நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
13 விடயங்களை அடிப்படையாகக்கொண்டு தமிழ் கட்சிகளுடன் பேச நான் தயாரில்லை : கோத்தாபய ராஜபக்ஷ விசேட செவ்வி வடக்கில் தமிழ் கட்சிகள் தயாரித்துள்ள 13 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் அந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன். அதில் எந்த பயனும் இல்லை. நான் யதார்த்தத்தையே பேசுவேன். இந்த 13 விடயங்களை அடிப்படையாக கொண்டு அவர்களை சந்திப்பதற்கு கூட தயார் இல்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு என்னவென்று கேட்டால் அதற்கு பதிலளிக்க தயார். அப்படியாயின் தமிழ்க் கட்சிகளை சந்தித்து பேசலாம் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஆனால் 13 விடயங்கள் தொடர்பில் பேசமாட்டேன். இதனை தெளிவாக எழுதுங்கள். இந்த ஆவணத்தில் உள்ள விடயங்களை பேசுவதற்கு தயார…
-
- 2 replies
- 313 views
-
-
படத்தின் காப்புரிமைORE HUIYING Image captionமலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக் கண்மூடித் திறப்பற்குள் அனைத்தும் நடந்து முடிந்திருக்கிறது. மலேசியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் 12 பேரை கைது செய்துள்ளது அந்நாட்டுக் காவல்துறை. இது தொடர்பாக அரசுத் தரப்பை நோக்கி பல்வேறு தரப்பினரும் பலவிதமான கேள்விகளை தொடுத்து வரும் நிலையில், விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 12 பேரில், பி.சுப்பிரமணியம் என்பவர் சார்பாக, தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு ஒன்றை அக்டோபர் 21ஆம் தேதி (திங்கட்கிழமை) விசாரிக்க உள்ளது கோலாலம்பூர் உயர்நீதிமன்றம். இதுபோன்று மேலும் சில வழக்குகள் தொடுக்கப்படலாம் என எதி…
-
- 0 replies
- 409 views
-
-
அவர்களை சிறைவைக்க உத்தரவிட்டதும் உங்களை விடுதலை செய்த நீதிமன்றமே Maatram Translation on October 17, 2019 பட மூலம், AP Photo/Eranga Jayawardena, NEWS YAHOO தான் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டால் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்து இராணுவ சிப்பாய்களையும் விடுதலை செய்வதாக தன்னுடைய முதலாவது கூட்டத்தின்போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான கோட்டபாய ராஜபக்ஷ கூறியிருந்தார். இந்த இராணுவத்தினர் பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர் என்று மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கூறுகின்றார். தடுப்பில் இருக்கும் இராணுவத்தினர் தொடர்பாக கோட்டபாய ராஜபக்ஷ கூறாத வ…
-
- 2 replies
- 452 views
-
-
சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்ட அமைப்புகளுக்கு பணம் வருவதைத் தடுப்பது மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்கும் செயல்களில், பிப்ரவரி 2020க்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பாகிஸ்தான் எட்டாவிட்டால், தவறிழைத்தோரை சேர்க்கும் கருப்புப் பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க வேண்டியிருக்கும் என்று எஃப்.ஏ.டி.எஃப். எச்சரித்துள்ளது. எஃப்.ஏ.டி.எஃப் என்பது நிதி செயல்பாடுகளை கண்காணிக்கும் குழு. பண மோசடியை தடுக்கவும், பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்கப்படுவதை தடுக்கவும் ஜி7 அமைப்பு அமைத்த குழு. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீனாவின் எஃப்.ஏ.டி.எஃப் தலைவர் சியாங்மின் லியு, "பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தடுக்கும் விவகாரத்தில் போதிய முன்னேற்றத்தை அடையவில்லை. அந்நாட்டின் புதிய அரசாங்கம், சிறிய குறிப்ப…
-
- 1 reply
- 697 views
-
-
நாம் தமிழர்களுக்கு அரசியல் தீர்வுத்திட்டத்தை வழங்க முற்படும்போது அது பெரும்பான்மையினத்தவர்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாத விதத்தில் வழங்க வேண்டும். தமிழ் மக்களுக்கு அரசி யல் தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் அது மஹிந்த ராஜபக் ஷ மூலம் மாத்திரமே கிடைக்கும். அப்போது தான் பெரும்பான்மை மக்களும் அதனை ஏற்றுக்கொள்வார்கள் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக் ஷ தெரிவு செய்யப்பட்டால் கட்டாயம் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை வலுவடை யச் செய்வதோடு அவர்களின் அனைத்து பொருளாதார பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார் எனவும் குறிப்பிட்டார். …
-
- 1 reply
- 678 views
-
-
இலங்கையில் 41 வருடங்களுக்கு பின் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், இன்றையச் சூழலில் தமிழக மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையில் உள்ள உறவினைப் மேலும் பலப்படுத்துமா? 1942ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானிய படைகளால் முதல் முறையாக யாழ்ப்பாணம் பலாலி பிரதேசத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் பலாலி விமான நிலையம் இலங்கை படையினரிடம் கையளிக்கப்பட்டது. 1947ம் ஆண்டு முதல் முறையாக பலாலியில் இருந்து இந்தியாவிற்கு விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 418 views
-
-
இதனால்தான் கொலை நடந்தது : Formar CBI Officer Ragothaman Interview About Rajiv Gandhi Murder | LTTE.
-
- 0 replies
- 407 views
-
-
உலக நாடுகள் அனைத்துமே உளவுத்துறையை கொண்டிருக்கும். சனநாயக நாடுகள் தேர்ந்து எடுக்கும் அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றும் எண்ணம் நோக்கம் கொண்டவர்களாக அநேகமாக இருப்பார்கள். இன்றைய அமெரிக்க அதிபர் முன்னைய அமெரிக்க அதிபர்களில் இருந்து இந்த விடயத்தில் மாறுபட்டு உள்ளார். அவர், தன்னை ஒரு மன்னராக பார்ப்பதுடன் அவ்வாறான உலக தலைவர்களை புழாரம் செய்து வருகிறார். அரச உத்தியோகத்தர்கள் ஒரு நிலையான வேலையை கொண்டவர்கள். இந்த நிலையற்ற வர்த்த உலகில் அது ஒரு முக்கிய பயனுள்ள பொறுப்பு. ஆனால், அதை விட அவர்கள் மக்களுக்கு சேவையாற்றும் விருப்பு உடையவர்காளாக மற்றும் கட்சி சார்பற்ற தேசப்பற்று உடையவர்களாக இருக்கவேண்டும். சிலவேளைகளில் இவ்வாறான அரச உத்தியோகத்தர்கள் சில நாட்டு இரகசியங்களை பரகச…
-
- 5 replies
- 1.3k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images சிரியா குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கொள்கைகள், தனக்கு தானே அவர் உருவாக்கிக் கொண்ட பேரழிவாக ஆகலாம் - 2020 தேர்தலில் அவருக்கு தோல்வியை ஏற்படுத்துவதாக இருக்கலாம் என்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் உதவிச் செயலர் பி.ஜே. கிரவ்லே. சிரியா தொடர்பான டொனால்ட் டிரம்ப்பின் சமீபத்திய முடிவுகளை உள்ளடக்கிய ஷரத்து எதுவும், அவருடைய குற்றச் செயல்கள் மற்றும் தவறான செயல்பாடுகளின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ள பதவி நீக்கத் தீர்மானத்தில் இருக்காது. ஆனால் துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானிடம் சரணாகதி அடைவதைப் போன்ற அவருடைய நடவடிக்கையைத் தொடர்ந்து ஏற்படும் நிகழ்வுகள், டிரம்பின் அதிபர் பதவியின் முடிவுக்கான தொடக்கமாக இரு…
-
- 0 replies
- 397 views
-
-
உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று; இந்திய விமானம் முதலாவதாக தரையிறக்கம் ஒருபுறம் நாட்டின் போக்குவரத்துத்துறை அபிவிருத்தி; மறுபுறம் காணிகளை இழந்தோரின் தீர்க்கப்படாத துயரம் "பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்படும் நிலங்களுக்கான நட்டஈடு தருவதாக அரசாங்கம் எங்களுக்கு அறிவித்தல் தரவில்லை. உண்மையில் ஒரு ஜனநாயக நாடெனில், மக்களிடம் விருப்பங்களைக் கேட்க வேண்டும். ஆனால், மக்களின் அபிப்பிராயங்களை எங்களிடம் கேட்கவில்லை" என பலாலி விமான நிலையத்துக்கான நுழைவாயில் அமைக்கப்படும் நிலங்களின் உரிமையாளரான கதிர்காமநாதன் கூறுகின்றார். (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்பட்டு, யாழ். விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று 17 ஆம் திகதி திறந்து …
-
- 0 replies
- 343 views
-
-
நெருக்கமான ஜனாதிபதி தேர்தல் போட்டியில் கிளப்பப்படும் புலிப்பூச்சாண்டி இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையிலான போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததற்கு பின்னர் தமிழர்கள் சம்பந்தப்பட்ட பயங்கரவாத சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என்ற போதிலும், சிங்கள பெரும்பான்மை அரசியல் கட்சிகளினால் தேர்தல் ஒன்றுக்கு முன்னதாக எப்போதுமே புலிப்பூச்சாண்டி கிளப்பப்படுகிறது. நவம்பர் 16 நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலிலும் நிலைமை வேறுபட்டதாக இல்லை. தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத்தொடங்கியிருக்கும் நிலையில், நாட்டின் பாதுகாப்பையே பிரதான பிரச்சினையாக மக்கள் முன்கொண்டுசெல்லும் கடும்போக்காளரான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச அக்டோபர் 14 முன்னாள் விடுதலை புலி…
-
- 0 replies
- 232 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களான கோத்தாபய, சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க ஆகிய மூவரும் எனக்கு சவாலே இல்லை. ஆனால் இனத்தையும், மதத்தையும் முன்னிலைப்படுத்தி காலவோட்டத்தில் வெவ்வேறு அனுகுமுறைகள் ஊடாக ஆட்சியில் அமர்வதற்கு தந்திரங்களைச்செய்ய முயலும் இம்முத்தரப்பினையும் மக்கள் அடையாளம் காண்பார்களா என்பதே எனக்குள்ள சவாலான விடயமாகவுள்ளது என இலங்கை சோசலிஷ கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கலாநிதி அஜந்த பெரேரா வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- துறைசார் நிபுணராகவும், சூழலியலாளராகவும் செயற்பட்டு வந்த உங்களுக்கு அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என்ற சிந்தனை எழுந்தமைக்கு காரணம் என்ன…
-
- 0 replies
- 243 views
-
-
ஈழத் தமிழர்களும் தமிழக அரசியல் சூழலும். - வ.ஐ.ச.ஜெயபாலன் . ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கட்ச்சிகளுக்கும் நன்றிகூறி அவர்களது ஆதரவு நமக்கு தொடர்ந்தும் அவசியம் என்பதை வலியுறுத்த வேண்டிய தருணமிது. அதே சமயம் ஈழத் தமிழர்களை உங்கள் தேர்தல் அரசியல் பிழவுகளுக்குள் இழுத்து விடவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. சரி பிழைகளுக்கு வெளியில் ஈழ விடுதலைத் தலைவர்களையும் ஈழத் தமிழர்களையும் தமிழக தேர்தல் அரசியலிலும் மோதல்களிலும் ‘ பிராண்ட்’ போல கீழ்ப்படுத்திப் பயன்படுத்துவதை தமிழக அரசியல் கட்ச்சிகள் நிறுத்த வேண்டும் என்று கேட்க்க வேண்டிய கடைசித் தருணங்கள் இவை. . ஈழதமிழர்களையும் போராளிகளையும் 1970 பதுகளில் இருந்து ஆதரித்தவர்களுள் நிதியும் இடமும் தந்து பாத…
-
- 1 reply
- 716 views
-
-
'உலகில், மாபெரும் ஜனநாயகத் திருவிழா' - இது, இந்தியத் தேர்தலைக் குறித்து சொல்லப்படும் வாக்கியம். மக்கள் தொகையில் உலக அளவில் இரண்டாமிடத்தில் இருக்கும் இந்தியாவில், வாக்களிக்கச் செல்லும் மக்களின் எண்ணிக்கை உலகின் எந்த நாட்டைவிடவும் அதிகம். ஆனால், இந்தியாவைவிட அதிகமான மக்கள்தொகை உள்ள நாடான சீனாவைப் பற்றி ஏன் அப்படிச் சொல்வதில்லை? ஏனெனில், சீனாவில் தேர்தலும் இல்லை, ஜனநாயகமும் இல்லை. ஆனால், 70 ஆண்டுகளாக ஒரே கட்சி ஆட்சியில் இருக்கும் சீனாவில், சோஷியலிச ஜனநாயகம் நிலவுவதாக சீனா சொல்லிக்கொள்கிறது. 1949-ம் ஆண்டு, சீனாவில் மாவோ தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் அமர்ந்தது. அன்றிலிருந்து இன்று வரை, 'ஒரே நாடு ஒரே கட்சி' எனப் பயணித்துக்கொண்டிருக்கிறது சீனா. சீனாவி…
-
- 1 reply
- 454 views
-
-
துருக்கி, இராக், சிரியா, இரான் மற்றும் ஆர்மீனியா எல்லைகளை ஒட்டிய மலைப் பகுதிகளில் 25 முதல் 35 மில்லியன் வரையிலான குர்து இன மக்கள் வசிக்கின்றனர். மத்திய கிழக்கில் நான்காவது பெரிய இனத்தவர்களாக அவர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கென சொந்தமாக ஒரு நாடு இருந்தது கிடையாது. அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இப்போது தென் கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வடக்கு இராக், வடமேற்கு இரான் மற்றும் தென்மேற்கு ஆர்மினியா பகுதிகளாக உள்ள மெசபடோமிய சமவெளி மற்றும் மேடான பகுதிகளைச் சேர்ந்த பூர்விக மக்களில் ஒரு இனத்தவர்களாக குர்து மக்கள் உள்ளனர். இப்போது அவர்கள் இனம், கலாச்சாரம், மொழி அடிப்படையில் ஒன்றுபட்ட தனி சமுதாயத்தினராக இருந்தாலும், இயல்பாகப் பயன்படுத்தும் பேச்சு மொழி எது…
-
- 1 reply
- 811 views
-
-
நுவரெலியா மாவட்டத்தில் முதன்மை மொழி தமிழ் இலங்கையின் அரசியலமைப்பின்படி தமிழ்மொழி பெற்றுள்ள அந்தஸ்துகள் எவை என்பதும், நமது தாய்மொழியான தமிழைப் பயன்படுத்தும் சட்டபூர்வ உரிமை எந்த அளவில் உள்ளது என்பது பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டின் நிர்வாகத்தை வழிநடத்தும் விதிமுறைகளடங்கிய பெறுமதி வாய்ந்த சட்டநூலாகும். அதிலுள்ள விதிகளை அப்படியே கடைப்பிடித்து செயற்படுத்த வேண்டுமேயன்றி அதனை மீறிச் செயற்படுவதோ, புறக்கணிப்பதோ சட்டப்படி குற்றமாகக் கருதப்பட வேண்டும். அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மொழியுரிமை தமிழைப் பொறுத்தவரை தொடர்ந்தும் மீறப்பட்டே வருகின்றது. தட்டிக் கேட்போர் எவருமற்ற நிலையே காணப்படுகி…
-
- 0 replies
- 500 views
-
-
உலகின் பல பாகங்களிலும் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அல்லாத பிற சமூகங்களுக்கு மத்தியில் சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். உலகில் வாழும் நால்வரில் ஒருவர் முஸ்லிம் எனும் அளவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் பிற மக்களுக்கு மத்தியில் சிறுபான்மையாகவே வாழ்ந்து வருகின்றனர். சிறுபான்மை முஸ்லிம்கள் பிற சமூகங்களுடன் சேர்ந்து வாழும் போது பல்வேறுபட்ட சமய, சமூக, பொருளாதார, அரசியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுவது? இந்தப் பிரச்சினைகளுக்கான மார்க்க ரீதியிலான தீர்ப்பை எப்படிப் பெறுவது? முஸ்லிம்களின் பாதுகாப்பையும் இருப்பையும் எப்படி உறுதி செய்வது என்பன முக்கிய சவாலாகத…
-
- 0 replies
- 590 views
-
-
பல்லவர்கள் சீனா, எகிப்து, ரோம் உள்ளிட்ட நாடுகளோடு வாணிபம் செய்ததற்கான சான்றுகள் இன்றும் மாமல்லபுரத்தில் இருக்கின்றன. இங்குள்ள கிருஷ்ணர் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் இந்திய-சீன உறவுக்கு சாட்சியாக இருக்கின்றன. தமிழர்களுக்கும் சீனர்களுக்குமான உறவென்பது பல நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டது. முதலாம் நூற்றாண்டிலிருந்தே சீனர்கள் காஞ்சிபுரம் வந்து சென்றதற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. “கி.மு 100-ம் ஆண்டில் கான்-டோ-ஓ என்னும் சீனப் பகுதியிலிருந்து கப்பல் மூலம் இரண்டு மாதங்கள் பயணம் செய்து சீனர்கள் காஞ்சி நாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். இரண்டு மாதங்கள் கப்பலில் பயணம் செய்தால் காஞ்சி நாட்டை அடையலாம். காஞ்சி பரந்தும், மக்கள் மிகுந்தும் பலவிதமான பொ…
-
- 0 replies
- 1k views
-
-
தோல்வி அடைவதையே நோக்கமாகக் கொண்ட போலி வேட்பாளர்கள் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஒக்டோபர் 09 புதன்கிழமை, பி.ப. 05:12 Comments - 0 இதுவரை கால வரலாற்றில், அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக, நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் அமைகிறது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 பேர் கட்டுப்பணம் செலுத்திய போதும், 35 பேர் மட்டுமே நேற்று முன்தினம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த 35 பேரில், பெரும்பாலானவர்கள் எதற்காகப் போட்டியிடுகிறார்கள் என்பதை, அவர்களால் மற்றவர்களுக்கு நியாயப்படுத்திக் கூற முடியுமா என்பது சந்தேகமே! அவர்கள், “வெற்றி பெற்று, நாட்டை ஆட்சி செய்வதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றோம்” எனக் கூறலாம். ஆனால், அவர்கள் வெற்றி …
-
- 2 replies
- 609 views
-
-
"சஜித்தே தமிழர்களுக்கு நியாயமான தீர்வளிப்பார்": திஸ்ஸ செவ்வி ரணசிங்க பிரேமதாஸ ஜனாதிபதியாகியதன் பின்னர் கட்சித் தலைமை பதவியை ஏற்பதற்கு ஜே.ஆரின் அரசியல் முதிர்ச்சியே காரணம் பிரிக்கப்படாத நாட்டில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு வடக்கு கிழக்கில் உள்ள பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வினை சஜித் பிரேமதாஸவே வழங்குவார் என்று அவரின் தேர்தல் பிரதான செயற்பாட்டதிகாரியும், ஐ.தே.கவின் முன்னாள் பொதுச்செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் அழைப்பினை ஏற்றுக்…
-
- 0 replies
- 333 views
-
-
புறக்கணிக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட தமிழர்கள் இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் ஒன்றாக மன்னார் மாவட்டம் விளங்குகின்றது. தேர்தல் தொகுதிகளில் வன்னிமாவட்டத்திலுள்ள மூன்று தொகுதிகளிலொன்றாகவும் இது இடம்பெறுகின்றது. இம்மாவட்டத்தில் மன்னார் பட்டினம், மாந்தை மேற்கு, மடு, நானாட்டான், முசலி ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளும் இயங்கி வருகின்றன. அதேபோல் மன்னார் மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் மன்னார் மற்றும் மடு ஆகிய இரு கல்வி வலயங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றில் மன்னார் கல்வி வலயத்திலுள்ள சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி, புனித சவேரியார் ஆண்கள் பாடசாலை, புனித சவேரியார் பெண்க…
-
- 1 reply
- 475 views
-
-
ஜமால் கஷோக்கியின் மரணத்திற்கு நானே பொறுப்பு – சவுதி பட்டத்து இளவரசர் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் மரணத்திற்கு நானே பொறுப்பு என சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஜமால் கஷோக்கி கடந்த ஒக்டோபர் 2ஆம் திகதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்திற்கு சென்றபொழுது கொல்லப்பட்டார். இதற்கு சவுதி அரேபிய இளவரசர் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை சவுதி அரேபியா மறுத்து வந்தது. கஷோக்கி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் என துருக்கி அதிபர் எர்டோகன் குற்றஞ்சாட்டினார். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் க…
-
- 3 replies
- 572 views
-
-
சீன கம்யூனிச அரசு உருவான 70ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அந்நாட்டில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. நாட்டுக்காக உழைத்தவர்களை நினைவுகூர்ந்துவரும் சீனா, தேசிய தினத்தை போற்றிவருகிறது. இந்நிலையில், சீனாவின் தொடக்கக்காலத்தை விவரிக்கிறது இந்த கட்டுரை. சீன குடியரசின் குவோமின்டாங் படைகளை எதிர்த்து மக்கள் விடுதலைப் படையினர் (பி.எல்.ஏ.) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக அப்போது பீகிங் என்று அழைக்கப்பட்ட நகரில் டியானென்மன் சதுக்கத்தில் பல நூறாயிரம் சீனர்கள் 1949 அக்டோபர் 1 ஆம் தேதி கூடினர். சீன நேரத்தின்படி பிற்பகல் 3 மணிக்கு, தலைவர் மாவோ சே- துங் - இப்போது மாவோ ஜெடாங் என உச்சரிக்கப்படுகிறது - சீன மக்கள் குடியரசு (பி.ஆர்.சி.) உருவாக்கப்படுவதை அறிவிக்க, வரிசையாக இருந்…
-
- 2 replies
- 493 views
-
-
2019 ஜனாதிபதி தேர்தலின் தனித்தன்மை நவம்பர் 16 நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் 8வது ஜனாதிபதி தேர்தலாகும். முன்னைய 7 தேர்தல்களுடன் ஒப்பிடும்போது சில பிரத்தியேகமான -- சுவாரஸ்யமான அம்சங்களை இத்தடவை தேர்தலில் காணக்கூடியதாக இருக்கிறது. முன்னைய ஜனாதிபதி தேர்தல்களில் பிரதான வேட்பாளர்கள் ஜனாதிபதியாக அல்லது பிரதமராக அல்லது எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்துக்கொண்டே போட்டியிட்டார்கள்.ஆனால், இத்தடவை அவ்வாறு யாருமே களத்தில் இல்லை. அரசியல் நிலைவரங்களை நோக்கும்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்சவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் வீடமைப்பு அமைச்சருமான சஜித் பிரேமதாசவுமே பிரதான வேட்பாளர்கள் என்று தெரிகிறது.அவ்வாறானால் இலங்கையின் ஜனாதி…
-
- 0 replies
- 674 views
-
-
'கீழடி' என்கிற ஒற்றைச் சொல், தமிழக மக்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பலராலும் உச்சரிக்கப்படுகிறது. தமிழ் நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழைமையானது என நான்காம் கட்ட ஆய்வு முடிவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின. மேலும், வைகை நதி நாகரிகத்துக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் நெருங்கிய தொடர்புடையதாகவும் சொல்லப்படுகிறது. சங்ககால வரலாற்றையே மாற்றி அமைக்கும் எனத் தகவல்கள் வெளியாகின்றன. இவை குறித்து பேராசிரியர் அருணனிடம் பேசினோம். "நான் முதலில் தமிழக அரசைப் பாராட்டுகிறேன். இந்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சிகரமானது. ஏனென்றால், இதற்குமுன் ஆய்வுசெய்த முதல்கட்ட முடிவுகளை மத்திய அரசு வெளியிடவில்லை. தமிழனுக்கென்று ஒரு நாகரிகம் இருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தய…
-
- 6 replies
- 1.4k views
-