Jump to content

உணவில் நார் சத்துள்ள உணவுகளை சேர்ப்பதால் பாரிசவாதம் (stroke) ஏற்படும் சந்தர்பத்தை குறைக்கலாம்


Recommended Posts

நார் சத்து (fiber) என்றால் என்ன அதன் முக்கியத்துவம் பற்றிய முன்னைய பதிவுகள் :

 

1. http://www.yarl.com/forum3/index.php?showtopic=22811

2. http://www.yarl.com/forum3/index.php?showtopic=22301

 

மேலே சொன்ன பதிவுகளில் சொன்னது போல் நார்ச்சத்து மல போக்கை, சீரக்குவதுடன், குடல், குதப்புற்று  நோய்  (colorectal cancer) ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.

 

அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள், உணவில் நார் சத்தின் அளவை அதிகரித்தால், முதல் முறை பாரிசவாதம் (first-time stroke) ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

 

கனேடிய சுகாதார திணைக்களம் (Health Canada) 28 - 38 கிராம் நார் சத்தை நாளாந்தம் உண்ண  வேண்டும் என பரிந்துரைக்கிறது. ஆனால் சராசரியாக கனேடிய மக்கள் 14 கிராம் நார்ச்சத்தையே நாளாந்தம் உண்பதாக சொல்ல படுகிறது.

 

கனடாவில் ஒவ்வொருவரும் உணவில் நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகரிப்பதன் மூலம் வருடாந்தம் பாரிசவாதம் மூலம் ஏற்படும் 14,000 இறப்புகளை தவிப்பதுடன், பரிசவாததால் ஏற்படும் அங்கவீனத்தை 50, 000 ஆல்  குறைக்க முடியும் என்றும் சொல்லபடுகிறது.

 

நார்சத்து எவ்வாறு பாரிசவாததை குறைக்கிறது என்பதை சரியாக அறுதியிட்டு கூற முடியாவிட்டலும் அதற்கான பிரதான காரணங்களாக இருக்க கூடியவை 

 

1. நார்சத்து உடலில் / குருதியில் கொலஸ்திரோல் அளவை (LDL or "bad" cholesterol) குறைப்பதில் பங்கெடுப்பதாக அறியப்பட்டுள்ளது.

2. நார் சத்துள்ள உணவுகள் அனைத்தும் தாவர உணவுகள் ஆகும். எனவே நார்சத்து உள்ள உணவுகளை உண்ணும் பொது இயலபாகவே, அதிகளவு கொழுப்புகளை கொண்ட இறைச்சி வகைகளை உண்பது குறைகிறது. கொழுப்பு கூடிய உணவுகள் பாரிசவாதம் ஏற்படும் சந்தர்பத்தை அதிகரிக்கும் என அறியப்பட்டுள்ளது.

3. நார் சத்துள்ள உணவுகள் இலகுவில் வயிற்றை நிறைப்பதால்/ நிறைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துவதால் தேவைக்கு அதிகமாக உணவு உண்பதை தவிர்க்க முடிவதுடன், உடல் நிறை அதிகரிப்பை குறைக்க உதவுகிறது.

 

http://www.ctvnews.ca/health/another-reason-to-be-regular-fibre-can-prevent-strokes-says-study-1.1215380

 

 

உணவில் நார் சத்தை அதிகரிக்க சில இலகுவான வழிமுறைகள்.

 

1. 1 கோப்பை ( 1 கப் = 250 மி.லி.) தீட்டிய அரிசி சோற்றுக்கு  பதில் 1 கோப்பை திட்டாத அரிசி சோற்றை  உண்பது உணவில் நார் சத்தின் அளவை 2 கிராமில் இருந்து 5.5 கிரமாக அதிகரிக்க செய்யும்.

 

2. காலை உணவில் ஒரு நடுத்தர வாழைபழம் உண்பது 3 கிராம் நார் சத்தை தரும். ஒரு கப் ஸ்ரோபெரி, அல்லது ராஸ்பெரி, அல்லது புளுபெரி (strawberries, blueberries, or raspberries) பழங்களை உண்பது நார் சத்தின் நலவை 3- 4.5 கிரமால் அதிகரிக்கும்.

 

3. ஒரு பியேர்ஸ் (pear) பழம்  அல்லது அப்பிள்  பழம் 4.5 - 5 கிராம் நார் சத்தை தரும் 

 

 

4. மரக்கறிகள்,

 

1 கப் போஞ்சி (green beans) - 4.2 கிராம் நார் சத்து 

1 கப் பச்சை பட்டாணி - 7.2 கிராம் நார் சத்து 

1கப் புரோகோலி - 3 கிராம் நார் சத்து 


வெவ்வேறு உணவுகைளில் உள்ள நார் சத்து அளவை அறிய : http://www.wehealny.org/healthinfo/dietaryfiber/fibercontentchart.html

 

 

மேலதிகமாக வசிக்க : http://www.aging-no-more.com/risk-factors-for-stroke.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

உணவில் நார் சத்தை அதிகரிக்க சில இலகுவான வழிமுறைகள்.

 

1. 1 கோப்பை ( 1 கப் = 250 மி.லி.) தீட்டிய அரிசி சோற்றுக்கு  பதில் 1 கோப்பை திட்டாத அரிசி சோற்றை  உண்பது உணவில் நார் சத்தின் அளவை 2 கிராமில் இருந்து 5.5 கிரமாக அதிகரிக்க செய்யும்.

 

2. காலை உணவில் ஒரு நடுத்தர வாழைபழம் உண்பது 3 கிராம் நார் சத்தை தரும். ஒரு கப் ஸ்ரோபெரி, அல்லது ராஸ்பெரி, அல்லது புளுபெரி (strawberries, blueberries, or raspberries) பழங்களை உண்பது நார் சத்தின் நலவை 3- 4.5 கிரமால் அதிகரிக்கும்.

 

3. ஒரு பியேர்ஸ் (pear) பழம்  அல்லது அப்பிள்  பழம் 4.5 - 5 கிராம் நார் சத்தை தரும் 

 

 

4. மரக்கறிகள்,

 

1 கப் போஞ்சி (green beans) - 4.2 கிராம் நார் சத்து 

1 கப் பச்சை பட்டாணி - 7.2 கிராம் நார் சத்து 

1கப் புரோகோலி - 3 கிராம் நார் சத்து 

 

உணவில் நார்ச்சத்தை அதிகரிக்க... மேலே சிவப்பு எழுத்தில் உள்ள உணவுப் பொருட்களை நாம் வருடம் பூராகவும், இலகுவில் வாங்கக் கூடிய பொருட்களாகும். இப்படியான உணவுகளை உண்டு, நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

இணைப்பிற்கு நன்றி குளக்காட்டான்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இணைப்பிற்கு நன்றி.

 

 

உணவில் நார்ச்சத்தை அதிகரிக்க... மேலே சிவப்பு எழுத்தில் உள்ள உணவுப் பொருட்களை நாம் வருடம் பூராகவும், இலகுவில் வாங்கக் கூடிய பொருட்களாகும். இப்படியான உணவுகளை உண்டு, நோயற்ற வாழ்வு வாழ்வோம்.

இணைப்பிற்கு நன்றி குளக்காட்டான்.

 

நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நார்ச்சத்துள்ள சாப்பாடுகளை கிரமமாய் சாப்பிட்டால் வயித்தாலையும் ஒழுங்காய்ப்போகும்.........டெய்லி வயித்தாலை ஒழுங்காய் போச்சுதேண்டாலே கனவருத்தங்கள் அண்டுறதுக்கும் சந்தர்ப்பம் இல்லை......இதை நான் சொல்லேல்லை டாக்குத்தர்மார் சொல்லீனம். :)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நியாயம்... அவர்,  பாராளுமன்ற உறுப்பினராகித்தான் கடிவாளம் போட வேண்டும் இல்லை. ஒரு கட்சியின் உறுப்பினராக வெளியில் இருந்து கொண்டே  அதை செய்யலாம். பெற்ரோல்மாக்ஸ் லைட்டுத்தான் வேணும்... என்ற மாதிரி  உங்கள் கதை இருக்கு.
    • தம் தலைவர் கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா இயக்கம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது. ஹமாஸ் இற்காக ஹிஸ்புல்லா இஸ்ரேலை தாக்கப் போய் இன்று தன் தலைவரைக் கூட காப்பாற்ற முடியாமல் போய் கிடக்கிறது.
    • "தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"/ பகுதி: 05     வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையிலான பகுதியில் சம்புக வதம் விவரிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பிராமணன் ஒருவனின் மகன் திடீரென இறந்து விடுகிறான். மகனை இழந்த பிராமணன் இராமனிடம் நீதி கேட்டு வருகிறான். அந்நேரத்தில் அங்கு வரும் நாரதமுனி, சூத்திரன் ஒருவன் உனது நாட்டில் தவம் இயற்றிக் கொண்டிருப்பதாலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்கிறார். சம்புகனைத் தேடிச் சென்ற இராமன், ஒரு மலைச்சாரலில், ஒரு ஏரிக்கு அருகில், ஒரு சாது ஒரு மரத்தின் கிளையில் தலைகீழாய்த் தொங்கியபடி கடுந்தவம் புரிந்து கொண்டு இருப்பதை கண்டார். அவன் அருகில் சென்ற ராமர்,   ' நீ பிராமணனா, சத்ரியனா அல்லது நான்காம் வருணத்தைச் சேர்ந்தவனா? நிஜத்தைச் சொல்' என்று கேட்க, அவன், 'மகாராஜா, நான் நான்காம் வருணத்தைச் சேர்ந்தவன். சம்பூகன் என்று எனக்குப் பெயர்' என விடையளித்தான்.   உடனே ராமர் வேறு எது குறித்தும் கேட்காமல், மின்னல் வேகத்தில் உறையிலிருந்து தன் வாளை உருவிச் அங்கேயே அவனைத் தனது வாளால் தலை வேறு முண்டம் வேறாக வெட்டி கொன்றான். தவம் இயற்றிய சூத்திரன் என்ற ஒரு காரணத்தால் மட்டும் இராமனால் கொல்லப்பட்டான் ?விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை - நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றிச் சம்புகனின் தலையைச் சீவிவிட்டான் இராமன்.   இராமனின் காரியத்தைப் பார்த்தீர்களா? தவம் செய்து மோட்சத்தை அடைய தமக்கே உள்ள உரிமையை அதற்கு அருகதையற்ற சூத்திரன் ஒருவன் மேற்கொண்டி ருந்ததைத் தடுத்துத் தண்டித்துச் சம்புகனைக் கொலை செய்த மன்னன் இராமனின் செய்கைக்காக பார்ப்பனர்கள் மகிழ்ந்தார்களாம்?   கடவுள்கள், தேவர்கள் எல்லாம் இராமன் முன் தோன்றி அவன் செய்த இந்நற்காரியத்திற்காக ? அவனைப் பாராட்டி னார்களாம்? எப்படி இருக்குது ராமன் கதை? இவனுக்கு தான் இந்த தீபாவளி? இவனைத்தான் கடவுளாம்? இவன் மாதிரி உத்தம புருஷனுக்காக அலைகிறார்களாம் இன்றைய சீதைகள்? எப்படியிருக்குது வேடிக்கை?   திருவிளையாடல் புராணத்தில் 26 வது கதையாக 'மாபாதகம் தீர்த்த படலம்' வருகிறது. அதில், அவந்தி நகரத்தில் வாழ்ந்த ஒரு பார்ப்பனரின் மனைவி மிகவும் அழகானவள். அந்தப் பெண்ணுக்கும், அவள் கணவனுக்கும் பிறந்த மகன் தாயின் மீதே விருப்பம் கொள்கிறான். தாயை நிர்ப்பந்தப்படுத்தினான். இந்தக் கொடுமை கண்டு மனம் தாளாத அவனது தந்தை, அவனைத் தடுத்தார், ஆனால் அவன் தந்தையையே கொன்று விட்டு, தனது காம பசி தீர்க்க, தாயை இழுத்துச் சென்று விட்டான். காமுகனாகத் திரிந்ததால் அவனது உடலில் கொடிய நோய் ஏற்பட்டது. என்றாலும், இறுதியில், அவன் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து இறைவன் அவனுக்கு அருள் பாலிக்கின்றார்.     இப்போது இரு கதைகளிலும் இடம் பெற்றுள்ள மகாபாவங்களை நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். தாயை மணந்து, தந்தையைக் கொன்ற மகாபாதகம் இறைவனால் மன்னிக்கப் படுவதோடு, அவனுக்கு இறைவன் அருளும் கிடைக்கிறது. ஆனால் எந்தக் குற்றமும் புரியாமல் தவம் புரிந்த சம்பூகனைக் கடவுளின் அவதாரமான ராமரோ வாளினால் வெட்டி வீழ்த்துகிறார்.   எத்தனை பெரிய கயமைத்தனங்களைச் செய்தாலும், அவன் பார்ப்பனனாக இருந்தால் இறைவன் அருள் பாலிப்பார்; எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றாலும், ஒரு சூத்திரன் தவம் செய்தால் இறைவன் அவன் தலையைக் கொய்து விடுவார் என்பதுதானே இவ்விரு கதைகளும் நமக்குக் கூறும் நீதி?   இந்த அறிவுரை எமக்கு தேவைதானா? இப்படியான கடவுளும் எமக்கு வேண்டுமா?   பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தீபாவளி பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால், விளக்கீட்டு விழா என்னும் விழாக்கள் பற்றிய செய்திகள் உள்ளன. கார்காலம் முடிந்தபின் அறுவடையை எதிர்நோக்கிய காலத்தில் அறுமீன் சேரும் முழுநிலா மாலையில் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு செய்த ஒரு விழாவை அகநானூறு-141 கூறும். இந்த நிகழ்வு பிற்காலத்தில், ஆரியரின் நாகரிகக் கலப்பால், தீபாவளியுடன் இணைந்தது என்பார்கள்.   இதனால் கார்த்திகை தீபத் திருநாள்தான் தமிழர் தீபாவளி யானாலும் அதை தீபாவளி எனக் கூறுவதில்லை. விஜயநகர சாம்ராஜ்ய காலத்திலும் (14 முதல் 16ஆம் நூற்றாண்டு வரை) பிறகு நாயக்கர் ஆட்சியிலும் (16 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை) மதுரை நாயக்கர்களா லும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருநாள் இது எனலாம்? மேலும் தீபாவளிப் பண்டிகை, கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை அவ்வளவு முக்கியத்துவம் பெற வில்லை. ஆனால் அங்கு ‘ஓணம்’ பண்டிகை மிகச் சிறப்பாக நடை பெறுகிறது.   "உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி மழைகால் நீங்கிய மாக விசும்பில் குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள் மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவு உடன் அயர வருக தில் அம்ம துவரப் புலர்ந்து தூ மலர் கஞலித் தகரம் நாறுந் தண் நறுங்கதுப்பின் புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப் பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர் பெருஞ்செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்துப் பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக் கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு தீங்குலை வாழை ஓங்கு மடல் இராது நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றும்" [அகநானூறு 141]   உழவுத் தொழில் முடிந்துவிட்டதால் உழும் கருவியான கலப்பை வேலையின்றிக் கிடக்கிறது. உழவுக்கு உதவியாக மேகமும் தக்கவாறு மழை பொழிந்து ஓய்ந்து விட்டதால் ஆகாயம், கருமேகம் சூழாத நிலையில் தெளிவாகக் காணப்படுகிறது. ஆறு விண்மீன்கள் அருகிருக்கக் காயும் முழு நிலாவானது இருளை நீக்கி வானில் காணப்படுகிறது. இந்நாளில் வீடுகள்தோறும் மக்கள் பூமாலைகளைத் தொங்கவிட்டு விளக்குகளை ஏற்றி வைத்துக் கூட்டமாகக் கூடி விழா கொண்டாடு வார்கள். இக்கார்த்திகை விளக்கு நாளில் புது மணமகன் உண்பதற்காக பசிய அவலாலான இனிப்புப் பொருள் செய்வதற்காக வீட்டிலுள்ள பெண்கள் நெல்லின் கதிர்களைப் பறித்து அவற்றை உரலில் இட்டு உலக்கையால் குத்திப் பக்குவப்படுத்து கிறார்கள். அங்ஙனம் குத்தும் உலக்கையின் ஒலியைக் கேட்டுப் பயந்தப் பறவை தானிருந்த வாழை மரத்தை விட்டு வேறொரு பெரிய மரத்தில் தங்கி தன் குஞ்சுப் பறவைகளைக் கூவுகின்றன என்கிறது இந்தப்பாடல்.   உலகின் எங்கும் மரணம் கொண்டாடப் படுவதில்லை. ராமன் பெருமைக்குரிய மனிதனாக இருக்கலாம், ஆனால் அவன் சீதைக்கு செய்தது என்ன? சீதையின் வாழ்க்கை தனிமையில் வீணாகியது. அவள் அனுபவித்தது எல்லாம் துக்கமே. ராவணன் அரக்கனும் அல்ல, கடவுளும் அல்ல. அவன் ஒரு சாதாரண மனிதன். அவன் தவறுகள் விட்டுள்ளான். நான் அவனை மூடிமறைக்க முயலவில்லை. நான் பாரம்பரிய ராமாயணத்தை, அப்படியே, ராவணன், ராமனை சித்தரிக்க கையாளுகிறேன். அவ்வளவுதான்.   கடவுளாக கருதப்படும் ராமனையும் அரக்கனாக சித்தரிக்கப்படும் ராவணனையும் ஒப்பிடும் போது , ராமன் பல பல குற்றங்கள் புரிந்து உள்ளான். மிகப்பெரிய கொடுமை தன் மனைவியையே சந்தேகித்தது. அதனால் அவள் அடைந்து துன்ப வாழ்வு! இருவருமே நல்ல தீய செயல்கள், பண்புகள் கொண்டுள்ளனர். ஆனால் எப்படி ஒருவர் கடவுளானார்? மற்றவர் அரக்கன் ஆனார்?   ராமாயணத்தில் உள்ள உண்மைகளை அப்படியே சிந்தியுங்கள். ஒரு மனிதனின் இறப்பை நாம் கொண்டாடலாமா? இல்லை ராமனைத்தான் கடவுளாக்கலாமா? கடவுள் என கருதுபவர் மக்களுக்கு, எங்களுக்கு தார்மீக பிடிப்பை உண்டாக்கக் கூடியவராக இருக்கவேண்டும். அவர்கள் நாம் பின்பற்றக் கூடிய முன்மாதிரியாக இருக்கவேண்டு? இதையாவது நம்புகிறீர்களா?   ராமர் கதையில் அவரின் ஒரு பண்பு மட்டுமே மாறாமல் கதை முழுவதும் அப்படியே தொடருவதை காண்கிறோம். இதைத்தான் நாம் அவரிடம் இருந்து கற்கலாம். கண்மூடித்த தனமான கீழ்ப்படிதல் அல்லது பணிவு! அது மட்டுமே அவரிடம் இருந்து நாம் பெறலாம்?   ராமன் குழந்தையாக இருக்கும் பொழுது அவர் ஒரு நன்றாக நடந்து கொள்ளும் அன்பான குழந்தை, மற்றும் படி ஒரு சிறப்பும் அங்கு காணப்பட வில்லை! இளைஞனாக இருக்கும் பொழுது, அவர் ஒரு தந்தை சொல் தட்டாத பிள்ளை, ஆனால் மீண்டும் ஒரு நடுத்தர வயது மனிதனாக, யாரோ ஒரு வழிப்போக்கன் தனது அன்பு மனைவியின் 'கணவன் மனைவி' விசுவாசத்தை சந்தேகப்பட்டான் என்பதால் ஒரு அரசனாக தனது கடமையை, 'மக்கள் எவ்வழி அரசனும் அவ்வழி' என்ற கண்மூடித்த தனமான கீழ்ப்படிதலை திடீரென்று நினைவுக்கு கொண்டு வருகிறேன்.   இதனால் கர்ப்பணி சீதை பிரிந்து, காடு சென்று, இறுதியாக தற்கொலை செய்கிறாள். அவனின் பண்பில் நிலைத்து நின்று மாறாதது, 'மாற்றான் சொல்' கேட்டு நடக்கும் பண்பு மட்டுமே! தனக்கு என ஒரு புத்தி அவனிடம் என்றுமே காணப்படவில்லை?   அவன் வாழ் நாள் முழுவதும், பண்பான, இணக்கமான, கீழ்ப்படிதல்' நபராகவே, எந்த கேள்வியும் கெடுக்காமல் பிறர் புத்தி கேட்டு நடக்கும் ஒரு மனிதனாகவே வாழ்ந்து விட்டான்!! அவ்வளவுதான்!!!     [இதுவரையில் நாம் அறிந்ததிலிருந்து, ஆரியரின் தந்திரமான புராண செருகலின் விளைவாக, தமிழரின் தொன்மை வாய்ந்த தீப ஒளியேற்றும் விழா [விளக்கீட்டு விழா] என்பதின் பாதையையும், கருத்துக்களையும், அது அடியோடு மாற்றிவிட்டன என உணர்கிறோம். எனவே, உறவுகள் கூடி, எண்ணங்களில் நல்லொளி ஊட்டித் தீபம் ஏற்றித் தமிழ்த் 'தீப + ஆவளி', அதாவது, 'தீப' (என்னும் வடசொல்லும்) + 'ஆவளி' என்ற இரு சொற்கள் இணைந்து வெளிப்படும் 'தீபங்களின் வரிசை' என பொருள்படும், தீப ஒளித்திருநாளை கொண்டாடுவோம்! எங்கள் 'தீபாவளி' வேறு என ஆரிய தீபாவளிக் குப்பைகளை எறிந்திடுவோம்!!]     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     [முற்றிற்று]      
    • தமிழினத்தின் தூய, படித்த, அறிவுள்ள, வெள்ளை வேட்டிகட்டின, வெளிர்நிற மனிசனைச் சீச்சீ இப்படிச் சந்தேகிக்கக்கூடாது. அவரு நல்லவராயிட்டாரு.  அவர் நாடாளுமன்ற  பதவியைத் துறந்து ஒரு சாதாரணக் கட்சி உறுப்பினரா இருந்து அறிக்கைவிட்டிருக்கிறார். ஆஆஆஆஆ.....னனனன....படியால் நாம் நம்பத்தான் வேண்டும். முயலுக்கு மூன்று கால்.  நட்பரர்ந்த நன்றியுடன் நொச்சி
    • TNA யின் கீழேதான் எல்லோரும் ஒன்றாகப் பயணிக்க வேண்டும். அதுதான் தமிழ்த் தரப்பை பலப்படுத்த உள்ள ஒரே வழி.  உதிரிகளாக, சுயேட்சைகளாக, தனித் தனி அரசியற் கட்சிகளாக அல்லது TNA தவிர்ந்த வேறு எந்த விதமான கூட்டாக இருந்தாலும் அது தமிழர் தரப்பைப் பலவீனப்படித்துவதாகவே அமையும். 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.