Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துகில் உரிய சிங்களம் உண்டு.. கூறு போட கூட்டமைப்புக்கள் உண்டு.. விடுதலை தான் எப்போ...?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TAMILL-EELAM.jpg

அது ஒரு நிலம்...

விடுதலைக் கனிதனைச்

சுவைக்க

உயிர்தனைக் கருவியாக்கி

உடல்தனை வித்தாக்கி

வலிதனை தனதாக்கி...

தசாப்தங்கள் மூன்று

குருதி பாய்ச்சி

செய்த விளைச்சல்தனை

அறுவடை செய்யக்

காத்திருந்த

நேரம்......

முதுகு கூனியதுகளும்

முள்ளந்தண்டு விலகியதுகளும்

சகுனிகளும்

சோனியாக்களும்

தம் பழி தீர்க்க

உயிர்ப் பலி தனை

ஒரு இனம் மீதளிக்க..

விடியற் சூரியனின்

திசையில் அன்றி

நிலமே சிவப்பானது

தமிழர் குருதி

தோய்ந்து..!

கற்புக்கு அரசி

கண்ணகியும்

சிலையாகி மெளனமாக..

சேலை வழங்கி

மங்கை தன் மானம்

காத்த கண்ணனும்

கண் மூட

சிங்கள ஓநாய்களின்

துகில் உரிதல்

இச்சைப் பசிக்கு

அனுதினம்

ஆளாகின்றார்

தமிழ்ப் பெண்டிர்..!

வீரத் தமிழன்

பரம்பரையில்

புறமுதுகிட்ட

மைந்தனின்

பாலூட்டிய

முலையறுத்த

தமிழ் தாய்

இன்று

சிங்களக் கிறீஸ்

பூதங்களின்

கோரப் பற்களுக்கு

வீர முலைதனைப்

பறிகொடுக்கும் நிலை..!

சூரியனாய்

அன்றி

மனிதனாய்

வந்த தலைவன்

துரோகக் கழுகுகளின்

காட்டிக் கொடுப்பில்

மறைக்கப்பட

அனாதையானது

அன்னைத் தமிழ்

தேசம்..!

இன்று அது

அல்லாவும் புத்தனும்

ஆர்ப்பரிக்கும்

சிங்கள பெளத்த தேசம்..!

நில சொந்தமில்லா

மந்தைகள்

எம் தாய் நிலம் மேய

நாமோ

அகதி என்ற

தகுதியோடு

அந்நியர் தேசமெங்கும்

அடிமையாக..

உணர்தலும்

புரிதலும்

இன்றி...

கண் கண்ட

கோலமே

வாழ்வென்று

ஆகி நிற்கிறோம்...!

சதியொடு

சூழ்ச்சி கூட

சர்வதேச

படைக்கலப் புயலடிக்க

பாழ்பட்டுப் போன

எம் விடுதலைப் பயிர்தனை

மீட்பதும்...

தாய் நிலம்

விடுதலைக் கனி

சுவைப்பதும்..

எப்போ..???!

தேசத்தை

கூறு போட

கூட்டமைப்பாகி

நிற்போரும்

கூனிகளாகி

நிற்போரும்

கூட்டிக் கொடுப்போரும்

காட்டிக் கொடுப்போரும்

தொட்டுக் கேளும்

உம் மனச்சாட்சி..

வன்னி மண்ணில்

வதைபடும்

வனிதையர்

உம் சகோதரிகள் இல்லையோ...??!

சிறைதனில்

சித்திரவதைப்படும்

தேசப் புதல்வர்

உம் புத்திரர்

இல்லையோ..???!

என்று தான்

உம் நிலை மாறுமோ...

மக்கள் மனம்

சுயநலம் விட்டு

தேச நலம் நாடுமோ..

அன்றே

பாழ்பட்ட

விடுதலைப் பயிர்

புத்துயிர்த்து

கனி தரும்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தின் போர்வைக்குள் தங்களை முடக்கி அரசியல் செய்பவர்களிடம்

விடுதலை, மனிதாபிமானம் என எதிர்பார்ப்பது அபத்தமானது.

அவர்களுக்குத் தங்கள் இருப்புத் தான் முதலில் முக்கியம் .

பின்னர் நேரம் இருந்தால் பொழுது போக்காக விடுதலை, மனிதாபிமானம் பற்றி

அறிக்கை விடுவார்கள்

கவிதைக்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கருத்துக்கு நன்றி வாத்தியார்..! :icon_idea:

கவிதைக்கு நன்றி நெடுக்ஸ்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைக்கு நன்றி நெடுக்கர்.

கூட்டு மைகளை எல்லாம் பிளீச் போட்டுக்கழுவிவிடவும் எல்லாம் சுத்தமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை கனக்கிறது, நெடுக்கர்!!!

எல்லாமே சுய நலமாகிப் போய் விட்டது, இந்த உலகில்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் எல்லாம் சரி....ஆனாலும் எனக்கு இந்த வரியில் மட்டும் உடன்பாடில்லை...

இன்று அது

அல்லாவும் புத்தனும்

ஆர்ப்பரிக்கும்

சிங்கள பெளத்த தேசம்..!

தேவாரம் ,திருவாசகம் பாடி

விரதமும் இருந்து

வழிப்பட்ட எம்

சிவன் எங்கே

கள் அடித்து

கவுன்டு

படுத்திட்டானா?:D :D

வாழ்த்துகள். நல்ல கவிதை...

என்று தான்

உம் நிலை மாறுமோ...

மக்கள் மனம்

சுயநலம் விட்டு

தேச நலம் நாடுமோ..

அன்றே

பாழ்பட்ட

விடுதலைப் பயிர்

புத்துயிர்த்து

கனி தரும்..!

ஆம். சுயநலம் களைந்து அனைவரும் தேச நலனுக்காக ஒன்று சேர வேண்டும்.

வீரத் தமிழன்

பரம்பரையில்

புறமுதுகிட்ட

மைந்தனின்

பாலூட்டிய

முலையறுத்த

தமிழ் தாய்

இன்று

சிங்களக் கிறீஸ்

பூதங்களின்

கோரப் பற்களுக்கு

வீர முலைதனைப்

பறிகொடுக்கும் நிலை..!

இதில் சில சொற்களை பயன்படுத்தியதால் உங்கள் கவிதைக்கு நான் like போட மாட்டன். சிங்களவனிடம் அகப்பட்ட தமிழ் பெண்ணுக்கு என்ன நேரும் என்பது வார்த்தைகளால் சொல்லி தான் உணர வேண்டுமென்றில்லை.

சிங்கள ஓநாய்களின்

துகில் உரிதல்

இச்சைப் பசிக்கு

அனுதினம்

ஆளாகின்றார்

தமிழ்ப் பெண்டிர்..!

இந்த வரிகளை வாசிக்கும் போதே அனைத்தையும் உணரக்கூடியதாக உள்ளது. எனவே மேலுள்ளதில் சில சொற்கள் இந்த கவிதைக்கு தேவையற்ற ஒன்று என்பது என் கருத்து. :)

Edited by துளசி

என்னத்தைச் சொல்றது. :(

இந்த சொற்களை பயன்படுத்தியதால் உங்கள் கவிதைக்கு நான் like போட மாட்டன். சிங்களவனிடம் அகப்பட்ட தமிழ் பெண்ணுக்கு என்ன நேரும் என்பது வார்த்தைகளால் சொல்லி தான் உணர வேண்டுமென்றில்லை.

இந்த வரிகளை வாசிக்கும் போதே அனைத்தையும் உணரக்கூடியதாக உள்ளது. எனவே மேலுள்ள சொற்கள் இந்த கவிதைக்கு தேவையற்ற ஒன்று என்பது என் கருத்து. :)

துளசி,

ஒன்று சாதாரண தமிழ் பெண்களையும், மற்றையது வீரத்துடன் போராடிய பெண் போராளிகள் கூட இரையாக்கப்படுகிறார்கள் என்பதை குறிப்பிடவே அந்த வார்த்தைகளைப் பாவித்துள்ளார் என நினைக்கிறேன்.

அந்த வகையில் நிலைமையை குத்திக் காட்டுவதற்கு அது தேவையானதொன்றே என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நல்லாக இருக்கின்றது..

மக்கள் மனம்

சுயநலம் விட்டு

தேச நலம் நாடுமோ..

அன்றே

பாழ்பட்ட

விடுதலைப் பயிர்

புத்துயிர்த்து

கனி தரும்..!

சுயநலம் விட்டுத் தேசநலம் நாடுபவர்கள் அருகிக் கொண்டே போகின்றார்கள் என்பதால் கனி கிடைக்காது

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தம்பி நெடுக்கு

கவிதைக்கும் நேரத்திற்கும்........

தற்பொழுது

எதிரி என்றாலும் சிங்களவனது நடவடிக்கைகளை புகழத்தோன்றுகிறது.

என்ன திட்டமிடல்?

என்ன தேசபக்தி?

என்ன இன ஒற்றுமை???????

சிங்களவனாகப்பிறந்திருக்கலாம் என்று தோணுது..............??? :( :( :(

காலத்துகேற்ற கவிதை, நன்றி நெடுக்ஸ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் பகிர்ந்த எல்லா உறவுகளுக்கும் நன்றி. மேலும்.. ஆகத்துக்கான விருப்பை வெளியிட்ட உறவுகளுக்கும் நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துளசி..

புலியை முறத்தால் அடித்து

விரட்டியதும், தேர்க்காலில் சொந்த

மகனை முற்றிக்கொன்றதுவும்,

புறமுதுகில் வேல்வாங்கிய மகனுக்குப்

பாலூட்டிய முலைகளை அறுத்து

எறிந்ததுவும், உதித்து எழுந்து உயர்ந்து

வரும் சூரியனை நில்லென்று சொல்லி

நிறுத்தியதுவும், பெய் என்றால்

பத்தினிக்கு மழை பெய்ததுவும், கல்

தோன்றி மண் தோன்றாக் காலத்தே

வாளுடன் முன் தோன்றி வந்ததுவும்,

கனகவிசயர் தலையில் கல்லேற்றிக்

கண்ணகிக்குச் சிலை வடித்ததுவும்,

கடைசியில் பக்கத்து நாட்டில் குப்பை

பொறுக்கத்தானா?

(இணையத்தில் இருந்து)

இலக்கிய கால தமிழ் பெண்ணின் வீர் மரபை இனங்காட்டி.. இன்று எம் தமிழ் குலப் பெண்கள் எதிர்நோக்கும் துயரையும் ஒருமித்தே உணர்த்த எழுதப்பட்ட சொல்லாடல் அது..! இலக்கியங்களில் பாவிக்கப்பட்ட சொல்லாடல் தான்..! முலையூட்டிகள் என்பது தவறான பதமும் அல்ல..!

  • கருத்துக்கள உறவுகள்

||தேசத்தை

கூறு போட

கூட்டமைப்பாகி

நிற்போரும்

கூனிகளாகி

நிற்போரும்

கூட்டிக் கொடுப்போரும்

காட்டிக் கொடுப்போரும்

தொட்டுக் கேளும்

உம் மனச்சாட்சி..

வன்னி மண்ணில்

வதைபடும்

வனிதையர்

உம் சகோதரிகள் இல்லையோ...??!

சிறைதனில்

சித்திரவதைப்படும்

தேசப் புதல்வர்

உம் புத்திரர்

இல்லையோ..???!

என்று தான்

உம் நிலை மாறுமோ...

மக்கள் மனம்

சுயநலம் விட்டு

தேச நலம் நாடுமோ..

அன்றே

பாழ்பட்ட

விடுதலைப் பயிர்

புத்துயிர்த்து

கனி தரும்..!||

மீண்டும் அடுத்த தேர்த்தலில் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுபவர் சம்பந்தன்ன்ன்ன்ன்ன்ன்ன் (eco) :icon_mrgreen: :icon_mrgreen:

நல்ல கவிதை ,உண்மையானதும் கூட .

உதைத்தான் கூட்டணியினரும் எழுதுபதிகளில் மேடைகளில் பேசிக்கொண்டே தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பினார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

குப்பைமேட்டில் கிடக்கும் கடதாசிகள் அடித்த காற்றில் கோபுர உச்சியில் இருக்கும் கலசங்களுடன் ஒட்டிக்கொண்டன... காற்றின் வேகம் கடதாசிகளை கீழே விழாதவாறு தூக்கிப்பிடித்திருந்தது. காற்று ஓய்ந்து விட்டது மீண்டும் கடதாசிகள் குப்பை மேட்டில் வீழ்ந்து கொண்டன... கலசங்கள் இன்னும் கோபுரங்களிலேயே ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன. எந்தக்குப்பையும் கலசங்கள் ஆகமுடியாது என்பதை காலம் எழுதிச் சென்றிருக்கிறது.

கோபுரக்கலசங்களுக்கு உரிய பண்பை குப்பைகளிடம் எதிர்பார்க்கக்கூடாது.....குப்பைகள் காற்றுவீசும் திசைக்கேற்ப ஆடி அசையும்.

நல்ல கவிதை....நெடுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளைச் சொன்ன ஏனைய உறவுகளுக்கும் ஊக்குவிப்பளித்த எல்லா உறவுகளுக்கும் நன்றி...! :)

காலம் எம்மை வேதனைப்பட மட்டுமல்ல.. சிந்திக்கவும்.. மாற்றியோசிக்கவும்.. ஒற்றுமைப்படவும்.. சொல்கிறது..! ஆனால்... நிஜம் மாறுபட்டுச் செல்கிறது..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் புலிகளுக்கு உயிர் கொடுக்கும் வரைக்கும் விடுதலை சாத்தியமே இல்லை ஆயுதம் ஏந்தி தான் போராடனும் என்று இல்லை அரசியல் ரீதியிலும் போராடலாம் ஆனால் புலிகள் வரணும்.....

  • கருத்துக்கள உறவுகள்

வந்தே தீரனும் எல்லாருக்கும் ஆப்பு அடிக்கணும்

  • கருத்துக்கள உறவுகள்

அடி தான் அடிய போல அண்ணன் தம்பி உதவ மாட்டான் பட் புலிக்கு யாரு மணி கட்டுறது?

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி நாங்க இத இதுல கதைக்க நாளைக்கு திவயின ல வந்தாலும் வரும் யாழில் சிலர் மீண்டும் புலிகளுக்கு உயிர் கொடுக்க முயற்சி எண்டு :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.