Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இலங்கை என்றென்றும் மீள முடியாத கடன் சுமைக்குள், அரசு மக்கள் சொத்துக்களை ஏலம் போடுகின்றது! இலங்கை அரசாங்கம் வரலாற்றில் முதல் தடவையாக மீள முடியாத வெளிநாட்டு கடன் சுமையில் சிக்கி கொண்டு இருக்கின்றது . குறிப்பாக இலங்கையின் வெளிநாட்டு கடன் மட்டும் $70 billion என்கிற நிலையை எட்டி விட்டது. அதே போல சர்வதேச கடன் மதிப்பிட்டு நிறுவனங்கள் கடன்களை மீள செலுத்தும் ஆற்றலை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக இலங்கையை மதிப்பீடு செய்து இருப்பதால் மேலதிக கடன்களை பெற்றுக்கொள்ளுவதிலும் நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. இது தவிர, மத்திய வங்கி மோசடியில் இழக்கப்பட்ட $ 268 million , Greek junk bonds முதலீடுகளில் ஏற்பட்ட $6.6 milli…

  2. தேசியவாதத்தின் பிரச்சினைகள் என்ன? மின்னம்பலம்2021-09-20 ராஜன் குறை திராவிட இயக்கம் (திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம்), அதிலும் குறிப்பாக பெரியாரும் அண்ணாவும் தமிழ் தேசியத்தை வளர விடாமல் செய்து விட்டார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு மீண்டும், மீண்டும் எழுகிறது. திராவிட இயக்கம் ஜாதீய பண்பாட்டை ஆரிய பார்ப்பனீய பண்பாடாக வரையறுத்து, அதற்கு மாற்றாக திராவிட பண்பாட்டு அடையாளத்தை வலியுறுத்தியது. அது தமிழ்மொழி அடையாளத்தை மறுக்கவில்லை. திராவிட பண்பாட்டு அடையாளம், தமிழ் அடையாளம் இரண்டையும் இணைத்தது. வெறும் மொழி அடையாளம், அதன் அடிப்படையிலான தேசியத்தை அது கட்டமைக்க நினைக்கவில்லை. அது இந்திய தேசியத்தின் ஆரிய பண்பாட்டு, ஜாதீய அடிப்படையை எதிர்த்தது; ஆனால், ஒரு…

  3. கனேடிய பாராளுமன்றத் தேர்தல் திங்கட்கிழமை( நாளை ) நடைபெற இருக்கின்றது. தாராளவாத கட்சிக்கும் , பழமைவாத கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகின்றது. ஆனாலும், ஜஸ்டின் ட்ரூடோவின் தாராளவாத கட்சி அதிக ஆசனங்களை வெல்லும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது, சனநாயக(NDP) கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க கூடிய சாத்திய கூறுகள் அதிகம் உள்ளது. இம்முறை பெரும் தொற்றுக்கு பின்னர் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், சுற்றுச்சூழல், வீட்டு வசதி என்பன முக்கிய தொனிப்பொருட்களாக இருக்கின்றது. கனேடிய மாகாணங்களும், அவற்றின் ஆசன எண்ணிக்கையும். மொத்த ஆசன எண்ணிக்கை 338 ஆகும், பெரும்பான்மைக்கு 170 இடங்களின் வெல்லப்பட வேண்டும். மேற்கு பகுதி Alberta – 34 seats British Columbia – 42 seats …

    • 5 replies
    • 663 views
  4. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே ,அநுராதபுர சிறைச்சாலைக்குள் கடந்த 12ஆம் திகதி கைத்துப்பாக்கியுடன் சென்று இரண்டு தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் முழங்காலிட வைத்தார் எனவும் , அன்றைய தினம் இரவு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மதுபோதையில் நண்பர்களுடன் சென்று அட்டகாசம் புரிந்ததாகவும் , அவரின் நண்பர்களுக்கு தூக்கு மேடையை சுற்றிக்காட்டியதாகவும் , அப்போது அவர் கையில் கைத்துப்பாக்கி இருந்ததாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. கூட சென்ற அழகு ராணி. www.tamilnews1.com அன்றைய தினம் அவரது நண்பர்கள் கூட்டத்தில் திருமதி இலங்கை அழகுராணி போட்டியில் கலந்து கொண்ட புஷ்பிகா டி.சில்வாவும் இருந்ததாகவும் செய்திகள் வெள…

  5. சொந்த நாட்டின் ஏதிலிகள் க. அகரன் தமிழர் வாழ்வில் புலம்பெயர்தல் என்பது தவிர்க்கமுடியாத வரலாறாகிப்போயுள்ள நிலையில் இந்தியாவுக்கும் பலரும் இடம்பெயர்ந்திருந்தனர். சுமார் 30 வருடங்களாக இந்தியாவில் மூன்றாவது சந்ததியுடன் வாழும் இலங்கைத் தமிழர் தொடர்பில் தற்போது பேசுபொருள் உருவாகியுள்ளது. பல தசாப்தங்களாக அகதி என்ற நாமத்துடன் வாழ்ந்த இலங்கைத்தமிழர்கள் தற்போது இந்திய பிரஜாவுரிமை பெறும் நிலை உருவாகியுள்ளமையும் அவர்களது அகதிகள் என்ற பதம் மாற்றப்பட்டமையும் அவர்களுக்கான வசதிகளுமே இந்தப் பேசு பொருளுக்கு காரணமாகியுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் வாழ்ந்த பலரும் யுத்த நிறைவுக்கு பின்னர் தமது தாயகத்தில் வாழும் அபிலாசைகளுடன் அரசின் வாக்குறுதிகளை நம்பி இலங்கைக்கு …

  6. பெரியார், அண்ணா உருவாக்கிய அரசியல் தத்துவ இரட்டைக் குழல் துப்பாக்கி! மின்னம்பலம்2021-09-15 ராஜன் குறை ஆண்டுதோறும் தி.மு.க செப்டம்பர் 15, 17 ஆகிய இரு தினங்களை ஒட்டி முப்பெரும் விழா என விழா கொண்டாடுவது வழக்கம். அண்ணா பிறந்த தினம், பெரியார் பிறந்த தினம், தி.மு.க உருவான தினம் ஆகியவை இந்த தேதிகளில் அடங்குகின்றன. அண்ணா ஒருமுறை தி.க-வும், தி.மு.க-வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று கூறியது அனைவரும் அறிந்ததே. அந்தக் கூற்றினை அரசியல் தத்துவ அடிப்படையில் எப்படிப் புரிந்துகொள்ளலாம் என்பதை பரிசீலிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். திராவிட இயக்கம் என்று பொதுவாக அறியப்படும் அரசியல் இயக்கங்களின் நோக்கம் திராவிட - தமிழ் அடையாளம் கொண்ட ஒரு மக்கள் தொகுதியினை கட்டமைப்பதே. அ…

  7. சரகர்ஹி யுத்தம்: சீக்கியர்களுக்கு பிரிட்டிஷார் தலை வணங்குவது ஏன்? ககன் சபர்வால் பிபிசி செய்தியாளர், பிரிட்டன் 14 செப்டெம்பர் 2021, 03:00 GMT 1897-ஆம் ஆண்டு சரகர்ஹி போரில் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் பழங்குடியினருக்கு எதிராகச் சண்டையிட்ட 20 சீக்கிய வீரர்களின் தலைவர் ஹவில்தார் இஷார் சிங்கின் சிலை பிரிட்டனில் திறக்கப்பட்டுள்ளது. இந்த 10 அடி உயர வெண்கல சிலை, சரகர்ஹி போரில் இறந்த வீரர்களின் நினைவாகக் கட்டப்பட்ட பிரிட்டனின் முதல் நினைவுச்சின்னமாகும். 6 அடி மேடையில் கட்டப்பட்ட இந்த சிலை, இங்கிலாந்தின் வால்வர்ஹாம்ப்டனில் உள்ள வாடன்ஸ்ஃபீல்டில் நிறுவப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்பாடு செய்யப்ப…

  8. கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் தேசிய உணர்வினை சிதைக்கும் சுமந்திரன் எம்.பி.யின் கருத்துகள்! – மட்டு.நகரான் அண்மைக்காலக, தமிழ்த் தேசிய உணர்வினை சிதைக்கும் சுமந்திரன் வெளியிடும் கருத்துக்கள் தமிழ் தேசியத்தின் மீது பற்றுக் கொண்டவர்களை ஆத்திரமூட்டும் வகையில் அமைந்து வருவதை அவதானிக்க முடிக்கின்றது. வடகிழக்கு தமிழர்களின் தாயகம். தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட போது, அந்த தாயகத்தில் வாழ்ந்த மக்கள் தமது சுயகௌரவத்தினைப் பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக அரசியல் ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் போராட்டங்களை நடாத்தினார்கள். இந்தப் போராட்டங்கள் என்பது வெறுமனே வெறும் கோசங்களாக மட்டுமில்லாமல், உடல், பொருள், ஆவி அனைத்தையும் பயன்படுத்தி தமிழ் மக்கள் …

  9. நாய் வாலை நிமிர்த்த முடியாது!- அரசியல்க் கட்டுரை! ந.பரமேஸ்வரன் அம்பிகாபதி திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக்காட்சி . தமிழ் சினிமாவின் ஆரம்பகால நகைச்சுவை நடிகர்களான என்.எஸ்.கிருஷ்ணன் மதுரம் தம்பதிகள் நடித்த காட்சி அது. என்.எஸ்.கிருஷ்ணன் மதுரத்தை காதலிப்பார். என்.எஸ்.கிருஷ்ணன் தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறும் தனது காதலிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் எனவும் கூறுவார். அதற்கு மதுரம் ”நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்யவேண்டாம். எனது செல்ல நாயின் சுருண்டு போயுள்ள வாலை நிமிர்த்திவிட்டால் நான் உங்களை திருமணம் செய்கிறேன்” எனப் பதிலளிப்பார். உடனே ”இதுவா விடயம் .இது ஒன்றும் பிரமாதமான விடயமல்ல” என்று சொல்லிவிட்டு தனது நண்பருடன் சேர்ந்து நாயை பிடித்து அதன் வாலை நேராக்கிவிடுவார் …

  10. அந்த ஒரு கடிதத்துக்கு பின்னால்….!- அரசியல் கட்டுரை கதிர் அந்த ஒரு கடிதத்துக்கு பின்னால்….! 💥 கலையரசன் ஏன் பல்டியடித்தார்? 💥கையொப்பங்கள் போலியா? 💥வெட்ட வெளிச்சமாகும் திரைமறைவுத் தில்லாலங்கடிகள் ……… ஔண்யன் ……… தமிழ் அரசியல்பரப்பில் இப்போது தீப்பிடித்து எரியும் சர்ச்சை, தமிழரசுக் கட்சியின் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 9 பேரின் கையொப்பத்துடன் ஐ.நா. மனிதன் உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்று அனுப்ப எடுக்கப்பட்ட முயற்சிதான். ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தைக் கூட விஞ்சக்கூடியளவுக்கு சடுதியான திருப்பங்கள், திரைமறைவு நகர்வுகள், மிரட்டல்கள், பாய்ச்சல்கள், பதுங்கல்கள் என்று ஒரு கடிதத்தை வைத்து பெரும…

  11. கொரோனாவால் கடனில் மூழ்கும் நமது சமூகம் நடராஜன் ஹரன் கொரோனா மரணங்கள் நம்மை அழைக்க மறுபுறம் தற்கொலை உயிர் இழப்புகளும், வட புலத்தில் வாள்வெட்டு உயிரிழப்புகளும், திடீர் விபத்து உயிரிழப்புகளும் சமுகத்தின் அக்கறையீனத்தால் ஒவ்வொருவரது சுய கட்டுப்பாடு இன்மையாலும் நிகழ்கின்றது. உலகில் இன்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் இரண்டு வருட காலமாக நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும் இந்தக் காலகட்டத்தில் உலகெங்கிலும் பொருளாதாரங்கள் மிகப் பெரும் சரிவையும் சவாலையும் எதிர்நோக்கி வருகின்றன. இது இவ்வாறு இருக்க, நாட்டின் அனைத்து பகுதிகளும் தற்காலத்தில் தனிமைப்பட்டிருக்கின்றன. இந்த கொரோனாவின் தாக்கம் காரணமாக மூடப்பட்ட பகுதிகளில் வாழ…

  12. தொற்றுநோய்க்கால விலை உயர்வும் மக்கள் துயரும் September 11, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட்— கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தை ஒரு போர்க்கால நெருக்கடியாக மாற்றியுள்ளது வணிகச் சூழல். குறிப்பாக உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விற்கும் வர்த்தகச்சூழல். நெருக்கடி உணர்வைச் சமூக மட்டத்தில் உண்டாக்கினால் பொருட்தட்டுப்பாட்டுப் பதற்றம் மக்களிடத்திலே தானாகவே உருவாகும். அப்பொழுது பொருட்தட்டுப்பாட்டைப் பற்றியும் அவற்றின் விலையேற்றத்தைப் பற்றியும் கேள்விகளை எழுப்பவோ விசாரணையைச் செய்யவோ முடியாது. அதற்குரிய நிர்வாக நடவடிக்கைகள் இல்லாத நிலை இதற்கு வாய்ப்பளிக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பிழைத்துக் கொ…

  13. பெரியார் விவாதம்: சில குறிப்புகள் பெரியார் பிறந்த நாளை "சமூக நீதி நாள்" எனக் கொண்டாட தமிழக அரசு வெளியிட்டஅறிக்கையைத் தொடர்ந்து ஒரு விவாதத்தில் பி.ஏ.கே-வும் ஆழி செந்தில்நாதனும்மற்றவர்களும் பங்கேற்றனர். அவ்விவாதம் பற்றிய என்னுடைய சில எண்ணங்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பதை அண்ணாதுரை போகிற போக்கில் சொன்னது அதுதிமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடல்ல என்கிறார் செந்தில்நாதன். இது உண்மையல்ல. சமீபத்திய தேர்தலின் போது திமுக இந்து விரோத கட்சியென்ற பரப்புரைக்கெதிராக (அவதூறு என்றேசொல்லலாம் ஏனென்றால் தற்போதய திமுக முன்னெப்போதையும் விட மிக ஆன்மீகமான கட்சி என்பதுவெளிப்படை) திமுக அமைச்சர் கே.என்.நேரு …

  14. பயனற்றுப்போகும் பொது முடக்கம் September 10, 2021 — கருணாகரன் — கொரோனா மரணத்தைத் தடுப்பதற்கும் தொற்றைக் கட்டுப்படுத்துவற்கும் அரசாங்கம் அறிவித்திருக்கும் பொது முடக்கத்தை மக்கள் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு உள்ளிட்ட தமிழ்ப்பகுதிகளில். இங்குதான் மக்கள் அதிகமாக தெருவில் நிறைந்திருக்கிறார்கள். வழமையைப் போலச் செயற்படுகிறார்கள். இங்கே பொது முடக்கத்தைப் பலரும் பொருட்படுத்தவில்லை. இது மிகப் பெரிய தீங்கை விளைக்கக் கூடியது மட்டுமல்ல, பொறுப்பற்ற செயலுமாகும். தாமும் பாதிக்கப்பட்டு, மற்றவர்களையும் அபாயத்துக்குள் தள்ளி விடுவது. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை, மக்களின் இயல்பு வாழ்க்கை, எதிர்காலத் தலைம…

  15. நுவரெலியாயாவில் ஐந்து வருடங்களில் 52 ஆயிரம் குடும்பக் கட்டுப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன! September 10, 2021 இந்தியா வம்சாவளி தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களில் (2015 – 2019) சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் 52 ஆயிரத்து 183 குடும்பக்கட்டுப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் தகவல்கள் உறுதி செய்துள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் தொழிலாளர் குடும்பங்களை ஏமாற்றி குடும்பக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தொடர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற. குறிப்பாக இதுத் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் கடந்தக் காலங்களில் முறைப்பாடும் செய்யப்பட்டி…

  16. இலங்கையின் தேசிய ‘உணவு அவசரநிலை’க்கு வழிவகுத்த மோசமான பொருளாதாரம் tamil.indianexpress இலங்கை நாடாளுமன்றம் அந்நாட்டின் அதிபர் கோட்டாபய ராஜபக்சேவால் ஆகஸ்ட் 30ம் தேதி அறிவிக்கப்பட்ட தேசிய அவசரநிலைக்கு திங்கள்கிழமை (செப்டம்பர் 6) ஒப்புதல் அளித்தது. “உணவு மாஃபியாவால் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைப்பதை சோதனை செய்வதற்காக இந்த அவசரநிலை தேவைப்படுகிறது என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் இது தவறான நம்பிக்கையில், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மேலும் கட்டுப்படுத்துதல் மற்றும் சர்வாதிகாரத்தின் திசையில் நகர்த்தும் உள்நோக்கத்துடன் இந்த அவசரநிலை அறிவிக்கப்படுகிறது என்கிறார்கள். இந்த அவசரநிலை இலங்கையின் உணவு நெ…

  17. இனப்பிரச்சினையைவிடப் பெரிதான வேலையில்லாப் பிரச்சினை September 6, 2021 — கருணாகரன் — இலங்கையில் இனப்பிரச்சினையையும் விடப் பெரிய பிரச்சினையாக வேலையில்லாப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை போன்றவை இப்போது தலையெடுத்துள்ளன. தென்பகுதியில் இவ்வாறான ஒரு புரிதலே நீண்டகாலமாக உண்டு. ஜே.வி.பியின் எழுச்சியும் கிளர்ச்சிகளும் இந்த அடிப்படையிலானவையே. ஆட்சி மாற்றங்கள், ஜே.வி.பிக்கான அன்றைய ஆதரவு போன்றவையெல்லாவற்றுக்கும் இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகளே முதற் காரணங்கள். ஏன் இப்பொழுது நமது சூழலில் இளைய தலைமுறையினர் அதிகமாகச் சட்டவிரோத மது உற்பத்தி, பாவனை, போதைப்பொருள் பாவனை, வன்முறைகளில் ஈடுபடுவது, கள்ள மண் ஏற்றுவது, களவாக மரம் வெட்டுவது, கொள்ளை, கடத்தல், கொலை உ…

  18. 1999 ற்கும் – 2009ற்கும் இடைப்பட்ட காலத்தில் EPDP குறித்த விமர்சனங்களுக்கு நான் பொறுப்புக் கூற முடியாது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளருமான முருகேசு சந்திரகுமார் வழங்கிய நேர்காணல்.

  19. திராவிட அடையாளமே தமிழரின் பெருமை! மின்னம்பலம்2021-09-06 ராஜன் குறை சென்ற வாரம் தமிழ் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் சங்க இலக்கியம் குறித்த நூல்கள், திராவிட களஞ்சியம் என்ற நூல் வரிசை ஆகியவை வெளியிடப்படும் என்று கூறியிருந்ததை தவறாகப் புரிந்துகொண்டு சங்க இலக்கியத்தை தமிழ் களஞ்சியம் என்று சொல்லாமல் திராவிட களஞ்சியம் என்று சொல்லலாமா என்று ஒரு சர்ச்சை இணைய வெளியிலும், பொதுக்களத்திலும் உருவாக்கப்பட்டது. அமைச்சகம் தெளிவுபடுத்திய பிறகு இது ஓய்ந்தது. ஆயினும் இடையில் இந்த சர்ச்சையில் பங்கேற்ற பலர் கூற்றுக்கள் வழக்கம்போல “திராவிடம்” என்ற சொல்லின்மீதான ஒவ்வாமையை வெளிப்படுத்துவதாக இருந்தன. முரசொலி பத்திரிகையும் இந்த திராவிட ஒவ்வாமை குறித்…

  20. புலிகளின் போராட்டம் போர் குற்றம் என ஐநா ஆவணங்களில் கையெழுத்திடும் எம்பிக்களை தமிழர்கள் மன்னிப்பார்களா? நமது ஆயுதப் போராட்டம் உலகிற்கு எங்களின் சிறந்த வெளிப்பாடு. சிங்கள இன ஒடுக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்புக்கு தமிழர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை அது காட்டியது. விடுதலைப் புலிகளின் போராட்டம் தமிழர்களுக்கு ஒரு துரும்பு. தமிழர்களுக்கு ஒரு சுதந்திர நாடு வேண்டும் என்பதை அது உலகிற்கு நினைவூட்டுகிறது. மேலும் எதிர்காலத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவால் நீதி கிடைக்காமல் போனால், விடுதலைப் புலிகள் எப்படி சிங்கள இனப்படுகொலையை கட்டுப்படுத்தினார்கள் என்பதை வருங்கால தமிழ் தலைமுறையினர் நினைவில் கொள்வார்கள். சிங்களச் சிறிலங்கா கொலை, …

  21. யாழ்ப்பாண நகரத்தின் அடையாளங்களை மேம்படுத்தல்! ஐந்திறன். September 3, 2021 கடந்த ஞாயிற்றுக்கிழமை உதயன் பத்திரிகையில் வெளிவந்த ‘நகரபிதாவிற்குக் குடியானவன்’ எழுதிய கடிதத்தை வாசிக்க நேர்ந்ததில் ஏற்பட்ட சிந்தனைகளை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆசையின் விளைவே இச்சிறு கட்டுரை. யாழ்ப்பாண நகரத்தை, வீதி அகலிப்பு முதலிய பலநடவடிக்கைளால் அழித்துக் கொண்டிருக்கும் செயற்பாடுகள் மீதான கோபமும், மனவருத்தமும் கூட இக்கட்டுரை எழுதக் காரணமாகும். ஏன் யாழ்ப்பாணத்தில் துறைசார் நிபுணர்களை எல்லா இடங்களிலும் அகற்றிவிடுதல் என்பதை அதிகாரிகள் ஒரு வியூகமாகக் கடைப்பிடிக்கிறார்கள் என்ற காரணம் கட்டுரையாளர் ஜீவன் தியாகராஜாவைப் போல எனக்கும் புரியவில்லை. படம் 01- குறிப்பிட்ட பண்ப…

  22. வருமானங்கள் இல்லாமல் போவதால், மக்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்கின்றார்கள் – அகிலன் கதிர்காமர் வருமானங்கள் இன்றி மக்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்கிறார்கள்: கொரோனாவும் அதன் பொருளியல் சமூக தாக்கங்களும் தொடர்பாக யாழ் பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துறை மூத்த விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் உயிரோடைத் தமிழின் தாயகக்களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகள் இலங்கையின் பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் கேள்வி ? இலங்கையின் பொருளாதாரத்தில் கொரோனா எவ்வாறான பாதிப்பைக் கொடுத்திருக்கின்றது? பதில் ! இலங்கையின் பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம்: ஒன்றரை வருடத்திற்கு முன்பு கொரோனா அனர்த்தத்துடன், எங்கள் முக்கியமான துறைகள், அதாவது…

  23. ஜூபைர் அகமது பிபிசி செய்தியாளர் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையில், மிக நவீன ராணுவம், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மிகவும் முன்னேறிய விமானப்படையை கொண்ட உலகின் மிக சக்தி வாய்ந்த நாடாக கருதப்படும் அந்த நாட்டால், தாலிபன்களை ஏன் தோற்கடிக்க முடியவில்லை என்ற கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமெரிக்காவால் ஏன் ஒரு நவீன போரை வெல்ல முடியவில்லை என்று அமெரிக்க அறிவுஜீவிகள் குழப்பமடைகிறார்கள். செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 31) அமெரிக்கப் படைகளை திரும்பப்பெற்றவுடன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஈடுபாடு முடிவுக்கு வந்துவிடுமா என்ற கேள்வியும் முக்கியமானது. குறிப்பாக சீனாவும் ரஷ்யாவும் முன்னே வந்து தாலிபன்களு…

    • 2 replies
    • 468 views
  24. அமெரிக்காவின் உதவியை திரும்ப செலுத்த வேண்டியதில்லை அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் துறைமுக நகர விதிமுறைகளின் பிரகாரம் கறுப்பு பணமோசடி, ஊழல் நடைமுறைகளுக்கு இடமளிக்கின்றமைதொடர்பாக கவனமாக இருக்குமாறு அரசாங்கத்தைகேட்கவேண்டியுள்ளது *இலங்கை மிகப்பாரிய வர்த்தக மற்றும் பொருளாதார ஆற்றலைக் கொண்ட நாடு *ஆப்கானிஸ்தானில் மாற்றமடைந்து வரும் சூழ்நிலைக்கு ஒரு கூட்டான அணுகுமுறையை அமெரிக்கா விரும்புகிறது ,இலங்கையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வர்த்தகரீதியான சூழலின் முன்னேற்றம் குறித்து அமெரிக்க தூதர் அலைனா பி.டெப்ளிட்ஸ், டெய்லி மிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்கருத்து தெரிவித்திருப்பதுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் குவாட்[குவாட் என்பது அமெரிக்கா, ஜப்பான், …

  25. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை ஆனது, தமிழினப் படுகொலை மூலோபாயத்தின் ஓர் பகுதியே !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் August 30, 2021 தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமையானது, ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவினது இனவழிப்பு மூலோபாயத்தின் ஓர் பகுதியே எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இது தொடர்பில் அனைத்துலக விசாரணை வேண்டும் என்பதோடு, அனைத்துல குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் நிறுத்தப்பட வேண்டும் என கோரியுள்ளது. ஓகஸ்ற்-30 வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளதோடு, புலம்பெயர் நாடுகளில் பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுக்கின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.