நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
குரோசியாவின் வெற்றியும் தமிழர்களின் சுயமதிப்பீடும்! உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி ரஷ்யாவில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்த பெரிய அணிகள் தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேற, அதிகம் எதிர்பார்க்கப்படாத, வயதானவர்களின் அணி என எள்ளி நகையாடப்பட்ட குரோசியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியைத் தோற்கடித்ததன் மூலம் தம் மீதான விமர்சனங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தது அந்த அணி. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், அந்த அணி இந்தச் சாதனையை…
-
- 1 reply
- 302 views
-
-
ஜனாதிபதி பூமியிலிருந்து தோன்றினாலும், பிரதமர் பராக்கிரம யுகத்திலிருந்து வந்தாலும் நாட்டில் போதைப் பொருள் (குடு) தோன்றுவது சிறைச்சாலை பூமியிலிருந்து அல்ல. நீதிமன்றினால் சட்டரீதியாக தண்டனை வழங்கப்பட்டு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு பூமியிலிருந்து மொபைல் போன்கள் கிடைக்கவில்லை. 2 கிராம் போதைப் பொருள் வைத்திருந்தவருக்கு மரண தண்டனை வழங்கப்படுகின்ற போதிலும் அந்தப் போதைப் பொருள் பூமியிலிருந்து கிடைத்துவிடவில்லை. போதைப் பொருள் கன்ரேனர்கள் தோன்றியதும், தோன்றுவதும் பூமியிலிருந்தல்ல. போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் நாட்டுக்குள் வருவது துறைமுகத்தினூடாக. அல்லது விமான நிலையம் ஊடாக அல்லது கடல்மார்க்கமாக. அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு துறைமுக பொலிஸ்,…
-
- 1 reply
- 676 views
-
-
சமகால நிகழ்வுகள் குறித்து தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் ஐயா மணியரசன் அவர்களின் செவ்வி!
-
- 0 replies
- 1.4k views
-
-
அகதிகளாகச் சென்று அடிமைப்பட்டு அவலப்படும் பெண்கள் அவுஸ்திரேலியாவுக்கு ஆருயிரை பணயம் வைத்து ஆழ்கடல் பயணம் திறந்த வெளிச்சிறையான தமிழ்நாட்டில் ஆயுள் முழுக்க ஏழை அடிமையாகக் கிடந்து சாகிறதை விட பணக்காரனாக்கும் அவுஸ்திரேலியாவை நோக்கிப்போகவே விருப்பப்படுகிறோம் என்கிறார்கள் உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் தமிழக முகாம்களில் வாழும் இலங்கை அகதிப் பெண்கள்! இலங்கையில் போர் தொடங்கிய பின் அங்கிருக்கும் தமிழர்கள் பல்லாயிரம் பேர் உயிர் பிழைப்பதற்காகத் தமிழ் நாட்டிற்குள் அகதிகளாக வந்து சேர்ந்தனர். ராமநாதபுரம், கோயம்புத்தூர், ஈரோடு, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் முகாம்கள் உருவாக்கப்பட்டு பல ஆண்டுகளாக தங்க வை…
-
- 0 replies
- 327 views
-
-
இலங்கையின் சனத்தொகையின் சமகால மாற்றங்களும் சமூக பொருளாதார விளைவுகளும் அருளம்பலம் பாலச்சந்திரமூர்த்தி [விரிவுரையாளர் கோப்பாய் ஆசிரிய கலாசாலை] இன்று உலக சனத்தொகை தினம் ஒரு நாட்டின் சமூகபொருளாதார மற்றும் அரசியல் கலாசார விடயங்களில் தாக்கம் செலுத்தும் ஒன்றாக சனத்தொகை விளங்குகின்றது. எமது நாட்டின் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றியமைக்கும் மிக முக்கிய வளமான மனிதவளத்தினையும் இச் சனத்தொகையே கொண்டிருக்கின்றது. இலங்கையின் குடித்தொகை அளவானது முதலாவது குடிக்கணிப்பு இடம்பெற்ற 1871 ஆம் ஆண்டுகளில் 2.400 மில்லியன்களாக மட்டுமே காணப்பட்டதுடன் 2011 ஆம் ஆண்டு இறுதிக…
-
- 0 replies
- 13.5k views
-
-
ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கற்பிக்க வேண்டியது பெற்றோரின் கடமை சிறுவர்களுக்கான கல்வி நிலையத்தின் பரிசளிப்பு விழா கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம், நாவலர் வீதி, தியாகிகள் அறக் கட்டளை மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை இன்றைய தினம் சிறுவர்களுக்கான இக் கல்வி நிலையத்தின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன். சிறுவர்களுக்கான ஆங்கில மொழி மற்றும் பேச்சுத்திறன் ஆகியவற்றை விருத்தி செய்யும் நோக்கில் இக் கல்வி நிலையம் இயங்கி வருவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. சிறு குழந்தைகளுக்கு ஆங்கில மொழி பே…
-
- 0 replies
- 816 views
-
-
புகையிலைப் பயிருக்கு – மாற்றீட்டுப் பயிர் என்ன? புகையிலைப் பாவனையைக் கட்டுப்படுத்தி, அடுத்த கட்டமாக அதை இல்லாதொழிக்கும் படிமுறையை நோக்கிய நடவடிக்கைகள் தீவிரம்பெற்று வருகின்றன. ஏற்கெனவே சரமாரியான சட்டங்களை நடை முறைப்படுத்தி, புகையிலைப் பொருள்களின் சந்தை விலையைக் கைக்கெட்டாத வகையில் அதிகரித்திருந்த அரசு, புகைப்பொருள்கள் கிடைப்பதைத் தடுக்கும் வழிமுறைகளையும் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்தச் செயன்முறைத் தொடர்ச்சியின் மற்றொரு கட்டமாக, புகைப்பொருள்களுக்கு அடிப்படையாக இருக்கும் புகையிலை…
-
- 0 replies
- 286 views
-
-
கோத்தபாயவின் அரசியல் பிரவேசம் ஆரம்பம் - செய்தி. . திரு கோத்த பாய அவர்களே, ”சிறையில்தான் ஜெயபாலனின் மீதி வாழ்வு முடியும்” என்ற தீர்மானத்தோடு 2013 நவம்பரில் என்னைக் கைது செய்தீர்கள். தேசிய சர்வதேச அழுத்தத்தால் என்னை விடுதலை செய்தபோதும் என் கடவுச் சீட்டில் கரும்புள்ளி வைக்க உத்தரவிட்டீர்கள். மீண்டும் எனது மண்ணுக்கு வர உங்கள் ஆட்ச்சி கவிழும்வரைக்கும் காத்திருக்க நேர்ந்தது. . இப்ப நீங்க தேர்தலில் நிற்க்கப்போகும் செய்தி வந்திருக்கு. நீங்க வெற்றி பெற்றால் நான் இலங்கைக்கு வரமுடியுமா? என்னை மீண்டும் கைது செய்வீர்களா? . சென்றமுறை “ஜெயபாலன் உங்கள் மீது குற்றச்சாட்டுகள் இல்லை ஆனால் உங்களுக்கு தமிழரையும் முஸ்ல…
-
- 5 replies
- 933 views
-
-
தமிழர்களை அழியவிட்டு தமிழை வளர்த்து என்ன பயன்?… அகரன்June 26, 2018 in: முகநூல் இன்று முகநூலில் ஒரு செய்தி பார்த்தேன் கனடா நாட்டின் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஆரம்பித்து தமிழை வளர்ப்பதற்காக நிதி சேகரிக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றதாக இருந்தது அச்செய்தி பெருமைக்குறிய அந் நிகழ்வின் நோக்கம் 30 லட்சம் டொலர்களை சேகரிப்பது ( அண்ணளவாக 400 கோடி இலங்கை ரூபா ) அதற்கான முதல்நாள் நிகழ்விலேயே தமிழை நேசிக்கும் கனடா வாழ் பரோபகாரிகள் 700,000 டொலர்களை தமிழை காப்பாற்றவென வாரி வளங்கிவிட்டனர் இதில் கனடியத் தமிழர் பேரவை மாத்திரம் 50,000 கனடிய டொலரை வழங்கியதாம் கடந்த ஆண்டு கனடாவுக்கு பக்கத்து நாடான அமெரிக்காவில் ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்க…
-
- 2 replies
- 782 views
-
-
எங்கள் வளங்கள் ; எமது எதிர்காலம் ச. சிவந்தன் , இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் சர்வதேச ரீதியில் அதிகரித்து செல்லும் மக்கள் தொகையானது உணவு முதலான அடிப்படைத் தேவைகளுக்கான கேள்வியைத் (demand) தொடர்ச்சியாக அதிகரிக்க வைப்பதுடன் இயற்கை வளங்களின் மீதான அழுத்தத்தினையும் அதிகரிக்கின்றது. இலங்கைத் தீவானது வளமான கடற்பகுதியைக் கொண்டமைந்துள்ளதுடன் நீருக்கும் நிலத்திற்குமான விகிதாசாரம் அதிகமான நாடாக குறிப்பிடப்படுகின்றது. இத்தீவானது உள்நாட்டு யுத்தம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அழிவுகளால் தடம் மாறிப் பயணித்து தற்போது கொடிய யுத்தத்தின் முடிவில் சிறிது சிறிதாக தன்னு…
-
- 0 replies
- 969 views
-
-
அம்பாறை மவட்டத்தில் தமிழர்களரும் முஸ்லிம்களும் நிலமும். TAMIL, MUSLIM AND LAND IN AMPARAI DISTRICT . வடக்கு, கிழக்கில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் காணிகளை காவுகொடுத்து, விகிதாசாரத்திற்கு ஏற்ப காணிகள் இல்லாமல் வாழும் முஸ்லிம்கள் பற்றிய - எனது இன்றைய வீரகேசரி (10.06.18) கட்டுரை ... - ஏ.எல்.நிப்றாஸ் சற்றுமுன் நண்பர் ஏ.எல்.நிப்றாஸ் வீரகேசரியில் எழுதிய கிழக்கு மாகாண கணி நில பிரச்சினை தொடர்பான முக்கியமான கட்டுரையை வாசித்தேன். மேற்படி கட்டுரையை அவரது முகநூல் பக்கம் Ahamed Nifras சென்று வாசிக்கலாம். கிழக்கு மாகாண நிலப்பிரச்சினை தொடர்பாக என்னுடைய குறிப்பை பதிவு செய்கிறேன். இனி என்னுடைய நாவல் எழுதி முடிக்கும்வரைக்கும் முகநூல் அரசியல் ஆய்வுகலில் இருந்து ஒதுங்கவுள்…
-
- 0 replies
- 520 views
-
-
பாகிஸ்தானின் வறிய மாகாணமான பலூசிஸ்தான், தவறான காரணங்களுக்காக அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. தலைநகர் குவெட்டாவில் இயல்பான வாழ்க்கையை வாழ முயற்சிக்கும் மக்களை பிபிசியின் ஷுமைலா ஜாஃப்ரி சந்தித்தார். ஒரு வங்கி மேலாளரின் ரகசிய வாழ்க்கை ரகசியமாக செயல்படும் ராக் இசைக்குழு 'மல்ஹார்'இன் பிரதான பாடகரான யாசிர், பகல் நேரத்தில் வங்கி மேலாளராகவும், இரவு நேரத்தில் பாடகராகவும் அவதாரம் எடுக்கிறார். அவர் வாழ்ந்துவரும் பழமைவாத முஸ்லிம் சமுதாயத்தில், பாடுவதும், நடனமாடுவதும் தடை செய்யப்பட்டிருப்பதால், ராக் இசை மீதான தனது பேரார்வத்தை அவர் மறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கி…
-
- 0 replies
- 576 views
-
-
கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ 'சே' குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா. டாக்டராக இருந்து கொரில்லாப் போராளியாக உருவெடுத்த இந்தப் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் புரட்சியாளரின் பிறந்த நாள் இன்று. அவரது வாழ்வின் முக்கிய மைல்கற்களாக இருந்த நிகழ்வுகளை தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமை Keystone சே குவேரா, தமது வாழ்நாள் தோழராக விளங்கிய பிடல் காஸ்ட்ரோவை 1955இல் மெக…
-
- 0 replies
- 278 views
-
-
தமிழர்களிடம் சாதி என்றொரு வந்தேறி: வி.இ.குகநாதன் 06/10/2018 இனியொரு... இந்துக்களைப் பொறுத்தவரையில் அங்கிங்கு எண்ணாதபடி எங்கும், எல்லாவற்றிலும், நீக்கமற நிறைந்திருக்கும் சாதியானது தமிழர்களையும் விட்டுவைக்கவில்லை. “இப்போதெல்லாம் யார்தான் சாதி பார்க்கிறார்கள்” என்று மேம்போக்காகப் பேசுபவர்களின் முகத்திலடித்தாற்போல இந்தக் கிழமை நடைபெற்ற கச்சநந்தம் சாதிய வன்முறையும் (சிவகங்கை மாவட்டம்-தமிழகம்), யாழில் வரணி அம்மன் தேரினை கனரகப் பொறி(JCB digger) மூலம் இழுத்த நிகழ்வும் காணப்படுகின்றன. இதில் முதலாவதாக கச்சநந்தம் ஊரில் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படுமிருவர் தேநீர் கடையில் (தமது)காலிற்குமேல் கால் போட்டுக்கொண்டு தேநீர் குடித்தயினைக் கண்டு தமது சாதிப்பெருமை களங…
-
- 0 replies
- 533 views
-
-
இவரை நான் அம்பாரையில் அமைந்துள்ள ஏஎஸ்பி என்னும் வியாபார நிர்வனத்தில் காணக்கிடைத்தது. இவரைக்கண்டவுடன் எனக்கு பழய யாபகம் ஒன்று நினைவுக்கு வந்தது. 1990ம் ஆண்டு புலிகளினால் கல்முனை பொலிஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டு, அதில் கடமையாற்றிய முஸ்லிம் சகோதரர்கள் உட்பட 200 பொலிசாருக்கு மேல் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நினைவுகள் எனது யாபகத்துக்கு வந்தது. கல்முனை பொலிஸ் நிலையம் புலிகளினால் தாக்கப்பட்ட அதேநேரம் கல்முனை வாடி வீட்டில் அமைந்திருந்த 30 பேர் கொண்ட ராணுவ முகாமும் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த ராணுவ முகாமில் கடமையாற்றியவர்தான் இந்த குமார என்பவர். இவருக்கு நன்றாகவே தமிழ் பேசத்தெரியும். க…
-
- 2 replies
- 1.2k views
-
-
போர்முடிவுற்று ஒன்பது ஆண்டுகளாகிறது. மெல்ல மெல்ல ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். மனம் பதறும் சம்பவங்களை வேதனையுடன் பகிர்கிறத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் இறுதி யுத்தகாலத்தில் ஊடகப் பணியாற்றியவர்களின் குரலும் மேலேழவேண்டிய காலத்தை அடைந்திருக்கிறோம். இறுதி யுத்த காலத்தில் புலிகளின் குரல் வானொலி, ஈழநாதம் பத்திரிகை, புதினம் போன்ற சில இணையதளங்கள் இயங்கின. இவற்றுக்கு செய்தியாளர்களாகப் பணியாற்றிய பலர் இன்று உறை நிலையில் இருக்கின்றனர். ஆனால் அவர்களின் மௌனம் கலைக்கப்படவேண்டியது. அவர்கள் சாட்சியமற்ற இனப் படுகொலையின் மிக முக்கிய சாட்சியங்கள். ஈழநாதம் பத்திரிகை நிறுவனம் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் ஒவ்வொரு செய்தியாளர்களை நியமித்திருந்தது. அவ்வகையில் புலிகளின் குரல், ஈ…
-
- 1 reply
- 595 views
-
-
மனோ, அன்பு தோழா, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையே இன்றைய உடனடி முன்னுரிமையாக மாறியுள்ளது. .இத்தோடு நாட்டிலும் தமிழகத்திலும் வேறு நாடுகளிலும் அச்சத்துடன் வாழும் முன்னைநாள் போராளிகளதும் போராளிகளுக்கு உதவியவர்கள் என சந்தேகிக்கப்படுகிறவர்களதும் நாடு திரும்ப முடியாத அச்சம் நிறைந்த வாழ்வயும் மீட்க்க வேண்டும் இவைதாம் இன்றைய அவசரமான முன்னுரிமைகள். இதனை நீங்கள் உணர்ந்துள்ளமை மகிழ்ச்சிதருகிறது . .. சிங்கள போர்குற்றவாளிகள் பிரச்சினையின் தீவிரத்தை தணிக்கவே தவிர்க்கவே இலங்கை அரசு தமிழ் அரசியல் கைதிகளை தமிழ் போர்குறவாளிகள் முத்திரையுடன் தடுத்து வைத்துள்ளது. இது ஒன்றும் இரகசியமல்ல. முன்னைப்போலன்றி சர்வதேச சமூகம் போர்குற்ற விசாரணையைவிட இலங்கையை சீனா பக்கம் தள்ளிவிடாமல் இருப்பதையே முன்ன…
-
- 0 replies
- 518 views
-
-
-
உருத்திரபுரம் என்னும் சிறு கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு 10 பிள்ளைகளில் 9வது பிள்ளையாக பிறந்து வறுமையின் கொடுமையில் வாழ்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் அவர்களின் வாழ்க்கை.... துறைக்கு அப்பால்
-
- 0 replies
- 280 views
-
-
மண் மீட்புப் போராட்டம் நிகழும் இரணைதீவு – ஒரு நேரடி விஜயம் இருபத்தாறு வருடங்களின் பின்னர், தமது சொந்தப் பிரதேசத்தில் இரணைதீவு மக்கள் அடியெடுத்து வைத்திருக்கின்றார்கள். ஆயினும் அவர்கள் அங்கு மீள்குடியேறுவதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. இதனால், அங்குள்ள செபமாலைமாதா ஆலயத்தில் தங்கியிருந்து மீள்குடியேறுவதற்காக அவர்கள் போராடுகின்றார்கள். மீள்குடியேற்றத்திற்கான அவர்களுடைய போராட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகியது. மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம், முழங்காவில், பூனகரி ஆகிய பிரதேசங்களின் ஊடாக சங்குப்பிட்டி கேரதீவு வழியாக கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில், யா…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 0 replies
- 526 views
-
-
யாழில் இருந்து நீதிபதி இளஞ்செழியன் இடமாற்றம்? கிளம்பும் கடும் கண்டனங்கள் By Nithiyaraj - May 2, 2018 4 யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வேறு ஒரு மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவக கிளையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் யாழ். மேல் நீதிமன்றின் நீதிபதியாக மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நியமிக்கப்பட்ட பின்னரே யாழ். மாவட்டம் ஓரளவு அமைதியான சூழலில் …
-
- 1 reply
- 678 views
-
-
-
- 6 replies
- 1.1k views
-
-
பீச் போய்ஸ் மாபியா சுற்றுலா பயணிகளுக்கும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தி தென் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் மாபியா குழுக்களின் அட்டகாசத் தால் சுற்றுலாத்துறை பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்துள்ளது. தென் பிராந்திய கடற்கரைகளுக்குள் புதைந்து கிடந்த இந்த இடையூறுகள் இம்மாதம் அடுத்தடுத்து இடம்பெற்ற இரு வெறுக்கத்தக்க சம்பவங்களூடாக வெளியில் வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் பரவலாக பேசப்படுகின்றது. கடந்த ஒரு வருட காலத்துக்குள் நாட்டின் பல பகுதிகளிலும் கடற்கரைகளில் "பீச் பார்ட்டி" என்னும் புதி…
-
- 0 replies
- 507 views
-
-
சீமானின் ஆதி பிதற்றலும் தலைவர் பெயர் சொல்லி அடிக்கும் பம்மாத்தும் 2009 இன் முன் சீமான் என்றால் எவருக்குமே தெரியாது (ஆனால் சிங்கள கடையில் தன்னை கண்டு கொண்டனராம்) அதன் பின் தலைவர் பெயரை சொல்லி புலிகளின் பெயரை சொல்லி பிழைப்பு அரசியல் செய்து புலம்பெயர் நாடுகளில் உண்டியல் குலுக்கி புலிகளின் பினாமிகளிடம் இருந்து பணம் பெற்று இன்று தமிழகத்தில் இருந்த ஈழ தமிழர்களின் நேச சக்திகள் கட்சிகள் அனைத்தினதும் ஆதரவை தமிழ் மக்களுக்கு இழக்க செய்து வெற்று முழக்க அரசியல் செய்யும் பிழைப்பு வாதி சீமான் கொடுத்த ஆதி பிதற்றல் பேட்டி இது இதை எந்த ஈழத் தமிழனாவது ஈழத்தில் பிறந்து புலம்பெயர்ந்த புலம் பெயர் தமிழனாவது நம்பினால் அவ…
-
- 40 replies
- 3.6k views
-