Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கொரோனாவும் அன்றாடங்காய்ச்சிகளின் நிலையும் இந்திய அரசு அமைப்புசாராத் தொழில்கள் என்று 60 வகையான தொழில்களை வரையறை செய்துள்ளது. அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல வாரியத்தையும் அமைத்துள்ளது. ஆனால் அந்த அமைப்புசாராத் தொழிலாளர்கள் நல வாரியம் என்பது முழுக்க முழுக்க மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. தற்போது தொழில்துறை அமைச்சராக இருப்பவர் நிலோபர் கபில், இவரின் அமைச்சகத்தின் கீழ்தான் இந்த அமைப்புசாராத் தொழிலாளர் நலத்துறை வருகிறது. இதில் என்னென்ன துறைகள் வரும் என்று பார்க்கலாம். 1. விவசாயத் தொழிலாளர் நல வாரியம் 2. மீனவர் நல வாரியம் 3. கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் 4. சீர்மரபினர் நல வாரியம் 5. பழங்குடியினர் நல வாரியம் 6. ஆட்…

  2. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் - உன் எங்கே ? - ஸ்ரான்லி ஜொனி வட கொரியா கிம் ஜொங் - உன்னின் உடல்நலம் குறித்து இணையத்தில் ஊகங்கள் ஏராளம்.தனது பாட்டனாரான கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் தாபகர் கிம் இல் - சுங்கின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏப்ரில் 15 நடத்தப்பட்ட சூரியதினக் கொண்டாட்டங்களில் (Day of the Sun celebrations) அவர் காணப்படாததையடுத்து வதந்திகள் கிளம்ப ஆரம்பித்தன. ( இல் -- சுங் என்பதற்கு கொரிய மொழியில் - சூரியனாக வருவது(Becoming the Sun) என்று அர்த்தம் என்பதால் தாபகரின் தினம் சூரிய தினம் என்றுஅழைக்கப்படுகிறது.அந்த தினம் வடகொரியாவில் மிகவும் முக்கியமான விடுமுறை தினமாகும் ) தந்தையாரின் மரணத்தைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டில் நாட்டின் ஜனாதிபதியாக வந்த…

  3. கொரோனாவுக்கு பிறகான உலகில் அகதிகளின், தஞ்சம் தேடுபவர்களின் நிலை என்னவாக இருக்கும்? கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள உலக நாடுகள் திணறிவரும் சூழ்நிலையில் அகதிகள், தஞ்சம் தேடி வருபவர்களின் நிலை கேள்விக்குள்ளாகியுள்ளது. கொரோனா நெருக்கடி உலகையே புரட்டிப் போட்டிருக்கிறது. தேசத்தின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. தொழில்கள் முடங்கியுள்ளன. உலகப் பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள இருக்கிறது. கற்பனையிலும்கூட சாத்தியமானது எனக் கருதப்பட்ட வாழ்க்கை முறை இன்று அசாத்தியமானதாகி இருக்கிறது. கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி அரசுகள் மக்களின் மீது கண்கானிப்புகளை அதிகப்படுத்துவதும், அதி…

  4. குடிமக்களை கையேந்தி பிச்சை எடுக்க வைக்கும் அரசு தன்மானமும், சுயமரியாதையும் உள்ள மனிதர்கள் ஒருபோதும் பிச்சை எடுத்து உயிர் பிழைக்க விரும்புவதில்லை. வள்ளுவர் கூட “பிச்சை எடுத்துத்தான் ஒரு மனிதன் உயிர் வாழ வேண்டும் என்றால் குடிமக்களுக்கான பொருளைத் திரட்டித் தரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் நாடாளுபவன், அப்படிக் கடமையைச் செய்யாமையின் காரணமாக இரப்பவரைப் போலவே தானும் எங்கும் அலைந்து திரிந்து கெடுவானாக” என்கின்றார். ஆனால் இன்றோ அடுத்த வேளை உணவிற்கு யாராவது வழி செய்ய மாட்டார்களா என மக்கள் கதவுகளைத் திறந்து வைத்து காத்துக் கிடக்கின்றார்கள். ஊரடங்கு அறிவிக்கப்படும்வரை தன்னுடைய சொந்த உழைப்பில் சுயமரியாதையோடு வாழ்ந்தவர்கள் இன்று தங்கள்முன் உணவுப் பொருளோடு நீளும் தர்ம பிரபுக்கள…

  5. ஒரு தமிழ் பெண் IS தற்கொலைதாரியாக மாறிய அதிர்ச்சிகரமான சம்பவம் பற்றி கடந்த வருடம் IBC-தமிழ் வெளியிட்ட ஆவணம் இது. கடந்த வருடம் இதே காலப்பகுதியில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் இந்த தமிழ் பெண்ணும் சம்பந்தப்பட்டிருந்தார். அந்தத் தமிழ் பெண் ஏன் ஐ.எஸ் தீவிரவாதியாக மாறினாள்? மாறினாளா மாற்றப்பட்டாளா? யார் அவளை தற்கொலைதாரியாக மாற்றியது? https://www.tamilwin.com/srilanka/01/244232?ref=rightsidebar

  6. உலகமெங்கும் கொரோனா நோய்த் தொற்று ஒரு காட்டாற்று வெள்ளமாக தன் பாதை எங்கும் பெரும் அழிவுகளை ஏற்படுத்திச் சென்று கொண்டிருக்கின்றது. உயிர் வாழும் உரிமை என்பது பணம் படைத்தவனுக்குத்தான் என்று விதி செய்து வைத்திருக்கும் முதலாளித்துவம், இன்று தன் ஆட்சியின் கீழ் வாழும் மக்களை நிர்க்கதியாய் அம்போவென விட்டிருக்கின்றது. தன்னை அழிவே இல்லாத கடவுள் என்று பிரகடனம் செய்த முதலாளித்துவம் தன் அரிதாரங்களை எல்லாம் களைந்து, அழுகி புழு பிடித்த அதன் உடலை துர்நாற்றத்தோடு உலகுக்கு காட்சிப்படுத்தி உள்ளது. இத்தனை நாளாக அதைக் கருவறையில் வைத்து பூசித்து வந்த அதன் துதிபாடிகள் கூட அதன் அருகில் செல்ல முடியாமல் அதை எப்படி கொன்று புதைப்பது என்று ஆலோசித்துக் கொண்டிருக்கின்றார்கள். முதலாளித்துவ சமூகத்தில…

  7. `சர்வதேச கடல் சட்டம் அனுமதிக்கும் அந்தப் பகுதியிலும் தங்களின் கப்பல் செல்லும்’ என அமெரிக்கா தெரிவித்துள்ளது. தெற்கு சீன கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் நுழைந்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகமே கொரோனா வைரஸால் ஸ்தம்பித்துள்ள நிலையில் இருநாடுகளுக்கு இடையே மோதல் போக்கு வலுப்பெற்று வருகிறது என்றும் இதனால் பதற்றம் அதிகரிக்கும் என்பதும் ராணுவ ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. ’யூ.எஸ்.எஸ் அமெரிக்கா’ மற்றும் யு.எஸ்.எஸ் பங்கர் ஹில் ஆகிய போர் கப்பல்கள், மலேசியாவின் கடல் எல்லைக்குள் நுழைந்தது. அதே நேரத்தில் சீனக் கப்பல் ஒன்றும் அந்தப் பகுதியில், கடந்த சில நாள்களாக நிலைகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சீனா மற்றும் ஆஸ்திரேலியப் போர் கப்பல்களும் அருகாமையில் …

  8. எம்.டி.லூசியஸ் அமைதியாய் ஆனந்தமாய் ஆர்ப்பரிப்பின்றி இயங்கிக்கொண்டிருந்த இலங்கை தீவு, அன்று ஆட்டம் கண்டு போனது. ஆண்டவரின் அமைதியான இல்லத்தில் ஓலக்குரல்களும், அழுகையும், இரத்த வெள்ளமும், சிதைந்து கிடந்த சடலங்களும், உயிருக்காக பேராடிய உயிர்களின் வலியும் இன்றும் கண்கள் முன் வந்து செல்கின்றன. யாருமே நினையாத, எதிர்பாராத சம்பவம் இடம்பெற்ற இரத்தக்கறை படிந்த நாள் அதுவாகும். பயங்கரவாதி முஹமட் சஹ்ரான் குழுவினரால் மிருகத்தனமாக மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இதேபோன்ற ஒரு நாளில் தான் நடத்தப்பட்டன. இன்றுடன் வருடமொன்று நிறைவடைகின்ற போதும், பயங்கரவாதி சஹ்ரானால் ஏற்படுத்தப்பட்ட காயங்களும் வடுக்களும் இன்றும் வரலாற்றின் கறுப்பு புள்ளியாக சுமந்து…

    • 1 reply
    • 479 views
  9. கொரோனா வைரஸிலிருந்து தப்பிப்பது எப்படி? கொரோனா வைரஸுக்கு தீர்வு என்ன? என உலகமே தேடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வைரஸை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார் என்பது குறித்து பலரும் கவனம் செலுத்தவில்லை. உண்மையில் மனிதர்களுக்கு பரவும் கொரோனா வைரஸ் 60 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்பதும் அதை செய்தவர் ஒரு பெண் என்பதும் நம்மில் பலருக்கு தெரியாது.

    • 1 reply
    • 767 views
  10. தப்புத் தாளங்கள்: மாட்டிக் கொண்ட சிறீலங்கா கோவிட்-19 உருவாக்கியுள்ள பெரும் சவால்களை எதிர்கொள்ள அரசுகளும் அதன் தலைவர்களும் தமது தேவைக்கேற்றவாறு பலமுனை பரப்புரைகளை முன்னெடுத்து தமது மக்களை ஏய்க்கும் பல பணிகளை திரைமறைவில் முன்னெடுத்து வருகின்றன. அதில் சிறீலங்கா தலைமைகளுக்கும் எவ்வித விதிவிலக்கும் இல்லை. இதைத் தான் அவர்கள் எப்போதும் செய்கின்றனரே என்கிறீர்களா? சமீபத்தில் ஒரு கணணி வலையத்தில் வந்த செய்தி ஒன்று சிறீலங்காவில் மேற்கோள் காட்டப்பட்டு அறிவார்ந்த சமூகம் மத்தியில் பேசப்பட்டது. ஆனால் அதன் பின்புலத்தைத் தேடினால் வெளிநாட்டில் இருந்து வெளியாகும் நம்பிக்கையான சிறந்த இணையவெளி போன்ற மாயயையில் மறுபுறத்தில் சமீபத்தில் பதிவுசெய்யப்பட்டு ஆரம்பிக்கபட்டு சிறீலங்கா இராணுவ …

  11. இலங்கை ஊரடங்கு சட்டத்தின் சம காலப் போக்கு. – ச.றொபின்சன்.. உலகளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக, கொரோனா வைரஸின் தாக்கம் உலகின் பல நாடுகளையும், அனைத்து வகையிலும் பாதிப்பிற்குள்ளாகி, மக்களின் உயிரை பறித்த வண்ணம் இருக்கிறது. இறந்த மனித உடல்களை புதைக்கக்கூட இடமில்லாத நிலை காணப்படுகின்றது. இன்று பெரிய அளவில் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளே கொரோனா வைரஸ் என்ற கொடிய நோயில் இருந்து மீண்டு வருவதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்தும் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறிகொடுத்த வண்ணமே உள்ளன. பசி என்று அழும் போது நோய்வாய்ப்பட்ட தாய், தான் பெற்றெடுத்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டமுடியாமல் கதறி அழும் காட்சி ஒரு பக்கம், பெரும் பணம் படைத்த வல்லாதிக்க நாடுகளின் தலைவர்கள…

    • 1 reply
    • 407 views
  12. >சமுதாயத்தில் கணனியையும் இணையத்தொடர்பையும் பயன்படுத்துவதற்கான வசதியைக்கொண்ட பிரிவினருக்கும் அந்த வசதியைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாத பிரிவினருக்கும் மத்தியிலான இடைவெளியே ' டிஜிட்டல் பிளவு ' ( Digital divide ) என்று அழைக்கப்படுகிறது. இந்த பிளவு நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையில் பாரியளவில் அகலமானதாக இருப்பதுடன் நகர்ப்புறங்களிலும் கூட வசதிபடைத்தவர்களுக்கும் வசதியில்லாத பின்தங்கிய மக்கள் பிரிவினருக்கும் இடையில் இடைவெளி பாரியதாக இருக்கிறது. புதிய கொரோனாவைரஸ் உலகெங்கும் பரவத்தொடங்கியதும் உலக நாடுகள் தொற்றுநோயைக்கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை (Lock down) நடைமுறைப்படுத்துகின்றன. அரசாங்க சேவையில் உள்ள ஊழியர்களும் தனியார்துறை ஊழியர்களும் அலுவலகங்களு…

    • 0 replies
    • 278 views
  13. பெய்ஜிங், (சின்ஹுவா )</strong> 100 வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர், ஆஸ்திரிய -ஹங்கேரிய சாம்ராச்சியத்தின் முடிக்குரிய வாரிசான கோமகன் பிரான்ஸ் பேர்டினண்ட் சரஜீவோவில் கொலை செய்யப்பட்டதையடுத்து தோன்றிய நெருக்கடியை கையாளுவதில் அன்றைய பெரிய வல்லரசுகள் இழைத்த தொடர்ச்சியான புவிசார் அரசியல் தவறுகள் முதலாவது உலகப்போருக்கு வழிவகுத்தன. இன்று உலகம் ஏற்கெனவே உலகளாவிய ' போர் ' ஒன்றுக்குள் மூழ்கிக்கிடக்கிறது. இத்தடவை எதிரி கண்ணுக்குப்புலப்படாத -- முன்கூட்டியே அறிந்திராத ஒரு வைரஸாக இருக்கின்ற போதிலும், பயங்கரமான புவிசார் அரசியல் விளையாட்டுக்களின் பேயுரு இன்னமும் வானில் உலாவுகிறது. அது ' போரை ' மேலும் படுமோசமானதாக்கும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது. கொரோ…

    • 0 replies
    • 384 views
  14. கொரோன வைரஸ் எவ்வாறு பரவியது என்பது குறித்த பல கதைகளின் மையமாக உள்ள வுகானின் ஆய்வுகூடம் குறித்து இரண்டு வருடங்களின் முன்னரே அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. 2018 ஜனவரியில் சீனாவிற்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் வுகானின் வைரஸ் தொடர்பான நிறுவகத்தின் ஆய்வுகூடத்தின் பாதுகாப்பின்மை குறித்து எச்சரித்துள்ளனர் என வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டு;;;ள்ளது. வெளவால்களில் இருந்து கொரோனா வைரஸ் குறித்த ஆபத்தான ஆராய்ச்சிகள் இடம்பெறுகின்றன என அமெரிக்க தூதரக அதிகாரிகள் எச்சரித்தனர் என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகத்தின் முதலாவது எச்சரிக்கையில் வெளவால்களிற்கும் வைரசிற்கும் இடையிலான தொ…

  15. டெங்கு, சிக்குன்குனியாவைப் போன்று கொவிட் -19 கொரோனாவைரஸ் தொற்றுநோயும் சமூகத்திற்குள் தொடர்ந்து நீடிக்கும். ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலங்களில் அது தலைகாட்டும் என்று கூறியிருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார சேவையின் ஒரு சிரேஷ்ட உறுப்பினரான மருத்துவ நிபுணர் பாலா பி.ராஜேஸ், தடுப்பு மருந்து தயாரானதும் மூத்த பிரஜைகள் உட்பட சமுதாயத்தில இந்த நோயினால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கே அதை பயன்படுத்துவதில் முன்னுரிமை காட்டவேண்டும் என்று சிபாரிசு செய்யப்படக்கூடும் என்று குறிப்பிட்டிருக்கிறார். சென்னை மருத்துவ கல்லூரியின் பழைய மாணவரான அவர், கொவிட் - 19 நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் பிரதமர் போறிஸ் ஜோன்சன் தன்னை பூரணமாகக் குணப்படுத்…

    • 0 replies
    • 265 views
  16. காப்ரேட் நோயும் காப்பாற்றப்படும் இயற்கையும் – க. பத்திநாதன்… April 14, 2020 கடந்த நான்கு மாதத்திற்குள் பிறந்து கதைக்கப் பழகிய குழந்தைகள் எல்லாம் முதலில் உச்சரித்துப் பழகிக்கொண்ட வார்த்தை “ கொரோனா” என்பதாகவே இருக்க வேண்டும். ஆம் இந்த நூற்றாண்டிலும் சரி இனி வரப்போகின்ற நூற்றாண்டுகளுக்கும் சரி இவ்வார்த்தையும், இதன் விளைவுகளும் வரன்முறையற்ற வரலாற்றுச் சம்பவங்களாகப் பதியப் போகின்றமை உறுதி. இயற்கையை இயற்கையாக மதிக்காத, பிற உயிர்களை உயிர்களாக மதிக்காத, மனிதனை மனிதனாக மதிக்காத மனித கூட்டங்களின் தனிலாபக் கொள்கை வகுப்புக்கள், அது சார் ஏகாதிபத்திய கொள்கை ஆக்கிரமிப்புக்கள் என்பன இயற்கையினை பின்னோக்கித் தள்ளுதலில் முன்னோக்கி வளர்ந்த இன்றைய சம காலச்சூழலிலே மனி…

    • 1 reply
    • 380 views
  17. `குளிர்காலங்களில் மீண்டும் கொரோனா.. 2022 வரை சமூக இடைவெளி!’ - ஹார்வர்டு ஆய்வு செல்வதென்ன? கொரோனாவை முற்றிலும் ஒழிக்க 2022 வரை சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனப் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி சர்வதேச அளவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,98,535- ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,26,612 - ஆகவும் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாகப் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் வெளியில் நடமாடுவது குறைந்தபாடில்லை. குறிப்பாக இந்தியாவின் சில பகுதிகள…

  18. கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு அஜித் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபா நிதி உதவி! கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு முன்னணி நடிகரான அஜித் ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கியிருக்கிறார். கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கலாம் என இந்திய அரசும், தமிழக அரசும் அறிவித்தன. இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்ச ரூபாய் நிதி உதவி கொடுத்து, தமிழ் திரையுலகின் பங்களிப்பை தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலரும் அரசிற்கு நிதி வழங்குவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். தற்போது நீடித்து வரும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கும் நடிகர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி வழங…

    • 4 replies
    • 552 views
  19. ஒற்றைக் கட்சி மார்க்சிய லெனினிய சோசியலிச குடியரசான சீனாவின் பிடியிலிருந்து விலகி, தனி அடையாளத்தை நிலைநிறுத்தப் போராடிக் கொண்டிருக்கும் ஜனநாயக நாடு தைவான். கிழக்கு ஆசியாவில், சீனாவிலிருந்து சுமார் 80 மைல் தொலைவில், 35 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும் தீவு நாடு. ஆனால், அந்த நாட்டுக்கான அங்கீகாரத்தை வழங்கவோ, அந்நாட்டின் முயற்சிகளில், வெற்றிகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவோ, அந்நாட்டுக்கு உதவவோ, அதன் எச்சரிக்கைகளைக் கேட்டுக்கொள்ளவோ உலகம் தயாராக இல்லை. ஒரே காரணம் சீனா. சீனா - தைவான் இடையேயான பிரச்னை, அந்த இருநாடுகளைத் தாண்டி, தற்போது கொரோனா எனும் கொடிய நோயின் பிடியில் சிக்கியிருக்கும் உலக நாடுகள் எல்லாவற்றையும் பாதித்திருக்கிறது. காரணம் உலக சுகாதார நிறுவனம் (W…

    • 4 replies
    • 829 views
  20. தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கு ஒர் பகிரங்கக் கடிதம் – நிலாந்தன்.. ஒரு பொதுத் தேர்தலை நோக்கி நீங்கள் தயாராகிக் கொண்டிருந்த பொழுது அதற்கென்று காசு திரட்டி, சுவரொட்டி அடித்து, ஒட்டி, சின்ன சின்ன கூட்டங்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் உங்களுடைய தேர்தல் வியூகங்கள் எல்லாவற்றையும் கோவிட்-19 குழப்பி விட்டது. இதனால் உங்களுக்குப் புதிய செலவுகள் ஏற்பட்டன. பழைய நிகழ்ச்சி நிரலை மாற்ற வேண்டி வந்தது எனினும் அதை நீங்கள் ஒரு நட்டமாக பார்க்கவில்லை என்றே தெரிகிறது. ஏனெனில் கோவிட்-19 கொண்டு வந்திருக்கும் அனர்த்த நிலைமைகளைக் கையாண்டு நீங்கள் தேவைப்படும் மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறீர்கள். அதைப் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரப்புகிறீர்கள். அதனால…

    • 14 replies
    • 2k views
  21. தமிழர் கடலில் நடப்பது என்ன? - மறவன்புலவு க.சச்சிதானந்தன் உடன் நேர்காணல்

  22. வெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம் April 10, 2020 நடேசன் 77 . Views . ‘உலகை ஆண்டவர்கள் நாம்’ என்று பொறி பறக்கும் மேடைகள் ஒரு புறம். ‘சீனாக்காரர் கொரோனவை பரப்புவர் என சிலப்பதிகாரத்திலேயே கூறப்பட்டு இருக்கிறது’ என சமூக வலைத்தள கட்டுக்கதைகள் மறுபுறம்.. நமது உணவு முறைகளும் , வாழ்க்கை பழக்க வழக்கங்களும் என்ன நடந்தாலும் எங்களை பாதுகாக்கும் என்ற வீண் பெருமிதங்களுக்கும் பஞ்சமில்லை. வைரஸ் போல கட்டவிழ்த்து விட பட்டிருக்கும் கட்டுக்கதைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் எப்போதும் போல் இப்போதும் பஞ்சமில்லை. தமிழ் பேசும் மக்களான நாங்கள் இயற்கையாகவே பிறரை விட பலமானவர்கள்தான் என்ற விம்பமே இந்த கூச்சல்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும்…

  23. உன்னை பார். உங்களைச் சுற்றிப் பார். உலகைப் பார். எல்லா சேவைகளுமே பெரும்பாலும் நின்றுவிட்டன. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்படுகின்றன. நாங்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இவை எல்லாவற்றிற்கும் காரணம் கொரோனா வைரஸ். நடந்தது என்ன? நூறு நாட்களுக்கு முன்பு, ஒரு நுண்ணுயிர் நம் உலகிற்கு வந்தது. அது நம்மில் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இது மிக வேகமாக பரவியது, சீனாவின் வூஹானில் இருந்து சில வாரங்களில் நம் வாழ்வில் ஓடியது.நேரமும் தூரமும் இனி தேவையில்லை. எங்கள் வாழ்க்கை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது.மார்ஷல் மெக்லூஹான் சொன்னது சரிதான். கனடா தகவல் தொடர்பு கோட்பாட்டாளர் உலகமயமாக்கப்பட்ட சமூகத்தைப் பற்றி சரியாக கூறி இருந்தார். அறிவியலும் த…

    • 2 replies
    • 473 views
  24. ஒடுக்குமுறை அற்ற ஆரோக்கியமான மாற்றங்களே அவசியமானவை – கீதாநந்தி… April 10, 2020 காலங்களுக்கும், தேவைகளுக்கும் ஏற்றவாறு மாற்றங்கள் நிகழ வேண்டியது அவசியமானது. ஆனால் அம் மாற்றம் ஒடுக்குமுறை அற்றதாக, ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும் அல்லவா? தற்போது உலகமே ஒரு நோய்த் தொற்றால் அவதியுற்று கொண்டும் அதற்கான தீர்வுகளை சிந்தித்தும், செயற்படுத்தியும் கொண்டிருக்கும் இவ்வேளையில். எமது நாட்டிலும் அதற்காக பல தரப்பினரும் தமது அர்ப்பணிப்பை வழங்கி வருகின்றமை மறுக்க முடியாத உண்மை. நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அனைவரும் வீடுகளுக்குள் இருக்க வேண்டப்பட்டுள்ளோம். இந்நேரத்தில் “அனைத்து அரசு ஊழியர்களும் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும்” என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கல்வ…

  25. வீ.பிரியதர்சன் நாம் கடைகளுக்கு பொருட்கள் வாங்கச் செல்லும் போது நாங்கள் சமூக இடைவெளியுடன் நடந்துகொள்ளாவிட்டால் எனக்கு அருகில் இருக்கும் நபர் சமூக இடைவெளி( social distance) உடன் நிற்குமாறு ஏசுகிறார் அதனால் எமது நாட்டில் இதனை கட்டுப்படுத்த முடிகிறது என ஜேர்மனில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தெரிவிக்கிறார். கொரோனா எனப்படும் கொவிட் 19 நோய்த் தொற்று உலகநாடுகளில் பரவி இதுவரை 1,431,533 பேரை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதுடன் 82,058 பேரை பலியெடுத்துள்ளது. இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்காத போதிலும் பல உலக நாடுகள் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் முழு முயற்சியுடன் இறங்கியுள்ளன. இருந்தாலும் மனிதர்களை பலியெடுக்கும் இந்த கொரோனா நோய்த் தொற்று ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.