Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    7051
    Posts
  2. shanthy

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    4644
    Posts
  3. சித்தன்

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    3
    Points
    2270
    Posts
  4. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    16471
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/07/10 in all areas

  1. பாகம் பத்து புதுக்குடியிருப்பு - ஒட்டிசுட்டான் வீதி அதில் ஒரு நூற்றைம்பது மீற்றரில் சிங்கள ராணுவத்தை மறித்து வைத்திருந்தார்கள் புலிகள் . இண்டைக்கு பிடித்துவிடுவோம். நாளைக்கு பிடித்துவிடுவோம் என்று வாய் கூசாமல் சொல்லி சொல்லி ராணுவ பேச்சாளனின் வார்த்தைகள், பொய்யாகி போய் இரண்டு வாரங்கள். கடுமையான சண்டை. நெருப்பு சுவர்களாக புலிகள். சுடுகாடாக புதுக்குடியிருப்பு. புதுக்குடியிருப்பு.... அது ஒரு அழகான நகரம். பரந்தனையும் முல்லைத்தீவையும் ஒட்டிசுட்டானையும் இரணைப்பாலையும் இணைக்கும் நாச்சந்தி. கடைதொகுதிகளும், கதிரவன், மதி தேநீர்க்கடைகளில் ஒலிக்கும் புரட்சி பாடல்களும், அழகாக அடுக்கிவைக்கபடிருக்கும் மண்ணெண்ணெய் போத்தில்களும், மாவீரர் மண்டபம் அதை ஒட்டி நிற்கும் பெரிய நிழல் தரு மரம், பாண்டியன் உணவகம், பேரூந்து நிலையம் அதற்கு முன்னால் அழகான புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயம் எல்லாம் அந்த நகருக்கு மிடுக்கை கொடுத்திருந்தன. மக்கள் நெரிசலை கட்டுப்படுத்த எப்போதுமே அந்த நகரின் சந்தியில் காவல் துறையினர் காத்திருப்பர். இன்று ... கட்டடங்கள் தொடர்ச்சியான கொத்து குண்டுகளாலும், இடைவிடாத கிபிர் தாக்குதல்களாலும் அழிதொழிக்கபடிருந்தன. நாச்சந்தி எது என்று தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இந்த மூலையில் இருந்து பார்த்தால் அந்த மூலை தெரியுமளவுக்கு தரைமட்டமாகபடிருந்தது. அழகான அந்த நகரம் அலங்கோலமாக.. இருந்தும் புலிகளின் அந்த மனித வேலி, ராணுவ அரக்கனை உள்ளே விடாமல் தடுத்து வைத்துகொண்டிருந்தது. மக்கள் புகலிடம் தேடி இரணைபாலை, புதுமாத்தளன், ஆனந்தபுரம், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் நோக்கி போய்விட்டார்கள். காகங்களும் நாய்களும் மட்டுமே நகருக்கு சொந்தம் கொண்டாடின. ராணிமைந்தன் அந்த புலிகளின் மனித வேலியின் ஒரு பகுதிக்கு (கொம்பனிக்கு) பொறுப்பாக இருந்தான். அவனது தீரமிகு சண்டைகள் அவனை அந்த நிலைக்கு கொண்டுவந்திருந்தது. எதிரின் கனரக ஆயுதங்களுக்கும், கொத்து குண்டுகளுக்கும், விமான குண்டுவீச்சுகளுக்கும் நடுவில் சாதாரண ஆயுதங்களையும் மனவலிமையையும் வைத்து போராட போராளிகள் பழகிவிட்டார்கள். அன்று அதிகாலை சேகர் அண்ணா, ராணிமைந்தனின் அரணுக்கு வந்திருந்தார். அவனது கடந்த கால செயற்பாட்டுகளை பாராட்டிய அவர், புலிகளின் செய்மதி தொலைதொடர்பு மையத்தில் ஒரு கருவியினை பழுதுபார்க்க அவனை அழைத்து செல்ல வந்திருந்தார். புலிகள் அப்படிதான். நேற்றுவரை ஆயுதத்துடன் எதிரியுடன் போராடுவார்கள் , திடீர் என்று களம் மாறி இலத்திரனியல் கருவிகளுடன் போராடுவார்கள். அவர்களின் சிந்தனை மாறுதிறன் அந்நியன் படத்தை தான் நினைவூட்டும். அதற்கு ராணிமைந்தனும் விதி விலக்கல்ல. தனது கள பொறுப்புகளை துணை பகுதிப் பொறுப்பாளனிடம் ஒப்படைத்துவிட்டு சேகர் அண்ணாவுடன் புறப்பட தயாரானான். ஆனந்தபுரத்தின் மைய்யபகுதியில் அமைந்திருந்தது அந்த செய்மதி தொடர்பு மையம். புலிகளின், மக்களின் பெரும்பாலான வெளிநாட்டு தொடர்புகள் அந்த மையதினூடாகவே நெறிபடுத்தபட்டன. நன்றாக உருமறைக்கபட்டு மரங்களூடு செய்மதி கட்டுப்பாட்டு அலைகளை பெறுவதற்காக, மிகவும் சிரமபட்டு ஒழுங்கமைதிருந்தார்கள். வன்னி மக்களின் வெளிநாடுக்கான தொடர்பு, பண பரிமாற்றங்கள் (உண்டியல்) எல்லாமே சேகர் அண்ணாவின் கட்டுப்பாடில் இயங்கும் சர்வதேச தொலைதொடர்பு பிரிவினாலே நடாத்தபட்டன. மொத்தத்தில் சேகர் அண்ணா, வன்னிமக்களுக்கு ஒரு கண்காணா தெய்வமாக விளங்கினார் என்று சொன்னால் மிகையாகாது. என் காதுபடவே மக்கள் பேசியதை கேட்டிருக்கிறேன். "இவ்வளவு செல்லடிகள், குண்டு வீச்சுகளுக்கு மத்தியும், புலம்பெயர் நாடுகளில் உள்ள தங்கள் உறவுகளுடன் பேசி,பண பரிமாறல்களை செய்யவைக்கிற அந்த புண்ணியவான் நல்லா இருக்கோணும் " என்று சேகர் அண்ணாவை தெரியாத சனம் கூட பேசி இருக்கு. ஒரு செய்மதி அலைவாங்கியில் (Receiver ) பிரச்சனை. நாங்கள் இனி புதிதாக வெளிநாட்டில் கொள்வனவு செய்தாலும் கூட நாங்கள் எல்லாம் செத்தாப்பிறகு தான் வந்து சேரும். பழைய பழுதாகிப்போன அலைவாங்கியில் இருந்து ஏதாவது பகுதிகளை (Parts ) எடுத்து ஒட்டி செய்யவேண்டும்.நிறைய கணித சமன்பாடுகள். நிறைய இலத்திரனியல் நுண்ணறிவுகள் வேண்டும். வெளிநாடுகளில் கூட இப்படி செய்திருக்கவே மாட்டார்கள், ஆனால் புலிகள் செய்திருந்தார்கள். அவர்களின் ஆராய்ச்சி திறனுக்கு இரண்டு மூன்று கலாநிதி பட்டங்கள் கூட கொடுக்கலாம். ஆனால் அதை செய்பவர்கள் அடுத்த சண்டையில் சிலவேளைகளில் மக்களுக்காக வீரச்சாவு அடைந்துவிடுவார்கள். அதோடு அவர்களின் திறனும் வீரச்சாவு அடைந்துவிடும். புலிகளின் திறன் கண்டு, செய்மதி அலைவரிசை வழங்குனரே மெச்சியிருகிறான். சண்டை முடிந்ததும் தங்கள் நாட்டுக்கு வந்து தங்கள் கூட பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு கூட விடுதிருகிறான். அந்த முகாமுக்கு அருகில் இருந்த பயிற்சி முகாமில் ஆலோசனை வழங்கும் வேலையும் சேகர் அண்ணாவுக்கு இருந்தது. தன்னை அந்த பயிற்சி முகாமில் இறக்கிவிட்டு என்னை தொடர்பு மையத்துக்கு போக சொன்னார் சேகர் அண்ணா. பயிற்சி முகாம்கள் பொதுவாக மக்கள் வாழ்விடங்கள் குறைந்த காட்டுபகுதியில் தான் வைத்திருப்பது வழக்கம். ஆனாலும் எதிரி எங்களை ஒரு குறுகிய நிலபரப்பில் ஒடுக்கி இருந்தமையால், எங்கள் பயிற்சி முகாம்கள் மக்கள் வாழ்விடங்களை அண்டித்தான் அமைக்க வேண்டிய சூழ்நிலை. இருந்தும் நாங்கள் மக்களை விமான தாக்குதல் இலக்கு, செல் இலக்கு குறித்து எச்சரித்து அந்த இடங்களில் இருந்து தள்ளி வாழும்படி கேட்டுகொள்வோம்.ஆனால் மக்களும் தான் எங்கு போவார்கள். அவ்வளவு மக்களையும் தாங்க கூடிய நிலமாக இடமாக அந்த இடங்கள் இருக்கவில்லை. அவர்களும் எங்கள் முகாம்களுக்கு அருகிலேயே வாழ்ந்தும் பழகிவிட்டார்கள். நான் சேகர் அண்ணாவை அந்த பயிற்சி முகாமில் விட போகும்போது, காலையில் பின்களபணிக்கு ஆண்களை அனுப்பிவிட்டு (அன்றைக்கு இருந்த ஒரே வருவாய் தரும் தொழில்) வாசலில் காத்திருந்தார்கள் பெரும்பாலான பெண்கள். பின்களபணி மரம் தறித்தல், பதுங்குகுழி அமைத்தல், அரண் அமைத்தல் என்று வேறு வேறு பணிகள். எதிரியில் எல்லை கோட்டை வைத்து தான் சம்பளபட்டியல். எல்லைகோட்டில் இருந்து இருநூறு மீற்றருக்குள் ஒரு சம்பளம், இருநூறு மீற்றர் தொடக்கம் ஐநூறு மீற்றர் வரை ஒரு சம்பளம், அதற்கு அப்பால் ஒரு சம்பளம் என்று மாறிக்கொண்டே போகும். உங்களுக்கு புரியுதோ இல்லையோ உயிரின் விலை அது. ஆண்களுக்கும் வேற வழி இல்லை. புலம்பெயர் தொடர்பில்லாத மக்கள் தான் வன்னியில் பெரும்பாலானவர்கள். வயல்களையும் கடலையும் நம்பி வாழ்ந்தவர்கள். பிச்சை எடுத்து பழக்கமில்லாதவர்கள். தன்மானம் காப்பவர்கள்.உதவி நிறுவனங்கள் கூட அங்கெ இல்லை. உயிரை மூலதனமாக்கி உழைத்தார்கள். இது உங்களால் முடியுமா உறவுகளே.. இண்டைக்கு திரும்ப வந்து அம்மாவின், மனைவியின், குழந்தையின் முகத்தை பார்ப்போமா என்று கூட தெரியாமல் வேலைக்கு போக உங்களால் முடியுமா.? அவர்கள் போனார்கள், எல்லாம் கால் வயிற்று கஞ்சிக்காக. அவர்கள் வரும்வரை, அந்த பெண்கள், அம்மாக்கள், சகோதரிகள், மனைவிகள் வாசலில் காத்திருந்தார்கள். பசியால் அழுதுகொண்டிருந்த பிள்ளைகளுக்கு மாவை தண்ணியில் கரைத்து கொடுத்து கொண்டிருந்தார்கள். எங்களின் சீருடைகளையும் ஆயுதங்களையும் பார்த்து முகங்களில் புன்னைகை தவள விடை கொடுத்தார்கள்.மனசுக்குள்ளே எங்களுக்கான மதிப்பு இன்னும் இருக்கு என்று காட்டும் புன்னைகைகள் அவை. சேகர் அண்ணாவை, பயிற்சி முகாமில் இறக்கிவிட்டு விடைபெறும்போது, "ராணி திருத்தி முடிய தொடர்பெடு, நான் அல்பா 1 அலைபேசி எண்ணில் தான் நிற்பேன். மறந்து போய் விட்டுவிட்டு போயிடாதே" என்றார் சேகர் அண்ணா. இன்னும் சில கணங்களில் எந்த அலைவரிசையிலும் தொடர்பே எடுக்கமுடியாத இடத்துக்கு, எங்களையும் எங்கள் மக்களையும் தவிக்க விட்டு போக போவது தெரியாமல் ... (தொடரும்) பாகம் பதினொன்று இங்கே அழுத்துங்கள்
  2. தோழர் சுஜி மற்றும் தோழர் தம்பை சிவா ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  3. பாகம் ஒன்பது வாசலை தாண்டி வந்து விட்டோம். வீதியோரம் இருந்த ஈருளியை நிமிர்த்தி சூப்பி போத்தலுக்குள் இருந்த பெற்றோலை கொஞ்சம் குழாயினுள் ஊற்றி, வாயை வைத்து ஊதினார் ரமணன் அண்ணா. மிதியை இரண்டு மூன்று தடவை உதைத்தும் இயங்கவில்லை. மீண்டும் ஒருமுறை குழாயினுள் வாயை வைத்து ஊதினார். ஊ..ஊ..ஊ... கூவிக்கொண்டு வரும் சத்தம் மட்டும் தான் கேட்டது என்னை விழுந்து படுக்க சொல்லி உதைந்துவிட்டு, அப்படியே குனிந்துவிட்டார் ரமணன் அண்ணா. டொமம்ம்ம்ம் ...டொம்ம்மம்ம்மார்... எங்களுக்குக்கு மிக அருகிலேயே வெடித்தன. காதை செவிடாக்கும் சத்தங்கள். இரும்பு துண்டுகளும் பிளாஸ்டிக் துண்டுகளும் சிதறிப்பறந்தன. நாங்கள் போய்வந்த வீடுக்குள் இருந்து புகை மண்டலம் மேலெழுந்தது. அம்மா..யாரவது காப்பாத்துங்க...என்ற கூக்குரல் விட்டு விட்டு கேட்டு கொண்டிருந்தது. அந்த குரல் வந்த வீட்டை நோக்கி ஓடிய என்னை, பிடித்து இழுத்து மீண்டும் படுக்க சொன்னார் ரமணன் அண்ணா. அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை என்றாலும், ஒரு நிமிடதிலையே எனக்கு புரிந்துவிட்டது. ஆம்.. எங்கே காயபட்டவர்களை காப்பாத்த யாரும் வருவாங்களோ என்று, சிங்கள கொலைவெறி ராணுவம், மீண்டும் அதே இடத்துக்கு ஐந்துக்கும் மேற்பட்ட செல்களை ஏவினார்கள். மீண்டும் பெரும் இடிச்சத்தங்கள்.. கூக்குரல் அடங்கி முனகல்களாயின.. இரண்டு நிமிட இடைவேளைக்கு பிறகு நாங்கள் இருவரும் அந்த வீட்டை நோக்கி ஓடினோம். இரத்தமும் சதைகளும்..ஆடை துண்டுகளும்..கைகள் கால்கள் வேறு வேறாக..தலைமுடிகள் அங்கும் இங்குமாக சிதறி கிடந்தன. சற்று முன்னர் பார்த்த அந்த அழகான குடும்பம் அங்கெ இல்லை. ஐயா இருந்த பிளாஸ்டிக் கதிரை மட்டும் அல்ல..ஐயாவும் உருத்தெரியாமல் சிதறியிருந்தார். அவர் இருந்த இடத்தில் ஒரு கந்தக நெடியுடன் கருமையான குழி மட்டும் தான் இருந்தது. அவர்கள் சமைத்த குழம்புடன், அவர்களின் இரத்தமும் கலந்து அங்கெ வடிந்து ஓடிக்கொண்டிருந்தது. தம்பீ....மிகவும் மெல்லிதாக அந்த முனகல் கேட்டது. ஓடிப்போனேன்..மரங்களுக்கும் உடைந்த சீட்டுகளுக்கும் நடுவில் அந்த அம்மா.ஒரு கால் சிதறி போய் முழங்காலுக்கு கீழே ஒன்றுமில்லை. "தம்பி என்னை காப்பாத்துங்க.." மரங்களை தூக்கி அவவை வெளியிலே எடுத்தோம். நான் தூக்கி கொண்டு ஓடிவர, ரமணன் அண்ணா ஈருளியை கஷ்டபட்டு உதைத்து கொண்டிருந்தார். எங்கள் அவசரம் அதுக்கு கூட புரியாமல் இருந்தது. அம்மாவின் கால்களில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. என் மேலங்கியை கழட்டி அதை சுத்தி கட்டினேன். அதற்கிடையில் புகையை கக்கியபடி ஈருளி இயங்க தொடங்கியது. அந்த அம்மாவை நடுவிலே கிடத்தி நான் பின்னால் அமர்ந்தவாறு அவவை விழுந்து விடாமல் பிடிக்க, ரமணன் அண்ணா அந்த மழையால் சேறாகி வழுக்கும் வீதியில் தான்னால் இயன்ற அளவுக்கு வேகமாக ஓடினார். ஈருளியும் எங்கள் அவசரத்தை புரிந்து கொண்டதாக தெரியவில்லை. குளத்தடியால் சுத்திவாறது என்றால் அதிக நேரம் எடுக்கும் என்று, ஒரு குறுக்கு வழியால் வந்தோம். அங்கேயும் எங்களுக்கு விதி காத்திருந்தது. வெள்ளம் இருந்த அந்த பள்ளத்தில், வேகமாக வந்த நாங்கள் தாண்டிடலாம் என்று நினைத்த போது, ஈருளி சறுக்கி நான், அந்த அம்மா, ரமணன் அண்ணா மூவருமே வெள்ளத்தில் விழுந்தோம். எழும்பிய ரமணன் அண்ணா, ஈருளியை உதைத்து இயங்க வைக்க முயன்று கொண்டிருந்தார். அம்மாவின் கால்களில் இருந்து குருதி வெள்ளத்துடன் கலந்து கொண்டிருந்தது. எனக்கோ என்ன செய்வது என்றே தோன்றவில்லை. என்னை பெத்த அம்மாவே என் கைகளில் இருபதாகவே உணர்ந்தேன். அண்ணே ..நீங்கள் இயக்கி கொண்டு வாருங்கள் நான் கொண்டு ஓடுறேன் என்று அம்மாவை தூக்கி கொண்டு, என்னால் இயன்றவரை ஓடினேன். தம்பி என்னை எப்படியும் காப்பாத்துப்பா..எனக்கு ரொம்ப வலிக்குதுப்பா ..என்று முனகி கொண்டிருந்தார். என்னுடைய அம்மாவே என்னை பார்த்து கெஞ்சுவது மாதிரியே இருந்தது. அம்மா ஒண்டுக்கும் யோசிகாதீங்கள். உங்கள் மகன் நான் இருக்கிறேன் உங்களை எப்படியும் காப்பாத்துவேன். என்னால் இந்த வாய் ஆறுதலை தவிர எதையுமே செய்ய கூடிய நிலையில் நான் இல்லை. ஓடினேன் ..ஓடினேன்..என்னால் முடியும் வரை ஓடினேன் ..யாரையும் கூட அந்த தெருவிலே காணவில்லை. ஒரு இருநூறு மீற்றர் ஓடி இருப்பேன். இப்போ முனகல் சத்தம் கேட்கவில்லை. அந்த தெருவிலே அப்படியே உட்கார்ந்து, அந்த அம்மாவை என் மடியிலே கிடத்தி, மூச்சுக்கு பக்கத்தில் கையை வைச்சு பார்த்தேன். எதுவுமே இல்லை. கையை பிடித்து பார்த்தேன் நாடித்துடிப்பும் இல்லை. கத்தி அழவேணும் போல இருந்திச்சு. அம்மா.. அம்மா.. என்று வாய் ஓயாமல் கூப்பிடும் எனக்கு கூட, சொல்லாமல் செத்து போனாவே, என்று கத்தி அழணும் போல இருந்திச்சு.. கொஞ்ச நேரத்துக்கு முதல் "தம்பி, தேடிப்பாருங்கள் நிச்சயமா கிடைப்பா. அப்படி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நானும் உன் அம்மா மாதிரி தான்.. போகும் போது வாருங்கள் சமைச்சு வைக்கிறேன் " என்று சொன்ன அம்மா, இப்போ உயிரோட இல்லை. என்னை பெத்த அம்மாவின் கையால் சாப்பிடும் பாக்கியம் தான் எனக்கு இல்லை என்றால், இந்த அம்மா கையால் கூட சாப்பிடாமல் பண்ணிய விதியை என்ன செய்வது. என் கோபம் எல்லாம் அந்த சிங்கள இன வெறியன் மேல் திரும்பியது. இந்த அம்மா அவனுக்கு என்ன பாவம் பண்ணினா ..? சொல்லுங்கள் உறவுகளே..எதுக்காக எங்களுக்கு மட்டும் இந்த நிலை.இந்த கட்டத்தில் நான் என்ன முடிவு எடுக்க வேண்டும். சொல்லுங்கள் வாய் விட்டு சொல்லுங்கள். இந்த நிலையில் நீங்கள் இருந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள். அதை தான் நானும் எடுத்தேன். இது தப்பா ..?? நான் செய்கிறது தவறா ..?? என்னையும் கொச்சை படுத்தி தான் பேச போறீங்களா..?? எனக்கும் வாழ தெரியாது..யதார்த்தம் புரியாது என்று தான் பேச போறீங்களா ..?? பேசுங்கள் ..நன்றாக பேசுங்கள் ..எனக்கு எந்த கவலையுமே இல்லை. ஒரு மனுசனா ஒருத்தனுக்கு என்ன கோபம் வருமோ அது தான் எனக்கும் வருகிறது. ஒரு மகனாக அந்த அம்மாவுக்கு என்ன செய்யணுமோ அதை தான் நான் செய்ய போறேன். ரமணன் அண்ணா, வேகமாக ஓடிவந்தார் ஈருளியுடன். ராணி ஏறுடா, அந்த அம்மாவை தூக்குடா என்று கத்தினார். இல்லை அண்ணா, அம்மா செத்துட்டா.. நாங்கள் போவம் அண்ணா. இனி எனக்கு என்னுடைய அம்மாவும் வேண்டாம். சண்டையை முடிச்சு, எதிரியை எங்கட எல்லையில் இருந்து கலைச்சிட்டு வந்து பார்கிறேன். இது தான் நான் இந்த அம்மாவுக்கு செய்யும் கடன் அண்ணா. இந்த அம்மாவின் கதி இனி எந்த அம்மாவுக்கும் வரகூடாது அண்ணா..கடைசி மட்டும் வாழவேண்டும் என்று எவ்வளவு ஆசைப்பட்டா அண்ணா . கண்கள் கலங்கின. நாங்கள் போவம் அண்ணா .. தூரத்தில் புள்ளியாக நம் அம்மாவின் உடல்.. நடுத்தெருவில் அனாதையாக .... (தொடரும்) பாகம் பத்து இங்கே அழுத்துங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.