நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
ஜனாதிபதி அநுரவின் சீன விஜயம் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது? January 5, 2025 2:54 pm எதிர்வரும் 12ஆம் திகதி சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயம் இராஜதந்திர நடவடிக்கைக்கு அப்பாற்பட்டது என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தியாவை விஞ்சும் முயற்சியாக சீனா இலங்கைக்கு மேலும் கடன் நிவாரணம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வழங்கக்கூடும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் ஊகிக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் சீனா பல ஆண்டுகளாக இலங்கையின் மிகப்பெரிய முதலீட்டாளராக இருந்து வருகிறது, ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக…
-
-
- 4 replies
- 282 views
-
-
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 75 ஆவது பிறந்த தின நினைவுப் பேருரை நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு திருமறைக்கலா மன்ற கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குமார் பொன்னம்பலத்தின் உருவப் படத்திற்கு விளக்கேற்றி, மாலை அணிவித்து அஞ்சலி செய்து ஆரம்பித்து வைத்தார். மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் ஞாபகார்த்தக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் “தற்கால சர்வதேச சட்ட மற்றும் அரசியல் ஒழுங்கில் போருக்குப் பின்னரான தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம்” என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் உரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் யாழ்.பல…
-
- 1 reply
- 281 views
-
-
இன அழிப்பு ஆதாரங்களால் சர்வதேசம் அதிர்ச்சி ; ஜெனீவாவிலிருந்து தமிழர் மரபுரிமைகள் பேரவையின் இணைத்தலைவர் நவநீதன் பிரத்தியே செவ்வி பொறுப்புக்கூறலுக்காக கால அவகாசம் வழங்குதால் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தினையும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையும் ஏமாற்றி அதனை தட்டிக்கழிப்பதற்கே வழி வகுக்கும் என தமிழர் மரபுரிமைகள் பேரவையின் இணைத்தலைவர் வி.நவநீதன் ஜெனீவாவிலிருந்து வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, கேள்வி:- ஐ.நா.மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் தமிழர் மரபுரிமைகள் பேரவை பங்கேற்பதற்கு தீர்மானித்தமைக்கான காரணம் என்ன? பதில்:- தமிழர் மரபுரிமைகள் பேரவையானது, கடந்த வருடம் ஆவணி 28ஆம் திகதி சிங்களக்குடியே…
-
- 0 replies
- 281 views
-
-
வடக்கின் கல்வித் தரம் வீழ்ச்சி அடைகிறதா? ந.லோகதயாளன். May 10, 2021 வடக்கு மாகாணக் கல்வி நிர்வாகம் பெரும் இடர்கள், குழப்பத்தின் மத்தியில் செல்வதோடு க.பொ.த உயர்தர பெறுபேறும் தொடர் பின்னடைவாகவே காணப்பட்டாளும் கிராம்ப்புறங்கள் வளர்ச்சி காண்பது மட்டுமே மகிழ்ச்சி தரும் ஒரு செய்தியாகவுள்ளது. க.பொ.த உயர்தரத்தில் கடந்த ஆண்டும் 6ஆம் இடத்தில் இருந்த வடக்கு மாகாணம் 2020ஆம் ஆண்டிலும் 6ஆம் இடத்தினையே எட்டியுள்ளனர். இவ்வாறு எட்டியவற்றில் இம் முறை பல சாதணைகளும் வேதனைகளையும் கடந்து அதிர்ச்சிகளும் கூடவே உள்ளது. இலங்கையிலேயே முதலாவது மாகாணமாக வட மேல் மாகாணமும் முதலாவது மாவட்டமாக புத்தளம் மாவட்டமும் உள்ளது. வடக்கு மாகாணத்தில் இருந்து 13 ஆயிரத்து 702 மாணவர்க…
-
- 0 replies
- 281 views
-
-
‘தண்டனை விலக்கீட்டை முடிவுறுத்து, உண்மையை உயிர்ப்பித்திரு’-பி.மாணிக்கவாசகம் 27 Views உண்மைகள் சாவதில்லை. ஆனால் சாகா வரம் பெற்ற உண்மையை வெளிக்கொண்டு வருபவர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள், கடத்தப்படுகின்றார்கள், கொல்லப்படுகின்றார்கள். நாகரிகம் வளர்ச்சி அடைந்துள்ள போதிலும் வாழ்வியலில் இது மிக மோசமான உலகளாவிய நிலைமையாகத் திகழ்கின்றது. தகவல்களை – உண்மைத் தகவல்களை அறிந்து கொள்வது மக்களின் பிறப்புரிமை. அந்த உரிமையை நிறைவேற்றுவதற்காக ஊடகவியலாளர்கள் உழைக்கின்றார்கள். அவர்கள் உண்மைகளையும் உள்ளவாறாக நிலைமைகளையும் வெளிக் கொண்டு வருவதற்குப் பாடுபடுகின்றார்கள். அதனை அவர்கள் தமது வாழ்வியலாக – தொழிலாகக் கொண்டிருக்கின்றார்கள். …
-
- 0 replies
- 281 views
-
-
இந்திய தூதரக அதிகாரிகள் தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்தது ஏன்? பேசப்பட்ட விடயங்கள் மறைக்கப்படுவது ஏன்? சிங்கள அரசியல்வாதிகள் போர்க்கொடி July 21, 2020 வடக்குகிழக்கு அரசியல்வாதிகளை இந்திய தூதரகத்தை சேர்ந்தவர்கள் சந்தித்துள்ளமை குறித்து சிங்கள அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆங்கில ஊடகமொன்று இதனை தெரிவித்துள்ளது. அதில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது திங்கட்கிழமை இந்திய தூதரகத்தை சேர்ந்தபிரதிநிதிகள் குழுவொன்று கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளது. எனினும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை திருகோணமலையில் உள்ள வீட்டில் மூடிய கதவுகளின் பின்னால் இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்தது …
-
- 0 replies
- 281 views
-
-
உருத்திரபுரம் என்னும் சிறு கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு 10 பிள்ளைகளில் 9வது பிள்ளையாக பிறந்து வறுமையின் கொடுமையில் வாழ்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் அவர்களின் வாழ்க்கை.... துறைக்கு அப்பால்
-
- 0 replies
- 280 views
-
-
-
- 0 replies
- 280 views
-
-
தொல்பொருள் திணைக்களத்தின் தவறான செயற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைப்பகுதியில் புத்தர் சிலையை வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. வெலிஓயா விகாரையைச் சேர்ந்த கல்கமுவ சத்வபோதி தேரர் தலைமையிலான புத்தபிக்குகள் குழு கடந்த செவ்வாய்க்கிழமை இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தது. புத்தபிக்குகளின் இந்த முயற்சிக்கு தொல்பொருள் திணைக்களத்தின் வவுனியா முல்லைத்தீவு உதவிப் பணிப்பாளர் உதவியுள்ளமையும் தெரியவந்துள்ளது. குருந்தூர் மலைப்பகுதியில் பௌத்த விகாரை ஒன்றை அமைக்கும் நோ…
-
- 0 replies
- 280 views
-
-
புருஜோத்தமன் தங்கமயில் ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து, இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, பாரிய போராட்டமொன்றை கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தியிருக்கின்றது. போராட்டத்தை முடக்குவதற்கு, ராஜபக்ஷர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கால கட்டுப்பாடுகளைக் காட்டி, நீதிமன்றத்தின் ஊடாகத் தடை உத்தரவுகளைப் பெற முனைந்தார்கள். அதுபோல, கொழும்பின் பிரதான நுழைவாயில்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து வெளி மாவட்டங்களில் இருந்து உள்வரும் வாகனங்களை சோதனையிட்டு போராட்டக்காரர்களுக்கான நெருக்கடிகளை ஏற்படுத்தினார்கள். ஆனாலும், இவற்றை எல்லாம் தாண்டி, இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தி…
-
- 1 reply
- 280 views
-
-
-
- 1 reply
- 280 views
-
-
பிரபாகரனும் // ரோகணவும்..! ஒரு புள்ளியில் சந்திக்காத இரு நேர்கோடுகள். (மௌன உடைவுகள் 08) November 12, 2022 — அழகு குணசீலன் — இலங்கையின் ஆயுதப்போராட்ட வரலாறு இருதுருவங்களைக் கொண்டது. ஒன்று வடதுருவம், மற்றையது தென்துருவம். எப்படி ஒன்றுக்கு ஒன்று எதிர்த்திசையில் உள்ள இத்திசைகள் இணைய முடியாதோ, அப்படியே விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனதும், ஜே.வி.பி.யின் தலைவர் ரோகண விஜயவீரவினதும் அரசியலும் அமைந்து இருந்தன. தமிழ்த்தேசிய விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் 2009 மே.18 /19 இல் முடிந்தது போன்று ஜே.வி.பி.யின் சிங்கள தேசியத்தை மையப்படுத்திய ஆயுதம் தாங்கிய வர்க்கப்போராட்டம் (?) ரோகணவின் மரணத்துடன் 1989 நவம்பர் 13 இல் முடிவுக்கு (?) வந்…
-
- 0 replies
- 280 views
-
-
ஆளுநரின் ஆத்மாவை தொட்ட ஆதங்கங்கள் காரை துர்க்கா / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 12:04 வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், “இந்த நாட்டில் சமத்துவமான, சமகுடிகளாக, கௌரவத்துடன் தமிழர்கள் எப்போது வாழ்கின்றார்களோ, அப்போது தான் இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார். அண்மையில், வவுனியாவில் நடைபெற்ற வடக்கு மாகாணப் பண்பாட்டு விழாவில் கலந்து சிறப்பித்த போதே, ஆளுநர் இவ்வாறாகக் கருத்துக் கூறியுள்ளார். “தமிழ் என்று சொல்லும் போதே, தடங்கல் இருக்கும் என்பதைக் கடந்த எட்டு மாதங்களாகக் கடமையாற்றிய காலங்களில் அறிந்து கொண்டேன்” என்றும் தெரிவித்து உள்ளார். “நான் கொழும்புக்குப் போகும் போது, தமிழர்களது வாக்குகளை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்று என்…
-
- 0 replies
- 280 views
-
-
ஜெனீவா தீர்மானம் இனிமேல் பலவீனப்பட்டுப்போய்விடும்; முன்னாள் இராஜதந்திரி தர்மகுலசிங்கம் நேர்காணல் August 9, 2020 “தற்போதை நிலையில் பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு தமிழ், முஸ்லிம் மக்களுடைய ஆதரவும் கிடைத்திருக்கின்றது. அரசை தமிழ் மக்கள் ஆதரிக்கவில்லை என்ற கருத்து இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இது ஜெனீவாவிலும் எதிரொலிக்கும். அதனால் ஜெனீவா தீர்மானங்கள் இனிமேல் பலவீனப்பட்டுப்போய்விடும்” என்று சொல்கின்றார் முன்னாள் இராஜதந்திரியான ஐயம்பிள்ளை தர்குலசிங்கம். ஜெனீவா உட்பட பல நாடுகளின் தலைநகரங்களில் இராஜதந்திரியாகப் பணிபுரிந்த ஐயம்பிள்ளை தர்குலசிங்கம் பொதுத் தேர்தலின் முடிவுகள் குறித்தும், சர்வதேச அரங்கில் அதன் தாக்கம் தொடர்பாகவும் ஞாயிறு தினக்குரலு…
-
- 0 replies
- 280 views
-
-
ஆடை தொழிற்சாலைக்குள் எவ்வாறு கொரோனா பரவியது? - ரொபட் அன்டனி 1. வெளிநாடுகளைப்போன்று கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளவேண்டுமா? 2. கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 25 வைத்தியசாலைகளில் 2366 கட்டில்கள் உள்ளன. தொற்றாளர் அதிகரித்தால் கொரோனாவுக்கான தனித்த வைத்தியசாலைகள் தயார்ப்படுத்தப்படுவது அவசியமாகும்? 3. சனத்தொகையில் 18 வீதமானோர் வயது முதிர்ந்தோர். எனவே வயதானவர்கள் குறித்து அதிக கவனம் இன்றியமையாதது. 4. நூறு வருடங்களுக்குமுன் ஏற்பட்ட பிளேக் தொற்றுநோயின் இரண்டாவது அலையின்போதே மிக அதிகளவான உயிரிழப்புகள் உலகில் பதிவாகின. எனவே மக்கள் சுகாதார அறிவுறுத்தல்களை புறக்கணிக்கக்கூடாது. மக்கள் வைரஸ் தொற்றுநோய் நாட்டில் இருந்ததையே மறந்துவிட்டு செயற்பட்டுக்கொண்டிருந…
-
- 0 replies
- 280 views
-
-
கீர்த்தி துபே பதவி,பிபிசி நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மாணவர்கள் போராட்டம் உச்சத்தை அடைந்த போது, ஷேக் ஹசீனா ஆகஸ்ட் 5 ஆம் தேதி வங்கதேசத்தில் இருந்து டெல்லியை வந்தடைந்தார், அவர் ஏன் இந்தியாவைத் தேர்ந்தெடுத்தார் என்பதை யூகிப்பது சுலபம் தான். வங்கதேசத்தில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது, ஷேக் ஹசீனா இந்தியாவுடனான தனது உறவை பெரிதும் வலுப்படுத்தினார். அதே சமயம் பல துறைகளில் வங்கதேசம் இந்தியாவைச் சார்ந்திருப்பதும் அதிகரித்தது. வங்கதேசம் உணவுப் பொருட்கள் முதல் மின்சாரம் வரை அனைத்தையும் இந்தியாவிலிருந்து பெறுகிறது. இந்தியா வங்கதேசத்தில் உள்கட்டமைப்பு மற்றும் வர்த்தகத் துறையில் பெரும் முதலீடுகளை செய்துள்ளத…
-
- 1 reply
- 279 views
-
-
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்து - பெளத்த மாநாட்டில் கலந்து கொண்ட பெளத்த பிக்குகள் ஆற்றிய உரைகள் தமிழ் மக்களை அவர்கள் பால் கவனிக்க வைத்துள்ளது. பெளத்த பிக்குகள் என்றால் அவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்றே இது காறும் தமிழ் மக்களின் நினைப்பாக இருந்தது. அதில் நியாயமும் உண்டு. எனினும் கோட்டாபய ராஜபக் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிற்பாடு பெளத்த தேரர் களின்கை இன்னும் ஓங்கியிருப்பது போன்ற நிலைப்பாடு தெரிகிறது. அதேநேரம் கடந்த காலங்களில் இனப்பிரச் சினைக்கான தீர்வு முயற்சிகளையயல்லாம் தடுத்தாற்கொண்டவர்கள் பெளத்த தேரர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. கடந்த அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வாகப் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்பதை முன்வைத்தபோது, அதனை எதிர்ப் பதில…
-
- 0 replies
- 279 views
-
-
நியூசிலாந்திலிருந்து இலங்கை சென்றுதிரும்பிய உண்மைகளைக் கண்டறியும் குழு நடத்திய ஒன்றுகூடல் https://www.youtube.com/watch?v=oXutqXSFs2I&feature=youtu.be எம்.ரி. ஈடென் போர் நினைவு மண்டபம் நவம்பர் 17, 2013 அன்று பதற்றம் நிறைந்த, கருத்தை ஆர்வத்துடன்கேட்பதற்கான மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழிந்தது. அண்மையில், உண்மைகளைக் கண்டறியும் பணிநிமிர்த்தமாக இலங்கைக்குச் சென்றிருந்தபோது அங்கே குடிவரவுச் சட்டங்களை மீறியமை என்றகுற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, பின் நாடு திரும்பிய அமைச்சர் ஐhன்லோகி அவர்கள் கூறுவதைக் கேட்பதற்காக நாம் எல்லோரும் அங்கே கூடிநின்றோம். அந்த ஒன்றுகூடல்நிகழ்ச்சி நியூசிலாந்தின் பச்சை கட்சியும் நியூசிலாந்து தமிழர்களின் தேசிய மக்களவையினரால…
-
- 0 replies
- 279 views
-
-
7 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் ஒரு கிலோ அரிசி விலை 200 ரூபாயைத் தாண்டிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை 250 ரூபாயைக் கடந்துவிட்டது. ஒரு முட்டை 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 90 சதவிகிதம் அளவுக்குக் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்கள் பல மணி நேரம் இருளில் மூழ்கியிருக்கின்றன. வரும் நாள்களில் மின்வெட்டு அதிகம் இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. கடன் அதிகமாகி, அன்னியச் செலாவணி கையிருப்பு தீர்ந்து போனதால் வெளிநாட்டுப் பொருள்களை ஏற்றி வந்த கப்பல்கள் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளும் மக்களும் வீதிகளில் இறங்கிப் ப…
-
- 0 replies
- 279 views
-
-
பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ இந்தியாவைப் பயன்படுத்தி, பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பிக் கொள்வதற்கான, முயற்சிகளில் இறங்கி யுள்ள நிலையில், அவர் நாட்டின் பெயரைக் கெடுத்து விட்டார் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்த ஆரம்பித்திருக்கின்றன. இந்தியாவிடம் பெறப்பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான தவணைக் காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீடிப்புச் செய்து தருமாறு இந்தியாவிடம் கோரியிருப்பதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைக்கும் என்று நம்புவதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் கூறியிருந்தார். கடனை திருப்பிச் செலுத்துவதற்கு இயலாமல் உள்ளது, அதற்கு மேலதிக காலஅவகாசம் தர வேண்டுமென்று பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ இந்தியாவிடம் கோரவில்லை. …
-
- 0 replies
- 278 views
-
-
இஸ்லாமிய அரசு இயக்கத்தின் தலைவரின் மீள்வருகை உணர்த்துவது என்ன? (ஸ்டான்லி ஜொனி – த இந்து) இறுதித்தடவையாக அபூ பக்கர் அல் - பக்தாதி வீடியோ ஒன்றில் தோன்றிய போது இஸ்லாமிய அரசு இயக்கம் (ஐ.எஸ்) அதன் புகழின் உச்சியில் இருந்தது. இஸ்லாமிய அரசு அதன் புதிய இராச்சியமொன்றை (கலிபேற்) பிரகடனம் செய்ததற்குப் பிறகு ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரான மொசூலின் அல் - நூரி பள்ளிவாசலின் பிரசங்கமேடையில் அவர் காணப்பட்டார். சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு அதுவும் இஸ்லாமிய அரசு இயக்கத்தினர் சிதறியோடிக்கொண்டிருக்கும் தருணத்தில் கடந்த திங்கட்கிழமை இன்னொரு வீடியோவில் அல் - பக்தாதி தோன்றினார். அந்த வீடியோவை இஸ்லாமிய அரசு இயக்கத்தின் ஊடகப்பிரிவின் ஒரு அங்கமான அல் - புர்க…
-
- 0 replies
- 278 views
-
-
சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையில் ஜனநாயகம் எதிர்நோக்கும் மிகப்பெரிய ஆபத்து ; மியன்மாரின் பாதையில் இலங்கை? - பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட நவம்பர் 9 வெள்ளிக்கிழமை இரவு பாராளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை அரசியலமைப்பின் பிரத்தியேகமான ஏற்பாடொன்றை மீண்டும் ஒருதடவை அப்பட்டமாக மீறும் செயலாக அமைந்திருக்கிறது. பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் அடிக்கடி ஜனாதிபதி அரசியலமைப்பை மீறுவாரானால் அது சர்வாதிகார ஆட்சிக்கே கதவைத்திறந்துவிடும். சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கை எதிர்நோக்குகின்ற மிகவும் பாரதூரமான அரசியலமைப்பு நெருக்கடி இதுவாகும்.நாட்டில் அரசியலமைப்பின் வழியிலான அரசாங்கம், சட்டத்தின் ஆட்சி மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்…
-
- 0 replies
- 278 views
-
-
46 ஆண்டுகள் உறக்காது போராடியவ மாவீரன் என் தம்பி என்னைத் தேடி வந்தானா? என்று நினைக்குபோது நான் பெருமைப் படுகிறேன். என்தப்பி பிரபாகரஎதை நினைப்பாரோ அதைச் சாதிப்பார் என்பதில் நான் முழுமையான நம்பிக்கை வைத்திருக்கிறேன்.அனைத்து தமிழர்களும் போர்க்குற்றவாளி ராஜபக்சவை கூண்டில் ஏற்றுவதற்கு சபதம் எடுக்கும் நாளாகப் தம்பியின் பிறந்த நாளைப் பயன்படுத்துங்கள். http://www.pathivu.com/news/35606/57//d,article_full.aspx
-
- 0 replies
- 278 views
-
-
மண் விடுதலை கேட்ட நாங்கள் மணற் கொள்ளைக்குத் துணை போகலாமா? மயூரப்பிரியன்.. December 22, 2019 மண் விடுதலை கேட்ட நாங்கள் மணற் கொள்ளைக்குத் துணை போகலாமா?, சூழற் படுகொலை இனப் படுகொலையின் இன்னொரு வடிவம், மணல் மாஃபியாக்களைக் கைது செய், அரசியல்வாதிகளுக்கு மணல் உரிமம் வழங்காதே, அரசே உன் பின்னணியில் மணல் மாஃபியாக்களா?, சட்டவிரோத மணல் அகழ்வைத் தடைசெய், மணல் வளத்தைச் சூறையாடாதே என சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு விண்ணை பிளக்கும் கோஷங்களுடன் யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக கடந்த புதன்கிழமை (18ஆம் திகதி) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆம். புதிய ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்சே தெரிவான பின்னர் வடக்கு கிழக்கில் ஆங்காங்கே ம…
-
- 0 replies
- 278 views
-
-
புறக்கணிக்க வேண்டாம் ஒரு சமூகத்தை அநீதிக்குட்படுத்தும் வகையில் செயற்பட்டதன் காரணமாக கடந்த முப்பது வருடகாலமாக எமது நாடு மிகப்பெரிய யுத்தத்தை எதிர்கொண்டதுடன் அதன் முடிவில் பாரிய விலையை செலுத்தியது. முப்பது வருடகால யுத்தம் காரணமாக நாம் எதிர்கொண்ட பின்னடைவு எத்தகையது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை, துயரம் மற்றும் வடுக்களை சுமந்து வந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் வடுக்களுடன் வாழ்கின்றார்கள். இவ்வாறான சூழலில் மீண்டும் ஒரு யுத்தத்தையோ அல்லது அதுபோன்றதொரு நிலைமையையோ எதிர்கொள்ளவேண்டிய நிலையில் இந்த நாடு இல்லை என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்…
-
- 0 replies
- 278 views
-