Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசு படை நடவடிக்கை என்ற பெயரில் கிராமங்களை சுடுகாடாக்கும் நடவடிக்கை

Featured Replies

அரசு படை நடவடிக்கை என்ற பெயரில் கிராமங்களை சுடுகாடாக்கும் நடவடிக்கை

செவ்வாய் 30-01-2007 13:54 மணி தமிழீழம் [மகான்]

கிழக்கில் சிறிலங்கா அரசு படை நடவடிக்கை என்ற பெயரில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களை அழித்து கிராமங்களை சுடுகாடாக்கும் நடவடிக்கையையே மேற்கொண்டு வருகின்றது. என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஜெயானந்தமூர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.

வாகரை பிரதேசத்தில் பொதுமக்களின் குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியாக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் வான்வெளித் தாக்குதல்கள் காரணமாக இருநூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதைவிட இரட்டிப்பான தொகையினர் படுகாயமடைந்தனர். இப்பொதுமக்களின் இழப்பைத் தடுக்கும் வகையில் விடுதலைப்புலிகள் தற்காலிகமாக பின்வாங்கிச்சென்றனர்.

இதனால் எந்தவித மோதல்களும் இல்லாமல் படையினர் வாகரைப் பிரதேசத்தைச் சென்றடைந்தனர். ஆனால் போரின் மூலம் வாகரையைக் கைப்பற்றியதாக படைத்தலைமையும் அரசம் மார்தட்டியதுடன் ஊடகங்கள் மூலமும் பிரச்சாரம் செய்தது. வாகரைப் பிரதேசத்தைச் சென்றடைந்ததும் அதை ஒரு வெற்றி வாகையாக கூறிக் கொள்ளும் அரசும் அதன் படைகளும் கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகளை வெறியேற்றப்போவதாகக் கூறிக் கொண்டு மட்டக்களப்புக்கு மேற்கேயுள்ள படுவான்கரைப் பிரதேசத்தை நோக்கியதாக படை நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் தற்போது கடுமையான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

இதனால் படுவான்கரைப் பிரதேச மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களின் உடமைகளுக்கும் பயிர் நிலங்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் படுவான்கரைக்கான தரைவழி மற்றும் வாவிப்போக்குவரத்தையும் தடை செய்துள்ளனர். இதனால் படுவான்கரைக் கிராமங்களுக்கும் படையினரின் கட்டு;ப்பாட்டுப் பிரதேசமான நகரப் பகுதிக்கான போக்குவரத்து முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவலங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் காடுகளுடாகவும் மற்றும் சிறு தோணிகளைப் பயன்படுத்தி வாவியைக் கடந்தும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இடம் பெயர்ந்தவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளின்றியும் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களை அழிக்கும் வகையிலேயே திட்டமிட்டு கிழக்கில் அண்மைக்காலமாக படை நடவடிக்கை என்ற தோரணையில் வான்வெளித் தாக்குதல் மற்றும் எறிணைத் தாக்குதல்களை நடத்தி வருவதுடன் வலிந்த படை நகர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றது.

கிழக்கில் மூதூர், சம்பூர், வாகரை என்ற வரிசையில் தற்போது படுவான்கரை மக்களை அழிப்பதற்கும் அவர்களை வெளியேற்றி அகதிகளாக்கும் கைங்கரியத்தையும் செய்து வருகின்றது. இதன் மூலம் தமிழ் மக்களை அழிப்பதற்கும் அவர்களின் வாழ்விடங்களை சுடுகாடாக்குவதுமே அரசின் திட்டமாகவுள்ளது.

வடகிழக்கு தமிழ் மக்களின் பூர்வீகமான பிரதேசமாகும். ஆண்டாண்டுகாலமாக அப்பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா ஆட்சியாளர்களினால் மேற்கொண்டு வந்த அடக்குமுறை காரணமாகவே விடுதலைப்போராட்டம் முனைப்புப் பெற்றது. இன்று தமிழ் மக்களின் பாதுகாவலர்களாக விடுதலைப்புலிகள் உள்ளனர்.

எனவே வடகிழக்கிலிருந்து விடுதலைப்புலிகளை வெளியேற்றுவது என்பது தமிழ் மக்களை முற்று முழுதாக அழிப்பதற்கே ஒப்பானதாகும். சிறிலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான இவ்வாறான அடக்குமுறை மற்றும் படுகொலை காரணமாகவே அவர்கள் சிறிலங்கா அரசின்மீது நம்பிக்கையை இழந்து தமது சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருகின்றனர்.

இந்த உரிiயை சர்வதேச சமுகம் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையை அவர்கள் பெற்றிருந்தபோதிலும் தற்போது சர்வதேச சமுகத்தின் பாராமுகமான தன்மை தமிழ் மக்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. எனவே இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து விடுதலையை விரைவு படுத்துவதன் மூலமே சிறிலங்கா அரசின் திட்டமிட்ட தமிழ் மக்களுக்கு எதிரான கொடூரங்களை நிறுத்துவதுடன் தமிழ் மக்களின் உரிமைகளையும் வென்றெடுக்க முடியும்:: என ஜெயானந்தமூர்த்தி எம்.பி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

:angry: ஏன் தொடர்ந்து அழுவான்????? சிங்களவன் சொல்லிச் சொல்லித்தான் எம்மை அழிக்கிறான்!!! ஆனால் நாமோ ..... "உலக ஒழுங்கில் நிற்கிறோம்" .....

.......... புண்ணாக்கு, தவிடு, இலை, குழை, .... தின்னுறதுகளுக்கு கூட உது விளங்கும்!!!! :angry:

யோ பூசாரி, அப்ப புண்ணாக்கு தவிடு இலை குழையை திண்டு பாக்கிறானே ஒரு மாற்றத்துக்கு. அதுகளை திண்டா சிலவேளை விளங்கு உலக ஒழுங்கின் நிர்ப்பந்தங்கள் பற்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.