நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
பெண்கள் அருந்தும் பியரும் ஆண்களின் ‘கவலையும்’ கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலகின் அனேகமான நாடுகளில், பெண்களுக்கான உரிமைகள், ஓரளவு கிடைத்திருக்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்னரிருந்த நிலைமையோடு ஒப்பிடும் போது, இப்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம், மிக முக்கியமானது. முன்பை விட அதிகளவிலான பெண்கள், நிர்வாகப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். முன்பை விட அதிகளவிலான பெண்கள், நாட்டின் தலைமைத்துவத்தில் இருக்கிறார்கள். ஐக்கிய இராச்சியத்தின் தெரேசா மே, ஜேர்மனியின் அங்கெலா மேர்க்கெல், நோர்வேயின் ஏர்னா சோல்பேர்க், மியான்மாரின் ஆங் சாங் சூகி என்று நீளும் இந்தப் பட்டியலில், ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஹிலாரி கிளின்டனும் இணைந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. …
-
- 0 replies
- 323 views
-
-
ஈழம் நேற்றும் இன்றும் ஒரு சிறப்புப் பார்வை thodarum
-
- 0 replies
- 728 views
-
-
புரட்சி என்பது பிறப்பில் கருவாவதில்லை. ஒரு மனிதனின் வாழ் காலத்தில் அவனை சுற்றி நிகழும் தான் சார்ந்த சமூகத்தின் மீது கட்டவிழ்க்கப் படும் ஒடுக்குமுறைகள் கண்டு வெகுண்டு எழுந்து வெடிப்பதே புரட்சி. தமிழீழ மண்ணில் தொடர்ந்து வரும் இன அழிப்பு அவலங்களைப் போக்க காலத்துக்குக் காலம் பலர் தமது இன்னுயிர்களை ஈகம் செய்து மாவீரர்களாகவும் நாட்டுப் பற்றாளர்களாகவும் விடுதலை விரும்பிகளாகவும் இன உணர்வாளர்களாகவும் ஈகையாளர்களாகவும் விடுதலை தீ வளர்க்க ஆகுதியாக்கி உள்ளனர். அந்த வரிசையில் செந்தில் குமரன் என்ற ஈகைப்போராளியும் எம் இனத்தின் இருள் களையத் தன்னை எரித்து விடுதலை நெருப்பிற்கு நெய் வார்த்துள்ளார். செப்டம்பர் 5ம் நாள் ஐ.நா முன்றலில் வீரத்தமிழ் மகன் ஈகைப்போராளி செந்தில்குமரன் அவர்கள் தமிழி…
-
- 0 replies
- 455 views
-
-
இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவினர் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க. நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத்தொடங்கியிருந்தார்கள். உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே மக்களில் பெரும்பாலானோர் பேசிக் கொண்டிருப்பதாகப் பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள் அத்துடன் தமிழீழத்தின் பல பாகங்களிலும் பரவலாக மக்கள் அடையாள உண்ணாவிரதங்களை மேற்க…
-
- 0 replies
- 3.1k views
-
-
பின் நிலைமாறுகால நீதியும் தமிழினப் படுகொலையும் - அருட்தந்தை எழில் றஜன் யே.ச. 31 டிசம்பர் 2013 ஜோசப் பரராஜசிங்கம் நினைவுப் பேருரை:- திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களே அவையில் கூடியிருக்கும் பெரியோர்களே, சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் இந்நேர வணக்கங்களை உரித்தாக்குவதில் பேருவகை அடைகின்றேன். மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் நினைவுப் பேருரையை நிகழ்த்துமாறு எனக்கு அழைப்பு விடுத்த திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் ஞாபகார்த்தக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கம்பன் எவ்வாறு தனது இயலாமையை இராமாயணத்தின் ஆரம்பத்திலேயே எடுத்தியம்புகிறானோ அவ்வாறு நானும் இப்பேருரையை ஆற்ற அரசியலில் பழுத்த பேராசான்கள் முன் நிற்கின்றேன். அரசிய…
-
- 0 replies
- 367 views
-
-
இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம்? ஆர்.ராமகுமார் தமிழில்: வ.ரங்காசாரி கடுமையான நெருக்கடியில் சிக்கியிருக்கிறது இலங்கைப் பொருளாதாரம். இப்போதைய நெருக்கடிக்குக் காரணங்கள் என்ன, இத்தகு நிலையை நோக்கி அதைத் தள்ளியவர்கள் யார்? இதையெல்லாம் அடையாளம் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம். இந்த நெருக்கடிக்கான மூல காரணத்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் இலங்கை காலனியாக இருந்த காலகட்டத்திலிருந்தும், உள்நாட்டுப் போருக்குப் பிறகும்கூட நாட்டின் வளர்ச்சி முயற்சிகளில் நடந்த தவறுகள் வரையிலும் எழுதலாம் என்றாலும், நம்முடைய தேவைகளுக்காக, கடந்த பத்தாண்டுகளில் இலங்கை அரசு எடுத்த முடிவுகள் - நடந்த சம்பவங்கள் பற்றி மட்டும் அதிகக் கவனம் செலுத்துவோம். 21ஆம் நூற்ற…
-
- 0 replies
- 342 views
-
-
இந்தியாவின் மாய வலை! பொறிக்குள் சிக்கிய இலங்கை.... Courtesy: ஜெரா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சொல்வதைப் போல இந்தப் பொருளாதாரச் சரிவானது இலங்கையில் நிலவிய போரின் விளைவுதான். அதாவது இலங்கையும் இந்தியாவும் இணைந்து தமிழர்களது மரபார்ந்த தாயகப் பிரதேசங்களை அழிக்க மேற்கொண்ட போரின் விளைவுதான் இது. மகாவம்ச மனநிலையின் கூட்டு வெளிப்பாட்டு இலங்கை அரசிற்கு இயக்கமான இலங்கை அரசிற்கு வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை முற்றாக அழித்து அதனை சிங்கள தேசமாக மாற்றிக்கொள்ள் வேண்டிய தேவை இருந்தது. இராமனின் தேசமென ஐதீகமயப்படுத்தி வைத்திருக்கும் இலங்கை தேசத்தை, அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் தனது 26 ஆவது மாநிலமாக மாற்றிக்கொள்ள வேண்டிய த…
-
- 0 replies
- 237 views
-
-
2019 தேர்தல் பிரசார வியூகத்தை மாற்றுவாரா பிரதமர் நரேந்திர மோடி? எம். காசிநாதன் / 2018 டிசெம்பர் 17 திங்கட்கிழமை, பி.ப. 09:33 ஐந்து மாநில தேர்தல்கள், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி (பா.ஜ.க.) அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. ஐந்திலும் ஆட்சி அமைக்க முடியாமல், நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில், பா.ஜ.க தவித்தாலும், “வட இந்தியாவின் இதயம்” என்று சொல்லப்படும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி அமைக்க முடியாமல் போனமை மிகப்பெரிய இழப்பாக மாறியிருக்கிறது. தேர்தல் முடிவுகள், சற்று பா.ஜ.கவுக்கு ஆறுதல் கொடுக்கும் வகையில், ஆட்சி அமைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மிக அருகில்…
-
- 0 replies
- 362 views
-
-
நுவரெலியா மாவட்டத்தில் முதன்மை மொழி தமிழ் இலங்கையின் அரசியலமைப்பின்படி தமிழ்மொழி பெற்றுள்ள அந்தஸ்துகள் எவை என்பதும், நமது தாய்மொழியான தமிழைப் பயன்படுத்தும் சட்டபூர்வ உரிமை எந்த அளவில் உள்ளது என்பது பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டின் நிர்வாகத்தை வழிநடத்தும் விதிமுறைகளடங்கிய பெறுமதி வாய்ந்த சட்டநூலாகும். அதிலுள்ள விதிகளை அப்படியே கடைப்பிடித்து செயற்படுத்த வேண்டுமேயன்றி அதனை மீறிச் செயற்படுவதோ, புறக்கணிப்பதோ சட்டப்படி குற்றமாகக் கருதப்பட வேண்டும். அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மொழியுரிமை தமிழைப் பொறுத்தவரை தொடர்ந்தும் மீறப்பட்டே வருகின்றது. தட்டிக் கேட்போர் எவருமற்ற நிலையே காணப்படுகி…
-
- 0 replies
- 503 views
-
-
உறுதி என்ற பதத்திற்கு இரும்பை ஒப்பிடுவார்கள். ஆனால் அதன் புரிதலில் நம்மவரில் பலருக்குச் சரியான விளக்கம் இன்றிய நிலையிருக்கும் என்றால் அதில் மிகையில்லை. ஏனெனில் எவ்வகை இரும்பானாலும் சில காலம் அது ஒரே இடத்தில் இருப்புக்கொள்ளுமாயின் அது துருப்பிடித்து மண்ணோடு மண்ணாகி விடும் என்பதே காலம் சொல்லும் கதை. அவ்வாறிருக்கையில் எவ்வாறு உறுதியை இரும்புக்கு ஒப்பிடுவது என்ற கேள்வி நம்மனத்தைக் குடையாமல் இல்லை.உண்மை என்னவெனில்; இரும்பு; ஒருபோதும் அதன் கனத்திற்காக உறுதியோடு ஒப்பிடப்படுவதில்லை. இரும்பானது, துருப்பிடித்து மக்கிப் போகும் இறுதிக்கணம் வரையிலும் அது இரும்பாகவே இருந்து அழிந்துபோகும், வேறு எந்தப்பொருளும் இறுதிவரை இரும்பைப்போல வாழ்வதில்லை என்பதாலேயே, இரும்பை ஒத்த மனவுறுதி வ…
-
- 0 replies
- 715 views
-
-
ஒருவர் எவ்வளவு படித்தவராகவும் செல்வாக்கு கொண்டவராகவும் திகழ்ந்தாலும் தனக்கு கல்வி கற்றுத் தந்த ஆசிரியர்களை மறக்க மாட்டார்கள். கண்டால் மரியாதை செலுத்தத் தவறவும் மாற்றார்கள். சில விஷயங்கள் மாற்றம் அடைவதில்லை. ஆசிரியருக்கு கனம் பண்ணுவதும் இவ்வாறே சங்க கால முதல் நம்மிடையே நீடித்து வந்துள்ளது. இதற்கு ஒரு சமீபத்திய உதாரணமும் உண்டு. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சமீபத்தில் கிழக்கு மாகாணம் சென்றிருந்தபோது தனக்கு றோயல் கல்லூரியில் ஆங்கிலம் கற்பித்த ஆசிரியரைக் கண்டு அவரை கௌரவப்படுத்தி வந்திருக்கிறார். அந்த ஆசிரியர் பெயர் சிவலிங்கம் மாஸ்டர். அது பற்றி அவரிடம் பேசுவதற்காக பெரிய கல்லாற்றில் அமைந்துள்ள சிவலிங்கம் ஐயாவின் வீட்டிற்குச் சென்றோம்.பொக்ைக வாய், கபடமற்ற புன்…
-
- 0 replies
- 652 views
-
-
ராஜீவ் காந்தியின் ‘ஆவியை’ அடிக்கடி தட்டியெழுப்பி, தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இடைவிடாது ஊறு விளைவித்து வரும் டில்லி அதிகார வர்க்கம் தனது அடுத்த இலக்காக ‘ஈழம்’ என்ற சொற்பதம் தமிழகத்தில் கையாளப்படுவதை முடக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ‘தமிழீழம் எனது நிறைவேறாத கனவு... அது நாளை நிறைவேறாது போனாலும் நாளை மறுதினமாவது நிறைவேறும்’ என்று கூறி இருபத்தாறு ஆண்டுகளாக புதைகுழியில் செத்துக்கிடந்த டெசோ அமைப்பைக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிர்த்தெழ வைத்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி, அதே வேகத்தில் ‘அந்தர்’ பல்டி அடித்து ‘தமிழீழத்தை நிறுவுவது டெசோ அமைப்பின் நோக்கம் அல்ல’ என்று அறிவித்து ஒரு சில நாட்கள் கடப்பதற்குள் ‘ஈழம்’ என்ற சொற்பதத்திற்கு சாவுமணியடிக்கும் முயற்சியில்…
-
- 0 replies
- 622 views
-
-
அழகிய சிங்கர் யார் தெரியுமா? இந்த கேள்விக்கு "பாப் மடோனா!" என்று பதிலளித்து தசாவதாரம் படத்தில் கமல் பட்டையைக் கிளப்புவார். அதுபோல "பாப்பரசர் யார் தெரியுமா?" என்று கேட்டால் அவசரப்பட்டு பாப் இசைக்கே அரசர் என்ற நினைப்பில் பாப் மார்லி அல்லது மைக்கேல் ஜாக்சனின் பெயரை நாம் கூறிவிடக்கூடாது. 'பாப்பரசர்' என்ற பெயர் போப்பாண்டவரைக் குறிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள 110 கோடி ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவர் அவர். இத்தாலியின் தலைநகரமான ரோமில் உள்ள வாடிகன் என்ற 0.17 சதுர மைல் பரப்பளவுள்ள சின்னஞ்சிறிய நாட்டுக்கு அவர் அதிபரும் கூட. இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான இராயப்பர் என்ற பீட்டர்தான் உலகின் முதல் போப்பாகக் கருதப்படுகிறார். அன்று தொடங்கி இன்று வரை இரண்டாயிரம் ஆண்டுகால…
-
- 0 replies
- 529 views
-
-
புதைகுழி தேசம் - டி.அருள் எழிலன் [ வியாழக்கிழமை, 20 மார்ச் 2014, 08:38 GMT ] [ அ.எழிலரசன் ] நன்றி: ஆனந்த விகடன் 26 Mar, 2014 'புத்தன்பாதம், செத்த பிணங்கள் புதையும் கல்லறையோ..!’ இது ஈழத்து வில்லிசைப் பாடல் வரிகள். ஈழத் தமிழர் படுகொலைகளுக்குப் பின்னர், இலங்கையில் சிங்களர்கள் பாதம் பதித்த இடங்கள் எல்லாம் இப்போது மனிதப் புதைகுழிகளாக உருமாறிவிட்டன. திருக்கேதீஸ்வரம், இறுதிப் போர் நடந்த மூங்கிலாறு பகுதிகளில் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதே, இப்போது ஈழக் கொலைக் களத்தின் சாட்சி. இந்தியா, தேர்தல் ஜுரத்தில் தகித்துக் கொண்டிருக்க, தமிழகம் கூட்டணிக் கணக்குகளுக்குள் சிக்கி உழன்றுகொண்டிருக்க... ஈழ நிலவரம் கண்டுகொள்ளப்படாத…
-
- 0 replies
- 473 views
-
-
சீனாவினால்... கடும் நெருக்கடியில், இலங்கை? -யே.பெனிற்லஸ்- அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கைக்கு சீனாவால் புதிய தலையிடியொன்று ஏற்பட்டிருக்கின்றது. காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் உத்வேகமும், தன்னெழுச்சியான மக்கள் கூட்டத்தாலும் ராஜபக்ஷக்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு எதிராக நெருக்கடிகள் ஏற்பட்டபோது தான், தமது தவறான கொள்கைகளை உணர்ந்தனர். தாம் செல்லும் பாதையை மாற்றுவதற்கு முனைந்தனர். அதனால், ராஜபக்ஷக்கள் ‘யூ டேர்ன்’ எடுக்கும் போது நிலைமைகள் கையறு நிலைக்குச் சென்றுவிட்டன. இதனால் அவர்களால் பொதுமக்களின் எழுச்சிக்கு முன்னால் தாக்குப்பிடிக்கவில்லை. குறிப்பாக, சர்வதேச நாணயநித…
-
- 0 replies
- 461 views
-
-
-
- 0 replies
- 573 views
-
-
எப்போது மகிந்தாவின் முறை வரும் எமக்கான நீதியும் விரைவாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை தருகின்றது. தற்போது ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான மாநாடு சுவிஸ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சேர்பிய போர்க்கைதி றற்கோ மிலடிக் கைது புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது. இன்றய புதிய உலகு இனவாத அரசுகளுக்கும், போர்க் குற்றவாளிகளுக்கும் எதிராக திரும்ப ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் நம்பிக்கையுடன் ச.ச.முத்து எழுதிய கட்டுரை இங்கே தரப்படுகிறது : முள்ளிவாய்க்காலின் கரையிலே நிகழ்த்தப்பட்ட மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக,இனஅழிப்புக்காக,போர்க்குற்றத்துக்காக மகிந்தா கும்பல் எப்போது கூண்டில் ஏற்றப்படப்போகிறார்கள். 2009ல் வன்னியில் சிங்களம் நிகழ்த்திய காட்டுமிராண்டித் தனங்கள…
-
- 0 replies
- 815 views
-
-
பிளவுகளை தவிர்க்கும் வகையில் செயற்படவேண்டியது அவசியம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்குமிடையிலான முரண்பாடு தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எதிர்கால அரசியலில் தனிவழிசெல்லும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இந்த விடயமானது தமிழ் மக்களை பொறுத்த வரையில் அவர்களது அரசியல் எதிர்காலத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சிந்திக்கவேண்டிய நிலைமை தற்போது உருவாகியிருக்கிறது. 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற வடமாகாணசபைத் தேர்தலில் முன்னாள் நீதியரசரான சி.வி.விக்கினேஸ்வரனை தமிழ் தேசி…
-
- 0 replies
- 266 views
-
-
இன்றைக்கும் தொடரும் கண்ணிவெடி ஆபத்து! கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரை இரைக்காக காத்துக் கிடக்கின்றன வெடிப்பொருட்கள் பெண் தலைமைத்துவக் குடும்பமாகிய எனக்கு ஒரு தொழல் வாய்ப்பும் அதற்கான சம்பபளமும் மாதாந்தம் கிடைக்கின்றது. ஆனால் இதுஒரு ஆபத்தான தொழில். நான் சுயகௌரவத்தோடு வாழவேண்டும் என்பதால்தான் இந்த கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றேன். எனினும் தினமும் அதிகாலையில் வேலைக்குச்செல்வதும் என்னுடைய உழைப…
-
- 0 replies
- 415 views
-
-
மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் பின் தங்கி இருந்தாலும், சித்தாந்தரீதியாக அந்தக் கட்சி வெற்றி பெற்று இருக்கிறதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. …
-
- 0 replies
- 635 views
-
-
இலங்கையின் பொருளாதாரத்தின் கடந்த கால தவறுகள், அதை நிவர்ததி செய்வதற்காக பொருளியல் நிர்வாக ரீதியில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வட கிழக்கு பொருளியல் மேம்பாடு குறித்த பார்வைகள், ஆலோசனைகள் தொடர்பாக எஸ். துமிலன் அவர்களுடனான நேர்காணல். ஆர்வம் உடையவர்கள் முழுமையாக கேளுங்கள்.
-
- 0 replies
- 1.1k views
-
-
01. ஜெயலலிதா, உங்களை வீரப்பன் விவகாரத்தில் சம்மந்தப்படுத்தி தூக்கி ஜெயிலில் போட்டதாலும், உங்கள் மீதும் உங்கள் பத்திரிகை ஊழியர்கள் மீதும் பல பொய் வழக்குகளை போட்டதாலும் அன்றில் இருந்து இன்று வரை ஜெயலலிதா கெட்டது நல்லது எது செய்தாலும் அவரை எதிர்கிறீர்களே, பத்திரிகை தர்மத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சமே பகைமை பாராட்டாததுதான் என்பது பத்திரிகை உலகின் புலனாய்வு புலி என பாராட்டுப்பெற்ற உங்களுக்கு தெரியாதா..? அல்லது தெரிந்தும் உங்கள் சுய கோவத்துக்கு அடிமைப்பட்டு இருக்குறிர்களா..? 02. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சரமாரியாக உங்கள் மேல் வழக்குகள் பாய்ந்த போது, அப்போது எதிரிகட்சியாக இருந்த கருணாநிதி உங்களை அரவணைத்து காப்பாற்றினார் என்ற ஒரே காரணத்துக்காக இன்று வர…
-
- 0 replies
- 955 views
-
-
கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து சிங்களப் பேரினவாத சக்திகளுடன் இணைந்து தமிழ் இனத்தைப் படுகொலை செய்யும் ஒட்டுக்குழுவினர் போர் முடிவடைந்த பின்னரும் அவர்களின் காட்டிக்கொடுப்புக்களும், அடாவடித்தனங்களும் துரோகத்தனங்களும் தொடர்ந்தவண்ணமே உள்ளன. கிழக்கு மாகாணத்தில் 2007 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இப்பகுதியில் இயங்கிய ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், வலுக்கட்டாயமாக கடத்தி ஆயுதப் பயிற்சி வழங்கிய சிறார்களையும் உறவினர்களிடம் ஒப்படைத்தல், அக்குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களையும் விடுவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கு சிறீலங்கா அரசு உறுதியளித்திருந்தது. எழுத்துவடிவில் வழங்கப்பட்ட உறுதி இன்று வரையில் நிற…
-
- 0 replies
- 442 views
-
-
மனிதனின் உணவுப்பழக்கமா, விலங்குகளிடமிருந்து பறிக்கப்பட்ட உறைவிடமா... எதனால் வந்தது கொரோனா? தற்போது ஏற்பட்டுள்ள கோவிட்-19 கொள்ளைநோய் சீனாவில் தோன்றி உலகத்தையே தன்னுடைய பிடியில் வைத்துள்ளது. இந்த நோயின் தோன்றலையும், பரவலையும் அறிந்துகொள்வதின் மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற நோய்கள் வருவதைத் தடுக்கலாம் என்பது குறித்து விளக்குகிறார் விஞ்ஞானி கார்த்திக் பாலசுப்பிரமணியன். கொரோனா நோய் வந்ததிலிருந்து உலகின் சாதாரண குடிமகன் முதல் வல்லரசுகளின் அதிபர்கள்வரை அனைவரும் திட்டித்தீர்ப்பது சீனாவைத்தான். குறிப்பாக, சீனர்களின் உணவுப் பழக்க வழக்கங்களை. இதற்கு வலுசேர்க்கும் விதமாக வாட்ஸ்அப்பில் உலா வரும் பல்வேறு காணொலிகளும் சீனர்கள் பாம்பு, பூச்சிகள் உள்ளிட்டவற்றை உட்கொள்வதாகக் கா…
-
- 0 replies
- 374 views
-
-
தமிழினப் படுகொலைக்கு துணை செய்த ஐ.நா. அதிகாரிகளை தண்டிக்க ஐ.நா. அலுவலகங்களை முற்றுகை இடுவோம்! http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22799 திருமுருகன் காந்தி & உமர் செவ்வாய், 29 ஜனவரி 2013 இலங்கை மீதான சர்வதேச விசாரணையையும், தமிழீழத்திற்கான ஐ.நா.வின் பொது வாக்கெடுப்பினையும் தடுத்து நிறுத்தியதை உடனடியாக நிறைவேற்றுவதே பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான உடனடி நிவாரணம்! ஐ.நாவே அதை நிறைவேற்று!! இலங்கை இனப்படுகொலை தொடர்பில் ஐ.நா.வின் நடவடிக்கைகள் குறித்து ஒரு உள்ளக ஆய்வறிக்கையை சார்லஸ் பெட்ரி என்கிற ஐ.நா. அதிகாரி தலைமையிலான குழு நவம்பர் மாதம் வெளியிட்டது. இது ஐ.நா…
-
- 0 replies
- 522 views
-