நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
அம்பாறையில் மிகவும் திட்டமிட்டவகையில் ஆரம்பிக்கப்பட்டு கண்டி மாவட்டத்தில் நடந்துமுடிந்த கலவரங்கள் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில், மறந்துபோனதனை மீட்டுப் பார்பதுதான் இந்த கட்டுரையாகும். கண்டி மாவட்டத்தில் முற்றாக எரிக்கப்பட்ட தங்கள் வியாபாரத் தளங்களை மீளவும் கட்டியெழுப்பும் பணிகளை முஸ்லிம் வர்த்தகர்கள் துவங்கியபோது முதற்கட்டமாக அரசாங்கம் ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவும், இழப்பீட்டினை மதிப்பீடு செய்ததன் பின்பு உரிய நிவாரண உதவிகளைச் செய்வதாகவும் அறிவித்திருந்தது. அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட இந்த இழப்பீட்டு தொகையானது எரியூட்டப்பட்டதை சுத்தப்படுத்தும் வேலைக்கே போதாமலிருந்தது. அன்று பல பள்ளிவாசல்கள் முழுமையாகச் சேதமடைந்…
-
- 0 replies
- 295 views
-
-
உலகமே கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால் மிரண்டு போயிருக்கும் நிலையில், கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எந்த மதத்தவர் என்றாலும் அவர்களது உடல்களை தகனம்தான் செய்ய வேண்டுமென்றும், எவர் உடலையும் அடக்கம் செய்ய கூடாது என்றும், மும்பை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையொன்று சர்ச்சையை கிளப்பியது. பிறகு, மத ரீதியிலான பிரச்சனையாக இந்த விவகாரம் மாறியதால், அந்த அறிக்கை திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கை எப்படி நடத்த வேண்டும், அடக்கம் செய்யப்பட்ட நோயாளியின் உடலிலிருந்து வைரஸ் பரவுமா, அல்லது உடல் தகனம் செய்யப்படும்போது வைரஸ் முற்றிலும் அழிந்துவிடுமா, இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிற…
-
- 0 replies
- 248 views
-
-
[size=4] முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் சிறிலங்காவின் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் 1987- இல் இடம்பெற்ற ஒப்பந்தத்தின் மூலமாக ஏற்பட்ட 13-ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கல் முழுமையாக தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிவர்த்தி செய்யவில்லை என்பது தமிழர் தரப்பினரின் ஆதங்கமாக இருந்தது.[/size][size=4] தமிழர் தரப்பினரினால் ஏற்றுக்கொள்ள முடியாத அதிகாரங்களைக் கொண்ட இந்தச் சட்டத்தைச் சிங்கள அரசு கிடப்பில் போட்டது. தற்போது இச்சட்டத்தை அமுலாக்க வேண்டுமென்கிற கருத்தை இந்திய அரசும், பல்வேறு உலக நாடுகளும் கூறிவருகின்றன. இந்திய அரசினால் பரிந்துரைக்கப்பட்ட இச்சட்டத்தை அமுலாக்க சிங்களத் தரப்பினர் எதிர்ப்புக்களைத் தெரிவித்துவரும் இவ்வேளையிலாவது இந்தியா திருந்துமா என…
-
- 0 replies
- 447 views
-
-
கொரோனா பெருந்தொற்றின் போது நாட்டில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும், அவர்களை தனிமைப்படுத்தும் முயற்சிகளும் அதிகரித்துள்ளன. முஸ்லிம் வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டிக்காரர்களிடம் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கும் இதுபோன்ற பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. இதுபோன்ற முஸ்லிம் எதிர்ப்பு காணொளிகள் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கர்நாடகா, பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களின் பல இடங்களிலிருந்து வெளிவருகின்றன. 'முஸ்லிம்கள் கொரோனாவைப் பரப்புகிறார்கள்' என்பது போன்ற வதந்திகளும் பரப்பப்படுகின்றன. ஜாம்ஷெட்பூரில் விஷ்வ இந்து பரிஷத்தின் பதாகை மற்றும் நாலந்தாவில் பஜ்ரங் தளத்தின் காவிக் கொடிகள் மூலம், காய்கனிகளை விற்ப…
-
- 0 replies
- 400 views
-
-
டெல்லி மாணவி பாலியல் வல்லுறவு; சில சிந்தனைகளும் கண்டனங்களும்! டெல்லியில் மருத்துவ மாணவி கொடூரமாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு பல நாட்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய பிறகு மாணவி உயிர் பிரிந்தது உலகையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். தொடங்கி வலது சாரிகளின் பேச்சுக்கள் மிகவும் அருவருப்பைக் கிளப்பி வருகிறது. மேலும் பலர் கூறும் கருத்துக்கள் சூழ்நிலையின் தீவிரத்தை உணராததாகவே படுகிறது. டெல்லியில் கடும் போராட்டம் நடந்தது, காவலர் ஒருவர் பலியானார். பெண்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதனை மத்தியதர வர்க்க வெளிப்பாடு என்று கொஞ்சம் சிந்திப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அறிவு ஜீவிகள் பலர் பேஸ்புக், பிளாக் என்று கருத்து மழை பொழிந்து வருகின்ற…
-
- 0 replies
- 522 views
-
-
குறுகுறுப்பு, படபடப்பு எதுவும் இல்லை. ஐ.நா. சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனை இனிய முகத்துடன் இலங்கையில் வர வேற்றார் மகிந்தா ராஜபக்ஷே. ஒரு மினி டூர் ஏற்பாடு செய்திருந்தார்கள். 24 மணி நேரம். அனுமதிக்கப்பட்ட பகுதி கள் மட்டுமே காண்பிக்கப்பட்டன. எரிந்து போன கார் டயர்களையும் குப்பைக் கூளங்களையும் போர்க் களத்தில் பார்த்து இருக்கிறார் பான் கீ மூன். முகாம்களில் வழிய வழியத் தமிழர்கள். திரும்பிச் செல்லும்போது, வீதி முழுவதும் ராஜபக்ஷேவின் சிரிக்கும் கட்-அவுட்கள். 'இதுவரை இப்படிப்பட்ட கொடுமையான காட்சியை நான் கண்டதில்லை!' என்று பான் கீ மூன் கருத்துத் தெரிவித்த பிறகும், உதவிப் பணிகள் புரிவதற்குக்கூட ஒருவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை இலங்கை. காரணம், ஐ.நா. குறித்த பயம் இலங்கைக்கு இல…
-
- 0 replies
- 525 views
-
-
இலங்கை அரசியல் மிகவும் கொந்தளிப்பான ஒரு நிலைக்கு மீண்டும் வந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல், அதைத் தொடர்ந்து அந்தத் தேர்தல் பற்றிய குற்றச்சாட்டுகள், இப்போது ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது, இந்தக் கைதுக்கு எதிரான ஆர்;ப்பாட்டங்கள் என அடுத்தடுத்து பரபரப்பான நிகழ்ச்சிகள்@ பரபரப்பான செய்திகள். யுத்தம் முடிந்தாலும் நாடு அமைதிக்கோ வழமைக்கோ திரும்பவில்லை. ஜனநாயகத்;தைச் சுற்றி ஆயிரக்கணக்கான கேள்விக்குறிகளே நிற்கின்றன. ஒரு மாதத்துக்;குள் ஒரு ஊடகவியலாளர் கடத்தப்பட்டு தகவல் இல்லாத நிலை. இன்னொரு ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அரசாங்கத்துக்கெதிரான குற்றச்சாட்டுகள், கண்டனங்களோடு தெருவில் இறங்கியிருக்கிறார்கள் சனங்களும் ஊடகவியலாளர்களும். வடக்கு கிழக்கிலிருந்த கொந்தளிப்பான நி…
-
- 0 replies
- 521 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி வசூலிப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இலங்கையின் ஆடைக் கைத் தொழிலில் காத்திரமான தாக்கத்தினை ஏற்படுத்தும். தரத்தில் கணிசமான அளவு முன்னேற்றத்தினைக் கண்டமைக்காக இலங்கையினது ஆடைக் கைத்தொழில் பாராட்டைப் பெற்றிருந்தாலும் தற்போது அது பிரச்சினையில் சிக்கியுள்ளது. ஆடைக் கைத்தொழில் எதிர்கொள்ளும் பிரச்சினைக்குக் காரணம் அது செய்த தவறல்ல; மாறாக, சிறுபான்மை இனங்களுக்கெதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட போர்க் குற்றங்களின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றது Ethical Corporation வெளியிட்டுள்ள ஒரு ஆய்வுக் குறிப்பு. அது மேலும் தெரிவிப்பதாவது - சிறிலங்காவிலிருந்து வரும் இறக்குமதிப் பொருட்களுக்கு இருந்த தீர்வை விலக்கை நிறுத…
-
- 0 replies
- 478 views
-
-
இடைக்கால கணக்கு அறிக்கையை முடிந்தால் சபையில் சமர்ப்பித்து காட்டுங்கள் ;ஏரான் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தினையோ அல்லது கணக்கு அறிக்கையினையோ முடிந்தால் சபையில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்காட்டுமாறு முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்கிரமரட்ண வீரகேசரிக்கு வழங்கிய பிரத்திய செவ்வியின் போது சவால் விடுத்துள்ளார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க முடியாததன் காரணமாகவே பிரதமராகவும், இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகவும் இருந்த பின்னர் மீண்டும் பிரதமர் பதவியை சட்டவிரோதமாக பெற்றிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ பதவிக்காலத்தில் ஒருவருடம் முன்னதாக 2015இல் ஜனாதிபதி தேர்தலுக்குச் சென்றிருந்தார். எதிர்பாராதவிதமாக அவர் தேர்தலில் தோல்வியைத்…
-
- 0 replies
- 424 views
-
-
சமீபத்தில் இணையத்தில் “மோசசு சோனி” (Moses Jony) என்பவர் பனைமரம் தமிழர்களின் அடையாளம் என்று பதிந்து இருந்தார். அது என்னுள் உறங்கி கொண்டிருந்த அதை பற்றி கடந்த காலங்களில் நான் படித்து தெரிந்து கொண்ட விடயங்களை ஆழ்ந்த மையலில் இருந்து தட்டி எழுப்பி விட்டது. அந்த அன்பருக்கு எனது நன்றிகள். பனை மரத்திற்கும் தமிழர்களின் நாகரீகத்திற்கும் இடையே உள்ள தொடர்பு தமிழ் தேசியம் பேசுகிற போலியான பல அன்னகாவடிகளுக்கு தெரியாத விடயம். பனைமரத்தையும் அதை ஒட்டிய வரலாற்று உண்மைகளையும் தோழர்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த கட்டுரை. பனை மரம் என்பது ஒரு மரம் என்ற அளவில் நின்றுவிடாது பண்டைய தமிழர்களின் கலை, இலக்கிய, விஞ்ஞான அறிவு சார்ந்த கூறுகளை தனது முதுகில் தூக்கி சுமந்த ஓடம். பனையேறும் தொழில் ஏதோ க…
-
- 0 replies
- 2.3k views
-
-
படத்தின் காப்புரிமை CARL COURT இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் (மே 21) ஒரு மாதம் நிறைவு பெறுகிறது. 2009ஆம் ஆண்டு நிறைவடைந்த உள்நாட்டு யுத்தத்தின் பின்னர், இலங்கையில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல் இதுவாக அமைந்திருந்தது. மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், மூன்று நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 257 பேர் உயிரிழந்ததுடன், 500க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர். ஏப்ரல் மாதம் 21ஆம் தேதியன்று காலை 8.45க்கு கொழும்பு கொச்சிகடை தேவாலயத்தை இலக்கு வைத்து முதலாவது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத…
-
- 0 replies
- 504 views
-
-
ஐ.நாவில் மஹிந்தவை காப்பாற்றினேன்: 99 சதவீத இந்தியர்கள் ராஜபக் ஷவை ஆதரிக்கின்றனர் வெற்றி அடையப்போவது கோத்தாபயவே கூட்டமைப்பால் பயனில்லை புலிகளின் வழியில் விக்கி பொய்யுரைக்கிறார் வரதராஜப்பெருமாள் சீனாவின் திட்டத்திற்கு மாற்று யோசனை உண்டு அமெரிக்காவின் கைக்கூலியாக மைத்திரி-ரணில் அரசு ராஜபக் ஷவினருடன் தமிழ்தரப்பு ஒப்பந்தம் செய்ய வேண்டும் தெற்காசியாவில் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் பிரச்சினைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால் இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன என்பதால் தான் நாம் அதிக அக்கறை காட்டுகின்றோம். இலங்கையில் நடைபெறவிருக்கின்ற தேர்தலில் ஆட்சிம…
-
- 0 replies
- 540 views
-
-
சிறுபான்மையினரின் வாக்குகளே வெற்றியாளரை தீர்மானிக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கின்றன. தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் சூடுபிடித்துள்ளன. வெற்றி பெறும் வேட்பாளர்கள் என்ற நம்பகத் தன்மையைக் கொண்டவர்களான சஜித் பிரேமதாஸவினதும், கோத்தாபய ராஜபக் ஷவினதும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பெரும் சனத்திரள் காணப்படுகிறது. இதனால், எந்த வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று உறுதி கூற முடியாதுள்ளது. ஆயினும், சிங்களப் பிரதேசங்களில் மேற்படி இரு வேட்பாளர்களினதும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் மக்கள் தொகையின் அடிப்படையில் பெரும்பாலும் பெரும்பான்மை மக்களின் வாக்குகள் ஏறத்தாழ சமமாக…
-
- 0 replies
- 182 views
-
-
'புலிக்கொடி'யை முன்னிறுத்திய சண்டைகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில், 'புலிக்கொடி' ஏற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தும் அந்தக் கோரிக்கையைப் புறந்தள்ளியும், பிரித்தானியத் தமிழ் அமைப்புக்களுக்கிடையில் தொடர்ச்சியாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. அது, கடந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்ட ஏழாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில், சண்டை சச்சரவுக் காட்சிகளை அரங்கேற்றும் அளவுக்கு சென்றிருக்கின்றது. தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையின் கூர்மையான ஆதாரமாகவும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியைக் கோரும் ஓர்மத்தை ஒருங்கிணைப்பதற்கான புள்ளியாகவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் …
-
- 0 replies
- 406 views
-
-
கோத்தாபயவின் மூன்று முகம்! கர்னல் ஆர் ஹரிஹரன் இலங்கையில் ஆகஸ்ட் 5 இல் பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. முன் நடந்த தேர்தல்களிலிருந்து, இந்த தேர்தல் முற்றிலும் மாறுபட்டது. முதல் காரணம் கொரோனா தாக்கத்தால் தேர்தல் திகதி ஏற்கனவே இரண்டு முறை மாற்றப் பட்டது. அரசியல் கட்சிகள் நடத்தும் தேர்தல் கூட்டங்களுக்கும், வீதியோர சந்திப்புக்களுக்கும், தேர்தல் ஆணைக்குழு பலத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தல் நடத்தும் இடங்களில் அதிகாரிகளும், வாக்காளர்களும் கடைப்பிடிக்க வேண்டிய சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள், எவ்வாறு வாக்குப்பதிவை பாதிக்கும் என்பது கேள்விக் குறியாக உள்ளது. இரண்டாவது, இலங்கை அரசியல் களத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு மா…
-
- 0 replies
- 499 views
-
-
பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் பாலியல் வல்லுறவுகளும் அ.நிக்ஸன் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்) பெண்கள் மீதான அடக்கு முறைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. இலங்கை, இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இந்த நிலைமை காணப்படுகின்றது. இலங்கையின் போர் நடைபெற்ற வடக்கு கிழக்கு மாகாணத்தில் பாலியல் வல்லுறவுகள் தற்போது படையினரால் மாத்திரமல்ல உறவினர்கள், அரச ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களினாலும் இடம்பெறுகின்றது. வடக்கு ,கிழக்கில் நாளொன்றுக்கு ஐந்து பெண்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுகின்றனர். கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் நாளொன்றுக்கு மூன்று பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இதன் எண்ணிக்கை அதிகம் என்றே பெண்கள் அமைப்புகள் கூறுகின்றன. கைவிடப்பட்ட நிலைமை இந்திய…
-
- 0 replies
- 1k views
-
-
அழிக்கப்படும் கடல் வளங்கள். கண்டு கொள்ளாத, தமிழ்க்கட்சிகள்!
-
- 0 replies
- 267 views
-
-
சிறீரங்காவும் விக்கியும் : ஒரு புள்ளியில் இணையும் தமிழ்த் தேசிய அசிங்கங்கள் 07/09/2015 இனியொரு நாமல், டக்ளஸ், பசில், சிறீரங்கா இலங்கை அரசியலில் வடக்குக் கிழக்கிற்கு வெளியில் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்துப் பிழைப்பு நடத்தும் முக்கிய நபர்களில் சிறீரங்கா ஜெயரட்ணம் என்பவர் பிரதானமானவர். தொலைக்காட்சியில் அரசியல் நிகழ்ச்சி நடத்தும் இலங்கையின் ஒரே அரசியல்வாதி சிறீரங்கா ஜெயரட்ணம் மட்டுமே. நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராக ஐக்கிய தேசிய முன்னணியில் வெற்றிபெற்ற சிறீரங்கா வவுனியாவைச் சேர்ந்தவர் என்பது பலருக்குத் தெரியாத தகவல். இன்று கொழும்பில் வாழும் சிறீரங்கா மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவர். நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பர். சிறீரங்காவிற்கு மகிந்த…
-
- 0 replies
- 433 views
-
-
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட தினம் இன்று. ராஜீவ் கொலை வழக்கு கடந்து வந்த பாதை தொடர்பாக பிபிசி தமிழில் முன்பே பகிரப்பட்ட கட்டுரையை மீண்டும் பகிர்கிறோம். 1991 மே 21: சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். 1991 ஜூன் 11: பேரறிவாளன் கைதுசெய்யப்பட்டார். 1991 ஜூன் 14: நளினி கைதுசெய்யப்பட்டார். ஸ்ரீகரன் என்ற முருகனும் கைதானார். 1991 ஜூலை 22: சுதேந்திரர…
-
- 0 replies
- 670 views
-
-
விஜய் மக்களின் நம்பிக்கைக்கு தன்னை தகுதிபடுத்திக் கொள்வாரா? -சாவித்திரி கண்ணன் தமிழகத்தையே நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளது தவெக மதுரை மாநாடு. விஜய்யின் அபாரமான மக்கள் செல்வாக்கு கேள்விக்கிடமில்லாமல் நிருபணமாகியுள்ளது. தன்னெழுச்சியாக வந்த மக்கள் பெரும் திரள் ஒரு அரசியல் மாற்றத்தின் தேவையை உறுதிபடுத்துகிறது. அந்த தேவைக்கு தன்னை தகவமைத்துக் கொள்வாரா விஜய்? என்பதே கேள்வி? தற்போதைய தமிழகத்தில் பணம் கொடுக்காமல் இவ்வளவு பெரும் மக்கள் திரளை ஈர்க்கும் இன்னொரு அரசியல் தலைவர் கிடையாது என்பதல்ல, இதில் கால்வாசி கூட்டத்தைக் கூட காசு கொடுக்காமல் வரவழைக்கும் தலைவர்கள் இல்லை. மாலை நடக்கும் கூட்டத்திற்கு அதிகாலை தொடங்கி, தொண்டர்கள் சாரி,சாரியாக வருவது என்பதெல்லாம் இளைஞர்கள் ஒரு அரசியல் ம…
-
- 0 replies
- 152 views
-
-
பேரினவாத பாசிஸ்டுக்களுக்கு எதிராக பொத்துவில் முதல் பொலிகண்டிவரை: புதிய அரசியலுக்கான நுழைவாசல் 02/06/2021 இனியொரு... இலங்கை வரலாற்றில் மிக நீண்ட காலத்தின் பின்னர், தமிழ்ப் பேசும் முஸ்லீம் மக்களோடு வட கிழக்குத் தமிழர்களும் இணைந்து நடத்தும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி ஒரு புதிய அரசியல் மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. இப் பேரணியில் முன் வைக்கப்படும் முழக்கங்கள் வழமைக்கு மாறாக இனவாதத்தை நிராகரித்து, சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளைக் கோருகிறது. ஆண்ட தமிழன் என்ற இனவெறி எல்லைகளைக் கடந்து மலையகத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான முழக்கங்களையும், முஸ்லீம் மக்களையும் இணைக்கும் இப் போராட்டம் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு இடையேயான …
-
- 0 replies
- 342 views
-
-
ஹிந்திய பயங்கவாதிகள் ஈழத்தில் செய்தது ஒன்றல்ல இரண்டல்ல பலகொடுமைகளை செய்தனர்.. தமிழ் அரசாங்க உயரதிகாரியின் மனைவியை நிர்வாணமாகப் புகைப்படம் எடுக்கும்படி கூறிய ஹிந்திய பயங்கவாதி.. எனக்கு அறிமுகமான ஒரு டெலோ முக்கியஸ்தர் தெரிவித்த கதை இது. அவரின் இயக்கப் பெயர் கிறிஸ்டி. இந்தியப் படையினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தத்தை ஆரம்பித்த காலகட்டத்தில் அந்த நபர் டெலோ அமைப்பின் வவுனியா மாவட்டப் பொறுப்பாளராக கடமையாற்றிக் கொண்டிருந்தார். புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையில் மிகவும் உக்கிரமான சண்டைகள் நடைபெற்று முடிந்து யாழ் குடாவினுள் இந்தியப் படையினர் நுழைந்த பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தது. பரவலாக நிலைகொண்டிருந்த இந்தியப் படையினருக்கு எதிராக விடுதலைப்…
-
- 0 replies
- 535 views
-
-
இலங்கைக்கு எதிராக திரும்புமா இந்தியா? இலங்கையுடன் இந்தியா கொண்டுள்ள ஆழமான நட்புறவை, தொடர்ந்து பேணிக்கொள்ள வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இருந்தாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக இந்தியா கருதும், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயம், அந்த நெருக்கத்துக்கு சவாலாக உள்ளது. அதிகாரப் பகிர்வு இருதரப்பு இடைவெளியை இன்னமும் குறைக்க விடாமல், அமுக்கி வருகிறது. அதைவிட உள்நாட்டு அரசியல் அழுத்தங்களும், இந்தியாவை ஒரு கட்டத்துக்கு மேல் இலங்கையுடன் நெருக்கம் கொள்ள விடாமல் தடுக்கவே செய்கின்றன.என்கின்றார் இன்போ தமிழின் இராணுவ ஆய்வாளர் சுபத்ரா அவர்கள்........." அரசியல் இராஜதந்திர முனையில் இந்தியா அழுத்தங்களை கொடுத்தாலும், பாதுகாப்பு ஒத்துழைப்ப…
-
- 0 replies
- 650 views
-
-
இலங்கையில் வெற்றிகரமாக செயற்படும் நிலக்கண்ணிவெடி அகற்றும் நிகழ்ச்சித்திட்டம் இலங்கையின் நிலக்கண்ணிவெடி ஆபத்துக் கல்வி நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமான ஒரு நிகழ்ச்சித்திட்டமாக பூகோளப் பங்காளர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடந்த மே மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதிவரை ஜெனீவாவில் பிரதானமன்றத்துடனும் பக்க நிகழ்வுகளுடனும் நிலக்கண்ணிவெடி அகற்றல் பற்றிய ஒரு மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றது. பிரதானமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் ஆரம்பத்தில் 1302 சதுர கிலோ மீற்றர் நிலப்பகுதியில் நிலக்கண்ணிவெடி ஆபத்துள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டதாக உறுதிசெய்யப்பட்…
-
- 0 replies
- 544 views
-
-
குயிலியை மறக்க முடியுமா ! தமிழ் குலம் உள்ளவரையில் அவர்களின் தியாகமும் வீரமும் எந்நாளும் போற்றுதலுக்குரியதல்லவா. இன்றைக்கு 228 ஆண்டுகளுக்கு முன்னால் வெள்ளையரின் அடிமைத்தளையறுக்க வாள் பிடித்து களம் கண்ட வேலு நாச்சியாரின் மெய்காவலராய் இருந்தவர்தாம் குயிலி. " பகையே எம்மை மண்ணில் புதைத்தாய் எம் மண்ணை எங்கே புதைப்பாய்" என்கிற உணர்ச்சி வரிகளை காசி ஆனந்தனை பாட செய்த செம்மணி படுகொலைகளை புரிந்து கணக்கில்லா தமிழர்களை உயிருடன் புதைத்து எக்காள சிரிப்புடன் வலம் வந்து கொண்டிருந்த இன எதிரியை "கடவுள் மறந்தாலும் , கரும்புலிகள் மறப்பதில்லை" என்கிற வரிகளை உண்மையாக்கி களம்காணும் புலிப்போத்துகளின் ஆதித்தாயல்லவா குயிலி. 8 ஆண்டுகள் மறைவு வாழ்க்கைக்க…
-
- 0 replies
- 1.3k views
-