Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அந்தரங்க வெளியை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்ட சந்தைப்படுத்தல்கள்: நடிகர் தனுஷின் ’கொலவெறி

Featured Replies

சமூக வலைத் தளங்களின் அந்தரங்க வெளியை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்ட சந்தைப்படுத்தல்கள்: நடிகர் தனுஷின் ’கொலவெறி’

நடிகை ஐஸ்வர்யா ராயின் பிரசவத்தையும் குழந்தையையும் எப்படியெல்லாம் செய்தியாக்கக்கூடாது என்று பத்து கட்டளைகள் விதிக்கும் அளவுக்கு இந்திய காட்சி ஊடகங்கள் இருக்கும் ஒரு யுகத்தில் சமூக வலைத் தளங்களும் அதே திசையில் செல்லத் தொடங்கியிருக்கின்றன. 3 என்ற படத்தில் நடிகர் தனுஷ் பாடியிருக்கும் "கொலவெறி" பாடல் பெற்றுள்ள "உலக மகா வெற்றியை" இந்தியாவின் மிகவும் கவனிக்கத்தக்க செய்தியாக தேசிய நாளிதழ்களும் டிவி சேனல்களும் கொண்டாடி வருகின்றன. புதிய சந்தைப்படுத்தல் உத்தியாக இந்தப் பாடலை இணையத்தில் வெளியிட்டதில் ஒரு மில்லியன் (10 லட்சம்) தரவிறக்கங்கள் நடந்திருப்பதாக பிறரால் எளிதாக உறுதி செய்யமுடியாத ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டிருக்கிறார்கள். சமூக வலைத் தளங்களை நடத்திக்கொண்டிருக்கும் முதலீட்டு நிறுவனங்கள் மர்மப் புன்னகையுடன் இந்த போக்கினை பார்க்கின்றன.

/Images/ContentImages/uyirosai-170/maya.jpg

கொலவெறி பாடல் இடம் பெற்றுள்ள 3 படத்தின் இயக்குநரான ஐஸ்வர்யாவின் (நடிகர் ரஜினியின் மகள்) ஃபேஸ்புக் தளத்தில் மட்டுமே 25,000 உறுப்பினர்கள் இருப்பதாக ஒரு கணக்கு தெரிவிக்கப்படுகிறது. அதில் கிளம்பிய கொலைவெறிதான் இப்படி கொலைக் குத்தாக ஊடகங்களை எல்லாம் இதைப் பற்றி செய்தி வெளியிட வைக்கிறது. சமூக வலைத்தளங்கள் உருவாகும்போதே வெறும் இணைக்கும் தளமாக மட்டுமே அவை இருக்கப் போவதில்லை என்பது தெளிவாகவே இருந்தது. அந்த நம்பிக்கையில்தான் வருங்கால வைப்புநிதி போல இவற்றில் தனியார் முதலீட்டாளர்கள் பணம் போட்டார்கள். நடுவில் அவை சமூக-அரசியல் இயக்கங்களாக இருக்கவும் முடியும் என்று தங்களின் ஒரு முகத்தைக் காட்டின. தமிழக மீனவர் படுகொலை விவகாரத்தில் இணையத்தில் பொதுக் கருத்தை திரட்டும் வகையில் ஒரு வலுவான சமூக வலைத் தள இயக்கம் உருவெடுத்தது. சினிமா குறித்த குழந்தைத்தனமான மயக்கங்களை வெளிப்படுத்தும் பெரிய கும்பலுக்கு நடுவில், அன்னா ஹசாரே விஷயத்தில் நேர் மறையாகவும் எதிர்மறையாகவும் ஒரு பெரிய விவாதமே சமூக வலைத் தளங்களில் நடந்தது. இப்போது சமூக வலைத் தளங்களின் வர்த்தக முகத்தின் வெளிப்பாடு நிகழும் முறை.

விளம்பரப் பொருளை சமூக வலைத் தளங்களுக்குக் கொண்டு வந்தது மூலம் கடைசி அந்தரங்க கோட்டினையும் விளம்பரதாரர்கள் வெற்றிகரமாகக் கடந்திருக்கிறார்கள். ஒரு வாக்யூம் க்ளீனர் விற்பனை பிரதிநிதியை வீட்டு வரவேற்பறைக்குள் அனுமதிப்பதா, வேண்டாமா என்ற உரிமையை தங்கள் கையில் வைத்திருந்த நுகர்வோர், டிஜிட்டல் வெளியில் அதை இழக்கப் போகிறார்கள். ஒரு பொழுதுபோக்கு என்ற முகமூடியுடன் சமூக வலைத் தளத்தில் நுழைந்த 3என்ற படத்தின் கொலவெறி பாடல், ஒரு விளம்பரப் பொருளாக பல கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத விளம்பரத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. பெண்களை எதிர்மறையாகக் காண்பிக்கும் விடலைத்தனமான பாடல் என்ற வகையில் அது ஒரு வழக்கமான பாடல்தான். ஆங்கில மோகத்தை பிரதிபலிக்கும் பாடல் வரிகள் என்பதும் அதன் குறைந்தபட்ச வெற்றியை உறுதி செய்துவிடுகிறது. சமூக வலைத் தளங்கள் மூலம் கிடைத்திருப்பது அதன் ஊதிப் பெரிதாக்கப்பட்ட வெற்றி. ஐஸ்வர்யா ராயின் பச்சிளம் குழந்தையின் நிழல் படத்தைக்கூட தங்கள் வியாபாரப் பொருளாக்க ஆசைப்படும் ஊடகங்கள், இந்த சினிமா விளம்பரத்தையும் தங்கள் வியாபாரப் பொருளாக்குகின்றன.

எதை, எப்படி செய்தியாக்குவது என்ற வரைமுறைகளை இந்திய செய்தி ஊடகங்கள், குறிப்பாக காட்சி ஊடகங்கள், தாண்டிவிட்டன. டபிள்யூ.டபிள்யூ.எஃப். மல்யுத்த சேனலுக்குப் போட்டியாக அடி, உதைகளை ஆங்கில டிவி சேனல்கள் காட்டும் அளவுக்கு. பிரசாந்த் பூஷன் அடித்து உதைக்கப்பட்டது முதல் ஷரத் பவாரின் கன்னத்தில் விழுந்த அடி வரை பல கோணங்களில் திரும்பத் திரும்ப காட்டி, அரை நிமிட தேசிய புகழ் அடைய விரும்புகிறவர்களை ஓ.பி வேன்களை நோக்கி ஓட வைத்துக்கொண்டிருக்கும் டைம்ஸ் நவ்’ சேனலுக்கு மற்ற சேனல்கள் சளைந்ததவை அல்ல. மோசமான சுகாதாரத்தால் பிஹாரின் ஒரு சிறிய பகுதியில் நூற்றுக்கணக்கான இளம் குழந்தைகள் மூளைக் காய்ச்சலாலும் ஆக்சிஜன் முகமூடி இல்லாமலும் செத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் சமூக வலைத் தளத்தில் தொடங்கிய ஒரு விளம்பர யுத்தியைப் பற்றிய விரிவான செய்தித் தொகுப்பை வெளியிடுவதுதான் ஒரு தேசிய ஆங்கில சேனலுக்கு முக்கியமானது. இவர்களது பார்வையாளர்களான மத்திய தர, உயர் தட்டு மக்கள்கூட அல்லாமல், அவர்களை எட்ட நினைக்கும் விளம்பரதாரர்களின் விருப்பு வெறுப்புகளையே இந்தத் தேர்வுகள் பிரதிபலிக்கின்றன.

தங்கள் செல்வாக்கை விளம்பரதாரர்கள் சமூக வலைத் தளங்களின் மீதும் செலுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை. எனினும் முதலாளித்துவம் ஒரு தீய சக்தியாக வளர்ந்திருப்பதை இன்று உணர்ந்திருக்கும் மேற்குலகிலிருந்து பாடல் கற்காமல் நாமும் அதே புதைகுழியில்தான் விழப் போகிறோம் என்பது கொடியது. ஏனெனில் மேற்குலக சமூகம் செய்தது அவர்கள் அறியாமல் செய்த தவறு. இந்தியர்கள் தங்கள் கண் முன்னால் இருக்கும் அபாய எச்சரிக்கையை படிக்க முடியாத அளவுக்கு குறை அறிவுடன் இருப்பது அவர்களின் மரபணுவிலேயே உள்ள பிரச்சினையா?

http://www.uyirmmai....s.aspx?cid=5048

Edited by நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.