நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
பெருநாள் கொள்வனவு: பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்த நாட்டில் உள்ள எல்லா இன, மதங்களைச் சேர்ந்த மக்களும் கூட்டாகப் பலவித அர்ப்பணிப்புகளைச் செய்திருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக, சிங்களவர்கள், கிறிஸ்தவர்கள், தமிழர்கள் தமது முக்கியப் பண்டிகைக் கொண்டாட்டங்களைத் தியாகம் செய்ததைக் குறிப்பிட்டாக வேண்டும். கொவிட்-19 வேகமாகப் பரவிக் கொண்டிருந்த காலத்தில், இயேசுநாதர் உயிர்த்தெழுந்ததை நினைவுபடுத்தும் உயிர்த்த ஞாயிறு தினம் வந்தது. கடந்த வருடத் தாக்குதல்களை நினைவுகூர வேண்டிய ஒரு நிலையும் கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால், பேராயர் ஒரேயொரு முறைதான் கோரிக்கை விடுத்தார். மறுபேச்சின்றி, எல்லாக் கத்தோலிக்க, கிறிஸ்தவ மக்…
-
- 0 replies
- 587 views
-
-
நான் இப்ப, தமிழ் அரசியல் குறித்து அக்கறைப்படுவதில்லை. நண்பர் ஒருவர் இந்த லிங்கினை அனுப்பி இருந்தார். போரடித்ததால் பார்த்தேன்.... முடியல... நீங்களும் பாருங்கோவன்.
-
- 0 replies
- 843 views
-
-
அம்பேத்கரும் இடதுசாரி இளம்பருவக் கோளாறுக்காரர்களும் இந்தக் கவிதை(?) எழுத்துக்களை வாசிப்பவர்கள் மனம் புண்பட்டால் என்னை மன்னித்து அருள்வீராக. “குறிமடக்கி அமரும் புத்தனின் வழிகளில் படர்கிறது யோனியின் ரேகை”, "ஆகச் சிறந்த புணர்ச்சியை நிறைவேற்ற வேண்டுமாயின் -----தான் புணர வேண்டும் அவளுக்குத்தான் ஆயிரம் கைகள்" - 'காமத்துப்பால்' என்ற புத்தகத்தில் 'தூய மார்க்சிய கவிஞரும், அறிஞருமான' வசுமித்ர என்பவர் எழுதியது. இவர் தான் "புத்தரின் ஆண்……. அம்பேத்கர் அறிவைத் தேடுகிறார்” என இழிவுபடுத்தி (அடே கிறுக்கன்களா இது விமர்சனம் அல்ல, விஷம்) வன்மத்தைக் கொட்டினார். அதற்கு எதிராக தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர் சாமுவேல்ராஜ் இந்த நபரின் மீது வன்கொடுமை தண்டனைச் சட்டத்தின் கீழ் புகார் கொ…
-
- 0 replies
- 436 views
-
-
மனிதனின் உணவுப்பழக்கமா, விலங்குகளிடமிருந்து பறிக்கப்பட்ட உறைவிடமா... எதனால் வந்தது கொரோனா? தற்போது ஏற்பட்டுள்ள கோவிட்-19 கொள்ளைநோய் சீனாவில் தோன்றி உலகத்தையே தன்னுடைய பிடியில் வைத்துள்ளது. இந்த நோயின் தோன்றலையும், பரவலையும் அறிந்துகொள்வதின் மூலம் எதிர்காலத்தில் இதுபோன்ற நோய்கள் வருவதைத் தடுக்கலாம் என்பது குறித்து விளக்குகிறார் விஞ்ஞானி கார்த்திக் பாலசுப்பிரமணியன். கொரோனா நோய் வந்ததிலிருந்து உலகின் சாதாரண குடிமகன் முதல் வல்லரசுகளின் அதிபர்கள்வரை அனைவரும் திட்டித்தீர்ப்பது சீனாவைத்தான். குறிப்பாக, சீனர்களின் உணவுப் பழக்க வழக்கங்களை. இதற்கு வலுசேர்க்கும் விதமாக வாட்ஸ்அப்பில் உலா வரும் பல்வேறு காணொலிகளும் சீனர்கள் பாம்பு, பூச்சிகள் உள்ளிட்டவற்றை உட்கொள்வதாகக் கா…
-
- 0 replies
- 375 views
-
-
எப்போது, எப்படி முடிவுக்கு வரும் இந்தப் பெருந்தொற்று?- வரலாற்று ரீதியில் ஓர் அலசல் பெருந்தொற்றுகள் வழக்கமாக இரு வகைகளில் முடிவுக்கு வரும் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். ஒன்று, மருத்துவ ரீதியிலான முடிவு. தொற்று விகிதமும் இறப்பு விகிதமும் குறையும்போது மருத்துவ ரீதியில் பெருந்தொற்று முடிவுக்கு வரும். இரண்டாவது, சமூக ரீதியிலான முடிவு. தொற்றுநோய் தொடர்பான பயம் முடிவுக்கு வரும்போது சமூக ரீதியில் பெருந்தொற்று முடிவுக்கு வரும். “கரோனா பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்று கேட்பவர்கள், சமூக ரீதியிலான முடிவு எப்போது என்பதைத்தான் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்” என்கிறார் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மருத்துவ வரலாற்றாசிரியரான டாக்டர் ஜ…
-
- 0 replies
- 385 views
-
-
பாக்கு நீரிணையின் இருபக்கமும் உள்ள தமிழர்கள் நிலைமை போர்த்துக்கேயர், கோழிக்கோடு வந்து இறங்கியபோது 1498ல் சாமோரியர்கள் ஆண்டு கொண்டிருந்தனர். போர்த்துக்கேயர் வரவேற்க்கப்படவில்லை. திரும்பிப் போன போர்த்துக்கேயர், பலத்துடன் வந்து கொச்சி பகுதியினை பிடித்துக் கொண்டனர். எதிரியின் பிரதேசம் ஆயினும், ஒரே இனம் என்பதால், மேலே கோழிக்கோடு பகுதியினை ஆண்டு வந்த சமூரியர்கள், போர்த்துகேயர்களை எதிர்ப்பதில் அப்பகுதி அரசனுக்கு உதவினர். விளைவாக அங்கிருந்து வெளியேறிய போர்த்துக்கேயர், 1505ம் ஆண்டளவில் இலங்கை பக்கம் போய், 1520ம் ஆண்டளவில் முக்கியமாக யாழ்ப்பாணத்துக்கு பக்கத்தில் இருந்த தீவுக் கூட்டங்களை பிடித்துக் கொண்டனர். முக்கியமாக நெடுந்தீவு. அதேவேளை …
-
- 9 replies
- 1.1k views
-
-
காத்தான்குடிப் படுகொலையின் பின்னணி பற்றி எழுதுமாறு முகநூலிலுள்ள பல உறவுகள் கேட்டிருந்தார்கள். விடுதலைப்புலிகள் அவசியமற்றதாகக் கருதிய ஓர் “இஸ்லாமிய சிங்களப் பிணக்கு” பற்றி நாம் எழுத வேண்டியதில்லை என நினைத்திருந்தேன். ஆனால் தமிழ்நாட்டின் திடீர் “புலியெதிர்ப்புத் தலைவிரிகூத்தாடிகள்” சிலர்; காத்தான்குடி என்ற இடத்தின் சரியான பெயரைக்கூட அறியாமல், காத்தான்குளம் சம்பவம், கந்தன்குடி சம்பவம் என்று விளிக்க ஆரம்பித்த பிறகு இதை எழுதியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்து, சில தமிழீழத் தகமையாளர்களுடன் உரையாடி அவர்களது கருத்தினையும் செவிமடுத்த பின்னரே இதை எழுதுகிறேன். காத்தான்குடி என்பது தமிழ்இஸ்லாமியர்கள் அதிகமாக வாழு தமிழ்நிலம். அவர்களைத் தமிழ்த்தேசிய அங்கத்தவர்களாகவே நீண்டகாலமாக தமிழ்…
-
- 0 replies
- 692 views
-
-
ஒருபுறம் கொரோனா பேரபாயம் நாட்டை சூழ்ந்து கொண்டு இருக்கிறது. மறுபுறத்தில் அரசியல் ஜூரம் அனலடிக்கிறது. இரண்டுக்கும் இடையே சிக்கி மக்கள் பாடாய்ப்படுகிறார்கள். ராஜபக்ச தரப்பினரை – குறிப்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைப் பிடித்துள்ள அதிகார மோகம் நாட்டை மேலும் அபாயத்திற்குள் தள்ளும் சூழலே காணப்படுகின்றது. இந்தப் பேராபயத்திலும் – அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் ராஜபக்ச தரப்புகள். இதற்கு வலுவான காரணம் சர்வதேசம் – நாடு இப்போதிருக்கும் நிலையில் எதுவும் கண்டுகொள்ளப்படாது என்பதுதான். கொரோனா அச்சுறுத்தலில் உலகம் சிக்கித் தவித்தபோது, மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்க விடுவிக்கப்பட்டார். இவரது விடுதலையை சர்…
-
- 0 replies
- 456 views
-
-
‘வழமை வாழ்வை’ பழக்கப்படாத முறையில் மீண்டும் ஆரம்பிக்கும் ஐரோப்பியர்கள் ஐரோப்பிய கண்டத்தின் பல நாடுகள் அவற்றின் ஊரடங்கு நடவடிக்கைகளை படிப்படியாக தளர்த்தி வருகின்ற நிலையில் ‘புதிய வழமைக்கு’ ஐரோப்பியர்கள் தங்களை இசைவாக்கிக் கொள்கிறார்கள். இரவோடு இரவாக கட்டுப்பாடுகளை நீக்கலாம். ஆனால், வாணிப நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை மீண்டும் வென்றெடுக்க கால அவகாசம் தேவை. புரூசெல்ஸ், (சின்ஹுவா): ஐரோப்பியர்கள் தங்களது ‘வழமை’ வாழ்வை மீண்டும் ஆரம்பிக்கின்றார்கள். ஆனால், கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்காக சுமார் இரு மாதங்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குக்குப் பின்னர் தங்களுக்கு பழக்கப்படாத முறையொன்றிலேயே அதை அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. முகக் கவசங்களை அணிந்திருக்கிறார்கள். ச…
-
- 1 reply
- 489 views
-
-
கொரோனாவும் கோயில் திருவிழாக்களும் உலகில் மல்யுத்தப் போட்டி, குத்துச் சண்டைப் போட்டி என்று பல போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்தந்தப் போட்டிகளில் பங்குபற்றவிருக்கின்ற போட்டியாளர்கள், வீரர்கள் பல நாட்களுக்கு முன்பே தம்மை அதற்குத் தயார்படுத்துவது போல எமது இந்துப் பெருமக்களும் தம்மையும் அது போன்ற நிகழ்வுகளுக்குத் தயார்படுத்துவது வழக்கம் . ஆண்டுதோறும் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களை வைத்தே இந்தக் கருத்தை முன்வைக்கிறேன். கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள் எப்போது போட்டிக்குரிய களங்களாகவும், தளங்களாகவும் மாறியதோ அன்றே அவைகள் தமது புனிதத்தை இழந்துவிட்டன என்று கருதலாம். வருடாவருடம் தை மாத்தில் தொடங்கும் கோயில் திருவிழாக்கள் அந்த வருடம் ஆவணி வரை நீடிக்கும். சில கோயில்…
-
- 0 replies
- 474 views
-
-
யாழ் இணையத்தினால் கடந்த வருடம் விளம்பரப்பகுதி ஒன்று தொடக்கப்பட்டு அந்த விளம்பரங்கள் மூலம் கிடைக்கப்பெறும் உதவிகள் அனைத்தும் தாயகத்திற்கே வழங்கப்படும் என அறிவித்திருந்தோம்.விபரம் இங்கே அந்த வகையில் கடந்த வருடத்திலிருந்து கிடக்கப்பெற்ற பணம் அனைத்தும் TNRA அமைப்பிற்கு நேரடியாக கிடைப்பதற்குரிய வழிவகையினைச் செய்திருந்தோம். ஆரம்பத்தில் கிடைக்கப்பெறும் பணம் ஒரு திட்டத்திற்குரியதாக போதுமானதாக வரும் போது அதை யாழ் இணையத்தின் பெயரில் ஒரு திட்டமாகச் செயற்படுத்திக் கொள்ள முடியும் என TNRA அமைப்புடன் கதைத்து முடிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் இன்றைய நெருக்கடி நிலையினைக் கருத்தில் கொண்டு மக்களின் உடனடித் தேவைக்கு கிடைக்கப்பெற்ற பணத்தின் ஒரு பகுதி உலர் உணவுப் பொருட்களாக வழங்…
-
- 15 replies
- 4.5k views
-
-
இடையில் மாற்றமடைந்ததா சீனாவின் உணவுக் கலாசாரம்? உணவு பழக்கவழக்கமென்பது நாட்டுக்கு நாடு மாறுபடக்கூடியவொன்றுதான் . என்றாலும் தென்கிழக்காசியாவின் உணவுக்கலாசாரம் என்பது மற்றைய நாடுகளில் உள்ள பலரையும் மிரளவைத்து விடுகின்றதென்றால் அது மிகையில்லை! அவ்வகையில் சீனர்கள் ஏன் நமக்கு அருவருப்பாக தெரியக்கூடிய பலவற்றையும்கூட உணவாக உண்ணுகின்றனர் என்பதே இன்றைய இக்கட்டுரையின் கரு . இன்றைய சூழலில், உலகில் உள்ள அனைவருக்குமே China என்றாலே கடுங்கோபம் வருமளவிற்கு அந் நாட்டிலிருந்து பரவிய covid19 கொரோனா வைரஸ் இந்த உலகத்தையே ஆட்டி படைத்து வருகின்றது! கொரோனா மட்டுமல்ல இதற்கு முன் பரவிய சார்ஸ் (2002) போன்ற வைரஸ்களும்கூட சீனாவின் whuhan மானிலத்திலுள்ள ” wildlife market ” என்கிற வனவிலங்…
-
- 0 replies
- 471 views
-
-
அணி சேரா நாடுகள் அமைப்பின் - 'கொவிட் 19க்கு எதிராக ஒன்றுபடுவோம்' என்ற தலைப்பிலான இணையவழி மாநாட்டில்- 2020, மே 04ஆம் திகதி - இலங்கை சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி ஆற்றிய உரை.. நவீன காலத்தில் உலகம் எதிர்கொண்டுள்ள மிக முக்கியமான சவால்களில் ஒன்றை எதிர்கொள்வதற்காக, இந்த உச்சிமாநாட்டை நடத்துவதற்காகச் சரியான நேரத்தில் முன்னெடுப்புகளை செய்த - அணிசேரா இயக்கத்தின் தலைவரான அஸர்பைஜானின் தலைவர் மேதகு இலாம் அலியேவை நான் வாழ்த்துகிறேன். COVID -19ஐ முறியடிப்பதில் உலகளாவிய ஒருமைப்பாடு, ஒற்றுமை மற்றும் புதுப்பிக்கப்பட்ட பல்தரப்பு ஒத்துழைப்புக்கு ஆதரவாக இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கொடிய நோய்க்கிருமியை எதிர்த்துப் போராடுவதிலும், கற்றுக்…
-
- 0 replies
- 368 views
-
-
கொரோனா நெருக்கடி; பிரான்சில் தவிக்கும் தமிழர்கள் Bharati May 4, 2020 கொரோனா நெருக்கடி; பிரான்சில் தவிக்கும் தமிழர்கள்2020-05-04T07:44:26+00:00Breaking news, அரசியல் களம் பிரான்ஸில் இருந்து இரா.தில்லைநாயகம் உலகையே கதிகலங்கச் செய்து கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கொவிட் 19 அதாவது கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இனம் மதம் மொழி கடந்து இதுவரையில் பல நூற்றுக்கணக்கான நாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்களை அச்சுறுத்தி மரணத்தின் இறுதிப் பயணத்திற்கு கொண்டு சென்றிருக்கின்ற ஒரு கொடிய நோயாக இவ் வைரசின் தாக்கம் காணப்படுகின்றது குறிப்பாகச் சொல்லப்போனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா.கனடா நாடுகளைப் பொருத்தவரையில் அதி உச்ச அளவில் இந்த வைரசின் தாக்கம் ம…
-
- 1 reply
- 375 views
-
-
அனுராதபுர காட்டில் நமது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும் ஆறு சோழர்காலக் கோயில்கள் என்.கே.எஸ்.திருச்செல்வம் NKS/156 3 மே 2020 சிவபூமியின் சுவடுகளைத் தேடி இலங்கையின் பண்டைய தலைநகரான அனுராதபுரத்திற்குச் சென்றேன். அனுராதபுரத்தில் 40 இந்துக் கோயில்களின் சுவடுகள் உள்ளன என அறிந்தேன். அவற்றைக் கண்டறிய அனுராதபுரத்திற்கு இரண்டு தடவைகள் சென்று ஆய்வுகளை மேற்கொண்டேன். அப்போது ஜேதவனாராம விகாரை வளாகம், அபயகிரி விகாரை வளாக…
-
- 1 reply
- 516 views
-
-
ஹரிகரன் இலங்கையுடன் மிக நெருங்கிய தொடர்புகளை வைத்துள்ள உறவினர், நண்பர் என்ற உறவுகளைக் கொண்டுள்ள, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இப்போது கொழும்பில் நிரந்தரமான தூதுவர்கள் இல்லை. இலங்கைக்கான இந்திய தூதுவராக இருந்த தரன்ஜித் சிங் சந்து, கடந்த ஜனவரி மாதம், புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டு, அமெரிக்காவுக்கான தூதுவராக மறு மாதமே நியமிக்கப்பட்டு விட்டார். அதற்குப் பின்னர், பதில் தூதுவராக வினோத் கே. ஜேக்கப் கடந்த மூன்று மாதங்களாகப் பணியில் இருக்கிறார். அதுபோலவே, இலங்கையில் சீன தூதுவராக இருந்த செங் ஷியுவான், கடந்த பெப்ரவரி மாதம், சீன வெளிவிவகார அமைச்சில் உயர் பதவியை ஏற்பதற்காக கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்று விட்டார். அவர் நாடு திரும்பிய பின்னர், கொழ…
-
- 0 replies
- 482 views
-
-
தனிமைப்படுத்தல் முகாம்களில் கொரோனா தொற்றும் ஆபத்து ! எவ்வித வசதிகளும் இல்லையென்கிறார் வைத்திய நிபுணர் முரளிவல்லிபுரநாதன் தனிமைப்படுத்தல் முகாம்களில் தனி நபர்களை தனிமைப்படுத்துவதற்கான எந்தவிதமான வசதிகளும் இல்லை. இவ்வறான நிலையில் தனிமைப்படுத்தல் முகாம்களில் கொரோனா தொற்றும் ஆபத்துக்கள் அதிகம் இருப்பதாக சமுதாய வைத்திய நிபுணர் முரளிவல்லிபுரநாதன் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- வடக்கில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலின் நிலைமைகள் எவ்வாறிருக்கின்றன? பதில்:- வடக்கில் யாழ்.மாவட்டத்தில் மட்டுமே கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர். சுவிஸ்சர்லாந்திலிருந்து வருகை தந்திருந்த மதபோதகருடன் தொடர்புகளைப் பேணியவர்களுக்…
-
- 0 replies
- 269 views
-
-
கொரோனா பெருந்தொற்றின் போது நாட்டில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும், அவர்களை தனிமைப்படுத்தும் முயற்சிகளும் அதிகரித்துள்ளன. முஸ்லிம் வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டிக்காரர்களிடம் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கும் இதுபோன்ற பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. இதுபோன்ற முஸ்லிம் எதிர்ப்பு காணொளிகள் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கர்நாடகா, பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களின் பல இடங்களிலிருந்து வெளிவருகின்றன. 'முஸ்லிம்கள் கொரோனாவைப் பரப்புகிறார்கள்' என்பது போன்ற வதந்திகளும் பரப்பப்படுகின்றன. ஜாம்ஷெட்பூரில் விஷ்வ இந்து பரிஷத்தின் பதாகை மற்றும் நாலந்தாவில் பஜ்ரங் தளத்தின் காவிக் கொடிகள் மூலம், காய்கனிகளை விற்ப…
-
- 0 replies
- 400 views
-
-
கரோனா காலத்தை ஏன் கிளாசிக்ஸ் வாசிப்புக்குச் செலவிட வேண்டும்? நாம் வெகுகாலத்துக்குப் பிறகு வீடுகளுக்குள் நீண்ட நாட்கள் வெளியே செல்ல முடியாமல் அடைகாக்கிறோம். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பெரும்பாலான மனிதர்கள் தொலைத்த அவகாசத்தின் கருவூலம் நம் முன்னர் இப்போது திறந்து கிடக்கிறது. துரத்தும் நோய் பயம், பொருளாதார நிச்சயமின்மை, துயரங்களுக்கு மத்தியில் இந்த அவகாசம் நம்மை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறது. சற்றுக் கூர்ந்து பார்த்தால் இங்கே நமக்குக் கற்பதற்கான, படிப்பினைக்கான, சுயபரிசீலனைக்கான இடம் இருக்கிறது. ஏனெனில், ஒரு தனிமனிதனும் சரி, ஒரு சமூகமும் சரி, ஒரு நெருக்கடியில்தான் தன்னைத் திரும்பிப் பார்த்து ஆழமாகப் பரிசீலிக்கிறது. எளிமையானதும் சௌகரியமானத…
-
- 0 replies
- 714 views
-
-
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், கோவிட்-19 தொற்றின் பரவலால் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம் மார்ச் 2ஆம் தேதி ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷவினால் கலைக்கப்பட்டதுடன், ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வேட்பு மனுத் தாக்கல் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்திருந்தது. எனினும், மார்ச் மாதம் 11ஆம் தேதி இலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார். இதையடுத்து, வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்த பின்னணியில் மார்ச் 20ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்ற…
-
- 0 replies
- 809 views
-
-
சீனா தலைமை தாங்குமா தனிமைப்படுத்தப்படுமா? சீனா 1979இல்அரச முதலாளித்துவ நாடாக மாறிய பின்னர் அதன் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியும் தொழில்நுட்பம் மற்றும் படைத்துறையில் அது மற்ற வல்லரசு நாடுகளுக்கு பெரும் சவாலாக வளர்ந்து கொண்டிருப்பதும் அமெரிக்கா உட்பட பல மேற்கு நாடுகளைச் சிந்திக்க வைத்தன. அமெரிக்கா சீனாவிற்கு எதிரான ஒரு கூட்டணியை உருவாக்க பல வகைகளில் முயல்கின்றது. ஜேர்மனி, இத்தாலி, கிரேக்கம் உட்பட பல மேற்கு நாடுகள் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவுடன் வர்த்தகம் செய்வதை பெரிதும் விரும்பின. கொவிட்-19 நோயின் பின்னர் கொவிட்-19 தொற்று நோய்க்குப் பின்னர் சீனா உலக அரங்கில் தனது நிலையை உயர்த்த முயற்ச்சி எடுக்கின்றது. அமெரிக்காவும் …
-
- 10 replies
- 1.5k views
-
-
-
- 6 replies
- 823 views
- 1 follower
-
-
-
- 4 replies
- 739 views
-
-
By K. Ratnayake 29 April 2020 இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம் ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையின் சிறுபான்மை அரசாங்கமானது இராணுவத்துடன் இணைந்து கெடுதியான, எதேச்சதிகாரமான தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை, ஒரு சதித்திட்டம் தீட்டப்படுதவற்கான சமிக்ஞை ஆகும். குறைந்த பட்சமேனும், கொவிட்-19 தொற்றுநோயை ஒரு அதிகார பறிப்பை முன்னெடுப்பதற்கான ஒரு சாக்குப் போக்காக பயன்படுத்துகின்ற அரசாங்கம், அரசை இயக்கும் நடவடிக்கையில் இராணுவத்தை இன்னும் முழுமையாக நுழைத்துவிடவும் —ஜனநாயக-அரசியலமைப்பு விதிமுறைகள் அனைத்தையும் அப்பட்டமாக மீறி— உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கும் செயற்படுகின்றது. அவ்வாறு செய்வதன் மூலம், …
-
- 1 reply
- 419 views
-
-
தொடரும் கோவிட் 19ம் அதனால் உருவாக்கப்பட்ட தனிமைப்படுத்தலும் முடக்கப்பட்ட நகரங்களும் மீண்டும் மெதுவாக அவதானமாக திறக்கப்பட்டு வருகின்றன. நகரங்கள், மாகாணங்கள், நாடுகள் இந்த புதிய கொள்கைவகுப்பில் மிக மிக அவதானமாக செயல்படுகின்றன, ஒருவரில் இருந்து ஒருவர் படிக்கின்றனர். ஹாங்கோங் NEW VIRUS TEST ARRANGEMENTS FOR ARRIVALS TO HK Update on COVID-19 testing procedures for inbound travellers arriving at Hong Kong International Airport! Starting from tomorrow (April 22), all asymptomatic passengers arriving in the morning must await test results before leaving the temporary test centre at AsiaWorld-Expo. For those arriving on afternoon fligh…
-
- 10 replies
- 2.2k views
-