நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
இரு களமுனைகளிலும் போராடியேயாக வேண்டும் வடக்கு – கிழக்கு அபிவிருத்தி தொடர்பான அரச தலைவர் செயலணியின் கூட்டத்தில் தமிழர் தரப்பு பற்கேற்பதா இல்லையா என்கிற விவாதம் தொடங்கியுள்ளது. இது வெறும் விவாதமாக மட்டுமே இருந்திருந்தால், அது பற்றி மக்களும் பெரிதாக அலட்டிக்கொண்டிருக்கப்போவதில்லை. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாட்டின் நீட்சியாக இந்த விவகாரமும் எழுந்துள்ளதால், அதன் மீது மக்களின் கவனம் குவிக்கப்படுவதும் தவிர்க்க முடியாததுதான். இந்தச் செயலணியில் வடக்குத் த…
-
- 0 replies
- 544 views
-
-
அரச தலைவருக்கு மக்கள் சொன்ன செய்தி தமது எதிர்பார்ப்பு என்ன என்பதை மீண்டும் ஒரு தடவை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நேரடியாகவே தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறார்கள் தமிழ் மக்கள். வலிகாமம் வடக்கில் அமைந்துள்ள முக்கிய மீன்பிடித்துறையான மயிலிட்டியில் புதிய இறங்குதுறை ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் விழாவில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவின் உரையின் இடையிடையே பலத்த கரகோசத்தை எழுப்பியதன் மூலம் தமது எண்ணம், நோக்கம் என்ன என்பதை அவர்கள் தெளிவுபடுத்தி யுள்ளார்கள். மைத்திரிக்கும் தமிழ் மக்களுக…
-
- 0 replies
- 254 views
-
-
சிங்களவர்களுக்கு புரியவைக்க முடியுமா? இலங்கை என்கிற நாடு பிளவுபடாமல் பிரியாமல் இருக்க வேண்டுமானால் அதற்கான வாய்ப்பு இதுவே என்று சிங்கள மக்களிடம் எடுத்துக் கூறியிருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். அதிகாரப் பகிர்வு மூலமான தீர்வு ஒன்றின் ஊடாக இதனைச் சாதிக்க முடியும் என்பதையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். புதிய அரசமைப்பு முயற்சிகள் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் இரத்தினபுரியில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் நீண்ட காலமாகப் புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் புதிய அரசமைப்பே ஒரே வழி என்கிற அடிப்படையில், அதற்கு ஆத…
-
- 0 replies
- 263 views
-
-
இராணுவ சின்னங்களும் நல்லிணக்கத்தின் தேவையும் வடக்கில் உள்ள இராணுவச் சின்னங்களை அகற்றுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளமை தென்பகுதியில் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. பல்வேறு தரப்பினரும் முதலமைச்சரின் கோரிக்கை தொடர்பில் தமது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். வடக்கில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச்சின்னங்கள் சிங்கள மேலாதிக்கத்தை எடுத்துக்காட்டுவதாக இருப்பதால் அவை எமது நல்லெண்ணத்திற்கும் சமாதானத்திற்கும் இடையூறாக உள்ளன. இதனால் அதனை அகற்றினால் கூடியளவான சமாதான சூழலை ஏற்படுத்த முடியும் என்று வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சுட்…
-
- 0 replies
- 637 views
-
-
இலங்கை -- சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கையை ஏன் எதிர்க்கிறார்கள்? இலங்கை இந்திய வர்த்தக உடன்படிக்கையும் எமக்கு சாதகமாக அமையவில்லை இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான தாராள வர்த்தக ஒப்பந்தம் (SLSFTA) 2018 ஜனவரி 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே இலங்கை இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இதுபோன்ற இருபக்க தாராள ஒப்பந்தங்களை இலங்கை செய்துள்ளது. எனினும் அந்த ஒப்பந்தங்களுக்கு இல்லாத எதிர்ப்பு சிங்கப்பூர் ஒப்பந்தத்திற்கு ஏற்படக்காரணம் இலங்கையரிடையே காணப்படும் சிங்கப…
-
- 0 replies
- 832 views
-
-
ஏன் பிரிட்டிஷ் வாழ் இந்தியர்கள் பழமைவாதிகளாக இருக்கிறார்கள்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிரிட்டனில் வசிக்கும் ஆசியர்கள் குறிப்பாக இந்தியர், பாகிஸ்தானியர், பங்களாதேஷிகள் பெரும்பாலானோர் பிரிட்டிஷ் மக்களை விடவும் வாழ்க்கையில் பழமைவாத பார்வை நிறைந்தவர்களாக உள்ளனர். பிபிசி ஆசிய பிரிவின் ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த தகவல் எனக்கு ஆச்சரியம் தரவில்லை. படத்தின் காப்புரிமைG…
-
- 5 replies
- 894 views
-
-
மனோவைக் கண்டு அஞ்சுகின்றதா கூட்டமைப்பு? வடக்குக் கிழக்கு வீடமைப்பு, வீதி அபிவிருத்தி அமைச்சர் மனோவிடமிருந்து பறிபோகிறது” என்று தலைப்புச் செய்தியிட்டுள்ளது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இதைப்போல ஒரு செய்தியை “அமைச்சர் மனோவின் குழப்பத்தால் வடக்குக் கிழக்கு வீடமைப்பு தாமதம்” என்று தலைப்பிட்டு அதே பத்திரிகை வெளியிட்டது. அதற்கு மனோ கணேசன் தன்னுடைய முக நூலில், “இதென்னப்பா... அநியாயம்? வடக்கு, கிழக்கில் கடந்த மூன்று வருடங்களாக, இதோ, அதோ என்ற அறிவிப்ப…
-
- 0 replies
- 437 views
-
-
அரசியல் கிசுகிசு செய்திகள் வரிசையில் நின்ற முன்னாள் தலைவர் இந்த நாட்டின் முன்னாள் தலைவர், அண்மையில் நிப்போன் நாடொன்றுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அங்கு சென்றிருந்த அவருக்கு, அங்கிருந்த இலங்கையர்களால் பெரும் வரவேற்பளிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த அதிகாரியொருவருக்கு, கோபம் வந்ததாம். இதனால், ஜப்பானிலுள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு அவர் ஓர் உத்தரவைப் பிறப்பித்தாராம். முன்னாள் தலைவர், தற்போது சாதாரண எம்.பி.யொருவர் மாத்திரமே. அவருக்கு வேறு சலுகைகளை வழங்கவேண்டிய தேவையில்லை என்று கூறினாராம். எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பில், முன்னாள் தலைவரின் காதுக்கு எட்டியுள்ளது. 'ஹா அது என்ன பெரிய விசயமா…
-
- 56 replies
- 5.4k views
-
-
யூடியூப் பகிர்வு: கொடைக்கானல் 'கலக்கத்தை' பரப்பும் பெண்! "அரசியல், அதிகார மட்டத்திலான செல்வாக்குகளின் துணையுடன், அப்பாவி மக்களுக்கு இழைத்த துரோகத்துக்கு 'பதில்' சொல்வதில் இருந்து சிலர் போக்குக் காட்டலாம்... ஆனால், இணையத்தில் வெறும் 2 நிமிட வீடியோ பதிவால் உருவான போக்கு (ட்ரெண்டிங்), அந்தச் சிலரை உலுக்குவது சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறது, அட்டகாசமான ஒற்றைப் பாடல் வீடியோ" | அந்த வீடியோ இணைப்பு கீழே | இந்த முயற்சியெல்லாம் நமக்கு மிகவும் நெருக்கமான கொடைக்கானலுக்காக என்கிறபோது, நம் கவனம் அனிச்சையாக அதிகரிக்கிறது. அந்த வீடியோ பதிவைப் பார்க்கும் முன் அவலம் மிகு ஃப்ளாஷ்பேக் - சுருக்கமாக: "என் பொண்ணு இவாஞ்சலினுக்கு வயசு 26. ஆனா பார்த்தா பெரிய பொண்ணாட்டம் தெரியாது. அவள…
-
- 158 replies
- 29.5k views
- 1 follower
-
-
எல்.பி.ஏ.சுனித் நிஷாந்த… முல்லைத்தீவு மீனவர் சர்ச்சையின் பின்னாலுள்ள கோடீஸ்வர வர்த்தகர்! August 14, 2018 முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களின் வாடிகளை நேற்றிரவு சிங்களவர்கள் தீமூட்டி நாசகார செயல் புரிந்ததில், சுமார் 50 இலட்சத்திற்கும் அதிகமான சொத்தழிவை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. வாடிகளிற்கு தீமூட்டினார்கள் என இன்று மதியமளவில் மூன்று சிங்கள மீனவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் சிங்கள மீனவர்களை தடைசெய்ய வேண்டுமென தமிழ் மீனவர்கள் கோரிவருவதன் எதிரொலியாகவே இந்த சொத்தழிப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. பலகாலமாகவே முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களிற்கு தலையிடியாக இருந்து வரும் சிங்கள கோடீஸ்வரர் ஒருவரே இந்த ந…
-
- 0 replies
- 422 views
-
-
ஸ்ரீதேவியின் மரணம் – கருணாகரன்.. ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேல் போராட்டத்தில் பங்களித்த ஆதவனுக்கு இன்று ஒரு கால் இல்லை. போர்க்களத்தில் இழந்து விட்டார். கால் இழந்த பிறகும் தயக்கமோ தளர்வோ இல்லாமல் போராட்டப்பணிகளைச் செய்தார் ஆதவன். இறுதி யுத்தத்திற்குப் பிறகு தடுப்பில் (புனர்வாழ்வு முகாமில்) மூன்று ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்த பிறகு விடுதலையான ஆதவன், .செஞ்சோலையில் வளர்ந்த ஸ்ரீதேவியைத் திருமணம் செய்தார். 2015 இல் திருமணம் செய்த ஆதவன் ஸ்ரீதேவி தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த பிள்ளைக்கு வயது இரண்டரை. இரண்டாவது பிள்ளைக்கு மூன்று மாதங்கள். இயக்கத்திலிருந்தபோது (கால் இழந்த பிறகு) பயின்ற இலத்திரனியல்…
-
- 0 replies
- 380 views
-
-
கருணாநிதி அவர்கள் தன்னுடைய கடைசிக் காலங்களில் மருத்துவமனையில் இருந்த போதும், மரணித்த போதும் “நாம் தமிழர்” அமைப்பினர் மற்றும் சில இலங்கைத் தமிழர்கள் மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்தார்கள். ஈழத் துரோகி என்பது தொடங்கி தெலுங்கர் தமிழர்களைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்பது வரையான இனவெறி, சாதிவெறி கொண்ட இழிவான தாக்குதல்களை காணக் கூடியதாக இருந்தது. விமர்சனம், சுய விமர்சனம் என்பன இல்லாத எந்தவொரு போராட்டமும் முன்னோக்கிச் செல்ல முடியாது. தம்முடைய தவறுகளை மற்றவர்களின் தலை மீது சுமத்துவது என்பது மற்றுமொரு அழிவிற்கே நம்மை மறுபடியும் இட்டுச் செல்லும். சமுகநீதி, மாநில சுயாட்சி, தமிழ் மொழிக்கான அடையாளம், பகுத்தறிவு, பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட மக்கள் பிரிவினருக்கான சீர்…
-
- 3 replies
- 1.9k views
-
-
திராவிட, தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிராக உள்ள பெரிய தடைக்கல் எது? இதை நான் ஒரு மேலோட்ட கேள்வியாகப் பார்க்கவில்லை. மேலோட்டமாக பார்த்தால் பல காரணங்கள் தென்படும். எது முதன்மையானது என்று எதனிடப்படையில் ஆராய்வது? இக்கட்டுரையின் நோக்கம் அனைத்தையும் சுருக்கி ஒரே ஒரு விடையளிப்பதே. அதன் வழியாக இன்றும் நாம் காணும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் பார்க்கலாம். முதலில் ஒரு அடிப்படையான அறிவியல் கருத்தை அனைவரும் தெளிவாக அறிந்து கொள்ளுதல் முக்கியம். இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களின் வாழ்விற்கு அடிப்படையானது அறிவு (knowledge) [1,2]. ஓர் உயிர் தான் வாழும் சூழலுக்கு ஏற்ப அறிவைப் …
-
- 0 replies
- 706 views
-
-
“குரே ஐயா தனக்கு தெரிஞ்ச தமிழில பூந்து விளையாடப் போறார்” நாசம் அறுப்பான்…. சுத்திவர நாசங்கள் நடக்கிறபோது “நாசம் அறுப்பான்” எப்பிடி பாத்துக்கொண்டு சும்மா இருக்கிறது? முடியல.. அதுவும் முல்லைத் தீவு அபிவிருத்தி ஒன்றியம் குரே ஐயாவை சந்திச்சு போட்டு விட்டினமே ஒரு அறிக்கை அத பாத்த உடன பிளட் பிறசர் தலைக்கு அடிச்சிட்டுது… “முல்லைத்தீவு மாவட்டத்தை விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே பலர் பயன்படுத்துகிறார்கள். எமது மாவட்டம் அபிவிருத்தி அடைவதை அவர்கள் விரும்பாது இருக்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்வதேச விளையாட்டு மைதானம், யாழ் பல்கலைக்கழகத்தின் மீன்பிடிப்பீடம், என்பனவற்றினை அமைப்பதற்கான முன்ஏற்பாடுகள் இடம்பெற்றபோதும் தமிழ் அர…
-
- 0 replies
- 468 views
-
-
கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவது என்ற வரலாற்றுக் கடமை 08/08/2018 இனியொரு... 2009 ஆம் ஆண்டு வன்னியில் இனப்படுகொலை நடந்துகொண்டிருக்கிறது. ஐ,நா மூச்சுவிடாமலிருக்கிறது. ஆங்காங்கு ஐ.நாவில் சலசலப்புக்களின் பின்னர் அனைத்தும் ஓய்ந்து போய்விடும். அமெரிக்கா இலங்கை அரசை இனப்படுகொலைக்கு வழி நடத்திக்கொண் டிருந்தது. பிரித்தானிய அரசு ஆயுதங்களை மட்டுமன்றி இரண்டு நிரந்தர ஆலோசகர்களைக்கூட இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தது. இவர்கள் அனைவருடனும் இணைந்து இந்திய அரசின் முழு ஆலோசனையுடன் வன்னி இனப்படுகொலை சத்தமின்றி, சாட்சியின்றி நடத்தி முடிக்கப்படுகிறது. இனப்படுகொலை நடந்துகொண்டிருக்கும் போதே அது ஐரோப்பாவிலுள்ள போராடும் இயக்கங்கள் மற்றும் மக்கள் மத்தியில் தாக்கங்களை ஏற்படு…
-
- 4 replies
- 803 views
- 1 follower
-
-
படுவான்கரை பெருநிலத்தை முன்னேற்றுவதே புலம் பெயர் உறவுகளுக்கு நல்லது. -நடிகர் ஜெயபாலன் ஆதங்கம் August 05, 2018 . படுவான்கரைபெருநிலத்தை முன்னேற்றுவதன் மூலமே புலம்பெயர்ந்த தமிழர்கள் அவர்களுடைய இரத்தக் கடனை தீர்க்க முடியும் என இலங்கையினை சேர்ந்தவரும் இந்தியாவில் தேசிய விருதுவென்ற நடிகரும் எழுத்தாளருமான ஜெயபாலன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆறு மாதகாலமாக மூடப்பட்டிருந்து மீண்டும் திறக்கப்பட்டுள்ள கரவெட்டியாறு விஜிதா வித்தியாத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். குறித்த பாடசாலையில் நிலவிய ஆசிரிய பற்றாக்குறை காரணமாக குறித்த…
-
- 1 reply
- 680 views
-
-
புதிய ஏற்பாடும் பழைய நற்செய்திகளும் “2020 க்குள் இனப்பிரச்சினைக்கு (தமிழர்களுக்கு) தீர்வு” என்று தெரிவித்திருக்கிறார் சந்திரிகா குமாரதுங்க இந்த முதியவரின் வார்த்தைகளுக்குள் உள்ள வேதனை, கோபம், ஆற்றாமை, விமர்சனம், யதார்த்தம், உண்மை, பட்டறிவு, எச்சரிக்கை உணர்வு எல்லாம் சாதாரணமானவை அல்ல. மிகத் துயரமானவை. இந்த நாட்டின் பொறுப்பானவர்களால் விளைந்தவை. சந்திரிகா குமாரதுங்க கூறுவதன்படி (அவருடைய நற்செய்தியின்படி) இந்தத் தீர்வு எப்படி அமையும்? அது எங்கிருந்து வரும்? அதற்கான…
-
- 0 replies
- 234 views
-
-
மட்டக்களப்பு அறிக்கை. - வ.ஐ.ச.ஜெயபாலன் . மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் இளைஞர்களை சந்தித்து பேசி திரும்பியுள்ளேன். போருக்குப் பிந்திய நிலமைகள் வேகமாக மாறி வருகிறது. இரு பக்கத்துக் கனவுகளையும் சாதனைகளையும் கனலும் பலவிடயங்களையும் எழுத வேணும். ஆனாலும் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்ள தயக்கமாக உள்ளது. மிகவும் கவனமாக எடிற் பண்ணியே எழுதுகிறேன். . போருக்குப் பிந்திய சூழலையை மாறி வரும் புதிய இன அரசியல் சமன்பாடுகளை உருவாகும் புதிய சமூக பொருளாதார வாய்ப்புகளை தமிழரும் முஸ்லிம்களும் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. சமாதனத்தின் புதிய சமன்பாடுகளைப் புரிந்துகொண்டிருந்தால் இப்பவே ஒன்றுபட்டால் உண்டு பெரு வாழ்வு என கைகோர்த்து நெடுந்தூரம் முன் சென்றிருபார்கள். . …
-
- 2 replies
- 521 views
-
-
ஒருவேளை... ராஜாராஜ சோழனின், தளபதியா இருந்திருப்பாரோ?
-
- 2 replies
- 553 views
-
-
இரவு 03.08.2018 ஆகஸ்ட் நடுநிசியில் ரத்மலானையில் இருந்து ஒரு பெரும்பாண்மையினத்தவாிடமிருந்து ஒர் அவசரத் தொலைபேசி அழைப்பு - எனக்கு வந்தது ”தயவு செய்து ரத்மலானையில் சென்ரீட்டா வீதிக்கு உள்ள வீடொன்றிக்கு வரவும். இவ் வீட்டில் இரவு 11 -மணியில் இருந்து அரபியா்கள் அவா்களுகுள்ளேயே அவா்களது பாசையில் சத்தம்போட்டுக் கொண்டு பெண்களும் பிள்ளைகளும் கூச்சலிட்டு அலரும் சத்தம் கேட்கிறது. ஒரு பாரிய யுத்தகளமாக இவ்விடம் உள்ளது. அக்கம் பக்கத்தில் வாழும் பெரும்பாண்மைச்சமுகம் துாங்கமுடியாமல் புதினம் பாா்த்துக் கொண்டு இருக்கின்றனா் எனச் சொல்லப்பட்டது. உடன் அவ்விடத்தில் எனது மோட்டாா் பைசிக்களில் விரைந்தேன். அவா்கள் அராபியா்கள் அல்ல ஆப்கணிஸ்த்தான் நாட்டவா்கள் அவா்கள் 4 வருடங்களு…
-
- 0 replies
- 579 views
-
-
வடக்கில் அதிகரிக்கும் குடும்ப விரிசல்கள்! 'போதைக்கு என்ர கணவர் அடிமையானதால், தினமும் எனக்கு சித்திரவதைதான். என்ர உடம்பில காயமில்லாத இடம் ஒன்றுமே இல்ல. சித்திரவதை தாங்க முடியாமல் டிவோஸ் எடுத்தேன்' என்கிறார் கிளிநொச்சி கனகபுரத்தைச் சேர்ந்த 30 வயதுடைய புவனா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆசிரியராகக் கடமையாற்றும் அவர், கடந்த பதினைந்து வருடங்களாக பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தினம் தினம் சித்திரவதைகளை தாங்கிக் கொண்டிருக்கிறார். ஆனாலும், இனியும் வேதனைகளை…
-
- 0 replies
- 496 views
-
-
சந்தர்ப்பத்தை இனியாவது பயன்படுத்த வேண்டும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணும் முயற்சியானது தொடர்ந்தும் இழுபறி நிலையிலேயே இருந்து வருகின்றது. நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. கடந்த கால படிப்பினைகளை பாடமாகக் கொண்டு நல்லாட்சி அரசாங்கம் பிரச்சினைக்கு தீர்வைக் காணும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்தது. ஆனாலும் தற்போதைய நிலையை எடுத்துநோக்கினால் அரசியல் தீர்வுக்கான முயற்சி கைகூடுமா என்பது பெரும் கேள்விக்குறியான நிலையாக மாறியிருக்கின்றது. மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்…
-
- 0 replies
- 297 views
-
-
முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்தம் தேசிய சர்வதேச விவாதங்கள் தொடர்பில். - வ.ஐ.ச.ஜெயபாலன் . இலங்கையிலும் சர்வதேச நாடுகளிலும் முஸ்லிம்களின் நண்பனாக முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சினை தொடர்பாக விவாதித்த அனுபவங்களில் இருந்து சில சொல்ல முன்வருகிறேன். இதனை ஆரோகியமான விவாதமாக்குவதும் பொருட்படுத்தாமல் ஒதுக்குவதும் முஸ்லிம்களின் உரிமை. . சரியத் அடிப்படையிலான முஸ்லிம் விவாக சட்டங்கள் பற்றிய விவாதங்கள் இன்று இலங்கையில் மட்டுமல்ல உலகளாவியும் இடம்பெறுகின்றன. சரியத் போன்ற முஸ்லிம் முன்னவர்களின் சட்டங்களை கோட்பாட்டு ரீதியாகவோ அல்லது நடைமுறையிலோ புனித நூலுக்கு இணையாகவோ தொடற்ச்சியாகவோ கருதுகிற பழமை வாதிகளுக்கும் இணையோ தொடற்ச்சியோ இல்லை என்கிற இளைய தலைமுறைக்கும் இடையிலான உள் விவாத…
-
- 2 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 169 views
-
-
பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்-பக்துன்கவா ஆகிய 4 மாகாண சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ), ஊழல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்), முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ மகன் பிலவல் புட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ் தான் மக்கள் கட்சி (பிபிபி), மதவாத கட்சிகளை உள்ளடக்கிய முத்தாஹிதா மஜ்லிஸ்-இ-அமால் (எம்எம்ஏ) கூட்டணி, அவாமி தேசிய கட்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. இதில், பிடிஐ 86 இடங்களில் வெற்றி பெற்று 34 இடங்களில…
-
- 0 replies
- 273 views
-