Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ரணிலின் இலங்கை அரசியலில் மிகவும் துரதிஷ்ட்டம் மிக்க நபர். ஒவொரு முறையும் பிரதமராகி, பதவியில் இருக்கும் ஜனாதிபதியுடன் முரண்பட்டு பதவி இழக்கும் ஒரு மனிதர். கடந்த தேர்தலில், மக்களால் முழுவதுமாக நிராகரிக்கப்பட்ட நிலையில், விகிதாசார முறைமையில், நாடு முழுவதும் விழுந்த கொஞ்ச வாக்குகளினால் கிடைத்த ஒரேயொரு நியமன சீட் மூலம் எம்பியாகி இன்று கட்சி பலமே இல்லாமல், பலவீனமான நிலையில், அதே போல் மிகவும் பலவீனமான நிலையில் உள்ள ஜனாதிபதியுடன் ஒரு இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு பிரதமர் ஆகிறார். இது, குருடன் சுமக்கும் நொண்டி வழிகாட்டி ஊர் போற கதை. எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில், சக்கடதார் ஏறுறார். கவுண்டு விழத்தான் போறார். அவருக்கு, இழக்க எதுவும் இல்லாதால் முயல்…

    • 4 replies
    • 623 views
  2. தமிழ் மக்களை... மூளையே, இல்லாதவர்கள் என்று... நினைத்து விட வேண்டாம். “புலிகள் தமிழ் மக்களை சித்திரவதை செய்தனர்” என்றீர்கள் “புலிகள் தமிழ் மக்களை சுட்டுக் கொன்றனர்” என்றீர்கள் “சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களைவிட புலிகளால் கொல்லப்பட்ட தமிழர் அதிகம்” என்றுகூட கூறினீர்கள். அதனால் “புலிகளிடமிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்காகவே யுத்தம் செய்தோம்” என்று கூறினீர்கள். சரி. அப்படியென்றால் “புலிகள் இப்போது இருந்தால் நல்லாய் இருக்குமே” என்று தமிழ் மக்கள் நினைப்பதற்கு என்ன காரணம்? அல்லது யார் காரணம்? ஒருபுறம் புலிகள் அனைவரும் அழிக்கப்பட்டுவிட்டதாக போர் வெற்றி விழா கொண்டாடுகிறீர்கள். மற…

  3. இலங்கை நெருக்கடி: ரணில் நாடாளுமன்றத்தில் தனித்து விடப்படுவாரா? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை அரசியலில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் வேளையில், மிகப்பெரிய திருப்பமாக நாடாளுமன்றத்தில் தனி ஒரு உறுப்பினராக இருந்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பிரதமர் ஆகியிருக்கிறார். 69 லட்சம் வாக்குகளை பெற்றவர்களுக்கு இன்று நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத நிலையை எதிர்நோக்கிய நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 9ஆம் தேதி பதவி விலகினார். இந்த நிலையில், …

  4. இலங்கை நெருக்கடியும் புதிய தலைமையும்: இந்தியாவுக்கு இது ஏன் முக்கியம்? சரோஜ் சிங் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் வேளையில் அங்கு புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறது இந்தியா. அவரது தலைமையிலான அரசுடன் தொடர்ந்து இந்தியா பணியாற்றும் என்று அறிவித்திருக்கிறார் கொழும்பில் உள்ள இந்திய தூதர். அடிப்படையில் இந்தியாவையும்,இலங்கையையும் நாம் ஒப்பிடமுடியாது. காரணம், பொருளாதாரத்தைப் பொருத்தவரையில் இலங்கை மிகவும் சிறிய நாடு. மக்கள்தொகையும்…

  5. மஹிந்த மூட்டிய தீ..! ராஜபக்சாக்கள் ஆடுவது சதுரங்கம்..! எதிரணி ஆடுவது உதைபந்து…!! May 10, 2022 — அழகு குணசீலன் — பொருளாதாரமே அனைத்தையும் நிர்ணயிக்கின்றது. இதற்கு அரசியலும் விலக்கல்ல. அரசியல் வியாபாரமாகிப் போனதினாலோ என்னவோ மரபு ரீதியான அரசியல் கோட்பாடுகளை விடவும் பொருளாதாரக் கோட்பாடுகள் இன்றைய அரசியலுக்கு அதிகம் பொருந்திப்போகின்றன. பொருளாதாரக் கோட்பாடுகளில் தனியார் நிறுவனங்களில் இலாப -நட்டக்கணக்கை மதிப்பிட பயன்படுத்தப்படும் கோட்பாடுகளில் ஒன்று விளையாட்டுத்தத்துவம். போட்டி நிறுவனங்கள் ஆகக்கூடிய இலாபத்தை எதிர்பார்ப்பது வழக்கம். அது போன்று கட்சிகளின் அரசியல் இலாப எதிர்பார்ப்பும் அமைந்துவிடுகிறது. அந்த ஆகக்கூடிய இலாபத்தில் குறைந்…

  6. இலங்கை வன்முறை- “ஜனநாயகத்திற்கு விழுந்த பலத்த அடி“-துரைசாமி நடராஜா May 9, 2022 அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கனுப்பும் போராட்டங்கள் இன்று (9) உக்கிரமடைந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது பதவியை இராஜினாமா செய்திருக்கின்றார். இதேவேளை காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை என்பவற்றுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் மீது பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடாத்தியதில் காயமடைந்த 154 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இத்தாக்குதலின் எதிரொலியாக நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மக்கள் ஊரடங்கினையும் பொருட்படுத்தாது வீதிகளில் …

  7. இலங்கை நெருக்கடி: "இரண்டு ஆண்டுகளுக்கு தொடரும்; மக்கள் தாங்கித்தான் ஆக வேண்டும்" - நிதியமைச்சர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALI SABRY FB (இன்றைய (மே 9) இந்திய மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) இலங்கை அதன் பொருளாதார நெருக்கடிகளை குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தாங்க வேண்டியிருக்கும் என்று அந்நாட்டின் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளதாக, 'தினகரன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பல மாதங்களாக நிலவும் மின்சாரத்தடை மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு ஆகியவை, நாடு முழ…

  8. அரசியல் மற்றும் சமூக இடைவெளிகள் தொடரும் வரை வெற்றிகள் கடினம் May 7, 2022 — கருணாகரன் — ராஜபக்ஸக்களின் அரசாங்கத்துக்கு எதிராக தெற்கிலும் மேற்கிலும் நடக்கும் “மக்கள் போராட்டங்கள்” பற்றிய தமிழ்த்தரப்பினரின் அபிப்பிராயம் என்ன? பங்கேற்பு என்ன? இந்தக் கேள்வியின் ஆழம் வரலாற்று ரீதியாகப் பெரியது. ஏனென்றால், என்னதான் வெவ்வேறு அபிப்பிராயங்கள், விமர்சனங்கள் இருந்தாலும் இன்றைய காலச் சூழலில் இந்தப் போராட்டங்கள் மிக முக்கியமானவை. அதுவும் பெருந்திரள் தமிழ்ச்சமூகத்தின் நோக்கு நிலையில். ஏனென்றால், பெருந்திரள் தமிழ்ச்சமூகம் ராஜபக்ஸக்களை அதிகாரத்திலிருந்து அகற்ற விரும்புகிறது. போர்க்குற்றம் உட்பட அவர்களுடைய ஆட்சித் தவறுகள் வரையானவற்றுக்க…

    • 1 reply
    • 248 views
  9. யேர்மனி யுத்தத்தில் தோல்வியடைந்து இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த நாள் 08.05.1945. கிட்லர் மணம் முடித்து மரணித்த கடைசி சங்கரின் கதை.

    • 0 replies
    • 453 views
  10. அன்னையர் தினம்: இலங்கை போரில் காணாமல் போன மகனை காணாமலேயே இறந்த தாய் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ''சாகுறதுக்கு இடையில என்ட பிள்ளைகள கண்ணால காணனும். கடைசி வரைக்கும் நான் சாகும் மட்டும் மரண சான்றிதழை நான் வாங்க மாட்டேன்"" என உறுதியாக இருந்த தங்கராசா செல்வராணி, அதே நிலைப்பாட்டில் இன்று இந்த உலகை விட்டு விடைப் பெற்றுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும், அதன் பாதிப்புகள் இன்று வரை அவ்வாறே காணப்படுகின்றன. யுத்த காலப் பகுதியில் காணாமல் போன உறவுகளை தேடி, இன்றும் இலங்கையில் …

  11. இலங்கை எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி இன, மத பேதமின்றி அனைவரையும் தாக்கியிருக்கிறது. சுனாமிக்குப் பின்னர் இன, மத பேதம் கடந்து இலங்கை வாழ் இனங்கள் எதிர்கொள்ளும் பேரிடர் இது. போர், கலவரங்கள், போன்றவற்றை இத்தீவு இடர்களாக எதிர்கொண்ட போதிலும் அவை தமிழர்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தின. இம்முறை ஏற்பட்டிருக்குப் இப்பொருளாதாரப் பேரிடரானது அனைத்துத் தரப்பினரையும் மிக மோசமாகத் தாக்கியிருக்கின்றது. இதிலிருந்து மீ்ள்வதற்கே பல ஆண்டுகள் எடுக்கலாம் என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள். இந்தப் பொருளாதாரப் பேரிடரை, சிங்களவர்கள் தாமாகவே தேடிக்கொண்டனர். அதவாது ராஜபக்சவினர் குறித்து 2009ஆம் ஆண்டிலிருந்தே தமிழர்கள் எச்சரித்து வந்திருக்கின்றனர். தமிழர் – முஸ்லிம்கள்…

    • 4 replies
    • 520 views
  12. விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மார்சல் பற்றி உலகம் அறியாத முகம் ?

    • 0 replies
    • 453 views
  13. ‘ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து’ ‘கோட்டாகோகம’ வரைக்கும்! சிங்கம் – ஹஸனாஹ் சேகு இஸ்ஸடீன்! அண்மைக் காலமாக இலங்கையின் தென்பகுதியில் இளைஞர்கள் மத்தியில் உருவாகிய ஒரு தன்னெழுச்சிப் போராட்டம் நாடெங்கிலும் பேசு பொருளாகியுள்ளது. இந்த அடிப்படையில் ஏப்ரல் மாத ஆரம்ப காலத்திலிருந்து இளைஞர் குழுமங்கள் முகாமிட்டு போராடத் தொடங்கியுள்ளன. அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக, அரசில் இருப்பவர்கள் சிலரும், அரசுக்கு எதிரானவர்களும் தங்களது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். இப்போராட்டம் தொடங்கியதிலிருந்து பல மாற்றங்களையும், உருமாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இப்போராட்டம் தெற்கில் நடைபெறுகின்ற அதேவேளை, எத்தனையோ போராட்டங்களை வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் மற்றும் மலையக…

  14. இலங்கை பொருளாதார நெருக்கடி: நாட்டில் பழைய கார்கள் மட்டுமே ஓடுவது ஏன்? எம் மணிகண்டன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கைச் சாலைகளில் புதிய கார்களைக் காண்பது அரிது. பளபளப்பாகத் தெரியும் சில கார்களும் சில ஆண்டுகளுக்கு முன்பே வாங்கப்பட்டவையாகவே இருக்கும். காரணம் இலங்கையில் புதிய மோட்டார் வாகனங்கள் எதுவும் கிடையாது. இலங்கையில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் உற்பத்தி செய்யப்படுவதில்லை. அசெம்ப்ளிங் எனப்படும் உதிரிபாகங்களை இறக்குமதி செய்து வாகனங்களைத் தயாரிக்கும் பணிகளும் பெரிய அளவில் கிடையாது. ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், ஜப்பானில் இருந்தும்தான் பெரு…

  15. மகா நாயக்கர்களின் தலையீடு: தீர்வைத் தருமா? நிலாந்தன். இம்மாதம் நான்காம் திகதி நான்கு மகா நாயக்கர்களும் அரசுத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்.ஆனால் கோட்டாபய அதற்கு பதில் கூறவில்லை. அதன்பின் 20ஆம் திகதி மற்றொரு கடிதத்தை எழுதினார்கள். அதன்பின் கடந்த வாரம் அரசுத்தலைவர் மகா நாயக்கர்களுக்கு ஒரு பதில் அனுப்பியிருந்தார். மகா நாயக்கர்கள் அனுப்பிய கடிதத்தில் ஒரு முக்கிய விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார்கள்.நாட்டில் இப்போது நிலவும் அரசியல் ஸ்திரமின்மையை அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் தீர்க்க தவறினால் மகாசங்கம் சங்கப் பிரகடனத்தைச் செய்யும் என்பதே அதுவாகும். சங்கப் பிரகடனம் எனப்படுவது சிங்களத்தில் “சங்க ஆக்ஞாபய” என்று அழைக்கப்படுகிறது.மன்னர்களின் காலத்தில் அது பிரயோகத்தில்…

  16. மதிப்புக்குரிய அய்யாவிற்கு, தாங்கள், அண்மையில் தமிழக சட்டமன்றத்தில், தமிழகம் உணவுப்பொருட்களை இலங்கை மக்களுக்காக அனுப்ப தயாராக உள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் இது ஆரம்பமாகும் என்று குறிப்பிட்டு, உதவி ஈழத்தமிழர் மட்டுமல்லாது தவிக்கும் அணைத்து இலங்கை மக்களுக்குமானதாக இருக்கும், அதுவே தமிழர் மாண்பு என்றும் குறிப்பிட்டு, குறள் ஒன்றையும் மேற்கோள் காட்டினீர்கள். நல்லது அய்யா, இதனை முழுமனதோடு வரவேற்க்கும் அதேவேளை ஒரு பணிவான வேண்டுதல் அய்யாவிற்கு. அந்த பொருட்கள் அணைத்திலும் பின்வரும் வாசகத்தை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பொறித்து விட ஆவன செய்யுங்கள். தமிழக மக்களின், இந்த அன்பளிப்பானது, 2009ம் ஆண்டு, முள்ளிவாய்காலில், பசியாலும், மருத்துவ வசத…

  17. இலங்கையை... நெருக்கடிகளிலிருந்து மீட்கும், இந்தியா! -யே.பெனிற்லஸ்- இலங்கை அரசாங்கம், பொருளாதார நெருக்கடி அதனால் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையால் மிகமோசமான நிலைமைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. காலிமுகத்திடலில் சுயாதீனமாக ஒன்றிணைந்த குழுவினர் ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டு மூன்றாவது வாரத்தினை கடந்து தொடர்ச்சியான போராட்டத்தினை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்தத் தொடர்போராட்டத்திற்கு ஆதரவாக நாடாளவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்விதமான போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறையில் பொதுமகன் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அதேநேரம், அனைத்து தொழிற்சங்கங்களும் வீதிக்கு இறங்கி பாரிய போராட்டங்களையும்…

  18. இலங்கை நெருக்கடி: சுற்றுலாத் துறையின் நிலை என்ன? போராட்டங்களால் பலவீனமாகிறதா? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் டாலர் கையிருப்பு குறைந்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, விலைவாசி உயர்ந்துவிட்டதால், இலங்கையில் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் போராட்டங்கள் காரணமாகவே டாலர் வரத்து மேலும் குறையக்கூடும் என்ற அச்சமும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிவடைந்திருப்பதே இதற்குக் காரணம். இலங்கையில் அழகான கடற்கரைகளைப் பார்க்கலாம், வியக்க வைக்கும் சரணலாயங்களில் இயற்கையோடு இயற்கையாக விலங்குகளைக் காணலாம். இங்கு பௌத்த, இந…

  19. கழுத்தை நெரிக்கும் சீனா கம்ப இராமாயணத்தில், இறுதிப் போரின் போது நிராயுதபாணியாக நின்ற இராவணனை “இன்றுபோய் நாளை வா“ என்று இராமன் கூறியபோது, இராவணன் கலங்கியதை“கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்“ என்று கம்பரால் உவமிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் அருணாச்சலக் கவிராயருக்கு சொந்தமானது என்றும் கூறப்படுகிறது. முதலில் இவ்வரியை யார் எழுதியது என்ற ஆராய்வை விட இந்த கடன் பட்ட நிலைமையே இலங்கைக்கும் இன்று ஏற்பட்டுள்ளது. அதிக கடன்களால் கலங்கி நிற்கிறது இலங்கை என்பதே நிதர்சனமாகும். கடன் என்பது வாங்குவதற்கு இலகுவானதாக இருக்கின்ற போதிலும் வருமானம் குறைந்தோருக்கு அதை திருப்பிச் செலுத்தும் விதமே மிகவும் கடினமாக உள்ளது. வட்டி, அசல் என்பவற்றை திருப்பிக் கொடுக்கையில் மீண்டும…

  20. குழுவொன்றின் புரட்சியும் போராட்டங்களை செயலிழக்கச் செய்வதற்கான ஏனைய வழிகளும் -அம்பிகா சற்குணநாதன் Photo, Selvaraja Rajasegar “சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்துசேராது”: வழக்கமான சொல்லாடல் தற்போது இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் இளைஞர்ளது ஆர்ப்பாட்டங்களாக அடையாளம் காண்பிக்கப்படுகின்றன. ஆம், காலிமுகத்திடலை ஆக்கிரமிப்போம் என்ற இந்த ஆர்ப்பாட்டத்தினை இளைஞர்களே தலைமை தாங்கி நடத்துகின்றனர். ஆட்சிக் கவிழ்ப்பை நோக்கிய இந்த ஆர்ப்பாட்டம் இளைஞர்களின் ஆக்கபூர்வமான மூலோபாயங்களால் தொடர்ச்சியாக பேணப்பட்டு வருகின்றது. இருந்தபோதும் காலி முகத்திடல் மீதே முழுக்கவனத்தை செலுத்தி இந்த ஆர்ப்பாட்டங்களை இளைஞர் ஆர்ப்பாட்டம் என முத்திரை குத்துவது பிழையானதும் அபாயகரமானதுமாகும். ஏப்…

  21. #GoHomeGota போராட்டம்: தமிழர்கள் தூரவிலகி நிற்பதால் சாதிக்கப்போவது எதுவுமில்லை! Veeragathy Thanabalasingham on April 26, 2022 Photo, Selvaraja Rajasegar தென்னிலங்கையில் இன்று நடைபெறுகின்ற போராட்டங்கள் பொருளாதார இடர்பாடுகளின் விளைவாக மூண்டவை. முன்னரைப் போலன்றி மிகவும் இளையவர்களும் படித்தவர்களும் பெருமளவில் பங்கேற்கிறார்கள். ஆனால், பொருளாதார நிவாரணம் கேட்டு சாதாரண மக்கள் வீதிகளில் இறங்கியிருப்பதை செவிசாய்க்காமல் ஜனாதிபதியும் அரசாங்கமும் அலட்சியம் செய்வதால் நாளடைவில் அவை அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கும் போராட்டங்களாக முனைப்படைந்து இன்று உலகின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. பௌத்த சிங்கள பேரினவாத போதையை ஊட்டி தங்களை பிழைய…

  22. மாஸ்க்வா – மிரியா: பெருமிதங்களின் அழிவு எஸ்.அப்துல் மஜீத் கருங்கடல் மோஸ்க்வா ரஷ்யாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று ‘மாஸ்க்வா’ (Moskva). மிகப் பிரம்மாண்டமான போர்க் கப்பல் இது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கியது. அப்போது உக்ரைன் மீதான கடல் வழித் தாக்குதலை மாஸ்க்வாதான் முன்னின்று நடத்தியது. இந்நிலையில் மாஸ்க்வா கப்பல் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அன்று கருங்கடலில் மூழ்கியது. ‘தீ விபத்து ஏற்பட்டதால், கப்பல் மூழ்கியது’ என ரஷ்யா தெரிவித்தது. ‘நாங்கள்தான் ரஷ்யாவின் போர்க் கப்பலை அழித்தோம்’ என அறிவித்தது உக்ரைன். பெரும் படை பலம் கொண்ட ரஷ்யாவின் பெருமைக்குரிய ஒரு போர்க் கப்பல், படை பலம் அற்ற, பெரும் அழிவுக்குள்ளான உக்ரைனால் த…

  23. விரைவு படுத்தப்படும், சீன – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்? இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான அமைச்சரவை உபகுழுவானது கடந்த 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் முதன்முறையாக கூடியது. இந்த உபகுழுவானது சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாகக் முன்னெடுப்பதற்கான ஆலோசனையை முன்வைத்திருந்தது. அத்துடன், இலங்கை மற்றும் ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான பொருளாதார விடயங்கள் மற்றும் வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஏனைய இரண்டு உப குழுக்களும் இந்த உபகுழுவின் கூட்டத்தின் போது பங்கேற்றிருந்தன. இந்த உபகுழுக்கள் இலங்கையின் ஏற்றுமதி கைத்தொழில்களுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செ…

  24. இலங்கை விவகாரத்தினை வைத்து... காய்களை நகர்த்தும், இந்தியா மற்றும் சீனா? இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் டொலர்கள் நிதி உதவியை வழங்க இந்தியா தயாராக உள்ளது. அத்துடன் இலங்கை விடயத்தில் இந்தியா அண்மைய ஆண்டுகளில் சீனாவிடம் இழந்த இடத்தை புதுடில்லி மீண்டும் பெற முயற்சிக்கிறது என ரொய்ட்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. 1948 சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு, அதன் முதல் கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலையில் இருக்கும் இலங்கை, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளிடம் உணவு, எரிசக்தி உட்பட நிதிக்கடனையும் கோரி வருகிறது. ஆசிய ஜாம்பவான்களாக இருக்கும் சீனாவும், இந்தியாவும் ஏற்கனவே பில்லியன் கணக்கான டொலர்களை நிதி உதவியாக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.