Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறக்க முடியுமா..........?

Featured Replies

மறக்க முடியுமா..................?

நாற்றிசையும் ஆலயமணி ஒலித்த

நாற்புறமும் கடல் சூழ்ந்த

ஞானியர் ஐவர் உதித்த

நல்லதோர் ஊராம் எம் காவலூர்

போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆண்ட ஊர் - அதில்

அழகிய கடற்கோட்டையையும் கொண்டது எம்மூர்

கலை வளர்ந்து தலை சிறந்து

தனித்துவமாய் இருந்தது எம்மூர்

மாணவிகள் எம்மனதில் இருக்கவில்லை சஞ்சலம்

மான் குட்டிகள் போல் துள்ளித்திரிந்தோம் மகிழ்வுடன்

எம் மகிழ்வழிக்க வந்த மாற்றான் படை

பறித்தது - பல உயிர்களை

அழித்தது - உடமைகளை

இழந்தோம் - நண்பர்களை

பிரிந்தோம் - சொந்தங்களை

அகதியானோம் -அந்நிய தேசத்தில்

சிறப்பாக விளங்கிய எம்மூர் சீர்கெட்டுப்போனதேனோ

சிறகுடைந்த பறவைகளாய் திக்கெட்டும் வாழ்வதேனோ

பசுமையான அந்த நினைவுகளை - எம்மால்

மறையும் வரை மறக்கத்தான் முடியுமா.....?

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவை முதல் தடவையாக பார்த்திருக்கிறன்..பகிர்வுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்..தொடர்ந்து தங்கள் ஆக்கங்களை கொண்டு வரவேண்டும் என்று கேட்டு செல்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்

மறக்க முடியுமா..................?

நாற்றிசையும் ஆலயமணி ஒலித்த

நாற்புறமும் கடல் சூழ்ந்த

ஞானியர் ஐவர் உதித்த

நல்லதோர் ஊராம் எம் காவலூர்

சிறப்பாக விளங்கிய எம்மூர் சீர்கெட்டுப்போனதேனோ

சிறகுடைந்த பறவைகளாய் திக்கெட்டும் வாழ்வதேனோ

பசுமையான அந்த நினைவுகளை - எம்மால்

மறையும் வரை மறக்கத்தான் முடியுமா.....?

என் ஊருக்கும் இது பொருந்தும்

மறையும் வரை மறக்கமுடியுமா?

இல்லை இல்லை இல்லை

நேற்றுத்தான் ஒருவர் திண்ணையில் கேட்டார்

இன்று

அதற்கு பதிலாக

எள் என்றால் எண்ணெய்யாக.......................

ரத்தத்தில் கவிதை இருக்கு

தயக்கமென்ன?

தொடரட்டும் தங்கள் கவிதைப்பணி.

அண்ணனின் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் தமிழினி.... உண்மை...... மறக்குமுடியுமா .........நாம் தவழ்ந்த மண்ணையும்,..... எமை வளர்த்த தமிழையும் .......நாம் வாழ்ந்த ஊரையும்...... தொடருங்கள் உங்கள் கவிப்பணியை ............

இன்னொருமுறை இங்கு வருவேன்...............[பச்சையுடன்]

  • கருத்துக்கள உறவுகள்

"கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் ..".......கலையார்வம் மிக்க

குடும்ப பின்னணி தெரிகிறது . பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா எழுதீட்டா...... எழுதீட்டா..எழுதீட்டா...இதைத்தான் சொன்னன் எழுதுங்கோ எழுதுங்கோ எண்டு...அநியாயமாய் ஒரு கவிதாயினையை உங்களுக்குள்ள இவ்வளவு நாழும் பூட்டி வச்சிட்டியள்..கொஞ்சம் வெளியில விடுங்கோ..மனசில உள்ள கவிதைகள் எல்லாம் வெளிவரட்டும்...

  • தொடங்கியவர்

உங்கள் பதிவை முதல் தடவையாக பார்த்திருக்கிறன்..பகிர்வுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்..தொடர்ந்து தங்கள் ஆக்கங்களை கொண்டு வரவேண்டும் என்று கேட்டு செல்கிறேன்..

நன்றி யாயினி. இது எனது முதல் ஆக்கம் தான் தொடர்ந்து எழுத முயற்சிக்கின்றேன்.

என் ஊருக்கும் இது பொருந்தும்

மறையும் வரை மறக்கமுடியுமா?

இல்லை இல்லை இல்லை

நேற்றுத்தான் ஒருவர் திண்ணையில் கேட்டார்

இன்று

அதற்கு பதிலாக

எள் என்றால் எண்ணெய்யாக.......................

ரத்தத்தில் கவிதை இருக்கு

தயக்கமென்ன?

தொடரட்டும் தங்கள் கவிதைப்பணி.

அண்ணனின் வாழ்த்துக்கள்

நன்றி விசுகு அண்ணா தங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும்.

வாழ்த்துக்கள் தமிழினி.... உண்மை...... மறக்குமுடியுமா .........நாம் தவழ்ந்த மண்ணையும்,..... எமை வளர்த்த தமிழையும் .......நாம் வாழ்ந்த ஊரையும்...... தொடருங்கள் உங்கள் கவிப்பணியை ............

நாம் மறையும் வரை எமது தாய்மண்ணின் ஏக்கம் எம்மை விட்டு அகலாது. நன்றி TS அண்ணா.

"கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் ..".......கலையார்வம் மிக்க

குடும்ப பின்னணி தெரிகிறது . பாராட்டுக்கள்.

அவர்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் ஏதோ என்னால் முடிந்ததை எழுதினேன். நன்றி நிலாமதி அக்கா உங்கள் பாராட்டிற்கு.

அக்கா எழுதீட்டா...... எழுதீட்டா..எழுதீட்டா...இதைத்தான் சொன்னன் எழுதுங்கோ எழுதுங்கோ எண்டு...அநியாயமாய் ஒரு கவிதாயினையை உங்களுக்குள்ள இவ்வளவு நாழும் பூட்டி வச்சிட்டியள்..கொஞ்சம் வெளியில விடுங்கோ..மனசில உள்ள கவிதைகள் எல்லாம் வெளிவரட்டும்...

உங்களைப்போன்ற எழுத்தாற்றல் மிக்கவர்கள் நான் இங்கு கிறுக்கியதை கவிதை என்று சொன்னதே எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. நன்றி சுபேஸ் உங்கள் ஊக்கத்திற்கும் பாராட்டிற்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழினி , எனக்கொரு கேள்வி நாற்புறமும் கடலா காவலூரில் ?

மாணவிகள் எம்மனதில் இருக்கவில்லை சஞ்சலம்

மான் குட்டிகள் போல் துள்ளித்திரிந்தோம் மகிழ்வுடன்

எம் மகிழ்வழிக்க வந்த மாற்றான் படை

இருக்கவில்லை எம்மனதில் சஞ்சலம்

துள்ளித்திரிந்தோமே மான்குட்டிகள் போலே ,

மகிழ்சியை தருகின்றோம் என்று வந்த படை

இப்படியிருந்தால் நல்லாயிருக்கும் ( மனதில் வைக்காவிட்டால் ) முதல் கவியை வடித்த தமிழினிக்கு எனது மனந்திறந்த வாழ்த்துக்கள் . ஒரு படைப்படைப்பை படைக்கும்போது வருகின்ற வலி சொல்லி விளங்கப்படுத்த முடியாது . நீங்கள் மேலும் இந்த துறையில் வளரவேண்டும் என்பதே எனது ஆசை ....

பிடியுங்கள் உங்கள் பேனாவை

வடியுங்கள் கவிச்சரங்களை

Edited by கோமகன்

வாவ் தமிழினி அக்கா..... கவிதை எழுதி விட்டீர்கள்.... :) :) :) :) :) அதுவும் மண்வாசத்துடன்.... :) வாழ்த்துகள். :)

கவிதைக்குடும்பத்தில் பிறந்து விட்டு இவ்வளவு காலம் எழுதாமல் விட்டிட்டீர்களே.... அவற்றுக்கெல்லாம் சேர்த்து இனி பல கவிதைகள் எழுதி அசத்த வாழ்த்துகள்..... :)

பச்சை முடிந்து விட்டது... பின்னர் போடுகிறேன்.... :)

  • கருத்துக்கள உறவுகள்

அவரது கருவையே கொலை செய்கிறதே தங்கள் வரி. :( :( :(

(கோமகன் தனது கருத்தில் திருத்தத்தை செய்ததால் இங்கும் திருத்தப்பட்டுள்ளது)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

*திருத்தப்பட்டது..

Edited by சுபேஸ்

மாணவிகள் எம்மனதில் இருக்கவில்லை சஞ்சலம்

மான் குட்டிகள் போல் துள்ளித்திரிந்தோம் மகிழ்வுடன்

எம் மகிழ்வழிக்க வந்த மாற்றான் படை

இருக்கவில்லை எம்மனதில் சஞ்சலம்

துள்ளித்திரிந்தோமே மான்குட்டிகள் போலே ,

மகிழ்சியை தருகின்றோம் என்று வந்த படை

இப்படியிருந்தால் நல்லாயிருக்கும் ( மனதில் வைக்காவிட்டால் ) முதல் கவியை வடித்த தமிழினிக்கு எனது மனந்திறந்த வாழ்த்துக்கள் . ஒரு படைப்படைப்பை படைக்கும்போது வருகின்ற வலி சொல்லி விளங்கப்படுத்த முடியாது . நீங்கள் மேலும் இந்த துறையில் வளரவேண்டும் என்பதே எனது ஆசை ....

பிடியுங்கள் உங்கள் பேனாவை

வடியுங்கள் கவிச்சரங்களை

[size=4]நானும் கவிதை எழுத எண்ணுவதுண்டு.[/size]

[size=4]

போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆண்ட ஊர் [/size][size=4]- அதில்[/size]

[size=4]அழகிய கடற்கோட்டையையும் கொண்டது எம்மூர்[/size]

[size=4]கலை வளர்ந்து தலை சிறந்து[/size]

[size=4]தனித்துவமாய் இருந்தது எம்மூர்[/size]

[size=4]மாணவிகள் எம்மனதில் இருக்கவில்லை சஞ்சலம்[/size]

[size=4]மான் குட்டிகள் போல் துள்ளித்திரிந்தோம் மகிழ்வுடன்[/size]

[size=4]எம் மகிழ்வழிக்க வந்த[/size][size=4] மாற்றான் படை[/size]

[size=4]பறித்தது - பல உயிர்களை[/size]

[size=4]அழித்தது - உடமைகளை[/size]

[size=4]இழந்தோம் - நண்பர்களை[/size]

[size=4]பிரிந்தோம் - சொந்தங்களை[/size]

[size=4]அகதியானோம் -அந்நிய தேசத்தில்

[/size]

இருவரும் ஆக்கிரமிப்பாளர்களே. அவனே பிற்காலத்தில் நமக்கு நடந்த அவலத்தின் தொடக்கப்புள்ளி. வெள்ளையன் நல்லவன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக இருக்கின்றது வாழ்த்துகள்.

ஆனாலும் கடற்கோட்டைக்குச் சொந்தக்காரன் வந்து கேட்டால் என்ன செய்வது :D

மாணவிகள் எம்மனதில் இருக்கவில்லை சஞ்சலம்

மான் குட்டிகள் போல் துள்ளித்திரிந்தோம் மகிழ்வுடன்

எம் மகிழ்வழிக்க வந்த மாற்றான் படை

இருக்கவில்லை எம்மனதில் சஞ்சலம்

துள்ளித்திரிந்தோமே மான்குட்டிகள் போலே ,

மகிழ்சியை தருகின்றோம் என்று வந்த படை

இப்படியிருந்தால் நல்லாயிருக்கும் ( மனதில் வைக்காவிட்டால் )

தமிழினி அக்கா எழுதியது சரி என்று நினைக்கிறேன்..... அதாவது மாணவிகளான எங்களுடைய மனதில் இருக்கவில்லை சஞ்சலம் என்று எழுதியுள்ளார்.

உங்கள் கவிவரிகளில் "மாணவிகள்" என்பது விடுபட்டு விட்டது. மாணவிகளையும் சேர்த்து பார்த்தால் உங்கள் கவிவரிகள் தான் பிழைக்கும்.

"மாணவிகள் இருக்கவில்லை எம்மனதில் சஞ்சலம்..."

அத்துடன் மாற்றான் படை மகிழ்ச்சியை தருகிறோம் என்று வரவில்லை. மகிழ்வழிக்க என்று தெரிந்தே வந்தார்கள். எனவே அதுவே இக்கவிதைக்கு சரியாக பொருந்தும் என்பது என் பார்வை...

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

தவறுக்கு மன்னிக்கவும் தமிழினி

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அழகு பாராட்டுக்கள் தமிழ் இனி :D

  • கருத்துக்கள உறவுகள்

முதற்கவிதைக்கு நன்றிகள்..! அழகாக வர்ணித்துள்ளீர்கள் தமிழினி..! :D

  • கருத்துக்கள உறவுகள்

மறக்க முடியுமா..................?

நாற்றிசையும் ஆலயமணி ஒலித்த

நாற்புறமும் கடல் சூழ்ந்த

ஞானியர் ஐவர் உதித்த

நல்லதோர் ஊராம் எம் காவலூர்

-----

தமிழினியின் கன்னிக் கவிதைக்கு பாராட்டுக்கள்.

காவலூரில் உதித்த ஞானியர் ஐவர் யார்.

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணின் வாசமும் அதன் மகிமையும் மண்ணுக்கு போகும் வரை நம்மால் மறக்க முடியாத நினைவுகள் தமிழனி.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றிகள், தமிழினி!

அருமையாகக் கவிதை வந்திருக்கின்றது, உங்களுக்கு!

இழப்புக்களின் நினைவுகளை, இரை மீட்பதே வாழ்க்கையாகப் போய் விட்டது, எங்களுக்கு!

தொடர்ந்து கவிதைகளைத் தாருங்கள்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

கம்பன் வீட்டு தறியும் கவியும் பாடும்...தமிழினி உங்கள் முதற்கவிதை என சொல்ல முடியாதளவிற்கு இருக்குது...பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் தமிழினி , எனக்கொரு கேள்வி நாற்புறமும் கடலா காவலூரில் ?

அது ஒரு தீவு என்பததையே அப்படி நாசுக்காக கூறியிருந்தேன். வாழ்த்திற்கு நன்றி.

முதல் கவியை வடித்த தமிழினிக்கு எனது மனந்திறந்த வாழ்த்துக்கள் . ஒரு படைப்படைப்பை படைக்கும்போது வருகின்ற வலி சொல்லி விளங்கப்படுத்த முடியாது . நீங்கள் மேலும் இந்த துறையில் வளரவேண்டும் என்பதே எனது ஆசை ....

பிடியுங்கள் உங்கள் பேனாவை

வடியுங்கள் கவிச்சரங்களை

நன்றி கோமகன் அண்ணா உங்கள் மனம்திறந்த வாழ்த்துக்கு.

வாவ் தமிழினி அக்கா..... கவிதை எழுதி விட்டீர்கள்.... :) :) :) :) :) அதுவும் மண்வாசத்துடன்.... :) வாழ்த்துகள். :)

கவிதைக்குடும்பத்தில் பிறந்து விட்டு இவ்வளவு காலம் எழுதாமல் விட்டிட்டீர்களே.... அவற்றுக்கெல்லாம் சேர்த்து இனி பல கவிதைகள் எழுதி அசத்த வாழ்த்துகள்..... :)

நன்றி துளசி உங்கள் வாழ்த்திற்கும் ஊக்கத்திற்கும்.

  • தொடங்கியவர்

கவிதை நன்றாக இருக்கின்றது வாழ்த்துகள்.

ஆனாலும் கடற்கோட்டைக்குச் சொந்தக்காரன் வந்து கேட்டால் என்ன செய்வது :D

வாழ்த்திற்கு நன்றி வாத்தியார் அண்ணா. கடற்கோட்டைக்கு சொந்தக்காரன் வந்து டக்லஸ் மாமாவைத்தானே :lol: கேட்கனும்...இப்ப அவரின் ஆட்சிதானே அங்கு நடக்கிறது :(

கவிதை அழகு பாராட்டுக்கள் தமிழ் இனி :D

பாராட்டிற்கு நன்றி சுண்டல்.

முதற்கவிதைக்கு நன்றிகள்..! அழகாக வர்ணித்துள்ளீர்கள் தமிழினி..! :D

நன்றி இசை அண்ணா. எனக்கும் வர்ணனைக்கும் வெகுதூரம் :) ஏதோ சும்மா கிறுக்கிப்பார்த்தேன். முதல் கவிதைக்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சியே :D

தமிழினியின் கன்னிக் கவிதைக்கு பாராட்டுக்கள்.

காவலூரில் உதித்த ஞானியர் ஐவர் யார்.

நன்றி சிறி அண்ணா உங்கள் பாராட்டிற்கு. காவலூரில் உதித்த ஆண்டகைகள் என் அறிவுக்கெட்டியவரையில்

1. வணக்கத்திற்குரிய தோமஸ் சவுந்தரநாயம் ஆண்டகை

2. வணக்கத்திற்குரிய கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை

3 வணக்கத்திற்குரிய தியோகுப்பிள்ளை ஆண்டகை

4. வணக்கத்திற்குரிய எல். ஆர். அன்ரனி ஆண்டகை

5. வணக்கத்திற்குரிய எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகை

குறிப்பு: இதில் தவறேதும் இருந்தால் தயவு செய்து யாராவது திருத்தம் செய்து உதவுங்கள் . நன்றி.

மண்ணின் வாசமும் அதன் மகிமையும் மண்ணுக்கு போகும் வரை நம்மால் மறக்க முடியாத நினைவுகள் தமிழனி.

நன்றி சாந்தி அக்கா.16 வருடங்கள் மட்டுமே அங்கு வாழ்ந்த எனக்கு இத்தனை ஏக்கங்கள் இழப்புக்கள் என்றால்??? அந்த பசுமையான நினைவுகள் இன்றும் பசுமரத்தானியாக எப்போதும் எம் கூடவே இருக்கும்.

கவிதைக்கு நன்றிகள், தமிழினி!

அருமையாகக் கவிதை வந்திருக்கின்றது, உங்களுக்கு!

இழப்புக்களின் நினைவுகளை, இரை மீட்பதே வாழ்க்கையாகப் போய் விட்டது, எங்களுக்கு!

தொடர்ந்து கவிதைகளைத் தாருங்கள்!

உங்கள் வாழ்த்திற்கு நன்றி புங்கையூரான் அண்ணா. அருமையாக கவிதை வந்திருக்கின்றது என்று நீங்கள் கூறியது எனக்கு மேலும் ஊக்கத்தையும் இன்னும் எழுதவேண்டும் என்ற ஆர்வத்தையும் தருகின்றது.

எம்மால் அந்த நாட்களை இரை மீட்பதையும், நினைத்து நினைத்து ஏங்குவததையும் தவிர எதுவும் செய்யமுடியவில்லை :( :(

கம்பன் வீட்டு தறியும் கவியும் பாடும்...தமிழினி உங்கள் முதற்கவிதை என சொல்ல முடியாதளவிற்கு இருக்குது...பாராட்டுக்கள்

நன்றி ரதி உங்கள் பாராட்டுக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.