Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சிறீலங்கா மீது அமெரிக்க விமானங்கள் ஏன் பறந்தன.. அதிரடி உண்மைகள்.. August 9, 2011 மானிடப்படுகொலையாளருக்கு எதிராக அமெரிக்காவின் இராணுவம் செயற்படப்போகிறது.. அமெரிக்க அதிபர் அமைக்கும் புதிய அற்றோசிற்றி பிறவின்சன் போட் (Mass Atrocities Prevention Board) சென்ற வாரம் சிறீலங்காவின் வான் பரப்பின்மீது அமெரிக்க விமானங்கள் சுமார் பத்துவரை பறந்து போனது தெரிந்ததே. இந்த விமானங்கள் தற்செயலாக சிறீலங்கா மீது பறப்பதற்கு யாதொரு முகாந்திரமும் கிடையாது. அதற்கான காரணங்கள் பல உள்ளன. முதலாவது உலக சமுதாயமும், ஐ.நாவும் சிறீலங்கா ஆட்சியாளரால் ஏமாற்றப்பட்டுள்ளன. கடந்த 2009 ம் ஆண்டு மே மாதம் வன்னியில் நடைபெற்றது போரல்ல மானிடப் படுகொலைகளே.. அரசு என்ற காரணத்திற்காக.. இந்தியா துணையிருக்க…

    • 4 replies
    • 1.4k views
  2. அமெரிக்க நிதிச் சிக்கல்: பொருளாதார வீழ்ச்சியின் பின்னணி உலகின் மிகப் பெரிய பொருளாதார வல்லரசாகத் திகழ்ந்த அமெரிக்கா அரசுக்கு வாங்கிய கடனை திரும்பத் தரும் தகுதி குறைந்துள்ளது என்று ஸ்டாண்டர்ட் அண்டு புவர் எனும் பொருளாதார மதிப்பீட்டு அமைப்பு அறிவித்ததையடுத்து, உலகின் பங்குச் சந்தைகளில், பிரளயம் ஏற்பட்டுப் புரட்டிப் போட்டது போல் கடும் சரிவு ஏற்பட்டது. இந்தியப் பங்குச் சந்தையும் தப்பிக்கவில்லை. நிறுவனங்களில் இருந்து நாடுகள் வரை, அவற்றின் கடன் பெறும் அல்லது திருப்பிக் கட்டும் திறன் பற்றி ஒரு பொருளாதார மதிப்பீட்டு நிறுவனம் தரும் திறன் சான்று, அமெரிக்கா போன்றதொரு பொருளாதார வல்லரசைத் திணறச் செய்யுமா? என்கிற வினாவிற்கு விடை தேட வேண்டுமெனில், அதற்கு அந்நாட்டு பொருளாதார ந…

    • 0 replies
    • 741 views
  3. கைமாறும் பொருளாதார அதிகாரம்! மேற்கத்திய வல்லரசுகள்தான் உலக அரசியலைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. ராணுவ பலமும் அரசியல் ராஜதந்திர உத்திகளும் அந்நாடுகளுக்குச் சாதகம். ஆனால், பொருளாதாரத்தைப் பொறுத்தவரை மேற்கத்திய நாடுகளின் செல்வாக்குக் குறையும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று நிபுணர்கள் மதிப்பிடுகிறார்கள். "பிரிக்' நாடுகள் என்று சொல்லப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் சந்தைகளே வருங்காலத்தில் உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக இருக்கும் என்று அவர்கள் கணித்திருக்கிறார்கள். அதாவது 5 முதல் 10 சதவீதம் வரையிலான வர்த்தகம் மேற்கத்திய நாடுகளிடமிருந்து "பிரிக்' நாடுகளுக்குச் செல்லக்கூடும் எனக் கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாகவே இந்த மாற்றத்த…

    • 0 replies
    • 851 views
  4. உலகம் தூற்றுகிறது, டெல்லி போற்றுகிறது சிறிலங்க நாடாளுமன்றத் தலைவரும், அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதருமான சமல் ராஜபக்ச தலைமையில் வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு இந்தியாவின் மக்களவையில் வரவேற்பு அளித்து மரியாதை தரப்பட்டுள்ளது. இன்று காலை சமல் ராஜபக்ச தலைமையில் மக்களவையின் பார்வையாளர்கள் பகுதிக்கு வந்த குழுவினரை வரவேற்று அவைத் தலைவர் மீரா குமார் உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அப்போது அ.இ.அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த சொரணையுள்ள உறுப்பினர்கள் எதிர்த்துக் குரல் எழுப்பினர். ஆனால், ப்ளீஸ் சிட் டவுன் என்று தொடர்ந்து கூறி, ஏதோ ஒன்றும் தெரியாத பள்ளிப் பிள்ளைகளை அடக்குவது போல் கோவத்தை விழியில் காட்டி, …

    • 3 replies
    • 829 views
  5. குறுகிய லட்சியங்கள் குற்றங்களே :முன்னாள் ஜனாதிபதி கலாம் பேச்சு தமக்கென்று ஒரு தனித்துவத்தை வகுத்து கொண்டு இயங்குவோர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர்; வரலாறும் கூட அவர்களைத்தான் நினைவு கூர்கின்றது. குறுகிய லட்சியங்கள் குற்றமாகவே கருதப்படும்,” என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார். “யூத் மீட் – 2011′ விழா, கோவை நவக்கரையிலுள்ள ஏ.ஜே.கே., கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது: ஓயாய அறிவுத் தேடல் ஒன்றே மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். “நான் அனைத்துக்கும் தகுதியுள்ளவனாகப் பிறந்தேன். நல்லெண்ணங்களோடும், நம்பிக்கையோடும் பிறந்தேன். கனவுகளோடும் சிந்திக்கும் திறனோடும் பிறந்தேன். எனக்கு சிறகுகள் உள்ளன. நான…

  6. பிரதமருடைய புதிய ஆலோசகரின் பின்னணி பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மைச் செயலராக 7 ஆண்டுக்காலம் இருந்த டி.கே.ஏ.நாயர், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு பிரதமரின் ஆலோசகராக செயலாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது. டி.கே.ஏ.நாயர் வகித்துவந்த முதன்மைச் செயலர் பொறுப்பை புலோக் சாட்டர்ஜி என்கிற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1974ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் இணைந்த அதிகாரி ஏற்கிறார் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. புலோக் சாட்டர்ஜி, சோனியாஜிக்கு நெருக்கமானவர் என்றும், அவரை முதன்மைச் செயலராக அமர்த்துவதன் மூலம் பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவருக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் என்று செய்திகள் கூறுகின்றன. டி.கே…

    • 0 replies
    • 640 views
  7. முல்லைத்தீவு "வலைஞர்மடம்" அருகே கூகிளாண்டவர் மூலம் உலவும்போது கண்ட செயற்கைக்கோள் படமிது.... பல்வேறு கால கட்டங்களில் எடுக்கப்பட்ட இப்பகுதியின் படத்தில் வித்தாகிப் போனவர்களின் வரி வரியாய் தோன்றும் புதைகுழிகள்...மனதை பிசைந்தது... வட்டதிற்குள்ளான பகுதி கண்டது... இப்பகுதி 2005ல்.. இப்பகுதி 16-03-2009ல்.. இப்பகுதி 24-05-2009ல்.. இப்பகுதி 15-06-2009ல்.. Source: Google Earth. .

  8. இணைய வேண்டிய நேரமிது! - மு. வீரபாண்டியன்First Published : 08 Jul 2011 01:37:51 AM IST இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கூட்டம் கடந்த 18,19 ஆகிய இரு தினங்கள் தில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கான தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை வரவேற்றதுடன், இலங்கைத் தமிழர்களுக்கு ஒருமைப்பாட்டையும், அவர்களது கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், ஜூலை 8-ம் தேதி நாடு தழுவிய அளவில் பேரியக்கங்களை நடத்திட, கட்சி அணிகளையும், பொதுமக்களையும், அறைகூவி அது அழைத்துள்ளது. அத்துடன் இலங்கைத் தமிழ் மக்களுக்காக உடனடிச் செயல் திட்டமாகவும், எதிர்கால அரசியல் தீர்வாகவும் சில முன்மொழிவுகளைக் கூற, இந்திய நாட்டின் பிரதமரை கட்சியின் உயர்மட்டக் குழு சந்திப்பது எனவும…

    • 0 replies
    • 934 views
  9. இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக நடவடிக்கை வேண்டி பிரேரணை ஒன்று அவுஸ்திரேலிய செனட் சபையில் இன்று சமர்பிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய செனட் சபை உறுப்பினர் பொப் ப்ரவுன் (Bob Brown) இந்த பிரேரணையை சமர்பித்துள்ளார். . அவுஸ்திரேலிய செனட் சபையின் எதிர் தரப்பின் ஆதரவுடன் குறித்தப் பிரேரணையானது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. . இதேவேளை, செனட் சபை உறுப்பினர் பொப் ப்ரவுன் தனது பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயம் குறித்து கூடிய கவனம் செலுத்துமாறு அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட்டுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. My link

    • 2 replies
    • 984 views
  10. சனல் 4 வெளியிட்ட இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படம் இந்தியாவின் ஆங்கில ஊடகமொன்றில் முதல் முறையாக காண்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. . ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியில் இன்று இரவு 10 மணிக்கு இலங்கையின் கொலைக்களம் ஆவணத்திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. . இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ் ஊடகங்கள் மட்டுமே சனல் 4 ஆவணப்படம் குறித்து செய்திகளை வெளியிட்டன. டெல்லியிலிருந்து செயல்படும் ஆங்கில தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பவில்லை. . இந்த நிலையில், ஹெட்லைன்ஸ் ருடே இந்த சவாலை ஏற்று ஆவணத்திரைப்படத்தை ஒளிபரப்பவுள்ளது. . மூன்று நாட்கள் இதை ஒளிபரப்புகிறது ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி இன்று இரவு 10 மணிக்கு முதல் பகுதி ஒளிபரப்பாகிறது. நாளை வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கும்,…

    • 0 replies
    • 3.5k views
  11. சனல்- 4 வீடியோ : உண்மையா- பொய்யா? இன்றைய நிலையில் இலங்கை அரசாங்கத்தின் முதல் நிலை எதிரி யார் என்றால், அது விடுதலைப் புலிகளாக இருக்க முடியாது. சனல்-4 தொலைக்காட்சி தான் அந்த இடத்தைப் பிடித்துள்ளது என்பது மிகைப்பட்ட கருத்தல்ல. வளைகுடாப் போரின் பின்னர் தான் அல்-ஜெஸீரா தொலைக்காட்சி உலகெங்கும் அறிமுகமானது. அதற்கு முன்னர் அரபு நாடுகளைக் கடந்து அதன் புகழ் பரவியிருக்கவில்லை. வளைகுடாப் போர் பற்றிய வீடியோ காட்சிகளை அல்- ஜெஸீரா வெளியிட்டபோது தான் உலகம் அந்தப் போரின் பரிமாணம் எத்தகையது என்று உணர்ந்து கொண்டது. அமெரிக்காவின் படை வலிமையையும் போராயுதங்களின் கோரத்தையும் அது உலகின் முன் கொண்டு சென்றது. அதேபோலத் தான் பிரித்தானியாவின் சனல்- 4 தொலைக்காட்சியை முன்னர் அறிந்த…

    • 1 reply
    • 868 views
  12. ஈழத்தமிழர்களுக்கு தோள் கொடுப்போம்! - கன்னட மனித உரிமை அமைப்புகள் உறுதியேற்பு!! தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மணிவண்ணன் (சென்னை பல்கலைக்கழகம்), கண. குறிஞ்சி (PUCL), அமரந்தா (இலத்தின அமெரிக்க நட்புறவு அமைப்பு), சேவ் தமிழ் இயக்கம் ஆகியோரின் முன்னெடுப்பின் விளைவாய், கடந்த ஜூன் 2ஆம் திகதி பெங்களுரில், கர்நாடக, ஆந்திர, கேரள, மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்று கூடி, போர்குற்றம், இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தினைத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக, மன்றத்தின் கர்நாடகக் குழு Forum Against War Crimes and Genocide - Karnataka State Committee) சார்பில் ஜூலை 2 பெங்களுரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ம…

  13. ஜெனீவா-கட்டுநாயக்க-முள்ளிவாய்க்கால் கடந்த மே 30 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமான மனித உரிமைகள் பேரவைத் தொடர்பற்றிய கண்ணோட்டமே இது. மேற்படி பேரவையின் கூட்டத் தொடர், இலங்கையின் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அண்மையில் நிகழ்ந்த அடக்குமுறை, அராஜகம் மற்றும் யுத்தத்தின் இறுதிக் கட் டத்தில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த கொடூரங்கள் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பிரபல ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய ராவய பத்திரிகைக்கு எழுதிய கண்ணோட்டத்தின் தமிழாக்கம். கடந்த மே மாதம் 30 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையின் 17 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமானது. அன்றைய கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் சட்டத்துக்கு முரணான படுகொலைகள் தொடர்பாக ஐ.நாவின் விசேட பிரதிநிதி கிறிஸ்தோ கயின்ஸ் உரை…

    • 0 replies
    • 705 views
  14. ஜெயலிலிதாவை எப்படி கையாளப் போகிறது அரசாங்கம்? இலங்கையின் இராஜதந்திரம் பலவீனமானது என்ற விமர்சனங்கள் அவ்வப்போது வெளியாகின்றபோதும், அதன் பலத்தை யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது என்னதான் சர்வதேச அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், இலங்கை அரசு தனது இராஜதந்திர நகர்வுகளை முழுமூச்சோடு மேற்கொண்டு வருகிறது. மேற்குலகைப் பகைத்துக் கொண்டதை இலங்கையின் இராஜதந்திர பலவீனங்களில் ஒன்றாகக் குறிப்பிடலாம். ஆனால் இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் இலங்கை கொண்டுள்ள பலமான இராஜதந்திர உறவுகளின் பக்கத்தை யாராலும் மறந்து விட முடியாது. இலங்கையின் பிரதான இராஜதந்திர பலமே இந்தியா தான். எல்லாவிதமான வெளிநாட்டு அழுத்தங்களுக்கும் இலங்கைக்கு கவசமாக இருப்பது இந்தியா தான் என்பதில் சந்தேகம்…

  15. எதையோ விட்டு விட்டு - எதையோ பிடித்தல் ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் எதையோ கடித்த கதை பற்றி நீங்கள் அறிவீர்கள். அது போல, பல்கலைக்கழக மாணவர்களுக்காக இராணுவத்தினர் வழங்க ஆரம்பித்துள்ள பயிற்சி நெறி - இப்போது அதிபர்களிடம் போய் நிற்கிறது! பல புறங்களிலிருந்தும் பல்கலைக் கழக மாணவர்களுக்கு இராணுவத்தினர் மூலம் பயிற்சி வழங்கப்படுவதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய போதும், அதைக் கணக்கெடுக்காமல் உயர்கல்வி அமைச்சு குறித்த பயிற்சி நெறியினை ஆரம்பித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏன் இராணுவத்தினர் பயிற்சி வழங்க வேண்டும் என்பது ஒரு சாராரின் கேள்வி! ஆனால், இது இராணுவப் பயிற்சியேயல்ல, இராணுவத்தினர் மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்குகிறார்கள் - அவ்வளவுதான் எ…

    • 0 replies
    • 928 views
  16. ஐரோப்பா தாண்டி மணக்கும் ஐ.தே.கவின் அம்மண அரசியல்.. ஐ.நாவை மதிப்பதா இல்லை அதை மதிக்காத ரணிலை மதிப்பதா..? சிங்கள அரசியலில் ஏறத்தாழ செல்லாக்காசாகிவிட்ட ஐ.தே.க இப்போது இனவாதமே ஒரே வழி என்ற இடத்திற்கு மறுபடியும் வந்திருக்கிறது. சமீபத்தில் ஐ.தே.க கூறியிருக்கும் மூன்று முக்கிய கருத்துக்கள் போருக்குப் பின்னும் அக்கட்சி புதிதாக எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தெட்டத்தெளிவாகக் காட்டுகின்றன. 01. தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வில் போலீஸ் சேவையை வழங்குவதை ஐ.தே.க எதிர்க்கும் என்று சென்ற வாரம் கரு.ஜெயசூரியா கூறியிருந்தார். 02. போர்க்குற்ற விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், தாம் அனைவரும் ஒன்றுபட்டு அதை எதிர்ப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்கா நேற்று க…

    • 0 replies
    • 1.1k views
  17. எப்போது மகிந்தாவின் முறை வரும் எமக்கான நீதியும் விரைவாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை தருகின்றது. தற்போது ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான மாநாடு சுவிஸ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சேர்பிய போர்க்கைதி றற்கோ மிலடிக் கைது புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது. இன்றய புதிய உலகு இனவாத அரசுகளுக்கும், போர்க் குற்றவாளிகளுக்கும் எதிராக திரும்ப ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் நம்பிக்கையுடன் ச.ச.முத்து எழுதிய கட்டுரை இங்கே தரப்படுகிறது : முள்ளிவாய்க்காலின் கரையிலே நிகழ்த்தப்பட்ட மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக,இனஅழிப்புக்காக,போர்க்குற்றத்துக்காக மகிந்தா கும்பல் எப்போது கூண்டில் ஏற்றப்படப்போகிறார்கள். 2009ல் வன்னியில் சிங்களம் நிகழ்த்திய காட்டுமிராண்டித் தனங்கள…

    • 0 replies
    • 815 views
  18. பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள் : ப்ரியந்த லியனகே (எனக்கு மின்னஞ்சலில் வந்த இந்த கட்டுரையாலர் ப்ரியத லியனகே அவர்களுக்கும் இதை மொழிபெயர்த்த முஸ்லிம் தோழர் எம்.ரிஷான் ஷெரீப் அவர்களுக்கும் என் நன்றிகள் இருவரும் இலங்கையில் வாழ்கிறார்கள்) இன்று மே மாதம் 16ம் திகதி. நான் கொழும்பில் இருக்கிறேன். வீதி முழுதும் புத்தரின் பிறந்த நாளைக் கொண்டாடும் மகிழ்ச்சி எதிரொலிக்கிறது. எனது கைத்தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. எனக்கு மட்டுமல்ல. அது நாட்டிலிருக்கும் எல்லோருக்கும் அனுப்பப்பட்டவோர் தகவல். ‘நோயற்ற சுக வாழ்வோடு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்’ எனும் வாழ்த்துச் செய்தி அது. அவ் வாழ்த்தினை நினைவிலிருத்திக் கொண்டு நான் இப்பொழுது கிழக்குக்குச் செல்கிறேன். இப்…

    • 1 reply
    • 1.2k views
  19. நினைவுக்குள் நடுகல் ஆனவர்களும் பூபதி அம்மாக்களும் ஆனந்தபுரத்தில் அனல் நடுவே நின்று வீரம் விளைத்தவர்களது நினைவு போன வாரத்தில் கடந்துபோனது. ஆனந்தபுரம் தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் திசையை தீர்மானிக்கும் ஒரு சமராகஇருந்தது. அந்தசமர் வெற்றிபெற்றால் சிங்கள படைகளும்,அதற்கு முண்டுகொடுத்தபடியேநின்றிருந்த வல்லாதிக்கபடையும் மோசமாக பின்வாங்கிஓடிவிடும்.வெல்லப்படமுடியாத ஒரு மரபுவழிப்படையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் படைப்பிரிவுகள் தீர்மானிக்கப்பட்டு அதற்கு ஊடாக தமிழீழ நிலங்களின் பிரிந்துபோகும் உரிமை யாராலும் மறுக்கமுடியாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கு தனது முழுநிதியையும், ஆளணியையும் மாவிலாற்றிலிருந்து தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு இறக்கிவிட்டிருந்த சிங்களம் ஆனந்தபுரத்…

    • 0 replies
    • 921 views
  20. The state of Sri Lanka: After two years, how are efforts progressing in the seemingly intractable conflict between the Sinhalese and Tamils? http://www.tvo.org/TVO/WebObjects/TVO.woa?videoid?957997816001 பேராசிரியர் சேரன், ரமேஸ் கெற்றியராச்சி, பேராசிரியர் கிரேக் ஸ்கொற், சுதாமி பூலோகசிங்கம் மற்றும் ஜோதி சண்முகம் ஆகியோருடன் tvo தொலைக்காட்சிச்சனலுக்காக டானியல் கித்ஸ்

    • 6 replies
    • 1.2k views
  21. கொழும்பு அரசியலில் ஐ.நாவின் அறிக்கை குறித்து இருந்து வந்த எதிர்ப்புணர்வு இப்போது இந்தியாவின் பக்கம் மெல்ல மெல்லத் திரும்பத் தொடங்கியுள்ளது. சிங்களத் தேசியவாதிகள் பலரும் இப்போது இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதற்கு முதலாவது காரணம் இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்தது போன்று இந்தியா நடந்து கொள்ளவில்லை என்பது. இரண்டாவது காரணம் இந்தியா கொடுக்கத் தொடங்கியுள்ள அழுத்தங்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்து வந்த மிகநெருக்கமான உறவு இப்போது முக்கியமானதொரு கட்டத்தை அடைந்துள்ளது.அக்கினிப் பிரவேசத்தைக் கடக்க வேண்டிய நிலை என்று சொன்னால் கூற அது மிகையில்லை. அண்மையில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இந…

    • 0 replies
    • 726 views
  22. அதிகாரப் பகிர்வு எட்டாக் கனியே நிபுணர் குழுவின் போர்க் குற்றங்களின் அடிப்படையில் இலங்கையில் மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் ஏன் அவசியம் என்பது தொடர்பாக விளக்குகிறார், சிங்களப் பத்தி எழுத்தாளரும் அரச பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் காரணமாக தற்போது மேற்கு நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோரி இருப்பவருமான சுனந்த தேசப்பிரிய. ராவய பத்திரிகையில் பிரசுரமாகியுள்ள அந்த விமர்சனப்பத்தியின் தமிழ் மொழியாக்கம் இங்கு தரப்படுகிறது. இலங்கையில் நிலவும் இனப்பூசலுக்குக் காரணமான மோதலுக்கு பேச்சு மூலம் தீர்வுகாண எந்த ஒரு வாய்ப்பும் இந்த நாட்டில் இதுவரை அமையவில்லையா? என்றொரு கேள்வி எம்முன் உள்ளது. இந்த வினா, அதாவது யுத்தத்துக்கு மூலகாரணியான தமிழ் மக்களது சமூக அரசியல் கலாசார உரிம…

  23. தன்மானத் தமிழன்! தமிழகத் தேர்தல் முடிவு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறது. அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறப்போகிறது என்று நாம் முன்பே எதிர்பார்த்தோம் என்றாலும் இந்த அளவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை மக்கள் அதிமுகவுக்கு அளிப்பார்கள் என்பதை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்துக்குக்கூட அருகதை இல்லாத அளவுக்கு திமுக தோல்வியைத் தழுவி இருக்கிறது என்றால் எந்த அளவுக்கு மக்கள் திமுக ஆட்சியின்மீது வெறுப்படைந்திருந்தனர் என்பது தெளிவாகிறது. இதை ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கூட்டணியின் அமோக வெற்றி என்று கூறுவதைவிட, திமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிராக எழுந்த மக்களின் மௌனப் புரட்சி என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிராக ஒரே மாதிரி…

    • 0 replies
    • 900 views
  24. யானை பின்னே.... மணி ஓசை வரும் முன்னே.. ஐ.நா.அறிக்கை நிரூபிக்கப்பட்டால் இந்தியா இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் என, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.சென்னையில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்:- ஐ.நா.அறிக்கை நிரூபிக்கப்பட்டால் இந்தியா இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் என, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.சென்னையில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்:- இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது,…

  25. இலங்கையிலும், மற்றையை இடங்களிலும் ? பெரிதும் பேசப்படும் ஒரு விடயம் யுத்த குற்றமும் , நல்லிணக்கமும். இங்கே பலரும் வாறபடியால், யாரவது விளக்குவீர்களா, இலங்கையரசு மீது யுத்த குற்றம் சாட்டினால் ஏன் நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்று? அரசாங்கம் இன்னமும் யுத்த குற்றம் செய்கிற நிலையில் அல்லது அதற்குரிய தண்டனைகளை கொடுக்கிற நிலையில்- அது கைது செய்யப்பட்ட புலிகளில் உயர் நிலை தலைவர்களாய் இருந்தால் என்ன, கடைசி மாதத்தில் அல்லது வாரத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட சிறுவர் சிறுமியாய் இருந்தால் என்ன, அவர்களுக்கு ? தண்டனை கொடுத்து , ? புனர்வாழ்வளித்து வெசாக்குக்கும், பொசன் பண்டிகைக்கும் எதோ "தமிழ் படங்களில் வாரமாதிரி அண்ணையை, பங்காளியை கொலை செய்திட்டு - படம் தொடங்கேக்கை அல்லது முடியேக்க…

    • 0 replies
    • 781 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.