசு இன்று மீண்டும் ஒரு புதிய சகாப்ததுள் நுளைந்துள்ளது. 20 திருத்தச சட்டத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிய அரசு, தனிமனித சர்வாதிகாரத்தையும், பாசிசத்தையும் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையில் எஞ்சியிருந்த குறைந்தபட்ச முதலாளித்துவ சனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைத்துள்ள ராஜபக்ச குடும்பத்தின் அரசு அதிகாரம் தனது வெற்றியைக் கொண்டாடுகிறது. தமிழ்ப் பேசும் சிறுபன்மைத் தேசிய இனத்தைச் சார்ந்த மக்கள் மட்டுமன்றி சிங்கள மக்களும் கொடிய சர்வாதிகார ஆட்சியை எதிர்க…
-
- 0 replies
- 453 views
-
-
இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னான நிலைமைகள்… தமிழ், முஸ்லிம், மலையக மக்களை நோக்கி…… எம்- பௌசர் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலுக்கான மேடைப்பரப்புரைகள் , பிரச்சாரங்கள் சட்ட ரீதியாக முடிவுக்கு வந்த பின், வாக்களிப்பிற்கு ஒரே ஒரு நாளே எஞ்சியிருக்கும் இந்த தருணத்தில் இக்கட்டுரை எழுதப்படுவதற்கான காரணத்தினை முதலில் சொல்லி விடுவது முக்கியம். தேர்தலில் வாக்களிப்பது தொடர்பில் கட்சிகளின் உறுப்பினர்கள் , அவற்றின் தீவிர ஆதரவாளர்களுக்கு நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்தந்த கட்சித் தலைமைகளின் முடிவுக்கு ஏற்பவும், அவர்களது நிலைப்பாடுகளை சரியெனெ வாதிடுவதிலும்தான் அவர்கள் இப்போது கண்ணாக இருப்பார்களே தவிர, ஒரு பொது நிலைப்பாட்டு சிந்தனை அணுகுமுறைக்கு அவர்கள் தயாராக இருக்…
-
- 0 replies
- 452 views
-
-
நவநீதம்பிள்ளைக்கு அடுத்து மர்சூகி தருஸ்மன்! – ஐ.நா மனிதஉரிமை ஆணையாளராக நியமிக்கப்பட வாய்ப்பு. [sunday, 2014-03-23 19:05:46] ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பதவிக்கு, நவநீதம்பிள்ளைக்குப் பின்னர் மர்சூகி தருஸ்மன் நியமிக்கப்படலாமென ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன. 2014 செப்டெம்பர் மாதத்துடன் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் முடிவடைகின்றது. தென் ஆபிரிக்க இனத்தவரான இவரின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், மனித உரிமைகள் ஆணையாளர் பதவிக்கு ஆசிய வலயத்தைச் சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட வேண்டும். அடுத்த மனித உரிமைகள் ஆணையாளர் பதவிக்கு மர்சூகி தருஸ்மனின் பெயர் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கும் மேலதிகமாக மகளிருக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் ப…
-
- 0 replies
- 452 views
-
-
‘மாற்றம் வேண்டும்’ - பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி ‘எங்களுடைய மக்களுக்காக, மக்களுடைய அபிவிருத்திக்காக, அரசியலில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுதல் என்ற முடிவை எடுத்திருக்கிறேன். நீண்ட காலத்துக்கு, இக்கட்சி ஆட்சி பீடத்தில் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே, இந்த அரசாங்கத்தைப் பயன்படுத்தி, மக்களுக்கு நல்லதொரு சேவை செய்யமுடியும்’ என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார். அவருடனான நேர்காணல் வருமாறு: கே: உங்களுடைய அரசியல் பிரவேசம் எவ்வாறு அமைந்தது? ஆரம்பத்தில் ஆங்கில ஆச…
-
- 0 replies
- 451 views
-
-
மணிக்கு ஏன் வீணை.? அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் கேள்வி.. யாழ்ப்பாண மாநகர சபையில் ஈபிடியின் ஆட்சியை அமைத்தமையின் வாயிலாக மன்னிக்க முடியாத வரலாற்றுத் துரோகத்தை விஸ்வலிங்கம் மணிவண்ணன் புரிந்திருப்பதாக அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் குற்றம் சுமத்தியுள்ளது. தம்மை ஆதரித்த தமிழ் இளைஞர் யுவதிகளின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து யாழ்ப்பாணத்தில் இன்னொரு டக்ளஸ் தேவானந்தாவாக மணிவண்ணன் உருவெடுத்திருப்பதாகவும் விமர்சித்துள்ள அவதானிப்பு மையம், அதுவே இவரின் அரசியல் வீழ்ச்சியாகவும் அமையும் என்றும் கூறியுள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராக பல வரலாற்று துரோகங்களை இழைத்து இன அழிப்பு செய்யும் சிங்கள அரசிற்கு துணை நிற்கும் ஈபிடிபி எனப்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட…
-
- 0 replies
- 451 views
-
-
ஒருபுறம் கொரோனா பேரபாயம் நாட்டை சூழ்ந்து கொண்டு இருக்கிறது. மறுபுறத்தில் அரசியல் ஜூரம் அனலடிக்கிறது. இரண்டுக்கும் இடையே சிக்கி மக்கள் பாடாய்ப்படுகிறார்கள். ராஜபக்ச தரப்பினரை – குறிப்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைப் பிடித்துள்ள அதிகார மோகம் நாட்டை மேலும் அபாயத்திற்குள் தள்ளும் சூழலே காணப்படுகின்றது. இந்தப் பேராபயத்திலும் – அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் ராஜபக்ச தரப்புகள். இதற்கு வலுவான காரணம் சர்வதேசம் – நாடு இப்போதிருக்கும் நிலையில் எதுவும் கண்டுகொள்ளப்படாது என்பதுதான். கொரோனா அச்சுறுத்தலில் உலகம் சிக்கித் தவித்தபோது, மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்க விடுவிக்கப்பட்டார். இவரது விடுதலையை சர்…
-
- 0 replies
- 451 views
-
-
#இதுவெறுமனேஒருசிறுகதைஅல்ல. #இன்றையநிலைமையைஆதாரமாகக்கொண்டுஎழுதப்பட்டஒருசிறுகதை. #இந்தக்கதையைவாசித்துக்கொண்டுபோகும்பொழுதுஉங்களுக்குசிரிப்புவரலாம். #நன்றாக_சிரியுங்கள். #கொரோனாவும்_மாரிமுத்துவும்* நான் கோரோனா கிருமி பேசுகிறேன். இப்பொழுது மாரிமுத்துவின் தொண்டைக்குள் இருக்கிறேன். நான் இங்கு வந்து இரண்டு மணித்தியாலங்கள் ஆகிவிட்டன. மாரிமுத்துவின் உடலில் வெற்றிக்கரமாக நுழைந்த கடைசி கிருமி நான். நான் உள்ளுக்குள் வந்த கதையைச் சொல்லிவிட நினைக்கிறேன். இன்று சரியாக மதியம் 12.35க்கு ஓர் உணவகத்தில் மாரிமுத்து "பரோட்டா" சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இன்று இரவு ஊரடங்கு சட்டம் பிரப்பிக்கப்படலாம் என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதும் சற்ற…
-
- 0 replies
- 451 views
-
-
களைகட்டவுள்ள ‘ஜெனீவாத் திருவிழா’ Editorial / 2019 பெப்ரவரி 14 வியாழக்கிழமை, மு.ப. 12:48 அடுத்த ஒரு மாதத்துக்கு ஜெனீவாத் திருவிழா ‘ஓகோ’வென்று அரங்கேற இருக்கிறது. மனித உரிமைகள், போர்க்குற்ற விசாரணை, நீதி, நியாயம், சர்வதேச நீதிபதிகள் என, இனி அரசியற்களம் அதகளப்படும். இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றை, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைக்க இருப்பதாக, பிரித்தானியா அறிவித்ததன் மூலம், இத்திருவிழா தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஒருபுறம், உள்நாட்டில் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்றளவில், கருத்துகளைக் கனகச்சிதமாகக் கக்குவதற்கு எல்லோரும் தயாராக இருக்கிறார்கள். மறுபுறம், இது சர்வதேச விசாரணையைச் சாத்தியமாக்கும் என்று நம்…
-
- 0 replies
- 450 views
-
-
-
இங்கே 5 பேர் 5 விதமான தலைப்பில் பேசுகிறார்கள்.மிகவும் நகைச்சுவையாக இருந்தாலும் அனேகமானவை அறிவுரைகளே.மிகமுக்கியமாக குடும்பத்தினர் கட்டாயம் பார்க்க வேண்டியது.நீண்ட நேரம் என்று தவிர்த்துவிடாமல் பொறுமையாக இருந்து கவனமாக கேழுங்கள்.
-
- 5 replies
- 450 views
-
-
இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐநா வளாகத்தில் காண்பிக்கப்பட்ட சனல் 4 தயாரித்த 90 நிமிடங்கள் கொண்ட கொலைக்களங்கள் ஆவணப்படம் சுவிஸ் நாட்டில் மீண்டும் திரையிடப்படவுள்ளது. சூரிச்: சனி, 02.11.2013, மதியம் 2 மணிக்கு, Kino Riffraff, பிரவேசம் இலவசம் லவுசான்: திங்கள், 04.11.2013, இரவு 6 மணிக்கு, Kino Casino de Montbenon, பிரவேசம் இலவசம் லுசேர்ன்: சனி, 07.12.2013, இரவு 6 மணிக்கு, Stattkino Luzern இருக்கைகளை info@amnesty.ch என்ற மின்னஞ்சலில் பதிவு செய்துகொள்ளலாம். பி.கு. இந்த ஆவணப்படம் பேர்ண் மாநிலத்தில் ஏற்கனவே திரையிடப்பட்டது. அதில் Cullum Mcrae கலந்து சிறப்பித்திருந்தார்.
-
- 0 replies
- 450 views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றிணைந்து.... 12/06/2009 இந்த பேரனர்த்தமானது, இந்திய மத்திய அரசால் திட்டமிடப்பட்டும், மு.கருணாநிதியால் ஊக்குவிக்கப்பட்டும் அங்கீகரிக்கப்பட்டும், வெள்ளை மாளிகையின் நிர்வாகத்தால் தான் சொன்னதை சரியான தருணத்தில் நடைமுறைப்படுத்தத் தவறிய தவறினாலுமே நிகழ்த்தி முடிக்கப்பட்டது என்பதே தமிழர்களின் கருத்தாகும். கொழும்பும், இந்திய அரசும் சேர்ந்து நிகழ்த்திய இந்த பேரவலத்தை அவசரமாக மூடிமறைக்க முற்பட்டு, மணிக்கூட்டின் கம்பிகளை பின்னோக்கி நகர்த்தித் தங்கள் பேச்சுக்களை பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தினை ஒரு தீர்வாக அமுல்ப்படுத்துவது பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். தனது தேர்தல் பிரச்சாரத்தின் உச்சத்திலும் கூட கொங்கிரஸ் தலைவியான சோனியா காந்தி பதின்மூன்றாவது …
-
- 0 replies
- 449 views
-
-
விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மார்சல் பற்றி உலகம் அறியாத முகம் ?
-
- 0 replies
- 449 views
-
-
இன்று பிரித்தானியாவில் Cardiff எனும் இடத்தில் நியூசிலாந்து அணிக்கும் சிறிலங்கா அணிக்கும் இடையில் துடுப்பாட்டம் நடைபெற்றது. இப் போட்டியில் பங்குபற்றிய சிறிலங்கா அணியினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்ட சில இளையோர்களே கலங்கு கொண்டு தங்கள் எதிர்ப்பினைத் தெரிவிதனர். கடந்த முறை நடைபெற்ற இது மாதிரி போராட்டங்களில் பல தமிழர்கள் கலந்துகொண்டு எதிர்ப்பினைத் தெரிவித்த பொழுது அங்கு வந்த சிறிலங்கா அணிக்கு ஆதரவானவர்கள் பயத்துடன் எதுவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மைதானத்திற்கு சென்றனர்.ஆனால் இம்முறை குறைந்த அளவு எண்ணிக்கை இளையோர்களே கலந்து கொண்டமையால் அங்கு வந்த சிறிலங்கா அணி ஆதரவாளர்கள் எதிர்ப்புப் போராட்டம் செய்த எம் இளையோர்களின் முகத்திற்கு முன்…
-
- 0 replies
- 449 views
-
-
தமிழரசு கட்சியின் பெரும் உடைவை தடுக்குமா பொதுச்செயலாளர் பதவி இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும், தேர்தல் மூலமே தெரிவாக வாய்ப்புள்ளதாக அந்த கட்சியின் உயர் வட்டாரங்கள் மூலம் அறியவருகின்றது. இதன்மூலம், தேர்தல் இன்றியே இதுவரை காலமும் பொதுச்செயலாளர் தெரிவு செய்யப்பட்டு வந்த சம்பிரதாயம் மாற்றமடைந்து, கிழக்கு மாகாணத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தமிழ்த் தேசிய அரசியலை மீண்டும் கேள்விக்குள்ளாக்குவதற்கான அதிக சந்தர்ப்பங்கள் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தல் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் (21.01.2024) அன்று நடைபெற்றது. குறித்த தேர்தலின் வேட்பாளர்களாக நாடாளுமன்ற உறு…
-
- 0 replies
- 449 views
-