Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் வாழ்வுதனை சிறீலங்கா அரசின் சூது கவ்வும்.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் வாழ்வுதனை சிறீலங்கா அரசின் சூது கவ்வும்.....

தங்கள் சொந்த மண்ணில் சிறீலங்கா அரசு கடந்த முப்பது வருடங்களாக எப்படி தமிழர்களை அடக்கி ஒடுக்கி படுகொலைகளை செய்து வருகிறதோ அதே போல அண்மைக்காலமாக உலக நாடுகளெங்கும் வாழும் புலம் பெயர் தமிழர்கள் தங்கள் உறவுகளிற்கான ஆதரவுக்கரத்தினையும் முறித்து ஈழத்தமிழர்களிற்கான உரிமைபோராட்டத்தின் ஆதரவு குரலையும் அடக்கிவிடும் நோக்கத்துடன் எலும்புத்துண்டுகளிற்காய் எச்சில் வடிய காத்திருக்கு சில விலைபோன தமிழர்களின் உதவியுடனும் சில திட்டமிட்ட பொய்யான தவறான குற்றச்சாட்டுக்களை மனித நேயப்பணியாளர்கள் மீது சுமத்தி அவர்களை கைது செய்யதூண்டிது மட்டுமல்லாமல் அதே வேளை இலங்கையரசு தன்னுடைய அழுத்தத்தினை பிரயோகித்து முடிந்தவரை அந்த மனித நேயப்பணியாளர்கள் விடுதலையாகாதவாறு செய்து புலம் பெயர் மண்ணிலும் தமிழர்களின் உரிமைப்போராட்டத்திற்கான ஆதரவினையும் அடக்கிவிடலாமென்று அற்ப ஆசைப்பட்டுக்கொண்டிருக்கின?றது.

அதன் தொடர்ச்சியாகவே பிரான்சிலும் தமிழர் மனித நேயப்பணியாளர்கள் பதின் நான்கு பேர் கைது செய்யப்பட்டு கடந்த 5 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போரால் துன்பப்பட்டும் உறவுகளை உடைமைகளை இழந்து போன எமது உறவுகளிற்கான உதவிகளை ஒருங்கிணைத்து வழங்குவதிலேயே ஈடுபட்டு வந்திருந்தனர் என்றும் இவர்கள் குற்றவாளிகள் அல்ல அவர்களிற்கு புலம் பெயர் வாழ் தமிழர்களின் ஆதரவும் உதவியும் என்றும் இருக்கும் என்பதனை எடுத்துகாட்டுவதற்கும். இவர்களின் விடுதலைக்கான நியாயத்தினையும் பிரான்சு தேசத்து அரசிற்கு எடுத்து சொல்லும் பாரியகடைமை புலம் பெயர்வாழ் தமிழன் ஒவ்வொருத்தரிற்கும் உள்ள பாரிய கடைமையாகும்.அனால் இப்படியான சில திட்டங்களை முன்னெடுப்பவர்களிற்கு அல்லது முன்னெடுக்க முயற்சிப்பவர்களிற்கு சிறீலங்கா அரசின் கூலிகளாக செயற்படும் சிலரால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றது.

புலம் பெயர் மக்களே நீங்கள் இந்த அச்சுறுத்தல்களிற்கு அடிபணிய வோ அல்லது பயந்து ஒடுங்கி போகவோ வேண்டிய தேவை இல்லை காரணம் நீங்கள் இலங்கை அரசு போன்று அடிப்படை மனித உரிமைகளையோ மனிதப்பண்புகளையோ மதிக்காத உயிரிற்கு அச்சுறுத்தல் விதிக்கின்ற ஒரு நாட்டில் வாழவில்லை.மனிதப்பண்புகளையும? அடிப்படை மனித உரிமைகளையும் மதித்து ஒவ்வொரு தனிமனிதனின் நியாயங்களையும் கேட்ககூடிய அதற்கான சட்டங்களையும் அப்படியான சட்டங்களை மதிக்கின்ற அரசுகளையும் கொண்ட நாடுகளிலேயே வாழுகின்றீர்கள்.எனவே உங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துசொல்ல தயங்காதீர்கள் . சிறிலங்கா என்கிற தேசம் இன்று மனித நேயப்பணியாளர்கள் பணியாற்றுவதற்கு மிகுந்த ஆபத்தான இடமாக உள்ளதென ஜ.நா சபையின் மனிதாபிமான விவ காரங்களிற்கான ஒருங்கிணைப்பாளர்.

ஜேன் `ஹம்ல்ஸ் தெரிவித்துள்ள அதே வேளை அடிப்படை மனித உரிமைகளை மதிக்காத ஒரு நாடாக சிறீலங்கா உள்ளதென சர்வதேச மன்னிப்ப சபையும் குற்றம் சாட்டியுள்ளது அனைவரும் அறிந்ததே. அதற்கேற்றால் போல் சிறீலங்கா அரசும் பிரெஞ்சு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அக்சன்பாம் என்கிற நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேரை படுகொலை செய்து பின்னர் சர்வதேசத்தின் அழுத்தங்களிற்காக ஒரு துடைப்பு விசாரணையையும் நடாத்தி முடித்துள்ளது. எனவே புலம் பெயர் மக்களே இந்த பணியாளர்கள் படகொலைபற்றிய ஒரு நீதியான நியாயமான விசாரணை நடாத்த கோரியும் பிரான்சில் கைது செய்து வைக்கப்பட்டிருக்கும் 14 மனிதநேயப்பணியாளர்களின் விடுதலைக்கான நியாயத்தினை எடுத்து கூறவும் ஒன்று திரள்வோம்.இதற்காக பிரான்சில் கைது செய்யப்பட்டவர்களிற்கான ஆதரவு அமைப்பு என்கிற பெயரில் ஒரு அமைப்பு நிறுவப்பட உள்ளது. ஆர்வம் உள்ள அனைவரும் இந்த அமைப்புடன் இணைந்து செயற்படலாம். இதற்கான தொ.பே இலக்கம்.(0033)0699070422 மின்னஞ்சல் collectiftamoul@gmail.com

மேலதிகமாக சில தகவலகள் என்னவெனில் பிரான்சில் கைது செய்யப்பட்ட மனிதவுரிமை பணியாளர்கள் கைது சம்பந்தமாக எமது பக்க நியாயத்தை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அந்தநாடுகளில் உள்ள பிரெஞ்சு தூரகங்களின் ஊடாகவும் பிரெஞ்சு அரசிற்கு எடுத்து சொல்ல வேண்டிய கடைமை எமக்கு உள்து எனவே உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்பை சேர்ந்தவர்கள் தமிழ் சங்கங்களை சேர்ந்தவர்கள் இது சம்பந்தமான நடவடிக்கைகைளை முன்னெடுக்க வேண்டும் என கேட்டு கொள்வதோடு அதன் மேலதிகமான தகவல்கள் பெற்றுகொள்ள மேலே குறிப்பிட்டுள்ள தொ.பே இலக்கத்துடனோ அல்லது என்னுடன் தனிமடலிலும் தொர்புகொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன் நன்றி

Edited by sathiri

பகுத்தறிவு, மதம் என்ற தலைப்பில் எல்லாம் யாழ்களத்தில் விவாதங்கள் கொடிகட்டி பறக்கின்றன. ஆனால் சாத்திரி எழுதி உள்ளது போன்ற முக்கியமான தலைப்புக்களை ஏனோ பல பேர் எட்டிக்கூட பார்ப்பதில்லை..

தமிழர் வாழ்வும் வளமும் ஈழப்போராட்டத்தின் வெற்றியில் தான் பெரிதும் தங்கி உள்ளது என்பதை நம்மவர்கள் எல்லோரும் உணர்வது எப்போது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி வேல் சொன்னது போல அனேகமானவர்கள் விசைப்பலகை வீரர்களாகவே இருக்கின்றனர் செயல் என்று வரும்போது பலர் காணாமல் போய் விடுகின்றனர். எங்காவது புலி ஒரு தாக்குதல் நடத்தினால் மட்டும் ஏதோ தாங்களே போய் அடிச்சிட்டு வந்த மாதிரி இவ்வளவு ஆமி செத்ததாம் இவ்வளவு ஆயுதம் எடுத்ததாம் எண்டு பக்கம் பக்கமாய் எழுதிதள்ள வருவினம். இதுவரை நான் தனிப்பட்ட மறையில் தொடர்பு கொண்ட சிலரை தவிர மற்ற எவரும் எந்த அமைப்பும் இது சம்பந்தமாக தொடர்புகளை ஏற்படுத்தவில்லை என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.நன்றி வணக்கம்

என்ன செய்யுறது வெற்றிவேல். பாரிஸ் பிள்ளையார் கோவிலில் ஒரு சிறப்புப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்திருக்கலாம். அல்லது பிள்ளையாருக்கு 10000 தேங்காய்கள் உடைப்பதாக நேர்த்திக்கடன் வைத்திருக்கலாம். இப்படி செய்திருந்தால் கைது செய்யப்பட்டவர்கள் ஆதியும் அந்தமும் ஆன சிவனின் பிள்ளை விநாயகரால் விடுதலை செய்யப்பட்டிருப்பார். ஆனால் சாத்திரி போன்ற "லலிதா அம்மனை" கிண்டல் செய்து கட்டுரை எழுதுகிற நாத்தீக வாதிகளால் மேலும் மேலும் பிரச்சனைகள் தான் வந்து சேர்கிறது. அம்மனின் சாபத்துக்கும் கோபத்துக்கும் ஆளாகிவிட்டோம் நாங்கள். :lol:

சாத்திரி, இங்குள்ள இளையோர் அமைப்புக்கு அறியக்கொடுத்துள்ளேன். தொடர்புகொள்வார்கள் என்று நம்புகிறேன். முடிந்தால் எப்போது இந்தப் போராட்டத்தை செய்ய இருக்கிறீர்கள் என்ற விபரத்தை அறியத்தரவும். ஒரே நாளில் எல்லா நாடுகளிலும் செய்ய இருக்கிறீர்களா? அல்லது வெவ்வேறு நாட்களிலா?

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி தன்னை நாஸ்திகவாதியாகக் காட்டிக் கொண்டது கிடையாது இளைஞன். அது டென்மார்க் அம்மன் பற்றிச் சொல்லவிளைந்ததை நாங்கள் சீர்திருத்தமாகத் தான் எடுத்துக் கொள்கின்றோமே தவிர, மதநிந்தனை செய்ததாகக் கருதவில்லை. அவர் இது வரைக்கும் அப்படி ஒரு செயலிலும் ஈடுபட்டதில்லை.

மேலும் இத்தலைப்பிற்குள் கடவுளைப் பற்றித் தாங்கள் இழுப்பது தலைப்பைத் திசை மாற்றவா?

----------------------------

பிரான்சில் கைது செய்யப்பட்ட எம் மனிதநேயப் பணியாளர்களை மீட்க பிரான்ஸ் சாராத நாட்டில் வாதிவோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளங்கப்படுத்தினால், மிக நன்றாக இருக்கும்

பகுத்தறிவு, மதம் என்ற தலைப்பில் எல்லாம் யாழ்களத்தில் விவாதங்கள் கொடிகட்டி பறக்கின்றன. ஆனால் சாத்திரி எழுதி உள்ளது போன்ற முக்கியமான தலைப்புக்களை ஏனோ பல பேர் எட்டிக்கூட பார்ப்பதில்லை..

இதற்குத்தானே பதிலளித்தேன்? :lol:

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.

பழைய கடுப்பில் கதைக்கின்றீர்கள் என நினைத்துப் பாய்ந்துவிட்டேன்.

பழைய கடுப்பா? அது என்னது? :lol:

கடவுள் வந்துவிட்டார் தானே இங்கு. இனி பக்தர்கள் ஓடோடி வரப்போகிறார்கள் பாருங்கோ :lol:

Edited by இளைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடயம் ஒன்றும் சிரமானதல்ல ஒவ்வொரு நாடகளிலும் உள்ள பிரெஞ்சு தூதரகங்களின் முன்னாலும் தமிழர்கள் ஒரு ஒன்றுகூடலை நடாத்தி அதுவும் அதிக அளவில் தேவையில்லை ஒரு 50.60 பேர் சேர்ந்தாலே போதும் சேர்ந்து பிரான்சில் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழ் மனிதாபி மான பணியாளர்கள் இலங்கையரசின் பொய்யான தகவல்களால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்றும் மற்றும் சிறீலங்காவில் படுகொலை செய்யப்பட்ட அக்சன் பாம் நிறுவனத்தினர் சார்பாக நீதியானதும் நியாயமானதுமான ஒரு விசாரணையை இலங்கை அரசு நடாத்த பிரான்ஸ் அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் ஒரு கடிதத்தினை பிரெஞ்சு தூதரக அதிகாரியிடம் கொடுத்தால் சரி. முக்கியமாக இந்த ஒன்று கூடலை நடாத்த ஏதாவது ஒரு பொது அமைப்பு அதற்கான முறையான அனுமதியை வாங்கி அதே நெரம் பிரெஞ்சு தூதரக அதிகாரியை சந்திக்க முறையான ஒரு அனுமதியையும் பெற்று சட்டப்படியான நபர்வுகளையே மேற்கொள்ளவேண்டும்.எனவேதான் பொது அமைப்புக்கள் ஒன்று சேர்ந்தால் இதனை செய்வது சுலபம். முறையான மொழிதெரிந்த இளையவர்கள் மூலமாக இந்த அனுமதிவாங்குகின்ற விடயங்களை அணுகினால் எல்லாமே சுலபமாக நடைபெறும்.

Edited by sathiri

உண்மைதான் சாத்திரி. புலம்பெயர் நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நியாயமான முறையில் எமது கோரிக்கைகளை முன்வைக்கிறபோது, போராட்டங்களை நடத்துகிறபோது பிற்காலத்தில் எவ்வித பிரச்சனைகளுக்கும் முகங்கொடுக்கவேண்டியதில்லை. அத்தோடு இங்கு படிக்கிற இளைஞர்கள் மூலம் அணுகுகிறபோது இதற்கான வரவேற்பு சிறப்பாக இருக்கும். முடிந்தால் அந்தந்த நாட்டில் இயங்கும் சமூகம் சார் அமைப்புக்களோடு நல்லுறவை வளர்த்துக்கொள்வதும், இப்படியான போராட்டங்களின் போது அவர்களை இணைத்துக்கொள்வதும் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.