Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் கலைஞர் தலைமையில் அமைதிக்குழு ஏற்படுத்தப்பட வேண்டும் - சோனியா காந்தியும், பிரதமரும் இதுபற்றிச் சிந்திக்கவேண்டும் - தமிழர் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் கலைஞர் தலைமையில் அமைதிக்குழு ஏற்படுத்தப்பட வேண்டும் - சோனியா காந்தியும், பிரதமரும் இதுபற்றிச் சிந்திக்கவேண்டும் - தமிழர் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை

ஈழத்தமிழர்கள் பசியின் கொடுமையால் சாகும் கொடுமை!

முக்கிய சாலையைத் திறந்து, இராணுவ நடவடிக்கையை உடனே நிறுத்தவேண்டும்

இந்த இரண்டையும் செய்யாமல் எப்படி அரசியல் தீர்வு காண முடியும்?

இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்களைக் களைய, முதல்வர் கலைஞர் தலைமையில் அமைதிக்குழு ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்ற கருத்தினைக் கூறியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

அறிக்கை வருமாறு:

நமது பக்கத்து நாடான இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் அன்றாடம் அனுபவிக்கும் வேதனைகள், கொலை, பாலியல் வல்லுறவு மற்றும் காடுகளில் ஓடி ஒளிந்தாலும் பாதுகாப்பற்ற நிலை, அவர்களுக்கு உணவு போதிய அளவு செல்ல முடியாத வண்ணம் சாலைகளை மூடுதல் மூலம் பட்டினி, பசிக் கொடுமையால் உயிர் விடும் பரிதாபம் இவை எல்லை தாண்டிச் சென்று கொண்டுள்ளன. அங்குள்ள இலங்கை சிங்கள அரசும், இராணுவமும் திட்டமிட்டு தமிழினப் படுகொலைகளை சூஇராணுவ நடவடிக்கை’ என்ற பெயராலும், தீவிரவாதம் ஒழிப்பு, விடுதலைப்புலிகளை ஒடுக்கல் என்ற போர்வையிலும் அப்பாவித் தமிழ் இன மக்கள் ஆலையிட்டக் கரும்பாகக் கசக்கிப் பிழியப்படும் கோரம் அன்றாட அவலங்களாகி வருவதைக் கண்டு மனமுள்ளோர் அனைவரும் இரத்தக் கண்ணீர் வடிக்கின்ற நிலை.

நார்வே நாடு போன்ற ஒரு நாடு சமரச முயற்சியில் ஈடுபட்டும் அதைச் சரிவரப் பயன்படுத்திட இராஜபக்சே அரசுக்கு மனமில்லை.

அரசின் கட்டுப்பாட்டுக்குள் இலங்கை இராணுவம் உள்ளதா?

அரசின் கட்டுப்பாட்டுக்குள்தான் அந்நாட்டு இராணுவம் உள்ளதா என்பதே கேள்விக் குறியாகி வருகிறது.

வெளிநாடுகளிலிருந்து உதவி உதவி என்று வாங்கி, அவற்றை அந்த நாட்டு வளத்துக்காக, மக்களுக்காகச் செலவழிக்காமல், போர் ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. (பாகியிதான் போன்ற நாடுகள் இதனைச் செய்வதன் மூலம் லாபம் அடைகின்றது என்று பன்னாட்டு அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்).

வெளிநாடுகளும் உணர ஆரம்பித்துவிட்டன எனவே, இலங்கைக்கு உதவிடும் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற பல நாடுகளின் கண்கள் இப்போது மெல்ல மெல்லத் திறக்கத் தொடங்கி உண்மையான யதார்த்த நிலையை உணர்ந்து வருகின்றன. இராணுவத் தீர்வு சொந்த நாட்டு மக்கள் மீதே விமானங்கள் மூலம் குண்டு மழை என்றால், தமிழர்கள் வாழும் பகுதிகளை சிங்கள அரசே பிரித்துவிட்டது, வேறு நாடு என்று கருதுகிது என்பதாகத்தானே பொருள்?

இதனை இப்போது காலந்தாழ்ந்தாவது உணர்ந்துள்ள உதவும் நாடுகள் விரைந்து தீர்வு காணாவிட்டால், உதவிகள் கிடைக்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டன!

அவசரமாகச் செய்யப்பட வேண்டிய இரண்டு செயல்கள்!

திடீரென சிங்கள அரசு அந் நாட்டின் பிரதமரை அனுப்பி, நம் நாட்டின் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களிடம் ஒரு மாத காலத்திற்குள் அரசியல் தீர்வு காண்போம் என்று கூறியுள்ளார்.

இதை நம்பிட முடியுமா என்பது சமரசம் பேசிய பல நாடுகள் நன்கு அறியும். தமிழர்களைப் பட்டினிப் போட்டுக் கொல்லும் முயற்சியாக, முக்கியப்பாதை மூடலை ரத்து செய்து, சாலைகளைத் திறந்து போதிய உணவுகளை, உலக நாடுகள் இந்திய நாடு உள்பட அனுப்பும் உணவு உதவிகளைப் பசியால் வாடும் தமிழ் மக்களுக்குக் கிடைக்கச் செய்யட்டும்!

இரண்டாவதாக, தமிழர்களுக்கு எதிராக இராணுவ நடடிக்கைகளை, கொடுஞ்செயல்களை நிறுத்திடட்டும்!

இவை இரண்டையும் செய்யாமல் எப்படி உண்மையான அரசியல் தீர்வு காண முடியும்?

உலக நாடுகள் கண்களில் மிளகாய்ப் பொடி தூவிய கதையாகத் தானே ஆகிவிடும்?

முதல்வர் தலைமையில் அமைதிக்குழு தேவை!

நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருக்கும் தமிழினத்தைக் காப்பாற்ற உடனடியாகத் தடுத்துத் தீர்வு காண, இந்தியா, உரிமையுடன் முன்வந்து தமிழ்நாடு முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில் இப்பிரச்சினையைப் புரிந்த தகுதி மிக்காரைக் கொண்ட ஓர் அமைதிக் குழு அமைத்துத் தீர்வு காண கேட்டுக் கொண்டால், உருப்படியான பலன் நிச்சயம் ஏற்படும். வெறும் அதிகாரிகளால் எந்தப் பயனும் ஏற்பட முடியாது.

இந்தியாவின் மூத்த ராஜதந்திரியாக அரசியல் ஞானியாக உள்ள முதல்வர் கலைஞர் சூநோய் நாடி நோய் முதல் நாடுவார்.’ அதுபற்றி யு.பி.ஏ.,யின் தலைவர் திருமதி சோனியா காந்தி அம்மையாரும், பிரதமரும் ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்கவேண்டும்.

மனிதநேயம் காப்பாற்றப்பட வேண்டும். ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டால், அதன்மூலம் அண்டை நாடான நமது நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி, நிம்மதி எல்லாம் ஏற்படும்.

காந்தியார் சத்தியாக்கிரக நூற்றாண்டு விழாவையொட்டி தூதுக்குழு பொருத்தமானது!

அண்ணல் காந்தியார் அவர்களின் சத்தியாக்கிரக நூற்றாண்டு விழாவையொட்டி இந்த தூதுக்குழு (தீர்வுக் குழு) இலங்கைக்கு இந்திய அரசால் அனுப்பப்பட்டால் அதைவிட காந்தியாரின் சூசூசத்தியாக்கிரக நூற்றாண்டுக்கு’’ சரியான நினைவுச் சின்னம் கொண்டாட்டம் வேறு சிறப்பாக அமைய முடியாது.

எதையும் பல கோணங்களில் சிந்தித்து சிக்கலான பிரச்சினை களையும் தீர்க்கும் அரசியல் ஞானியான கலைஞரைவிட, இப்பணிக்கு இந்திய நாட்டில் வேறு எவரும் இல்லை என்பது எமது உறுதியான கருத்து.

எனவே, ஒன்றே செய்க, நன்றே செய்க, அதுவும் இன்றே செய்க!

சென்னை 30.1.2007

-விடுதலை

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் துன்பம்தீர அமைதிக்குழு

இலங்கை செல்ல வேண்டும்: வீரமணி

சென்னை, ஜன.31_

இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்களைக் கலைய முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைதிக்குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:_

நமது பக்கத்து நாடான இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் அன்றாடம் அனுபவிக்கும் வேதனைகள், கொலை, பாலியல் வல்லுறவு மற்றும் காடுகளில் ஓடி ஒளிந்தாலும் பாதுகாப்பற்ற நிலை, அவர்களுக்கு உணவு போதிய அளவு செல்ல முடியாதவாறு சாலைகளை மூடியதால் பசி, பட்டினியால் உயிர் விடும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள இலங்கை சிங்கள அரசும், இராணுவமும் திட்டமிட்டு தமிழினப் படுகொலைகளை `இராணுவ நடவடிக்கை' என்ற பெயராலும், தீவிரவாதம் ஒழிப்பு, விடுதலைப் புலிகளை ஒடுக்கல் என்ற போர்வையிலும் அப்பாவித் தமிழ் இன மக்கள் ஆலையிட்டக் கரும்பாகக் கசக்கிப் பிழியப்படும் கோரம் அன்றாட அவலங்களாகி வருவதைக் கண்டு மனமுள்ளோர் அனைவரும் இரத்தக் கண்ணீர் வடிக்கின்ற நிலை.

அரசின் கட்டுப்பாட்டுக்குள்தான் அந்நாட்டு இராணுவம் உள்ளதா என்பதே கேள்விக் குறியாகி வருகிறது.

வெளிநாடுகளிலிருந்து உதவி, உதவி என்று வாங்கி, அவற்றை அந்த நாட்டு வளத்துக்காக, மக்களுக்காகச் செலவழிக்காமல், போர் ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.

இதனை இப்போது காலந்தாழ்ந்தாவது உணர்ந்துள்ள உதவும் நாடுகள் விரைந்து தீர்வு காணாவிட்டால், உதவிகள் கிடைக்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டன.

திடீரென சிங்கள அரசு அந்நாட்டின் பிரதமரை அனுப்பி, நம் நாட்டின் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஒரு மாத காலத்திற்குள் அரசியல் தீர்வு காண்போம் என்று கூறியுள்ளார். இதை நம்பிட முடியுமா என்பது சமரசம் பேசிய பல நாடுகள் நன்கு அறியும்.

நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருக்கும் தமிழினத்தைக் காப்பாற்ற உடனடியாகத் தடுத்துத் தீர்வு காண, இந்தியா, உரிமையுடன் முன்வந்து தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி தலைமையில் இப்பிரச்சினையைப் புரிந்த, தகுதி மிக்காரைக் கொண்ட ஓர் அமைதிக் குழு அமைத்துத், தீர்வு காண கேட்டுக் கொண்டால், உருப்படியான பலன் நிச்சயம் ஏற்படும். வெறும் அதிகாரிகளால் எந்தப் பயனும் ஏற்பட முடியாது.

அண்ணல் காந்தியார் அவர்களின் சத்தியாக்கிரக நூற்றாண்டு விழாவையொட்டி இந்த தூதுக்குழு தீர்வுக்குழு இலங்கைக்கு இந்திய அரசால் அனுப்பப்பட்டால் அதை விட காந்தியாரின் `சத்தியாக்கிரக நூற்றாண்டுக்கு' சரியான நினைவுச் சின்னம் கொண்டாட்டம் வேறு சிறப்பாக அமைய முடியாது.

இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.

http://www.thinaboomi.com/jjan31/tamil.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.