நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
``இப்போதும் என் இதயத் துடிப்பு காஸாவில்தான் இருக்கிறது. காஸாவில் என்னுடன் பணியாற்றிய பாலஸ்தீன மக்கள், என் வாழ்க்கையில் நான் சந்தித்த நம்பமுடியாத மனிதர்களில் சிலர்." - எமிலி கலாஹான் வன்முறை எந்தப் பிரச்னைக்கும் முடிவல்ல என்பது வரலாறு முழுவதும் உணர்த்தப்பட்டும், இன்றும் அதிகாரப் பசியால் போர் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. உக்ரைன் - ரஷ்யா போரின்போதே அதன் கொடூரங்களைப் பார்த்தோம். அதன் நீட்சியாகத் தற்போது இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடக்கும் போரிலும், கற்பனைக்கும் எட்டாத வடுக்கள் பதிவாகிவருகின்றன. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். …
-
- 1 reply
- 269 views
-
-
காஸா, இஸ்ரேல் sudumanal Norman Finkelstein அவர்கள் 1953 இல் அமெரிக்காவில் பிறந்த யூத இனத்தவர். அவரது பெற்றோர் இருவரும் நாசிகளின் இருவேறு கொன்சன்றேசன் முகாம்கள் (Auschwitz, Majdanek) இலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள். இவர்கள் 1995 இல் காலமாகினர். பின்கல்ஸ்ரைன் அவர்கள் அறியப்பட்ட அரசியல் விஞ்ஞானியும், பேராசிரியரும் எழுத்தாளரும் ஆவார். அவர் சியோனிசம், கொலோகாஸ்ற் என்பன குறித்து நூல்கள் எழுதியவர். அவர் The Jimmy Dore Show க்கு 12.10.2023 இல் வழங்கிய நேர்காணலில் அவர் முன்வைத்த கருத்துகளை நன்றியுடன் தமிழாக்கம் செய்திருக்கிறேன். யார் காஸா மக்கள்?. 70 வீதமான காஸா மக்கள் 1948 யுத்தத்தின் போதான அகதிகள் அல்லது அந்த அகதிகளின் வாரிசுகள். இஸ்ரேலிய அரசால் துரத்தப்பட்…
-
- 1 reply
- 297 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,BRIDGEMAN VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபோர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று ஒட்டுமொத்த உலகமும் ஒரு பிரச்னையைத் தீர்க்கப் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்று இவ்வளவு கடினமான ஒரு பிரச்னையாக உருவெடுத்திருக்கும் இஸ்ரேல் - பாலத்தீன பிரச்னையின் அடித்தளமே வெறும் 67 வார்த்தைகள்தான் என்றால் நம்புவீர்களா? ஆம், அந்த ஆவணத்தில் இருந்த ஒரு பக்கத்தில் 67 வார்த்தைகள் மட்டுமே எழுதப்பட்டிருந்தன. இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையே தற்போது நடைபெறும் மோதலில் இருதரப்பும் பெரும் இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. இந்த மோதலில் இதுவரை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் குறைந்தது 1,400 பேரும், காஸா பகுதிய…
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
யாருக்காக போராட்டங்கள்? November 3, 2023 — தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் — இலங்கையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானாகவும் இருந்த ரி. சரவணராஜா சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை விவகாரத்தில் தனது நீதித்துறைக் கடமைகளைச் செய்த காரணத்தால் அச்சுறுத்தலுக்குள்ளானதாகக் காரணம் கூறப்பட்டு அவர் நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தையொட்டி அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நீதிபதிக்கு ஆதரவாகவும் ‘ரெலோ’ – ‘புளொட்’ – முன்னாள் ஈபிஆர்எல்எஃப் (இந்நாள் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி) – தமிழ்த் தேசியக் கட்சி – ஜனநாயக போராளிகள் கட்சி -தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய ஆறு கட்சிகளும் இணைந்த ஏற்பாட்டில் தமிழரசுக் கட்சியின் ஆதரவுடன் 20.10.2023 அன்று வடக்கு கிழக்கு மாகாணங…
-
- 0 replies
- 260 views
-
-
ஆனைக்கோட்டை ஆதிமனிதனின் எச்சத்தை சிதைத்தது இந்திய இராணுவம் என பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும் தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூரும் இணைந்து நடாத்தும் ஆய்வரங்க மாநாட்ட்டில் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2000 ஆண்டுகளாக பாதுகாத்து வந்த எச்சங்களை இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு அழித்தனர் எனவும் கூறியுள்ளார். வரலாற்று சன்றாக இருந்த எச்சங்களே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கிடையிலான தொடர்பு பற்றியும் கருத்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.... https://tamilwin.com/article/the-remains-adimanitan-were-destroyed-indian-army-1698…
-
- 0 replies
- 340 views
- 1 follower
-
-
நாட்டுக்கு ஆபத்தாக மாறும் புலம்பெயர்வு லக்ஸ்மன் இலங்கையின் அதிகமான மூளைசாலிகள் வெளியேறிய காலப்பகுதி 1980களில் ஆகும். அப்போதைய காலங்களில் அநேகமாக வடக்கு, கிழக்கு தமிழர்களே நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார்கள். குறிப்பாக துடிப்பாக தொழில் பார்க்கக்கூடிய இளவயதுடையவர்கள். அதற்குக் காரணம் இலங்கையின் அரசியல், கல்விக் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் கொடுத்த விரக்திகளாகும். அது யுத்த காலம் என்பதும் கூட. சில காலங்களில் சிறிய சிறிய புலம் பெயர்வுகள் நிரந்தரமாகவும், தொழிலுக்காகவும் என நடைபெற்று வந்தன. இன்றைய நிலையில் நடைபெற்று வருகின்ற புலம்பெயர்வுகள் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பெரும் பொருளாதாரச் சிக்கலின் காரணமாக நடைபெற்று வருகிறது. இது தற்போதைய அரசாங்கத்தாலும், அரசிய…
-
- 0 replies
- 371 views
-
-
பட மூலாதாரம்,AP படக்குறிப்பு, இலங்கை கடலுக்கு வந்துள்ள சீன கப்பல் கொழும்பு கடலில் ஆய்வுகள் நடத்தவுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை கடற்பரப்பிற்குள் வருகைத் தந்துள்ள சீனாவின் சமுத்திர ஆராய்ச்சி கப்பலான ஷி யென் 6, தனது ஆய்வு நடவடிக்கைகளை கொழும்பு கடற்பரப்பில் ஆரம்பித்துள்ளது. இந்த கப்பல் நேற்றைய தினம் முதல் இரண்டு தினங்களுக்கு ஆராய்ச்சிகளை நடத்தி வருவதாக நீரியல் வளங்கள் ஆய்வு அபிவிருத்தி மற்றும் முகவர் நிறுவனம் (நாரா) பிரதான விஞ்ஞானி கணபதிபிள்ளை அருளானந்தன் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார். கொழும்பு மற்…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
இலங்கையில் இன்றைய சூழலிலிருந்து நாளைய நாளுக்காக நாம் நம்மை தேற்றிக் கொள்ள வேண்டும். என்னதான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி சில காலங்களில் மறைந்து போவதற்கான பொருத்தப்பாடுகள் எவையும் நாட்டில் நடப்பதாக இல்லை. கடனை வாங்கி கடன் அடைப்பது தற்காலிக தீர்வன்றி விரைவான மாற்றங்களை தந்திடும் முயற்சியாக அது அமைந்தது விடாது. கடன் சுமை சுதந்திரம் அடையும் போது இலங்கை கடனோடு இருக்கவில்லை. ஆனாலும் கடந்து வந்த நாட்களில் கடனை வாங்கி குவித்து இன்று அது பெருத்து பெரும் பூதமாக இலங்கையை அச்சுறுத்துகின்றது. வாங்கிய கடனை அடைப்பதை விடுத்து புதிதாக கடன்களை பெற்றுக்கொள்ள நினைப்பது என்பது பொருத்தமற்ற சிந்தனை. இருந்தும் அவ்வாறு வா…
-
- 0 replies
- 217 views
-
-
சிறுபான்மையினருக்கு தீர்வில்லாத நில ஆக்கிரமிப்பு ஹஸ்பர் ஏ ஹலீம் சிறுபான்மை இன மக்களின் பூர்வீக நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டே வருகிறது. திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் இந்த நிலவரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அண்மையில் அரிசி மலை விகாரைக்கு அண்மித்த பகுதியில் பௌத்த மதகுரு ஒருவரினால் பூஜா பூமி என்ற அடிப்படையிலும் தொல்பொருள் என்ற போர்வையில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. அரிசிமலை விகாரையை அண்மித்த பல ஏக்கர் நிலங்கள் தனியார் மக்களுக்குச் சொந்தமான விவசாய காணியாகும் இவர்களின் வாழ்வாதாரம் மீன் பிடி விவசாயம் சேனை பயிர்ச் செய்கை என ஜீவனோபாயமாக காணப்படுகிறது. அப்பாவி மக்களின் காணிக்குள் அடாத்தாகக் கையகப்படுத்த மு…
-
- 0 replies
- 187 views
-
-
பட மூலாதாரம்,K.ARULANANTHAN படக்குறிப்பு, சீனாவின் கடல் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யென் 6-க்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஷி யென் 6 இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை நேற்று மாலை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது. தமது அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் நோக்கிலேயே இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீன கடல் ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு வருகை தருவதற்கு இதற்கு முன்னர் அனுமதி கோரிய நிலையில், இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அந்த நடவடிக்கை தள்ளிப் போடப்பட்டிருந்தது. சீன கப்பல் தொடர்பில் அரசாங்கத்தின் உய…
-
- 5 replies
- 865 views
- 1 follower
-
-
தமிழரசு வீட்டில் தீ! எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய சுமந்திரன் – தவராசா ! October 28, 2023 ——————— — அழகு குணசீலன் — தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் (?) – திருகோணமலை மாவட்ட தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தர் ஐயா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்று நேர்காணல் ஒன்றில் சுமந்திரன் கருத்து கூறியிருக்கிறார். தமிழரசின் மற்றொரு சக நாடாளுமன்ற உறுப்பினராக எம்.ஏ. சுமந்திரனின் இந்த கருத்து தமிழ்த்தேசிய அரசியல் வட்டாரத்திலும், தமிழரசின் உள் வீட்டிலும் வாதப் பிரதி வாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர் இதைச் சொன்ன சுமந்திரனுக்கு இதைச் சொல்வதற்கான தகுதியும், அருகதையும் உண்டா? அதற்கான அதிகாரம் அவருக்…
-
- 0 replies
- 296 views
-
-
கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் பௌத்த துறவிகளின் அத்துமீறல்கள் – மட்டு.நகரான் October 24, 2023 வடகிழக்கு மாகாணம் தமிழர் தாயகம் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிங்கள தேசம் இன்று பல்வேறு அச்சுறுத்தல்களை முன்னெடுத்துவருகின்றது. வடகிழக்கில் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை, தமிழர்கள் மீது கட்டவிழ்தப்படும் ஆக்கிரமிப்புகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகபோராடி வருபவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் இன்று பல்வேறு நெருக்குவாரங்களையும் அத்துமீறல்களை எதிர்கொண்டுவருவதுடன் கிழக்கில் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் வெளிவரும்போது அது தொடர்பில் பேசும் மனித உரிமை செயற்ப…
-
- 1 reply
- 291 views
-
-
22 OCT, 2023 | 10:34 AM (லியோ நிரோஷ தர்ஷன்) 'ஒரு பாதை ஒரு மண்டலம்' முன்முயற்சி திட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின்போது எழுத்து மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இராஜதந்திர கொந்தளிப்புகளை பிராந்தியத்தில் ஏற்படுத்தியுள்ள 'ஷி யான் 6' ஆய்வுக் கப்பலை இலங்கைக்கு அனுப்பாதிருக்க சீனா தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடவிருந்த குறித்த சீன ஆய்வுக் கப்பலின் வருகையை நவம்பர் மாதம் வரை ஒத்திவைக்குமாறு அரசாங்கம் கோரியிருந்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே 'ஷி யான் - 6' ஆய்வுக் கப்பலின் இலங்கைக்கான விஜயத்தை சீன தரப்பு இரத்து செய்துள்ளதாக அறிய முடிகி…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
21 OCT, 2023 | 04:51 PM 6 முறை இஸ்ரேலிய பிரதமரான பெஞ்சமினின் பிறந்தநாள் இன்று (ஒக். 21) (கே.சுகுணா) உலகில் இந்த நொடியில் மிகப் பெரிய பேரழிவு நடந்துகொண்டிருக்கும் இடம் எதுவென்றால், நிச்சயமாக அது காசாதான். காசா என்ற ஓரிடம் முன்னொரு காலத்தில் இருந்தது என்றே எதிர்காலத்தில் நாம் சொல்ல நேரிடுமோ என்ற அச்சத்தை இன்றைய நிலை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், இஸ்ரேல் தாக்குதலில் காசா நிலைகுலைந்துபோயுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் காசா முற்றாக அழிக்கப்பட்டுவிடும் என்ற அச்சமே உள்ளது. இந்த போரில் இஸ்ரேல் மிகப் பெரிய இராணுவ பலத்தோடு உள்ளது என்பது மறுக்க முடியாது. உலகின் வலிமையான இராணுவ கட்டமைப்பை கொண்ட நாடுகளில் இஸ்ரேல் முக்கியமான நாடாக…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
ஆரிய மாயையும், இஸ்ரேல் உருவாக்கமும் – வரலாற்று விபரீதங்கள் MinnambalamOct 16, 2023 07:15AM ராஜன் குறை யூதர்களின் குடியேற்ற நாடாகிய இஸ்ரேல் அது உருவாகிய காலம் 1940-கள் முதலே பாலஸ்தீன மண்ணின் மைந்தர்களாகிய பாலஸ்தீன அரேபிய-இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பறித்தும், நிலத்தை ஆக்கிரமித்தும், அவர்களை பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கியும் வருகிறது. இன்றைய நிலையில் இஸ்ரேலின் மக்கள் தொகை கிட்டத்தட்ட ஒரு கோடி. பாலஸ்தீனியர்கள் பாலஸ்தீனத்தின் மேற்குப் பகுதியில் முப்பது லட்சம் பேரும், காஸாவில் இருபது லட்சம் பேரும் உள்ளனர். மொத்தம் ஐம்பது லட்சம் பாலஸ்தீனியர்கள். இதைத்தவிர இஸ்ரேல் குடிமக்களாகவும் முஸ்லிம்கள் உள்ளனர். இஸ்ரேல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் யூதர்களின் கு…
-
- 2 replies
- 853 views
-
-
புட்டின் திறந்த போர்முனை Published By: VISHNU 16 OCT, 2023 | 04:40 PM சி.அ.யோதிலிங்கம் இஸ்ரேல் – பலஸ்தீனப் போர், பலத்த அதிர்வலைகளை சர்வதேச மட்டத்திலும், பிராந்திய மட்டத்திலும் ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் இனங்களின் தேசிய மட்டங்களிலும் ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்கால பனிப்போரின் விளைவுகள் தான் இவை. இப்போர் சர்வதேச அரசியலின் போக்கை துலாம்பரமாக வெளிக்காட்டியுள்ளது. அமெரிக்கா கட்டியெழுப்பிய ஒரு மைய உலகம் சரிந்து போவதற்கான அடையாளம் இது வெனலாம். இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் இரு மைய உலகம் தோற்றம் பெற்றது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் ஒரு மைய உலகமாக மாறியது. ப…
-
- 1 reply
- 343 views
- 1 follower
-
-
பலஸ்தீனத்தின் கமாஸ்-இஸ்ரேல் மோதலில் உட்கிடக்கையாக மறைந்திருக்கும், உலக ஒழுங்கின் புவிசார் நகர்வுகள் Posted on October 14, 2023 by சமர்வீரன் 23 0 ஒக்ரோபர் 7 இல், கமாஸின் அதிரடித் தாக்குதலோடு இந்த மோதல் தொடங்கியது. இந்த தாக்குதலிற்கு பின்னே இருக்கும் புவிசார் நகர்வுகள் என ‘மேற்குலக ராஜதந்திர வட்டாரம்’ முன்வைப்பவை எவை?சவூதி அரேபியாவிற்கும்- இஸ்ரேலிற்கும் இடையே நடக்கவிருந்த ஒப்பந்தம்தான் இதற்கான விதை. இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை அமெரிக்காவின் தூண்டுதலோடு நடந்து கொண்டிருந்தது.இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட 3 தரப்புகளும் தங்களது நலனை அடிப்படையாக வைத்து நகர்வுகளை செய்து கொண்டிருந்தன. ஒவ்வொரு தரப்பையும் வரிசையாக பார்ப்ப…
-
- 0 replies
- 357 views
-
-
40 ஆண்டுகளுக்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை (கட்டுரை) நாகப்பட்டிணம் மற்றும் காங்கேசன்துறைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் துறைமுகங்கள், கப்பல் நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோர் குறித்த சேவையை இன்று ஆரம்பித்து வைத்துள்ளனர். நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் குறித்த நிகழ்வு இரண்டு முறைகள் ஒத்திவைக்கப்பட்டன. விமான நிலையத்தின் நடைமுறைகளே நாகப்பட்டினம் துறைமுகத்திலும் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 440 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், வினீத் காரே பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேலைத் தாக்குவதன் மூலம் பாலத்தீனர்களின் உரிமைகளைப் பற்றி அக்கறை கொண்ட பலரை நீங்கள் விலக்கி வைத்துள்ளீர்கள், அவர்களின் நோக்கத்தைப் பல ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளியிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா? பிரிட்டிஷ் தொலைக்காட்சி சேனலின் இந்தக் கேள்விக்கு பதிலளித்து, ஹமாஸின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளுக்கான தலைவர் பாசம் நயீம், உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால், அவரது கூற்று எவ்வளவு உண்மை? 1…
-
- 5 replies
- 819 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 12 OCT, 2023 | 03:52 PM யாழ்பல்கலைக்கழகத்தில் இந்திய இராணுவத்தினரின் தரையிறக்க நடவடிக்கை இடம்பெற்று பலவருடங்களாகின்றது. இதன் போது 29 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். நான் அவ்வேளை மெட்ராசில் இருந்தேன் ( சென்னை)அவ்வேளை எனக்கு இராணுவ அதிகாரி லெப்ஜெனரல் டெபின்டர் சிங்கிடமிருந்து அழைப்பு வந்தது இலங்கைக்கு விரைவாக சென்று பொறுப்பேற்குமாறு அவர் உத்தரவிட்டார். மோதலில் படையினரை இழப்பது என்பது எங்களிற்கு பயங்கரமான கனவு - சிறந்த திட்டமிடல் காரணமாக அந்த இழப்பினை தவிர்த்திருக்கலாம் என்கின்றபோது அது மேலும் கடினமான விடயமாக காணப்படும். சில மணிநேரங்களில் நான் பலாலி விம…
-
- 3 replies
- 528 views
- 1 follower
-
-
நஸீர் அகமட்….! மக்கள் வழங்கிய ஆணையை மீறியதற்கான தண்டனை…! October 8, 2023 (மௌன உடைவுகள் -47) — அழகு குணசீலன்— “கண்டா வரச்சொல்லுங்க … அவரைக்கையோடு கூட்டி வாருங்க” இந்த பாடலை மட்டக்களப்பு தமிழ், முஸ்லீம் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த நஸீர் அகமட் எம்.பி. அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவியையும் பெற்றிருப்பவர். கோத்தபாய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 20 வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த 6 முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுள் இவரும் ஒருவர். முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் 20 ஐ எதிர்த்து வாக்களிப…
-
- 0 replies
- 203 views
-
-
அசாத் மௌலானா எவ்வாறு , ஏன் ஐரோப்பாவிற்கு தப்பி ஓடினார் ? நடந்தது என்ன ! BatticaloaOctober 6, 2023 - வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் அடைவதற்காக மௌலானா பொய்யான கதையை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று ஐரோப்பிய நாட்டில் புகலிடம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது - எவ்வாறாயினும், சந்திப்பு நடந்ததாகக் கூறப்படும்காலப்பகுதியில் தான் இலங்கையில் இருக்கவில்லை என்பதை சுரேஷ் சாலே மறுத்துள்ளார் என்பதைசொல்வது நியாயமான முறையில் அவசியமாகும் . - குண்டுவெடிப்புக்குப் பிறகு சிறையில் இருந்த பிள்ளையானைச் சந்தித்தபோது ரிஎம் வி பி . தலைவர், இதைப் பற்றி யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று…
-
- 0 replies
- 297 views
-
-
தமிழர் நினைவுகளில் பொறிக்கப்பட்டுள்ள திலீபனின் உண்ணாவிரதமும் மரணமும் டி.பி.எஸ்.ஜெயராஜ் திலீபன் என்று அழைக்கப்பட்ட இராசையா பார்த்தீபன் 1987 செப்டம்பர் 15 அன்று சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.தமிழீழ விடுதலைப் புலிகளில் பற்றுறுதிகொண்டவர் 12 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு செப்டம்பர் 26 அன்று தண்ணீர் கூட குடிக்காமல் இறந்தார்.திலீபனின் 36 வது நினைவு தினம் 2023 செப்டம்பர் 26 அன்று அனுஷ்ட்டிக்கப்பட்டது.இந்த கட்டுரையில் புலிகளின் தியாகி திலீபனைப் பற்றி இந்தக் கட்டுரை கவனம் செலுத்துகிறது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆகியோரால் 1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி கையொப்பமிடப்பட்ட…
-
- 0 replies
- 616 views
-
-
நேர்காணல் – பொ.ஐங்கரநேசன் (தலைவர், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்) October 2, 2023 — கருணாகரன் — தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரான பொ. ஐங்கரநேசன் தாவரவியல்துறையில் படித்துப் பட்டம் பெற்றவர். இந்தியாவில் ஊடகத்துறையில் கற்று, அதில் செயற்பட்டிருக்கிறார். 1990 களில் ‘நங்கூரம்’ என்ற இளையோருக்கான அறிவியல் இதழின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தார். தமிழ்த்தேசிய அரசியற் பற்றாளரான ஐங்கரநேசன், 2013 இல் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டினார். தொடர்ந்து வடமாகாண சபையின் விவசாய அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். சூழலியல்துறையில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ள ஐங்கரநேசன், அந்தத் துறைசார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார். பல ஆளுமைகளை நேர்காணல்…
-
- 0 replies
- 536 views
-
-
சமூகவியலாளர் கணநாத் ஒபயசேகரவின் ‘புரட்டஸ்தாந்திய பௌத்தம்’ எனும் கருத்தாக்கம் ‘இலங்கையில் பௌத்தம்’ என்னும் இந்தத்தொடர் பௌத்தம் பற்றி மானிடவியலாளர்களாலும் சமூகவியலாளர்களாலும், அரசியல் விஞ்ஞானிகளாலும் எழுதப்பட்ட ஆய்வுகள் பற்றி அறிமுகம் செய்வதாக அமைகின்றது. குறிப்பாக 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் பௌத்த சமய சீர்திருத்தவாதம், சமூகம், பண்பாடு, அரசியல், இன உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களில் அரசியல் பௌத்தத்தின் வகிபாகம் என்பன பற்றி ஆய்வாளர்களின் கருத்துக்கள் விரிவாக இந்தத் தொடரில் நோக்கப்படும். கணநாத் ஒபயசேகர, ஸ்டான்லி ஜே. தம்பையா, எச். எல். செனவிரத்தின, கித்சிறிமலல் கொட, சரத் அமுனுகம, ஜயதேவ உயன்கொட, குமாரி ஜயவர்த்தன, லெஸ்லி குணவர்த்தன ஆகிய இலங்கையின் சமூக …
-
- 0 replies
- 424 views
-