நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
-
2d9624af04b4c148a7c04d139f553678
-
- 1 reply
- 439 views
-
-
காணொளி : இலங்கைத் தமிழர் தொடர்பாகவும் , கூடாங்குளம் தொடர்பாகவும் சீமானின் பேச்சு...
-
- 0 replies
- 468 views
-
-
வீட்டைக்கட்டிப்பார்... திருமணத்தை செய்துபார்... என்று கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. இந்த அனுபவம் என்பது ஒரு மனிதன் படிக்கும் வாழ்க்கையின் மிகப்பெரிய பாடம். ஏன்னென்றால் இந்த இரண்டையும் ஒருவன் வெற்றிகரமாக முடித்துவிட்டால் எந்த அனுபவம் வருகிறதோ இல்லையோ பணம் சார்ந்த அனைத்து பக்குவமும் அவனுக்கு வந்துவிடும். பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும். ஒரு வேலை ஆரம்பிக்க எவ்வளவு பணம் தேவைப்படுகிறது. அதை எங்கிருந்து பெருவது போன்ற உலக அனுபவங்கள் அவனுக்கு கிடைத்து விடுகிறது..... இந்த கதையை படித்தால் உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.... சாதாரண “கார்” ஒன்று வாங்குவதற்காக ஒரு விவசாயி... கார் விற்கும் கடைக்குச் சென்றார். அவர் விரும்பிய மற்றும் கையில் உள்ள 2 லட்சம் விலையில் உள்…
-
- 0 replies
- 419 views
-
-
மக்களுக்கு உள்ள தெளிவு அரசியல்வாதிகளுக்கும் நிறுவனங்களுக்கும் இல்லை என்பது மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிருபிக்கப்பட்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் படுகெலைகளினதும் போரின் முடிவின் காரணமாகவும் மேலெழ இருக்கும் அவல, அடிபணிவு, ஒப்படைவு, சரணாகதி அரசியலை முற்றாக புறந்தள்ளி பூகோள – பிராந்திய அரசியலை கவனமாக உள்வாங்கி தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் சாத்தியமான எதிர்ப்பு அரசியல் வடிவம் குறித்த உரையாடலை தொடாந்து பேணுவது குறித்தே தமிழர் தரப்பு சிந்தித்து இருக்க வேண்டும். ஆனால் துரதிஸ்டவசமாக போரில் நாம் தோற்கடிக்கப்பட்ட முறைமையும் அதன் விளைவான அவலமும் எம்மை அரசியலே வேண்டாம் என்ற ஒரு நிலைக்கு தள்ளியிருந்தது இதன்விளைவாக சிங்கள நிகழச்சி நிரலை தெளிவாக வழி நடத்துபவர்களாக நாம் மாறியிருந்தோம். …
-
- 0 replies
- 366 views
-
-
பெல்ஜியம் புறுசல்ஸ் நகரில் ஐரோப்பிய ஆணையகத்திற்கு முன்பாக நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்ற இன அழிப்புக்கு நீதி கேட்கும் ஒன்றுகூடல் நிகழ்வில் மக்கள் எழுச்சியும் சிறபுரைகளும் இங்கே காணொளிகளில் பார்க்கலாம். http://www.sankathi24.com/news/33851/64//d,fullart.aspx
-
- 2 replies
- 322 views
-
-
சுவிஸ் நாட்டில் அமைந்துள்ள சுக் மாநிலத்தில் 06.10.2013 அன்று நடைபெறவுள்ள முத்தமிழ் விழாவில் அறப்போர் ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
-
- 0 replies
- 391 views
-
-
-
"வெற்றி அல்லது வீரச்சாவு" தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவும் சேவ் தமிழ்சு இயக்கமும் இணைந்து, தமிழினப் படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்ற முழக்கத்தோடு செப்டம்பர் 7, 2013 அன்று சென்னையில் பன்னாட்டு இளைஞர்மாநாட்டை நடத்தியது. இம்மாநாட்டில், தோழர் தியாகு ஆற்றிய எழுச்சிமிக்க உரை
-
- 0 replies
- 475 views
-
-
வடக்குத் தேர்தல் - சில நிதர்சனங்கள் சி வி விக்னேஸ்வரன் முதலமைச்சராகவும் மேலும் 29 பேரை உறுப்பினராகக் கொண்ட மாகாணசபை அமைய வகைப் படுத்திய தேர்தல் நடந்து முடிந்து விட்டது. பல அபிப்பிராயங்கள். பல அவதானிப்புகள். பல எதிர்பார்ப்புக்கள். ஆயினும் சில நிதர்சனங்கள் உள்ளன. வரதராஜப் பெருமாள் முதல்வராக அமைந்த முதல் தேர்தல். இந்திய தில்லு முல்லுகளுடன் நடந்ததாலும், இலங்கை அரசும், புலிகளும் எதிர்த்ததால், எவ்வித எதிர்பார்ப்பும் இருக்க வில்லை. புலிகள் இல்லா நிலையில் நடந்த இந்த தேர்தல், சர்வதேச நாடுகளுக்கு சில விடயங்களை தெளிவாக்கி உள்ளது. 'மனிதாபிமானப் போர்', 'சமாதானத்துக்கான யுத்தம்' என சிங்களம், முழங்கிய போது, சரிதான் என பேராதரவு அளித்த சர்வதேச நாடுகள், சிங்கள மக்கள், மகிந்த…
-
- 2 replies
- 765 views
-
-
-
- 8 replies
- 1.3k views
-
-
இனப்படுகொலைப் பயங்கரங்களுக்குப் பிறகு கதறி அழக்கூட உரிமையற்று இருந்த இலங்கைத் தமிழர்கள், தங்களுக்கான அரசியலைத் தாங்களே தீர்மா னிக்க அடித்தளமாக, ஓர் ஆரம் பமாக... முதல் முத்திரை வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்! இலங்கையில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது, ஈழத் தமிழர்கள் ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு. முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட சி.வி.விக்னேஸ்வரன், 1,32,255 வாக்குகள் பெற்று வென்றிருக்கிறார். 36 தொகுதிகளில் 28 தொகுதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்ற, ஒரு மாகாண சபையில் அதிகளவு தொகுதிகளைப் கைப்பற்றும் கட்சிக்கு, கூடுதலாக இரண்டு தொகுதிகள் எனும் மாகாண சபையின் விதிப்படி, 30 தொகுதிகள் இப்போது தமிழ் தேசியக் …
-
- 0 replies
- 1k views
-
-
வடக்கில், இராணுவத் தலையீட்டைக் குறைப்பது தொடர்பாகவும், ஆளுனரை மாற்றுவது தொடர்பாகவும், சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப் போவதாக, வடக்கு மாகாண முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், வடக்கு மாகாணசபைக்கு அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பாக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் பேச்சு நடத்த விருப்பம் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். வடக்கில் இராணுவத் தலையீட்டைக் குறைப்பது தொடர்பாகவும், வடக்கில் ஆளுனராகத் தற்போது பணியாற்றும் முன்னாள் இராணுவ அதிகாரியை நீக்குவது தொடர்பாகவும், முன்னுரிமை கொடுத்து பேசப் போவதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமது சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஆணையை தமிழ்த் …
-
- 0 replies
- 507 views
-
-
அவுஸ்திரேலியா சிட்னியில் அமைந்துள்ள Seven Hills பாடசாலை மண்டபத்தில் 22.09.2013ம் நாள் தியாக தீபம் திலீபன் அவர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் நினைவு கூரப்பட்டது. இன் நிகழ்வில் முதலாவதாக அவுஸ்திரேலிய, தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டு பொதுச்சுடர், ஈகைச்சுடர் எற்றல், அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து வருகைதந்த மக்கள் அனைவரும் மலர்அஞ்சலி செலுத்தினார்கள். தமிழ் மக்களினதும், தமிழீழ மண்ணினதும் விடிவிற்காக, நீர்கூட அருந்தாமல், தன் உடலை வருத்தி 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்த லெப்டினன் கேணல் தியாக தீபம் திலிபன் அவர்களைப் பற்றிய சிறப்புக் கவி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. அதைனைத் தொடர்ந்து “தற்போதைய காலகட்டத்தில் அகிம்சை வழியிலான போ…
-
- 0 replies
- 299 views
-
-
செப்டம்பர் படுகொலைகள் என்றும், தமிழின உயிர்கொலை நாள் என்றும் மட்டக்களப்பு வாழ் தமிழர்களால் அச்சத்துடனும், கவலையுடனும் நினைவுகூறப்படுகின்ற இந்தத் தொடர் படுகொலையில் சுமார் 700 இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டடிருந்தார்கள். 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதி முதல் 23ம் திகதிவரையிலான காலப்பகுதியில் மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினராலும், அரச படையினருடன் சேர்ந்தியங்கிய முஸ்லிம் ஊர்காவல்படையினராலும்; மேற்கொள்ளப்பட்டிருந்த இந்தப் படுகொலையை மீட்டுப் பார்க்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்Viewed : (19)
-
- 0 replies
- 473 views
-
-
இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவினர் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க. நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத்தொடங்கியிருந்தார்கள். உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே மக்களில் பெரும்பாலானோர் பேசிக் கொண்டிருப்பதாகப் பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள் அத்துடன் தமிழீழத்தின் பல பாகங்களிலும் பரவலாக மக்கள் அடையாள உண்ணாவிரதங்களை மேற்க…
-
- 0 replies
- 3.1k views
-
-
உலக நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, இலங்கை அரசால் நடத்தப்பட்ட வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேச கூட்டமைப்பிற்கு ஈழத் தமிழ் மக்கள் அளித்துள்ள மாபெரும் வெற்றியானது, தமிழினத்தை இன அழித்தல் செய்த சிங்கள பெளத்த இன வெறி அரசுக்கு தமிழர்கள் புகட்டியுள்ள பாடமாகும். இராணுவத்தை பயன்படுத்தி கடும் அச்சுறுத்தல் செய்து, தமிழர்களை வாக்குச் சாவடிக்கு வர விடாமல் செய்து, அதன் மூலம் தாங்கள் விரும்பும் பொம்மை அரசை ஏற்படுத்த ராஜபக்ச அரசு செய்த முயற்சியை துணிந்து வந்து வாக்களித்து தமிழ் மக்கள் முறியடித்துள்ளனர். தமிழ்த் தேச கூட்டமைப்பிற்கு வட மாகாண தமிழ் மக்கள் அளித்த இந்த தீர்ப்பை, இலங்கையின் ஒற்றுமைக்கு உட்பட்டு தாங்கள் வாழவும், இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட ஒரு தீர்வையே அவர்கள் வ…
-
- 0 replies
- 243 views
-
-
றொட்டியா? அல்லது பிரியாணியா? அவனுக்குப் பிஸ்ஸா, உனக்கு கொத்து றொட்டி. ஏய் உனக்கு என்ன? எனக்கு பிரியாணி! டேய்! தம்பிகளா, என்னிடம் வெறும் மாவும் உப்பும் தான் இருக்கு. உனக்கு பிரியாணி. இப்ப சாத்தியமில்லை. என்னென்றால் வயலே நம்மட்ட இல்லை. வளைச்சு வெச்சிருக்காங்க. கொத்து றொட்டி! அதுகும் சாத்தியமில்லை. என்னென்றால் ஆட்டுக்கு எங்கபோறது. பிஸ்ஸா இது வெளிநாட்டயிற்மாயிற்றே இப்போதைக்குச் சாத்தியமில்லை. ஆனா எல்லோரும் சேர்ந்து இப்ப றொட்டியைச் சுட்டுச் சாப்பிட்டு தென்பாயிருந்து கொண்டு பிரியாணிக்கு உழைப்பமா?
-
- 0 replies
- 749 views
-
-
காணொளி :வடக்குத் தேர்தல் வெற்றி தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விவாதம்... பகுதி-01 பகுதி -02 பகுதி-03 http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9322:2013-09-22-15-29-33&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 400 views
-
-
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. உலக தமிழரின் விருப்பத்துக்கு ஏற்ப 13வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் நடைபெற்ற மாகாண சபை தேர்தல்களில், வடக்கு மாகாணத் தேர்தலில் மொத்தம் உள்ள 36 தொகுதிகளில், 28 இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று இருக்கிறது.ராஜபக்ச கட்சியும், துரோகக் கட்சிகளும் இணைந…
-
- 0 replies
- 414 views
-
-
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூட்டமைப்பு வடக்கில் அமோக வெற்றி வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும் வெற்றியீட்டி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதன் மூலம் வடக்கில் தமிழர்களின் அரசு மலர்ந்தது. வட்டுக்கோட்டை தீர்மானத் தின் பின்னர் தமிழர்கள் தமது வடக்கு கிழக்குத் தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றுக்கு மீண்டும் தெளிவான ஆணை ஒன்றை வழங்கி உள்ளனர். மூன்றில் இரண்டு பெரும் பான்மைக்கு தேவையான ஆசனங்களைவிட அதிக ஆசனங்களை கைப்பற்றி கூட்டமைப்பு இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. போனஸ் ஆசனங்களையும் சேர்த்து 30 ஆசனங்கள் கூட்டமைப்பு வசம் வந்துள்ளன. இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்ததன் மூலம் தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம், வடக்கு…
-
- 0 replies
- 428 views
-
-
மகிழ்ச்சி பெருமகிழ்ச்சி, பட்ட நம்பிக்கைகள் பசுமையாய் துளிர்க்கிறதில். நாம் நட்ட வீரரின் நடுகல் சிதைவுகள் முன் அஞ்சலியாய் மீண்டும் அஞ்சாது நிமிர்கிறதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பத்திர்கையாளர் மாநாட்டின் சில பகுதிகளை ஒளிப்பரப்பில் பார்த்தேன்.. சம்பந்தர் மிகவும் நிதானமாக பேசினார். விக்னேஸ்வரனின் பேச்சிலும் பொறுப்புணர்வு தொனித்தது. பேட்டி ஆங்கில மொழி பெயர்ப்புடன் தமிழில் நடந்திருக்க வேண்டும். முதல் பேச்சையே கொழும்புத் தமிழரான சுமந்திரன் சிங்களத்தில் வளா வளா என்று பேசி சரணாகதி சாயலை ஏற்படுத்த முணைந்தமை கண்டனத்துக்குரியது. ஆனால் கொழும்பில் வாழ்ந்தபோதும் திரு விக்னேஸ்வரன் விடுதலைக்கான இராசதந்திரத்துடன் ஆனால் உறுதியாக பேசியது நம்பிக்கை தருகிறது. பேட்டிகளில்…
-
- 2 replies
- 608 views
-
-
இப்படியும் ஒரு தலைவன் இருந்தான்... கப்டன். தாமஸ் சங்கரா ஆபிரிக்காவின் சே குவாரா (டிசம்பர் 21 , 1949 - அக்டோபர் 15 , 1987) ஆகஸ்ட் 4 , 1983 ஒரு இராணுவ புரட்சியின் மூலம் தனது 33 வது வயதில் மேற்கு ஆப்ரிக்க நாடான அப்பர் வோல்டாவின் ஆட்சியை கைபற்றினார். பதவிக்காக, எதிர்காலத்தில் தேசத்தை காட்டிக்கொடுக்கபோகும் தன நண்பர்களினாலேயே சுட்டுகொல்லபடும் வரை (அக்டோபர் 15 , 1987 ) 4 ஆண்டுகள் 2 மாதம் 12 நாட்கள் ஆட்சிபொறுப்பில் இருந்தார். இந்த குறுகிய காலத்தில் அவர் செய்தவை ################################## * அப்பர் வோல்டா என்று அழைக்க பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிரெஞ்சு காலனியான தங்கள் தேசத்துக்கு புர்கினபாசோ என்று பெயர் மாற்றினார் - பொருள்: தலை நிமிர்ந்து வாழ்பவர…
-
- 0 replies
- 643 views
-
-
அலைபேசி ஒலிக்கும் போதெல்லாம் பயமாக இருக்கிறது. சிவகாமியைப் பற்றி எழுதியே ஆகவேண்டும் - என்று அடம்பிடிக்கிறார் நண்பர் அப்புசாமி. கதர் கோஷ்டியே மறந்துவிட்டது அந்த ஏழைத் தாயை! அவர்களைப் பொறுத்தவரை, அன்னை என்றால் சோனியா, சோனியா என்றால் அன்னை. இத்தாலிச் சாத்தனாருக்கோ சோனியா என்றால் மணிமேகலை, மணிமேகலை என்றால் சோனியா! அரசியல் பிழைப்பு நடத்தும் இவர்களில் எவரும், இந்த நவீன மணிமேகலையின் கையிலிருக்கும் அமுதசுரபியிலிருந்து ஒன்றரை லட்சம் ஈழச் சொந்தங்களின் ரத்தம் நிரம்பி வழிவதைக் கவனிப்பதே இல்லை. (ஏம்பா, உங்களுக்கெல்லாம் என்ன கண்ணவிஞ்சு போச்சா?) விருதுநகரிலிருந்த தாயார் சிவகாமிக்கு, வீட்டுச் செலவுக்காக மாதந்தோறும் எழுபது ரூபாயோ எண்பது ரூபாயோ அனுப்பிக்கொண்டிருந்தார் முதலமைச்சராக இருந்த…
-
- 0 replies
- 454 views
-
-
"இன்றைய தினம் உதயன் பத்திரிக்கை என்ற பெயரில் அதனுடைய வடிவமைப்புடன் கூட்டமைப்புக்கு எதிரான பொய்யான செய்திகளுடன் நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு பத்திரிகை வெளி வந்துள்ளது............ அதன் தகவல்களை நம்ப வேண்டாம்..................... இந்த தகவல்களை அனைவருக்கும் பகிருங்கள்" என பத்திரிகை உலக தோழியர் ஒருவர் கோரிக்கை வைத்திருக்கிறார். தயவுடன் இந்த தகவலை உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தொலைபேசிகள் மூலம் தங்கள் ஈழத்து உறவுகளுக்கு அறிவிக்க வேண்டும். ஆபத்துக்களுக்கு முகம் கொடுத்தும் விடுதலைக்காக குரல்கொடுக்கும் ஈழத்து ஊடகங்களுக்கும் ஊடகவியலாலர்களுக்கும் வானொலி அறிவிப்பாளர்களுக்கும் தலைபணிகிறேன். போற்றுதலும் வாழ்த்துக்களும். நல்வாழ்த்துக்கள் விடுதலைக்காக துணிந்துள்ள ஊடகவியலாலர்கள…
-
- 0 replies
- 505 views
-