Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இணையப்பரிசுப் போட்டி 2012....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இடம்பெற உள்ள யாழ் இணையப்பரிசுப்போட்டி 2012 வருகிற சனிக்கிழமை(01/09/2012) அன்று ஆரம்பமாகி நாற்பது நாட்களுக்கு தொடரும்...போட்டி 10/10/2012 அன்று முடிவடையும்...

*முதல் பரிசு 150 கனேடிய டாலர்கள்

இரண்டாவது பரிசு 100 கனேடிய டாலர்கள்

மூன்றாவது பரிசு 50 கனேடிய டாலர்கள்

போட்டி விதிமுறைகள்..:

*போட்டிக்காக அறிவிக்கப்பட்ட திகதியில் இருந்து போட்டி முடிவடையும் திகதி வரை இணைக்கப்படும் சுய ஆக்க[size=4]ங்[/size]கள் உடனுக்குடனேயே போட்டிக்குள் இணைப்பதா இல்லையா என பரிசீலிக்கப் பட்டு தரமான ஆக்க[size=4]ங்[/size]கள் தெரிவு செய்யப்படும்...போட்டிக்குள் நுழைந்த ஆக்க[size=4]ங்[/size]கள் அவற்றைப் பற்றிய விமர்சனங்களுடன் உடனுக்குடன் இங்கு அறிவிக்கப்படும்......இது எழுதுபவர்களை இன்னும் ஊக்குவிக்கும்..போட்டி முடிவில் அவர்கள் ஆக்க[size=4]ங்[/size]கள் பரிசைத்தட்டிக் கொள்ளாவிடினும் தரமான அவர்களின் ஆக்க[size=4]ங்[/size]களுக்கு உரிய ஒரு கெளரவிப்பாக அமையும்...

*ஒருவரின் எத்தனை ஆக்க[size=4]ங்[/size]கள் வேண்டுமானாலும் தரமானவை எனில் இறுதிப்போட்டிக்குள் தெரிவு செய்யப்படும்..ஆனால் அவற்றில் இருந்து பல ஆக்க[size=4]ங்[/size]கள் இறுதிப் பரிசிற்க்கு உரியனவாக காணப்படின் அவற்றில் இருந்து மிகச்சிறந்த ஒரே ஒரு ஆக்கம் மட்டுமே பரிசிற்கு தெரிவு செய்யப்படும்...

*பரிசிற்காக யாழில் உள்ள அத்தனை பிரிவுகளிலும் எழுதப்படும் சுய ஆக்க[size=4]ங்[/size]கள் தெரிவு செய்யப்படும்(உ+ம் : மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்,இசைமுயற்சிகள்....)

*போட்டி நடுவர்கள் மற்றும் போட்டிக்கு அனுசரணை வழங்குபவர்களின் ஆக்கங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது...

இவற்றில் புதிய விதிமுறைகள் ஏதாவது இணைக்கவேண்டும் அல்லது திருத்தம்கள் செய்ய வேண்டுமெனில் யாழ்கள உறவுகள் அறியத்தாருங்கள்...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகண்ணாவின் "தன் பிள்ளை என்றால்.. (http://www.yarl.com/...pic=107563&st=0)" எனும் பதிவு சமூகச்சாளரத்தில் இருந்து போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது..[size=4]இதை ஆக்கம் என்று சொல்வதைவிட பதிவு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்...தற்பொழுது இந்தப் பதிவு பெண்களைப் பற்றிய புரிதலை குடும்ப வாழ்வில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் உறைக்கவே சொல்லி இருக்கிறது..குறிப்பிட்ட காலப்பகுதியில் அவர்களின் உணர்வுகளை ஆண்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்ற செய்தியை இந்த பதிவு அழகாக சிறுசெய்தியில் சொல்லிவிட்டது..பெண்கள் வெறும் செக்ஸ் மெசின்கள் என்று நினைக்கும் எமது ஆணாதிக்க சமூகத்தில் அவர்களின் மனங்களில் கொஞ்சமாவது பெண்களைப் பற்றிய புரிதலை இந்தப் பதிவு தொட்டிருக்கிறது...இந்தப் பதிவு அது எழுதப்பட்ட விதத்திற்க்காக அல்லாது அது சொல்லும் செய்திக்காகவே தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.. [/size]....

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி அக்காவின் யாழ் இணையத்தில் கன்னிக்கவிதையாகையாகிய மறக்க 'முடியுமா(http://www.yarl.com/...630#entry795885)' கவிதை போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது... தாய்மண்ணின் பிரிவையும் ஊரின் நினைவுகளையும் மீட்டிய அந்தக்கவிதை அவரது கன்னிக்கவிதை ஆயினும் கவிதைக்குரிய அழகிய நடையுடன் ரசிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளதால் போட்டிக்கு தெரிவுசெய்கிறேன்...கவிதையின் இறுதிப் பகுதி மிகவும் ஏக்கத்தை வரவைத்தது...

[size=4]சிறப்பாக விளங்கிய எம்மூர் சீர்கெட்டுப்போனதேனோ[/size]

[size=4]சிறகுடைந்த பறவைகளாய் திக்கெட்டும் வாழ்வதேனோ[/size]

[size=4]பசுமையான அந்த நினைவுகளை - எம்மால்[/size]

[size=4]மறையும் வரை மறக்கத்தான் முடியுமா.....? [/size]

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்களில் கண்ணீரையும் உருகாத நெஞ்சையும் உருகவைக்கும் சாந்தி அக்காவின் "எங்கள் தோழனை உயிர்காத்துத் தாருங்கள்…..!('http://www.yarl.com/forum3/index.php?showtopic=107612#entry795899)" என்றகவிதை இறுதிப்போட்ட்டிக்கு தெரிவு செய்யப்படுகிறது...மண்ணுக்காக தன் வாழ்நாட்களில் பெரும்பகுதியை அற்பணித்த வீரனின் கண்ணீரை தாங்கிய கவிதைக்கு என்ன பெறுமதியும் ஈடாக...அதனால் இந்தக் கவிதையை போட்டிக்கு எடுக்கலாமோ என்று ஒரு சின்னதயக்கத்துடனேயே எடுக்கிறேன்...

ஒருகாலம் உனக்கான விலை

உலகத்தாலும் கொடுக்க முடியாத பெறுமதி.

கையுக்குள் வளர்த்து கடமைக்கு விடைதந்த

காவியத்தின் கண்ணில் தெரிந்த ஒளியின் வெளியில்

ஓர்மத்தை விதைத்து விடைபெற்ற வீரன்.

ஒருகாலம் அல்ல எந்தக்காலத்திலும் அவர்களின் வீரமும் தியாகங்களும் விலைமதிக்க முடியாதவையே..அற்புதமான கவிதைவரிகள்..

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் அண்ணாவின் "மண்வாசம் தேடும் நெஞ்சம்.............எனது இசையில் .....(http://www.yarl.com/forum3/index.php?showtopic=107665)" பாடல் போட்டிக்காகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது...எழுதுவதைவிட மிகக்கடினமான பணி இசை அமைப்பது....கவிதையின் தன்மைக்கு உயிர்கொடுத்து அற்புதமாக இசை அமைத்த தமிழ்சூரியன் அண்ணாவிற்க்கு ஒரு சல்யூட் உடன் இந்தப்பாடல்போட்டிக்குள் நுழைகிறது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லியோவின் அழகான "ஹைக்கூ/விடுகதைக்கவிதைகள்(http://www.yarl.com/forum3/index.php?showtopic=107760&st=0&gopid=796915&#entry796915)" என்ற ஆக்கம் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கு...மூன்று நான்கு வரிகளில் சிந்தனையைத்தூண்டும் விதமாக செய்தி சொல்லி எழுத்தப்பட்ட கவிதைகள் அத்தனையும் முத்துக்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போட்டி சம்பந்தமான கருத்துக்களை இங்கு[post='http://www.yarl.com/forum3/index.php?showtopic=107785&st=0']யாழ் இணையப்பரிசுப் போட்டி 2012 - கருத்துக்கள் சென்றுபாருங்கள்,பதிவிடுங்கள்... நன்றி உறவுகளே...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலைபோவானின் ("துகில் உரிய சிங்களம் உண்டு.. கூறு போட கூட்டமைப்புக்கள் உண்டு.. விடுதலை தான் எப்போ...?!" http://www.yarl.com/forum3/index.php?showtopic=107973) எனும் கவிதை போட்டிக்கு தெரிவு செய்யப்படுகிறது...காலத்துக்கேற்ற நல்ல ஒருகவிதை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் அண்ணாவின் ("கதை என்னெண்டால்..."http://www.yarl.com/forum3/index.php?showtopic=108146) எனும்பதிவு போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது...கதை சொல்லியவிதமும் கதைக்கருவும் அருமை...இன்னொருவிதமான தனித்துவமான எழுத்துநடை...பாராட்டுக்கள் இன்னுமொருவன்..தொடர்ந்து அதிகமாக யாழில் எழுதுங்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்பகனின் ("பெண் ஒன்று கண்டேன்"http://www.yarl.com/forum3/index.php?showtopic=108152&st=0&gopid=801683entry801683) கவிதை போட்டிக்கு தெரிவு செய்யப் பட்டிருக்கிறது...அழகான நளினமான வார்த்தைகளால் பின்னிய கவிதை... மிக அழகாக வர்ணித்துள்ளார்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்காவின் ("புலம் பெயர் வாழ்க்கையும்,மன அழுத்தமும்"http://www.yarl.com/forum3/index.php?showtopic=108331)என்னும் பதிவு போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது....புலம்பெயர் வாழ்க்கையில் உறவுகளைப் பிரிந்து தனிமை,வேலைச்சுமை, மற்றும் பல எண்ணுக்கணக்கற்ற் பிரச்சினைகளுடன் முற்றிலும் புதிய சூழலில் முட்டிமோதும் எம்மவர்களில் அநேகர் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்சினை இது...அதனைப் பேசுபொருளாக எடுத்து எழுதிய ரதி அக்காவுக்கு பாராட்டுக்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மல்லையூரனண்ணாவின் வரிகளில் தமிழ் சூரியன் அண்னாவின் இசையமைப்பில் உருவான ("வண்டின் கண்ணில் ஆடும் பூ"http://www.yarl.com/forum3/index.php?showtopic=107853&st=80#entry801602 )எனும் பாடல் போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது..நல்ல வரிகளில் அருமையான இசை,குரலுடன் பாடல் மிக அழகாக வந்திருக்கிறது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கை அண்ணாவின் ("புலம் பெயர்ந்தவனின் ஏக்கங்கள்!" http://www.yarl.com/...75 ) என்னும் கவிதை போட்டிக்காக தெரிவு செய்யப்படுகிறது....நல்ல சுவையான மொழி நடையில் தாய்மண்ணின் பிரிவின் ஏக்கம்களை வடித்திருக்கிறார்...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரும்பின் ("இணையவெளியில் நாங்கள்..@ அமரர் ஈழநாதன் (ஈழவன்) நினைவு கட்டுரை"http://www.yarl.com/forum3/index.php?showtopic=109125&st=0&gopid=807537&#entry807537)எனும் ஆக்கம் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது..நல்ல ஒரு இரைமீட்டல்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொசப்பத்தேமியா சுமேரியர் அக்காவின் ("நினைத்தாலே நெஞ்சு பக் பக்" http://www.yarl.com/forum3/index.php?showtopic=109116) எனும் ஆக்கம் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது;;எந்த இடத்திலும் தொய்வின்றி வாசிப்பவரை கதிரையின் நுனியில் இருந்து வாசிக்க வைக்கும் விறுவிறுப்பான எழுத்து நடை....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.