Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயநிர்ணய உரிமை பற்றிய விடயத்தில் சில தலைவர்கள் மதில்மேல் பூனையாக இருக்கிறார்கள் - நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்

Featured Replies

இன்று தமிழ்மக்களின் தலைவர்கள் என்று மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சிலருக்கு சுயநிர்ணய உரிமை பற்றி தளம்பல்கள் இருக்கின்றது. சுயநிர்ணய உரிமைபற்றி பேசவேண்டிய இடங்களில் சிலர் மௌனம் காக்கின்றார்கள். சுயநிர்ணய உரிமை, தாயகம், தேசியம் என்ற கோட்பாடுகளுக்காக மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் அவர்கள். ஆனால் பேச்சுவார்த்தை மேடைகளில் தேசிய அபிலாசைகளை மனம்திறந்து பேச சில தலைவர்கள் வெட்கப்படுகின்றார்கள். மதில்மேல் பூனையாக இருக்கின்றார்கள்.

இவ்வாறு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கீழ் இயங்கும் நூலகங்களுக்காக இரண்டு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா பெறுமதியுடைய ஒரு தொகுதி நூல்களை பிரதேச சபையிடம் சம்பிரதாய முறையில் கையளிக்கும் நிகழ்வில் உரைநிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், சபைத்தலைவர் நா.வை.குகராசா, துணைத்தலைவர், உறுப்பினர்கள், பிரதேசசபை செயலாளர், இலங்கை செஞ்சிலுவை சங்க கிளிநொச்சி கிளை பொருளாளர் தர்மரட்ணம் மற்றும் முக்கியஸ்தர்கள், வாசகர்கள், பிரதேசசபை பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உரையாற்றுகையில்,

மனித வாழ்வில் அறிவார்ந்த வளர்ச்சிக்கு வாசிப்பு என்பதும் அதற்கு களமாக இருக்ககூடிய நூல்களும் முக்கியமாக அமைகின்றன. இன்று பரீட்சைகளிலும் வாசிப்பும் தேடலும் உள்ள மாணவர்களே அதிகம் சித்தி அடைகின்றனர். இணையத்தளங்களால் பின்னப்பட்ட இந்த உலகத்தில் எமது சமுதாயம் கலந்து கொள்வதற்கு மிக அடிப்படையாக நூல்களுடனான பரீட்சயமும் விருப்பும் வாசிப்பும் தேவையாக இருக்கின்றது. இன்று எமது வரலாற்றையும் உலகப் பண்பாடுகளையும் நூல்களே பெட்டகங்களாக தம்முள்ளே தேக்கி வைத்திருக்கின்றன. பல மனிதர்களை, தலைவர்களை புத்தகங்களே வழிநடத்துகின்றன.

போரின் காலத்தில் எமது நூல்களும் நூலகங்களும் அழிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஜனநாயக வழியில் எமது தேசியக்கோட்பாடுகளுக்கு கிடைத்த வெற்றியின் ஒரு வடிவமான இப்பிரதேசசபையின் ஆளுகையின் கீழ் இயங்கும் நூலகங்களின் வளர்ச்சியில் நாம் மிகுந்த அக்கறை கொண்டிருக்கினறோம்.

நவீன கணனி மயப்படுத்தப்பட்ட நூலகங்களாக அவற்றை மாற்றி அமைக்க நாம் எல்லோரும் இணைந்து பாடுபடவேண்டும். ஏனெனில் நாம் எமது போராட்ட இலட்சியத்தை அடைவதற்கு அறிவாயுதத்தை பயன்படுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம். அதற்கு தகுதி வாய்ந்தவர்கள் பொருத்தமான சூழலில் அமர்த்தப்படவேண்டும். அதற்கு நூல்களும் நூலகங்களும் கூட நிச்சயம் பங்காற்றும்.

நூலகங்களுடாக கட்டி வளக்கப்படுகின்ற வாசகர் வட்டங்களும் எழுத்தாளர்களின் கருத்தாடல்களும் தேசியசிந்தனைகள் எமது இனத்தின் விடுதலை நோக்கிய போராட்டத்திற்கு பக்கபலமாய் இருக்கும்.

நாம் எதை எடுத்துக்கொண்டாலும் எமக்கு பின்னால் எமக்காக ஆயிரக்கணக்கான தியாகிகள் உயிர்கொடுத்துள்ளார்கள். இலட்சக்கணக்கான மக்கள் இரத்தம் சிந்தி உயிர்கசிந்து போயியுள்ளார்கள் என்பதை நாம் என்றும் மறக்கக்கூடாது.

இன்று தமிழ்மக்களின் தலைவர்கள் என்று மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சிலருக்கு சுயநிர்ணய உரிமை பற்றி தளம்பல்கள் இருக்கின்றது. சுயநிர்ணய உரிமைபற்றி பேசவேண்டிய இடங்களில் சிலர் மௌனம் காக்கின்றார்கள். சுயநிர்ணய உரிமை தாயகம் தேசியம் என்ற கோட்பாடுகளுக்காக மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் அவர்கள். ஆனால் பேச்சுவார்த்தை மேடைகளில் தேசிய அபிலாசைகளை மனம்திறந்து பேச சில தலைவர்கள் வெட்கப்படுகின்றார்கள். மதில்மேல் பூனையாக இருக்கின்றார்கள்.

வடகிழக்கு இணைந்த தாயகம், சுயநிரணய உரிமை, தேசியம் என்ற விஞ்ஞாபனங்களுக்காக வாக்களித்த தமிழ் மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. நழுவுகின்றவர்களை மக்கள் நிச்சயம் தண்டிப்பார்கள்.

நாம் சுயநிர்ணய கோட்பாடுகளில் இருந்து என்றும் மாறப்போவதில்லை. எமது தேசிய அபிலாசைகளுக்கான பயணம் தொடரும். வட்டுக்கோட்டை தீர்மானம் ஜனநாயக மற்றும் ஆயுத வழி உரிமைகளுக்கான அடிநாதமாக விளங்குகின்றது.

எனவே பல்வேறு தலைமுறைகள் தலைமைகள் ஊடாக வந்தவர்களை ஒரே மேடையில் வைத்து தமிழ்மக்கள் பார்ப்பது சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையிலேயே என்பதை யாரும் மறக்கக்ககூடாது. மக்கள் தந்திருக்கின்ற ஆணையின்படி வெளிப்படையான அரசியல் பயணம் நடக்கவேண்டும்.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தனதுரையில் தெரிவித்தார்.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={24EE9CDA-3274-4FAF-BC54-150A53D6993B}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.