Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    34974
    Posts
  2. அபிராம்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    4
    Points
    173
    Posts
  3. nedukkalapoovan

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    33035
    Posts
  4. ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    7401
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/24/11 in all areas

  1. பாகம் இருபது மே மாதம் பதினைந்தாம் திகதி .... இரவு ஏழு மணியை தாண்டி இருந்தது.... எங்கும் மரண ஓலங்களும் செல் விழுந்து வெடிக்கும் சத்தங்களும்.. தெருவோரம் எங்கும் உடலில் இருந்து நீர்வடியும் பிணங்கள்.... இறந்து இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்.... அந்த இடமெங்கும் புகை மூட்டமும் சாவின் மணமும் தான். உயிரோடு இருந்த மக்கள் கூட பிணமாக தான் நடமாடினார்கள். எங்கே போவது என்று கூட தெரியாமல் வட்டுவாகல் பக்கம் ஒரு கூட்டமும் நந்திக்கடல் பக்கம் ஒரு கூட்டமுமாக மாறி மாறி ஓடினார்கள்.. தங்கள் பாச உறவுகளை தொலைத்துவிட்டு அந்த இடமெங்கும் பெயர் சொல்லி கத்தி கத்தி அலைந்தார்கள்... அந்த இடத்தில் அந்த கணத்தில் இருந்த எந்த ஒரு மனுசனும் நூறு முறை செத்த அனுபவத்தை கொண்டிருப்பார்கள் .. அவர்களின் மனசை உலகத்தில் இருக்கும் எந்த மனோதத்துவ வைத்தியனாலும் ஆறுதல் படுத்த முடியாது.. அந்த தெருவோரத்தில் நாய் ஒன்று ஒரு பிணத்தின் (தமிழனின்) குடல்களை தின்று கொண்டிருந்தது.. அதை பார்த்தும் உணர்வற்று மக்கள் அந்த நாயை கூட துரத்தாமல் ஓடி கொண்டிருந்தார்கள்.. எங்களுக்கு தான் உணவே இல்லை அந்த நாயாவது சாபிட்டு பசியாறட்டும் என்று நினைத்தார்களோ தெரியவில்லை .. அதை கூட காண சகிக்காமல் ஒரு முதியவர் தனது ஊன்று தடியால் அந்த நாயை துரத்தினார்..அது நாளைக்கு தேவையான குடல்களையும் கவ்வி கொண்டு ஓடியது.. இன்னுமொரு நாய் யாரோ ஒரு இறந்த குழந்தையின் கையை வாயில் கவ்வியபடி மக்களை போலவே அந்த தெருவெங்கும் அலைந்தது.. அந்த முல்லை - பரந்தன் சாலையில் தெருவோரம் அடையாளம் காணபட்ட பிணங்களை சுற்றி உற்றவர்கள் அழுது கொண்டிருந்தார்கள்.. அவர்களால் கூட ஒப்பாரி வைத்து அழ முடியவில்லை .. பசியினால் அவர்களின் வயிறு மட்டுமல்ல நாக்கும் வறண்டு போய் இருந்தது .. கத்தி கத்தி வறண்டு போன தங்கள் தொண்டையை ஈரபடுத்த தண்ணீர் கூட இல்லாமல் ..ஒரு கிடங்கில் தேங்கி இருந்த நீரும் குருதியும் கலந்த அந்த செந்நீரை பருகிவிட்டு மீண்டும் ஓலமிட்டு கத்தினார்கள்.. நாளை சர்வதேச செஞ்சிலுவை சங்கமூடாக இராணுவ கட்டுபாட்டு பகுதிக்கு அனுப்பி வைப்பதற்காக காயமடைந்த போராளிகளை தூக்கி கொண்டு வந்து அந்த சாலையோரமாக கிடத்தினார்கள் ஏனைய போராளிகள்.. வட்டுவாகல் முன் காவலரணில் இருந்து ஒற்றை பனையடி வரை ஆண் பெண் பேதமின்றி காயமடைந்த போராளிகள் சாலையோரத்தில் வரிசையாக காவலிருந்தார்கள் நாளைய நாளுக்காக.. அவர்களுக்கு ராணுவ கட்டுபாட்டு பகுதிக்கு போக விருப்பம் இல்லை என்றாலும் தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு தங்கள் உடல் மற்றும் மன வேதனையோடு காத்திருந்தார்கள்.. மக்கள் சிலர் அவர்களை பார்த்து தூற்றி கொண்டும் , காறி துப்பியும் , சிலர் மனசுக்குள் வேதனை பட்டும், சிலர் விடுப்பு அறியவும், சிலர் அவர்களுக்கு நடுவே தங்கள் உறவுகள் இருக்கிறார்களா என்று அறியவும் அந்த போராளிகளை ஒரு வினோத பிராணிகளாக சுற்றி சுற்றி வந்தார்கள்.. அந்த போராளிகள் ஏற்கனவே மனசளவில் இறந்து போய் இருந்தாலும், இந்த மக்களை இப்படி விட்டுவிட்டு போகிறோமே என்ற எண்ணம், அவர்களை அப்பவும் கொன்று கொண்டிருந்ததை இந்த மக்கள் அறிய வாய்ப்பு இல்லை.. ராணியம்மாவும், சுபாவும் அந்த காயமடைந்த போராளிகள் மத்தியின் தன் மகன்/அண்ணா இருப்பானோ என்ற நப்பாசையில் தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். மாலையில் கேட்ட அந்த மிக பெரும் வெடி சத்தத்தை தொடர்ந்து பல மணி நேரமாக வடக்கு பக்கத்தில் எந்த மோதலும் இடம் பெறவில்லை.. பெடியள் சக்கை விட்டு அடிச்சிருகிறாங்கள் என்று தெருவோரத்தில் மக்கள் பேசியதை கேட்ட ராணியம்மா ..."யார் பெத்த பிள்ளையோ ..அந்த மகராசி நல்லா இருக்கனும் " என்று மனசுக்குள் வேண்டி கொண்டாள்.. அது தான் பெற்ற பிள்ளை என்று கூட தெரியாமல் .. நேசன் ..நேசன் ...நேசன் அண்ணா ... ராணிமைந்தன் ..ராணி அண்ணா .. என்று எந்த பெயரை சொல்லி தேடுவது என்று தெரியாமல் தாயும் மகளும் மாறி மாறி பெயர்களை உச்சரித்து தேடினார்கள் ..அழுதார்கள் ..அந்த இரவில் இராணுவம் ஏவிய பரா வெளிச்சத்தில் மகனின்/அண்ணனின் முகத்தை ஒத்திருந்த அனைவரின் பின்னாலும் ஓடி ஓடி போய் பார்த்தார்கள் .. அண்ணா என்று கூப்பிட்டு வேறு யாரோ என்று ஏமாற்றத்துடன் அலைந்தார்கள் .. சொல்லுங்கள் உறவுகளே ..இவர்களை பெற்ற மண்ணை நாங்கள் ஒரு முறையாவது தொட்டு கும்பிட வேண்டாமா .. அந்த மண் எதிரியிடம் நாசமடைவதை பார்த்து கொண்டு சும்மா தான் இருக்க போறீங்களா ..? அந்த காயமடைந்த போராளிகளில் ஒருவன் ..இவர்களின் தவிப்பை பார்த்து விட்டு சொன்னான் .. "அம்மா ஒரு அணி ..நந்தி கடல் கரையை நோக்கி நகர்கிறது ..அதில் சில வேளைகளில் உங்கள் மகன் இருக்கலாம் ..போய் பாருங்கள் அம்மா ".. அவனின் கைகளை கண்ணில் ஒற்றி கொண்ட ராணியம்மா ..மகள் சுபாவையும் கூட்டி கொண்டு ..வேகமாக நந்தி கடல் கரையை நோக்கி நடந்தாள்.. வழியில் தனது கணவனையும் மகள் மதியையும் ..ஒரு மரத்தடியை அடையாளமாக சொல்லி அங்கெ காத்திருக்கும் படி கூறிவிட்டு , சுபாவுடன் வேக வேகமாக நடந்தாள்.. இல்லை இல்லை ஓடினாள்... புலிகளின் பாரிய அணி ஒன்று நகர்வினை தொடங்கி இருந்தது ..அவர்கள் அமைதியாக வரிசையாக நந்தி கடல் முள்ளிவாய்க்கால் கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள்.. சிவப்பு கீலங்களாக வரும் சன்னகளை பார்த்தும் பயபடாதவர்களாக நேரிய வரிசையில் முதுகிலே சுமைகளுடன் விடுதலைக்காக தங்கள் உயிரை கொடுக்க நிதானமாக நடந்து கொண்டிருந்தார்கள்.. பரா வெளிச்சமடிக்கும் போது வேவு விமானத்தின் கண்ணில் படகூடாது என்று அவர்களின் அணித்தலைவர் மாறி மாறி கத்தி கொண்டிருக்க, வெளிச்சத்தை பார்த்ததும் அந்த சேற்று மண்ணில் விழுந்து படுத்து, வெளிச்சம் ஓய்ந்ததும் எழுந்து நடந்தார்கள் .. அவர்களுக்கு நடுவே ராணியம்மாவும் சுபாவும் அண்ணா ..அண்ணா ..என்று கத்தி கொண்டு அலைந்தார்கள் ..இவர்கள் மட்டும் அல்ல.. அங்கே மகனை, தம்பியை, தங்கையை , கணவனை தொலைத்தவர்கள் என்று நிறைய பேர் ..அவர்களின் உறவுகள் பெயர் கூறி அழைத்து அழுதபடியே அலைந்தார்கள்.. வரிசையில் சென்ற போராளிகள் இறுகிய முகங்களுடன் யாருக்குமே பதிலளிக்காமல் தங்கள் பாதையில் நடந்து கொண்டிருந்தார்கள். மூத்த காயமடைந்த தளபதிகளை ஒரு கைதாங்கியில் சுமந்து கொண்டும் சென்றார்கள். அனைவரும் அமைதியாக நந்திக்கடல் கரையில் அந்த சேற்று நிலத்தில் ஆயுதங்களை அருகில் வைத்துவிட்டு சரியான நேரத்துக்காக காத்திருந்தார்கள்.. எதிரின் பக்கத்தில் ..திருவிழாவுக்கு போட்ட மாதிரி கரை முழுக்க வெளிச்சம் பாய்ச்சியபடி டியுப் லைட்டுகள் மின்னி கொண்டிருந்தன. கறுப்பு உடை அணிந்த ஆண்கள் பெண்கள் கலந்த சில போராளிகள் முதுகிலே வெடிமருந்துகளை சுமந்தபடி , மெதுவாக கரையை தாலாட்டிய நந்தி கடலைன்னையினுள் இறங்கி எதிரின் திசையை நோக்கி நகர தொடங்கினார்கள்.. கரும்புலிகள் இறங்கிட்டான்கள் கொஞ்ச நேரத்திலே பெரிய சண்டை நடக்க போகுது என்று சனம் அந்த இடத்தை விட்டு வேகமாக நகரதொடங்கினார்கள்.. மகனை தேடியபடி அலைந்த ராணியம்மவையும்.." அங்காலே போகாதீங்க..இவங்கள் அடிக்க தொடங்க அவன் கட்டாயம் செல்லடிச்சே கொன்று போடுவான் ..இஞ்சாலே வாங்கோ " என்று ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி ராணியம்மாவின் கையை பிடித்து இழுத்தபடி நகர்ந்தார்.. அந்த இடத்தை விட்டு நகர மனசில்லாமல் ..திரும்பி திரும்பி பார்த்தபடியே ராணியம்மா அந்த இழுத்த இழுப்புடன் நகர்ந்தார் அந்த மூதாட்டியுடன்.. தூரத்தில் புள்ளிகளாக கையசைத்தபடி அந்த கரும்புலிகள்... கழுத்தளவு தண்ணீரில் கரைந்தார்கள் .. (தொடரும்) பாகம் இருபத்தொன்று இங்கே அழுத்துங்கள்
  2. பாகம் பத்தொன்பது எனக்காக காத்திருந்த சக்கை நிரம்பிய CBZ ஈருளியில் இல் ஏறி கொண்டேன். எனக்காக கொடுக்கபடிருந்த வெடிகுண்டு அங்கியை (ஜாக்கெட்) அணிந்து கொண்டேன். அதை அணியும் போது, சிறுவயதில் பள்ளிக்கூடம் போகாது அடம்பிடிக்கும்போது அம்மா கட்டாயபடுத்தி அணிவிக்கும் பாடசாலை சீருடை தான் ஞாபகத்துக்கு வந்தது. புத்தக பையை தூக்கி கொண்டு ஓடும்போது வாசல் வரை கலைத்து கலைத்து சோறு ஊட்டும் அன்னை தான் என் கண்ணுக்குளே. எழிவண்ணன் ரி-56 ரக தானியங்கி துப்பாக்கியுடனும், அதற்கான மேலதிக ரவைகூடுகளுடனும், என் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான். கனிவாளன் ஒரு ஏகே எல்எம்ஜி யுடன் புறபட்டு சென்றுவிட்டான். வாசல்வரை வந்திருந்த அந்த மூத்த தலைவனையும், என்னை இயக்க போகும் தளபதி அன்பு மாஸ்டரையும், இறுகிய முகங்களோடு விடைகொடுக்க வந்திருந்த என் தோழர்களையும் இறுதியாக ஒரு முறை பார்த்து தலையசைத்து விடைபெற்று கொண்டேன். இறுதியாக பேச வேண்டும் என்று எவ்வளவோ வார்த்தைகள், இருந்தும் எதுவுமே பேச முடியவில்லை. கண்களால் மட்டுமே பேசி கொண்டு விடைபெற்றேன். என் வாழ்நாளில் ஒரு நாளாவது ஓடி பார்த்துவிட வேண்டும் என்று நினைத்த CBZ , இப்போ என் இறுதி வாகனமாக.ஒரு உதையிலேயே இயக்கத்தை தொடங்கியது. "அல்பா கிலோ அல்பா கிலோ ...அல்பா ரோமியோ.." "அல்பா கிலோ அல்பா கிலோ ...அல்பா ரோமியோ.." "சொல்லுங்க அல்பா ரோமியோ " "கிபிர் வெளிகிட்டுது.." "விளங்கிட்டுது .." அகிலன், அன்பு மாஸ்டரின் கட்டளைக்கிணங்க, வெடிப்பினால் ஏற்படபோகும் பாதிப்பில் இருந்து தன் அணியினை காப்பாற்ற தன் அணியினை கொஞ்சம் பின்னுக்கு நகர்த்தினான். கனிவாளன் ஒரு வீட்டின் கூரை மேலே நிலையெடுத்து, இறுதி தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்தான். எழில் என் பின்னாலே எழுந்து நின்று தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்தான். அலைபேசி அழைத்தது.. "ரோமியோ அல்பா ..ரோமியோ அல்பா ...அல்பா ரோமியோ " "சொல்லுங்க அல்பா ரோமியோ.." "எல்லாம் நல்லபடியா போகுதா .."" "அந்த மாதிரி போகுது அண்ணே .." "சரி தொடர்பிலே இருந்து கொள் " "நன்றி அண்ணே .." அலைபேசியை அணைத்துவிட்டு, எரிந்து கொண்டிருந்த வாகனங்களுக்கு நடுவிலே வளைத்து வளைத்து என் ஆசை CBZ ஐ ஓடி கொண்டிருந்தேன். ஒழுங்கையாலே வந்து இப்போ முல்லை பரந்தன் நெடுஞ்சாலையில் ஏற்றிவிட்டேன். இனி எதிரியின் நேரடி எதிர் தாக்குதலுக்கு முகம் கொடுக்க வேண்டும். என்னுள் ஆயிரம் எண்ணங்கள்..என் வாழ் நாளிலே நான் செய்த பிழைகள் எல்லாம் என் கண் முன்னே தோன்றி மறைந்தன. அவர்களிடம் எல்லாம் மானசீகமாக மன்னிப்பு கேட்டு கொண்டேன். எத்தனையோ பேருடைய முகங்கள் மாறி மாறி வந்தன. அம்மா அப்பா தங்கைகள், சேகர் அண்ணா , என் மடியில் உயிர் துறந்த அம்மா , தங்கை , கலையரசி ..இப்படி சொல்லி கொண்டே போகலாம். எனக்குள் இருந்த ஆசைகளை எல்லாம் கொன்று புதைத்தேன். எங்கள் நாடு விடுதலை அடைய வேண்டும் என்று மட்டும் மனசுக்குள் உறுதியாக நினைத்தேன். எப்படியாவது சொன்ன இலக்கை அழித்திட வேண்டும் என்று திரும்ப திரும்ப வாயிலே முணுமுணுத்தேன். இறுதி நேரத்தில் கூட என் மனம் மாற கூடாது என்று கடவுளை வேண்டினேன். அன்பான உறவுகளே ... இது தான் நான் உங்க கூட பேசும் கடைசி சந்தர்ப்பம்.. உண்மையில் எனக்கே என்ன பேசுறது என்று தெரியவில்லை.. நிறைய பேசணும் போல இருக்கு..ஆனால் பேச முடியவில்லை.. என் பாசங்களே ..நீங்கள் என் உணர்வுகளை நிச்சயமாக புரிந்து கொள்ளுவீங்கள்..நாங்கள் சாகோணும் என்று பிறக்கவில்லை..ஆசைகள் இல்லாமலும் சாகவில்லை..இது ஒரு உணர்வு ..உங்கள் மீது நாங்கள் கொண்ட பாசத்தின் வெளிப்பாடு ..உங்களை நாங்கள் எங்களை விட ஆழமாக நேசிக்கிறோம். அன்புள்ளங்களே ... எங்கள் மண்ணை நேசியுங்கள்.. எங்கள் விடுதலை மீது நம்பிக்கை வையுங்கள் ..எங்கள் தலைவன் மீதும் தளபதிகள் மீதும் பற்று வையுங்கள்..அவர்கள் நிச்சயமாக தங்கள் உயிரை கொடுத்தாவது உங்களுக்கு விடுதலை பெற்று தருவார்கள். நிச்சயம் எங்களுக்கு நாடு கிடைக்கும்.. நீங்கள் தொடர்ந்து அதற்காக தோள் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தான் நான் சாகிறேன். உறவுகளே .... எனக்கு என் அம்மாவை பார்க்கணும் போல இருக்கு.. எனக்கும் உணர்ச்சி இருக்கு.. எனக்கும் பாசம் இருக்கு ..அழுகை தான் வருகுது .. பயம் இல்லை ..பாசம் .. உறவுகளே ..எங்க அம்மா...எங்க அம்மா மட்டும் இல்ல ..என்னமாதிரி இங்கே எத்தனையோ போராளிகள் .... அவங்க அம்மா குடும்பங்கள் எல்லாவற்றையும் உங்கள் கைகளில் ஒப்படைக்கிறேன். தயவு செய்து கும்பிட்டு கேட்கிறேன் அவங்களை கொஞ்சம் பார்பீங்களா ..?? கொஞ்சம் பொறுங்கள் உறவுகளே அலைபேசி அழைக்குது .. "ரோமியோ அல்பா ..அங்காலே கிலோ அல்பா ..தடைகளை உடைச்சிட்டான் ..நீங்கள் போகலாம் " "நன்றி அல்பா ரோமியோ " சரி உறவுகளே நேரமாகிவிட்டது.. அடுத்த பிறப்பு ஒன்று இருந்தால் அதுவும் இந்த இனத்திலேயே எங்க அம்மா வயிற்றேலேயே பிறந்து உங்களுக்காகவே போராடி சாகனும் .. நான் போயிற்று வாறன் ..மன்னிக்கவும் போறேன் ... நாங்கள் சாவதும் இல்லை வாழ்வதும் இல்லை. என் பின்னல் இருந்து சுட்டு கொண்டிருந்த எழில்வண்ணன், என்னை தழுவி கொஞ்சிவிட்டு பாய்ந்து கொண்டான். எதிரி என்னை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினான்.. சிலர் என்னை கண்டு ஓட தொடங்கினார்கள். நான் எண்ணெய் தாங்கியுடன் என் உடலை அணைத்தவாறே வேகமாக ஓடினேன். கட்டளை மையம் என் கண்ணில் தெரிந்தது. என் சட்டை பையினுள் இருந்த அம்மாவுக்கான நாளேட்டை ஒரு முறை தடவி பார்த்து கொண்டேன். என் வாய் என்னை அறியாமலே அம்மா.. என்று முணுமுணுத்தது.. தொடர்பினை அமுக்கி .. "அல்பா ரோமியோ ..நான் கிட்டே வந்திட்டேன்.."" "ரோமியோ அல்பா.. வேற ஏதும் சொல்ல இருக்கா ..சாமியும் இருக்கிறார் " "இல்லை அண்ணே ..நான் இண்டைக்கு தான் என் வாழ்க்கையிலே எழுச்சியா இருக்கிறேன்.. இனி எல்லாமே எழுச்சி தான் அண்ணே ..காதை கொடுத்து வடிவா கேளுங்கோ ..எழுச்சி தெரியும் அண்ணே.. எங்களுக்கு தான் வெற்றி அண்ணே ..புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் " பட்டோம்ம்மம்ம்ம்ம்ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் ..... அந்த முள்ளிவாய்க்கால் மண்ணே அதிர்ந்தது.. கனிவாளன் தொடர்பெடுத்தான்.. "அல்பா ரோமியோ ...கிபிர் வெடிச்சிட்டுது..அவன்ட மையத்துக்குள்ளே போய் நடுவிலே தான் வெடிச்சான் அண்ணே .." "அந்த இடமே சக்கையா போச்சு அண்ணே .." "ரோமியோ அல்பா வீரச்சாவு அண்ணே .." அலைபேசியை அணைத்து விட்டு கண்ணீருடன் திரும்பிய அன்பு மாஸ்டரிடம், அந்த மூத்த தலைவர் சொன்னார் .. "ராணி.... அவன் ஒரு மாவீரன் தான்..." (தொடரும்) பாகம் இருபது இங்கே அழுத்துங்கள்
  3. பாகம் பதினெட்டு எல்லோருடைய கண்களும் அவனை நோக்கியே இருந்தது. ராணி உறுதியோடு நிமிர்ந்தே நின்றான். அவன் முகத்தில் எந்தவித கலக்கமோ, குழப்பமோ இல்லாமல் தெளிவாக நின்றான். தான் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் முழுசாக தெரிந்தவனாக இருந்தான். நேற்று இரவு கூட, உணவுகளை பொதி கட்டும் போது, சந்தோசமாக பேசி கொண்டிருந்தவன்.. " மச்சான் இந்திய இராணுவ காலபகுதியில் நாங்கள் சின்ன பிள்ளைகள், தலைவர் காட்டுக்குள்ளே இருக்கும்போது நாங்கள் அவரின் பக்கத்தில் இல்லை. இப்போ எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு. எங்கட மக்களின் போராட்டத்தை கொண்டு நடத்தும் தலையாய பொறுப்பு எங்களுக்கு கிடைச்சிருக்கு. " " நான் என் வாழ்நாளிலையே பார்க்காத தலைவர் கூட சாப்பிட்டு படுத்துறங்கி அவரை பாதுகாக்கும் கடமை கிடைக்க நான் என்ன தவம் செய்தேன் " என்று திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்த ராணிமைந்தன், கரும்புலியாக தான் போகிறேன் என்றால் யாருக்கு தான் ஆச்சரியமாக இருக்காது. " ராணி இது உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிற முடிவுகள் இல்லை. இதற்கு நிறைய உறுதி வேணும். பயிற்சி வேணும். திடீர் என்று முடிவெடுத்து இலக்கை துல்லியமாக தாக்க முடியாது..." அந்த மூத்த தலைவர் சொல்லி முடிக்க முதலே .. "இல்லை அண்ணே ..நான் செய்வேன் ..என்னை நம்புங்க.. உங்கள் மேல் ஆணையாக ..இந்த தாய் மண் மீது ஆணையாக நீங்கள் சொல்லுற இலக்கை தாக்கி அழிப்பேன்" மிகவும் உறுதியாக அவன் வாயிலிருந்து வசனங்கள் வெளிப்பட்டன. "அப்படி இல்லை ராணி.. உன்னிலே எனக்கு நம்பிக்கை இருக்கு...ஆனால் இது வழக்கமான தாக்குதல் பாணி இல்லை ..ஒரே ஒரு முறை தான் தாக்கலாம். அதுவும் இலக்கை சரியாக தாக்கவேணும். பிழைச்சுதோ அவன் சுதாரிச்சிடுவான். அப்புறம் நாங்கள் தாக்கவே முடியாது. நிறைய பயிற்சி தேவை ..தலைவர் சம்பந்தபட்ட விடயம் வேற..அது தான் யோசிக்கிறேன்.." "அண்ணே ..நேரம் போகுது அண்ணே ..என்னை நம்புங்க அண்ணே ..நான் நிச்சயமா வெற்றிகரமாக முடிப்பேன்".. வேறுவழி இல்லாமலும். ராணியின் உறுதியின் பேரிலும் இரண்டுமனசுடன் அந்த மூத்த தலைவர் அந்த தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்தார். ராணியின் முகத்தில் என்றுமில்லாத மகிழ்ச்சி. அதன் வெளிபாடோ என்னவோ ஒப்புதல் கிடைத்தவுடனேயே அந்த மூத்த தலைவருக்கு ராணுவ வணக்கம் செலுத்தினான். சொல்லுங்கள் உறவுகளே ..இவர்கள் பிறந்த இனத்தில் தானே நாங்களும் பிறந்தோம். இவர்களுக்கு இருக்கும் உறுதியும் வேட்கையும் எங்களுக்கும் இருக்கத்தானே வேணும் .. நேற்றுவரை தலைவருடன் வாழணும் என்று நினைத்த ஒருவனால்.. தன் அம்மாவுக்கும், அப்பாவுக்கும், தங்கைகளுக்கும் நாள் தவறாமல் நாட்குறிப்பு எழுதி வந்த ஒருவனால்.. தன் வாழ்நாளில் பொறியிலாலராக வரவேண்டும் என்று இலட்சியத்துடன் வாழ்ந்த ஒருவனால்.. இன்று தன்னுயிரையே உவந்து அளிக்கும் வல்லமையை யார் கொடுத்தது.. சொல்லுங்கள் உறவுகளே.. நாங்கள் பிறந்த அதே மண்ணில் தானே இவர்களும் பிறந்தார்கள்... நாங்கள் விளையாடிய அதே தெருக்களில் தானே இவர்களும் விளையாடினார்கள்.. நாங்கள் கும்பிட்ட அதே கடவுளை தானே இவர்களும் கும்பிட்டார்கள்.. நாங்கள் படிச்ச அதே பள்ளிகூடத்தில் தானே இவர்களும் படிச்சார்கள்.. இவர்களுக்கு மட்டும் எப்படி இந்த உணர்வுகள் வந்தது.. இவர்களுக்கு மட்டும் ஏன் தங்கள் உயிரை சொன்ன நேரத்தில் மக்களுக்காக கொடுக்கும் வல்லமை வந்தது.. நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் .. இவர்களா பிழைக்க தெரியாதவர்கள்.. இவர்களா யதார்த்தம் தெரியாதவர்கள் .. இவர்களா சுழிக்க தெரியாதவர்கள் .. இவர்களா இரக்கமற்றவர்கள் ... அந்த எதிரியின் முன்னணி கட்டளை மையம் தான் ராணியின் இலக்கு. அன்பு மாஸ்டர் ராணிக்கு திட்டத்தை விளங்கபடுத்தி கொண்டிருந்தார். "இங்கே பார் ராணி ..அவன் அந்த கட்டளை மையத்தை சுற்றி கடும் பாதுகாப்பு போட்டிருப்பான். நீ எப்படி என்றாலும் சக்கையை அந்த மையத்திலே இருந்து ஒரு முப்பது மீற்றருக்குள் வெடிக்கவை..மிச்சத்தை நாங்கள் பார்க்கிறோம். என்ன பாடு பட்டாலும் முப்பது மீற்றருக்குள்ளே போயிடு..அதில் தான் எங்கட தாக்குதல் வெற்றி தங்கி இருக்கு." "உனக்கு இலக்கை அடையும் வரை காப்புச்சூடு வழங்க கனிவாளனும், எழில்வண்ணனும் வருவார்கள். அவர்கள் உனக்கான தடைகளை உடைத்து தருவார்கள்." "சரி அண்ணே " "ராணி ..உன்னில் தான் எல்லாம் இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்திலே இங்கே தலைவர் வருவார். அவர் இங்கே வாறதும் ..எங்கட அடுத்த திட்டத்தின்ட வெற்றியும் உண்ட கையிலே தான் இருக்கு.."" "எனக்கு விளங்குது அண்ணே...." "சரி வெளியிலே சக்கை நிக்குது போய்ட்டுவா ..தொடர்பிலே பேசுவோம்.." "சரி அண்ணே.." மூத்த தலைவரிடம் வந்த ராணி அவரை ஆரத்தழுவினான். கண்கள் கலங்க.. அண்ணே .. எனக்கு பயத்தாலே கண்கலங்கவில்லை அண்ணே .. இன்னும் பத்து நிமிஷம் நின்றால் நான் வாழ்நாளிலே காணாத என் தலைவனை காணலாம் அந்த பாக்கியம் கூட என்னக்கு இல்லையே என்று தான் அண்ணே.. கண் கலங்குது. என்னை இப்படி வழிநடத்தின உங்களை எல்லாம் இனிமேல் பார்க்க முடியாது என்று தான் அண்ணே கண் கலங்குது.. அண்ணே எப்படியாவது தலைவரை பாதுகாப்பாக கொண்டுபோய் சேருங்கள் அண்ணே .. அண்ணே நீங்களும் தலைவரும் தமிழீழம் கிடைக்கும்வரை உயிரோட இருக்கணும் அண்ணே ..அது தான் அண்ணே என்னுடைய கடைசி ஆசை.. நன்றி வணக்கம் அண்ணே.... சொன்ன ராணி திரும்பி கூட பார்க்காமல் புறப்பட்டு தனக்கு காப்புச்சூடு வழங்கபோகும் தோழர்களிடம் வந்தான். தனது பழ ரின்னையும், இறைச்சி துண்டுகள் ரின்னையும் உடைத்து அவர்களிடம் நீட்டினான்.. சாப்பிடுங்க மச்சான் சண்டை பிடிக்க தெம்பு வேணும்.. அவர்கள் இவனுக்கு ஊட்ட வெளிக்கிட ..இல்லை மச்சான் இன்னும் பத்து நிமிசத்திலே சாகபோற எனக்கு, என் வயிற்றுக்கு எதுக்கு மச்சான் சாப்பாடு..நீங்களே சாப்பிடுங்க மச்சான்.. அப்போ தான் தெம்பா சண்டை பிடிக்கலாம்.. நீங்கள் உடைச்சு கொடுத்தால் தான் நான் கடைசி மட்டும் போகலாம் ..சாப்பிடுங்க என்று ஊட்டி விட்டான் ராணி .. அந்த காட்சியை பார்த்தவர்கள் மனசு இறுகுவதை ஆண்டவனாலும் தடுக்க முடியாது.. தற்கொலை செய்யபோறவர்கள் கூட கடைசி ஆசைக்கு விரும்பினதை சாப்பிடுவார்கள் ...மக்களுக்காக வெடிக்க போகும் அவன் பசிக்கு கூட சாப்பிடாமல் தோழர்களுக்கு கொடுத்துவிட்டு சென்றான்.. ராணிக்கு இன்னொரு ஆசையும் இருந்தது.. ஆனால் அவன் அதை என்றைக்குமே சொன்னது இல்லை.. அவனுக்கு CBZ ஈருளி ஓடனும் என்று நிறைய நாள் ஆசை...ஆனால் அவனுக்கு அது என்றைக்குமே கிடைத்ததில்லை. இறுதி காலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக யாருமே வைத்திருந்ததும் இல்லை... ராணி அனைவரிடமும் விடைபெற்று வெளியில் வந்தான்.. அவனுக்கான சக்கை வாகனம் காத்திருந்தது. அது ஒரு CBZ. (தொடரும்) பாகம் பத்தொன்பது இங்கே அழுத்துங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.