நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
எச்சரிக்கை!: ஈழத்தில் மீண்டும் வன்முறைக்குத் தயார்படுத்தும் பாரதீய ஜனதா கும்பல் 11/17/2020 இனியொரு... 1984 ஆம் ஆண்டு ஆயுதப் பயிற்சி வழங்கிய இயக்கங்களை இந்தியா இணைத்து ஈ.என்.எல்.எப் என்ற கூட்டணியை உருவாக்கிற்று தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டம் இலங்கையில் அழிக்கப்பட்டதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று இந்தியாவின் தலையீடு என்பதை யாரும் மறுப்பதில்லை. 1983 ஆண்டு ஜீலை இன வன்முறைக்குப் பின்னர் இந்திய அரசு, உத்திரப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலை இயக்கம் TELO, தமிழீழ விடுதலைப் புலிகள் LTTE, ஈழப் புரட்சி அமைப்பு EROS, ஈழ மக்கள் விடுதலை முன்னணி EPRLF ஆகிய இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியதற்கு முன்பாகவே இத் தலையீடு பல வழிகளில் ஆரம்பித்துவ…
-
- 2 replies
- 1.2k views
-
-
இன வேறுபாட்டால் பிளவுபடுத்தி ட்ரம்போ,மோடியோ வெல்ல முடிந்ததா? மின்னம்பலம் டி. எஸ்.எஸ்.மணி அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா இப்போது அறிவிக்கிறார்:- "அதிபருக்கான இந்தத் தேர்தலில், இருதரப்பும் ஏழு கோடி வாக்குகள் பெற்றுள்ளார்கள். நாடு ஆழமாக பிளவுபட்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது. இது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது. இன வேற்றுமையைக் கையிலெடுத்து, டொனால்டு டிரம்ப் பிரச்சாரம் செய்தார். அதனால்தான் நாட்டு மக்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில். தோல்வி அடைந்த பிறகும் அவர் அதையே செய்கிறார்." டிரம்ப்பின் திட்டம் அமெரிக்க அதிபர் தேர்தல் உலகுக்கு சில, பல படிப்பினைகளை கற்றுத் தருகிறது. அதில் முக்கியமானது இன வேறுபாட்டை தூண்டுவது வெற்…
-
- 8 replies
- 795 views
-
-
சிறப்புக் கட்டுரை: அமெரிக்கா, பிகார்: தேர்தல்களை காப்பாற்றுவது எப்படி? மின்னம்பலம் ராஜன் குறை உண்மையான சமூக மாற்றத்தில் அக்கறைகொண்ட பலர் தேர்தல்களை அதற்கு போதுமான வழிமுறை என்று நம்பியதில்லை. தமிழகத்தை எடுத்துக்கொண்டால் சமூக நீதி காவலர், மாபெரும் புரட்சிகர சிந்தையாளர் பெரியார் தேர்தலில் போட்டியிட்டதில்லை. அவருடைய கட்சி அமைப்பான திராவிடர் கழகமும் போட்டியிட்டதில்லை. தேர்தலில் ஈடுபடும் கட்சிகளை, வேட்பாளர்களை ஆதரித்து பேசியுள்ளாரே தவிர அவராக போட்டியிட நினைத்ததில்லை. காரணம் அவர் சமூக மனோவியலை மாற்றுவதற்கே முன்னுரிமை கொடுத்தார் என்பதுதான். அதேபோல சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை புரட்சியின் மூலம் முற்றாக அகற்ற விரும்பிய மார்க்சீய லெனினீய அமைப்புகளும் த…
-
- 0 replies
- 320 views
-
-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலும் தமிழ்த் தலைமைகளும்! - நா.யோகேந்திரநாதன்.! உலக அரசியல், பொருளாதார, இராணுவ மேலாதிக்கத்தைக் கையகப்படுத்த அமெரிக்காவும், சீனாவுக்குமிடையேயான போட்டி வலுப்பெற்று ஒரு பனிப்போராக விரிவடைந்த நிலையில் அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் நிறைவு பெற்று அதன் முடிவுகள் வெளிவந்து விட்டன. சர்வதேச அளவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறியமை, உலக சுகாதார நிறுவனத்துடன் முரண்பட்டு அதற்கான உதவிகளை நிறுத்தியமை, உலக வெப்பமயமாதல் ஒப்பந்தத்தை நிராகரித்து ஒப்பமிட மறுத்தமை, ஈரான் வடகொரிய நாடுகளுடன் அமெரிக்காவுக்கு நிலவிய முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தியமை போன்ற முரட்டுத்தனமான நடவடிக்கைகள் மூலம் டொனால்ட் ட்ரம்ப் ஒரு வன்போக்கைக் கையாண்டு வ…
-
- 0 replies
- 412 views
-
-
நம்பிக்கையின் புதிய ஒளி ஜோ பைடன் அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக ஜோ பைடன், துணைத் தலைவராக கமலா ஹாரிஸ்ம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் அமையப் பெற்ற புதிய அரசாங்கத்தால் தங்களது தலைவிதி மாற்றமடையுமா என ஈழத் தமிழர்கள் சிந்தித்தவண்ணம் உள்ளார்கள். பாரக் ஒபாமாவின் கீழ் உள்ள ஜனநாயகக் கட்சியினர் தான் 2012 முதல் யு.என்.எச்.ஆர்.சி.யில் தொடர்ச்சியான தீர்மானங்களுடன் இலங்கையை ஆட்டிப்படைத்தது நினைவிருக்கலாம். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்ட பின்னர், அக்டோபர் 1 ஆம் தேதி அமெரிக்கா 30/1 தீர்மானத்தை நல்லாட்சி அரசாங்கம் என்று அழைக்கப்படும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு அள…
-
- 5 replies
- 959 views
-
-
சிங்கள பௌத்த மயமாகும் வவுனியா வடக்கு-அன்று கச்சல் சமணங்குளம் இன்று சபுமல்கஸ்கட..! 46 Views வவுனியா வடக்கின் தெற்குப் பக்கமாக இருக்கின்ற அடர் காடுகளுக்குள் நுழைந்து பார்த்தால், பெருமரங்கள் மட்டுமே நிற்கின்றன. காடுகளுக்குள் மிக விரைவாக குடில்கள் முளைக்கின்றன. அடர் காடுகள் என அடையாளமாகியிருந்த இடங்கள், செறிவான மரங்களுடையனவாக மாறிக்கொண்டிருக்கின்றன. எங்கிருந்தோ வரும் சிங்கள மக்களும், பௌத்த மத தலைவர்களும் தங்களுக்கான இடங்களைப் பிடிப்பதிலும், புதிய கட்டடங்களை அமைப்பதிலும் இரவு பகல் பாராது உழைத்துக்கொண்டிருக்கின்றனர். கச்சல்சமணங்குளம் அடர் காட்டுப் பகுதியில் ‘சபுமல்கஸ்கட தொல்லியல் வேலைத்தல’ எனும் பெயர்ப்பலகையை நாட்டி…
-
- 0 replies
- 336 views
-
-
பைடன் நிர்வாகம் அதன் ஜனநாயக நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்காக இலங்கையின் இனப்பிரச்சினை மற்றும் நல்லிணக்க விவகாரங்களில் அக்கறை காட்டும் என்று எதிர்பார்க்கமுடியும் என்றாலும், இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சீனாவை கட்டுப்படுத்துவதற்கு இலங்கையின் புவிசார் மூலோபாய முக்கியத்துவம் அவசியம் என்பதால் கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராகக் கடுமையான போக்கைக் கடைப்பிடிக்கக்கூடியது சாத்தியமில்லை என்று அரசியல் அவதானிகள் அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார்கள். காலப்போக்கில் சீனாவிற்கு எதிரான ஒரு கூட்டணியாக இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா அமைத்திருக்கும் ‘குவாட்” அமைப்புக்குள் இலங்கையை இழுப்பதற்கு பைடன் நிர்வாகம் முயற்சிக்கக்கூடும் என்றும…
-
- 0 replies
- 532 views
-
-
தமிழ்நாட்டு அரசியல் காணொளிகள் உள்ளடக்கம்:- விவசாயின் உள்ள குமுறல் செந்நாய் கூட்டமும், மூன்று மனிதர்களும் & நான்கு குதிரைகளும் கதைதான் தற்போதைய விவசாயிகளின் நிலமை Ramana Karunarathnam9 hours ago நல்ல பதிவு வயதானவர்கள் விழித்து விட்டார்கள் இந்த திராவிட மத்திய அரசு புறக்கணித்து வரும் காலத்தில் விவசாயி உங்கள் பிள்ளைகள் உரிமையுடன் வாக்கு செலுத்துங்கள் அப்போ பாருங்கள் நாட்டை நாம் தமிழர் சின்னம் விவசாயி உங்கள் பிள்ளைகள் உங்களுடன் நிமிர்ந்து நிற்கிறது நிற்பார்கள் ஒரு தரம் வாக்கு செலுத்துங்கள் அப்போ பாருங்கள் நாட்டை வெற்றி உறுதி மக்கள் எழுச்சி விரைவில் நாம் தமிழர்
-
- 5 replies
- 1.2k views
-
-
உள்ளடக்கம்:- செய்தியாளர் மோசசை படுகொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் - சீமான் செய்தியாளர் மோசசை படுகொலை செய்த சமூக விரோதக் கும்பலை கைதுசெய்க - சீமான் வலியுறுத்தல் தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசசை படுகொலை செய்த சமூகவிரோதக் கும்பலை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கையில், ”சென்னை, குன்றத்தூர் அருகே புழக்கத்திலுள்ள போதைப்பொருள் வியாபாரம் குறித்த செய்தி வெளியிட்டதால் தமிழன் தொலைக்காட்சியின் செய்தியாளர் மோசஸ் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஈடுசெய்ய இயலாப் …
-
- 1 reply
- 442 views
-
-
உள்ளடக்கம் -ஏன் கதறுகிறார்கள் ஐயா.மணியரசனும் ஐயா. ஜெயராமனும் | உடனே விழி தமிழா, வட மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கில் குடியேறுகின்றனர், தமிழ் மக்கள் சிறுபான்மையினமாக மாறு காலம் உருவாகாமல் தடுக்க வேண்டும், 70 ஆண்டுகளில் எல்லாமே பறி போய்விட்டது, மொழி உரிமை, கல்வி உரிமை இழந்துவிட்டது... இப்படி இன்னும் இந்த நேர்காணலில். தமிழ் நாட்டில் தமிழன் சாலையில் நடக்க முடியாது, மார்வாடிகள் கேட்கின்றார்கள் ஏன் இந்த சாலைக்கு வருகின்றீர்களென. செளகார் பேட்டை... பி.கு: வசை சொற்களில்லை
-
- 2 replies
- 515 views
-
-
சிறப்புக் கட்டுரை: அடுத்துக் கெடுக்கும் பாரதீய ஜனதா கட்சி மின்னம்பலம் ராஜன் குறை அடுத்து கெடுப்பது என்றால் ஒருவரிடம் நட்பாக இருந்து, அணுக்கமாக இருந்து அவருக்கு தீமை செய்வது. பாரதீய ஜனதா கட்சி மாநில கட்சிகளுடன் கொள்ளும் உறவினை இப்படித்தான் வர்ணிக்க முடியும். மஹாராஷ்டிராவில் சிவ சேனாவுடன் அதற்கு இருந்த உறவு விரோதமாக மாறியது முக்கியமான உதாரணம். பீகாரில் நிதீஷுடன் அதன் உறவு நிதீஷை எந்த நிலைக்கு தள்ளியுள்ளது என்பது நாளை தேர்தல் முடிவுகள் வரும்போது தெரியும். தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க அரசை அடிமை அரசாக பயன்படுத்தும் அதன் மன நிலையை நாம் புரிந்துகொள்ள இந்த உதாரணங்கள் உதவும். பாரதீய ஜனதா கட்சிக்கு மாநில கட்சிகளின் மீது எந்த மரியாதையும் கிடையாது. மாநி…
-
- 0 replies
- 340 views
-
-
"சிரிக்கும் நாகம்" தமிழ்ச்செல்வனை இலங்கை விமானப்படை கொன்றதெப்படி - பணத்திற்கு புலியெதிர்ப்பு விஷம் கக்கும் டி பி எஸ் ஜெயராஜ் கொழும்பு டெயிலி மிரர் எனும் இணையவழி ஆங்கில நாளிதழில் கனடாவிலிருந்து புலியெதிர்ப்பினைத் தனது பணத்தேவைக்காக தொடர்ச்சியாகக் கக்கிவரும் டி பி ஜெயராஜ் எனும் கட்டுரையாளர் தனது அண்மைய புலியெதிர்ப்பு புராணத்தில் புலிகளின் முன்னாள் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை "சிரிக்கும் நாகம்" என விழித்து, அவரை இலங்கை விமானப்படை எவ்வாறு கச்சிதமாகக் கொன்றது என்று கிலாகித்து எழுதியிருக்கிறார். அவரைக் கொல்வதற்காகக்ப் பாவிக்கப்பட்ட குண்டுகள் முதல், அவரின் மனைவி வரை பலவிடயங்களை இந்த புராணத்தில் கக்கியிருக்கும் ஜெயராஜ் புலிகள் களத்திலிருந்து விலகி 11 …
-
- 14 replies
- 2.1k views
-
-
உள்ளடக்கம்:- சகாயம் நேர்மையாளரா? சகாயத்தின்மறுபக்கம். மக்கள் பாதையின் தலைவரின் கருத்து. சகாயம் - லஞ்சம் வாங்காத நேர்மையாளர், இது மட்டும் நேர்மையல்ல வாழ்கையில் எப்படி நடக்கின்றார் என்பதே. அவரை அருகில் இருந்து பார்த்தால் தான் அவரைப்பற்றி தெரியுர், நாம் அருகில் இருந்து பார்த்தால் அவரின் விம்பம் உடைத்துவிட்டது. தன்னைதான் எங்கும் முன்னிறுத்தி செயற்படுவார், தன் படங்களை மட்டுமே இனி எங்கும் பயன்படுத்தவும் என கட்டளையிட்டார். இனி சகாயத்திற்கும் மக்கள் பாதைக்கும் தொடர்பில்லை. சந்திரமோகனை போல் ஒரு நல்ல கள போராளியை காணமுடியாது. தமிழகத்துக்கு சகாயம் ஒரு ஒரு விடிவு இல்லை பி.கு:- வசை சொற்களில்லை
-
- 0 replies
- 503 views
-
-
தாக்கத்தை ஏற்படுத்துமா வேல், ஏர்கலப்பை யாத்திரைகள் -குடந்தையான் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பை அடைவதற்கு பாரதிய ஜனதா கட்சி, வித்திட்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடத்தை முன்னிறுத்தி, தமிழகத்தில் ஆட்சி, அதிகார அரசியல் நடைபெற்று வருகிறது. இதில் மாற்றத்தை ஏற்படுத்த இந்துத்துவா சித்தாந்தத்தை முதன்மைக் கொள்கையாக கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி, தன்னுடைய 'கைப்பாவையாக’ இயங்கும் ஆளும் அ.தி.மு.க அரசின் உதவியுடன் அரசியல் நோக்கம் கொண்ட 'வேல் யாத்திரையை ' நடத்துவதற்கு திட்மிட்டிருந்தது. இந்த வேல் யாத்திரை மூலம் தமிழக வாக்காளர்களிடம் ஊறிப் போய்க் கிடக்கும் 'தி.மு.க. –அ.தி.மு.க.' என்ற இரட்டை நிலைப்பாட்டை மாற்றி, பா.ஜ.க.வின் 'தாமரை'யை மலர வைப…
-
- 0 replies
- 432 views
-
-
இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளாத ஐரோப்பாவில், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள், இதனால் உண்டாகும் எதிரொலிகள் எல்லாம் கலாசார மோதல்களைக் கூர்மைப்படுத்தி சமய நம்பிக்கைகளைக் காயப்படுத்துகின்றன. இந்நாடுகளில் உள்ள எல்லையில்லாக் கருத்துச் சுதந்திரங்களை மட்டுப்படுத்தாத வரை, இக்காயங்கள் அடிக்கடி ஏற்படவே செய்யும்.கருத்துச் சுதந்திரம் ஏன், ஒருவரைக் காயப்படுத்த வேண்டும். எவற்றையும் பொருட்படுத்தாது இருந்தால் சரிதானே. இப்படியும் சிலர் சொல்கின்றனர். பிறர், தம்பிள்ளைகளை திட்டினால் அல்லது வசைபாடினால் பெற்றோரின் பொருட்படுத்தாத தன்மை எதுவரை இருக்கும். ஒரு தடவை, இரு தடவை அல்லது ஒரு எல்லை வரைதான் இதில் பொறுமை இருக்கும். இவ்வாறுதான், சில முஸ்லிம்கள் பொறுமை இழக்கின்றனர். கர…
-
- 2 replies
- 1.4k views
-
-
தெரு ஓவியங்களும் மென்வலுவும் (soft power) கலாச்சார சாணக்கியமும் (cultural diplomacy) – பாகம் 2 November 8, 2020 Share 40 Views அழகுகலைப் பண்புகள், கலாச்சார, பண்பாட்டு நுணுக்கங்கள் Joseph Nye குறிப்பிடுகின்ற மென்வலுவாக (soft power) அடக்குமுறைக்கு எதிராக உள்வாங்கப்பட வேண்டிய தேவை சனநாயக வெளி மூடப்படுகின்ற சூழலில் எழுகின்றது. இவ்வெழுச்சி ஆக்கபூர்வமான அழிவினூடாகவும் முன்வைக்கப் படலாம். மேலாண்மை அடக்குமுறைச் சொல்லாடலை சமூகவியல், அரசியல், அழகியல், மானுடவியல், வரலாற்றியல் இன்னும் பிற தளங்களில் கட்டவிழ்ப்பது ஆக்கபூர்வமான அழிவாகக் கொள்ளப்படலாம். …
-
- 5 replies
- 1.4k views
-
-
20 நாட்களாக இரண்டு உடைகளுடன்; தனிமைப்படுத்தல் விடுதிகளின் ‘மறுபக்கம்’ – நடப்பது என்ன? – ஓர் ஆய்வு Bharati November 7, 2020 20 நாட்களாக இரண்டு உடைகளுடன்; தனிமைப்படுத்தல் விடுதிகளின் ‘மறுபக்கம்’ – நடப்பது என்ன? – ஓர் ஆய்வு2020-11-07T13:11:14+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore கலாவர்ஷ்னி கனகரட்ணம் “உடுத்திய உடையுடன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்குச் சென்று பின்னர் தெரிந்தவர்கள் ஊடாக இன்னொரு உடை கிடைத்தது. இரண்டு உடைகளுடன் சுமார் 20 நாட்கள் இருக்கின்றேன்” கொழும்பிலுள்ள மொத்த விற்பனை நிலையத்தில் பணியாற்றிய ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தற்போது விடுதியொன்றில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.…
-
- 1 reply
- 1.1k views
-
-
Share தெற்காசிய மற்றும் தென்கிழக்காசியாவிற்கான (இலங்கை, இந்தியா, மாலைதீவு, இந்தோனேசியா, வியட்நாம்) அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவின் விஜயத்தின் பிரதான குறிக்கோள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவை அதிகரிப்பதற்காகவேயாகும். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் அவரது இந்த விஜயம் இடம்பெற்றமை இதை தெளிவாகக் காட்டுகின்றது. சீனாவிற்கு எதிரான கடுமையான தெற்கு, தென்கிழக்காசிய பிரதிபலிப்பொன்று அமெரிக்க வாக்காளர்களின் ஒரு பிரிவினரிடமிருந்து ஆதரவைப் பெருக்கும். இந்தியாவிலும் மாலைதீவிலும் பொம்பியோவின் விஜயத்திற்கான வரவேற்பு சாதகமானதாக இருந்தது. ஆனால் இந்த இருநாடுகளும் சீனாவிற்கு எதிராக ஏற்கனவ…
-
- 0 replies
- 988 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்பின் இறங்குமுகம் வலதுசாரி அரசியலின் முடிவா? ராமு மணிவண்ணன் துறைத் தலைவர், அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் பட மூலாதாரம், SAUL LOEB அமெரிக்க தேர்தலைப் பொறுத்தவரை, கடந்த பல தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய அன்றைய தினமே முடிவுகள் வெளியாகிவிடும். இப்போது நடந்திருப்பது கடந்த பல வருடங்களில் நாம் காணாத ஒரு விஷயம். இந்தத் தேர்தலை consequential தேர்தல் என்று அழைக்கிறார்கள். அதாவது பலவிதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தேர்தல் என்கிறார்கள். இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதைவிட, ஜோ பைடன்…
-
- 0 replies
- 417 views
-
-
உள்ளடக்கம்:- முடிவுக்கு வந்துவிட்டது திராவிடம், பெ.மணியரசன் விளாசல் தமிழ் தேசியம் ஒரு மெய்யியல் - ஜாதி இல்லை, மனுதரமத்திலிருந்துதான் இந்த ஜாதி வந்தது, தமிழில் இல்லை சாதி, தமிழ் தேசியத்தை சிதைக்கதான் இந்த வண்மம். மன அழுக்குதான் உயர்வு தாழ்வு. கலப்பு திருமணத்தை ஆதரிக்க வேண்டும். திராவிடமென்று தெலுங்கில் & மலையாளத்தில் சொல்ல முடியுமா, ஆரியன் வைத்த பெயரிது. ஜாதியை மறுப்பவன் திராவிடன்??? கருணா இன துரோகி, ஆனா தமிழன் பி.கு: வசை சொற்களில்லை & ஆபாச படங்களில்லை, அரசியல் கட்சி சார்ந்துமில்லை,
-
- 3 replies
- 661 views
-
-
உள்ளடக்கம்:- சுரேன் ராகவன்(ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவர்) அரசியல் கைதிகளின் விடுதலை பற்றித் தெரிவித்திருக்கும் கருத்தை வரவேற்கின்றேன்; மூத்த பாரிய குற்றங்கள் செய்தவர்கள் பகட்டாக வெளியில் திரியும் போது இந்த அடிமட்ட கைதிகளை விடுவிக்க வேண்டும்.
-
- 1 reply
- 508 views
-
-
பிரான்ஸ் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாதத்தின் பின்புலம்… 11/05/2020 இனியொரு... பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்ற படுகொலைகளின் பின்னர், கொரோனா மரணங்களின் மத்தியில், பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகள் அப்பாவி இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமிய மதத்திற்கும் எதிரான முழக்கங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளமை அச்சம் தரும் சூழல். UCL – London பல்கலைக் கழகத்தில் பிரஞ்சு மற்றும் ஐரோப்பிய அரசியல் துறை பேராசியர் பிலிப் மர்லியே, மக்ரோனின் பிரஞ்சு அரசு வேகமாக நாஸிச அரசாக மாறிவருவதாகக் குறிப்பிடுள்ளார். கொலைகளின் பின்னர் உரையாற்றிய மக்ரோன், உலகம் முழுவதிலும் இஸ்லாமிய மதம் நெருக்கடியிலுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 21.06.2011 ஆம் ஆண்டு ஐரோப்பாவையே உலுக்கிய கிறீஸ்தவ வெள்ளையின பயங்கரவா…
-
- 1 reply
- 730 views
-
-
ராஜபக்ஷ குடும்பத்தினருடன் எவ்விதமான நெருக்கமுமில்லை - சீன தூதரக அரசியல் பிரிவுத்தலைவர் பேட்டி அமெரிக்கா உட்பட மேற்குலகத்திடம் ‘வெள்ளை மேலதிக்கவாதம்’ காணப்படுகின்றது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் ‘குரல்களை ஒடுக்கி’ தமது ‘பிடி’க்குள் வைத்திருப்பதே அவர்களின் நோக்கமாகவுள்ளது என்று மக்கள் சீனக் குடியரசின் இலங்கைக்கான தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவரும், ஊடகப்பேச்சாளருமான லூ சொங் (Luo Chong) கொழும்பு நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது தெரிவித்தார். அந்தச் செவ்வியின் முதற்பாகம் வருமாறு, கேள்வி:- இலங்கையில் ஆட்சிக்கு வந்திருக்கும் புதிய அரசாங்கத்துடனான உறவுகள் எப்படியிருக்கின்றன? பதில்:- இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவுகள் 2ஆயிரம் …
-
- 0 replies
- 273 views
-
-
‘தண்டனை விலக்கீட்டை முடிவுறுத்து, உண்மையை உயிர்ப்பித்திரு’-பி.மாணிக்கவாசகம் 27 Views உண்மைகள் சாவதில்லை. ஆனால் சாகா வரம் பெற்ற உண்மையை வெளிக்கொண்டு வருபவர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள், கடத்தப்படுகின்றார்கள், கொல்லப்படுகின்றார்கள். நாகரிகம் வளர்ச்சி அடைந்துள்ள போதிலும் வாழ்வியலில் இது மிக மோசமான உலகளாவிய நிலைமையாகத் திகழ்கின்றது. தகவல்களை – உண்மைத் தகவல்களை அறிந்து கொள்வது மக்களின் பிறப்புரிமை. அந்த உரிமையை நிறைவேற்றுவதற்காக ஊடகவியலாளர்கள் உழைக்கின்றார்கள். அவர்கள் உண்மைகளையும் உள்ளவாறாக நிலைமைகளையும் வெளிக் கொண்டு வருவதற்குப் பாடுபடுகின்றார்கள். அதனை அவர்கள் தமது வாழ்வியலாக – தொழிலாகக் கொண்டிருக்கின்றார்கள். …
-
- 0 replies
- 281 views
-
-
முகமது நபிகளின் உருவப்பட சர்ச்சை: திருக்குர்ஆன் என்ன சொல்கிறது? சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் பட மூலாதாரம், GETTY IMAGES இஸ்லாமியர்கள் இறைத்தூதராக வணங்கும் முகமது நபிகளின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் பிரான்சில் மறுபதிப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வரும் தாக்குதல் சம்பவங்களும் அது குறித்த பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் கருத்துகளும் தொடர்ந்து விவாதத்துக்குள்ளாகி வருகின்றன. இதன் எதிரொலியாக, பல்வேறு நாடுகளிலும் முஸ்லிம்கள் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், இஸ்லாம் மதத்துக்கு எதிராக கருத்துத் தெரிவித்…
-
- 0 replies
- 983 views
-