Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வணக்கம் யாழ் கள உறவுகளே!, நான் கொளும்புக்கு வந்த புதுசில் எனது நண்பர் ஒருவருடன் கதைக்கும் போது அவர் யதார்தமாக கூறினார், "யாழ்ப்பாண பொடியங்கள இலகு வா கண்டுபிடிக்கலாம்" எண்டு, நானும் எப்படி? என கேட்ட போது அவர் சொன்னார் "அவங்க நடக்கேக்க நெஞ்சு நிமித்திதான் நடப்பாங்க, தடிச்ச மீசை வச்சிருப்பாங்க என கூறினார்" நானும் சிரித்துக்கொண்டே இவைதான் தமிழருக்குரிய இயல்பான குணம், நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் தடித்த மீசையும் தானெ தமிழரின் அடயாளம் என கூறிவிட அந்தகதை அத்துடன் நிறைவடைந்தது... எனது இன்னுமொரு நண்பர் ஒருவர், என்னைவிட வயதில் மூத்தவர், அவருக்கு யாழ்பாணத்து பொடியங்கள கண்ணில காட்ட ஏலாது.. ஏனேண்டா அவங்க மோட்டபைக்க முறுக்கி கொண்டு திரியுறாங்களாம், பொறுப்பு இலாதவங்…

  2. இறுதிப்போரின்போது சரணடைவதாக முடிவு செய்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், தம்மை சரணடையக்கோரிய சிறிலங்கா அரசையோ இராணுவத்தினரையோ நம்பாவிட்டாலும்கூட காயமடைந்த போராளிகள், பொதுமக்கள் ஆகியோரை காப்பாற்றவேண்டும் என்ற நோக்குடனேயே சரணடைவதாக முடிவெடுத்தார்கள் என்று சரணடைவதற்கு முன் கடைசி நேரத்தில் நடேசனுடன் பேசிய அவரது நண்பரை மேற்கோள் காட்டி ஊடகவியலாளரும் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் தெரிவித்துள்ளார். சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக தனக்கு கிடைத்த நம்பகரமான தகவல்களின் அடிப்படையில் எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவரது நீண்ட ஆய்வுக்கட்டுரையில் நடே…

    • 1 reply
    • 939 views
  3. ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி வசூலிப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இலங்கையின் ஆடைக் கைத் தொழிலில் காத்திரமான தாக்கத்தினை ஏற்படுத்தும். தரத்தில் கணிசமான அளவு முன்னேற்றத்தினைக் கண்டமைக்காக இலங்கையினது ஆடைக் கைத்தொழில் பாராட்டைப் பெற்றிருந்தாலும் தற்போது அது பிரச்சினையில் சிக்கியுள்ளது. ஆடைக் கைத்தொழில் எதிர்கொள்ளும் பிரச்சினைக்குக் காரணம் அது செய்த தவறல்ல; மாறாக, சிறுபான்மை இனங்களுக்கெதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட போர்க் குற்றங்களின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றது Ethical Corporation வெளியிட்டுள்ள ஒரு ஆய்வுக் குறிப்பு. அது மேலும் தெரிவிப்பதாவது - சிறிலங்காவிலிருந்து வரும் இறக்குமதிப் பொருட்களுக்கு இருந்த தீர்வை விலக்கை நிறுத…

    • 0 replies
    • 478 views
  4. தேர்தலும் தமிழர் தரப்புகளின் சவால்களும் 2010 நாடாளுமன்றத் தேர்தல் வழமையிலும் பார்க்க இந்த முறை பரபரப்பு மிக்கதாக நோக்கப்படுகின்றது. நடைபெறவுள்ள தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் தொடர்பில் மாறுபட்ட வாதப்பிரதிவாதங்களும், மக்கள் முடிவெடுப்பதில் நெருக்கடிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதே போல சிங்கள தேசத்திலும் தேர்தல் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. முதலில் சிங்களத் தரப்பினரின் தேர்தல் நகர்வுகளை மேலோட்டமாக நோக்குவோம். தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் மகிந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தனதாக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக தேர்தல் களத்தில் குதித்துள்ளார். தனது மகன் நாமல்ராஜபக்ச, சகோதரன் பசில் ராஜபக்ச, மற்றும் உலக பிரபல்யங்களான சனத்ஜெயசூரிய, முத்தையா முரளீரத…

  5. செய்தி ஆசிரியர்: டுமீல் குபீர் அலெக்ஸ் சுவாமி பஷீர் தேன்கூட்டு தலைமையகம் நேற்று காலை 8 மணி போல் புலிக்குண்டரால் தாக்கப்பட்டது. பய சுபாவம் கொண்ட புலிக்குண்டர் முந்நூறு பேர் சேர்ந்து வந்து, முட்டை, தக்காளி, டாய்லாட் பேப்பர் போன்ற கனரக ஆயுதங்களால் கண்மூடித்தனமாக தாக்கினார்கள். இந்த தாக்குதலை முறியடிக்க தேன்கூட்டு கற்பனா சக்தி நிரம்பிய ஆசிரியர் துறைரத்னே கம்பிநீட்ன தனது மனைவியார், குமுதா கம்பிநீட்ன வை அனுப்பினார். குமுதா வெளியே தலையை நீட்டும் போது ஒரு தக்காளி அவரின் தலையை தாக்கி, அவர் கோமா நிலைக்கு சென்றார். அப்போது தாயாரை காப்பாற்ற வந்த மகன் இழிச்சதிலக கம்பிநீட்ன முகத்தில், ஒரு முட்டை கதவில் அடித்து சிதறும்போது, கோது கீறி அவரது முகம் சிதைந்துவிட்டது.…

    • 6 replies
    • 2.2k views
  6. ஈழத்தமிழர், இலங்கைத் தமிழர், தாய்நாட்டுத் தமிழர்– இவர்களின் அரசியல் நிலை என்ன? ஈழத்தமிழரின் அரசியல் நிலைப்பாடும், அதனோடு சமாந்தரமாக வரப்போகும் பொதுத் தேர்தலும், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கக் காத்திருக்கும் எத்தனையோ அரசியற் கொக்குகளுக்கும், இனவாத நாரைகளுக்கும் கனவிலும் எதிர்பார்த்திருக்க முடியாத ஒரு தருணத்தை அளித்துள்ளன. இலங்கை பூராவும் தமிழரை ‘ஆதரிக்கும்’ தொனியில் வீட்டுக்கு வீடு ஒரு கட்சி உண்டாகுமா எனத் தோன்றுகிறது. ‘பனையால் விழுந்தவனை மாடேறி விழக்கியது’ போல சிங்கள பௌத்த தீவிரவாதத்தின் அணுகுமுறைகளும், ‘எரிகிற வீட்டில் புடுங்குவது ஆதாயம்’ எனச் சில சுயநலவாத தமிழ்த் துரோகக்கும்பல்களின் கூக்குரல்களும், பாராளுமன்ற இருக்கைகள் ஏதோ பரம்பரைச் சொத்து எனப் பாசாங்கு செய்யு…

    • 0 replies
    • 555 views
  7. http://www.infotamil.ch/ta/index.php தென்னாசியப் பிராந்தியத்தில்இ இந்தியாவே தமது உண்மையான நட்புச்சக்தியாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலான ஈழத்தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது. இந்த எதிர்பார்ப்பானது இதுவரை இருதரப்பு உறவாக பரிணமிக்கவில்லை. இருப்பினும் இரண்டு தரப்பு நலனும் ஒரு புள்ளியில் சந்திக்கும் ஒரு சூழலில் இது சாத்தியப்படும் எனச் சிலர் கூறி வருகையில்இ இன்னும் சிலர் இது குளம் வற்றக் காத்திருந்து குடல் வற்றி செத்த கொக்கின் நிலைக்குத்தான் ஈழத்தமிழர்களை இட்டுச் செல்லும் என்று வாதிடுகிறார்கள். இவ்விடயம் தொடர்பான முழுமையான விவாதம் எதுவும் இடம்பெறாத நிலையில்இ இந்தியாவை விடுத்து பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடனான உறவுகளை ஈழத்தமிழர்கள் வளர்த்துக் கொள்ள வே…

  8. பொன்னம்பலங்களின் வெளியேற்றங்களும் தமிழ் மக்களின் தீர்ப்புக்களும் - இரா.துரைரத்தினம். தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியேறிவிட்டார் என்ற செய்தி தமிழ் மக்களின் அரசியல் தலைமையை பிளவு படுத்தி சிதைக்க வேண்டும் என கங்கணம் கட்டி செயற்பட்டு வந்தவர்களுக்கு மிக உவப்பான செய்தியாக இருந்தாலும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பலமான அரசியல் தலைமை ஒன்று உருவாக வேண்டும் என உழைத்தவர்களுக்கு மிகுந்த வேதனை தருகின்ற விடயம் தான். காலத்தின் தேவை கருதி பலமான அரசியல் தலைமை ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உருவாக்கத்திற்காக உழைத்த நண்பர் சிவராமின் ஆத்மா இந்த செய்தியைக்…

  9. எதையும் எழுதக் கூடிய மன நிலையில் நான் இல்லையென்றும், அதனாலேயே மூன்று மாதங்களாக என்னுடைய இணையத் தளத்தை அப்படியே கிடப்பில் போட்டேன் என்றும் கடந்த கட்டுரையில் எழுதியருந்ததை வாசித்த சிலர் என்னுடன் தொடர்பு கொண்டார்கள். என்னை தொடர்ந்து எழுதும் படியும் அத்துடன் வெப்ஈழம் இணையத்தில் தொடர்ந்தும் ஆக்கங்கள் இடம் பெறுவதற்கு தம்மால் முடிந்த பங்களிப்பை செய்கிறோம் என்று அன்போடு கூறினார்கள். அவர்களின் ஆர்வத்தினால் மிக்க மகிழ்ச்சி அடைந்த நான் அவர்களிடம் நிபந்தனைகளுடன் கூடிய சில கோரிக்கைகளை முன்வைத்தேன். என்னுடைய தளத்தில் எழுதுகின்ற பொழுது “தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்பது போன்ற மோசடியான கட்டுரைகளை எழுதக் கூடாது”, “மறுவாசிப்பு என்ற பெயரிலோ வேறு வகையிலோ தேசியத் தலைவரை கொ…

  10. கடந்த மூன்று மாதங்களாக வெப்ஈழத்திலோ அல்லது வேறு தளங்களிலோ பத்திரிகைகளிலோ எதையும் நான் எழுதுவில்லை. என்னுடைய தளத்தையும் அப்படியே கிடப்பில் போட்டு விட்டு என் பாட்டுக்கு இருந்து விட்டேன். வெப்ஈழம் தளத்தை நான் ஆரம்பித்த பொழுது நிறையக் கனவுகளும் நோக்கங்களும் இருந்தன. இன்றைய யதார்த்தம் அந்தக் கனவுகளையும் நோக்கங்களையும் கடுமையாக அச்சுறுத்துகின்றன. அரசியல் குறித்து எழுதுவதை நிறுத்தி விட்டு வேறு விடயங்களை எழுதுவோமா என்றும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். வெளிநாட்டவர்கள் மத்தியில் பரப்புரை செய்வதற்கு பயன்படும் என்பதனாலும், அரசியல் குறித்த எழுத்துகளுக்கு ஒரு அங்கீகாரத்தை தரும் என்பதனாலும் இடையில் நிறுத்தியிருந்த அரசியற் படிப்பை தொடர்ந்து மேற்கொண்டு அதில் இளங்கலை பட்டம் வர…

  11. கலைஞர் தொலைக்காட்சியில் பாசமிகு தலைவனுக்கு பாராட்டுவிழா நடாத்துகின்றார்கள். 50 ஆயிரம் தமிழர்கள் ஒரே நாளில் கொல்லப்படும்போது மெளனமாக இருந்த அந்த பாசமிகு தலைவனுக்கு நாங்களும் பாராட்டுவிழா நடாத்துவோம்

    • 9 replies
    • 1.5k views
  12. ஜனாதிபதித் தேர்தல் இறை (வன்) செயல். [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2009-12-26 11:13:39| யாழ்ப்பாணம்] ஜனாதிபதித் தேர்தல் இவ்வளவு விரைவாக அறிவிக்கப்படும் என்ற நினைப்பு எவரிடமும் இருந்ததில்லை. இன்னமும் ஒன்றரை வருடங்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு இருக்கின்ற போதிலும், அவசர அவசரமாக ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு விடப்பட்டது. வன்னியுத்தம் முடிந்த கையோடு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதன் மூலம் தனது வெற்றி பூரணமாக உறுதி செய்யபடும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷ எண்ணியிருந்தார்.ஒன்றரை வருடங்கள் தாமதித்து ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் போது அந்தக் கால இடைவெளியில் ஏற்படக் கூடிய அரசியல் மாற்றங்கள் தனது வெற்றிக்கு சாதகமாக அமையாது போகலாம். எனவே யுத்த வெற்…

    • 0 replies
    • 552 views
  13. வெள்ளி, பிப்ரவரி 26, 2010 12:10 | மறைச்செல்வன், ஐரோப்பா ஈழத்தமிழரின் நிலை – ‘காய்க்கும் மரம்தான் கல்லெறி வாங்கும்’ ‘முள்ளிவாய்க்கால் முடிவுடன் தமிழ் மக்களின் எதிர்காலமே முடிந்துவிட்டது. இனி அவர்களை நடைபிணங்களாக்கிய பின் தாம் நினைத்ததை எளிதாக முடித்து விடலாம்’ என்ற நப்பாசையுடன் இருந்த சிங்கள பௌத்த இனவாத அரசுக்கும், அதற்கு முண்டு கொடுத்து வந்த, இன்னும் கொடுத்து வரும் இந்தியா, சர்வதேச நாடுகள் ஆகியவற்றுக்கும் இன்று ‘கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது’ போன்ற நிலை உருவாகிறது. உலகம் பூராவும் மாவீரர் நினைவு நாள், முத்துக்குமார் முதல் முருகதாசன் வரை தம்உயிரை அர்பணித்த தியாகிகளின் நினைவுநாட்கள் ஆகியவற்றில் முன்னொரு போதும் இல்லாத அளவில் பெருந்திரளாகக் கூடிய புலம்பெயர் மக்கள…

  14. இந்தியாவுக்கேற்ப கூட்டமைப்பு ஆடுகின்றது - பகிரங்க விவாதத்திற்கு நாம் தயார் - த.தே.வி. கூட்டமைப்பு கொழும்பு நிருபர் செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 23, 2010 sivaji கூட்டமைப்பினால் வெளியேற்றப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சிறிகாந்தா ஆகியோர் புதிய கட்சியினை நேற்று ஆரம்பித்தனர். http://www.youtube.com/user/Eelanatham இதன் பின்னரான செய்தியாளர் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் முன்வைத்தனர். தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் திங்கட்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. தமிழ் மக்களைக் கொலை செய்ய துணைபோன இந்தியாவுக்கு உடந்தைய…

    • 8 replies
    • 948 views
  15. நாலாவது ஈழப்போர் உக்கிரம் பெற்றதில் இருந்து இலங்கையில் மோசமடைந்திருந்த மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுவந்த மேற்குலகம் கடந்த வாரம் அழுத்தமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை கடந்த 15 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாக ஆறு மாதங்களுக்கு நிறுத்தியுள்ளது. இந்த ஆறு மாதங்களிலும் இலங்கையில் மனித உரிமை செயற்பாடுகளில் முன்னேற்றங்கள் காணப்பட்டால் வரிச்சலுகையின் நிறுத்தம் தொடர்பான முடிவுகள் மீளாய்வு செய்யப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த வரிச்சலுகை நீடிப்புக்காக 2008 ஆம் ஆண்டு இலங்கை விண்ணப்பித்தபோது ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசு அதற்கு தகுதியுள்ளதா என்பது தொடர்பில் ஆ…

  16. நடைபெறப் போகும் தேர்தல் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் தமிழ்த்தேசியத்தின் ஒருமித்த செயற்பாட்டின் அடித்தளத்தையே தகர்த்துவிடும் என்ற ஆபத்து நிலை தற்போது இலங்கை அரசியல் களத்தில் உணரப்பட்டுள்ளது. தேர்தல் குறித்த முனைப்பு, கலந்துரையாடல்கள், உடன்பாடுகள், கருத்துவெளிப்பாடுகள், கருத்து மோதல்கள் என அரசியல் வட்டாரங்கள் மிகுந்த சுறுசுறுப்படைந்துள்ளன. இதன்போது உள்ளேயிருப்பவர்களை வெளியனுப்புதல் வெளியில் இருப்பவர்களை உள்ளே கொண்டுவருதல் என்ற அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் முயற்சி செய்கிறார்கள். இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது இறுதி நிலைபாட்டினை வெளியிடும் என்றும் அது பத்திற்கும் மேற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள…

    • 2 replies
    • 719 views
  17. அரிசி பானைக்குள்ளேதான் வேகிறது - தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சவால்களும் - எப்போதுமே ஒரு அரசியல் நிலைப்பாடு தோல்வியடையும் போது பல்வேறு குழப்பங்கள் வெளிக்கிளம்பும். அதுவரைக்கும் குறித்த அரசியலின் உள்-வெளி இயங்கு சக்திகளாக இருந்தவர்களே அதன் எதிர் சக்திகளாகவும் அல்லது குழப்பம் விளைவிக்கும் சக்திகளாகவும் மாறலாம் எனவே குழப்பங்கள் ஒரு நிதானமான நிலைமையை அடைவதற்கு சிறிது காலம் எடுக்கலாம். இந்த அரசியல் போக்கை தற்போது நமது அரசியல் சூழலில் மிகத் துல்லியமாகவே அவதானிக்க முடிகிறது. விடுதலைப்புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய அரசியல் அதன் உள்ளடக்கம் வீரியம் அனைத்தையும் இழந்து நடு வீதிக்கு வந்தது. அதுவரைக்கும் விடுதலைப்புலிகள் தலைமையிலான தமிழ் தேசிய அரசியல் ந…

    • 0 replies
    • 486 views
  18. சிறிலங்காவில் போரும் அமைதியும் - க. வீமன் உள்நாட்டுப் போர் முடிவுற்றாலும் எதிர்பார்த்த அமைதி சிறிலங்காவில் ஏற்படவில்லை முதலாம் இரண்டாம் உலகப் போர்களில் கடும் போர் நடத்திய பிரான்சும் ஜேர்மனியும் இன்று உறுதியான நட்பு நாடுகளாகி விட்டன இது போன்ற ஒரு நிகழ்வைச் சிறிலங்காவில் காணமுடியாது தமிழ்-சிங்களப் பகைமை பல நூற்றாண்டுக்குப் பழமை வாய்ந்தது மனதிலே பகை உதட்டிலே நட்பு என்ற அடிப்படையில் இரு பக்க உறவுகள் இடம் பெறுகின்றன சிறிலங்கா இனப்பிரச்சனை புற்று நோய் போன்றது அது மறைவது போல் இருந்து மீண்டும் தோண்றி விடும் தமிழர்களைத் தோற்கடிக்கும் நோக்குடன் ஒன்றிணைந்த சிங்கள இனத்தவர்கள் மத்தியில் போர் முடிந்ததும் வெடிப்புக்கள் தோன்றிவிட்டன சிங்கள ஒற்றுமைக்கு ஒரு பொது எதிரி தேவைப்படுகிறது. …

    • 0 replies
    • 711 views
  19. சம்பந்தர் துரோகியா? நிராஜ் டேவிட் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வரலாறு பற்றியும், அதன் உருவாக்கத்தின் பின்னால் இருந்த உழைப்புக்கள் பற்றியும் கடந்த வாரம் இந்தப் பத்தியில் சற்று விரிவாக ஆராய்ந்திருந்தோம். சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, இலங்கை ஒரு பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், த.தே.கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றது. சுயநிர்ணய உரிமை, வடக்கு கிழக்கு இணைப்பு என்கின்ற கோரிக்கையின் அடிப்படையில் அந்த அமைப்பு தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றது. இந்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உண்மையிலேயே தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வழிநடாத்த தகுதியானதா? தமிழ் தேசியக் கூட்டமைப்பே இன்று ஈழத் தமிழர்களின் உண்மையான அரசியல் பிரதிநிதிகளா? …

    • 11 replies
    • 1.3k views
  20. சிங்கள அரசு போர்க்குற்றவாளியே உலக மக்கள் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு தமிழாக்கம் : பூங்குழலி (செவ்வாய், பிப்ரவரி 16, 2010 23:14 | அகரவேல். சென்னை) மக்களின் உரிமைகள் மற்றும் விடுதலைக்கான லெலியோ பாசோ உலகளாவிய அமைப்பினால் ஆதரித்து ஊக்கப்படுத்தப்படும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், இத்தாலியில் உள்ள பொலோக்னாவில் ஜுன் 1979-இல், 31 நாடுகளைச் சேர்ந்த பல சட்ட வல்லுநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நோபல் பரிசு வென்ற 5 பேர் உட்பட பிற பண்பாட்டு மற்றும் சமூகத் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. வியட்நாம் (1966-67) மற்றும் லத்தீன் அமெரிக்காவின் சர்வாதிகாரங்கள் (1974-76) மீதான ரஸ்சல் தீர்ப்பாயத்தின் மூலம் பெற்ற வரலாற்று அனுபவங்களை தனது அடிப்படையாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் கொண்டுள்ளது. …

    • 0 replies
    • 735 views
  21. இலங்கை அரசியல் மிகவும் கொந்தளிப்பான ஒரு நிலைக்கு மீண்டும் வந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல், அதைத் தொடர்ந்து அந்தத் தேர்தல் பற்றிய குற்றச்சாட்டுகள், இப்போது ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது, இந்தக் கைதுக்கு எதிரான ஆர்;ப்பாட்டங்கள் என அடுத்தடுத்து பரபரப்பான நிகழ்ச்சிகள்@ பரபரப்பான செய்திகள். யுத்தம் முடிந்தாலும் நாடு அமைதிக்கோ வழமைக்கோ திரும்பவில்லை. ஜனநாயகத்;தைச் சுற்றி ஆயிரக்கணக்கான கேள்விக்குறிகளே நிற்கின்றன. ஒரு மாதத்துக்;குள் ஒரு ஊடகவியலாளர் கடத்தப்பட்டு தகவல் இல்லாத நிலை. இன்னொரு ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அரசாங்கத்துக்கெதிரான குற்றச்சாட்டுகள், கண்டனங்களோடு தெருவில் இறங்கியிருக்கிறார்கள் சனங்களும் ஊடகவியலாளர்களும். வடக்கு கிழக்கிலிருந்த கொந்தளிப்பான நி…

    • 0 replies
    • 521 views
  22. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 16.02.2010 அன்று ஒலிபரப்பாகிய வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றிய பதிவு http://www.yarl.com/articles/node/1007

  23. ஈழசெய்தி தளத்திற்கு............... “நான் தமிழ்செல்வன் (தமிழீழத்தை பிறப்பிடமாக கொண்ட நான் இப்போது இருப்பது தமிழகத்தில்) ஓர் தமிழ் உணர்வாளர் வீட்டில், ஈழ இணையம் நான் அனுப்பும் இந்த காணொலியை எம் தமிழ் சொந்தங்களிடம் கொண்டுச் செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம் தஞ்சையில் நடந்த ஈழத் தமிழருக்கான வாழ்வுரிமை மாநாட்டில் கவிஞர் சீதையின் மைந்தனால் பாடப்பட்டதலைவன் வருவான் தமிழீழம் மலரும் என்ற இக் கவியை உங்கள் தளத்தின் ஊடாக ஒலிபெறப்ப வேண்டும். தமிழின துரோகி கருணாநிதியின் செம்மொழி மாநாடு வரை உங்கள் தளத்தில் வைத்திருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். கவியரங்கத்தில் பாடப்பட்ட கவியின் (More…) http://www.dailymotion.com/video/xc6p86_nigf_news நன்றி - ஈழம் இணையம…

    • 0 replies
    • 609 views
  24. சிறைக்குள்ளேயே பொன்சேகா க்ளோஸ்...? துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அந்தரப்படுவது போன்ற ஒரு நெருக்கடியை இலங்கை ஆட்சிப் பீடத்துக்குத் தந்திருக்கிறது பொன்சேகா விவகாரம். பிரபாகரன் ரகசியம் வெளிவராமல் தடுக்க சிறைக்குள்ளேயே பொன்சேகா க்ளோஸ்...? துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அந்தரப்படுவது போன்ற ஒரு நெருக்கடியை இலங்கை ஆட்சிப் பீடத்துக்குத் தந்திருக்கிறது பொன்சேகா விவகாரம். பொன்சேகா ஏதோ நாட்டுக்குப் பெரும் துரோகம் ஏற்படுத்தும் குற்றம் ஒன்றை ஏற்கெனவே இழைத்துவிட்டார் என இலங்கை ஆட்சிப்பீடம் துள்ளிக் குதித்தாலும் உண்மை அதுவல்ல. இனிமேல் அத்தகைய விஷயத்தை அவர் செய்துவிடுவார் என்பதுதான் மஹிந்தர் ஆட்சித் தலைமையின் பீதி, அச்சம், பயம் எல்லாமே. பொன்…

    • 4 replies
    • 1.2k views
  25. தீவிரவாதத்திற்கு அடிபணியமாட்டோம் என்று சொல்லிக்கொண்டு நீங்களே தீவிரவாதத்தைவிட கேவலமாக நடந்து கொண்டால் என்ன தீவிரவாதம் ஒழியுமா? இல்ல இன்னும் துளிர்விடுமா? தீவிரவாதம் ஏன் தொடங்கினார்கள் அவர்கள் பிரச்சனை என்ன? என்று ஆராய்ந்து அதற்கு வழிகண்டு சுமுகமாக தீர்வு காண முடியாத ஆரசியல்வாதிகள் தான் ஆட்சியில் இருக்கிறாங்க. தீவிரவாதத்திற்கு வித்திட்டதே இவங்கதான். அது மக்களுக்குத் தெரியாது. அமெரிக்கா ரஷ்சியாவை ஆப்கானிஸ்தானிலிருந்து கலைக்கவும், அந்தப்பிராந்தியத்தில் பிரச்சனைகளை முடுக்கிவிடவும் வளர்த்ததுதான் அல்-கொய்டா. காரியம் ஆனதும் கழுவி விட்டபோது அமெரிக்காவிற்கு எதிராக துவக்கைத் திருப்பியபோது தான் அதைத்தீவிரவாதம் என்றார்கள். இலங்கை அரசிற்கு எதிராக ஈழத்தமிழ் இளைஞர்களை ஒன்றுதிரட்டி ஆயுதம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.