நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
பட மூலாதாரம்,AP படக்குறிப்பு, இலங்கை கடலுக்கு வந்துள்ள சீன கப்பல் கொழும்பு கடலில் ஆய்வுகள் நடத்தவுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை கடற்பரப்பிற்குள் வருகைத் தந்துள்ள சீனாவின் சமுத்திர ஆராய்ச்சி கப்பலான ஷி யென் 6, தனது ஆய்வு நடவடிக்கைகளை கொழும்பு கடற்பரப்பில் ஆரம்பித்துள்ளது. இந்த கப்பல் நேற்றைய தினம் முதல் இரண்டு தினங்களுக்கு ஆராய்ச்சிகளை நடத்தி வருவதாக நீரியல் வளங்கள் ஆய்வு அபிவிருத்தி மற்றும் முகவர் நிறுவனம் (நாரா) பிரதான விஞ்ஞானி கணபதிபிள்ளை அருளானந்தன் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார். கொழும்பு மற்…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
கிழக்கில் பிரதேசவாத அரசியல் இனியும் எடுபடாது-பா.அரியநேத்திரன் April 1, 2025 உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் வழமையான தேர்தல் கூட்டுக்கள் வடக்கு கிழக்கில் இடம்பெற்றுள்ளன. வடக்கில் தமிழ்தேசிய கட்சிகள் சில ஒன்றிணையும் கூட்டுக்கள் ஒருபுறமும், கிழக்கில் தமிழ்தேசியத்திற்கு எதிரான பிரதேச வாதத்தை முன்னிலைப்படுத்தும் கூட்டு மறுபுறமும் இப் போது பேசும் பொருளாக உள்ளது. ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய கூட்டமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும் ப…
-
- 0 replies
- 234 views
-
-
முஸ்லிம்களின் பேரம்பேசலை பறித்தெடுக்கும் தேரவாத வியூகம் முஸ்லிம் சமூகத்தின் கூட்டுப்பொறுப்பை உணர்த்தி பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள், எதைச் சாதித்தனர், இந்தப்பதவி விலகல் உணர்த்திய செய்திகள் என்ன? இந்தக் கேள்விகளின் எதிரொலிகளே முஸ்லிம் அரசியல் களத்தின் எதிர்கால நகர்வுகளைக் கட்டியங் கூறப் போகின்றன முஸ்லிம் பெயர்தாங்கிய ஒரு சில இளைஞர்களின் பயங்கரவாதச் செயற்பாடுகளை ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்க முயன்ற, தேரவாதிகளின் பிரயத்தனங்களை, இப்பதவி விலகல்களால் முறியடிக்க முடிந்ததை மட்டும் எல்லோரும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். முஸ்லிம் எம்.பி.க்களை மீண்டும் அமைச்சரவைக்குள் உள்வாங்கும்…
-
- 0 replies
- 234 views
-
-
வடகிழக்கு இணைப்பு – முஸ்லிம் நண்பர்களுடனான கலந்துரையாடலுக்கு.வ.ஐ.ச.ஜெயபாலன் முகநூலில் இருந்து . புதிய தேர்தல் அமைப்பு மீண்டும் செல்வநாயகம் காரியப்பர் காலத்து தேர்தல் அரசியல் முறைமையை போருக்குப்பின்னர் தேசிய சர்வதேசிய ரீதியாகத் தழமாற்றம் அடைந்துள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் முன்னே வைத்துள்ளது. ...
-
- 0 replies
- 233 views
-
-
‘பொருளாதார நெருக்கடி: ஒரு நல்ல வாய்ப்பு’ -வண யோசுவா October 17, 2022 — கருணாகரன் — (வண சிவஞானம் யோசுவா, நல்லதொரு நடைமுறைச் சிந்தனையாளர். “எந்தத் தீமைக்குள்ளும் பல நன்மையுண்டு” என்ற நம்பிக்கையோடு எத்தகைய நெருக்கடிச் சூழலிலும் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருப்பவர். “இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது நாட்டுக்கும் மக்களுக்கும் மிக நல்லதொரு வாய்ப்பாகும். இந்தச் சூழலை நாம் சரியாகப் புரிந்து கொண்டு பயன்படுத்தினால் மிகப் பெரிய வளர்ச்சியையும் மாற்றத்தையும் உருவாக்க முடியும். நெருக்கடிகளே மனித குலத்தை ஊக்குவித்து வளர்ச்சிப் பாதையில் முன்னகர்த்தியுள்ளன. இதுதான் உலக வரலாறு” என்று சொல்லும் யோசுவா நல்லதொரு விவசாயி. நாடக நடி…
-
- 0 replies
- 233 views
-
-
ஜே.வி.பி.யிடம் ஏற்படவேண்டிய முக்கியமான ஒரு மாறுதல் March 2, 2023 — வீரகத்தி தனபாலசிங்கம் — கடந்த வருடத்தைய மக்கள் கிளர்ச்சிக்கு பின்னர் தோன்றிய அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் சகலதுமே ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)வுக்கு தென்னிலங்கையில் மக்கள் ஆதரவு பெருமளவுக்கு அதிகரித்திருப்பதாகவே காட்டுகின்றன. வழமையாக ஜே.வி.பி.யின் ஊர்வலங்களிலும் பொதுக் கூட்டங்களிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டாலும் அதை தேர்தல்களில் வாக்குகளாக மாற்றுவதற்கு அவர்களால் முடிவதில்லை என்பதே இது காலவரையான அனுபவமாக இருந்திருக்கிறது. ஆனால், இனிமேலும், அவ்வாறு இருக்கப்போவதில்லை என்பதே பொதுவில் அரசியல் அவதானிகளின் நம்பிக்கையாக இர…
-
- 0 replies
- 233 views
-
-
அமெரிக்காவின் இந்தோ-பசிஃபிக் அறிக்கை இந்தியா, சீனா குறித்து என்ன சொல்கிறது? 12 பிப்ரவரி 2022 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தோ-பசிஃபிக் பிராந்தியம் தொடர்பான தனது கொள்கை குறித்த அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இந்தியா தற்போது முக்கியமான புவிசார் அரசியல் சவால்களால் சூழப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனா மற்றும் மெய்யான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (சீனாவுடனான எல்லைக் கோடு) தொடர்பான அதன் நிலைப்பாடு காரணமாக இந்த சவால் ஏற்பட்டுள்ளது என்கிறது அந்…
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் தமிழர்களுக்கு பக்கபலமாக இருக்கும் - அங்குரார்ப்பண நிகழ்வில் தெரிவிப்பு By VISHNU 19 OCT, 2022 | 12:17 PM வடக்கு - கிழக்கில் இன்று நடைபெறும் நினைவேந்தல்களில் நாங்கள் அரசியலை காண்கின்றோம். தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து விடயங்களுக்கு எதிராகவும் இனிமேல் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் பலமாக இருக்கும் என வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஊடகப்பேச்சாளர் இராசரெத்தினம் தர்சன் தெரிவித்தார். யாழ்.பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் என்னும் அமைப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குர…
-
- 0 replies
- 233 views
- 1 follower
-
-
புதிய பாதையில் செல்வதற்கு தயாராவதன் முதல் அறிகுறி Photo, REUTERS/ The Telegraph மக்கள் போராட்ங்களைக் கையாளுவதில் அரசாங்கத்தின் அடங்குமுறைக் கொள்கைக்கு ஒரு தடுப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போடுகின்றார் போன்று தெரிகிறது. ஆனால், இதை அவர் எப்போதோ செய்திருக்கவேண்டும். கொழும்பில் முக்கிய பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் செய்யும் வர்த்தமானி அறிவித்தலில் கைச்சாத்திடுவதற்கு அவர் முதலில் எடுத்த தீர்மானம் அரசாங்கத்தின் சொந்த மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட மனித உரிமைகள் அமைப்புக்களின் கடுமையான கண்டனத்துக்குள்ளானது. பாதுகாப்புத் துறையினால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகின்ற இந்தத் தீர்மானம் வர்த்தக மற்றும் தொழிற்துறை நடவடிக்கைகளுக்குப் பாதகமாக அமையும் எ…
-
- 0 replies
- 233 views
-
-
தேனை விற்று தீவிரவாத அமைப்பை நடத்த முடியுமா? அது ஓரளவுக்கு முடியும் என தாலிபான்கள் நிரூபித்துள்ளனர். உலகின் பல நாடுகளில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் தமது நடவடிக்கைகளுக்கு தேவையான பணத்தை பல வகைகளில் ஈட்டுகின்றனர். அவ்வகையில் ஆப்கானிஸ்தானில் செயல்படும் தாலிபான்கள் தமது இயக்கத்துக்கான நிதியை பல வழிகளிலும் ஈட்டுகிறார்கள் என்றும் அதில் தேன் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானமும் ஒன்று என புதிய ஆய்வுத் தகவல் ஒன்று கூறுகிறது. தாலிபான் அமைப்பினர் எப்படிச் செயல்படுகின்றனர், அவர்களுக்கு நிதியாதாரங்கள் எங்கிருந்து வருகின்றன என்பது தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இதுவரை தெரியாதது என கருதப்பட்ட பல விஷயங்கள் தெரியவந்துள்ளன. ஆப்கானிஸ்தானுக்குள் பாதுகாப்பு அளிக்கிறோம் எனக் கூறி …
-
- 0 replies
- 232 views
-
-
அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள ராஜபக்சர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு இறுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் ராஜபக்சர்களின் பல சொத்துக்கள் ஆப்பிரிக்காவில் உள்ளது. அவையும் தற்போது இறுக்கப்பட்டு வருகின்றன என்று இந்தியாவின் இராணுவத்தின் முன்னாள் மேஜர் தர அதிகாரி மதன்குமார் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், 13ஆவது சீர்த்திருத்தம் குறித்து இலங்கைக்கு வேறு வழியில்லை. 13ஆவது சீர்த்திருத்தம் என்பது இரு நாடுகளுக்கு போடப்பட்ட ஒப்பந்தம். இருநாட்டு தலைவர்கள் அதில் கையெழுத்திட்டுள்ளனர். அதாவது, ஜெயவர்தன அவர்களும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள். இலங்கைக்கு உள்ள தார்மீ…
-
- 1 reply
- 232 views
-
-
தமிழ்ப்படகு மக்கள் 15 NOV, 2022 | 01:31 PM படகு மக்கள் என்று சொன்னால் ஒரு காலத்தில் வியட்நாமியர்களே நினைவுக்கு வருவர்.வியட்நாம் போரில் 1975 ஆம் ஆண்டு அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டதன் பிறகு ஆயிரக்கணக்கான வியட்நாமியர்கள் (பெரும்பாலானவர்கள் சீன வம்சாவளியினர்) தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.பலவீனமான படகுகளில் பயணம் செய்த அவர்கள் ஆழ்கடலில் அனுபவித்த அவலங்கள் தொடர்பான விபரங்கள் நடுக்கம் தருபவை. ஆபிரிக்காவில் இருந்தும் மத்திய கிழக்கில் இருந்து ஐரோப்பாவுக்கு மத்திய தரைக்கடலின் ஊடாக படகுகளில் சென்ற படகு மக்களின் அவலங்கள் தனியான வரலாறு. உலகின் படகு மக்களின் வரலாற்றுக்கு இலங்கைத் தமிழர்களும் …
-
- 1 reply
- 232 views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடி: அரசு ஊழியர்கள் அரசுக்கு சுமையாக உள்ளனரா? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 65இல் இருந்து மீண்டும் 60 ஆக்கியுள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் அரசு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் அரசு தடுமாறிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இதனால், அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை எவ்வகையிலாவது குறைக்க வேண்டும் என்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. இந்த நிலையில்…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
ஆரோக்கியம் கெட்ட ஆரோக்கியபுரம் அபிவிருத்தி என்ற போர்வையில் அழிக்கப்படும் வளங்கள் முல்லைத்தீவு, கொக்காவில் பிரதேசத்தில் சட்ட விரோத கிரவல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி, கடந்த வாரம் முற்றுகையிடப்பட்டு, கிரவல் அகழ்வில் ஈடுபட்ட கனரக வாகனங்களுடன் அதன் சாரதிகள் கைது செய்யப்பட்டு உள்ளமையானது, பிரதேச மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இதுவரைகாலமும் இவற்றைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் கண்மூடியிருந்தார்களா? எனவும் கேள்வியெழுப்பி உள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தில் 2,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதிகளில் பெருங்காடுகள் அழிக்கப்பட்டு, கிரவல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் …
-
- 0 replies
- 232 views
-
-
கட்சியிலிருந்து வெளியேறியமை : தமிழ் மக்கள் இணையம் உருவாக்கம் : எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து சண்.குகவரதன் வழங்கிய நேர்காணல் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் மீண்டும் இணையப்போவதில்லை. பதினொரு வருடங்கள் பொறுமைகாத்த பின்னரே இளைஞர்களுக்கான அரசியல்களத்தினை முன்னிலைப்படுத்தி தமிழ் மக்கள் இணையத்தினை உருவாக்கியுள்ளோம் என அதன் தலைவரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான சண்.குகவரதன் வீரகேசரிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். சுமூகங்களின் மீது அக்கறை கொண்டவர்களாக காட்டிக்கொள்ளும் தலைவர்கள் தீர்வை வழங்குவதில்லை என்றும் அவர் கூறினார். அப்பேட்டியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தமிழ் மக்கள் இணையம் என்ற பெயரில் புதிதாக உருவாகியுள்ள கட்சியின் நிருவாக கட்டமைப்பு பற…
-
- 0 replies
- 232 views
-
-
மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்தது போலத் தான் இன்றைய தமிழர்களின் நிலைமை ஊசலாடுகிறது. ஆண்ட தமிழினம் என்ற வீர வலாற்றை கொண்ட எம்மினம், இன்று அடிமைகளாகவும் உடமைகளை இழந்தவர்களாகவும் அடிப்படை உரிமைகளுக்கே மற்றவர்களிடம் கையேந்துபவர்களாகவும் மாறியிருப்பது காலத்தின் கொடுமையாகும். நேற்று முன்தினம் இரவு கேகாலை எட்டியாந்தோட்டை கனேபொல தோட்டத்தில் பதிவான சம்பவமே, இன்று தமிழ் மக்களிடத்தில் இவ்வாறான எண்ணங்களையும் ஆதங்கத்தையும் மனக்கவலையையும் ஏற்படுத்தியிருக்கின்றது. வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் ஆணிவேர். வாக்குரிமை என்பது ஜனநாயக உரிமை. வாக்குரிமை என்பது முறைகேடானவர்களை தண்டிக்கும…
-
- 0 replies
- 232 views
-
-
நன்றி - யூரூப் காலைப் பாம்பு சுற்றிய பின்னர் விழிப்பதுதான் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் நகர்வா? சில தகவற் தவறுகள் இருந்தாலும் மேஜர். மதன்குமார் சில உண்மைகளையும் சுட்டியுள்ளார். புலவரவர்களின் செய்தியின் தாக்கமாக இருக்குமா? அல்லது சற்றுச்சிந்திக்கத் தொடங்குகின்றார்களா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
- 1 reply
- 231 views
-
-
யாழ் தொடக்கம் வாகரை வரையான போராட்டம் – மட்டு நகரான் May 3, 2024 தமிழர்களின் இருப்பினை பாதுகாப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கிழக்கில் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கவேண்டுமானால் போராட்டமே அதற்கான வழி என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுவரும் நிலையில் அங்கு தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. தமிழ் தேசிய அரசியலில் தமிழர்கள் கொண்டுள்ள பற்று அவர்களை போராட்ட நிலைக்கு கொண்டுசென்று தமது இருப்பினை பாதுகாப்பதற்கு உந்துத…
-
- 0 replies
- 231 views
-
-
'சமஷ்டித் தீர்வுக்காகவே ஆட்சியாளர்களுடன் பேசுவோம்': த.சித்தார்த்தன் செவ்வி சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காகவே தமிழ் மக்கள் ஆணை வழங்குகின்றார்கள். அத்தகைய தீர்வினைப் பெறுவதற்காக நாம் தொடர்ந்தும் ஆட்சியில் உள்ளவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என்று புளொட் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான த.சித்தார்த்தன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது கடுமையான முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு உங்களுடைய பதில் என்ன? பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் தமிழ் மக்களின் ஏறக்குறைய ஏகோபித்த ஆணையை பெற்ற தரப்பாக இருக்கின்றது. …
-
- 0 replies
- 231 views
-
-
உரிமைக்கும் அபிவிருத்திக்கும் சம அந்தஸ்து கொடுத்து தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்துள்ள வடக்கு,கிழக்கு மக்கள் August 9, 2020 தாயகன் இலங்கை பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள்,விருப்பு வாக்குகள் வெளியிடப்பட்டு வெற்றி பெற்றவர்கள் கொண்டாட்டங்களிலும் தோல்வி கண்டவர்கள் திண்டாட்டங்களிலும் உள்ளனர். இப் பாராளுமன்றத்துக்கான தேர்தல் இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத பல சாதனைகள், சோதனைகள், வேதனைகளுடனேயே நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதன் தாக்கங்களிலிருந்து அரசியல் கட்சிகளும் அரசியல் வாதிகளும் வாக்காளர்களான மக்களும் விடுபடுவதற்கு முன்பாகவே புதிய பாராளுமன்றத்தில் ஆட்சியமைக்கப்போகும் அரசின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச இன்று ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளார்.…
-
- 0 replies
- 231 views
-
-
பொதுத் தேர்தலுக்கு முன்னர் தொடரப்போகும் அதிரடிகள் – அகிலன் September 30, 2024 ஜனாதிபதித் தோ்தல் நடைபெற்று முடி வடைந்த நிலையில், அதிரடியான அரசி யல் நகா்வுகளை கடந்த சில தினங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. ஜனாதிபதி பதவியேற்பு, புதிய பிரதமா், மூன்று உறுப்பினா் அமைச்சரவை நியமனம் என்பவற்றைத் தொடா்ந்து நாடாளு மன்றமும் கலைக்கப்பட்டுவிட்டது. குறுகிய காலத்துக்குள் அடுத்த பொதுத் தோ்தலை நாடு சந்திக்கப்போகின்றது. அரசியல் கட்சிகள் அனைத் துமே பொதுத் தோ்தலை எவ்வாறு சந்திப்பது என்பதில் தமது கவனத்தைக் குவித்துள்ளன. ஜனாதிபதித் தோ்தலைப் பொறுத்தவரை யில் அதன் முடிவு ஓரளவுக்கு ஊகிக்கப்பட்டதுதான். அதேவேளையில், பல்வேறு கருத்துக் கணிப்புக் களும் தேசிய மக்கள் சக்தி அதி…
-
- 0 replies
- 230 views
-
-
விவசாயிகளை நிலைகுலையச் செய்துள்ள உரத்தடைப் பிரச்சினை October 27, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — பயிர்ச்செய்கைக்கு உரம் வேண்டும். உடனடியாக உரத்தடையை நீக்க வேண்டும் என்று கேட்டு விவசாயிகள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கியிருக்கிறார்கள். கொரோனா தொற்றுக் காலத்தில் பொதுமக்கள் கூட முடியாது என்ற அரசு விதித்திருக்கும் அறிவிப்பையும் மீறி, பொலிசாரின் தடைகளையும் கடந்து, விவசாயிகளின் போராட்டம் நடக்கிறது. இந்தப் போராட்டத்துக்குப் பின்னணியில் ஜே.வி.பியினரே உள்ளனர் என்று அமைச்சர் மகிந்தானந்த அளுத்கம தெரிவித்திருக்கிறார். ஜே.வி.பி பின்னணியில் இருந்து தூண்டுகிறதோ இல்லையோ விவசாயிகளின் உரப் பிரச்சினை நியாயமானது என்று அரசாங்கத் தரப்பினரே கூறுகின்றனர். விவசாயிகளின் ப…
-
- 0 replies
- 230 views
-
-
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய நிலைப்பாடு தோல்வியடைந்ததா?- சர்வேந்திரா November 18, 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் 2024 – சில அவதானங்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. 159 ஆசனங்களைப் பெற்று, 2/3 பெரும்பான்மைக்குத் தேவையான 150 ஆசனங்களுக்கும் அதிகமான ஆசனங்களை NPP பெற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் முன்னர் எனது நண்பர் ஒருவரைச் சந்தித்த NPP முக்கியஸ்தர் ஒருவர் ‘ நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவோம். அதன் பின் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 160 ஆசனங்கள் கைப்பற்றுவோம்’ என உறுதியாகக் கூறியுள்ளார். இத் தகவலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே நண்பர் என்னிடம் சொன்னார். இப்போது 159 ஆசனங்கள் கிடைத்திருக் கின்றன. 16…
-
- 0 replies
- 230 views
-
-
சாலாவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பும் சில கேள்விகளும் கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம், தென்னிலங்கையை சற்றுப் பதற்றமடைய வைத்திருக்கின்றது. ஆயுதக் களஞ்சியம் முற்றாக வெடித்துச் சிதறி ஓய்வதற்கு 7 மணித்தியாலங்கள் வரை ஆனது. அது, ஏற்படுத்திய தீச் சுவாலையும் புகை மூட்டமும் பிரதேசத்தினை முற்றாக மூடியிருந்தன. அத்தோடு, ஆயுதக் களஞ்சிய வெடிப்பினால் அயல் பிரதேசத்திலுள்ள வீடுகளும் பொதுக் கட்டடங்களும் முழுமையாகவோ, பகுதியளவிலோ சேதமடைந்துள்ளன. ஆயுதங்களின் வெடிப்புச் சார்ந்து நிகழ்த்திருக்கின்ற இந்த அனர்த்தத்தை எதிர்கொள்வது தொடர்பிலான நடவடிக்கைக…
-
- 0 replies
- 230 views
-
-
மு.க.ஸ்டாலின் தமிழ் இனத் தலைவரா?! மின்னம்பலம்2022-05-26 மே மூன்றாவது வாரத்தில் நடந்த நான்கு முக்கியமான நிகழ்வுகள் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் பற்றி சர்வதேச அளவில் பேச வைத்திருக்கின்றன. பேரறிவாளனை கட்டியணைத்த ஸ்டாலின் முதல் நிகழ்வு மே 18 ஆம் தேதி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தின் பேரில் விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையை திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கடுமையாக எதிர்த்த நிலையில்... தன்னை சந்திக்க வந்த பேரறிவாளனை கட்டியணைத்து தனது உடல் மொழி மூலம் தன் உணர்வை வெளிப்படுத்தினார் ஸ்டாலின். இந்த காட்சி உலக…
-
- 0 replies
- 230 views
-