Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவரைப் போல் நாமும் செய்யலாமே...

Featured Replies

இளங்கோவன் அரவணைப்பில் 5917 குழந்தைகள்.

 

இன்றைய திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகில் உள்ள நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில் வானம் பார்த்த பூமியில் பெரும்பாலும் வறட்சியை மட்டுமே பயிர் செய்துவந்த விவசாய குடும்பத்தில் கு. குழந்தைசசாமி- சுப்புலட்சுமி தம்பதியருக்கு பிறந்தவர்தான் இளங்கோவன்.

Tamil_News_large_917340.jpg

இளங்கோவனுக்கு அன்று முதல் இன்று வரை பிடித்த ஒரே விஷயம் படிப்புதான்.



ஆனால் படிப்பதற்காக அவர் பட்ட பாட்டை தெரிந்து கொள்ளும் யாருக்கும் கண்களில் ரத்தம் கசியும்.



பள்ளிப்படிப்பை தொடர்வதற்கே ஏழு கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் செல்லவேண்டிய நிலை. சொந்தமாக 120 ரூபாய் கொடுத்து சைக்கிள் வாங்கமுடியாத சூழல். இதனால் வாடகை சைக்கிளில் சென்று வந்தார். அந்த சைக்கிள் வாடகையை கொடுப்பற்காக வாரவிடுமுறை நாட்களில் பவர்லூம் பேக்டரியில் தார் சுற்றி சைக்கிள் வாடகையை கொடுத்துக் கல்வி கற்று வந்தார்.



கல்லூரி படிப்பை தொடர தேவையான ரூபாய்க்காக உறவினர்கள் வீட்டு படிகளில் தவம் கிடந்தார். தன் பிள்ளை இப்படி வீடு வீடாக போய் கல்வி உதவித்தொகை கேட்கப்போவதை காணமுடியாத இளங்கோவனின் தந்தை, "நமக்கு வேண்டாம்யா இந்த படிப்பெல்லாம், பேசாம பவர்லூம் பேக்டரிக்கு வேலைக்கு போய் விடு'' என்று பிள்ளையிடம் சொல்லியிருக்கிறார்.



"இல்லப்பா எனக்கு தெரிஞ்சதெல்லாம் படிப்பு ஒண்ணுதாம்பா கொஞ்ச ம் பொறுத்துக்கங்கப்பா' 'என்று தந்தையை சமாதானம் செய்து மீண்டும் கிராமத்து வேலைகளை செய்து கடன் வாங்கிக் கொண்டு போய் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் பிடிசி கோர்ஸ்ம், கோவை சி.ஐ.டி கல்லூரியில் பொறியியலும் படித்தார்.



ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டும் தூங்கி, படிப்பு படிப்பு என்று படிப்பில் மூழ்கி பி.இ.,மற்றும் எம்.இ.,படித்தார். ஒவ்வொரு கட்டத்தை தாண்டும் போதும் தந்தையின் விவசாய நிலங்களும், தாயின் தாலிக்கொடியும் கூட அடமானமாக சென்றது அதில் பல விஷயங்கள் மீட்க முடியாமலும் போனது.



இவ்வளவு கஷ்டத்திற்கும் ஒரு விடிவு கிடைத்தது.



இளங்கோவன் படித்த கல்லூயிலேயே விரிவுரையாளராக வேலை கிடைத்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு குவைத்தில் வேலையும் கிடைத்தது. இடையில் நிறைய வீழ்ச்சி. வீழ்வது தவறில்லை வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு என கடுமையாக உழைத்து மேன்மை கொண்டார்.

 

தனக்காக தாய், தந்தை, மனைவி வகையில் இழந்த சொத்துக்களை மீட்க ஒரு யோகி போல மூன்று வருடம் குவைத்தில் குடும்பம், உறவு, தூக்கம் மறந்து கடுமையாக உழைத்தார். நிறைய பேருக்கு குவைத்தில் ட்யூஷன் எடுத்தார். ஒவ்வொரு நிமிடத்தையும் பயன் உள்ள வகையில் பயன்படுத்தினார். இவரது வைராக்கியம் காரணமாக இழந்ததை எல்லாம் மீட்டார் மேலும் பல மடங்கு சம்பாதித்தார். விடா முயற்சியால் அமெரிக்காவில் பிஎச்டி முடித்தார்.



இப்போது ஒரு தன்னிறைவான வாழ்க்கை



இந்த வாழ்க்கை என்பது எனக்கு சுயமானது, நான் என் குடும்பம் என்றானது, என்னை எவ்வளவோ சிரமத்திற்கு நடுவிலும் ஆளாக்கிய என் தேசத்திற்கு நான் என்ன செய்தேன் என்று யோசித்தார், பிறகு தான் என்ன செய்யமுடியும் என்பதை முடிவு செய்தார்.



"கல்வி ஒருவனை உயர்த்துமே தவிர ஒரு காலத்திலும் தாழ்த்தாது. ஆனால் அந்த கல்வியை பெற தான் கஷ்டப்பட்டது போல தாய் நாட்டில் எத்தனையோ பேர் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கலாம். அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான கல்வி உதவியை செய்வோம் என்பதை லட்சியமாகக் கொண்டார்".



இதற்காக தனது வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கினார். இவரது நண்பர்களும் இவருடன் சேர்ந்து கொள்ள "அரவணைப்பு' அமைப்பு கோவையில் 28.01.2009 ல் தோன்றியது. இந்த அரவணைப்பு இயக்கமானது கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் இதுவரை 5917 மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு தந்தை இல்லாத அவர்களை படிக்க ஆதரவளித்து வருகிறது.



எப்போதோ குவைத் வேலையை விட்டுவிட்டு மனைவி, குழந்தைகளோடு கோவை மிதமான வெயிலில் இதமான வாழ்க்கை இவர் மேற்கொண்டு இருக்கலாம், ஆனால் குறைந்த பட்சம் பத்தாயிரம் பேரையாவது படிக்கவைக்கவேண்டும் என்ற லட்சியம் காரணமாக குவைத்தின் சூடான சூழலில் வாழ்ந்து கொண்டு இங்குள்ள ஏழை எளிய மாணவர்களுக்காக உருகுகிறார்.



ஆகவே இதை படிக்கும் அல்லது பார்க்கும் நண்பர்கள் இளங்கோவனின் கல்விச்சேவையில் விருப்பப்பட்டால் உங்களையும் இணைத்துக் கொள்ளலாம். மேலும் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் இதற்கென உள்ள அரவணைப்பு இணையதளத்தினுள் நுழைந்து அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.



இந்த விண்ணப்பத்தை பல்வேறு முறைகளில் அரவணைப்பு குழுவினர் ஆய்வு செய்து விண்ணப்பம் நியாயமானது, நேர்மையானது என்று முடிவெடுத்த பின் சம்பந்தபட்ட கல்வி நிறுவனங்களுக்கு "செக்" கொடுத்து உதவுகிறார்கள்.



இதை படிக்கும் இணையதள நண்பர்கள் அரவணைப்பு இணையதளத்தினுள் நுழைந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தந்தை இல்லாத ஏழை மாணவ, மாணவியருக்கு கொடுப்பது கூட ஒரு வகையில் தொண்டுதான்.



இளங்கோவனை மனதார பாராட்ட நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இந்திய எண்: 9597889679. இந்த கட்டுரை வரும்போது அநேகமாக அவர் குவைத்தில் இருக்கலாம். குவைத் எண்: 00965 99239369. குவைத் எண்ணில் பேசினால் உங்களுக்கு ரோமிங் கட்டணம் உண்டு என்பதை நினைவில் கொள்ளவும். அவரது மெயில் மற்றும் அரவணைப்பு இணையதள முகவரி:

:skilangovan01@gmail.com
www.aravanaipu.org

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=917340

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைக்கு அழிவை நோக்கிக் கொண்டிருக்கும் புலிக்குட்டிகளை தத்தெடுப்பதை மட்டுமே செய்ய முடிகிறது. மனிதக் குட்டிகளை தத்தெடுப்பதை பற்றி யோசிக்கிறோம். :):icon_idea:

  • தொடங்கியவர்

 

 

. வீழ்வது தவறில்லை வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு என கடுமையாக உழைத்து மேன்மை கொண்டார்.

 

மிகவும் நல்ல வசனம்

 

  • கருத்துக்கள உறவுகள்

"இவ்வளவு சிரமத்துக்கு மத்தியிலும் என்னை ஆளாக்கிய இந்தத்தேசத்துக்கு நான் என்ன செய்வது எனச் சிந்த்தித்தார்"

 

இவரது தேசம் எப்போது இவருக்கு சிரமத்துக்கு மத்தியிலும் ஆளாக்கியது? இருந்த சொத்துக்களை எல்லாம் வித்து வட்டிக்குக் கடன் வாங்கி, இரவுநேரங்களில் தொழிற்சாலைகளில் வேலைசெய்து, இவரது தேசமா இவருக்கு இந்தக் கல்வியைத் தந்தது. எனக்குச் சிரிப்பாய் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

"இவ்வளவு சிரமத்துக்கு மத்தியிலும் என்னை ஆளாக்கிய இந்தத்தேசத்துக்கு நான் என்ன செய்வது எனச் சிந்த்தித்தார்"

 

இவரது தேசம் எப்போது இவருக்கு சிரமத்துக்கு மத்தியிலும் ஆளாக்கியது? இருந்த சொத்துக்களை எல்லாம் வித்து வட்டிக்குக் கடன் வாங்கி, இரவுநேரங்களில் தொழிற்சாலைகளில் வேலைசெய்து, இவரது தேசமா இவருக்கு இந்தக் கல்வியைத் தந்தது. எனக்குச் சிரிப்பாய் இருக்கு.

 

சில நேரங்களில் உங்கள் கருத்துக்கள் புரிய முடிவதில்லை.
 
தனி மரம் தோப்பாகாது.
 
பாடசாலை, கல்வி, வேலை, மருத்துவம் எல்லாமே சமூகத்தின் கூட்டு முயற்சி. மாணவர்கள் கல்வி, வேலை செய்வோரின் வரி கொடுப்பனவுகளினால்  சாத்தியமாகிறது. அதே போல் அந்த மாணவர்கள் சிறப்பாக கல்வி பெற்று வேலை செய்து செலுத்தும் வரியால் அடுத்த தலைமுறை மாணவர்கள் கல்வி பெறுகிறார்கள். 
 
இதனைத் தான் தனது தேசம் தனக்கு செய்த கைம்மாறு என்கிறார்.
 
நீங்கள் இதனை அவரது குடும்ப பொருளாதார நிலையுடன் ஒபபிடுகீறீர்கள் போல் தெரிகிறது. அவரது தந்தை 'விரலுக்கு தக்க வீக்கம் வேண்டும் என மகனின் கல்வியை நிறுத்த சொல்கிறார். அவரோ, நீண்ட கால பயன் கருதி கடன் எடுத்துப் படிக்கிறார்.
 
அடிப்படை கல்விக்கு மேல், அதற்கான பொருளாதார வசதி இல்லாத நிலையில், உயர் கல்வி பெறுவதும் அதற்காக வேலை செய்வதும், சைக்கிள் வாடகைக்கு எடுப்பதும், நடந்தே போவதும் அவரது தனி முடிவு அல்லவா? அதில் தேசம் என்ன செய்ய முடியும்?

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

வறுமை காரணமாக வன்னிப் பிரதேச பாடசாலை மாணவர்கள் இடைவிலகிச் செல்கின்றனர் – TNA

 

வறுமை காரணமாக வன்னிப் பிரதேச பாடசாலை மாணவ மாணவியர் இடைவிலகிச் செல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. பிரதேசத்தில் நிலவி வரும் வறுமையினால் பெரும் எண்ணிக்கையிலான மாணவ மாணவியர் பாடசாலைக் கல்வியைத் தொடர முடியாது அவதியுறுவதாகத் தெரிவித்துள்ளது.

வன்னியைச் சேர்ந்த பெருமளவிலான குடும்பங்கள் மிகுந்த வறுமையில் வாடி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்களை பெண்களே வழிநடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அன்றாட கூலித் தொழில்களில் ஈடுபட்டே பெண்கள் குடும்ப பாரத்தை சுமந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வருமானம் இன்மை போன்ற காரணிகளினால் பலர் வறுமையில் வாடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். வன்னி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103157/language/ta-IN/article.aspx

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.