Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் தோழனை உயிர்காத்துத் தாருங்கள்…..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4][size=6]எங்கள் தோழனை உயிர்காத்துத் தாருங்கள்…..![/size]

Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Wednesday, September 5, 2012[/size]

[size=4]காலம் எழுதிய வெற்றிகளில்

நெருப்பாய் இயங்கிய வரலாறு.

இருளும் கடினமும் இயற்கையின் சீற்றமும்

அசையாத இரும்பின் இருதயம்

உனக்காய் படைக்கப்பட்டிருந்தது.

ஒருகாலம் உனக்கான விலை

உலகத்தாலும் கொடுக்க முடியாத பெறுமதி.

கையுக்குள் வளர்த்து கடமைக்கு விடைதந்த

காவியத்தின் கண்ணில் தெரிந்த ஒளியின் வெளியில்

ஓர்மத்தை விதைத்து விடைபெற்ற வீரன்.

‘செயலின் பின் சொல்’

அதிகாரியாய் , பணியாளனாய்

இலட்சியப் போராளியாய் – நீ

இயங்கிய தளங்கள் தந்த அனுபவங்களிலிருந்து

இன்னோர் உலகின் மூலத்தைக் கண்ட முழுமுதலான்.

தடைகளகற்றித் தனிதேசம் அமைக்க

ஓயாதலைந்த பெருநெருப்பு.

எமக்காகவே எரியும் நாள் தேடியலைந்த எரிமலை.

ஏற்றிருந்த இலட்சியக் கனவோடலைந்த இரும்பு

வழியனுப்பியோர் கனவில் விளைந்த [/size]

[size=4]வெற்றிகளை அள்ளித் தந்து

விலாசங்கள் விசிலடிக்க [/size]

[size=4]வழிகாட்டிய வெளிவராத அதிசயம்…..

23.08.2012 ,

கடைசியாய் கதைபேசி

கண்ணீரோடு விடைபெற்ற போதும்

மீண்டும் கனவுகள் விதைத்துத்தானே

கண்ணுறங்கிப் போனாய் !

வாழ்ந்த போது உனக்கு விலையில்லை

வரலாறுகள் நீ படைத்த போதுன்

பெயருக்கு விலாசமில்லை….!

அன்றைய வீரன் !

காய்ந்து போன உதட்டின் உணர்வையோ

உயிரின் வலியையோ உணர முடியாப் பிணமாய்

இன்று வீழ்ந்து கிடக்கிறாய்

விழிகளில் ஈரம் எதையோ சொல்லத் துடிக்கிறது

விளங்கிக் கொள்ள முடியவில்லை……!

‘வீழ்வதெல்லாம் எழுவதற்கே’

இன்னும் வீரமாய் உன்னை விற்பனைக்கா(சா)ட்சியாக்கி

விற்றுக் கொண்டிருக்கிறது தேசிய உணர்வு….!

நீ செத்துக் கொண்டிருக்கிறாய்.

அப்பாவின் குரலுக்காய் சாகித்யன்

கணவனின் மீட்சிக்காய் கவிதா

தோழனின் உயிர்காப்புக்காய் நாங்கள்

உன்னைக் காக்க மட்டுமே இறைஞ்சுகிறோம்….!

கண்ணில் தெரியாக்கடவுளே

முன்னால் வாழ்கிற தமிழர்களே

எங்கள் தோழனை உயிர்காத்துத் தாருங்கள்…..! [/size]

[size=4]எந்நாளும் உங்களுக்கு நன்றியுடனிருப்போம்.

01.09.2012[/size]

[size=5]http://mullaimann.bl.../blog-post.html[/size]

[size=5]http://kavithai.blog...னை-உயிர்காத்து/[/size]

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றுக்கும் கருத்து எழுதியவர்கள் இங்கு எதுவும் எழுதமுடியாமல் சுடுகின்றது . எழுந்து வா நண்பனே நிச்சயம் உன்னை விலை கூறி இனியும் விற்கமாட்டோம் .

எல்லாவற்றுக்கும் கருத்து எழுதியவர்கள் இங்கு எதுவும் எழுதமுடியாமல் சுடுகின்றது . எழுந்து வா நண்பனே நிச்சயம் உன்னை விலை கூறி இனியும் விற்கமாட்டோம் .

மன்னிக்கவேண்டும் நேரம் இல்லை நந்தன்.

வீழ்வதெல்லாம் எழுவதற்கே’

இன்னும் வீரமாய் உன்னை விற்பனைக்கா(சா)ட்சியாக்கி

விற்றுக் கொண்டிருக்கிறது தேசிய உணர்வு….!

நீ செத்துக் கொண்டிருக்கிறாய்.

கோழி கூவி விடியுமா????????????? மிக்க நன்றிகள் சாந்தி உங்கள் சாட்டையடிக் கவிதைக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

நண்பனுக்காவது விடியவேண்டும்

தடைகளகற்றித் தனிதேசம் அமைக்க

ஓயாதலைந்த பெருநெருப்பு.

எமக்காகவே எரியும் நாள் தேடியலைந்த எரிமலை.

ஏற்றிருந்த இலட்சியக் கனவோடலைந்த இரும்பு

வழியனுப்பியோர் கனவில் விளைந்த

வெற்றிகளை அள்ளித் தந்து

விலாசங்கள் விசிலடிக்க

வழிகாட்டிய வெளிவராத அதிசயம்…..

விலாசங்கள் விசில் அடிச்சுதோ சாந்தி ???????? உங்கள் கவிதைக்கு !!!!

  • கருத்துக்கள உறவுகள்

எட்டிப் பார்ப்போரே இல்லாத இடத்தில் விசிலா ? நாங்கள் இப்போது தமிழ் தேசியமும் இனவிடுதலையும் எனும் தொனிப்பொருளில் ஒரு ஒன்றுகூடலில் இருக்கின்றோம் .முடிந்த்ததும் முடிந்தால் வந்து பார்க்கின்றோம் .

எட்டிப் பார்ப்போரே இல்லாத இடத்தில் விசிலா ? நாங்கள் இப்போது தமிழ் தேசியமும் இனவிடுதலையும் எனும் தொனிப்பொருளில் ஒரு ஒன்றுகூடலில் இருக்கின்றோம் .முடிந்த்ததும் முடிந்தால் வந்து பார்க்கின்றோம் .

அதுக்குள்ளை பெடி தியாகியாய் போடுவான் பறவாயில்லையோ ?????

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குள்ளை பெடி தியாகியாய் போடுவான் பறவாயில்லையோ ?????

விளக்கேத்திப் போட்டு ஒரு உண்டியல் வச்சாப்போச்சு :wub:

[size=4][size=6]எங்கள் தோழனை உயிர்காத்துத் தாருங்கள்…..![/size][/size]

[size=4]இவரின் உடல்நிலை இப்படி எப்படி உள்ளது? நன்றி. [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இவரின் உடல்நிலை இப்படி எப்படி உள்ளது? நன்றி. [/size]

சொல்லும்படியாய் எவ்வித மாற்றமும் இல்லை.வயர்மூலம் போய்க்கொண்டிருந்த உணவு தண்ணீர் வயர்கள் கழற்பட்டு இப்போ வாயால் போகிறது. படுத்த படுக்கை பேச்சில்லை. மாதங்களோ அல்லது வருடங்களோ செல்லும் பேச்சு வர , அல்லது இப்படியே இருக்கவும் கூடுமென்கிறது மருத்துவ அறிக்கை.

உடலின் பாதி இயக்கமில்லை உணர்வில்லை. இடது பக்கம் சிறு உணர்வு இருக்கிறது. அரச மருத்துவமனை ஆனால் மருந்துகள் எழுதிக் கொடுக்கிறார்கள் அவற்றை வெளியிலிருந்துதான் வாங்கிக் கொடுக்க வேண்டும். ஏதாவது கேட்டால் கண்ணீரை மட்டுமே பதிலாக்குகிறான் வேறு சொல்லும்படியில்லை.

மூளை நரம்பு பாதிப்புற்று இரத்தக்கண்டல் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான சிகிச்சை எதுவும் ஆரம்பிக்கவுமில்லை. செய்யப்படவுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றிகள், சாந்தி!

தமிழனுக்கு மதல் எதிரி, தமிழர்களே அன்றி,வேறெவரும் அல்ல!

சானேற,முழம் சறுக்குகிறோம்! சறுக்க வைக்கப் படுகிறோம்!

நமது உறவு, நலம் பெறட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாந்தியக்கா கவிதைக்கு

எனக்கு என்மீது தான் கோபம்

எதற்காக எனக்கு இர கைகள் மட்டும்

ஒரு இருபதாவது இருந்தால்?

எதற்காக ஒரு உயிர் மட்டும் ஒரு பத்தாவது இருந்தால்?

எதற்காக 24 மணித்துளிகள் ஒரு நாளில்

ஒரு லட்சமாவது இருந்தால்??

எனக்குத்தான் முடியவில்லை

உனக்காவது

இழந்ததை மீளப்பெறும் சக்தியையாவது தரக்கூடாதா?

எதிரி

மோசமானவன்

உலகம் சுயநலமானது

அடிப்பவனைத்தடுக்கவில்லை

திருப்பியடித்தால் கொல்கிறது

கோபம் விரக்தி

உங்ளுக்குள் அழுகின்றேன்

ஒருவருக்கும் தெரியுதில்லை

தெரிந்தாலும் அதையும்

வியாபார யுக்தி என்பர்.....

விரைவில் நலம் பெற வேண்டுமென மனசார வேண்டுகிறேன்.

சொல்லும்படியாய் எவ்வித மாற்றமும் இல்லை.வயர்மூலம் போய்க்கொண்டிருந்த உணவு தண்ணீர் வயர்கள் கழற்பட்டு இப்போ வாயால் போகிறது. படுத்த படுக்கை பேச்சில்லை. மாதங்களோ அல்லது வருடங்களோ செல்லும் பேச்சு வர , அல்லது இப்படியே இருக்கவும் கூடுமென்கிறது மருத்துவ அறிக்கை.

உடலின் பாதி இயக்கமில்லை உணர்வில்லை. இடது பக்கம் சிறு உணர்வு இருக்கிறது. அரச மருத்துவமனை ஆனால் மருந்துகள் எழுதிக் கொடுக்கிறார்கள் அவற்றை வெளியிலிருந்துதான் வாங்கிக் கொடுக்க வேண்டும். ஏதாவது கேட்டால் கண்ணீரை மட்டுமே பதிலாக்குகிறான் வேறு சொல்லும்படியில்லை.

மூளை நரம்பு பாதிப்புற்று இரத்தக்கண்டல் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான சிகிச்சை எதுவும் ஆரம்பிக்கவுமில்லை. செய்யப்படவுமில்லை.

[size=1]

[size=4]நலம்பெற வேண்டுகிறேன். [/size][/size]

[size=4]தகவலுக்கு நன்றி. நேரம் கிடைக்கும்பொழுது, சில நாட்களுக்கு ஒருமுறை, முடிந்தால் முன்னேற்றம் பற்றி அறியத்தாருங்கள். [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]கடவுளே![/size][size=1]

[size=4]தேச மகனை உயிர் பிழைக்கவிடு ![/size][/size]

கவிதைக்கு நன்றிகள் சாந்தியக்கா.

இவர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகின்றேன்.

நன்றி சாந்தி அக்கா தகவலை உறுத்தும் கவிதை வரிகளால் இங்கே இணைத்ததிற்கு........முதலில் தோழன் நலம் பெற அந்த ஆண்டவர் அருள்புரிவாராக ............எவ்வளவோ எல்லாம் செய்தோம்......என்னவோ எல்லாம் செய்தோம் .........ஆனால் அந்த உண்மை இன்னும் எங்களை திரும்பி பார்க்கவில்லை என்பதே என் கோபம் ..............நாம் தொடர்ந்து செய்வோம் இந்த தோழன் உட்பட இன்னும் அனைத்து உறவுகளுக்கும் ...........உங்கள் பணி சிறக்க என்றும் உங்களுடன் கை கொடுத்து நிற்போம் ..............அன்றும் செய்தோம். இன்றும் செய்கிறோம் ..எம் தேசம் விடியும் வரை செய்வோம்.............

[ அக்கா தனி மடலில் தொடர்பு கொள்கிறேன் நன்றி]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.