நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
சிறீலங்காவில் கொண்டாட்டம் ஈழத்தில் கண்ணீர் தீபச்செல்வன் இலங்கையில் எப்பொழுதும் இருவேறு மனநிலைதான் நிலவுகின்றது. இலங்கையில் நடந்த பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு தெற்கில் கொண்டாட்டமும் வடக்கில் கண்ணீரும் நிலவியது. இலங்கைத் தலைநகர் கொழும்பே கோலாகலமாக இருந்தது.தெருக்களில் எல்லாம் பொதுநலவாய மாநாடு தொடர்பான பதாகைகள். பலர் வாகனங்களில்கூட அதனைப் பொருத்தியிருந்தனர். சிங்கள ஊடகங்கள் எல்லாம் பொதுநலவாய மாநாட்டைக் கொண்டாடுகின்றன. இது சிறீலங்காவின் நேரம் என்றும் இது சிறீலங்காவுக்குப் பெருமை என்றும் சித்தரிக்கின்றன.தமிழ் ஊடகங்களோ இக்காலத்தில் கண்ணீரோடு புரண்டழும் தமிழ்ச்சனங்களைக் காட்டுகின்றன. பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாதெனவும் இலங்கைக்கு எதிராகவும் த…
-
- 1 reply
- 608 views
-
-
காணொளி:இலங்கை கடற்படையினரின் தாக்குதல்கள், கைது நடவடிக்கைகளை தடுக்கவேண்டும் முதல்வர் ஜெயலலிதா http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10877:2013-12-31-11-23-03&catid=1:latest-news&Itemid=18
-
- 5 replies
- 584 views
-
-
இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆண்டாக அமையும் என்று கருதப்படும் நிலையில்... இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும், வடக்கை அபிவிருத்தி செய்வதற்கும், தம்முடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்ட விவாதத்தின் நிறைவில் பதிலுரை ஆற்றியபோதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். கூடவே இன்னொரு விடயத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாடுகளிடம் தீர்வைத் தேடித் திரிய வேண்டாம் என்றும், உள்நாட்டில் தீர்வைப் பெறுவதற்கு முன்வருமாறும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதுபோன்று ஜனாதிபதி மஹிந்த ராஜப…
-
- 0 replies
- 425 views
-
-
பின் நிலைமாறுகால நீதியும் தமிழினப் படுகொலையும் - அருட்தந்தை எழில் றஜன் யே.ச. 31 டிசம்பர் 2013 ஜோசப் பரராஜசிங்கம் நினைவுப் பேருரை:- திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களே அவையில் கூடியிருக்கும் பெரியோர்களே, சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் இந்நேர வணக்கங்களை உரித்தாக்குவதில் பேருவகை அடைகின்றேன். மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் நினைவுப் பேருரையை நிகழ்த்துமாறு எனக்கு அழைப்பு விடுத்த திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் ஞாபகார்த்தக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கம்பன் எவ்வாறு தனது இயலாமையை இராமாயணத்தின் ஆரம்பத்திலேயே எடுத்தியம்புகிறானோ அவ்வாறு நானும் இப்பேருரையை ஆற்ற அரசியலில் பழுத்த பேராசான்கள் முன் நிற்கின்றேன். அரசிய…
-
- 0 replies
- 364 views
-
-
பாட புத்தகத்தில் மறைக்கப்பட்ட வரலாறு. அனைத்து தமிழர்களும் பார்க்க வேண்டிய மிக முக்கியமான காணொளி இது. இரண்டாம் பகுதி விரைவில்...... இவ் வரலாறு இனி பாட புத்தகத்தில்... தமிழ் இனத்தின் முந்தைய பிந்தைய வரலாற்று சரித்திரங்களை ஒவ்வொரு தமிழனும் குறைந்தது இந்த வரலாற்றை தெளிபவுப்படுத்திக்கொள்வது கடமையாகும் . இரண்டு பகுதிகளை முற்றிலுமாக பார்த்து உங்கள் அறியாமையில் இருந்து விலக இவ் வரலாறு துணை புரியும் .ஒவ்வொரு தமிழன் வீட்டில் தங்கள் வருங்கால சங்கத்தினருக்கு இவ் விடயத்தை தெளிபவுபடுத்த வேண்டியது ஒவ்வொரு மானத் தமிழனின் கடமை .நம் அறியாமையை விலக்க இனி இவ் வரலாறு வருங்கலத்தில் பாட புத்தகத்தில் இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை .திராவிடம் மரண படுக்கையில் இருக்கின்றது என்பதை …
-
- 1 reply
- 736 views
-
-
விடுப்பு மூலை: தடுப்பால வந்தவன் நந்தி முனி வன்னியப்பு ஆஸ்பத்திரிக்குப் போனவர். திரும்பி வரேக்க சைக்கிள் காத்துப் போயிற்று. கிட்ட இருந்த சைக்கிள் திருத்தும் கடைக்குள் நுழைந்தார். அங்கே கிளாக்கர் அமர்ந்திருந்தார். அவருடைய மோட்டார் சைக்கிளுக்கு காத்துப்போயிற்று. திருத்துநர் யாரோ ஒரு பொடியனின் சைக்கிளை சரி பார்த்துக் கொண்டிருந்தார். வன்னியப்புவுக்கு அந்தப் பொடியனை எங்கேயோ கண்ட மாதிரி இருந்தது. வன்னியப்பு யோசித்துக் கொண்டே கிளாக்கருக்குப் பக்கத்தில் அமர்ந்தார். திருத்துநர் பொடியனிடம் சைக்கிளைக் கொடுத்துவிட்டு நிமிர்ந்தார்.... கிளாக்கர் வன்னியப்புவைப் பார்த்து எதையோ சாடையால் உணர்த்தினார்... வன்னியப்பு: என்ன கிளாக்கர் அந்தப் பொடியன விடாமல் பார்க்கிறியள்... கிளாக்: ஓம…
-
- 0 replies
- 448 views
-
-
வணக்கம், சில நாட்களுக்கு முன்பதாக, யூ டியூப் தளத்தில் எமது பிரச்சினை சார்ந்த இரு ஒளிப்படங்களுக்கு எனது கருத்தினப் பதிந்திருந்தேன். பல சிங்களவர்கள் அதற்கு எதிர்க்கருத்துப் பதிந்திருக்கிறார்கள். நானும் முடிந்தவரை பதிலளித்து வருகிறேன். அரசியல் சார்ந்த கருத்தாடலில் எனக்கு கள உறவுகளின் உதவி தேவை. நேரமிருந்தால் நான் இணைத்திருக்கும் ஒளிப்பட இணைப்பிற்குச் சென்று உங்கள் கருத்தையும் பதியுங்கள். அன்டன் தேவசகாயம் என்கிற பெயரில் நான் பதிவிட்டிருக்கிறேன். http://www.youtube.com/watch?v=bnoxwLaaiHY http://www.youtube.com/watch?v=PUS_R1q3ND8 மிக்க நன்றி. ரகுனாதன் (அன்டன் தேவசகாயம்)
-
- 0 replies
- 496 views
-
-
நேற்று இரவு அல் ஜசீரா தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிய " இலங்கை வடுக்கள்" ( பகுதி 2 இன்று இரவு லண்டன் நேரம் 9.30 மணிக்கு அல் ஜசீரா தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ) Please watch Al Jazeera for a documentary on Sri Lanka, will be broadcasting To night 9.30 pm uk time Al Jazeera English: Live Stream http://www.aljazeera.com/watch_now/ http://www.sankathi24.com/news/36981/64//d,fullart.aspx
-
- 0 replies
- 420 views
-
-
ராஜீவ் படுகொலை வழக்கில் கேட்கப்படாத கேள்விகளும்,கிடைக்காத பதில்களும். சிறப்பு விருந்தினராக சி.பி.ஐ.முன்னாள் அதிகாரி மோகன்ராஜ்,சி.பி.ஐ.முன்னாள் அதிகாரி ரகோத்தமன்,காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகி திருச்சி வேலுசாமி,சென்னை உயர்நீதிமன்றம் மூத்த வழுக்கறிஞர் தடா சந்திரசேகர். பகுதி-1 பகுதி-2 பகுதி-3 http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10786:2013-12-26-17-39-34&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 349 views
-
-
-
- 18 replies
- 1.3k views
-
-
48, 50 வயதான தனது, கள்ளக்காதலிகள் இருவரை தனித்தனியாக போன் செய்து, திரையரங்கு வரவழைத்து, இருவருமே தனது வைப்புகள் என, ஒருவர் பற்றி மற்றவர் அறியா வகையில் இருபக்கமும் இருக்க வைத்து, 'இராஜ திருடன்' எனும் சிங்கள படம் பார்த்த, ஜகயாலக் கில்லாடியை தேடி, பொலீஸ் வலை வீசுகிறது. இதில போலீசுக்கு என்ன பிரச்சனை என்று யோசிக்கிறீர்களா? வேற ஒன்றும் இல்லை, இடைவேளையின் போது, 'ஆசையாய், 'ஆசைநாயகிகளுக்காக வாங்கிக் கொடுத்த, மயக்கமருந்து கலந்த குளிர்பானங்களை குடித்து, மயங்கிவிட, அவர்கள் போட்டு வந்திருந்த நகைகள் அணைத்தையும் உருவிக் கொண்டோடி விட்டார், ஆசையத்தார். படம் முடிந்தும், கிளம்பாமல், நல்ல தூக்கத்தில் இருந்த இருவர் நிலையறிந்த நிர்வாகம் அவர்களை வைத்தியசாலைக்கு அனுப்ப, சிகிச்சை பெற்…
-
- 0 replies
- 683 views
-
-
மகிந்த ராஜபக்சேவுடன் வெளிநாட்டுக்கு சென்றிருந்த அவரது அதிகாரபூர்வ கேமராமேன், துபாய் சர்வதேச விமான நிலையத்தில், மூன்று இலட்சம் ரூபாய் மதிப்பிலான சிசிடிவி கேமராவை திருடி சென்ற போது வசமாக சிக்கிக் கொண்டார். அண்மையில், தென்னாப்பிரிக்கா மற்றும் கென்யாவுக்கான பயணங்களை முடித்துக் கொண்டு மகிந்த ராஜபக்சே துபாய் வழியாக கொழும்பு திரும்பினார். துபாய் விமான நிலையத்தில் மகிந்த ராஜபக்சே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது அவரது குழுவில் இடம்பெற்றிருந்த கேமரா மேன் ஒருவர் ரூ 3 இலட்சம் மதிப்புள்ள சிசிடிவி கேமராவை டூட்டி ஃப்ரீ ஷாப் ஒன்றில் இருந்து திருடியுள்ளார். திருடிய அந்த சிசிடிவி கேமராவை தமது பையில் மறைத்துக் கொண்டு வேகமாக தப்பி ஓட போது அதனை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்த பாதுகாப்பு …
-
- 1 reply
- 906 views
-
-
இந்த இலட்சணத்தில் தமிழீழத்தை மீட்கப் போகிறார்களாம்... தமிழ்த் தேசியத்தை அடையப் போகிறார்களாம்! அந்த நகைச்சுவைக் காட்சியை தொலைக்காட்சிகள் எப்பொழுது ஒளிபரப்பினாலும் அதனைப் பார்த்து ரசித்துச் சிரிக்காதவர்களே இருக்க முடியாது! தேநீர்க் கடை முன்பு நடிகர் வடிவேலு தமது கோஷ்டிப் பரிவாரங்களுடன் போய் நிற்பார். கோஷ்டியில் ஒருவர் போய் டீக்கடைக்காரரிடம் "அண்ணனுக்கு ஒரு டீ போடு!" என்பார். டீக்கடைக்காரர் "டோக்கன் வாங்கு" என்பார். அவர் உடனே, "அண்ணே டோக்கன் வாங்கணுமாம்ணே" என்று வடிவேலுவிடம் வந்து சொல்வார். உடனே வடிவேலு, முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, "இந்தப் படித்துறை பாண்டிக்கிட்டயே டோக்கன் கேக்குறியா? நீ இந்த ஊர்லயே இருக்க முடியாதுடா.. டேய்" என்று கத்திக்கொண்டே டீக்கடையை அ…
-
- 2 replies
- 646 views
-
-
காணொளி:தமிழனின் காசு வேண்டும்! தமிழ் வேண்டாமா? - சீமான்
-
- 0 replies
- 392 views
-
-
தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் லயோலா கல்லூரியின் விழாவுக்கு முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும் இன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜி அழைக்கப்பட்டிருப்பது தமிழர்களின் மனதை வேதனையுற செய்துள்ளது. 2009-ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதைத் தடுத்திருக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பான வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தவர் பிரணாப் முகர்ஜி். ஆனால் தமிழர்களைக் காக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அவர், “இலங்கை இராணுவம் வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. விரைவில் வெற்றிச் செய்தி வரும்” என இலங்கையின் அமைச்சரைப் போல நாடாளுமன்றத்திலேயே தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தனார். பல்லாயிரக்கணக்கில் மக்கள் செத்துக் கொண்டிருக்கும் போது “போரை ந…
-
- 0 replies
- 381 views
-
-
பயங்கரவாதத்தை தோற்டித்து வெற்றி பெற்று ஜனநாயகத்தை போற்றும் இலங்கை போன்ற நாட்டுக்கு எதிராக மனித உரிமை மீறல் சம்பந்தமாக யோசனைகளை கொண்டு வருவது கேலிக்குரியது என மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதிபா மஹநாமஹேவா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட யோசனையில் மூன்று நிபந்தனைகள் உள்ளன. அதில் முக்கியமான நிபந்தனை இலங்கை நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையான அமுல்படுத்துவது. இதுவரை அந்த பரிந்துரைகளில் பெரும்பாலான பரிந்துரைகளை இலங்கை அமுல்படுத்தியுள்ளது. ஏனைய பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. …
-
- 4 replies
- 756 views
-
-
யேர்மனியின் தலைநகர் பேர்லினில் கடந்த 17.12.2013 அன்று நீங்காத நினைவோடு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மற்றும் தாய்த்தமிழகத்தில் 12.05.1995 அன்று ஈழ நெருப்பை மூட்டிய முதல் வீரன் அப்துல் ரவூப் அவர்களின் நினைவாகவும் சுடர்வணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. நிகழ்வில் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி சுடர்வணக்கம் மற்றும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.அதை தொடர்ந்து சிறுவர்களால் மாவீரர் நினைவுசுமந்து கவிதை மற்றும் பாடல் பாடப்பட்டது. 7 வது ஆண்டு நினைவாக நடைபெற்ற சுடர்வணக்க நிகழ்வில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வரலாற்றுப் பதிவு காணொளி ஊடாக காண்பிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு…
-
- 0 replies
- 624 views
-
-
சென்னை: 67 ஆண்டுகள் கழித்து 1947ம் ஆண்டு போலவே, 2014ம் ஆண்டும் ஒரே மாதிரியான தேதிகளையும், கிழமைகளையும் கொண்டிருப்பதால், இந்தியாவில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்று ஜோசியக்காரர்கள் ஆளாளுக்கு ஆரூடம் கூறிக் கிளம்பியுள்ளனராம்.புது வருடம் பிறக்கப் போகிறது என்றாலே கணிப்புகளும் கச்சை கட்டிக் கொண்டு கலகலப்பாக கிளம்பி விடுவது வழக்கம்தான்.அந்த வகையில் 2014ம் ஆண்டு எப்படி இருக்கும் என்று இப்போதே பலரும் கணிக்க ஆரம்பித்து விட்டனர். இப்படி நடக்கும், அப்படி நடக்கும், எப்படியும் ஏதாவது நடக்கும் என்ற ரேஞ்சுக்கு கணிப்புகளை எடுத்து மூளையில் திணிக்கும் வேலைகள் மும்முரமாகியுள்ளன. 1947ம் ஆண்டு போலவே, 2014ம் ஆண்டும் இருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் பரபரப்பு. 1947ம் ஆண்டைப் போலவே, 2014ம் ஆண…
-
- 8 replies
- 1.3k views
-
-
கோத்தாபயவின் அடுத்த இலக்கு வடக்கில் உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் படைத்தளங்களாக வைக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் கூட படிப்படியாகவும், கொஞ்சம் கொஞ்சமாகவும், இத்தகைய குடியேற்றங்கள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், 2020ம் ஆண்டில் வடக்கில் இராணுவம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற கருத்தரங்கு கடந்தவாரம் 62வது டிவிசன் அதிகாரிகளுக்காக நடத்தப்பட்டிருக்கிறது. அதில், 2020ம் ஆண்டில் இலங்கையின் அரசியல், இராஜதந்திரம், பொருளாதாரம் குறித்தும், வடக்கின் அரசியல் வளர்ச்சியின் அடிப்படையில் இராணுவப் படைகளின் வடிவமைப்பது குறித்து விரிவாக ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கருத்தரங்கில் வளவாளராகப் பங்கேற்றவர்களில் ஒருவர் சட்டத்தரணி கோமின் தயாசிறி.இவர் ஒரு தீவிர சிங்களத் தேசியவா…
-
- 0 replies
- 642 views
-
-
இது சரித்திரத்தில் ஒரு வியப்பு மிக்க தருணம். பிரித்தானியாவின் அரச குடும்பத்திலிருந்து வில்லியமும் கேம்பிரிட்ஜின் சீமாட்டியும் வில்லியமின் மனைவியுமான கேட், நெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்சி மண்டேலா மற்றும் பல அரசியல், திரைத்துரைப் பிரபலங்கள் செங்கம்பள வரவேற்பில் வரவேற்கப்பட்டு, இரண்டு வாரங்களிற்கு முன்னர் தென்னாபிரிக்காவில் வெளியாகிய பிரித்தானிய ஆபிரிக்கத் தாயாரிப்பான ‘LONG WALK TO FREEDOM’ எனும் திரைப்படத்தின் சிறப்பு முதற்காட்சியைக் காண்பதற்காகத் தயாராகவும் ஆவலுடனும் காத்திருக்கின்றார்கள். தந்தை உடல் நலத்துடன் உள்ளதாக ஜிண்ட்சி மண்டேலா விருந்தினர்களிற்குத் தெரிவிக்கின்றார். அங்கு இத்திரைப்படத்தில் நெல்சன் மண்டேலாவாக நடித்த பிரபல நடிகர் Idris Elba மற்றும் அவரது மனைவியான …
-
- 0 replies
- 598 views
-
-
தமிழர் தாயகப் பகுதியில் இன்று சர்வதேசப் பிரதிநிதிகள் ஒருவர்பின் ஒருவராகச் சென்று தமிழ் மக்களை குசலம் விசாரிப்பதற்குக் குறைவில்லை. மக்களும் தமது உள்ளக்கிடக்கைகளையெல்லாம் அவர்களிடம் கொட்டித் தீர்க்கின்றனர். சர்வதேசப் பிரதிநிதிகளும் மக்களின் குறைகளை கேட்டுவிட்டு, சிறீலங்கா அரச பிரதிநிதிகளையும் சந்தித்து கைகுலுக்கவும் தவறவில்லை. ஆனால், சிறீலங்காப் படையினரால் பல நெடுங்காலமாக அபகரித்துவைத்துள்ள மக்களின் வதிவிடங்களும் உடமைகளும் அழிவடைந்துள்ள நிலையில், இன்று முற்றாக அழிக்கப்படுகின்றன. யாழ்.மாவட்டம் வலி. வடக்கில் மக்களின் வீடுகளையும் உடமைகளையும் அடையாளம் தெரியாதவாறு, படையினர் அழித்துவருவதைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் அண்மையில் போராட்டம் நடத்தப்பட்டமையும் - குறித்த …
-
- 0 replies
- 305 views
-
-
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு. 14.12.2013, சனிக்கிழமை அன்று செங்காலன் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனை தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான செங்காலன் வாழ் தமிழ்மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வானது மிகவும் உணர்வுபூர்வமாகவும் நம்பிக்கையை தந்த எழுச்சி நிகழ்வாகவும் இருந்தது. மாவீர வித்துக்களான அரசியல் பெருந்தகைகளின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக …
-
- 0 replies
- 366 views
-
-
http://www.youtube.com/watch?v=NBjpSg5fuzQ http://www.dailymail.co.uk/news/article-2523482/Cheetah-dog-enjoy-playful-game-chase-snow.html
-
- 0 replies
- 511 views
-
-
சுவாசக் கருவியை அணிந்து கொண்டு பலரும் கடலுக்குள் ஜாலியாக மீன்களுக்கு நடுவே வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை டிவியில் டிஸ்கவரி போன்ற சேனல்களில் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும் போது நமக்கும் இது போன்று கடல் நீருக்குள் நீந்துவதற்கு ஆசையாக இருக்கும். நுனோ கோம்ஸ் இப்படி கடலில் நீந்துபவர்கள் எவ்வளவு ஆழம் வரை செல்வர் என்று உங்களால் ஊகித்துக் கூற முடியுமா? வெறும் 10 மீட்டர் ஆழம் தான். இது பெரிய ஆழமில்லை. ஆனால் இதற்கே நிபுணர்களின் மேற்பார்வையில் பயிற்சி தேவை. ஸ்குபா என்ற சுவாசக் கருவியை அணிந்து கொண்டு ஆழத்தில் இறங்குவதில் கைதேர்ந்த நிபுணரான நுனோ கோம்ஸ் 2005 ஆம் ஆண்டில் உலக சாதனையாக 318 மீட்டர் ஆழம் வரை இறங்கினார். இச்சாதனையை நிகழ்த்த அவருக்கு பல நிபுணர்களின்…
-
- 4 replies
- 1k views
-
-
காணொளி: அச்சத்தில் நடுங்கி வாழும் வன்னிப் பெண்கள்.. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10550:2013-12-13-16-13-58&catid=1:latest-news&Itemid=18
-
- 1 reply
- 695 views
-