கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
766 topics in this forum
-
கூகுளின் ‘குவாண்டம்’ தொழில்நுட்பம்: - வருகிறது மின்னல் வேக கணினி! [Monday 2015-12-21 20:00] கூகுள் நிறுவனம், ‘குவாண்டம்’ தொழில்நுட்பத்தைக் கொண்ட கணினிகளை வடிவமைக்கும் திட்டம் குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டம் தொடர்பாக தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, இவை சாதாரண டேப்லெட்களை விடவும் 100 மில்லியன் மடங்கு வேகம் கொண்டது. மேலும் குவாண்டம் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் முதலாவது கணினி இது என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசொப்ட் நிறுவனம், ‘நாம் அனைவரும் எதிர்வரும் 10 ஆண்டுகளில் குவாண்டம் கணினிகளிலேயே பணிபுரிவோம்’ என்று ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கூ…
-
- 0 replies
- 441 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images அதிக கேமிராக்களை கொண்ட ஐஃபோன் 11 என்ற புதிய மாடல் திறன்பேசியை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை கலிஃபோர்னியாவில் நடைபெறும் நிகழ்வில் ஆப்பிள் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்தும். அதுபோல, இந்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் தந்திருக்கிறது. படத்தின் காப்புரிமை Justin Sullivan கலிஃபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வில் ஐஃபோன் 11 மட்டுமின்றி ஆப்பிள் சீரி…
-
- 0 replies
- 437 views
-
-
160 டிபி 'மெமரி' திறன் கொண்ட கணினியை வெளியிட்டது ஹெச்.பி தற்போதுள்ள கணினிகளை விட பல ஆயிரம் மடங்கு வேகத்துடன் கையாளும் திறன் கொண்ட புரட்சிகரமான புதிய கணினியை ஹெச்.பி எனப்படும் ஹெவ்லர்ட்-பேக்கர்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த கணினி, 160 டிபி நினைவகத் திறன் கொண்டது. படத்தின் காப்புரிமைHPE `தி மெஷின்' என்று அழைக்கப்படும் இந்த புதிய கணினி, நிலையான மின் தூண்டுதல்கள் மூலம் சிலிக்கான் வழியாக பயணம் செய்வதற்கு பதிலாக, ஒளி அலைகளைப் பயன்படுத்தி தரவுகளை அனுப்பும். இந்தப் புதிய கணினியின் நினைவகத் திறன், எல்லையில்லா நினைவகத் திறன் படைத்த கணினிகளை உருவாக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும் என்று ஹெச்பிஇ நிறுவனம் தெரிவித்துள்ளது. சிப் எனப்படும…
-
- 0 replies
- 435 views
-
-
4,000 mAh திறனுடன் வெளியாகிறது பிளாக்பெர்ரி "மோஷன்"! Pic Courtesy: @AndroidAuth/Twitter சீனாவை மையமாக கொண்டு இயங்கும் டி.சி.எல் கம்யூனிகேஷன் பிளாக்பெர்ரி "மோஷன்" என்னும் புது மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் ஆனது 4,000 mAh பேட்டரி திறன் கொண்டதுடன், பிரபலமான பிளாக்பெர்ரி "கீ-ஒன்" -னில் இருப்பது போன்ற விசைப்பலகை வடிவத்தினை கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5.5 அங்குல முழு HD எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 சிப்செட் இணைப்புடனும், 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்புடன் திறனுடனும் வெ…
-
- 0 replies
- 435 views
-
-
சீனாவில் (China) செயற்கை நுண்ணறிவியல் (Artificial intelligence) தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோ இயந்திரம் ஒன்று திடீரென பொதுமக்களை தாக்கியுள்ளது. மக்கள் கூடியிருந்த நிகழ்வு ஒன்றில் AIயினால் கட்டுப்படுத்தப்படும் ரோபோ ஒன்று திடீரென மக்களை தாக்கியுள்ளது. இதன்போது, அங்குள்ள அதிகாரிகள் அதனை உடனியாக தடுத்துள்ள போதிலும் அங்கு பரபரப்பான ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மென்பொருள் கோளாறு இச்சம்பவம் பதிவான காணொளியும் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மென்பொருள் கோளாறே இந்த ஒழுங்கற்ற நடத்தைக்குக் காரணம் என்று அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் இதனால் எந்தவொரு திட்டமிட்ட தீங்கும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளனர். குறித்த AI ரோபோவினை ஒபரேட்டரையே தாக்…
-
- 1 reply
- 433 views
- 1 follower
-
-
வயர்லெஸ் சார்ஜிங்... பிக்ஸ்பி அஸிஸ்டெண்ட்... அசத்துமா சாம்சங்கின் கேலக்ஸி 8 #GalaxyS8 சாம்சங் மீம்ஸ் ஆல்பம் ஆண்ட்ராய்டு காதலர்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஸ்மார்ட்போன்களில் முக்கியமானது சாம்சங் #GalaxyS8. இன்று இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் எஸ்8 மற்றும் எஸ்8+ விலை என்ன, வசதிகள் என்ன என பார்ப்போம். இரண்டு மாடல்களுமே Snapdragon 835 புதிய வகை பிராசஸருடன் வருகின்றன. குவால்காமின் இந்த புதிய புராஸசர் மின்னல் வேக செயல்பாட்டுக்கு உதவும் என்கிறது சாம்சங். 4ஜிபி ரேம் “எப்படியும் ஆண்ட்ராய்டு ஹேங் ஆகும்” என்ற ஆல்டைம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 64 ஜிபி இண்டர்னல் மெமரியும் எதிர்பார்த்ததுதான். …
-
- 0 replies
- 427 views
-
-
ஸ்மார்ட் வாட்ச் போன்ற கருவிகள் அணிவது விழிப்புணர்வா, மந்தை மனநிலையா? ஐஐடி ஆய்வு கூறுவது என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிட்னெஸ் வாட்ச் உள்ளிட்ட ஸ்மார்ட் கருவிகள் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான கட்டுரை இது. ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட உடலில் பொருத்தக்கூடிய மின்னணு கருவிகளை வாங்குகிறவர்கள், 'ஹெர்டு மெண்டாலிட்டி' என்று சொல்லப்படும் 'மந்தை மனநிலை' காரணமாகவே இவற்றை வாங்குவதாக ஐஐடி நடத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாள்தோறும் உ…
-
- 0 replies
- 426 views
- 1 follower
-
-
2017 ஐபோன்கள் “ஐபோன் எடிஷன்” என அழைக்கப்படலாம் ஐபோன்களின் 10 ஆவது ஆண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், இந்த ஆண்டு அப்பிள் வெளியிட இருக்கும் ஐபோன் மாடல்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐபோனை விட 2017 இல் வெளியாகும் ஐபோனில் புதுமைகளைப் புகுத்த இருப்பதாக அப்பிள் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஜப்பானைச் சேர்ந்த செய்தித்தளம் வெளியிட்டுள்ள தகவல்களில் 2017 ஐபோன்கள் “ஐபோன் எடிஷன்” என அழைக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஐபோனில் 5.0 அங்குல திரை வழங்கப்படலாம் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதோடு அப்பிள் நிறுவனம் பல்வேறு ஃபிளாக்ஷிப் போன்களை சோதனை செய்த…
-
- 0 replies
- 426 views
-
-
தலைக்கவசம் அணியாமல்... மோட்டார் சைக்கிள் ஓட முடியாது – யாழ்.தமிழரின் புதிய கண்டுபிடிப்பு! தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் வண்டிகளை செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்கள் தடுப்பதற்காக முன்மாதிரியான ஒருபொறிமுறையொன்றை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் வடிவமைத்துள்ளார். 30 வருடங்களாக மோட்டார் வாகன திருத்துநராக இருக்கும், கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த எட்வின் மொரிஸ் என்பவரே இந்த பொறிமுறையை வடிவமைத்துள்ளார். இதன்படி தலைக்கவசம் போடாமல் மோட்டார் வண்டியை இயக்க முடியாது. அதேவேளை தலைக்கவசத்தை போட்டாலும் தலைக்கவசத்தின் கொழுக்கிகளை மாட்டினால் மாத்திரமே மோட்டார் வண்டி இயங்குமாறு அந்த பொறிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலைக்கவசத்தின் கொழுக்கிகளை …
-
- 0 replies
- 421 views
-
-
ஆப்பிள் நிறுவன ஐ போன்களில், தற்போதுள்ள ஸ்வைப் வசதியைவிட, முன்பிருந்த ஹோம் பட்டன் வசதி சிறப்பாக இருந்ததாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவன ஐபோன்களில் 2007ஆம் ஆண்டு முதல் வட்ட வடிவிலான ஹோம் பட்டன் வசதி இருந்துவந்தது. இதனிடையே, 2017ஆம் ஆண்டு வெளியான சில மாடல்களில் அந்த வசதி நீக்கப்பட்டு, ஸ்வைப் வசதியாக மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஐபோன்களின் வடிவமைப்பு குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தற்போதைய ஸ்வைப் வசதியைவிட முன்பு பயன்பாட்டில் இருந்த ஹோம் பட்டன் வசதி சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளார். ஐபோனை ட்ரம்ப் விமர்சனம் செய்வது இது முதல்முறை அல்ல. ஐபோன்களில் பெரிய திரை வசதி இல்லை எனக் கூற…
-
- 0 replies
- 420 views
-
-
அமெரிக்க விமானங்களில் அப்பிள் மடிக்கணினிகளுக்கு தடை விதிப்பு அமெரிக்காவில் இயங்கிவரும் சில விமான நிறுவனங்களின் விமானங்களில் பயணிகள் அப்பிள் நிறுவனத்தின் சில மடிக்கணினிகள் தெரிவிகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்கலத்தில் (batteries) தீ ஆபத்து இருப்பதை அப்பிள் சமீபத்தில் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து இந்த தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. அப்பிள் மேக்புக் ப்ரோ லேப்டாப் தெரிவுகளில் திரும்பப் பெறப்பட்ட மின்கலங்கள் பயன்படுத்தப்படுவதை அறிவதாகவும், இதுகுறித்த தகவல்களை அமெரிக்க விமான சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாக அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை நான்கு விமான நிறுவனங்கள் அப்பிள் மடிக்கணினிகள் தெரிவவுகளை கொ…
-
- 0 replies
- 419 views
-
-
ஆப்பிள் ஐபோன் தயாரிப்பு இந்தியாவுக்கு நகர்கிறது: உற்பத்தித் துறையில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவெடுக்குமா? நிகில் இனாம்தார் பிபிசி வணிகத் துறை செய்தியாளர், மும்பை 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,APPLE படக்குறிப்பு, ஆப்பிள் ஐபோன் 14 தயாரிப்பில் 5 சதவீதம் இந்த ஆண்டு இந்தியாவுக்கு நகரவுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தமது அதி நவீன செல்பேசி மாடலான ஐபோன்14 தயாரிப்புப் பணியை இந்தியாவில் நடத்த இருப்பதாக கடந்த வாரம் அறிவித்தது. தங்கள் நிறுவனப் பொருள்களின் தயாரிப்புப் பணியை சீனாவுக்கு வெளியே பரவலாக்கவேண்டும் என்ற அந்த நிறுவனத்தின் திட்டத்தை செயல்படுத்துவ…
-
- 1 reply
- 410 views
- 1 follower
-
-
12 செப்டெம்பர் 2025, 04:48 GMT புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் iPhone 17 சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே உள்ள பிற ஐபோன்களை விட வடிவத்தில், தோற்றத்தில் பெரிய வித்தியாசங்கள் கொண்டிருக்கவில்லை. செல்போனின் பின்புறம் கேமராவுக்கான கூடுதல் லென்ஸ் அமைக்கும் வகையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதை தவிர தோற்றத்தில் வேறு மாற்றங்கள் இல்லை. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக பல புதிய அம்சங்களை இந்த செல்போன் கொண்டுள்ளது. செல்ஃபி எடுக்கும் போது, எத்தனை பேர் இருக்கிறார்களோ, அந்த எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஃப்ரேம் சரி செய்துக் கொள்ளப்படும் தொழில்நுட்பம் இதில் உள்ளது. இது தான் மிகவும் ஒல்லியான ஐஃபோன் என்று கூறப்படுகிறது. ஒரு நாள் முழுவதும் சார்ஜ் இருக்கும் என்றும…
-
-
- 5 replies
- 408 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,SERENITY STRULL/BBC/GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிரென்னன் டோஹெர்டி பதவி, பிபிசி நிருபர் 22 நிமிடங்களுக்கு முன்னர் நவீன தொழில்நுட்பத்தை வெறுக்கும் நியோ-லுடிட்கள் (neo-Luddites) மற்றும் தொழில்நுட்ப அழுத்தம் உள்ளவர்கள் குறைவான அம்சங்களைக் கொண்ட போன்களை தேடுகின்றனர். ஆனால் இந்த போன்களின் சந்தை நிலையற்றதாகவும் உறுதியற்ற லாப வரம்புகளையும் கொண்டிருக்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு ஐபோன் 17 வயதை எட்டுகிறது. ஐபோன் என்னும் தொடுதிரை மூலம் இயங்கும் (touchscreen-controlled device) சாதனத்தின் வெளியீடு, ஸ்மார்ட்போன்கள் பற்றிய மக்களின் எதிர்பார்ப்புகளை வரையறுத்தது. அதன் பிற…
-
- 0 replies
- 406 views
- 1 follower
-
-
இனி வாட்சப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கட்டணம் – மெட்டாவின் புதிய அறிவிப்பு! வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களில் கூடுதல் சேவைகளை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை விரைவில் அறிமுகம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தகவல் பரிமாற்ற செயலியாக அறிமுகமான வாட்ஸ் அப் , பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன இன்று பொது மக்களின் அத்தியாவசிய தேவையாக மாறி விட்ட நிலையில் இவற்றில் கணக்கு இல்லாத நபர்களே இல்லை என்று கூறலாம். இந்நிலையில், வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராமை மேம்படுத்தி வரும் மெட்டா நிறுவனம், கூடுதல் சேவைகளை வழங்கி அதற்கு கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, மேன…
-
-
- 7 replies
- 404 views
-
-
வாட்ஸ்அப் புதிய வசதிகள்: குழுவில் இருந்து இனி சத்தமில்லாமல் விலகலாம் லிவ் மெக்மஹோன் தொழில்நுட்பக் குழு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் செயலியில், பயனர்கள் தனியுரிமையை பாதுகாக்க புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதிகள் நேருக்கு நேர் நடக்கும் உரையாடல் போல மிகவும் பாதுகாப்பாகவும், தனிப்பட்ட முறையில் வாட்ஸ்அப் செயல்பட உதவும் என்று மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த புதிய வசதிகளில், என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பதை இங்…
-
- 0 replies
- 399 views
- 1 follower
-
-
கால் ரெக்கார்டிங் செயலிகளுக்குத் தடை: கூகுள் ப்ளேஸ்டோரின் முயற்சி தகவல் திருட்டைத் தடுக்குமா? க.சுபகுணம் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சமீப காலங்களில், கூகுள் ப்ளேஸ்டோர் பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வலுவாக்குவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது கூகுள் நிறுவனம், மே 11-ஆம் தேதி முதல் கூகுளால் உருவாக்கப்படாத கால் ரெக்கார்டிங் செயலிகளை ப்ளேஸ்டோரில் அனுமதிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இன்று முதல் இந்தத் தடை அமலுக்கு வருகிறது. ஆண்ட்ராய்ட் பயனர்கள் பயன்படுத்தும் பல்வேறு செயலிகளி…
-
- 3 replies
- 391 views
- 1 follower
-
-
பேட்ரிக் ஜாக்சன் பதவி,பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொழில்நுட்பத்துறையில் முன்னோடியாக கருதப்படும் கோடீஸ்வரரான ஈலோன் மஸ்க், தனது நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் வயர்லெஸ் சிப் ஒன்றை முதன்முறையாக வெற்றிகரமாக பொருத்தியுள்ளதாக அறிவித்துள்ளார். ஆரம்பக்கட்ட ஆய்வு முடிவுகள் நம்பிக்கைக்குரிய நியூரானின் கூர்முனை அல்லது நரம்பு தூண்டுதல்களைக் கண்டறிந்தது என்பதுடன் இதன் மூலம் ஒரு நோயாளி நன்றாக குணமடைந்து வருகிறார் என்றும் அவர் கூறினார். மனித மூளையை கணினிகளுடன் இணைப்பதே நியூராலிங்க் நிறுவனத்தின் குறிக்கோளாக உள்ளது. சிக்கலான நரம்பியல் பிரச்னைகளைச் சமாளிக்க உதவ விரும்புவதாக அந்நிறுவனம் கூறுகிறது. பல போட்…
-
- 1 reply
- 387 views
- 1 follower
-
-
ரகசிய குறியீட்டைப் பயன்படுத்தி உங்கள் உரையாடல்களை பாதுகாக்கவும்: புதிய WhatsApp அம்சம் Sub editor02 டிசம்பர் 2023 எனவே, இந்த லாக் செய்யப்பட்ட உரையாடல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை வழங்குவதற்காக உரையாடல் பூட்டுக்கான "Secret Code" என்ற புதிய அம்சத்தை WhatsApp அறிவித்துள்ளது. சீக்ரெட் கோட் அம்சத்தின் மூலம் உரையாடல் பட்டியலில் இருந்து லாக் செய்யப்பட்ட உரையாடல்கள் கோப்புறையை மறைக்க, உங்கள் சாதனத்தின் கடவுச்சொல்லிலிருந்து வேறுபட்ட கடவுச்சொல்லை அமைக்கலாம். மேலும் வாட்ஸ்அப் தேடல் பட்டியில் உங்கள் ரகசியக் குறியீட்டைத் தட்டச்சு செய்வதன் மூலம் மட்டுமே அதைக் கண்டறிய முடியும். புதிய ரகசியக் குறியீட்டை உருவாக்க, எழுத்துக்கள், எண்கள், ச…
-
- 0 replies
- 381 views
-
-
கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது இந்திய ராணுவ முகாம்களை படம் பிடித்து பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தனர் என்ற குற்றச்சாட்டின்பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிக்காமல் இருப்பதற்காக வாட்சப் மூலம் பாகிஸ்தான் அதிகாரிகளை தொடர்பு கொண்டது தெரிய வந்துள்ளது. அரியானா மாநிலம் ஹிசாரில் ராணுவ குடியிருப்பு பகுதியில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றனர். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தொழிலாளிகளாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தொழிலாளிகளில் சிலர் ராணுவ முகாம்களை உளவு பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராணுவத்தினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் சந்தேகப்படும் …
-
- 0 replies
- 380 views
-
-
குவாண்டம் அறிவியல் புரட்சி: ஐபிஎம் வெளியிட்ட அதிவேக குவாண்டம் பிராசசர் செய்யப் போவது என்ன? 19 நவம்பர் 2021, 01:51 GMT பட மூலாதாரம்,IBM படக்குறிப்பு, 100 க்யூபிட்களுக்கு மேல் இணைக்கப்பட்ட முதல் குவாண்டம் பிராசசர் என்ற பெருமை ஐபிஎம்மின் ஈகிள் பிராசசருக்கு கிடைத்திருக்கிறது. அதிவேக கணினிகளை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மேம்பட்ட "குவாண்டம்" பிராசரரை ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த பிராசரரை பயன்படுத்தும் இயந்திரங்கள் கணினித் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தக்கூடும். குவாண்டம் இயற்பியலின் விசித்திரமான நுட்பங்களைப் பயன்படுத்தி, இதுவரை மனிதர்கள் வைத்திருக்கும் …
-
- 0 replies
- 369 views
- 1 follower
-
-
டெக் உலகின் முன்னணி நிறுவனங்கள் பல, தங்களின் விளம்பரங்களில் மற்ற நிறுவனங்களை கலாய்ப்பது ஒன்றும் புதிதல்ல. அந்தவரிசையில் இணைந்திருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். அந்த நிறுவனத்தின் தயாரிப்பான சர்ஃபேஸ் லேப்டாப்புகளுக்கான விளம்பரம் ஒன்றை அந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அதில், ஆப்பிள் நிறுவனத் தயாரிப்பான மேக் புக் லேப்டாப்புகளைக் கலாய்க்கும் விதமாகக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அந்த விளம்பரத்தில் தொடக்கத்தில் மேக் புக் என்று ஒருவர், தனது பெயரைக் கூறி அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அவரது முழுப் பெயர் மெக்கன்சி புக் எனப் பின்னணியில் ஒரு குரல் ஒலிக்கிறது. ஆப்பிளின் மேக் புக் லேப்டாப்பை விட மைக்ரோசாப்டின் சர்ஃபேஸ் லேப்டாப் பல்வேறு வகைகளில் சிறந…
-
- 0 replies
- 363 views
-
-
அமோல் ராஜன் ஊடக ஆசிரியர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சுந்தர் பிச்சை, தலைமை செயல் அதிகாரி - கூகுள் மற்றும் ஆல்ஃபபெட் நிறுவனங்கள் உலக அளவில் தடையற்ற மற்றும் வெளிப்படையான இன்டர்நெட் சேவை தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக எச்சரித்துள்ளார், கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. பல நாடுகள் தகவல்களின் வேகத்தை கட்டுப்படுத்துகின்றன என்றும் எந்த நோக்கத்துக்காக 'இன்டர்நெட்' மாடல் உருவாக்கப்பட்டதோ அதை தங்களுக்கு ஆதாயமாக அந்த நாடுகள் அடிக்கடி பயன்படுத்திக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். பிபிசியுடனான ஓரு விரிவான நேர்…
-
- 0 replies
- 361 views
-
-
மடிக்கணினி: துள்ளித் திரிந்த காலம், இன்று படுத்து குறட்டை விடும் காலம் அண்மையில் ஒரு நண்பர் தான் புதிதாக 70,000க்கு வாங்கியுள்ள ஒரு மடிக்கணினியை காட்டினார். பார்க்க அழகாக இருந்தது. “நன்றாக வேலை செய்யுதா?” என்று கேட்டபோது உதட்டைப் பிதுக்கினார். திறந்ததும் விழித்து சோம்பல் முறிக்கவே நேரம் எடுக்கிறது. சில நேரம் வேலை நடுவே படுமெத்தனமாகிறது என்று புலம்பினார். இவ்வளவு விலைகொடுத்து வாங்கியுமா? எனக்கு அப்போது சுமார் பத்து வருடங்களுக்கு முந்தின நிலை நினைவுக்கு வந்தது. அப்போது மடிக்கணினிகளின் விலை ரொம்ப குறைவாக இருந்தது. சுணக்கமின்றி வேலையும் செய்யும். அதுமட்டுமல்ல அன்று இந்தளவுக்கு கணினிகளுக்கு சுமை இருக்கவில்லை. ஒரு மடிக்கணினி அல்லது டெஸ்க்ட…
-
- 0 replies
- 359 views
- 1 follower
-
-
26 APR, 2023 | 10:31 AM உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் வட்ஸ் அப் (whatsapp) செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயணங்களில் வசதிக்கு ஏற்றவாறு வட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அம்சங்களை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் கோப்புகளையும் எளிதில் பகிர மிகவும் உதவியாக உள்ளது. வட்ஸ் அப்பை மொபைல் மற்றும் டெக்ஸ்டாப்பில் பயன்படுத்தும் வசதி உள்ள நிலையில், தற்போது புதிய அம்சத்தை வட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர் பெர்க் அறிவித்துள்ளார். அதாவது ஒரே வட்ஸ் அப் எண்ணை இனி நான்கு வெவ்வேறு கையடக்க தொலைபேசிகளில் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/art…
-
- 0 replies
- 354 views
- 1 follower
-