Jump to content

முட்டுக்கொடுத்த முஸ்லிம் அரசியலின் கைசேதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முட்டுக்கொடுத்த முஸ்லிம் அரசியலின் கைசேதம்

மொஹமட் பாதுஷா / 2019 செப்டெம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:06

நன்றி மறத்தல் என்பது அரசியலில் சாதாரணமானது. கொடுத்த வாக்குறுதிகளை வசதியாக மறந்துவிடுதல் என்பது சர்வசாதாரணமானது. முஸ்லிம் மக்களுக்கு அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து, எவ்வாறு ஏமாற்றுப் பேர்வழிகளாகச் செயற்படுகின்றார்களோ, அதுபோலவே முஸ்லிம் தலைவர்கள், கட்சிகள், அரசியல்வாதிகளை ஆட்சியாளர்களும் கறிவேப்பிலையாகப் பயன்படுத்துவது தொடராகக் காணப்படுகின்றது. 

மஹிந்த ஆட்சியில் மட்டுமல்ல, இன்றைய ஆட்சியிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த 20 வருடகால ஆட்சியில், முஸ்லிம் அரசியல்வாதிகளால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவரும் முஸ்லிம் சமூகத்தை, அரசாங்கங்களும் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. பேரம்பேசல் என்று சொல்லிக்கொண்டு, உண்மையிலேயே சோரம் போகின்ற அரசியலைப் புதுப்புது டிசைன்களில் முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியல் கட்சிகள் செய்துகொண்டிருக்கின்றன. இதனால், நக்குண்டார் நாவிழந்தார் என்பதுபோல, அரசியல் தலைவர்களின் நிலை மாறியிருக்கின்றது. 

ஒரு தேர்தல் வரும்போது, அல்லது முஸ்லிம் மக்களின் ஆதரவு தேவைப்படும் சந்தர்ப்பத்தில், இந்தச் சமூகத்துக்கு என்ன தேவை என்பதைப் பகிரங்கமாக முன்வைத்து, ஒவ்வோர் உடன்பாட்டைக் காணாமல், மேலோட்டமாக முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று பூசிமொழுகிய வார்த்தைகளைக் கூறிக்கொண்டும் எத்தனை அமைச்சு, பிரதியமைச்சு தருவீர்கள் என்ற பேரம் பேசலை மேற்கொண்ட வண்ணமும், முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொடுக்கின்ற, கொடுத்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இப்போது கைவிடப்பட்டுள்ளனர். 

எழுத்துமூல உடன்பாடு எதுவுமின்றி, பெருந்தேசியக் கட்சிகளுக்கு முட்டுக் கொடுத்த காங்கிரஸ்கள் எல்லாம், காரியம் முடிந்த பிற்பாடு களற்றி விடப்பட்டுள்ளன. கையில் எந்தப் பிடியும் இல்லாமல், அதிகாரம் இருந்தும் எதையும் சாதிக்க முடியாமல், முஸ்லிம்களின் உரிமைகளை அரசாங்கத்திடம் தட்டிக் கேட்டுப்பெற முடியாமல், முஸ்லிம் தலைவர்கள், தளபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், சுரணையற்றும் வேறுசிலர் நாதியற்றும் இருக்கின்றனர்.

நாங்கள்தான் மஹிந்தவைக் கொண்டு வந்தவர்கள் என்று தம்பட்டமடித்த அதாவுல்லா, றவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன் போன்ற கட்சித் தலைவர்களாலும் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளாலும், அவரது ஆட்சியில் இனவாதம் கொதித்தெழுந்தபோது, அதை முற்றாகத் துடைத்தெறிந்து, முஸ்லிம்களின் உரிமைகளை நிலைநாட்ட எதுவும் செய்யமுடியவில்லை.  

அதுபோலவே, மைத்திரிபால சிறிசேனவை நாம்தான் ஜனாதிபதியாக்கினோம், ரணிலை சிம்மாசனம் ஏற்றினோம், நாம் கேட்பதையெல்லாம் அவர்கள் தருவார்கள்; பயப்படத் தேவையில்லை என்றவர்கள், முஸ்லிம்களின் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்த்துத் தருவோம், இனவாதத்தைச் சிறையிலடைப்போம் என்ற ஆட்சியின் பங்காளிகளது நிலை மிகவும் பரிதாபமாக இருக்கக் காண்கின்றோம். 

ஒரு சமூகம், ஓர் இனக் குழுமம், தனித்துவ மத அடையாள மக்கள் பிரிவு என்றால், அதற்கு ஒரு தனியான கொள்கைக் கோட்பாடுகள், அரசியல் அணுகுமுறைகள் இருக்க வேண்டும். அந்தச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமன்றி, ஒவ்வொரு தனிப்பட்ட அரசியல்வாதிக்கும் சமூகம் பற்றிய பிரக்ஞை (கொஞ்சமேனும்) இருக்க வேண்டும். 

அந்த வகையில், தேர்தல்கள் வரும்போதும் நாடாளுமன்றத்தில் முஸ்லிம் எம்பிக்களின் ஆதரவு தேவைப்படும் சந்தர்ப்பத்திலும், முஸ்லிம் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள், அபிலாஷைகள், உரிமைசார்ந்த எத்தனையோ விடயங்களைச் சாதித்துக் கொள்ள வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், முஸ்லிம் தலைவர்களோ தளபதிகளோ, அதைப் பயன்படுத்தவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது தமிழ் அரசியல் கட்சிகளோ, பெரிதாக எதையும் தமிழ் மக்களுக்கு இதுவரை பெற்றுக் கொடுக்கவில்லை என்பதென்னவோ நிஜம்தான். ஆயினும், பதவிநிலை அதிகாரங்களை வகுக்காமலேயே, ஏதோவொரு கொள்கையில் உறுதியாக நின்றுகொண்டு, தமிழ் மக்களின் உரிமைசார் விடயங்களில் முஸ்லிம் தேசியத்தைவிட அதிகமான காய் நகர்த்தல்களைத் தமிழ்த் தேசிய அரசியல் செய்திருக்கின்றதென்பதை, யாராலும் மறுக்கவியலுமா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஒவ்வொரு தேர்தல் காலத்திலும், அக்கட்சியின் ஆதரவை ஆட்சியாளர்கள் கோருகின்ற வேளைகளிலும், தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை, இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களை எழுத்தில் முன்வைத்து, அதற்கு அக்குறிப்பிட்ட கட்சி எழுத்துமூலம் சம்மதம் தெரிவித்த பின்னரே ஆதரவளிக்கும் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது. 

முஸ்லிம் கட்சிகளும் இவ்வாறான ஒரு வழிமுறையைக் கையாள வேண்டும் என்றும் பேரம்பேசலை மேற்கொண்டு, எழுத்துமூல உடன்பாட்டின் அடிப்படையிலும் ஆதரவை வழங்க வேண்டும் என்றும், சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் இப்பக்கத்தில் நாம் எழுதிக்கொண்டுதான் இருக்கின்றோம். 2015 தேர்தல் காலம், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட வேளை, 52 நாள் நெருக்கடி காலம் எனப் பல தடவைகளில் இவ்வாறான வாய்ப்புகள் வந்தபோது, எழுத்துமூலமான நிபந்தனைக்கு உடன்பாட்டைப் பெறுமாறு வலியுறுத்தினோம். ஆனால், அதை முஸ்லிம் அரசியல் ஞானிகளும் சாணக்கியர்களும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. 

ஒஓவ்வொரு முறையும், நாம் ஒரு குறிப்பிட்ட உடன்பாட்டின் அடிப்படையிலேயே ஆதரவளிக்கத் தீர்மானித்ததாக, முஸ்லிம் தலைவர்கள் சொல்லி வருகின்றனர். ஆனால், அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன, அதற்காக ஒப்பமிட்டுக்கொடுத்த ஆட்சியாளர் யார் என்பதை, வாக்களித்த முஸ்லிம் மக்களுக்குக் காட்டுவதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம், உண்மையில் அவ்வாறான ஆவணங்கள் எதுவும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இல்லை என்ற நிதர்சனமாகும். 

பதவிப் பட்டங்கள், இன்னபிற வரப்பிரசாதங்களைக் கேட்காமல், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து உடன்பாடு கண்டிருந்தால், அவற்றை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சமாவது அரசாங்கத்துக்கு  இருந்திருக்கும். அவ்வாறில்லாவிடின், நீங்கள் ஒப்பமிட்டுத் தந்த ஆவணத்தில் உடன்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றித் தாருங்கள். இல்லாவிட்டால், உங்களுக்கு எமது சமூகத்தின் வாக்குகள் இனிமேல் கிடைக்காது என்று தைரியமாகச் சொல்லக் கூடியதாக இருந்திருக்கும். 

குறைந்தபட்சம், முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கிய இந்த வாக்குறுதிகளை, அரசாங்கம் நிறைவேற்றத் தவறியமையாலேயே நாம் எதிர்க்கின்றோம் என்று சொல்லலாம். அல்லது, உடன்பட்ட விடயங்களை நிறைவேற்றித் தந்தமையால் முஸ்லிம்கள் இந்தக் கட்சிக்கு மீண்டும் ஆதரவளிக்கின்றனர் என்றும் நியாயப்படுத்தலாம். இதன்மூலம், முஸ்லிம்களின் நிலைப்பாடு குறித்த தெளிவு, சிங்கள மக்களுக்கும் ஏற்பட வாய்ப்பிருந்தது. ஆனால். மூடுமந்திர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, எழுத்துமூலம் உடன்பாடு கண்டு, இவ்வாவணத்தை மக்கள் மயப்படுத்துவதில் முஸ்லிம் கட்சித்தலைவர்களும் மற்றைய அரசியல்வாதிகளும் மீண்டும் ஒரு தடவை தவறிழைத்த காரணத்தினால், இன்று காரியம் முடிந்த பிறகு அவர்களை இந்தச் சமூகமும் கணக்கெடுக்காமல் விடப்பட்டுள்ளனர். 

முஸ்லிம்களின் 10,000 ஏக்கர் காணிப் பிரச்சினையையாவது தீர்க்க முடியவில்லை. முஸ்லிம்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை மத அடையாளங்கள் கேலிக்குள்ளாக்கப்படுவதை, முஸ்லிம்களின் ஆடை உரிமைகள் மறுதலிக்கப்படுவதை, இச்சமூகம் புறக்கணிக்கப்படுவதைத் தடுக்க முடியவில்லை. வைத்தியர் ஷாபியில் தொடங்கி - இன்று உஸ்தாத் ஹஜ்ஜூல் அக்பர் வரையான முஸ்லிம் சமூக ஆளுமைகள், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாமலேயே சட்டத்தின் பிடிக்குள் சிக்க வைக்கப்படுவதைக்கூட தடுத்து நிறுத்த முடியாமல்தான் போய்க் கொண்டிருக்கின்றது. மற்றைய, பெருந்தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்திருந்தாலும், இதுதான் நடந்திருக்கும் என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில், அந்தக் கட்சியிடமும் எந்த ஒப்பந்தமும் இல்லாமல்தான் இவர்கள் ஆதரவளித்திருப்பார்கள். 

பல முஸ்லிம் அரசியல்வாதிகள், சிங்கள மக்களதும் தமிழர்களின் சில ஆயிரம் வாக்குகளுக்காகவும், பெருந்தேசியக் கட்சிக்கு நொந்துவிடக் கூடாது என்பதற்காகவும் மௌனமாக இருக்கின்றனர். இன்னும் சிலர், கடைசிகட்ட உழைப்பில் கவனமாய் இருக்கின்றார்கள். விரல்விட்டு எண்ணக் கூடிய மூன்று பேருக்கும் குறைந்த முஸ்லிம் அரசியல்வாதிகள்தான், இவற்றையெல்லாம் தாண்டியும் சமூகத்துக்காக அத்திபூத்தாற்போல் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

ஆயினும், நன்றிகெட்ட அரசாங்கத்திடம் நமது கோரிக்கைகளை நினைவூட்டி ஆட்டங்காணச் செய்ய, கையில் உடன்படிக்கை எதுவும் இல்லை என்பதாலும் அரசியல் தலைவர்கள் தனிப்பட்ட மற்றும் நடப்பு அரசியல் குழப்பங்களால் சோர்ந்து போயுள்ளதாலும், முஸ்லிம்களின் பிரச்சினைகள், அபிலாஷைகள் என்பன, பரண்களின் மேல் போடப்பட்ட பழைய பொருளகள் போலக் கிடக்கின்றன. 

இந்த ஆட்சியும் முடிவடையப் போகின்றது. மைத்திரிக்கும் முஸ்லிம்களின் ஆதரவு தேவை. ரணிலுக்கும் அவசியம். மஹிந்தவும் வாக்குக் கேட்டு வருவார். இதுவும்கூட ஓர் அருமையான சந்தர்ப்பமாகவே தெரிகின்றது. ஆனால், இந்தக் கடைசித் தருணத்தைக்கூட முஸ்லிம் அரசியல் வித்தகர்கள் எனத் தம்மைச் சொல்லிக் கொள்வோர் பயன்படுத்த முனைவதாகத் தெரியவில்லை. இதைவிடவும் ஒரு கைசேதம் இருக்கின்றதா?

நன்றாக சிந்தித்துப் பாருங்கள்!

தொடர்ச்சியாக பெருந்தேசியக் கட்சிகளின் ஆட்சிக்கு மாறிமாறி முட்டுக் கொடுத்து வருகின்ற முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளின் தனிப்பட்டப் பிரச்சினைகள் தீர்ந்திருக்கலாம். ஆனால், முஸ்லிம் சமூகத்தின் நீண்டகாலப் பிரச்சினைகள், அபிலாஷைகள் நிறைவேற்றப்படவில்லை என்றான போது, மீண்டும் மீண்டும் இவர்களுக்குப் பின்னால் போவதில் ஏதாவது அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. 

நவீன வடிவிலான ஆக்கிரமிப்புகள்

  கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்பது முன்னோர் வாக்காகும். எந்த மதத்தவர் என்றாலும், அவர்களுக்குரிய வழிபாட்டிடம் ஒன்று அவர்கள் வாழும் பகுதியில் இருப்பதே சிறந்ததாகும். ஆனால், ஒரு குறிப்பிட்ட மதப் பிரிவினர் இல்லாத இடங்களில் வழிபாட்டுத் தலங்களை நிறுவுமாறு அல்லது மத அடையாளங்களின் ஊடாக அத்துமீறலையோ ஆக்கிரமிப்பையோ மேற்கொள்ளுமாறு யாரும் அறிவுறுத்தவில்லை. ஆனால், இலங்கையில் பரவலாக அது நடந்து கொண்டிருக்கின்றது.   

யுத்தம் முடிவடைந்த பிறகு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல பௌத்த விஹாரைகள் புதிது புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே காணப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் பெரும் நிதிச் செலவில் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக, கண்ட கண்ட இடங்களில் எல்லாம் திடுதிடுப்பென புத்தர் சிலைகள் முளைத்துள்ளன. 

உலகுக்கு அஹிம்சையைப் போதித்த கௌதம புத்தர் மீது, முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் பெரும் மரியாதை இருக்கின்றது. புத்தரின் நல்ல பல போதனைகள், மதம் கடந்தும் மதிக்கப்படுகின்றன. இலங்கையில் நிலைகொண்டுள்ள இனவாதம், புத்தரின் போதனைக்கு அப்பாற்பட்டது என்பதையும் முஸ்லிம்கள் அறிவார்கள். 

அப்பேர்ப்பட்ட ஒரு மஹானை வழிபடுவதற்காக ஒரு விகாரை அமைக்கப்படுவதை அல்லது புத்தரின் சிலை ஒன்றை நிறுவுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதனால், முஸ்லிம்களுக்கோ தமிழர்களுக்கோ எவ்விதப் பாதகமும் வரப்போவதுமில்லை. 

ஆனால் இன்று, அநேக இடங்களில் பௌத்த விஹாரை, சிலை, மடாலயம் அமைத்தல் என்ற பெயரில் முன்னெடுக்கப்படுகின்ற நகர்வுகள், பௌத்தத்தைப் பரப்பும், வழிபடும் அல்லது அம்மதத்தின் கொள்கைகளைக் காப்பாற்றும் நோக்கத்தைக் கொண்டவையாகத் தெரியவில்லை. மறுபுறத்தில், முஸ்லிம், தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களுக்குள் சிங்கள மக்களைக் காலூன்றச் செய்வதற்கான நவீன ஆக்கிரமிப்பு உத்தியாகவே நோக்கப்படுகின்றது. 

முன்னொரு காலத்தில், குடியேற்றத் திட்டங்கள், எல்லை நிர்ணயங்கள் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலம், சிறுபான்மைச் சமூகங்கள் வாழ்கின்ற இடங்களில் சிங்கள மக்களை அழைத்து வந்து  குடியேற்றினர். அதேபோல இன்று, பௌத்தத்தின் மேவிய தன்மையை இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எடுத்தியம்புகின்ற முயற்சிகளாகவே, சிறுபான்மை மக்கள் வாழும் இடங்களில் சிலைகள் வைக்கப்படுகின்றன. 

வடக்கு, கிழக்கில் பௌத்த வழிபாட்டு் தலங்களைச் சுற்றி சிங்கள மக்களின் நடமாட்டத்தையும் நீண்ட காலத்தில் குடியேற்றத்தையும் உள்நோக்காகக் கொண்டே, இவ்வாறான சிலை வைப்புக்கள் முன்னெடுக்கப்படுவதாகச் சிறுபான்மையினர் அச்சம் கொண்டுள்ளனர். அவ்வாறான நிறைய உதாரணங்கள் அவர்கள் முன்னுள்ளன. வடமாகாணத்தின் பல இடங்கள் தொடக்கம் கிழக்கின் மாயக்கல்லி மலை தொட்டு, பொத்துவில் மண்மலைப் பிரதேசம் வரை, இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது. 

இதற்குச் சமாந்திரமாக, தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனபரிபாலனத் திணைக்களங்களின் கீழ் காணிகளைக் கொண்டுவரும் நடவடிக்கையும் பல இடங்களில் முன்னெடுக்கப்படுகின்றது. இது தொடர்பான யுத்தத்துக்குப் பின்னரான புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இதன் பாரதூரத்தைப் புரிந்துகொள்ளலாம். 

எனவே, வழிபாட்டுத் தலம் அமைப்பதோ அரசாங்கம் காணிகளை கையகப்படுத்துவதோ தவறல்ல. ஆனால், அது முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கான உள்நோக்கங்களுடன் மேற்கொள்ளப்படக் கூடாது என்பதே, இந்தப் பத்தியின் வேண்டுதலாகும்.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முட்டுக்கொடுத்த-முஸ்லிம்-அரசியலின்-கைசேதம்/91-238566

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.