Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இளையராஜா நலம் பெற்று வரவேண்டும்! - வைரமுத்து உருக்கமான பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இளையராஜா விரைவில் உடல் நலம் பெற்றுவர வேண்டும் என்று  கவிப்பேரரசு
வைரமுத்து கங்காரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உருக்கமாகக் கூறினார். அதன் விவரம் வருமாறு:
 
வி. ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி--எஸ். ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் 'கங்காரு'. இது,'உயிர்' 'மிருகம்' 'சிந்து சமவெளி' படங்களைத் தொடர்ந்து சாமி இயக்கியுள்ள படம். அர்ஜுனா, வர்ஷா, ப்ரியங்கா, கஞ்சா கருப்பு, தம்பி ராமையா  நடித்துள்ளனர்.
 
பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்கள் வைரமுத்து. 'கங்காரு' பாடல்கள் வெளியீடு விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடந்தது..ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். வைரமுத்து பெற்றுக் கொண்டார். 
 
சென்னை ஆர்.கே.வி ஸ்டுடியோவில்ஆடியோ சிடியை ஊடகங்கள் முன்னிலையில் சீமான் வெளியிட  கவிப்பேரரசு வைரமுத்து பெற்றுக் கொண்டார்.
 
விழாவில் வைரமுத்து பேசும் போது... 
 
''இந்த விழாவில் எவ்வளவு நேரம் பேசவேண்டும் என்று தீர்மானிக்கிறவன் நானல்ல. வடிவமைக்கிற விழாவில் தனக்கு முன்னால் பேசுகிற பேச்சாளர்களின் அதிர்வலைகள்தான் ஒரு பேச்சாளன் பேசப் போகிற நேரத்தைத் தீர்மானிக்கும் என்பதை நான் நம்புகிறவன். அப்படியானால் நீண்ட இந்த விழாவில் சில மணித்துளிகள் மட்டுமே பேசலாம் என்று இந்த அரங்கம் அசரீரியாக எனக்குச் சொல்கிறது.
 
இரண்டு பேருக்கு என் நன்றி. என்னையும் ஸ்ரீநிவாஸையும் பூமாலையால் பாராட்டிய தயாரிப்பாளர் சுரேஷுக்கு முதல் நன்றி. என்னையும் இந்த விழாக் குழுவையும் பாமாலையால் பாராட்டிய சீமானுக்கு இரண்டாவது நன்றி.
 
இந்த மேடையில் எல்லோரையும் வாழ்த்துவதுதான் தர்மம் என்று உணர்ந்த சீமான், தன் இதயத்தின் ஆழத்திலிருந்து பேசியிருக்கிறார். அவர் பேசுகிற தொனியைக் கவனித்தேன். தொனி சொல்லும் ஒருவன் தொண்டையிலிருந்து பேசுகிறானா, நாக்கிலிருந்து பேசுகிறானா, உதட்டிலிருந்து பேசுகிறானா என்று. சீமானின் தொனி சொன்னது இந்த மனிதன் இதயத்திலிருந்து பேசுகிறான் என்று. அந்த அன்பு நெகிழவைக்கிறது.
 
எத்தனையோ பாட்டு வெளியீட்டு விழாக்களுக்குப் போகிறோம். பாட்டு எழுதிய வைரமுத்து என்று சொல்வதோடு அவர்கள் நிறுத்திக் கொள்கிறார்கள் என்று நான் வருத்தப் படுவதில்லை. ஏனென்றால் அதற்கு மேல் பேச ஆரம்பித்தால் பாட்டு வரிகளைத் தப்பாகச் சொல்வார்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால் பெயரோடு விட்டு விடுவது உத்தமம் உசிதம்.அதுவே என் தமிழுக்குச் செய்யும் தொண்டு என்று இருந்து விடுவேன். இங்கே சீமான் பேசும் போது பல்வேறு இலக்கியங்களிலிருந்து எடுத்துக் கூறியபோது நான் என் படைப்புகளை பின்னோக்கிப் பார்த்து மீள் பார்வை செய்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டேன்.
 
பூமாலை அணிவித்தீர்கள் எங்களுக்கு. தோள்களுக்கு சுமப்பதற்கு வலிமையில்லை. அதை இரண்டுபேர் சுமந்து கொண்டு வந்தார்கள்.
 
ஒருமுறை பேரறிஞர் அண்ணா மேடையிலே பேசப் போனார். பெரிய மாலையை சுமந்து கொண்டு வந்தார்கள். ராட்சச மாலை. அண்ணா பார்த்ததும் நடுங்கி வீட்டார். இரண்டடி பின்னால் போய் விட்டார். அவர் உயரம் குறைவு. நான்கு பேர் தூக்கி எடுத்துக் கொண்ட மாலையை தோளில் தொட்டு எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள்.
 
அண்ணா பேசியபோது பின் இப்படிக் குறிப்பிட்டார்,'' மற்ற மேடைகளில் மாலையைக் கொண்டு வருவார்கள். நான் அணிந்து கொள்வேன். இந்த மேடையில் மாலையைச் சுமந்து வந்தார்கள் நான் புகுந்து கொண்டேன்''. 
 
அண்ணாவுக்குப் பிறகு இரண்டுபேர் சேர்ந்து தூக்கி சுமந்து  வந்த மாலைக்குள் நான் புகுந்துகொண்டேன்.   சுரேஷிற்கு நன்றி.  மொழியின் மீதும் இசையின் மீதும் நீங்கள் கொண்டிருக்கிற காதலுக்காக உங்களைப் பாராட்டுகிறேன்.
 
சாமி தமிழ்த் திரைப்பட நிகழ்காலத்தின் தவிர்க்க முடியாத இயக்குநர். நன்மையோ தீமையோ பேசியாக வேண்டியது தவிர்க்க முடியாதது.  
ஒரு நல்ல சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்று கல்கி சொல்வார். 'ஒன்று அந்தக் கதையை எல்லோரும் பாராட்ட வேண்டும். இல்லையேல் எல்லோரும் திட்டித் தீர்க்க வேண்டும். இரண்டுமற்ற எழுத்தை எவனும் எழுதாதே'என்று. ஒரு படத்தை கொண்டாட வேண்டும். இல்லையேல் இப்படி ஒரு படமா என்று திட்ட வேண்டும். சாமிக்கு ஒரு பிம்பம் இருக்கிறது அல்லவா?. அந்த பிம்பத்தை இந்தக் 'கங்காரு' உடைக்கும்  என்று நம்புகிறேன். 
 
சாமியை தெரியும்.ஆனால் முன்பு சந்தித்தல்லை. என்னைத் தேடி வராதவர்களை நான் சிந்திப்பதில்லை; தேடி வந்தவர்களை நான் நிந்திப்பதில்லை. 
 
சாமி என் வீட்டுக்கு வந்தார்; சந்தித்தார். 'என் முதல் படத்திலிருந்து நீங்கள் எழுத வேண்டும் என்று நினைத்தேன்' என்றார். அப்படியா என்றேன். 'உங்கள் பட்ஜெட் பெரியது அதனால் வரமுடியவில்லை' என்றார். 
 
'உங்கள் பட்ஜெட் ரொம்ப பெரிசுன்னு சொன்னாங்க. அந்த அளவுக்கு பணம் கொடுக்க எனக்கு வலிமை இல்லை' என்றார். அப்படி யென்றால் இந்தப் படத்தில் வலிமை வந்துவிட்டதோ? 'இல்லை இந்தப் படத்தில் நீங்கதான் எழுதணும்' என்றார். நான் சொன்னேன் சாமி எனக்கு தமிழ் சினிமாவின் வியாபாரம் கொஞ்சம் தெரியும். பெரியபடத்துக்கு எவ்வளவு வாங்க வேண்டும் என்று தெரியும். சிறிய படத்துக்கு எவ்வளவு வாங்க வேண்டும் என்று தெரியும். மிகச் சிறிய படத்துக்கு.எவ்வளவு வாங்க வேண்டும் என்றும் தெரியும். நான் அதிகமாக நேசிப்பது மிகச்சிறிய படத்தைத் தான்.
 
பெரியபடம் என்பது கதாநாயகர்களுக்கானது. சிறியபடம்என்பது  தயாரிப்பாளர்களுக்கானது. மிகச் சிறியபடம் என்பதுதான் தொழில் நுட்பக்கலைஞர்களுக்கானது. நான் தொழில் நுட்பக் காலஞனாக இருக்கவே ஆசைப்படுகிறேன். இந்தப் படத்தின் வியாபாரம் எனக்குத் தெரியாதா? சினிமாவில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. கர்ப்பத்தைம் பட்ஜெட்டையும் மறைக்க முடியாது. எனக்கு இது போதும் என்றேன்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.