நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
பௌத்த அராஜகத்தின் கொடுந்தன்மையையும் சிங்கள மேலாதிக்கத்தின் அத்து மீறல்களையும் பௌத்த குருமாரின் அடாவடித்தனங்களையும் எடுத்துக்காட்டும் ஒரு சம்பவம் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பெளத்த பிக்குவின் மயான அடக்கம். இந்து தர்மத்தையும் சம்பிரதாயங்களையும் அவமதிக்கும் விதமாக, பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் இறுதிக் கிரியைகளை மேற்கொண்டு மதத்தையும், மக்களையும் அவமதித்தது மாத்திரமல்ல சட்டத்தையும் நீதியையும் மீறிச் செயற்பட்டுள்ளமை குறித்த நாடொன்றுக்குள் நாம் மாத்திரமே அதிகாரங்கள் கொண்டவர்கள், எமது மதமே அரச ஆதிக்கம் கொண்டது, ஏனைய சமூகங்களும் மதத்தினரும் அடங்கிப்போய் விட வேண்டும…
-
- 0 replies
- 496 views
-
-
எழுக தமிழ் 2019, படிப்பினைகள். - வ.ஐ.சஜெயபாலன் ”பல்வேறு எதிர் பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் எழுக தமிழ் – 2019 நடந்தேறிவிட்டது. எழுக தமிழ் 2016இன் போது ஒன்றுதிரண்ட மக்கள் இம்முறை ஒன்றுதிரளவில்லை என்னும் அவதானம் பலராலும் முன்வைக்கப்படுகிறது. அது உண்மைதான். ஆனால் இதற்கு பலவாறான காரணங்கள் உண்டு. ஒன்று, தமிழ் மக்கள் பேரவை ஒப்பீட்டடிப்படையில் முன்னரை விடவும் மிகவும் பலவீனமாக இருந்த ஒரு சூழலில்தான் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.” - யதீந்திரா * எழுக தமிழ் பற்றிய யதீந்திராவின் கருத்து முக்கியமானது. உலக்கை தேய்ந்து உளியானதுபோல என்று சொல்வார்கள். எழுக தமிழ் ஆரம்பத்தில் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்கும் அமைப்பு என்கிற முகத்தை ஓரளவுக்குக் கொண்…
-
- 25 replies
- 2k views
- 1 follower
-
-
ஜமால் கஷோக்கியின் மரணத்திற்கு நானே பொறுப்பு – சவுதி பட்டத்து இளவரசர் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் மரணத்திற்கு நானே பொறுப்பு என சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஜமால் கஷோக்கி கடந்த ஒக்டோபர் 2ஆம் திகதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்திற்கு சென்றபொழுது கொல்லப்பட்டார். இதற்கு சவுதி அரேபிய இளவரசர் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை சவுதி அரேபியா மறுத்து வந்தது. கஷோக்கி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் என துருக்கி அதிபர் எர்டோகன் குற்றஞ்சாட்டினார். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் க…
-
- 3 replies
- 574 views
-
-
இனப்படுகொலை நடத்திய ஸ்ரீலங்கா இராணுவம் இன்று ஐநா முன்றலில் நீதி கோரி வைக்கப்பட்ட நிழற்பட ஆதாரங்களை படம் எடுத்து சென்றுள்ளார்கள்
-
- 1 reply
- 268 views
-
-
ஜனாதிபதி முறையை ஒழித்தல்: நாட்டின் தேவைக்கா, தனி நபர்களின் தேவைக்கா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 செப்டெம்பர் 25 புதன்கிழமை, பி.ப. 12:23 Comments - 0 இலங்கையில் தற்போது நடைபெறும் அரசியல், சிலவேளைகளில் சிறு பிள்ளைகளின் சண்டைகளை நினைவூட்டுகிறது. ஒருவர், “நீ தான் அதைச் செய்தாய்” எனக் குற்றம் சாட்டும் போது, மற்றவர், “இல்லை, நானல்ல, நீயே அதைச் செய்தாய்” என்று கூச்சலிடுகிறார். அதைப்போல் தான், தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிப்பு தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான வாக்குவாதம் அமைந்துள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல், நவம்பர் 16ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு, …
-
- 0 replies
- 234 views
-
-
விற்று பிழைக்கும் அரசியல் மொஹமட் பாதுஷா / 2019 செப்டெம்பர் 23 திங்கட்கிழமை, மு.ப. 11:35 சில நாள்களாக மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் நினைவு கூரப்பட்டுக் கொண்டிருக்கின்றார். இப்போது ஜனாதிபதித் தேர்தல், நவம்பர் 16ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் ஆரம்பமாகும் அடுத்த இரு மாதங்களிலும் அஷ்ரப் இன்னும் அதிகமதிகம் பேசப்படுவார். சரியாகச் சொன்னால், ஒரு வர்த்தகக் குறியீடு (பிராண்ட் நேம்) போல பயன்படுத்தப்படுவார். தேர்தல் வெற்றிக்காக, அவரது புகைப்படங்களும் அவர் முன்மொழிந்த கோஷங்களும் நினைவு கூரப்படுவதோடு, அவரைப் பின்பற்றும் நடவடிக்கைகள் எல்லாம், முடிவுக்கு வந்து விடுகின்றன. பின்னர், இன்னுமொரு நினைவு தினத்தில், தேர்தல் காலத்தில் அஷ்ரப்பின…
-
- 0 replies
- 361 views
-
-
பொய் சொல்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது? 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகண்ணால் பார்ப்பதை எப்போதும் நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் நேர்மையானவரா? சமூகமாக வாழும் மனிதர்களைப் பொருத்தவரை, பொய் சொல்வது என்பது - அல்லது குறைந்தபட்சம் கெடுதல் செய்யாத பொய்கள் சொல்வது …
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
உலகில் அதிக எண்ணெய் வளம்கொண்ட நாடுகளில் இரானும் ஒன்று. அதேநேரத்தில், சவுதி, கத்தார் போன்ற பிற வளைகுடா நாடுகள்போல வளம் கொழிக்காமல் போனதற்குப் பல காரணங்கள் உள்ளன. நண்பர் ஒருவர் வளைகுடா நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துவிட்டு வந்தார். ஒவ்வொரு நாட்டின் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டபோது, இரான் நாட்டைப் பற்றி இப்படிச் சொன்னார். "சும்மா ரோட்டுல போறவங்க வர்றவங்களாம் நம்மகிட்ட ஏதாவது டொனேஷன் பண்ணுங்கனு பணம் கேக்குறாங்கப்பா" என்றார். "யாருனே தெரியாத ஒருவர்கிட்ட எந்தக் காரணமும் இல்லாமல் பணம் கேக்குறாங்க. எந்த முன்னேற்றமும் இல்லாத, வறுமையில் உழலும் அப்பாவி மக்கள் நிறைந்த நாடு" என்றும் இரான் பற்றிச் சொன்னார். நம்ப முடியாத தகவலாக இருந்தது. இப்போது, வெளியாகியுள்ள அதிர்ச்சித் …
-
- 0 replies
- 356 views
-
-
உலக நாடுகள் அனைத்துமே உளவுத்துறையை கொண்டிருக்கும். சனநாயக நாடுகள் தேர்ந்து எடுக்கும் அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றும் எண்ணம் நோக்கம் கொண்டவர்களாக அநேகமாக இருப்பார்கள். இன்றைய அமெரிக்க அதிபர் முன்னைய அமெரிக்க அதிபர்களில் இருந்து இந்த விடயத்தில் மாறுபட்டு உள்ளார். அவர், தன்னை ஒரு மன்னராக பார்ப்பதுடன் அவ்வாறான உலக தலைவர்களை புழாரம் செய்து வருகிறார். அரச உத்தியோகத்தர்கள் ஒரு நிலையான வேலையை கொண்டவர்கள். இந்த நிலையற்ற வர்த்த உலகில் அது ஒரு முக்கிய பயனுள்ள பொறுப்பு. ஆனால், அதை விட அவர்கள் மக்களுக்கு சேவையாற்றும் விருப்பு உடையவர்காளாக மற்றும் கட்சி சார்பற்ற தேசப்பற்று உடையவர்களாக இருக்கவேண்டும். சிலவேளைகளில் இவ்வாறான அரச உத்தியோகத்தர்கள் சில நாட்டு இரகசியங்களை பரகச…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர் வெற்றி அடையப்போவது கோத்தாபயவே கூட்டமைப்பால் பயனில்லை புலிகளின் வழியில் விக்கி பொய்யுரைக்கிறார் வரதராஜப்பெருமாள் சீனாவின் திட்டத்திற்கு மாற்று யோசனை உண்டு அமெரிக்காவின் கைக்கூலியாக மைத்திரி-ரணில் அரசு ராஜபக் ஷவினருடன் தமிழ்தரப்பு ஒப்பந்தம் செய்ய வேண்டும் தெற்காசியாவில் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் பிரச்சினைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால் இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன என்பதால் தான் நாம் அதிக அக்கறை காட்டுகின்றோம். இலங்கையில் நடைபெறவிருக்கின்ற தேர்தலில் ஆட்சிம…
-
- 0 replies
- 535 views
-
-
'கீழடி' என்கிற ஒற்றைச் சொல், தமிழக மக்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பலராலும் உச்சரிக்கப்படுகிறது. தமிழ் நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழைமையானது என நான்காம் கட்ட ஆய்வு முடிவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின. மேலும், வைகை நதி நாகரிகத்துக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் நெருங்கிய தொடர்புடையதாகவும் சொல்லப்படுகிறது. சங்ககால வரலாற்றையே மாற்றி அமைக்கும் எனத் தகவல்கள் வெளியாகின்றன. இவை குறித்து பேராசிரியர் அருணனிடம் பேசினோம். "நான் முதலில் தமிழக அரசைப் பாராட்டுகிறேன். இந்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சிகரமானது. ஏனென்றால், இதற்குமுன் ஆய்வுசெய்த முதல்கட்ட முடிவுகளை மத்திய அரசு வெளியிடவில்லை. தமிழனுக்கென்று ஒரு நாகரிகம் இருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தய…
-
- 6 replies
- 1.4k views
-
-
Friday, September 20, 2019 - 1:37pm நாடு ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கு முகங்கொடுக்கவிருக்கும் இன்றைய சூழ்நிலையில், நடத்தப்பட்டுள்ள எழுக தமிழ்' நிகழ்வானது குறிப்பிடும்- படியாக எந்தவொரு செய்தியையும் மக்களுக்கு வழங்காமல், வழமையானதொரு அரசியல் கூட்டம் போல முடிவடைந்துள்ளது. வெறுப்பு அரசியல்தானா எக்காலமும் தொடரப் போகின்றது? அவலத்தில் வீழ்ந்த தமிழினத்தை மீட்டெடுக்கும் சாணக்கியமான வழிவகைகள் குறித்து தமிழ் அரசியல் தரப்புகள் சிந்திக்கும் நாள் எப்போது? தென்னிலங்கை அரசியல் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தல் முனைப்புகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் இன்றைய நிலையில், தமிழ் மக்கள் பேரவையினர் வ…
-
- 0 replies
- 253 views
-
-
சுழலும் ‘தூஸ்ரா’வும் கவிழும் தன்மானமும் காரை துர்க்கா / 2019 செப்டெம்பர் 17 செவ்வாய்க்கிழமை, பி.ப. 07:08 Comments - 0 மேம்பட்ட மனிதன், பேச்சின் மிதமாய் இருப்பான். ஆனால், சிறப்பான செயல்களில், மிஞ்சி விடுவான். எத்தகைய உயர்வும் தாழ்வும் இன்றி, ஒவ்வொருவருடைய சிந்தனையும் பேச்சும் செயலும், சாதக, பாதக விளைவுகளை ஏற்படுத்த வல்லனவாகும். இந்நிலையில், தமிழ் பேசும் நல் உள்ளங்கள், பெருமை கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரன் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ள கருத்துகள், தமிழ் உள்ளங்கள் மத்தியில் கவலையை, விரக்தியை ஏற்படுத்தி உள்ளன. சீ! இவர்கள் ஏன், இப்படி நடந்து கொள்கின்றார்கள் எனக் கோபத்தை உண்டாக்குகின்றது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி (தமிழ் …
-
- 1 reply
- 614 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் ஏறா வூரைச் சேர்ந்த பஷீர் சேகுதாவூத், ஈரோஸ் ஆயுதப் போராட்ட இயக்கத்தின் முன்னாள் மூத்த போராளி என்பதோடு, அந்த இயக்கம் சார்பில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பயணத்தை ஆரம்பித்தவருமாவார். அதனால், தமிழ் ஆயுத இயக்கங்களில் இணைந்து செயற்பட்ட தனது பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் அவர் பெரிதும் அறிந்திருந்தார். படத்தின் காப்புரிமை Facebook Image caption பஷீர் சேகுதாவூத் எழுதிய பேஸ்புக் பதிவு சியோன் தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை முஹம்மட் நஸார் என்பவர், 1985ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர் என்ற…
-
- 0 replies
- 462 views
-
-
யாழ் பல்கலை துணைவேந்தர் நீக்கமும், உயர் கல்வியை இராணுவ, அரசியல்மயமாக்குதலும்… September 16, 2019 -கலாநிதி N. சிவபாலன், கலாநிதி S. அறிவழகன், கலாநிதி P.ஐங்கரன், கலாநிதிN.ராமரூபன், M. திருவரங்கன், கலாநிதி ராஜன் கூல்- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்… யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனை பதவி நீக்கம் செய்வதற்கான முடிவு இந்த ஆண்டு மே மாதம் பொதுவெளிக்கு வந்தபோது, பல்கலைக்கழகத்தின் பல கல்வியாளர்கள் மற்றும் நலம் விரும்பிகள் இந்த வழமைக்கு மாறான முறைமையினால் அதிர்ச்சியடைந்தனர். இந்த அறிவிப்புக்கு முன்னர், முன்னாள் துணைவேந்தர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினாலோ அல்லது இந்த நாட்டில் உயர்கல்விக்கு பொற…
-
- 0 replies
- 423 views
-
-
வில்லங்கமான விளையாட்டு கே. சஞ்சயன் / 2019 செப்டெம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:16 Comments - 0 இந்தியா- பாகிஸ்தான் இடையில் நீடித்து வருகின்ற பிரச்சினைகளுக்குள், இலங்கையும் அடிக்கடி சிக்கிக்கொண்டு வருகிறது. இப்போது, கிரிக்கெட் விவகாரத்தால் சர்ச்சை எழுந்திருக்கிறது. இலங்கைக் கிரிக்கெட் அணி, இந்த மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், இலங்கை அணியின் 10 முன்னணி வீரர்கள் அந்தப் பயணத்தில் இருந்து விலகியுள்ளதுதான் சர்ச்சைகளுக்குக் காரணம். லசித் மலிங்க உள்ளிட்ட 10 இலங்கை அணி வீரர்கள், பாகிஸ்தான் பயணத்தில் இருந்து விலக முடிவு செய்திருப்பது, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானின் லாகூர் நகரில்…
-
- 0 replies
- 392 views
-
-
முட்டுக்கொடுத்த முஸ்லிம் அரசியலின் கைசேதம் மொஹமட் பாதுஷா / 2019 செப்டெம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:06 நன்றி மறத்தல் என்பது அரசியலில் சாதாரணமானது. கொடுத்த வாக்குறுதிகளை வசதியாக மறந்துவிடுதல் என்பது சர்வசாதாரணமானது. முஸ்லிம் மக்களுக்கு அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து, எவ்வாறு ஏமாற்றுப் பேர்வழிகளாகச் செயற்படுகின்றார்களோ, அதுபோலவே முஸ்லிம் தலைவர்கள், கட்சிகள், அரசியல்வாதிகளை ஆட்சியாளர்களும் கறிவேப்பிலையாகப் பயன்படுத்துவது தொடராகக் காணப்படுகின்றது. மஹிந்த ஆட்சியில் மட்டுமல்ல, இன்றைய ஆட்சியிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த 20 வருடகால ஆட்சியில், முஸ்லிம் அரசியல்வாதிகளால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவரும் முஸ்லிம் சமூகத்தை, அரசாங்கங்…
-
- 0 replies
- 402 views
-
-
விடுதலைப் போராட்டத்துக்கு விளம்பரம் போடுதல் Editorial / 2019 செப்டெம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 08:39 சிலநாள்களுக்கு முன், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகளில் ‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கான விளம்பரங்கள் வெளியாகி இருந்தன. இந்த விளம்பரங்கள், சில செய்திகளைச் சொல்லாமல் சொல்கின்றன. ‘எழுக தமிழ்’, தமிழ்த்தேசியத்தின் எழுச்சிக்கான குரல் என்ற தொனியிலேயே, அதன் ஏற்பாட்டாளர்களும் ஆதரவாளர்களும் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். ‘எழுச்சியின் குரல்’ என்பது, விளம்பரங்களின் வழி உருவாவதல்ல; மக்களை அழைக்க, இதுவொன்றும் இசை நிகழ்ச்சியோ, சினிமாப் நட்சத்திரங்களின் கூத்தோ அல்ல. தமிழ்த் தேசியத்தின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு, இந்த விளம்ப…
-
- 5 replies
- 1.2k views
-
-
தாம் வெற்றி பெறுவதற்காகவன்றி மற்றவர்களை தோற்கடிக்க போட்டியிடுபவர்கள் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 செப்டெம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 07:14 நாட்டில் எல்லோரது கவனமும் ஜனாதிபதித் தேர்தல் பக்கம் திரும்பியிருக்கும் நிலையில், கடந்த வாரம் அதனோடு தொடர்புடைய இரண்டு முக்கிய செய்திகள் வெளியாகின. கடந்த 5ஆம் திகதி வியாழக்கிழமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதாக அக்கட்சியின் பொதுச் செய்லாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல்கள் ஆணையகத்திடம் அறிவித்திருந்தார். அது தான் அவற்றில் முதற்செய்தி. தாமும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ர…
-
- 0 replies
- 292 views
-
-
கோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்! – சி.சிவேந்திரன்- September 15, 2019 மனித இனத்தின் அறிவுக்கண்ணைத் திறப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இடமாக பாடசாலையே காணப்படுகின்றது. ஒரு மனிதனுக்கு அறிவு, திறன் ஆகியவற்றை வழங்கி அவனது மனப்பாங்கில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி அவனை மனிதனாக்கி வாழ வைப்பதற்குரிய முக்கிய பணியை பாடசலைகளே ஆற்றுகின்றன. இதனால்தான் பாடசாலைகள் இறைவழிபாட்டுத் தலங்களை விட மேலானவையாகப் போற்றப்படுகின்றன. அறிவுக்கண்ணைத் திறந்து மனிதனை மனிதனாக்கி மனிதனாக வாழவைக்கும் மிகமுக்கிய பணியைச் ஆற்றும் பாடசாலைக்குத் தீ வைத்து எரித்தல் என்பது மனிதன் தனக்குத் தானே தீ மூட்டி தன்னை எரித்துக்கொள்வதுடன் தனது இனத்தையே எரித்து …
-
- 1 reply
- 410 views
-
-
சஜித்தை ஆதரிப்பதாக மைத்திரி கூறவேயில்லை: வீரகுமார திஸாநாயக்க செவ்வி ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி சஜித் அணியுடன் இணைவது பற்றியோ பொதுவேட்பாளராக சஜித் பிரேமதாஸவை களமிறக்குவது பற்றியோ எந்தவொரு சந்தர்ப்பதிலும் சஜித் பிரேமதாஸவுடனோ அல்லது அவர் தரப்பினருடனோ எந்தவிதமான கலந்துரையாடல்களும் நடைபெறவே இல்லை. அதேநேரம், ஜனாதிபதி மைத்திரிபாலவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சஜித்தை ஆதரிப்பதாகவும் கூறவே இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வரு…
-
- 0 replies
- 316 views
-
-
INTERVIEW OF V.I.S.JAYAPALAN. நேர்காணல் - வ.ஐ.ச.ஜெயபாலன் IBC TAMIL, Agam Puram -13th September
-
- 1 reply
- 438 views
-
-
எழுக தமிழை ஆதரிக்க வேண்டியது ஈழத் தமிழர்களின் கடமையாகும் ஒரு மக்கள் இயக்கம் என்னும் வகையில், தமிழ் மக்கள் பேரவையானது, 2016இல் வடக்கிலும் கிழக்கிலும் ‘எழுக தமிழ்’ நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தது. முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு பின்னர் எமது மக்களை, ஓர் அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் அணிதிரளச் செய்ததில் எழுக தமிழ் நிகழ்வுகளுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. ஏனெனில், இறுதி யுத்தத்தின் விளைவுள் ஏற்படுத்திய அச்சம், பதட்டம் மற்றும் தாழ்வு மனப்பாண்மை என்பவற்றால் எமது மக்கள் வெறுமனே தேர்தல்கால வாக்குறுதிகளுடன் கட்டுண்டு கிடந்த ஒரு சூழலில்தான், ”எழுக தமிழ்’ இடம்பெற்றது. இந்த எழுச்சியானது, தமிழ் புலம்பெயர் சமூகத்திற்குள்ளும் புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையும் ஏற்படுத்த…
-
- 0 replies
- 328 views
-
-
ஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரும் தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு பொருத்தமான தமிழ் பெயர்களை சூட்டும் பணிகளை முன்னெடுத்து வருவதாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த பெயர் மாற்றத்தில் உள்ள அரசியலை செந்தில் தொண்டமான் சரியாக இனங்காணவில்லை என்கிற குற்றச்சாட்டு இப்போது மேலெழுந்துள்ளது. பாரம்பரியமாக அசைக்க முடியாமல் இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செல்வாக்கு கடந்த சில தேர்தல்களின் மூலம் சரிந்து வந்திருப்பது உண்மை. ஒரு பெரிய தொழிற்சங்கம் என்கிற நிலை சரிய…
-
- 0 replies
- 526 views
-
-
எம்மவர் இளையோர் இருவர் பெண் ஆணுக்கு தாலி கட்டி திருமண பந்தத்தில் இணைந்திருக்கின்றனர் சுவிஸ்ஸில் । யாழ் வாசிகள் இதனைப் பற்றி ஏதும் அபிப்பிராயம் …...
-
- 59 replies
- 7.7k views
-