Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடாநாட்டில் TNA வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றது. -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடாநாட்டில் TNA வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றது. -

09 ஜூலை 2011

சிவாஜிலிங்கத்தின் வாசஸ்தலத்தின் மீது கழிவொயில்கள் - குளோபல் தமிழ்ச்செய்தியாளர் :

உள்ளுராட்சித் தேர்தலுக்கான நாட்கள் அண்மித்து வருகின்ற வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் அச்சுறுத்தப்படுவது தொடர்கின்றது. இன்று அதிகாலை வேளையில் வல்வெட்டித் துறைக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரான சிவாஜிலிங்கத்தின் வாசஸ்தலத்தின்மீது கழிவொயில்கள் உள்ளிட்ட கழிவுகள் ஊற்றப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 3

மணியளவில் இரண்டிற்கு மேற்பட்ட கயஸ் வாகனங்களில் வந்த நபர்களே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

முன்னதாக வலி மேற்கு பிரதேச சபைக்கான வேட்பாளரான ஐங்கரன் என்பவரது வீட்டின் மீதும் இதே போன்று தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக ஐங்கரன் தொலைபேசி மூலமாகத் தனக்கு தகவல்களைத் தந்துகொண்டிருந்ததாகவும் உரையாடிக்கொண்டிருந்த வேளை வீட்டிற்கு வெளியே சத்தங்கள் கேட்டதாகவும் இதையடுத்து தாம் வீட்டிற்கு வெளியே வர முற்பட்ட வேளை பைகளில் நிரப்பி வந்த கழிவுகளை தாக்குதலாளிகள் வீட்டின்மீது வீசிவிட்டுத் தப்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிசாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுமார் அரை மணி நேரம் தாமதித்து அங்கு வந்ததாகவும் இது தொடர்பாக முறைப்பாடு ஒன்றைச் செய்யுமாறு அவர் கூறியதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதையடுத்து காலை வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் தான் முறைப்பாடு ஒன்றைச் செய்ததாக அவர் தெரிவிக்கின்றார். வடமராட்சிப் பகுதியில் பரவலாக இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுகின்ற போதிலும் கணிசமான வேட்பாளர்கள் அச்சங் கலந்த நிலையில் இதுபற்றி வாய்மூடி மௌனமாகவே இருந்து வருகின்றனர்.

இதே வேளை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைக்காகப் போட்டியிடுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச் சந்திரனின் செயலாளரான

றமேஸ் என்பவரின் சுவரொட்டிகள் முற்றுமுழுதாகக் கிழித்தும் கழிவொயில்கள் ஊற்றப்பட்டும் நாசமாக்கப்பட்டிருப்பதாக றமேஸ் குற்றஞ்சாட்டுகின்றார்.

இரவு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அதிகாலை வேளைகளில் அவசர அவசரமாகக் கிழித்தும் கழிவொயில் ஊற்றப்பட்டதாகவும் அவர் கூறுகின்றர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை இந்தத் தேர்தலில் அச்சுறுத்தி அடிபணிய வைப்பதன் மூலம் தாம் வெற்றியைப் பெற்றுக்கொள்ள அரசும் அரச ஆதரவு சக்திகளும் முற்படுவதாக கூட்டமைப்பு மீண்டும் பகிரங்கமாக் குற்றஞ்சாட்டியுள்ளது.

தேர்தல் வன்செயலாக இவை இருக்கின்ற போதும் எந்தவொரு நடவடிக்கையும் சட்டம் ஒழுங்கு நீதியில் மேற்கொள்ள எவருமே முன்வரவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனிடையே வலிகாமம் மேற்கு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மீதான அச்சுறுத்தல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதற்காக அப்பகுதிப் பொலிஸ் பொறுப்பதிகாரியை உடனடியாக இடம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை அடுத்து அதிகாலை வேளைகளில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கைது செய்ய நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதாகவும் தெரிய வருகின்றது.

இதையடுத்து அரசியல் தரப்பொன்றின் தலைமை கொழும்புத் தலைமையகத்தினூடாக எடுத்த நடவடிக்கைகளையடுத்தே குறித்த அதிகாரி இடமாற்றம் செய்யப்படுவதாக தற்போது

தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63844/language/ta-IN/article.aspx

யாழ்ப்பாணத்தில் நாய்களை சுட்டு , தலையை வெட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பின் படலைகளில் தொங்கவிடும் சிங்கள இராணுவம் !

http://www.lankatruth.com/index.php/news/local-news/9277-shocking-panorama-amidst-high-security-in-jaffna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.